புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 6 Poll_c10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 6 Poll_m10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 6 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 6 Poll_c10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 6 Poll_m10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 6 Poll_c10 
13 Posts - 25%
Baarushree
தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 6 Poll_c10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 6 Poll_m10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 6 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 6 Poll_c10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 6 Poll_m10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 6 Poll_c10 
2 Posts - 4%
prajai
தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 6 Poll_c10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 6 Poll_m10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 6 Poll_c10 
2 Posts - 4%
Rutu
தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 6 Poll_c10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 6 Poll_m10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 6 Poll_c10 
1 Post - 2%
சிவா
தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 6 Poll_c10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 6 Poll_m10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 6 Poll_c10 
1 Post - 2%
viyasan
தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 6 Poll_c10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 6 Poll_m10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 6 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 6 Poll_c10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 6 Poll_m10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 6 Poll_c10 
10 Posts - 83%
Rutu
தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 6 Poll_c10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 6 Poll_m10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 6 Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 6 Poll_c10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 6 Poll_m10தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 6 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Mon Nov 26, 2018 1:05 pm

First topic message reminder :

தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை 
முதல் அத்தியாயம்
எனக்கு பிடித்த கவிதை
                                                                யாரோவாய் அறிமுகமாகி யாதுமாகி நின்றவனே
உன்னுள் என்னை காண ஓரு நொடி திகைத்தேனே
       என் இதயதுடிப்பின் சத்தம் கூட உன் பேரை சொல்லிட
       உன்னுள் கரைந்து நானோ என் சுயம் தொலைத்தேனே
 
 
                               கூடல் மாநகர் தூங்கா நகரம் சொக்கனும் மீனாட்சியும் அரசாட்சி செய்யும் பெருமைக்கும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சிறப்புக்கும் உரிய ஊர்
 
 
 நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே வாதம் பண்ணிய நக்கீரர் வாழ்ந்த ஊர் அட அது தாங்க நம்ம மதுரை இந்த கதையின் களமும் மதுரைதாங்க
 
 
சுற்றிலும் புதிய ரக கார்கள் அணிவகுத்து நிற்க மிக பிரம்மாண்டமாக நகரின் நடுவில் இருக்கும் அந்த திருமண மண்டபத்தில் உறவினர்கள் புடைசூழ மங்கல வாத்தியம் முழங்கிட குறிப்பிட்ட முகூர்த்தவேளையில் வெட்கம் மேலிட சிவந்த முகத்துடன் அழகின் சொரூபமாக தன் அருகில் அமர்ந்து இருக்கும் மனையாளின் சங்குகழுத்தில் மங்கலநாண் பூட்டிவிட்டு  பெருமையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் நம்ம ஹுரோ.
 
 
 
தங்களிடம் ஆசி பெற வந்த இளவல்களை  இன்முகத்தோடு அருகிலிருத்தி கணவருடன் சேர்ந்து நின்று வாழ்த்திட தயாராக
நின்றாள் நம்ம ஹுரோயின்
 
 
 என்னங்க ஒரே குழப்பமா இருக்கா?  இருக்காதா பின்னே இங்கே நடக்குறது  மீனாட்சி எண்டர்பிரைசஸ்  நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்ப தலைவர் ஷேஷகிரி -லக்ஷ்மி தம்பதிகளின் மணிவிழாவாச்சே
 
குடும்ப உறுப்பினர்கள் அலுவலக ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் என அனைவரிடமும் நல்லுறவு  பேணிவரும் அவருக்கும் அவருடன் பலவருடமாக இணை பிரியாமல் அன்பும் காதலும் குறையாமல் வாழ்ந்துவரும் அவர் மனைவிக்குக்கும் நடக்கும் மணிவிழா
வாங்க நாமும் அவர்களிடம் ஆசி பெற்று வரலாம்


ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Fri Jan 04, 2019 3:11 pm

T.N.Balasubramanian wrote:
கண் வழியே கணநேரம் வீசும் புன்னகை
என்னுள் இறங்குதடி இனிக்கின்ற விஷமாய்
சுடுகின்ற நிலவொளியாய் குளிர்கின்ற சூரியனாய்

மிகவும் ரசித்தேன். தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை  - Page 6 3838410834


ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1290525 நன்றி

ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Fri Jan 04, 2019 3:12 pm

தோல்வி நிலையென நினைத்தால்
அத்தியாயம்-19
எனக்கு பிடித்த கவிதை
தோழனாய் வந்து விட்டேன் தோள்மீது சாய்த்து கொள்ளு
ஆறுதலாய் நானிருக்க ஆசுவாச படுத்திக் கொள்ளு
தூயவளே துயர் நீங்கும் நாட்கள்
இனி தொலைவில் இல்லை நம்பிவிடு

நிறை மாத கர்ப்பிணியான ராதாவுக்கு மெல்ல செய்தி சொல்லபட்டு ஜானகியின் துணையுடன் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர் விபத்தில் ரத்த சேதம் அதிகமாக இருந்ததால் உயிர் காக்க ரத்தம் தேவைப்படுமென டாக்டர்கள் சொல்லிவிட ரத்தம் கிடைக்காமல் அலைந்தனர் ஷேஷகிரியும் ரங்கநாதனும். ஆனந்தின் பெற்றோரோ தகவல் கிடைத்தவுடன் கோபத்தில் தங்களுக்கு அப்படி ஒரு மகனே இல்லை என சொல்லிவிட்டார்கள். எதிர்பாராதவிதமாக லஷ்மியின் ரத்தபிரிவும் ஆனந்தின் ரத்தபிரிவும் ஒன்றாக அமைந்துவிட சரியான நேரத்தில் ரத்ததானம் கிடைத்து உயிர் பிழைத்தான் ஆனந்த்

ஆனந்த் கண் விழித்து நன்றி சொல்ல முனைந்த போது தடுத்த லக்ஷ்மி ராதாவிடமும் ஆனந்திடமும் எதுக்கு இதெல்லாம் எனக்கு கூட பிறந்த பாஸ்கர் அண்ணாவ போலதான் ஆனந்த் அண்ணாவும் இவங்களுக்குள நான் எந்த வித்தியாசமும் பாக்குறது இல்ல அதனால தயவுசெஞ்சு நீங்க ரெண்டுபேரும் நன்றி சொல்லறத நிறுத்தரீங்களா என கேட்டாள்

அன்றிரவே ஸ்ரீருத்ரா பிறந்து விட குழந்தை வந்த சந்தோஷத்தில் அனைவரும் இயல்புக்கு திரும்பினர் சகுந்தலா பச்சை உடம்புகாரியாக பிறந்த வீட்டில் இருக்க கௌசல்யாவின் பிரசவமும் லக்ஷ்மி ,ஜானகியின் பொறுப்பிலேயே நடந்தது

ஒரு குழந்தை வீட்டில் இருந்தாலே நேரம் போவது தெரியாது இங்கோ மூவரின் சேட்டையால் வீடே களைகட்டியது மேலும் ஒரு வருடம் ஓடிப்போக இன்னமும் குழந்தை பாக்கியம் லக்ஷ்மிக்கு கிட்டாத்தால் உறவுகளின் கேலிப்பேச்சுக்கு ஆளானாள் அம்மாதிரி நேரங்களில் இறுக்கமான முகத்துடன் வளையவரும் ஜானகியை புரிந்து முடியாமல் கொள்ள தடுமாறினாள்
கேலிகுத்தல்கள் தாங்க முடியாமல் மருத்துவ பரிசோதனைக்கு தம்பதிகள் சென்ற போதோ கர்பப்பை பலகீனமாக இருப்பதால் லஷ்மியால் ஒரு குழந்தைக்கு தாயாக முடியாதென மருத்துவகள் கைவிரித்துவிட லக்ஷ்மியோ நொந்துபோனாள்

சகோதர்களின் அயராத உழைப்பால் தொழில் விரிவடையத்துவங்க அந்தஸ்து பார்த்து முன்னர் ஒதுக்கிய சொந்தங்கள் யாவும் இப்போது ஒட்டிக்கொள்ள துவங்கின அதிலும் ஷேஷகிரியின் அத்தை ஒருவர் அவருடைய பெண்ணை இரண்டாம் தாரமாக திருமணம் செய்துதர முன்வந்தார் இன்னமும் கொஞ்ச நாளில் தாங்கள் நடத்தும் புதுமனை புகுவிழாவுக்கு பிறகு இது குறித்து பேசலாமென ஜானகி சொல்லிவிட இதை கேட்ட லக்ஷ்மியோ துடித்துவிட்டாள்

புதுமனை புகு விழாவுக்கான வேலைகள் வேகமாக நடந்தன வேலைகளின் நடுவே ஒருநாள் லக்ஷ்மியை தவிர அனைவரும் எங்கோ சென்றுவர இது எதுவுமே மனதில் பதியாமல் நடைபிணம் போல் ஆனாள் லக்ஷ்மி எதோ ஒரு நம்பிக்கையில் இரவின் தனியான வேளையில் தன் கணவனிடம் என்னங்க எல்லாரும் எங்க போய் இருந்தீங்க என கேட்க அவனோ சரியாக பதில் சொல்லாது மழுப்ப கோபத்தில் எனக்கு தெரியும் எல்லாரும் பொண்ணு பாக்கதேனே போய் இருந்தீங்க? என கேட்டாள்

லக்ஷ்மியை சீண்டும் எண்ணத்துடன் இருந்த ஷேஷகிரியோ ஆமாம் நானும் அம்மாவும் நம்ம குடும்பத்துக்கு வரவேண்டிய ஒரு வயசு பொண்ணைத்தான் பாக்கபோனோம் எங்க எல்லாருக்கும் அவளை பிடிச்சுபோச்சு உனக்கு பிடிச்சுருந்தா போதும் முறைப்படி அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடலாம் என்ன சொல்ற?தாளாத துக்கத்தில் இருந்த லக்ஷ்மியோ உங்களுக்கு பிடிச்சா போதுங்க நீங்க பாத்து கூட்டிட்டு வந்திடுங்க நான் எப்போதும் உங்க சந்தோஷத்துக்கு தடையா இருக்கமாட்டேன் என்றாள்

அப்போ கண்டிப்பா நீ நம்ம வீட்டு புதுமனை புகுவிழா அன்னைக்கு அவளை பாக்கலாம் ஆரத்தி எடுக்க ரெடியா இருந்துக்க என்றான் அந்த நாளும் வந்தது பொழுது விடியும் போதே எங்கோ வெளியே போய் விட்டு வந்த ஆனந்தும் ராதாவும் ஆரத்தி தட்டுடன் வாசலுக்கு வரும்படி லக்ஷ்மியை வற்புறுத்தி அழைத்து வந்தனர்

வாசலுக்கு வந்த லக்ஷ்மியோ ஜானகியுடன் நின்றிருந்த அந்த ஒரு வயசு பெண்ணை பாத்து திகைத்து நின்றாள் ரோஜா பூவை பிரதி எடுத்ததுபோல பால்வண்ண நிறத்துடன் தன் கோலிகுண்டு கண்களால் சுற்றி இருந்தவர்களை பார்த்தவண்ணம் மலங்க மலங்க விழித்தாள் அந்த குட்டி இளவரசி

என்னம்மா வந்தவங்கள வாங்கனு கூப்பிட மாட்டாயா? ஆரத்திய வாங்கி சீக்கிரம் எடுத்து அனுப்பு ப்ரபா ராதாவையும் கூப்பிட்டுகோ என்றாள் ஜானகி ஆமாம் அந்த விழாவுக்கு பாஸ்கரும் தன் மனைவியுடன் வந்திருந்தான் புதுமனை புகுவிழாவும் ஒரு குழந்தைய தத்தெடுக்கும் விழாவும் இனிதே முடிய எல்லாரும் சேர்ந்து கொடுத்த அதிர்ச்சிய தாங்க முடியாம நடந்தத நம்பவும் முடியாம அமர்ந்திருந்தாள் லக்ஷ்மி அவளை தேற்றிய ஜானகியும் ஷேஷகிரியும் நடந்ததை சொல்ல துவங்கினர் முதலில் இரண்டாம் திருமண பேச்சு வந்ததே அதிர்ச்சி என்றாலும் மறுப்பை யாருக்கும் தெரியாமல் தன் நாத்தனாரிடம் சொல்லி இருந்தார் லக்ஷ்மி மேல் கொண்டு தன் மக்களின் வாழ்வில் பிடிப்பு ஏற்பட ஒரு குழந்தையை தத்து எடுப்பது ஒன்றே நல்ல வழி என முடிவு எடுத்தார் ஜானகி பின்னர் தன் எண்ணத்தை ஆனந்த் ஷேஷகிரி ரங்கநாதனிடமும் சொல்ல அவர்களின் ஆதரவுடன் அதற்க்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது

பாஸ்கரை பற்றி ஷேஷகிரி மூலம் அறிந்த ஜானகி ஒரு நல்ல நாளில் தன் குடும்பம் புடை சூழ அங்கு சென்று பாஸ்கரை சமாதானப்படுத்தி விட்டு வந்தார் அன்றே பாஸ்கருக்கு தெரிந்த அனாதை இல்லத்தில் இருந்து ஒரு குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்தனர் புதுமனை புகுவிழாவில் இதை அறிவிக்க நினைத்திருக்க ஷேஷகிரியோ அன்றே தத்தெடுப்பதும் நடைபெறவேண்டுமென கூறிவிட்டான் ஷேஷகிரியின் விருப்பபடி லக்ஷ்மிக்கு இன்ப அதிர்ச்சி தர வேண்டி ரகசியம் காத்தனர் அனைவரும்.

தன் வாழ்வில் வற்றாத இன்பமாக ஜீவநதியென வந்த தன் மகளுக்கு சரயு என பெயரிட்டாள் லக்ஷ்மி தன் காதல் கணவனை தவறாக நினைத்தை அவனிடமே சொல்லி மன்னிப்பும் கேட்டாள் அதற்க்கு அவனோ அட அசட்டு பொண்டாட்டியே உன்னை விட்டு இன்னொருத்தி கூட எனக்கு கல்யாணமா? என் குடும்பத்த இவளோதான் நீ புரிஞ்சு கிட்டயா வெளில சொல்லிறாதே எல்லாரும் உன்னை புத்திசாலினு நினைச்சுகிட்டு இருக்காங்க தயவு செஞ்சு கெத்த காப்பாத்திகோ தாயே என கலாய்க்க அங்கே ஆனந்ததின் சாரல் வீச துவங்கியது
(தொடரும்)



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 04, 2019 3:53 pm

Code:
தோழனாய் வந்து விட்டேன் தோள்மீது சாய்த்து கொள்ளு[size=19][/size]
ஆறுதலாய் நானிருக்க ஆசுவாச படுத்திக் கொள்ளு[size=19][/size]
தூயவளே துயர் நீங்கும் நாட்கள் [size=19][/size]
இனி தொலைவில் இல்லை நம்பிவிடு

எனக்கும் பிடித்தது.
புன்னகை புன்னகை
ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Sat Jan 05, 2019 2:17 pm

தோல்வி நிலையென நினைத்தால்
அத்தியாயம்-20
எனக்கு பிடித்த கவிதை

மசக்கை உணரவில்லை மணிவயிற்றில் தாங்கவில்லை
அன்னமென வந்து என்னை அன்னையென அழைத்தவளே
சிட்டுகுருவியென குட்டி குட்டிகுறும்பு செய்து
சிந்தை மகிழவைத்தாய் கட்டிகரும்பே கைமாறு செய்திடவே
காலம் கனிந்திட காத்திருப்பேன் கண்மணியே

புதிய வீட்டுக்கு வந்தபின் தொழிலில் இருந்து ஜானகி விலகி கொண்டார் வீட்டிலும் பொறுப்புக்களை லக்ஷ்மியிடம் கொடுத்துவிட்டார் குழந்தைகளை வளர்ப்பதிலேயே கவனம் செலுத்தினார். ஜானகி தெய்வமாகி விட்டபின் குடும்ப பொறுப்புக்களை லக்ஷ்மியும் குழந்தைகளின் பொறுப்பை ராதாவும் தொழில் பொறுப்புக்களில் ஆண்களுடன் உதவியாக கௌசல்யாவும் இருந்தனர்

தொடர்ந்து பருவமழை பொய்த்ததாலும் விவசாய இடுபொருட்களின் விலை ஏற்றத்தாலும் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட வீட்டு பெண்களின் நகையையும் நிலங்களையும் வங்கியில் அடமானம் வைத்தார் பாஸ்கர் எதிர்பாராவிதமாக திருப்ப முடியாது போய் விட ஷேஷகிரியிடம் உதவிகோரினார்

தமையனின் நிலைக்கு வருந்தி அழுத கண்களுடன் லக்ஷ்மி நிற்க ஷேஷகிரி அனைவரிடமும் தயங்கி தயங்கி ஆலோசனை கேட்க யோசித்து முடிவெடுக்கலாமென முடிவு செய்யப்பட்டது அடமானம் வைக்கப்பட்டிருந்தது

ஆனந்த் வேலை செய்யும் வங்கி என்பதால் தன்னால் ஆனவற்றை செய்ய நினைத்த ஆனந்த் வங்கிக்கு சென்ற போது தன் சேமிப்பிலிருந்தும் தன் அண்ணன் விஸ்வநாதனின் உதவியுடன் பாஸ்கரின் கடன் களை கட்டிமீட்க வந்திருந்தாள் கௌசல்யா

அனைவரும் குடும்பத்துடன் பாஸ்கரின் வீட்டுக்கு சென்று நகைகளையும் நில பத்திரங்களையும் ஒப்படைத்தனர் நா தழுதழுக்க நன்றி சொல்ல பாஸ்கர் முனைந்த போது குறுக்கிட்ட கௌசல்யாவும் ஆனந்தும் என்ன அண்ணா நீங்க லக்ஷ்மி மட்டும் இல்லேனா என்னை யாரும் இப்போ உயிரோட பாத்திருக்க முடியாது அதே மாதிரி கௌசல்யாவோட பிரசவமும் நல்லா நடந்திருக்காது எங்களுக்கு லக்ஷ்மி செஞ்சதவிடவா நாங்க செஞ்சிருக்கோம் லக்ஷ்மியோட அண்ணன் எங்களுக்கும் அண்ணன் தான் முதல்ல கண்ணை துடைச்சுகிட்டு வேற வேலை இருந்தா பாருங்க என்றனர்

இப்படிஒருத்தருக்குஒருத்தர் கை கொடுத்து தூக்கி விட்டுதான் இந்த தொழில் சாம்ராஜியம் வளர்ந்தது. இன்னைக்கு நாம இவளோ நல்லபடியா இருக்கோமின்னா லக்ஷ்மியோட தியாகமும் கௌசல்யாவோட அனுசரணையும் ஆனந்தோட புரிதலும்தான் காரணம் ஏன்னா நான் ரங்கநாதன் ராதா மூணு பேரும் ஒண்ணா பிறந்தவங்க நாங்க ஒத்துமையா இருக்குறது பெரிய விஷயம் இல்ல ஆனா வேற வேற இடத்திலேர்ந்து இந்த வீட்டுக்கு வாழ வந்த மருமகள்களாகட்டும் அவங்க கூட பிறந்தவங்களும் தாங்கி நின்னுதான் இந்த குடும்பம் வளந்திருக்கு இதோ இது வரைக்கும் சரயூ தத்தெடுத்த பொண்ணுங்கறது அவளுக்கு தெரியாது அவளுக்கு தான் இந்த வீட்டுக்கு வர காரணம் பாஸ்கர்னும் தெரியாது

ஏம்பா ஸ்ரீருத்ரா அவ எதோ தெரியாம பேசுனதுக்காக சட்டுனு அவ மேல கோபபட்டியே இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் நாங்களும் கோபபட்டிருந்தா இந்த சந்தோஷம் நமக்கு வாழ்க்கையில கிடைச்சிருக்குமா? இல்ல இத்தனை கஷ்டத்தை தாண்டி வந்திருக்க தான் முடியுமா ?

இந்தோ இன்னமும் கொஞ்ச நாளுல கிருஷ்ணா -பூர்ணா கல்யாணம் முடிஞ்ச பின்னால தொழில உங்க கிட்ட ஒப்படைக்க போறோம் இனியும் நீங்க சின்ன பிள்ளைங்க கிடையாது நாங்க காப்பத்தி வந்த இந்த ஒத்துமை எப்போதும் நீடிச்சு இருக்கணும் என ஷேஷகிரி சொல்ல கண்ணீர் நிறைந்த கண்களுடன் தலையாட்டின இளவல்கள் நாமும் அவர்களின் ஒற்றுமை நீடிக்க வாழ்த்தி விடை பெறுவோம் தோழியரே

முற்றும்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 05, 2019 7:15 pm

எனக்கு பிடித்த கவிதை தலைப்பில் பதிவிட்ட கவிதைகள் எனக்கும் பிடித்தது.

கதைகள், பொதுவாக, நான் தவிர்க்கும் ஒன்று. ஆகவே மன்னிக்கவும்.

அறிமுகமாகி ஒரு மினி தொடர் கொடுத்ததற்கு நன்றி.


ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Sat Jan 05, 2019 8:06 pm

தாங்கள் கொடுத்த வாய்ப்புக்கும் ஊக்கத்துக்கும் நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக