புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரா.சம்பந்தனுக்கு ஒரு திறந்த மடல்!
Page 1 of 1 •
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
திருமலையின் சிங்கமே!
தந்தை செல்வாவின் பாசறை ஈன்றெடுத்த முதிசமே!
ஆறு தசாப்த அரசியலைக் கடந்த அறிவுஜீவிதமே!
புகலிட தேசத்தில் இருந்து உங்களுக்கு ஒருகோடி வந்தனம்.
ஐயனே! உங்கள் அரசியல் அனுபவக்கடல் ஆழமானது. அகன்று விரிந்தது.
அதனால்தான் என்னவோ... 2005ஆம் ஆண்டு நிகழ்ந்தேறிய சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தலைத் தமிழ் மக்கள் புறக்கணித்தது மாபெரும் வரலாற்றுத் தவறு என்றீர்களோ?
சரி. அப்பொழுது என்னதான் நடந்தது?
ரணிலும் மகிந்தவும் மோதிக்கொண்ட களம் அது.
அன்று நடந்த தேர்தலை புறக்கணிக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் தவறானது என்கின்றீர்கள்.
புறக்கணிப்பு ஒருபக்கம் இருக்கட்டும். புறக்கணிக்குமாறு யார் கூறினார்கள்?
தமிழீழ விடுதலைப் புலிகளா? தமிழ் தேசியக் கூட்டமைப்பா? புலம்பெயர்ந்த நாங்களா? அல்லது செவ்வாய்க்கிரக மனிதர்களா?
நடப்பது சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தல். அதில் நமக்கென்ன வேலை என்று புலிகள் ஒதுங்கிவிட்டார்கள். யாரையும் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று புலிகள் கூறவில்லையே! ஏன் நீங்களும் உங்கள் பரிவாரங்களும்கூட அப்பொழுது வாய்திறக்கவில்லையே!
பிறகு புறக்கணிப்பிற்கான அழைப்பு எங்கிருந்துதான் வந்தது.
சரி. நீங்கள் இப்பொழுது கூறியது கூறியதாகவே இருக்கட்டும். இருந்துவிட்டே போகட்டும்!
ஆனால்... அன்றைய தேர்தலை தமிழர்கள் புறக்கணித்தது தவறு என்றால்... அதுதான் இன்றைய அவல நிலைக்குக் காரணம் என்றால்... அந்த நிலையை ஏற்படுத்திய மகிந்த ராஜபக்சவோடு உங்களுக்கு என்ன வேலை?
இந்தத் தேர்தலில் மகிந்தவைப் புறக்கணியுங்கள் என்றுதானே நீங்கள் அழைப்பு விடுக்கின்றீர்கள்? அதுதானே உங்கள் கருத்தின் அர்த்தம்?
மகிந்தவைப் புறக்கணியுங்கள் ஆனால் தேர்தலைப் புறக்கணியாதீர்கள் என்றால்... பொன்சேகாவை ஆதரியுங்கள் என்பதுதானே உங்களது வாய்மொழியின் பொருள்?
அல்லது சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்கின்றீர்களா?
அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் காலக்கெடு முடிந்துவிட்டது.
தேர்தலில் நீங்களும் போட்டியிடுவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. சுயேட்சையாகப் போட்டியிடுவதாக சிவாஜிலிங்கமும் அறிவித்துவிட்டார்.
அப்படியென்றால் உங்களது வாக்கு இனி யாருக்கு?
ஆழ் கடலுக்கும் கொடும் பேய்க்கும் நடுவே பரிதவிக்கும் ஈழத்தமிழர்களை எப்பக்கம் சாயச்சொல்கின்றீர்கள்?
மகிந்த என்ற ஆழ்கடலில் மூழ்கச் சொல்கின்றீர்களா? அல்லது பொன்சேகா என்ற பேயிடம் மண்டியிடக்கூறுகின்றீர்களா?
அதுசரி... யுத்தம் முடிந்த பின்னர் உயர் பாதுகாப்பு வலயம் எதற்கு என்கின்றீர்கள்!
அப்படியென்றால் யுத்த காலத்தில் உயர் பாதுகாப்பு வலயம் இருந்தது சரியென்கின்றீர்களா?
உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படுவதை அன்று எதிர்த்தவர் பொன்சேகா. நம்பியாரின் ஆலோசனைப்படி நடந்தவர் அவர்.
ஆனால் அவரை இனி ஆட்சியில் அமர்த்தினால் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைத்துவிடும் என்று நீங்கள் குசுகுசுப்பதாக ஒரு கதை கசிகின்றது.
மெய்யோ பொய்யோ... மலிந்தால் நிச்சயம் சந்தைக்கு வந்துவிடும்.
ஆனாலும்... ஈழத்தமிழர்களை வந்தேறுகுடிகள் என்று அழைத்த பொன்சேகாவிற்கு நீங்கள் ஆலவட்டம் பிடிக்க முனைவதன் சூத்திரம்தான் புரியவில்லை.
ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்று வட்டுக்கோட்டையில் தொடங்கி திம்பு வரை இணங்கி முள்ளிவாய்க்கால் வரை வீரவசனம் பேசியவர் நீங்கள்!
ஆனால் என்ன அதிசயம்! இன்று... சிங்களவர் என்ற சொல்லாடலைக் கைவிட்டு பெரும்பான்மையினர் என்கின்றீர்கள்!!!
அவர்கள் பெரும்பான்மையினர் என்றால் நாங்கள் என்ன சிறுபான்மையினரா?
எங்களை சிறுபான்மையினராக்கி எமது தன்னாட்சியுரிமையை மறுதலிப்பதுதான் உங்களது இப்போதைய தேர்தல் விஞ்ஞாபனமா?
தேசிய இனத்திற்கு உரித்தான தன்னாட்சியுரிமை சிறுபான்மையினத்திற்கு உண்டென்று உங்களிடம் யார் உரைத்தார்கள்?
சிங்களவர்களை பெரும்பான்மையினர் என்று நீங்கள் அழைப்பதும் ஒன்றுதான்! எங்களது தன்னாட்சியுரிமையை மறுதலிப்பதும் ஒன்றுதான்!
2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் ஈட்டிய வெற்றி மாபெரும் வெற்றி! மகத்தானதும்கூட.
திருமலையில் தமிழருக்கு இரண்டு ஆசனங்களை ஈட்டிக்கொடுத்த பெருமை உங்களுக்குரியது.
அப்பொழுது தமிழீழ தேசியத் தலைவருக்கு அருகிருந்து அடுத்த தேர்தலில் திருமலை முழுவதையும் வசப்படுத்துவேன் என்று நீங்கள் சூளுரைத்ததை நாங்கள் மறக்கவில்லை!
தேர்தல் களம் குதிப்பதற்கு முன்னர் மாவீரர்களின் கல்லறைகள் மீது நீங்கள் செய்த சத்தியமும் எங்கள் நினைவை விட்டு நீங்கவில்லை!
அது மட்டுமா? திருமலையில் நீங்கள் புலிக்கொடியேற்றியதையும் நாங்கள் மறந்துவிடவில்லை.
ஆனாலும் என்ன? இப்பொழுது சிங்கக்கொடியேந்துவதற்கு நீங்கள் தயாராகின்றீர்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது. தவறிருந்தால் மன்னித்தருளுங்கள்.
நாடாளுமன்றக் கதிரையை விட்டுத்தாவி அமைச்சுக் கதிரையை நீங்கள் குறிவைப்பது போல் எமக்குத் தெரிகின்றது.
நேற்று வந்த டக்ளசும், பிள்ளையானும், கருணாவும் அமைச்சுக் கதிரைகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் பொழுது நான் என்ன சும்மாயிருப்பதா? என்று நீங்கள் எண்ணக்கூடும்! தப்பேயில்லை.
ஆனால் ஒன்றை மட்டும் மறந்துவிடாதீர்கள்! உங்கள் நாடாளுமன்றக் கதிரைக்கு வலுச்சேர்ப்பது தமிழீழ ஆணை மட்டுமே!
அதுசரி. தேர்தல் தொடர்பாக எந்த முடிவும் எடுக்காது தமிழ் மக்களின் கருத்துக்களை அறிந்து வருவதாகக் கூறியிருக்கின்றார்கள்.
அப்படியென்றால் உங்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே பெரும் விரிசல் விழுந்துவிட்டது என்பதை ஒப்புக் கொள்கின்றீர்களா?
மக்களின் எண்ணவோட்டம் அறியாதவர்களும், புரியாதவர்களும் எப்படி மக்களின் பிரதிநிதிகளாக இருக்க முடியும்?
-சேரமான்
தந்தை செல்வாவின் பாசறை ஈன்றெடுத்த முதிசமே!
ஆறு தசாப்த அரசியலைக் கடந்த அறிவுஜீவிதமே!
புகலிட தேசத்தில் இருந்து உங்களுக்கு ஒருகோடி வந்தனம்.
ஐயனே! உங்கள் அரசியல் அனுபவக்கடல் ஆழமானது. அகன்று விரிந்தது.
அதனால்தான் என்னவோ... 2005ஆம் ஆண்டு நிகழ்ந்தேறிய சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தலைத் தமிழ் மக்கள் புறக்கணித்தது மாபெரும் வரலாற்றுத் தவறு என்றீர்களோ?
சரி. அப்பொழுது என்னதான் நடந்தது?
ரணிலும் மகிந்தவும் மோதிக்கொண்ட களம் அது.
அன்று நடந்த தேர்தலை புறக்கணிக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் தவறானது என்கின்றீர்கள்.
புறக்கணிப்பு ஒருபக்கம் இருக்கட்டும். புறக்கணிக்குமாறு யார் கூறினார்கள்?
தமிழீழ விடுதலைப் புலிகளா? தமிழ் தேசியக் கூட்டமைப்பா? புலம்பெயர்ந்த நாங்களா? அல்லது செவ்வாய்க்கிரக மனிதர்களா?
நடப்பது சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தல். அதில் நமக்கென்ன வேலை என்று புலிகள் ஒதுங்கிவிட்டார்கள். யாரையும் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று புலிகள் கூறவில்லையே! ஏன் நீங்களும் உங்கள் பரிவாரங்களும்கூட அப்பொழுது வாய்திறக்கவில்லையே!
பிறகு புறக்கணிப்பிற்கான அழைப்பு எங்கிருந்துதான் வந்தது.
சரி. நீங்கள் இப்பொழுது கூறியது கூறியதாகவே இருக்கட்டும். இருந்துவிட்டே போகட்டும்!
ஆனால்... அன்றைய தேர்தலை தமிழர்கள் புறக்கணித்தது தவறு என்றால்... அதுதான் இன்றைய அவல நிலைக்குக் காரணம் என்றால்... அந்த நிலையை ஏற்படுத்திய மகிந்த ராஜபக்சவோடு உங்களுக்கு என்ன வேலை?
இந்தத் தேர்தலில் மகிந்தவைப் புறக்கணியுங்கள் என்றுதானே நீங்கள் அழைப்பு விடுக்கின்றீர்கள்? அதுதானே உங்கள் கருத்தின் அர்த்தம்?
மகிந்தவைப் புறக்கணியுங்கள் ஆனால் தேர்தலைப் புறக்கணியாதீர்கள் என்றால்... பொன்சேகாவை ஆதரியுங்கள் என்பதுதானே உங்களது வாய்மொழியின் பொருள்?
அல்லது சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்கின்றீர்களா?
அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் காலக்கெடு முடிந்துவிட்டது.
தேர்தலில் நீங்களும் போட்டியிடுவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. சுயேட்சையாகப் போட்டியிடுவதாக சிவாஜிலிங்கமும் அறிவித்துவிட்டார்.
அப்படியென்றால் உங்களது வாக்கு இனி யாருக்கு?
ஆழ் கடலுக்கும் கொடும் பேய்க்கும் நடுவே பரிதவிக்கும் ஈழத்தமிழர்களை எப்பக்கம் சாயச்சொல்கின்றீர்கள்?
மகிந்த என்ற ஆழ்கடலில் மூழ்கச் சொல்கின்றீர்களா? அல்லது பொன்சேகா என்ற பேயிடம் மண்டியிடக்கூறுகின்றீர்களா?
அதுசரி... யுத்தம் முடிந்த பின்னர் உயர் பாதுகாப்பு வலயம் எதற்கு என்கின்றீர்கள்!
அப்படியென்றால் யுத்த காலத்தில் உயர் பாதுகாப்பு வலயம் இருந்தது சரியென்கின்றீர்களா?
உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படுவதை அன்று எதிர்த்தவர் பொன்சேகா. நம்பியாரின் ஆலோசனைப்படி நடந்தவர் அவர்.
ஆனால் அவரை இனி ஆட்சியில் அமர்த்தினால் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைத்துவிடும் என்று நீங்கள் குசுகுசுப்பதாக ஒரு கதை கசிகின்றது.
மெய்யோ பொய்யோ... மலிந்தால் நிச்சயம் சந்தைக்கு வந்துவிடும்.
ஆனாலும்... ஈழத்தமிழர்களை வந்தேறுகுடிகள் என்று அழைத்த பொன்சேகாவிற்கு நீங்கள் ஆலவட்டம் பிடிக்க முனைவதன் சூத்திரம்தான் புரியவில்லை.
ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்று வட்டுக்கோட்டையில் தொடங்கி திம்பு வரை இணங்கி முள்ளிவாய்க்கால் வரை வீரவசனம் பேசியவர் நீங்கள்!
ஆனால் என்ன அதிசயம்! இன்று... சிங்களவர் என்ற சொல்லாடலைக் கைவிட்டு பெரும்பான்மையினர் என்கின்றீர்கள்!!!
அவர்கள் பெரும்பான்மையினர் என்றால் நாங்கள் என்ன சிறுபான்மையினரா?
எங்களை சிறுபான்மையினராக்கி எமது தன்னாட்சியுரிமையை மறுதலிப்பதுதான் உங்களது இப்போதைய தேர்தல் விஞ்ஞாபனமா?
தேசிய இனத்திற்கு உரித்தான தன்னாட்சியுரிமை சிறுபான்மையினத்திற்கு உண்டென்று உங்களிடம் யார் உரைத்தார்கள்?
சிங்களவர்களை பெரும்பான்மையினர் என்று நீங்கள் அழைப்பதும் ஒன்றுதான்! எங்களது தன்னாட்சியுரிமையை மறுதலிப்பதும் ஒன்றுதான்!
2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் ஈட்டிய வெற்றி மாபெரும் வெற்றி! மகத்தானதும்கூட.
திருமலையில் தமிழருக்கு இரண்டு ஆசனங்களை ஈட்டிக்கொடுத்த பெருமை உங்களுக்குரியது.
அப்பொழுது தமிழீழ தேசியத் தலைவருக்கு அருகிருந்து அடுத்த தேர்தலில் திருமலை முழுவதையும் வசப்படுத்துவேன் என்று நீங்கள் சூளுரைத்ததை நாங்கள் மறக்கவில்லை!
தேர்தல் களம் குதிப்பதற்கு முன்னர் மாவீரர்களின் கல்லறைகள் மீது நீங்கள் செய்த சத்தியமும் எங்கள் நினைவை விட்டு நீங்கவில்லை!
அது மட்டுமா? திருமலையில் நீங்கள் புலிக்கொடியேற்றியதையும் நாங்கள் மறந்துவிடவில்லை.
ஆனாலும் என்ன? இப்பொழுது சிங்கக்கொடியேந்துவதற்கு நீங்கள் தயாராகின்றீர்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது. தவறிருந்தால் மன்னித்தருளுங்கள்.
நாடாளுமன்றக் கதிரையை விட்டுத்தாவி அமைச்சுக் கதிரையை நீங்கள் குறிவைப்பது போல் எமக்குத் தெரிகின்றது.
நேற்று வந்த டக்ளசும், பிள்ளையானும், கருணாவும் அமைச்சுக் கதிரைகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் பொழுது நான் என்ன சும்மாயிருப்பதா? என்று நீங்கள் எண்ணக்கூடும்! தப்பேயில்லை.
ஆனால் ஒன்றை மட்டும் மறந்துவிடாதீர்கள்! உங்கள் நாடாளுமன்றக் கதிரைக்கு வலுச்சேர்ப்பது தமிழீழ ஆணை மட்டுமே!
அதுசரி. தேர்தல் தொடர்பாக எந்த முடிவும் எடுக்காது தமிழ் மக்களின் கருத்துக்களை அறிந்து வருவதாகக் கூறியிருக்கின்றார்கள்.
அப்படியென்றால் உங்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே பெரும் விரிசல் விழுந்துவிட்டது என்பதை ஒப்புக் கொள்கின்றீர்களா?
மக்களின் எண்ணவோட்டம் அறியாதவர்களும், புரியாதவர்களும் எப்படி மக்களின் பிரதிநிதிகளாக இருக்க முடியும்?
-சேரமான்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அன்புள்ள இளவலுக்கு மற்றும் ஈகரை அன்பர்களுக்கு வணக்கம்
//மகிந்த என்ற ஆழ்கடலில் மூழ்கச் சொல்கின்றீர்களா? அல்லது பொன்சேகா என்ற
பேயிடம் மண்டியிடக்கூறுகின்றீர்களா?//
ஆணித்தரமான வினா.
சமீபத்திய தேர்தல்களைப் பற்றி ஒருபெரிய தமிழ் அறிஞரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் மிகவும் கோபப் பட்டு ஒரு பெண்ணிடம் பேசுகிறோம் என்பதையும் மறந்து சொன்ன வார்த்தைகளை அப்படியே தருகிறேன்.
"அம்மா! இலவசமாகக் கோவணம் கிடைக்கிறது என்றால் இடுப்பில் உள்ள பட்டு வேட்டியை அவிழ்த்துக் கொடுக்கிற மடையர்கள் இருக்கும் வரை தேர்தல் என்பது ஓர் மோசடியே"
இதில் ஈகரையின் தரத்தைத் தாழ்த்தும் வார்த்தைகள் இருக்குமானால் நிர்வாகி இதை அழித்து விடலாம்
அன்புடன்
நந்திதா
//மகிந்த என்ற ஆழ்கடலில் மூழ்கச் சொல்கின்றீர்களா? அல்லது பொன்சேகா என்ற
பேயிடம் மண்டியிடக்கூறுகின்றீர்களா?//
ஆணித்தரமான வினா.
சமீபத்திய தேர்தல்களைப் பற்றி ஒருபெரிய தமிழ் அறிஞரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் மிகவும் கோபப் பட்டு ஒரு பெண்ணிடம் பேசுகிறோம் என்பதையும் மறந்து சொன்ன வார்த்தைகளை அப்படியே தருகிறேன்.
"அம்மா! இலவசமாகக் கோவணம் கிடைக்கிறது என்றால் இடுப்பில் உள்ள பட்டு வேட்டியை அவிழ்த்துக் கொடுக்கிற மடையர்கள் இருக்கும் வரை தேர்தல் என்பது ஓர் மோசடியே"
இதில் ஈகரையின் தரத்தைத் தாழ்த்தும் வார்த்தைகள் இருக்குமானால் நிர்வாகி இதை அழித்து விடலாம்
அன்புடன்
நந்திதா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|