புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Poll_c10எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Poll_m10எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Poll_c10எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Poll_m10எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Poll_c10எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Poll_m10எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Poll_c10 
3 Posts - 6%
Baarushree
எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Poll_c10எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Poll_m10எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Poll_c10 
2 Posts - 4%
prajai
எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Poll_c10எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Poll_m10எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Poll_c10 
2 Posts - 4%
Rutu
எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Poll_c10எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Poll_m10எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Poll_c10 
1 Post - 2%
சிவா
எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Poll_c10எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Poll_m10எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Poll_c10 
1 Post - 2%
viyasan
எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Poll_c10எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Poll_m10எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Poll_c10எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Poll_m10எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Poll_c10எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Poll_m10எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Poll_c10 
2 Posts - 15%
Rutu
எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Poll_c10எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Poll_m10எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி!


   
   
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Mon Oct 30, 2017 2:31 pm

"I can’t understand why people are frightened of new ideas. I’m frightened of the old ones"

-John Gage

"புதிய கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மக்கள் ஏன் பயப்படுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை, ஆனால், பழைய கருத்துக்களை(சிலவற்றை) கண்டு நான் பயப்படுகிறேன்."

எழுத்தாலும், சிந்தனையாலும், மொழியாலும் வாழ்வியல் இலக்கணத்தை உருவாக்கி பெயர்பெற்றவர்கள் (தமிழர்கள்) நம் முன்னோர்கள். இப்போது, நாம் அதிலிருந்து சிலவற்றை வெறுத்து ஒதுக்கிவிட்டு புதிதாக சிந்திக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்!

----->>>

-எழுத்ததிகாரன்.
எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Writing%2Bof%2Bemphatic


Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Wed Nov 08, 2017 5:52 am

சிந்தனைகள், பழமொழிகள் என்பது அவரவர் வாழும் காலத்திற்கேற்பவும், பழக்க வழக்கத்திற்கேற்பவும், சூழ்நிலைகளைக் கொண்டும் அமைவதாகும். உதாரணமாக நாம் சொல்லும் கருத்துக்களை எளிதில் புரிந்து கொள்ளாதவர்களை "டியூப் லைட்" என்று நாம் விளையாட்டாக சொல்வதுண்டு. ஏனென்றால் டியூப் லைட் என்பது சுவிட்ச் அழுத்தியவுடன் எரியாமல் (வெளிச்சம் தராமல்), சில வினாடிகளுக்கு மின்னலடித்துவிட்டு அதன் பிறகுதான் முழுமையான வெளிச்சத்தைத் தரும். இதனால்தான் எளிதில் புரிந்து கொள்ளாதவர்களை அடையாளம் கட்டுவதற்காக டியூப் லைட்டை உதாரணமாக கூறினார்கள். இது பழைய காலகட்டத்திற்கு பொருந்தும் முறை.

ஆனால், இன்றும் நாம் அப்படி சொல்லிக்கொண்டிருந்தால் நாளைய தலைமுறையினர் நம்மை பார்த்து ஏளனமாக சிரிப்பார்கள். ஏனென்றால் பழங்காலத்தில் மின்னலடித்து எரிந்துகொண்டிருந்த டியூப் லைட்டுகள் இன்று சுவிட்ச் அழுத்தியவுடன் எரிகிறது!

இப்போது, நாம் புதிதாக சிந்திக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்!
--->>
- எழுத்ததிகாரன்.
எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Writing%2Bof%2Bemphatic


Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Sun Jan 07, 2018 8:58 am

ரூபாய் நோட்டுக்களை மாற்றி பண பரிவர்த்தனை நவீன முறையில் அமைத்து "டிஜிட்டல் இந்தியா" என்னும் திட்டத்தை உருவாக்க நினைக்கும் பிரதமர் மோடி அவர்கள் இன்னும் வானொலியிலில்தான் பேசிக்கொண்டிருக்கிறார் என்பது வேடிக்கையாக இருக்கிறது!...

ஒருவேளை டிஜிட்டல் அலைவரிசையாக இருக்குமோ?....
---->>
- எழுத்ததிகாரன்.
எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Writing%2Bof%2Bemphatic

aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Sun Jan 07, 2018 2:05 pm

ரேடியோவில் பேசி விட்டு

இமெயில்

எஸ்‌எம்‌எஸ் செய்வார்

1922 க்கு மிஸ் கால்
கொடுக்கச் சொல்லி


பின் அதில் பல மொழிகளில் பேசுவார்....



இந்தி கற்றுக்கொள்ள

ஒரு முறை தமிழில் கேட்டு விட்டு
ரெக்கார்ட் பண்ணிக் கொள்ளுங்கள்

மறு நாள் மறுமுறை இந்தியில் கேளுங்கள்



பாடகன் பாடகன் பாடகன் பாடகன்

Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Wed Jan 10, 2018 11:56 am

"பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது" என்று முன்னோர்கள் சொன்னார்கள். ஆனால், வார நாட்களில் வரும் புதன் கிழமைதான் நல்ல காரியங்கள் செய்ய உகந்த நாள் என்று நாம் அதை தவறாகவே புரிந்து கொண்டிருக்கிறோம். ஆனால் புதன் கிழமைதான் வாரா வாரம் வந்து கொண்டிருக்கிறதே? இது எப்படி கிடைக்காமல் போகும் என்று நாம் யாரும் சிந்திப்பதில்லை...

முன்னோர் சொல்லிட்டாங்களா? அவ்வளவுதான். அதை யாரும் டச் பண்ணக் கூடாது.... மீறி டச் பண்ணிட்டோம்னா.... அவ்வளவுதான். நாம காலி!!
நீ என்ன புத்திசாலியா? இல்ல, நீ மட்டும்தான் அறிவாளியா? முன்னோர் சொன்னதை நீ எப்படி மாத்தி சொல்லலாம்?. அப்படின்னு நம்மள உண்டு இல்லன்னு ஆக்கிடுவாங்க. அறிவு இருக்கிறவன் புதுசா மாத்தி சொல்லத்தான் நினைப்பான். ஆனால், எல்லோருக்குமா அறிவு இருக்கும்?... என்னை மாதரி ஒரு சிலருக்கு மட்டும்தான் இருக்கும்.... எனக்கு இருக்கு....!

ஹா... ஹா.. ஹா...

SORRY பாஸ்!....

எனக்கு தெரியும். கண்டிப்பா இந்நேரம் என்னை எல்லாரும் மனசுக்குள்ள நல்லா திட்டி இருப்பீங்க. நான் தலைக்கனமா பேசுறதா நினைச்சிட்டீங்கதானே? அப்படியெல்லாம் இல்ல... தலைப்புக்கு விளக்கம் தான் சொல்லியிருக்கேன். புரியலல்ல?... தொடர்ந்து படிங்க புரியும்....

பொன் என்பது ஒருவருக்கு கிடைக்கக்கூடிய செல்வத்தை குறிக்கும். புதன் என்பது கல்வியை குறிக்கும். எனவே, ஒருவருக்கு எந்த நேரத்திலும் செல்வங்கள் கிடைக்கலாம். பிறருடைய செல்வங்களைக் கூட நாம் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், கல்வியானது அவ்வாறு கிடைக்க முடியாது. நாம் படித்து வளர்த்துக்கொண்டால் மட்டுமே கல்வியறிவு பெற முடியும். பிறரால் நமக்கு கிடைக்காது. என்பதை உணர்த்தும் விதமாக சொல்லப்பட்டதுதான். இந்த பழமொழி என்பது எனது கருத்து. அதனால்தான் "இளமையில் கல்" என்றும் சொல்லியிருக்கக் கூடும். காலம் தவறிவிட்டால் பிறகு கல்வி பயில முடியாது அல்லவா. (இன்னைக்கு இருக்குற இன்டர்நெட் வசதியெல்லாம் அன்னைக்கு இருந்திருக்காதுல்ல... ஒருவேளை இருந்திருந்தா இப்படி சொல்லியிருக்க மாட்டாங்களோ என்னவோ...)

இதையே ஜோதிடத்தோடு ஒப்பிட்டும் சொல்லலாம், சும்மா படிச்சு பாருங்க. இதுவும் நம்புற மாதிரிதான் இருக்கும். அதாவது, ஒருவருடைய ஜாதகத்தில் தனது பார்வையின் மூலம். (அந்தப்பார்வை இல்லங்க. இது குரு பார்வை) யோகங்களை வழங்கக்கூடிய குரு பகவான் பொன் நிறம் உடையதாக சொல்லப்படுகிறது. அதனால் பொன் என்பதற்கு குருவை அடையாளமாக கொள்ளலாம். குருவின் 5,7,9 ஆகிய பார்வைகள் எல்லோருக்கும் கண்டிப்பாக கிடைக்கும். ஏன்னா? இருக்குற 12 கட்டத்துல ஏதாவது மூணு இடங்களையெல்லாம் பார்த்துத்தானே ஆகணும்? So, குரு இருக்க, குரு பார்க்க கோடி குற்றம் நிவர்த்தியாகிடும் என்பது சோதிட விதி. So, பொன் கெடச்சுடுச்சா?

ஆனால், புத்தியையும், அறிவையும் வழங்கக்கூடிய கல்விகாரகன், வித்யாகாரகனான புதன் கிரகத்தின் பலன் எல்லோருக்கு முழுமையாக கிடைப்பதில்லை. காரணம் புதன் கிரகமானது எப்போதும் சூரியனோடு பயணிக்கக் கூடியது. ஒன்னு, சூரியனோடு சேர்ந்து இருக்கும். இல்லேன்னா, சூரியனுக்குப் பக்கத்தில் இருக்கும். பொதுவாக சூரியனோடு சேரும்போது எல்லா கிரகங்களும் தங்கள் பலத்தை இழந்துவிடும் என்பது சோதிட விதி. எனவே எல்லா நேரத்திலும் சூரியனோடு இருக்கக் கூடிய புதன் தனது பலம் இழந்து விடுகிறார். அதனால் புதனுடைய முழு பலனும் கிடைப்பதில்லை. அதுமட்டுமல்லாமல், சூரியனை சுற்றும் கிரகங்களில் புதன் மிகவும் வேகமாக சுற்றிவரக்கூடிய கிரகம். எனவே சூரியனின் பாதிப்பிலிருந்து விலகி இருக்கும் நேரமும் குறைவாகவே இருக்கும். அதனால்தான் பொன் கிடைத்தாலும் (குருவின் பார்வை பலன் முழுமையாக கிடைத்தாலும்) புதன் கிடைக்காது (புதன் கிரகத்தின் முழு பலன் கிடைக்காது) என்று சொல்லியிருக்கலாம் என்பது புதனால் எனக்கு கிடைத்த அறிவுக்கு எட்டிய வரையில் உண்மை.

குறிப்பு: புதனானது உச்சம் பெற்ற லக்கினாதிபதியுடன் சேரும்போது, அல்லது தன்னோடு சேரும் கிரகங்களின் வலிமை, தான் இருக்கும் இடத்தின் அதிபதியின் பலம், காரக பலம், பரிவர்த்தனை யோகம், இவற்றால் மட்டுமே புதனின் பலம் ஒருவருக்கு முழுமையாக கிடைக்க முடியும். இல்லையென்றால் சூரியனுடைய ஒளியில் அஸ்தனமாகி வலுவிழந்துவிடும்.

அறிவுக்கு காரகன் புதன் அல்லவா? ஆனால், உலகத்தில் அறிவாளிகள் குறைவுதானே....? So, எல்லாருக்கும் புதன் அருள் கிடைக்காது!

இதெல்லாம் நானா சொல்லுறேன்... எல்லாம் என் கிரகம்... இப்படியெல்லாம் எழுத சொல்லுது. இதுமாதிரி நிறைய சொல்லலாம்.... அவங்க அவங்க அறிவுக்கு தகுந்தமாதரி...

--->>
- எழுத்ததிகாரன்.
எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Writing%2Bof%2Bemphatic
Posted On: 15/8/2012, 7:08 am


Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Tue Feb 27, 2018 3:52 pm

தற்போது அரசியல் களத்திற்கு வருபவர்கள் எல்லாம் மக்களுக்கு சேவை செய்ய வருவதாகவே முழக்கமிடுகிறார்கள். ஆனால் மக்களுக்கு சேவை செய்பவன் மன்னன் இல்லை. ஒரு மன்னனால் மக்களுக்கு சேவை செய்யவும் முடியாது. அதனால்தான் ஒரு மன்னன் மந்திரிகளை தேர்ந்தெடுக்கிறான். ஏனென்றால் ஒரு மன்னனால் அனைத்து மக்களை சந்திக்கவே முடியாது. அதற்கே நேரம் போதாது. பிறகு எப்படி சேவை செய்ய முடியும்? எப்படி ஆட்சி நடத்த முடியும்?. எனவே, மக்களுக்கு சேவை செய்ய வருவதாக சொல்பவர்கள் அரசியலுக்கு தகுதியற்றவர்கள். மக்களை ஏமாற்ற நினைப்பவர்கள்.

தனது ஆட்சியின் கீழுள்ள மக்களுக்கு உதவி செய்து அமைதியான வாழ்வை வழங்குபவன்தான் மன்னன். இந்த உதவியைத்தான் "இலவசம்" என்று சொல்லி "அவமானம்" என்று சொல்லி மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள் இன்றைய அரசியல்வாதிகள். ஒரு சிலர் புத்திசாலி என்று நினைத்துக்கொண்டு இலவசம் வேண்டாம் வேலை கொடு என்று சொல்கிறார்கள். ஆனால், படித்தவர்களுக்குத்தான் வேலை கொடுக்க முடியும். ஆனால் படிக்காத பாமர மக்களுக்கு என்ன செய்வது? எனவே படித்தவர்கள் எல்லாம் சுயநலமாக சிந்திப்பதை தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் மக்களுக்கு உதவி வழங்கவேண்டுமானால் அரசிடம் பொருளாதாரம் இருக்க வேண்டும். அரசுக்கு வருமானம் இருந்தால்தான் பொருளாதாரம் இருக்கும். எனவே, முதலில் வருமானத்தை ஏற்படுத்தி அதை வைத்து மக்களுக்கு என்னென்ன நல்லது செய்துகொடுக்க முடியும் என்பதை சிந்தித்து, ஆலோசித்து அதை தனது அதிகாரத்திற்கு உட்பட்ட மந்திரிகளைக்கொண்டு செயல்படுத்துபவன்தான் மன்னன்.

அதேபோல, ஒரு நாட்டின் மக்களை பிரித்தாளும் தகுதியுடையவன் மன்னன் மட்டும்தான். எனவேதான் யாரெல்லாம் பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கிறார்கள்? யாருக்கு எவ்வளவு உதவி வழங்கவேண்டும்? என்பதை அறிந்து செயல்படுத்துவதற்காகத்தான் மக்களை பிரித்து அடையாளப்படுத்தினான் மன்னன். இதைத்தான் இன்று "ஜாதி" என்ற பெயரில் கலவரத்தை தூண்டுகிறார்கள் சிலர்.

எனவே, மக்களுக்கு சேவை செய்பவன் மன்னன் இல்லை. மக்களை ஒன்றுபடுத்தி சிந்திக்கவும், செயல்படுத்தவும், கட்டளையிடவும், காப்பாற்றவும் தெரிந்தவன்தான் மன்னன். இதுதான் பழங்கால ஆட்சி முறை. இது தவறியதால்தான் இன்று பலதவறுகள் நடக்கிறது.

இதை நான் சொல்லவில்லை, உலகப்பொதுமறை இயற்றிய தமிழன் திருவள்ளுவர் சொன்னது.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.

- திருக்குறள் - இறைமாட்சி - எண்: 385

இதுவே  என் கட்டளை!...  என் கட்டளையே சாசனம்!!
ஜெய் மகிழ்மதி. (சும்மா கிண்டல்)

- எழுத்ததிகாரன்
எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Writing%2Bof%2Bemphatic

Posted On: 2/1/2018, 3:50 am


Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Sat Apr 04, 2020 11:21 am

மனிதன், பிற உயிரினங்களை வேட்டையாடி உண்ண நினைத்த போதே அவனுக்குள் வேறுபாடுகளும் தோன்ற ஆரம்பித்து விட்டது என்பதுதான் உண்மை. இல்லாவிட்டால் தன்னைப் போலவே ஆடையின்றி சுற்றித் திரிந்த பிற விலங்குகளை அவன் கொன்று தின்றிருக்க மாட்டான்.

ஆனால், விலங்குகளை வேட்டையாடிய மனிதனுக்கு "புலால் மறுப்பு" கொள்கையின் மூலம் திருவள்ளுவர் சொல்லவந்த நுட்பமான பொருள் என்ன?...

திறமைக்கு சவால்!! சிறந்த விளக்கம் சொல்பவர்களுக்கு ₹.1000 பரிசு வழங்கப்படும்.

(அணுவைத் துளைத்து ஏழு கடல்களைப் புகுத்தியதாக சிறப்பிக்கப்படும் திருக்குறளுக்கு ஒரு சொட்டாவது நாம் புதிய விளக்கம் சொல்ல முயற்சிப்போம்...)

- எழுத்ததிகாரன்.
எழுத்து நம் ஸ்பெஷாலிட்டி எழுத்ததிகாரன் கம்யூனிட்டி! Writing%2Bof%2Bemphatic


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக