புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_c10 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_m10 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_c10 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_m10 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_c10 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_m10 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_c10 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_m10 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_c10 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_m10 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_c10 
1 Post - 1%
Kavithas
 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_c10 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_m10 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_c10 
1 Post - 1%
bala_t
 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_c10 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_m10 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_c10 
1 Post - 1%
prajai
 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_c10 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_m10 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_c10 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_m10 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_c10 
280 Posts - 42%
heezulia
 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_c10 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_m10 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_c10 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_m10 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_c10 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_m10 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_c10 
25 Posts - 4%
sugumaran
 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_c10 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_m10 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_c10 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_m10 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_c10 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_m10 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_c10 
5 Posts - 1%
prajai
 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_c10 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_m10 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_c10 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_m10 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_c10 
4 Posts - 1%
manikavi
 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_c10 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_m10 “பழம் வாங்கலியோ.... பழம்’ Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“பழம் வாங்கலியோ.... பழம்’


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 13, 2019 3:24 pm

 “பழம் வாங்கலியோ.... பழம்’ E_1347364192

வயதான மலைஜாதி கிழவி ஒருத்தி மதுராவின் அருகில்
தன் இனத்தோடு வாழ்ந்தாள். காடுகளுக்குச் சென்று,
மூலிகை, பழங்களைப் பறித்து வந்து, மதுராவில் விற்பாள்.
பழத்தைப் பார்த்தாலே ருசியைக் கண்டுபிடித்துவிடும்
திறமைசாலி அவள்.

உக்ரசேனர் மதுராவை ஆண்ட பொழுது பழம் விற்பனையால்
நல்ல வருமானம் வந்தது இவளுக்கு. கம்சன் ஆட்சிக்கு
வந்தவுடன் வீரர்கள் மற்றும் காவலர்கள் இவளிடம் பழத்தை
வாங்குவார்கள்.

ஆனால் பணம் கொடுக்க மாட்டார்கள். காலப்போக்கில்
வருமைக்கு மேல் வருமை இவளை வாட்டியது. வேறு தொழிலும்
தெரியாது. இறக்கவும் விரும்பவில்லை.

கோகுலத்தையும், இடையர்களையும் நந்த மகாராஜாவையும்
பற்றி அறிந்திருந்தாள் அவள். எனவே மிகச் சிறந்த பழங்களைச்
சிரமப்பட்டுச் சேகரித்துக் கொண்டு கோகுலத்தில் பழம் விற்கும்
எண்ணத்தில் மகா வனம் வழியே சென்று கொண்டு இருந்தாள்.
மகாவனத்தில் பழுத்துக் கிடந்த பழங்களை பார்த்து
ஆச்சரியப்பட்டாள்.

தன் பழங்களை விட ருசியானவை இந்தப் பழங்கள் அல்லவா.
கோகுலத்தில் என் பழத்தை யார் வாங்கப் போகிறார்கள் என்று
எண்ணித் தயங்கி, மதுரா நோக்கித் திரும்பினாள்.

ஆனால் அதற்குள் ஒரு முனிவர் “நந்தகோபர் வீட்டிற்குச் செல்;
நல்லதே நடக்கும்’ என்று ஊக்கப்படுத்திவிட்டுச் சென்றுவிட்டார்.
கோகுலத்தை அடைந்தாள். வீ

தி வீதியாக வெயிலில் கத்தி கத்தி பழம் விற்றாள்.
ஒருவரும் ஒரு பழம் கூட வாங்கவில்லை. வெறுப்பின் எல்லைக்கே
வந்துவிட்டாள்.

பிற்பகல் ஆகிவிட்டது. நல்ல வெயில் தொண்டை உலர்ந்தது.
நெஞ்சு எரிந்தது, பசிதாகம் வேறு. மதுரா திரும்பும் முன் கடைசி
முயற்சியாக முனிவரின் சொல்படி நந்தகோபர் வீடு சென்று
பார்த்துவிடலாம் என்று எண்ணி
மாளிகையை விசாரித்து, அங்கே சென்றாள்.
-
வாசலில் “பழம் வாங்கலியோ’ “பழம் வாங்கலியோ’ என்று
சிரமத்துடன் கூவினாள்.
ஆனால் அவளைக் கவனிப்பார் யாரும் இல்லை. அழுகை
முட்டிக் கொண்டு வந்தது. தரையில் முட்டி முட்டி அழவேண்டும்
போல் இருந்தது. அடக்கிக் கொண்டு வெறுப்புடன் மதுரா நோக்கி
திரும்பினாள்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 13, 2019 3:25 pm


திடீரென்று “பழக்காரி! ஏய் பழம்’ உயிரை உருக்கிடுவது
போன்ற கண்ணனின் குரல் கூப்பிட்டது.

பசியால் பார்வை மங்கிய அவளால் குரலின் திசையை மட்டுமே
பார்க்க முடிந்தது. நாள் முழுவதும் அலைந்ததற்கு ஒருவராவது
கூப்பிட்டார்களே என்று நினைத்துக் கூடையை இறக்கி,
அப்படியே சோர்வுடன் அமர்ந்துவிட்டாள்.

கூடையின் அருகில் வந்தான் கண்ணன். மிக அருகில் கண்ணனைப்
பார்த்தாள். ஆடையின்றி ஒன்றரை வயது உடைய குழந்தை,
அழகு தேஜஸ், மென்மை, ஆனந்தம் இவைகளை அந்தக்
குழந்தையிடம் கண்டாள் கிழவி. சுருள் முடி நெற்றியில் மையினால்
பொட்டு, மையினால் கன்னத்தில் விரல் அளவு பொட்டு, மையிட்ட
கண்கள், உடலில் முன்புறம் பெரும்பாலும் மண் அப்பியே இருந்தது.

கிழவியின் அருகே கண்ணன் வந்தான். கூடையைக் குனிந்து
பார்த்தான். பழங்களைப் பார்த்து சந்தோஷத்தோடு கைகளைத்
தட்டித் தட்டிச் சிரித்தான். இரண்டு உள்ளங் கைகளையும் சேர்த்து
வைத்துக் கொண்டு “பழம் கொடு’ என்று அதட்டினான்.

கிழவி: “பழத்திற்கு விலை கொடு’

கண்ணன்: “விலையா அது என்ன, எங்கேயிருக்கிறது’ ஒன்றும்
புரியாமல் தன் வலது, இடது, பின் பக்கங்களையும் பார்த்தான்.
ஏதோ தன் பக்கத்தில் இருப்பதை கேட்கிறாள் என்று நினைப்பது
போல....,

பின்பு “எதுவுமே இல்லையே... விலையை நீயே பிடித்துக் கொள்’
என்றான். விலை என்றால் பசு அல்லது கன்றின் பெயர் என்று
அர்த்தம் புரிந்து கொண்டவன்போல....

கிழவி: “என் கண்ணே! எதாவது ஒன்றை வாங்கினால் அதற்குச்
சமமான ஒன்றைப் பதிலுக்குக் கொடுத்தால் அதுதான் விலை’
என்றாள்.

கண்ணன்: “புரியாமல் பேசுகிறாய் பாட்டி, என் அம்மா, எனக்கு
வெண்ணெய், பால், ரொட்டி தருகிறாள். பதிலுக்கு எதுவும்
வாங்குவதில்லை. என்னை ஏமாற்றாமல் பழத்தை கொடு’ என்று
மீண்டும் மிரட்டினான்.
-
------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 13, 2019 3:27 pm


கிழவி: சிரித்துக் கொண்டே ஏக்கத்துடன்
“ம்... அவள் உன் அம்மா ஆயிற்றே...’

கண்ணன்: “உனக்கு இன்னும் புரியவில்லையே நிறைய
அம்மாக்கள் எனக்கு ரொட்டி, வெண்ணை தருகின்றார்கள்.
ஆனால் அவர்கள் எதுவும் என்னிடம் வாங்குவதில்லையே!
ம் கொடு பழத்தை’ மீண்டும் பலமாக மிரட்டினான்.

கிழவி: “நீ அவர்களை அம்மா என்கிறாய் அல்லவா!’

கண்ணன்: “பிடிவாதம் செய்கிறாய், சரி உனக்கு என்ன வேண்டும்’.

முற்றத்தில் நெல் காயப்போட்டு இருப்பதை பார்த்த கிழவி
“எனக்கு அது வேண்டும்’ என்று நெல்லைச் சுட்டிக்காட்டினாள்.

வேகமாகச் சென்றான். இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து
வைக்கத் தெரியாமல் சேர்த்து நெல்லை அள்ளினான்.

பழக்காரியைப் பார்த்துக் கொண்டே மிகவும் மெதுவாக வந்தான்.
நெல் இரு உள்ளங்கைகளின் இடையில் ஒழுகிக் கொண்டே வந்தது.

கூடையின் அருகில் வந்து கூடைக்குள் “இந்தா’ என்று இரண்டு
கைகளையும் விரித்துப் போட்டான். இரண்டே இரண்டு
நெல்மணிகள்தான் விழுந்தன. ஆச்சரியத்தோடு பின்னால்
பார்த்தான்; சிரித்தான்.

பின்பு ஏதோ சிறிது யோசனை செய்தான். அதன்பின்
“எனக்கு இப்பொழுது பழம் கொடு. அப்பா வந்தவுடன் உனக்கு
நிறைய நெல் தர சொல்கிறேன்’ என்றான்.

கிழவி திடீரென்று “நீ என் மடியில் உட்கார்ந்து “அம்மா’ என்று
சொன்னால்தான் உனக்குப் பழம் தருவேன்’ என்றாள்.

வேகமாக வந்து மடியில் உட்கார்ந்தான். தன் முகத்தை
நிமிர்ந்து “அம்மா எனக்குப் பழம் கொடு’ என்றான்.

பழக்காரி பயத்தோடு பூரித்துவிட்டாள்.
யாராவது பார்த்தால் என்ன ஆகும் என்ற பயம்தான்.
“இந்தா கண்ணே பழம்’ என்றாள்.

கண்ணன் எழுந்து நின்று இரண்டு கைகளைக் குவித்துப் பழத்தை
வாங்கினான். கிழவி தன் இடது கையால் அவனது கைகளைப்
பிடித்துக் கொண்டு வலது கைகளால் பழங்களை எடுத்து,
அவனின் குவிந்த கைகளில் முடிந்தவரை அடுக்கினாள்.
-
-----------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 13, 2019 3:28 pm


கண்ணன் திரும்பிச் செல்வதையே மிகவும் திருப்தியோடு
பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவளுக்கு எல்லா பழங்களையும் கொடுத்து விட்டது போன்ற
எண்ணம். பழக்காரி தன் பிறவி முற்றுப் பெற்றதைப்போல்
உணர்ந்தாள்.

மதுரா நோக்கி நடந்தாள். அவள் இனி பழம் பறிக்கவோ,
விற்கவோ செல்லக்கூடாது. அவனுக்குக் கொடுத்த கைகளால்
இனி யாருக்கும் பழம் தர முடியாது என்று முடிவு செய்தாள்.

யமுனையின் கரை அருகே வந்தபொழுது கூடை இப்பொழுது
பாரமாகத் தோன்றியது. சிரமப்பட்டுக் கீழே இறக்கினாள்.

ஒளிவீசும் ரத்தினக் கற்கள் கூடை நிறைய இருந்தன.

அப்படியே கூடையைத் தூக்கி, யமுனையில் வீசி எறிந்தாள்.
உலக வாழ்க்கையை முழுவதையும் வெறுத்துவிட்டாள். காலையில்
இருந்து உணவு, நீர் கூட எடுக்காமல் இருந்த கிழவி, இப்பொழுது
வேக வேகமாக நடந்து, தன் குடிசைக்கு வந்தாள்.

குடிசையினுள் ரத்தினக் குவியல்களும், தெய்வத்தன்மை மிக்க
வாசம் வீசும் அன்னக் குவியலும் இருந்தன. தன் இனத்தாரை
வேண்டும் அளவு எடுத்துக் கொள்ள சொன்னாள். எல்லோரும்
வேண்டும் அளவு அள்ளிச் சென்றும் அதே அளவு அப்படியே இருந்தது.

மீண்டும் கண்ணனைப் பார்க்க அவளுள் உண்டான ஏக்கம், வெறி
தணியவில்லை. பழம் விற்கும் சாக்கில் பலமுறை கோகுலம் சென்றாள்.
மறுபடியும் கண்ணன் தென்படவேயில்லை.

“கண்ணன் வாங்கி வந்த அந்த பழங்களின் ருசியை இதுவரை யாரும்
கோகுலத்தில் அனுபவித்ததே இல்லை. பழங்களும் எடுக்க எடுக்க
குறையவே இல்லை’ என்று கோகுலம் முழுவதும் பிரபலமாகப் பரவிய
பேச்சு மட்டுமே அவள் காதில் இறுதிவரை கேட்டுக் கொண்டே இருந்தது.
-
----------------------------------

- டாக்டர் உமாகாந்தன் மற்றும் டாக்டர் உ.உமாதேவி
மஞ்சரி & வாரமலர்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக