புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_m10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_m10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_m10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10 
11 Posts - 4%
prajai
பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_m10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10 
9 Posts - 4%
Jenila
பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_m10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_m10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_m10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_m10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_m10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
jairam
பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_m10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகாசூரன் திரைவிமர்சனம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 18, 2023 8:46 pm



#பழைய_வண்ணாரப்பேட்டை, #திரெளபதி, #ருத்ரதாண்டவம் உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது 'பகாசூரன்'.

இதில் இயக்குநர் செல்வராகவன் நாயகனாகவும், ஒளிப்பதிவாளர் நட்டி என்னும் நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ராதாரவி, தயாரிப்பாளர் ராஜன், கூல் சுரேஷ், தரக்‌ஷி என பலர் நடித்துள்ளனர்.

தனது அண்ணன் மகள் மேற்கொண்ட மர்மமான தற்கொலையைத் தொடர்ந்து அதற்கான காரணத்தைத் தேடுகிறார் முன்னாள் மேஜராக வரும் நடிகர் நட்டி. அதேசமயம் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட தனது மகளின் இறப்பிற்கு காரணமானவர்களை பழிவாங்குகிறார் பீமராசுவாக வரும் இயக்குநர் செல்வராகவன். இருவரும் சந்திக்கும் புள்ளியே '#பகாசூரன்' திரைப்படம்.

சாணிக்காயிதம், பீஸ்ட் திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் நடிகராக களமிறங்கியிருக்கிறார் செல்வராகவன். கடலூரைச் சேர்ந்த தெருக்கூத்து கலைஞரான செல்வராகவனுக்கு தனது மகளின் மீது கொள்ளைப் பிரியம். அவரது விருப்பத்திற்காக பெரம்பலூர் கல்லூரியில் சேர்ந்து படிக்க வைக்கிறார். அங்கு அவருக்கு நிகழும் பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்தே கதை நகர்கிறது. பல இடங்களில் செல்வராகவன் சிறப்பாக நடித்திருக்கிறார். சிவ பக்தராக வரும் இடங்களில் நல்ல நடிகராக ஈர்க்கிறார்.

இவருக்கு இணையாக படம் முழுக்க வருகிறார் நட்டி. அவரின் அண்ணன் மகள் தனது காதலனின் வற்புறுத்தலின்பேரில் இணையத்தில் நிர்வாண விடியோக்களை வெளியிடுகிறார். அதனைத் தொடர்ந்து பாலியல் தொழிலுக்குள் சிக்கிக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் வீட்டில் திருமணத்திற்கு ஏற்பாடாக, பாலியல் தொழில் செய்யும் கும்பல் அப்பெண்ணை மிரட்டுகிறது. அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலைக்குள்ளாகிறார். இது அவரின் சித்தப்பா நட்டிக்கு தெரிய வருகிறது. இதுபோல பல பெண்கள் சிக்கியிருப்பதை அறியும் அவர் அவர்களை மீட்க இதேபோல் பாதிக்கப்பட்ட ஒரு தகப்பனைத் தேடி அலைகிறார். இப்படி செல்வராகவன் பயணமும், நட்டியின் பயணமுமே ஒட்டுமொத்த திரைக்கதை. படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். நன்றாக உதவியிருக்கிறது. செல்வராகவனுக்கு அமைக்கப்பட்டுள்ள பின்னணி இசை ரசிக்கும்படியாக இருக்கிறது. திரைப்படத்தின் தொடக்கத்தில் வரும் பாடல் தவிர மற்ற எதுவும் ரசிக்கும்படியாக அமையவில்லை. தேவையான ஒளிப்பதிவு. தொழில்நுட்ப ரீதியாக தனது முந்தைய படங்களைவிட சிறப்பாக செய்திருக்கிறார் மோகன் ஜி.

இவற்றையெல்லாம் தாண்டி படத்தில் என்ன இருக்கிறது?

50 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்தனையிலிருந்து உருவாகியிருக்கிறது 'பகாசூரன்'. பல நூறாண்டுகளுக்குப் பிறகு பெண்கள் தங்களது அடுப்பங்கறையிலிருந்து இப்போதுதான் வெளியில் வந்து கல்வி கற்கத் தொடங்கியிருக்கின்றனர். இதனை பதட்டத்துடன் பார்த்த ஒருவர் எழுதிய கதையாக வந்திருக்கிறது 'பகாசூரன்'.

பெண்களைக் காக்க வேண்டும் என சொல்ல வரும் இயக்குநர் அதற்காக படத்தில் ஆபாச நடனம் வைப்பதெல்லாம் கண்முன் தெரியும் முரண்.

செல்வராகவனின் மகள் முதல் தலைமுறை பட்டதாரியான பிறகு மேற்படிப்புக்காக வெளியூர் செல்ல விரும்புகிறார். சென்னையில் வாழ்பவர்கள் வெளிநாட்டில் வாழ்பவர்களாக மாறிவிட்டதாக ஒரு வசனம் வருகிறது. “ஊருக்குள்ளயே படிக்க வைக்க வேண்டியதுதான”, ”நம்ம புள்ளைங்க ரூமுக்குள்ள என்ன பண்ணுறாங்கன்னு கண்காணிக்கனும்” என இப்படிப்பட்ட வசனங்கள் படம் முழுக்க தொடர்கின்றன. எப்படி இருந்த செல்வராகவனை இப்படி வந்து நிறுத்திவிட்டனரே எனத் தோன்றுகிறது.

பல இடங்களில் படத்தின் லாஜிக் தடுமாறி நிற்கிறது. ஓய்வு பெற்ற மேஜராக வரும் நட்டி ஆதாரங்களைத் தேடி ஓடுகிறார். செல்வராகவன் அடுத்தடுத்து கொலைகளை நடத்திவிட்டு சென்றுகொண்டிருக்கிறார். இடையில் என்ன செய்கிறது காவல்துறை?

சற்று பிற்போக்கான வசனங்கள் இருந்தாலும் படத்தின் முதல்பாதி சற்று கவனிக்கும்படி அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கு அப்படியே எதிர்மாறாக நிற்கிறது இரண்டாம் பாதி. இணையத்தில் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதை தடுப்பது நோக்கமெனில் அதற்கான உண்மையான காரணத்தை ஆராய்ந்திருக்கலாம். ஆனால் அந்த பாலியல் தொழிலுக்கு ஆதரவாக இருப்பது போன்று காதலையும், பெண் உரிமை கோருவோரையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தியிருக்கிறார் இயக்குநர். திரைக்கதையில் கவனம் செலுத்தாமல் அரசியல் எதிர்ப்பாளர்களை கதைக்குள் இழுத்துவிட்டதன் விளைவாக தடுமாறி நிற்கிறான் 'பகாசூரன்'.


செல்போன் மூலம் நடைபெறும் பாலியல் தொழிலும், அதனால் ஏற்படும் பெண்களுக்கான பாதிப்பைக் குறித்தும் பேச முனைந்திருக்கிறார் இயக்குநர். இணையத்தில் கிடைக்கும் ஆபாச செயலிகளின் பாதிப்பைக் குறித்து சற்று விரிவாக திரைக்கதையில் கொண்டு வந்திருக்கலாம். இரண்டாம் பாதியில் அதுகுறித்து எந்த விவரங்களும் இல்லாமல் கதை நகர்கிறது.

படத்தில் ராதாரவி தொடக்கத்தில் ஒரு காட்சியில் வருகிறார். பெண்களின் உரிமைகளைப் பேசுகிறார். அவர் எப்படி பின்னர் காட்சிப்படுத்தப்பட்டிருப்பார் என்பதை உங்களின் எதிர்பார்ப்பிற்கே விட்டுவிடுகிறேன்.

ஆண் நண்பரை வீட்டிற்கு அழைத்து வருவது, செல்போன்களை பயன்படுத்துவது என சின்ன சின்ன விஷயங்களைக் கூட அபாயமான ஒன்றாக சித்தரித்திருக்கிறது 'பகாசூரன்'.

திரைப்படத்தில் தந்தை மகள் பாசத்தை காட்டும் வகையில் ஒரு பாடல் வருகிறது. அதில் செல்வராகவனின் மகள் அவரது காலை அழுத்திவிடுவார். அப்படியே இருந்திருந்தால் எந்த பிரச்னையும் இயக்குநருக்கு இருந்திருக்காது போல.

ஆபாசப் படங்களை எடுத்து பெண்களை மிரட்டுபவர்களை குற்றவாளிகளாக்கி தண்டனை பெற்று தராமல், பெண்கள் ஒழுங்காக இருந்தால் எல்லாம் சரியாகும், பெண்களே கெளரவம் என அதர பழைய கல்வெட்டையே தூக்கி சுமந்த 'பகாசூரன்' கெளரவம், ஒழுக்கம், இத்யாதி, இத்யாதி என பெண்ணையும் சுமைகளை சுமக்கச் சொல்லியிருக்கிறது.

படத்தின் இறுதியில் பேசும் செல்வராகவன், செல்போன்களையும் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் ஆபத்தானதாக பேசுகிறார். அதனைத் தொடர்ந்து பேசும் நட்டி நமது பிள்ளைகளைக் கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கிறார்.

பெண்கள் வெளியில் வரட்டும். கல்வி கற்கட்டும். அவர்களின் உடலை இன்னும் ஆபத்தானதாகக் காட்டி அவர்களின் பாதைகளில் குழிவெட்டி காத்திருக்க வேண்டாம்.



தினமணி


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 20, 2023 9:16 pm

'பகாசூரன்' படத்திற்காக திரையுலகினரின் பாராட்டை அள்ளும் செல்வராகவன்!



திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன்.ஜி தற்போது பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். அதில் இயக்குநர் செல்வராகவன் நாயகனாகவும் ஒளிப்பதிவாளர் நட்டி என்னும் நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

சமூகத்தில் நடக்கும் ஒரு முக்கிய நிகழ்வை மையமாகக் கொண்டு பகாசூரன் படத்தின் கதையை அமைத்துள்ளனர். பிப்.17ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் செல்வராகவனின் நடிப்பை பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.


பிரபல ஹிந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப்:


பகாசூரன் படத்திற்கு தென்னிந்தியாவில் நல்ல பெயர் கிடைத்திருப்பதாக தெரிகிறது. எனது நண்பர்களான நட்டி நடராஜன், செல்வராகவனுக்கு வாழ்த்துகள்.

நடிகர் கார்த்தி:


செல்வராகவன் முழுவதுமாக கதாநாயகனாக நடிப்பதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. எங்களுக்கு மட்டுமே தெரிந்த சிறந்த நடிகரை இந்த உலகமும் பார்க்கிறது. பகாசூரன் படக்குழுவிற்கு வாழ்த்துகள்.

எஸ்.ஜே.சூர்யா:


லெஜண்டரி இயக்குநர் செல்வராகவன் சார் பகாசூரன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தில் வாழ்ந்துள்ளீர்கள். சிரந்த பாராட்டுகளை பெற்றுவரும் படக்குழுவிற்கும் உங்களுக்கும் வாழ்த்துகள் சார்.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன்:


இதுமாதிரி கதாபாத்திரங்களில் அதிகமாக நடிக்க வேண்டுகிறேன் செல்வராகவன் சார். உங்களது நடிப்பை பற்றி சிறந்த பாராட்டுகளை கேட்கிறேன். பகாசூரன் அணிக்கு வாழ்த்துகள்.

ஜி.வி.பிரகாஷ்:


லெஜண்டரி இயக்குநர் செல்வராகவன்.. சிறந்த நடிப்பை பற்றி கேள்விபட்டேன் சார். பகாசூரன் தியேட்டரில்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக