புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
prajai
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Kavithas
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_c10 
1 Post - 1%
bala_t
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_c10 
284 Posts - 42%
heezulia
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
prajai
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்


   
   

Page 2 of 19 Previous  1, 2, 3 ... 10 ... 19  Next

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 01, 2018 10:06 pm

First topic message reminder :

"வீரயுக நாயகன் வேள் பாரி"

ஈகரை வாசர்களுக்கு இனிய வணக்கங்கள்..!
சாகித்திய அகாதெமி விருது பெற்ற "காவல் கோட்டம்" (அரவான் படத்தின் மூலகதை)  ஆசிரியர் சு.வெங்கடேசன் அவர்கள் விகடனில் எழுதி வரும் புதிய வரலாற்று தொடரை உங்களுடன் பகிர இந்த திரியை தொடங்குகிறேன்...

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 P100bnew

"வீரயுக நாயகன் வேள் பாரி" என்ற இந்த வரலாற்று தொடரை எழுதி வரும் சு.வெங்கடேசன், ஓவியர் மணியம் செல்வன் மற்றும் விகடன் பிரசுரத்தார்கள் அனைவருக்கும் ஈகரை நண்பர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.. அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்



நன்றிஆசிரியர் : சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ., , விகடன்  நன்றி


முன்னுரை

இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம்போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காகத் தன்னையே தந்தவன் வேள்பாரி.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 P100a

தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்புநாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.

தலையானங்கானத்துப் போர், வெண்ணிலைப் போர், வாகைப் பறந்தலைப் போர், கழுமலப் போர் என சங்ககாலத் தமிழகம், குருதி பெருக்கெடுத்து ஓடிய எண்ணற்ற போர்க்களங்களைக் கண்டது. அங்கெல்லாம் நடைபெற்ற போரில் மூவேந்தர்களில் யாரேனும் ஒருவர் வெற்றிபெற்றார்.

மற்றவர்கள் தோற்றோடினர். ஆனால், `பறம்புமலைப் போரில்’ மட்டுமே மூவேந்தர்களும் ஒருசேர தோல்வியைத் தழுவினர். தமிழக வரலாற்றில் அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் நிகழாத வீரச்சரித்திரம் இது.

பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது.

வென்றவர்களின் பெயர்கள் இன்று வரை துலங்கவில்லை. ஆனால் வீழ்த்தப்பட்ட பாரி, வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரமானான்; வள்ளல் என்ற சொல்லின் வடிவமானான். முல்லைக்கொடிக்குத் தேரைத் தந்தவன் மட்டும் அல்ல... தனது வீரத்தால் என்றும் ஒளிவீசும் வெற்றிக்கொடியை நாட்டிச்சென்றவன் வேள்பாரி.

இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்...

Readre இந்த பதிவை விரும்பியுள்ளார்


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon May 07, 2018 5:26 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 P99
ரு பொன்வண்டு கூட்டுக்குள் நுழைவதைப்போல் இருந்தது. விளிம்பில் கருமைகொண்டு நீண்டுகிடந்த மரக்கிளைகள், அந்தப் பொன்வண்டின் எண்ணற்ற கால்கள் எனக் காட்சியளித்தன. மாளிகையின் மேல்மாடத்தில் நின்றபடி, மேற்குத் திசையில் மலையில் மறையும் சூரியனைப் பார்த்துக்கொண்டிருந்தார் கபிலர். கண்கள், ஊர்ந்து இறங்கும் பொன்வண்டைப் பார்த்துக்கொண்டிருந்தாலும், மனம் முழுவதும் காலைச் சூரியனே நிறைந்திருந்தான்.  அருகில் யாரோ வரும் காலடி ஓசை கேட்டுத் திரும்பினார்.

``மறையும் கதிரவனிடம் ஒளி வாளை ஒப்படைத்துக்கொண்டிருக்கிறீர்களா?”- கேட்டுக்கொண்டே இன்முகத்தோடு வந்தான் பாரி. இருவரும் பேசியபடியே இருக்கையில் அமர்ந்தனர்.

பாரி கேட்டான்... “காலையில் உச்சிப்பாறை ஏறியதும் மேற்குத் திசையைப் பார்த்தபடி, ‘காணக்கிடைக்காத காட்சி’ எனச் சொன்னீர்களே... எதைச் சொன்னீர்கள்?”

சற்றே யோசித்த கபிலர், “அதுவா… மேலே ஏறியதும் முதலில் கண்ணில்பட்டது கோட்டைச்சுவரே இல்லாத இந்த நகர அமைப்புதான். இப்படி ஒரு தலைநகர் உலகில் எவ்வியூர் மட்டுமாகத்தான் இருக்கும்.”

``எதிரிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள, கோட்டைச்சுவர் எதுவும் எங்களுக்குத் தேவை இல்லை. ஏனென்றால், எங்களின் ஒத்துழைப்பும் உதவியும் இல்லாமல், யாரும் இந்தப் பெரும்காட்டையும் மலைமுகடுகளையும் கடந்து இங்கு வந்துவிட முடியாது அல்லவா?”

பாரியின் கேள்வியை ஆமோதித்தார் கபிலர்.

``அதே நேரம் காட்டு உயிரினங்களிடம் இருந்து உங்களுக்குப் பாதுகாப்பு தேவை.அதற்காகவாவது சுவர் எழுப்பியிருக்கலாமே?”

``அதன் பொருட்டுத்தான் எழுப்பியுள்ளோம்.”

``எங்கே எழுப்பியிருக்கிறீர்கள்... என் கண்களுக்குத் தெரியவில்லையே. எதுவும் மாயச்சுவர் கட்டியுள்ளீர்களா?”

பாரி சிரித்தான்.

``உங்களின் கண்களுக்குத் தெரிகிறது. ஆனால், அதுதான் சுவர் என்பதை உங்களின் எண்ணம் ஏற்க மறுக்கிறது.”

கபிலர், உட்கார்ந்த இடத்தைவிட்டு எழுந்து பார்த்தார். அவரைக் கவனித்தபடி பாரி கேட்டான்... “இந்தக் காட்டில் எத்தனை வகையான விலங்குகள் இருக்கின்றன என்று யாருக்குத் தெரியும்? காட்டுவிலங்குகளால் உடைத்து நொறுக்கவோ, தாவிக் கடக்கவோ முடியாத ஒரு கோட்டை மதிலை மனிதனால் கட்டிவிட முடியுமா? கார்காலத்தில் மூன்று `குளகு’ தின்ற ஒரு பெண் யானை, எவ்வளவு பெரிய கற்கோட்டையையும் தகர்க்கும். `அதிங்கத்தை’த் தின்ற ஆண் யானைக் கூட்டம் உள்நுழைந்தால், பெரும்மலையும் கிடுகிடுக்கும். மரமேறி உயிரினங்களால் தாவிக் கடக்க முடியாத தடுப்புச்சுவரை எழுப்ப முடியுமா? இந்த மலைத்தொடர் வடதிசையிலும் தென்திசையிலும் எவ்வளவு தொலைவு நீண்டுகிடக்கிறதோ, யார் அறிவார்? இடையில் ஒரு சிறு பகுதியில் பறம்பு நாடு இருக்கிறது. எண்ணிக்கையில் அடங்காத விலங்குக் கூட்டங்கள் நாள்தோறும் இடமும் வலமுமாக எங்களைக் கடக்கின்றன. இவற்றிடம் இருந்து பாதுகாக்க எத்தனையோ முறைகளைக் கையாண்ட எம் முன்னோர்கள், இறுதியாக இந்த நாகப்பச்சை வேலியை பெரும்கோட்டையாக எழுப்பினர்.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 P99a
கபிலர் சுற்றும் முற்றும் பார்த்தார். எவ்வியூரின் கடைசி வீடுகளும் தெருக்களும் முடிவடைந்த சிறிது தொலைவில் இருந்து காடு ஆரம்பம் ஆகிறது. இதில் வேலியோ, சுவரோ எங்கு இருக்கிறது என யோசித்தபடி நின்றார்.

பாரி சொன்னான்... “ஊரின் எல்லை முடிவடைந்ததும் காடு தொடங்குகிறது.இடையில் வேலி எங்கே இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? நீங்கள் பார்க்கும் அந்தக் காட்டின் தொடக்கம் இயற்கையானது அன்று. அந்தத் தாவரங்கள், தாமாக முளைத்தவை அல்ல; நாங்கள் அறிந்த இந்தப் பெரும் உலககெங்கிலும் இருந்தும் கொண்டுவந்து, இங்கு முளைக்கவைத்தவை.”

கபிலர், பாரியைக் கூர்ந்து பார்த்துக்கொண் டிருந்தார்.

“காட்டில் உள்ள ஒவ்வோர் உயிரும் தின்னக்கூடிய தாவரங்களும் உண்டு; தின்னக் கூடாத தாவரங்களும் உண்டு. நுகரக்கூடியதும் நுகரக் கூடாததுமான பச்சிலைகள் உண்டு. பற்றக்கூடியதும் பற்றக் கூடாததுமான செடி, கொடிகள் உண்டு. நாங்கள் வன உயிரினங்கள் நுகரவும் நெருங்கவும் பற்றவும் முடியாத தாவரங்களைக்கொண்டு, ஒரு பெரும் வேலி அமைத்துள்ளோம். தலைமுறைத் தலைமுறையாக எங்கள் தாவர அறிவின் சேகரம், இந்த நாகப்பச்சை வேலிதான்.”
இவ்வளவு எளிதான வார்த்தைகளால் எவ்வளவு பெரிய செய்தியைச் சொல்லிக் கொண்டிருக்கிறான் பாரி, நம்ப முடியாமல் நின்றுகொண்டிருந்தார் கபிலர்.

``இதை எப்படி மனிதனால் செய்ய முடிந்தது?”

“அதைச் செய்ய முடிந்ததால்தான், நாங்கள் இங்கு வாழ்கிறோம். காற்றுகூட உள்நுழைய முடியாத இந்தக் கானகத்தில் ஓரிரு வீரர்கள் காவல் காக்க, நாள்தோறும் தூங்கி, உயிரோடு எழுகிறோம். எங்கள் குழந்தைகள் மறுநாள் காலை சிரித்துக்கொண்டு விளையாடுகின்றனர். எங்கள் இளைஞர்களின் இதழ்களில் முத்தத்தின் ஈரம் ஊறிக்கொண்டே இருக்கிறது.”

``இது எப்படி…?”  - நா தயங்கி வெளிவந்தன கபிலரின் வார்த்தைகள்.

``வெறிமணம்கொண்ட செடி, கொடி, மரங்களால் சூழ்ந்துகிடக்கிறது இந்த வேலியின் வெளிப்புறம். நடுப்பகுதியோ, புறவைரமும் அகவைரமும் பாய்ந்தோடும் மரங்கள் ஒன்றை ஒன்று பின்னிக்கிடப்பதைப்போல நன்கு திட்டமிட்டு வளர்க்கப்பட்டுள்ளது. வெளிவிஷம், மற்றும் உள்விஷத் தாவரங்களால் தழைத்துக் கிடக்கிறது இதன் முதல் பகுதி. இந்த மூன்று பகுதிகளின் இடைவெளிகளிலும் நஞ்சு ஏறிய அலரி வேர்கொண்டு சுருக்கு வலை பின்னப்பட்டுள்ளது.

நச்சுப் பிசின் வழியும் மருவு, தொடரிப் பட்டைகள் இடைவிடாதிருக்கும். ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து பின்னிப்பிணைந்து உருவாக்கப்படும் பிணையல், மாலையைப்போல தாவரப்பச்சிலைகளோடு பிணைந்து கட்டிக் கிடக்கும். அதன் கணுக்கள்தோறும் வேர்களை உண்டாக்கி, அந்தப் பச்சிலைச்செடிகள் தழைத்தபடி இருக்கும்.

இந்த வேலிக்குள் உருவாக்கப்பட்டுள்ள அனைத்துத் தாவரங்களின் மீதும் குறுக்கும் நெடுக்குமாகப் படர்ந்துகிடக்கும் எண்ணிலடங்காத படர்கொடிகளும் சுற்றுக்கொடிகளும்தான், இந்த நாகப்பச்சை வேலியின் உயிர்நாடி. வலப்புறம் சுற்றும் கொடியும் இடப்புறம் சுற்றும் கொடியும் ஒன்று மாற்றி ஒன்றாகப் படர்ந்துகொண்டே இருக்கின்றன. சுருண்டு எழும் அவற்றின் ஊசிநாவுகள் எதிரெதிர் திசையில் ஒருசேரப் பின்னியபடியே மேலே எழுகின்றன. உதிர்ந்து கொண்டிருக்கும் இலையைக்கூட இந்த வேலி அந்தரத்தில் நிறுத்திவிடும்.

விலங்கின் நாசியை வெகுதொலைவிலேயே இந்த வெறிமணம் தாக்கும். அதையும் கடந்து உள்நுழையும் உயிரினம் விஷமுள்ளாலோ, நச்சுக்கணுக்களாலோ, நாவில்படும் பச்சிலையாலோ, சற்றே மயங்கி அமரும். அந்த கணத்தில் அதன் மயிர்க்கால்கள் ஒவ்வொன்றையும் பற்றி உள்ளிழுக்கின்றன சுருட்கொடிகள். அந்த உயிரினத்தின் இயக்கத்தை மிக விரைவாக தனது கட்டுக்குள் கொண்டுவந்துவிடுகிறது இந்த நாகப்பச்சை வேலி. அதன் பிறகு அந்த விலங்கு அமர்ந்த இடத்தில் உள்ள தாவரமும் கறையான்களும் எறும்புகளும் சிலந்திகளும் சற்றே கூடுதல் செழிப்புக்கொள்கின்றன.”

பாரி சொல்வதை வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தார் கபிலர்.

“தாமரை இதழை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, அதன் மேல் ஊன்றப்படும் வேலம் முள், முதல் இதழுக்குள் இறங்கும் நேரம்தான் கணப்பொழுது. மூன்றாம் இதழைக் கடக்கும் நேரம்தான் இமைப்பொழுது, ஆறாம் இதழுக்குள் நுழையும் நேரம்தான் விநாடிப்பொழுது. எந்த ஒரு விலங்கின் இயக்கத்தையும் வேலம் முள் ஆறாம் இதழைக் கடக்கும் பொழுதுக்குள் நிறுத்திவிடும் ஆற்றல் இந்த நாகப்பச்சை வேலிக்கு உண்டு என்று எம் முன்னோர் கூறுவர்.”

இயற்கையைப் பற்றிய பேரறிவின் முன்னர், தூசி என நின்றுகொண்டிருப்பதாக கபிலர் உணர்ந்தார். மேற்கு மலையின் விளிம்பில் பொன்வண்டு தனது கடைசிக்கால்களை உள்ளிழுத்துக்கொண்டிருந்தது. பாரி, இறங்கும் சூரியனையே பார்த்துக்கொண்டிருந்தான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 P99b
ஆச்சர்யம் விலக்கி, சற்றே ஆர்வம் மேலிட கபிலர் கேட்டார், ``எந்த வெறிமணம் யானைகள் கூட்டத்தை விரட்டக்கூடியது?”

ஒளி உள்வாங்கும் அழகைப் பார்த்தபடி பாரி சொன்னான்.

“ஏழிலைப் பாலை.”

கபிலரின் கண்கள் பூத்தன.

“அந்த மரத்தின் வாடையை நுகரும் யானைகள் காதத் தொலைவுக்கு விலகி ஓடும்” என்றான் பாரி.

“அந்த மரங்கள் எங்கே இருக்கின்றன? நான் அருகில் சென்று பார்க்க வேண்டும்.”

பாரியின் உதட்டில் சின்னதாக ஒரு சிரிப்பு ஓடி மறைந்தது.

`சிரிக்கக்கூடிய கேள்வியையா நான் கேட்டுவிட்டேன்' என்று யோசித்தபடி பதிலுக்குக் காத்திருந்தார் கபிலர்.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 P99c``ஒவ்வொரு திசைக்கும் ஒரு மரம் நின்றுகொண்டிருக்கிறது.”

``எறும்புக் கூட்டங்கள்போல் யானைக் கூட்டங்கள் திரியும் இந்தக் காட்டில், திசைக்கு ஒரு மரம் போதுமா?”

“அதற்கும் அதிகமாக வைத்தால் எவ்வியூர் தாங்காது” என்றான் பாரி.

கபிலருக்கு, பதில் விளங்கவில்லை.

பாரி சொன்னான்... ``அந்த மரத்தால் வேறு தொல்லைகள் இருக்கின்றன. மதயானை ஏழிலைப் பாலையின் வாசனையை நுகர்ந்துவிட்டால், வெறிகொண்டு வந்து அந்த மரத்தை அடியோடு பிடுங்கி எறிந்து நாசம் செய்துவிடும்.”
``பின் எப்படிச் சமாளிப்பீர்கள்?”

“அதன் பிறகு மனித முயற்சிதான். ஆயுதங்களும் பறை ஒலிகளும் தீப்பந்தங்களும்தான் கைகொடுக்கும். திசைக்கு ஒன்று என்றால் வந்த திசையில் இருக்கும் அந்த ஒன்றோடு அதன் ஆத்திரம் தணிய வாய்ப்பு இருக்கிறது அல்லவா? இப்படி ஒரு நிகழ்வு மூன்று தலைமுறைகளுக்கு முன்னர் நடந்ததாகச் சொல்வார்கள்.”

ஆர்வத்தில் கேட்ட கேள்வி அதிர்ச்சியைப் பதிலாகக் கொடுத்தது. கணப்பொழுதுக்குள் மாறிச் செல்லும் உணர்வுகளின் வழியே பயணமாகிக்கொண்டிருந்தது கபிலரின் எண்ணம்.

“அதுமட்டும் அல்ல. இன்னொரு பிரச்னையும் உண்டு. அதுதான் மிக முக்கியமானதும்கூட.”

“என்ன அது?”

“அந்த மரத்தின் வாசனை, காமத்தைத் தூண்டும். கோல்கொண்டு நெருப்பைக் கிளறுவதைப்போல, அது வாசனையைக்கொண்டு காமத்தைக் கிளர்த்திக்கொண்டே இருக்கும்.”

சற்றே இடைவெளிவிட்டு பாரி சொன்னான், “எவ்வியூருக்குள் வேறு வேலையும் நடக்க வேண்டும் அல்லவா? அதனால்தான் திசைக்கு ஒரு மரம் மட்டும் வைத்திருக்கிறோம்” - பாரியின் சொல்லைத் தாண்டி வெளிவந்தது சிரிப்பு.
கபிலரும் சேர்ந்து சிரித்தார். நினைவு வந்ததும் சட்டென சிரிப்பை அடக்கிவிட்டுக் கேட்டார், “அதனால்தான் மரத்தின் அருகில் சென்று நான் பார்க்க வேண்டும் என்று கேட்டதற்கு  நீ சிரித்தாயா?”

அவ்வளவு நேரம் அடக்கமாக வெளிப்பட்ட சிரிப்பு இப்போது பீறிட்டது. சிரித்தபடியே ‘ஆம்’ என, தலையை மேலும் கீழுமாக ஆட்டினான் பாரி.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 P99e
கபிலர் சற்றே வேகமாக, “ஏழிலைப் பாலையை அடியோடு வீழ்த்தும் மதயானை மனிதரிலும் உண்டு.”

சட்டென பாரி சொன்னான்... ``காமம் கண்டு பயந்த சொல் இது.”

``பயம் இல்லை என்று சொல்ல நான் பொய்யன் அல்ல. ஆனால், பயப்பட மாட்டேன் எனச் சொல்ல பொய் தேவை இல்லை.”

``அதுதான் புலவன். சொல் சுடும்போது சொல்லைச் சுடுவான் என்று சொல்லக் கேட்டுள்ளேன். இன்றுதான் சொல்லிக் கேட்கிறேன்.”

நாழிகை மணியோசை எவ்வியூர் முழுவதும் எதிரொலித்தது. சூரியன் முழுவதும் விழுந்தவுடன் இருள், காட்டின் எல்லா திசைகளில் இருந்தும் இறங்கி வந்துகொண்டிருந்தது. பந்தங்களை ஏற்றும் வீரர்கள், கையில் நீண்ட குழல்போன்ற விளக்குகளுடன் ஓர் இடம் நோக்கிக் குவிந்துகொண்டிருக்கின்றனர்.

பேச்சு எதிர்பாராத கணத்தில் காமத்துக்குள் போனதைப் பற்றி யோசித்தபடி கபிலர் கூறினார்... “இரவு வரும்போதே ஏதாவது ஒரு வடிவில் காமத்தையும் அழைத்து வந்துவிடுகிறதே.”

பாரி அசட்டுச் சிரிப்போடு சொன்னான்... “ஏழிலைப் பாலைக்கு இரவு ஏது... பகல் ஏது?”

பறம்புமலை ஏறத் தொடங்கியதில் இருந்து தனது சொல் முறியும் ஓசையை விடாமல் கேட்டுக் கொண்டிருந்தார் கபிலர்.

பாரி சொன்னான்... “ஏழிலைப் பாலையின் அடிவாரத்துக்கு வள்ளியை அழைத்து வந்ததுதான் முருகன் செய்த மிகப்பெரிய தந்திரம். இல்லை என்றால், வள்ளியை ஒருநாளும் அவனால் இணங்க வைத்திருக்க முடியாது.”
``அவனும் குறுக்குவழியைத்தான் கையாண்டானா?”

சற்றே தயக்கத்துடன், “ஆம்” எனச் சொல்லியபடி தொடர்ந்தான் பாரி. “முருகன் வேட்டுவர் குலம்; வள்ளியோ கொடிக்குலம். செடி, கொடிகளை அறிந்தவர்கள் வேட்டையாடியவர்களைவிட மனநுட்பத்தில் முன்னேறியவர்கள் அல்லவா? வலிமையைவிட நுட்பத்துக்குத்தானே ஆற்றல் அதிகம். அதனால்தான் முருகனால் வள்ளியின் மனதில் எதைச் சொல்லியும் இடம்பிடிக்க முடியவில்லை.

காட்டை அழித்து, பயிரிடு முன் அந்த நிலத்தில் காமம் நிகழ்த்தி மனிதக் குருதி படிந்த தாய்நிலத்துக்குள் முதல் பயிரிடுதலைத் தொடங்கிய வர்கள்தான் கொடிக்குலத்துக் காரர்கள். முதலில் நட்ட வள்ளிக் கிழங்கைத் தோண்டி எடுக்கும்போது இடுப்பு வலிகண்டு, அந்த நிலத்திலே பிறந்தாள் அந்தப் பெண். விதைத்த இடத்திலே முளைத்தவள் அவள். அதனால் அந்தச் செவ்வள்ளிக் கிழங்கின் பெயரையே அந்த அழகிய பெண்ணுக்குச் சூட்டினர். வள்ளிக்கிழங்கும் வஞ்சிக்கொடியுமே பெண்ணாக மாறிய பேரெழில் கொடிக்குலத்துக்கு உரியது.

செடி, கொடிகளை அறிந்தவர்களை எளிதில் ஈர்க்க முடியாது. அவர்கள் கணம்தோறும் உயிரின் வளர்ச்சியைப் பார்த்து மகிழ்ந்தவர்கள். வண்ணங்களையும் வாசனைகளையும் அவர்கள் அளவுக்கு அறிந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவர்களின் கவனத்தைக் கவர்வதோ, காதலைப் பெறுவதோ எளிது அல்ல. வேறு வழியே இல்லாமல்தான் ஏழிலைப் பாலையின் அடிவாரத்துக்கு வள்ளியை அழைத்துச் சென்றான் முருகன்.”

கபிலரின் கண் முன் காலமும் காதலும் கடவுளும் ஒன்றை ஒன்று பின்னி மேலே எழுந்தபடி இருந்தன. ஆண் ஆதியில் இருந்தே வெல்வதற்குத்தான் முயன்றிருக்கிறான். பெண் ஆதியில் இருந்தே நம்புவதற்குத்தான் ஆசைப்பட்டிருக்கிறாள்.
பாரி சொன்னான்... “ஏழிலைப் பாலை, பெண்மையால் பூக்கும்; அதைவிட முக்கியம் பெண்ணையும் ஆணையும் ஒருசேரப் பூக்கவைக்கும்.”

வியப்பு நீங்க சிறிது நேரமானது. உள்ளுக்குள் ஏனோ ஒரு சிரிப்பு பொங்கிவந்தது. அதை அடக்க முடியவில்லை. சற்றே திரும்பிச் சிரித்தார் கபிலர். ஏளனம்கொண்ட அந்தச் சிரிப்பின் தொனியைக் கவனித்த பாரி, ‘இதில் சிரிக்க என்ன இருக்கிறது?' என, பார்வையால் கேட்டான்.

கபிலர் சொன்னார்... ``அந்த ஏழிலைப் பாலையைத் தலைமாட்டில் நட்டுவைத்துக் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் கூட்டத்தோடு நான் வந்து சேர்ந்துவிட்டேனே என்று என்னை நினைத்துச் சிரித்தேன்.”

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 P99dகபிலரோடு சேர்ந்து வெடித்துச் சிரித்தான் பாரி.

இருளை விரட்ட பந்தங்கள் தயாராகிக்கொண்டி ருந்தன. பாரி சொன்னான், “பந்த ஒளிக்குப் பூச்சிகள் வந்து விழாமல் இருக்க இலுப்பை எண்ணெய் ஊற்றப்படுவதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், அதற்கு எல்லாம் இந்தக் காட்டுப்பூச்சிகள் கட்டுப்படாது. நாங்கள் பயன்படுத்துவது கொம்பன் விளக்குகள். அதில் நாகக் கழிவும் நஞ்சுப் பிசினும் சேர்த்து மெழுகியிருப்போம். பந்தம் எரிவது திரியில் இருந்து மட்டும் அல்ல, திரியோடு சேர்ந்து விளக்கின் விளிம்பும் கருகியபடி தீய்ந்து எரியும். அந்த வாசனையை ஊடறுத்து பூச்சிகளால் உள்நுழைய முடியாது. ஒருவகையில் இதை `ஒளிவலை' எனச் சொல்லலாம். ஒவ்வொரு பருவகாலத்துக்கும் மாறுபடும் பூச்சியினங்களுக்கு ஏற்ப, கொம்பனில் தேய்க்கும் பசையும் மாறும். எண்ணெய்யின் சேர்மானமும் மாறும். அப்போதுதான் அவற்றைக் கட்டுப்படுத்த முடியும்.

கபிலர் பந்தம் ஏற்றப்போகும் காவலர்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு பெரும் தாழ்வாரத்தின் அடியில், அவர்கள் எல்லோரும் கூடியிருந்தனர். கொம்பன் விளக்கில் எண்ணெய் ஊற்றப்பட்ட பிறகும், அவர்கள் நெருப்பைப் பற்றவைக்காமல் யாருக்கோ காத்திருந்தனர்.

தொலைவில் மாளிகையின் மேல்மாடத்தில் இருந்து அதைப் பார்த்துக்கொண்டிருந்த கபிலர் கேட்டார், ``உனது உத்தரவுக்காகத்தான் காத்திருக்கிறார்களா?”

“இல்லை. அவர்கள் குலநாகினியின் வருகைக்காகக் காத்திருக்கின்றனர்.”

பாரி சொல்லிக்கொண்டிருக்கும்போதே வயதான கிழவிகளின் கூட்டம் ஒன்று எவ்வியூரின் கீழ்த் திசையில் இருந்து நடந்து வந்துகொண்டி ருந்தது. கபிலர் எட்டிப்பார்த்தார். பாரி கையைக் காட்டிச் சொன்னான்... “அதுதான் நாகினிகளின் கூட்டம். அதற்குள்தான் குலநாகினி வந்துகொண்டிருப்பாள். அவள்தான் எங்கள் குலமூதாய். இந்த நாகப்பச்சை வேலியை ஆட்சிசெய்பவள் அவள்தான். பெண்களால்தான் இவ்வளவு நுட்பமான ஒரு வேலியைக் கட்டியமைத்துக் காப்பாற்ற முடியும். அவர்களின் சொல்கேட்டு தாவரங்கள் தழைக்கும்; தலையாட்டும். அவர்களின் உடம்பில்தான் கொடிக்குலத்தின் ரத்தம் ஓடுகிறது.

ஆதியில் நிலத்தில் சிந்திய குருதியில் இருந்து தழைத்தவர்கள்தானே அவர்களின் முன்னோர்கள். ஒரே நேரத்தில் மண்ணுக்குள் வேர்விடவும் மேல்நோக்கி முளைவிடவும் தாவரங்களால் முடிவதைப்போல இவர்களால் முடியும். கருவுக்குள் புது உயிர் சூல்கொள்ளும் கணத்தில்கூட, பிறந்த குழந்தைக்காக மார்பில் பால் சுரந்துகொண்டிருக்கும் அல்லவா? எல்லாம் தாவரப்பட்சினிகள். அபார ஆற்றல் படைத்தவர்கள். இவர்களிடம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.''

பாரியின் குரலுக்குள் இதுவரை கேட்டு அறியாத அச்சம் இருந்தது. குல சமூகத்தில் பெண்ணின் தலைமை இடத்தை வேளீர் குலம் அப்படியே வைத்துள்ளது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 P99f
“எங்களின் மூதாயின் குரலுக்கு குலமே அஞ்சும்” என்றான் பாரி.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அந்தக் கூட்டம் பந்தங்கள் ஏற்றப்படும் தாழ்வாரத்துக்கு வந்துசேர்ந்தது. நகர் எங்கும் ஏற்றப்படவேண்டிய பந்த எண்ணெய்களின் வாடையையும் கொம்பன் விளக்கின் வாடையையும் நுகர்ந்து பார்த்தபடியே ஒவ்வொரு விளக்காக ஏற்றிக் கொடுத்துக்கொண்டி ருந்தார்கள் நாகினிகள். ஏற்றப்பட்ட விளக்குகளைக் கையில் ஏந்திய வீரர்கள், அவற்றை உரிய இடங்களுக்கு எடுத்துச் சென்றுகொண்டிருந்தனர்.

``நாகப்பச்சை வேலியையும் ஒளி வலையையும் நிர்வகிப்பவர்கள் குலநாகினியின் தலைமை யிலான பெண்களே. அவர்கள்தான் பருவ காலங்களின் தன்மையை அறிந்து, செய்ய வேண்டிய எல்லா முன்னெச்சரிக்கைகளையும் செய்து இந்த நகரையும் எங்களையும் காத்துவருகிறவர்கள். ஆண்கள் எல்லோரும் விலங்குகளை வேட்டையாடவும் வெளியுலக மனிதர்களிடம் இருந்து தற்காக்கவும்தான். புல் பூண்டில் இருந்து, இலையின் முனைக்கு வந்து இரு கால்கள் நீட்டி எட்டிப்பார்க்கும் எறும்புகள் வரை அறிந்தவர்கள் அவர்களே.”

பிரமிப்பு நீங்காமல் இருந்தது பாரியின் ஒவ்வொரு வார்த்தையும். வந்ததில் இருந்து இதுவரை பார்த்தறியாத பாரியை, கபிலர் இப்போது பார்த்துக்கொண்டிருந்தார்.

``நாகினிகள் பார்க்கிறார்கள். வாருங்கள் கீழிறங்கிப் போவோம்” என்றான் பாரி.

இருவரும் அந்த இடம் நோக்கி நடந்தனர். வீரர்கள் தீப்பந்தம் ஏந்தி எல்லா திசைகளிலும் சென்றுகொண்டிருந்தனர். எல்லா தீப்பந்தங்களும் அந்த இடத்தில் வைத்துதான் ஏற்றப்படுவதால், அங்கு கரும்புகை நிரம்பியிருந்தது. உள்ளே இருக்கும் யாருடைய முகமும் அருகில் வரும் வரை தெரியவில்லை. கரும்புகைக்குள் நுழைந்ததும் பாரி வணங்கினான். கபிலருக்கு புகைவாடை பெரும் உமட்டலைக் கொடுத்தது. கண்கள் வேறு எரிந்தன. உள்ளுக்குள் இருக்கும் யார் முகமும் தெரியவில்லை. உமட்டலை அடக்கியபடி கண்களைக் கசக்கிக் கசக்கிப் பார்த்தார். புகை பொங்கிப் பொங்கி வந்துகொண்டிருந்தது. மூக்கில் காரநொடி ஏறி, தும்மல் உருவானது. மூச்சிழுத்து வாய் திறந்தபடி, தும்மப்போகும் அந்த நொடியில் மூக்குக்கு மிக அருகில் தெரிந்தது பெருவிழி விரிந்திருந்த குலநாகினி முகம்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon May 07, 2018 10:23 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 P75bவீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 P75a
ள்ளிரவு நெருங்கியது. எவ்வியூரை விட்டு சற்றுத்  தொலைவில் நடுக்காட்டில் பெரும் மர அடிவாரத்தைச் சுற்றி வட்ட வடிவில் ஊரே உட்கார்ந்திருந்தது. எங்கும் பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. நடுவில் ஆடுகளம் இருந்தது. உட்காருவதற்கு ஏதுவாக மண்திட்டுகளும் மர அடுக்குகளும் உருவாக்கப்பட்டிருந்தன. அந்தப் பெரும் மரப் புதர்தான் கொற்றவையின் இருப்பிடம். அந்த மர அடிவாரத்தின் முன்னர் இலைவிரித்து, பதினைந்துவிதமான பனங்கூடைகள் நிறைய பல்வேறு வகையான பழங்கள் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன.
சுற்றிலும் பெரும் கூட்டம். நேர் எதிரே பாரியின் இருக்கை. அதற்குப் பக்கத்தில் கபிலர் அமர்ந்திருந்தார். மரத்தின் வலதுபக்கம் எண்ணற்ற பாணர்கள் வாத்தியக் கருவிகளோடு காத்திருந்தனர். இடதுபக்கம் குலநாகினி உட்கார்ந்திருந்தாள். அவளைச் சுற்றி நாகினிகளின் கூட்டம் இருந்தது. ஊர்மன்றலில் நடக்கும் குரவைக்கூத்துக்கோ, பாணர்களின் ஆட்டம்பாட்டத்துக்கோ,  சந்தனவேங்கை முன்பு நிகழும் வள்ளிக்கூத்துக்கோ நாகினிகள் வர மாட்டார்கள். குலச்சடங்குகள் தவிர்த்து கொற்றவைக் கூத்துக்கு மட்டுமே அவர்கள் வருவார்கள்.

இருளின் மையத்தில் சிறுத்திருந்த வெளிச்சத்துக்கு நடுவில் குலநாகினியைப் பார்ப்பதே அச்சம்கொள்ளச் செய்தது. அவளின் தோளிலும் மடியிலும் கூகைக்குஞ்சுகள் தாவிச் சரிந்துகொண்டிருந்தன. அவள்  தன் மேல் போட்டிருந்த தாவர வேர்களாலான மாலைக்குள், சிறுபாம்புகள் நெளிவதுபோல் கபிலருக்குத் தெரிந்தது. அந்தச் சூழலே மிகவும் அச்சமூட்டுவதாக இருந்தது. விழா தொடங்கவில்லை. பெரும் அமைதி நிலவியது. யாருக்காகக் காத்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 P75c
கபிலருக்கு கொற்றவை விழா பற்றி எத்தனையோ கேள்விகள் இருந்தன. ஆனால், விழா நாள் நெருங்க நெருங்க, ஊரே பேச்சைக் குறைத்து மெளனமாகியது. கபிலரால் யாரிடமும் எளிதில் உரையாட முடியவில்லை. தன்னோடு எப்போதும் பேசி மகிழும் நீலன், மற்றவர்களைவிட இறுகிய மெளனம் கொண்டிருந்தான். அவனிடம் இருந்து ஒரு வார்த்தையைக்கூட கபிலரால் வாங்க முடியவில்லை; ஏன் என்றும் புரியவில்லை. கபிலர் கேட்கிறார் என்பதால், பாரி மட்டுமே அவ்வப்போது ஒரு சில கேள்விகளுக்குப் பதில் அளித்தான். 
``கொற்றவைக் கூத்து பாலை நிலத்துக்கு உரியதுதானே. அதை ஏன் குறிஞ்சி நிலத்தில் நடத்துகிறீர்கள்?” என்று கேட்டார் கபிலர்.

“மனம் கொடும்பாலையாக வெடித்துக்கிடக்கும்போது எங்கே நடத்தினால் என்ன?”

பாரியிடம் இருந்து இவ்வளவு விரக்தியான ஒரு பதிலை கபிலர் எதிர்பார்க்கவில்லை. அவர் திகைப்புற்று நின்றார்.

“இது குறிஞ்சிக்கு உரிய கூத்து அன்று. ஐந்திணைக்கும் உரிய கூத்து” என்ற பாரியின் குரல், சத்தற்று பெரும் கலக்கம் கொண்டிருந்தது. இதற்கு மேல் கேள்வி எதுவும் கேட்க வேண்டாம் என கபிலர் எண்ணிக்கொண்டிருந்தபோது, பாரி தொடர்ந்தான்.

“இந்த மண் எங்கும் மூவேந்தர்களால் எத்தனையோ குலங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. பலநூறு ஆண்டுகளாகக் குருதி ஆறு வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. அழிபடும் குலங்களின் எண்ணிக்கை இன்று வரை தொடர்கிறது.”

இந்த விழாவுக்கும் பாரி சொல்லும் பதிலுக்கும் என்ன சம்பந்தம் என்ற குழப்பத்துடன், கபிலர் கேட்டுக்கொண்டிருந்தார்.பாரி தொடர்ந்தான், “அழிக்கப்பட்ட குலங்கள் எண்ணிக்கையில் எத்தனையோ… யார் அறிவார்? ஆனால், பேரரசுகளின் கொடும் தாக்குதலில் இருந்து தப்பி உயிர்பிழைத்தவர்கள் மிகச் சிலர். அவர்கள் எங்கெங்கோ அலைந்து திரிந்து, இறுதியில் பறம்பு நாட்டுக்கு வந்து குடியேறி உள்ளனர். மூவேந்தர்களால் அழிக்கப்பட்ட பதினாறு குலங்களின் மிச்சங்கள், இப்போது பறம்பு நாட்டில் வசிக்கின்றன. அவர்கள் போர் தெய்வமான கொற்றவையிடம் முறையிட்டு, ஆராத்துயரைக் கொட்டி வஞ்சினம் உரைக்கும் விழாதான் இது.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 P75d
அழிக்கப்பட்ட பதினாறு குலங்களின் வழித்தோன்றல்கள் இன்னும் மிச்சம் இருக்கிறார்களா, அவர்கள் எல்லாம் பறம்பு நாட்டில் இருக்கிறார்களா? செய்தி கபிலரைக் கலங்கடித்தது. 

பாரி தொடர்ந்தான்... ``நாங்கள் மட்டுமே வேந்தர்களிடம் இருந்து பாதுகாத்து அடைக்கலம் தர முடியும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இங்கு குடிபுகுந்தனர். அந்தக் குலங்களுக்கான குடிப் பாணர்களின் வழித்தோன்றல்கள், இப்போது எங்கெங்கோ இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் நான்கு ஆண்டுக்கு ஒரு முறை நிகழும் இந்த விழாவுக்கு வந்துவிடுவர். அழிந்த குலத்தின் வரலாற்றை அந்தப் பாணர்கள் பாட, இறுதியில் குலத்தின்  வழித்தோன்றல்கள் கொற்றவைக்குப் பலியிட்டுச் சூளுரைப்பார்கள்” என்றான் பாரி.

அதன் பிறகு இங்கு வந்து அமரும் வரை, கபிலர் பேச்சற்றவராக ஆனார். காலம் மனித அனுமானங்களுக்கு அப்பால் இயங்கிக்கொண்டேதான் இருக்கிறது. அதை எதிர்பாராத கணத்தில் சந்திக்கும்போது மனிதன் பொறி கலங்கிப்போவதைத் தவிர வேறு வழி என்ன?

அழிந்த குலங்களின் வழித்தோன்றல்களை இன்னும் சிறிது நேரத்தில் பார்க்கப்போகிறோம் என்பதை, கபிலரால் நம்பவே முடியவில்லை. கடந்த காலத்தின் பெரும் சாட்சி ஒன்று கண்கள் முன்னால் விரியப்போகிறது. மிச்சம் இருக்கும் அந்தக் குலங்கள்  எவை... எவை? தப்பிப் பிழைத்த அந்த மனிதர்கள் யார்... யார்? வரலாற்றில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட அந்த மகத்தான மனிதச் செல்வங்களை மீண்டும் காணக்கிடைப்பது எவ்வளவு பெரும் வாய்ப்பு. இப்படி ஒரு தருணம் தனது வாழ்வில் வரும் என அவர் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தார். ஆனால், விழா தொடங்காமல் இருந்தது. இந்த மெளனம் யாருக்காக, ஏன் நீடிக்கிறது என்பது கபிலருக்கு விளங்கவில்லை. பொழுது நள்ளிரவைக் கடந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 P75f1
இந்த மரத்தில் தெய்வவாக்கு சொல்லும் விலங்குகள் உள்ளன. அவை மிகச் சிறியவை.  ஆந்தை முகமும் அணில் உடலும் குரங்குக் கால்களும்கொண்ட விலங்குகள் அவை. மிகப் பயந்த சுபாவம்கொண்டவை. அகலக் கண்களை விழித்து, குழந்தையைப் போலவே பயந்து பயந்து பார்க்கும் அவை, இன்னும் மரத்தைவிட்டு இறங்காமல் இருக்கின்றன. அவை மெள்ள இறங்கிவந்து எந்தக் கூடையில் உள்ள பழத்தை எடுத்துச் செல்கின்றவோ, அந்தக் குலப்பாடகன் தனது பாடலைப்  பாடத் தொடங்குவான். பாடல் முடிந்ததும் அந்தக் குலத்தின் வழித்தோன்றல் கொற்றவைக்குப் பலியிட்டுச் சூளுரைப்பான். அந்தத் தெய்வவாக்கு விலங்குகள் இறங்கி வருவதற்காகத்தான் எல்லோரும் அமைதிகொண்டு காத்திருந்தனர். சிறுசத்தமும் அசைவும் இருந்தால்கூட அவை வெளிவராது. எனவே, அந்த இடத்தில் இருள் மிரளும் அமைதி நிலவியது.

மரக்கிளைகளுக்கு நடுவில், அப்போதுதான் பிறந்த ஆட்டுக்குட்டியைப் போல சின்னஞ்சிறிய உடல்கொண்ட அந்த விலங்கு மெள்ள இறங்கி வந்தது. தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்தபடி, பயந்த விழிகளோடு கூடை அருகில் வந்தது. எல்லோரும் அது எந்தப் பழத்தை எடுக்கப்போகிறது என்பதை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர். கபிலரின் கண்கள் இமைகொட்டாமல் நிலைகுத்தி நின்றன. அசையும் மரக்கொப்பு ஒன்று சிற்றோசை எழுப்ப, பயந்து கணநேரத்துக்குள் அது உள்ளோடி ஒழிந்தது. அதன் மறுவருகைக்காக எல்லோரும் காத்திருந்தனர். அதைவிடச் சின்னதான தெய்வவாக்கு விலங்கு ஒன்று வேறுதிசையில் இருந்து இறங்கி வந்தது. தயங்கியபடி கால் எடுத்து வைத்த அது, கூடைக்கு அருகில் வந்து சேராது என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால், நினைத்து முடிக்கும் கணத்தில் அதன் கையில், மூன்றாம் கூடையில் இருந்த இலந்தைப்பழம் இருந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 P75
அந்தக் கணத்தில் காட்டையே மிரட்டும் பேரொலியாக மேலே எழுந்தது குலவை ஒலி. மருத நிலத்துக்கு உரிய கிணைப்பறை கொட்டும் பாணர்கள் ஆடுகளத்துக்குள் நுழைந்தனர். கொற்றவையின் அருகில் வந்த மூத்த கிணையன், சிறுகோள்கொண்டு கிணைப்பறையின் தோலுக்கு மையத்தில் இருக்கும் கண்ணில் ஓங்கி அடித்தான். உடன்வந்த கலைஞர்கள் எல்லோரும் கிணை முழங்க அச்சமூட்டும் கிணைப்பறையின் பேரொலி எங்கும் பரவியது. குடிப்பாணன் பாடலைத் தொடங்கத் தயாரானான்.
 
கபிலர் நடப்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் பாரியைப் பார்த்தார்.

வைகைக் கரை கூடல்நகரை ஆட்சிசெய்த அகுதைக் குடிப்பாணர்கள் அவர்கள். அகுதையின் குலப்பாடலைப் பாடப்போகிறார்கள்” என்றான் பாரி.

கபிலருக்கு மயிர்க்கூச்செரிந்தது. அகுதையின்  வழித்தோன்றல்கள் இந்த உலகில் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்களா, அந்தக் கதையை பாணர்கள் பாடுகின்றனரா? கபிலர் உச்சந்தலையை கைகளால் அழுத்தி, மயிர்க்கற்றையின் சிலிர்ப்பைத் தளர்த்த முயன்றார். கூடல்மாநகரின் வரலாற்றையும் அகுதையின் கதையையும் அணுஅணுவாக அறிந்தவர் கபிலர். எத்தனையோ தலைமுறைக்கு முன்னால் நடந்த நிகழ்வு அது.

உரத்துச் சொல்லப்படுவதைவிட, காதோடு காதாகப் பேசும் கதைக்கு வயது அதிகம். அது காட்டுச்செடிபோல ஒருபோதும் நிலம்விட்டு அகலாது. அகுதையின் குலம் கூடலைவிட்டு அகற்றப்பட்டாலும் அவனைப் பற்றிய கதை கூடல்மாநகரில் இன்னும் சொல்லப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. யாரும் அறியாமல், விளக்குகள் அணைக்கப்பட்ட நள்ளிரவில், ரகசிய மொழியில், அகுதையின் கதை காலங்களைக் கடந்து வந்துகொண்டே இருக்கிறது.

நாட்டில் உலவும் ரகசியக் கதை, காட்டுக்குள் பெரும் குரலெடுத்துக் கர்ஜிக்கிறது. கிணைப்பறை முழங்க, பெரும் பாணன் கதையைத்  தொடங்கினான்.

வைகைக் கரையில் செழித்து வளர்ந்த வேளாண்மை, அழகிய நாகரிகத்துக்கு அடித்தளம் அமைத்தது. நதிக்கரையின் நிலவளம் கொண்டு பயிர் வளர்க்கவும் விளையவைக்கவும் அறுவடையைக் குவிக்கவுமாக, விவசாயத்தின் ஆதிரகசியங்களைக் கண்டறிந்தவர்கள் கூடல்வாசிகளே.

குறிஞ்சி நிலம், கற்களாலான மண்ணை உடையது; முல்லை, வெண்ணிற மண்ணை உடையது; நெய்தல், உவர் மண்நிலம். பாலை, செம்மை ஏறியது; மருதம் மட்டுமே பொன்னிறமாக கரிசலும் வண்டலும் மேவிக்கிடப்பது. அதனாலேயே மண்ணையும் நீரையும் பிசைந்து உணவாக மாற்றக்கூடிய வித்தையை கூடல்வாசிகள் முந்திக் கற்றனர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 P75h
அவர்களுக்குத்தான் மண்ணின் நிறம் பிடிபட்டது. வெவ்வேறு வகையான மண்ணுக்கு இருக்கக்கூடிய குணங்கள் பிடிபட்டன. புற்றுகளும் ஊற்றுகளும் அவர்களின் கணிப்புக்குள் அடங்கின. தாவரங்களின் வேர்களை எந்த மண் தனது மார்போடு உள்வாங்கி அணைத்துக்கொள்ளும், எந்த மண் தலையில் முட்டி வெளித்தள்ளும் என அவர்கள் கண்டறிந்தனர். பறவைகளின் அலகு பறித்துத் தின்னும் காட்டுக் கதிர்களைக் கண்டறிந்தனர். பறவைகளின் கழிவில் இருந்து முளைவிடும் தானியமணிகள் எவை எவை என்பதைப் பற்றிய அறிவுச்சேகரம் அவர்களிடம் இருந்தது.

முதல் தானியம் நடும்போது அந்தப் பறவையின் சிறகை, அதன் அருகில் நட்டு தங்களுக்கு வழிகாட்டிய அந்த வானம்பாடிக்கு நன்றி சொல்லும் மரபைக்கொண்டவர்கள். விளைந்த பயிரைத் தின்னவரும் விலங்குகளை வேல்கொண்டு விரட்டுவர். ஆனால், பறவைகளை வேண்டிக்கொள்ள மட்டுமே செய்வர். ஏனென்றால் பறவையே ஆசான். பறவையின் எச்சம் கண்டே பயிர்செய்து பழகியவர்கள். பறவை உண்ட மிச்சமே நமக்கு என அறம் வகுத்துக்கொண்டனர்.

காடு எங்கும் அலைந்து சேகரித்த தானியங்களை, கால் பரப்புக்குள் விளையவைத்து அறுக்க முடியும் என்பதைச் செய்துகாட்டியவர்கள் அந்தக் குலத்தின் முன்னோர்களே. அவர்களே மனிதக் கூடலின் ஆற்றலை, மண்ணில் விளையும் பயிராக மாற்றியவர்கள். அவர்கள் வாழ்விடமே கூடல் என அழைக்கப்படலாயிற்று. அந்தக் கூடல் நகரை உருவாக்கிய குலத்தின் தலைவன் அகுதை.

குதையின் கதையைக் குலப்பாடகன் பாடத்தொடங்கிய கணமே பாரியின் கண்கள் கலங்கின.

``வேளாண் அறிவின் நுணுக்கத்தை இந்த உலகுக்குக் கண்டறிந்து சொன்னது அகுதையின் குலம் அல்லவா” - கபிலரைப் பார்த்து பாரி சொன்னபோது, அவனது கண்களில் திரண்ட நீருக்குள் பந்தத்தின் வெளிச்சம் நெளிந்தது.

உப்பு விற்கும் உமணர்களே நிலம் எங்கும் அலைந்து திரிபவர்கள். கடற்கரை தொடங்கி மலைமுகடு வரை அவர்களின் வண்டிச்சக்கரங்கள் சதா உருண்டுகொண்டே இருந்தன. எல்லோருக்கும் தேவைப்படும் பொருள்கள் அவர்களிடம் இருந்தன. எல்லோரும் தங்கள் கைவசம் இருந்த பொருளை அவர்களிடம் கொடுத்து உப்பைப் பெற்றனர்.

இந்த நிலம் எங்கும் இருக்கும் மனிதக் கூட்டங்கள், அவர்களின் வாழ்விடங்கள், அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், செல்வச் செழிப்பு, சேமிப்பு என, எல்லாவற்றையும் அறிந்தவர்கள் அவர்களே.

கூடல்நகரில் வளமை கொடிகட்டிப் பறந்தது. விளைச்சல்கள் குவிய, தானியக் குதிர்கள் வைக்கும் ஆளுயர மொடாவை, உமணர்கள் அங்குதான் முதன்முதலில் கண்டனர். அந்தக் குலத்தின் செழிப்பு உமணர்களின் கண்களில் அதிசயம் என நிலைபெற்றது. அது சொல்லவேண்டிய எல்லா செய்திகளையும் சொன்னது.

பொருநை ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்த கொற்கைப்பாண்டியன் தன் வீரர்களோடு புறப்பட வேண்டிய  நாளை, உமணர்கள் சொன்ன தகவலை வைத்தே முடிவுசெய்தான்.

`வைகையில் புனலாட்டு விழா. கூடல்வாசிகள் முழுவதும் நீராடி மகிழ்ந்திருக்கும் நன்னாள். அன்று காலை நமது படை கூடல் நகருக்குள் நுழைந்தால் எளிதில் அதைக் கைப்பற்றலாம்’ என்று உமணர்கள் நாள் குறித்துச் சொன்னார்கள். முதல் நாள் நண்பகலில் கொற்கைப்பாண்டியன் படை கடற்கரையில் இருந்து புறப்பட்டது.
கிணைப்பாணன் தனது தாள லயத்தைக் கூட்டத் தொடங்கினான். செங்காலி மரத்தால் செய்யப்பட்டு, மயிர்சீவாத செவ்வித்தோலைக் கொண்டு போத்தப்பட்ட கிணைப்பறை, அதன் அகால ஓசையை எழுப்பத் தொடங்கியது. குலப்பாடகனின் குரல்நாளங்கள் வெடிப்புறத் தொடங்கின. ஒரு கொடூரம் அரங்கேறப்போகும் விடியல்பொழுதைப் பாட அவனது நா எழவில்லை.

பொழுது புலர்ந்தது. வைகையின் பெருவெள்ளம் தாவிக் குதித்தோடியது. கூடல் மாநகரே நதிக்கரையில் வந்து ஆவலோடு நின்றுகொண்டிருந்தது. குலத்தலைவன் அகுதை, யானை மீது ஏறி வைகைக் கரைக்கு வந்து சேர்ந்தான். எல்லோரும் அவனது கையசைவுக்காகக் காத்திருந்தனர்.

வைகையை வணங்கி, கூட்டத்தை நோக்கிக் கையசைத்தான் அகுதை. புனலாட்டு விழா தொடங்கியது. கரையில் இருந்த இளைஞர்களும் இளைஞிகளும் வைகையில் பாய்ந்து உள்ளே இறங்கினர். புனலாட்டு விழா என்பது காதல் திருவிழா. காதலர்கள் நீரால் ஒருவரை ஒருவர் அடித்து விளையாட ஆரம்பித்து, நேரம் செல்லச் செல்ல நீர் அடித்தாலும் விலகாத விளையாட்டாக மாறும். மணமானவர்களும் தம் இணையோடு சென்று வைகையில் நீராடி, காதல் பேசி, கனிவுகொண்டு விளையாடுவர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 P75g1
காமத்துக்கு மிக அருகில் பயணிக்கும் ஒரு திரவம் நீர். அதுவும் நதியில் ஓடும் நீர் தனது உள்ளங்கையில் இருக்கும் ஆணையும் பெண்ணையும் கணநேரத்துக்குள் கரைத்துவிடும். கரைந்தவர்கள் காதல்கொண்டவரின் உடலுக்குள் உறைந்திருப்பர். உடலின் வாசனையை மனதுக்குள் பாயவிடும் மாயசக்தி நீருக்கு மட்டுமே உண்டு. 

மண்ணில் கால்பாவாமல் மனிதன் நடப்பது தண்ணீருக்குள்ளும் காதலுக்குள்ளும்தான். இரண்டும் ஒன்றுசேரும் தருணத்தில் நிகழ்வது எல்லாம் மாயவித்தைகளே. வித்தைகளின் வாடிவாசல் வழியே பீறிட்டு ஓடிக்கொண்டிருந்தது வைகை.
அகுதை உள்ளிறங்கும் பொழுதுக்காக கரையில் நின்றிருந்தவர்கள் காத்திருந்தனர். காதல் ஏறிய கண்கொண்டு தனது மனைவியைப் பார்த்தான் அகுதை. அவளோ அவனது தோள்கவ்வி உள்ளிறங்கும் பொழுதுக்காகக் காத்திருந்தாள். அகுதை நதி நீருக்குள் கால் நுழைத்தான். இன்னும் சற்று உள்ளே போகட்டும் அவனது தோளைத் தாவிப்பிடித்தபடி நாம் இறங்குவோம் என அவள் கல்பாவியத் திட்டில் நின்றிருந்தாள். ஏன் இன்னும் வராமல் இருக்கிறாள் என யோசித்தபடி, அகுதை இரண்டாவது அடியை எடுத்து நீருக்குள் வைத்தான். அவன் தோளின்மேல் சரிந்துவிழலாம் என அவள் நினைத்தபோது, அருகில் தோழியிடம் இருந்த அவள் மகன், பெரும் குரலெடுத்து அழ ஆரம்பித்தான்.

``பெருக்கெடுத்து ஓடும் நீரும் உற்சாகப் பேரொலியும் குழந்தையைப் பயமுறுத்தியிருக்கும், அவனை அமைதிப்படுத்திவிட்டு வருகிறேன். நீங்கள் உள்ளிறங்குங்கள்’’ எனச் சொல்லிவிட்டு தோழியிடம் போனாள். தாயைப் பார்த்ததும் குழந்தையின் அழுகை மேலும் கூடியது. அவள் அவனைச் சமாதானப்படுத்த எவ்வளவோ முயன்றாள்; முடியவில்லை. நீருக்குள் இருந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் அகுதை. அந்தப் பார்வை அவளைத் துளைத்துக் கொண்டிருந்தது. குழந்தை அழுகையை நிறுத்துவதாக இல்லை. வேறு வழியில்லாமல் குழந்தையைத் தூக்கிக்கொண்டு, நதிக்கரைவிட்டு சற்றே அகன்று உள்காட்டுக்குள் நுழைந்தாள். குழந்தையின் முதுகைத் தட்டியபடி சமாதானப்படுத்தினாள்.

குழந்தை அழுகையை நிறுத்தவே இல்லை. நீரின் சத்தமும் நீராடுவோர் சத்தமும் கேட்காத அளவுக்கு அடர்ந்த மரங்களுக்கு இடையே மிகவும் உள்ளே சென்றாள். உள்ளே செல்லச் செல்ல ஓசையின் அளவு கூடுவதுபோல் உணர்ந்தாள். மனிதக் கூக்குரல் எங்கும் எதிரொலிக்கிறதே என யோசித்தவள், அகுதையின் கண்கள் தன்னைத் தடுமாறவைக்கிறது என நினைத்தபடி காட்டை ஊடுருவி வெகுதொலைவு சென்றாள். காலைக்கதிர்களின் இளமஞ்சள் ஒளியில் உள்காடு ஒளிர்ந்துகொண்டிருந்தது. எங்கும் தும்பிகள் பறந்தன. புல்நுனிகள், பனித்துளிகளை உலர்த்தாமல் வைத்திருந்தன.

தரையில் அழகிய செம்மூதாய் ஒன்று நகர்ந்துகொண்டிருந்தது. செந்நிறப் பட்டுப்பூச்சி அது. மேனி எல்லாம் மெத்தைபோல மினுமினுத்து நகர்ந்தது. குழந்தையை அதன் அருகில் இறக்கிவிட்டாள். குழந்தை தனது பிஞ்சுவிரலால் செம்மூதாயின் மேனியை மெள்ளத் தொட்டதும் அது நகர்வதைப் பார்த்து மலர்ந்து சிரித்தது. அந்தப் செம்பட்டுப் பூச்சியிடம் சிறிதுநேரம் விளையாடவிட்டபடி அவள் நின்றுகொண்டி ருந்தாள்.

சிவப்பு, காமத்தின் அடையாளம். அவளது கண்கள் அதற்குள் போக எண்ணங்கள் எங்கெங்கோ சென்றுகொண்டிருந்தன. அகுதையின் தோள்தழுவிய அந்த முதற்கணம் நினைவுக்கு வந்தது. அகுதை, அதிகம் பேசாதவன். ஆனால், அந்த இரவில் அவன் பேசியதை இன்னோர் ஆண், இந்த உலகில் பேசியிருப்பானா என்பது சந்தேகமே. காதல் சொல்லால்தான் மலர்கிறது. காதல்கொள்கையில் சின்னஞ்சிறு சொற்கள் எவ்வளவு பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தக்கூடியனவாக இருக்கின்றன.
சிறு உளியால் மலைகள் உடையும் தருணம் அது. அவன் ஒற்றைச்சொல் சொல்லும்போது, அப்படி ஒரு வெட்கம் உடல் எங்கும் பரவியது. அந்தச் சொல் ஞாபகம் வந்த கணம் மீண்டும் வெட்கம் பரவி, தன்னை அறியாமல் சிலிர்த்து மீண்டாள்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 P75i1
சொற்கள் நினைவுக்கு வந்த கணத்திலேயே, செயல்களும் நினைவின் வழியே மேலே எழுந்து வந்துவிடுகின்றன. அதன்பின் என்ன செய்ய முடியும்? சற்றே பெருமூச்சுவிட்டபடி குழந்தையைப் பார்த்தாள். அவன் செம்மூதாயின் பின்னால் நகர்ந்துபோய்க்கொண்டிருந்தான்.

திருமணம் முடிந்த முதல் புனலாட்டு விழாவின்போது அவள் கருவுற்றிருந்தாள். அதனால் ஆற்றுக்குள் இறங்கவில்லை. இரண்டாம் ஆண்டான இப்போதும், அதேபோல் தன்னந்தனியாகவே அகுதை ஆற்றுக்குள் இறங்கினான். கரையில் நின்ற அவளைத் துளைத்தெடுத்தது அகுதையின் பார்வை.

ஆணின் பார்வை பெண்ணின் பார்வையைப்போல நயமிக்கது இல்லை. ஆணின் கண்கள் காதல்கொள்பவை; ஆனால், காதலைச் சொல்லக் கற்றவை அல்ல. அவன் பார்வையால் பற்றி இழுத்தாலும், அவள் கண்களால் கைம்மாறு செய்துகொண்டிருந்தாள்.

கண்கள் விழித்திருந்தாலும் ஆந்தைக்கு பகலில் பார்வை கிடையாது. அதைப்போலத்தான், மனிதன் நீருக்குள் மூழ்கிவிட்டால் பார்வையைத் தொலைத்துவிடுகிறான். ஆனால், காதலர்களுக்கு அப்படி அல்ல. அவர்கள் அந்த இடமே பார்வை பெறுகின்றனர். கண்களின் வேலையை கைகள் எடுத்துக்கொள்கின்றன. தொடுதலின் மூலம் ஆயிரம் விழிகள் உள்ளுக்குள் விழித்து அடங்குகின்றன. அதனால்தான் நீர் விளையாட்டு காதலின் களம் ஆகிறது.

அவள் கண்களைச் சிமிட்டி கனவைக் கலைத்தாள். குழந்தை நீண்ட நேரம் விளையாடி அமைதி அடைந்தது. சரி... அழைத்துச் செல்லலாம் என முடிவுசெய்து, அவள் காட்டைவிட்டு நடக்கத் தொடங்கினாள். நதியை நோக்கி வர வர அவளுக்குக் காட்டின் அமைதியே நீடித்தது. கொண்டாட்டத்தின் பேரொலி கேட்கவில்லை. இவ்வளவு அமைதியாக நீராட வாய்ப்பே இல்லையே என யோசித்தபடி, நதியின் கரையில் ஏறி நின்று பார்த்தாள். மொத்த வைகையும் நீண்டு நகரும் செம்மூதாயாகக் காட்சி அளித்தது. குருதி கரைபுரண்டோட கரை எங்கும் மீன் எலும்புகள்போல் முட்கள் கோக்கப்பட்ட ஈட்டியுடனும் உயர்த்திய வாளுடனும், எண்ணற்ற வேற்றுக்குலத்தினர் நின்றுகொண்டிருந்தனர்.

குரல்வெடித்துச் சரிந்தான் குலப்பாடகன். பெண்களின் குலவை ஒலி பீறிட்டுக்கொண்டிருந்தது. குரல் உடைந்தபடி பாரி கபிலரிடம் சொன்னான்... “அந்தப் பெண் எதிரிகளின் கண்ணிற்படாமல் தப்பித்து, கையில் குழந்தையோடு ஒரு முதுகிழவனை அழைத்துக்கொண்டு, பல மாதங்களுக்குப் பிறகு பறம்பு நாட்டுக்குள் நுழைந்திருக்கிறாள். பறம்பின் மக்கள் அவளை அள்ளி அணைத்துப் பாதுகாத்திருக்கின்றனர். அவள் வழித்தோன்றல்தான் இப்போது கொற்றவைக்குக் காளையைப் பலிகொடுத்துச் சூளுரைக்கப் போகிறான்” என்றான்.

தாங்க முடியாத துக்கத்தைக் கிழித்துக்கொண்டு கபிலருக்கு ஆர்வம் மேலே ஏறியது. அகுதையின் வழித்தோன்றல் - இயற்கையை, வேளாண்மையை,  நாகரிகத்தை நேசித்த அந்த மாமனிதனின் வம்சக்கொடி  யார் என அறிய, கபிலர் ஆடுகளத்தை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். தாமரையின் மேல் இதழில் முள் இறங்கும் நேரம்கூட அவரால் தாங்க முடியவில்லை. அந்த மகத்தான குலத்தில் உதித்த திருமகனைக் கண்டு வணங்க அவரை அறியாமலே கைகள் கூப்பின.

அந்தக் கணம் இடம் இருந்து உள்ளிறங்கினான் நீலன்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon May 07, 2018 10:37 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 P83c3வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 P83b1
ரவில் ஏற்பட்ட மனக்கலக்கம் பகல் முழுவதும் பரவிக்கிடந்தது. பாரி தனது அறைக்கு வரும் வரை கபிலர் செயலற்றே கிடந்தார். பாரிதான் அவரை அழைத்துச் சென்று உணவு அருந்தவைத்தான். பிறகு இருவரும் தேர் ஏறி பாழியூருக்குச் செல்லும் பாதையில் சென்றனர். கபிலர் எதுவும் கேட்காமல் வந்துகொண்டிருந்தார்.

புன்னைமர அடிவாரத்தில் தேரை நிறுத்தச் சொன்னான் பாரி. வளவன், குதிரைகளின் கடிவாளத்தை இழுத்து நிறுத்தினான். இருவரும் இறங்கி காட்டுக்குள் நடந்தனர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 P83a
“பறம்பில் காலடி எடுத்துவைத்த கணத்தில் இருந்து நீலனோடு பயணிக்கிறேன். தன்னைப் பற்றி ஒரு சொல்கூட அவன் சொல்லவில்லை” என்றார் கபிலர்.

பாரி அமைதியாகக் கேட்டுக்கொண்டு வந்தான்.

சட்டென நினைவு வந்தவுடன், “இல்லை...இல்லை...” என தான் சொன்ன சொல்லை மறுத்த கபிலர், “வேட்டுவன் பாறையில் வரும்போது அவனது குலப்பாடல் பற்றி அவன் சொல்ல வந்தான். `அது இருக்கட்டும்’ என அதைப் புறந்தள்ளிவிட்டேன். எனது அந்தக் கொடும் செயலுக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் தரலாம்” என்றார்.

``பறம்பில் தண்டனை கிடையாது.”

பாரியின் சொல், குற்றவுணர்வில் இருந்து வியப்பின் பரப்புக்குத் தூக்கி வந்தது கபிலரை. வழக்கம்போல் சொல்லால் தாக்குண்ட புலவன், மறுசொல்லின்றி பாரியின் குரலுக்காகக் காத்திருந்தான்.
பாரி சொன்னான், “ஒருவகையில் அதுதான் கொடும் தண்டனை.”

கபிலர் மெள்ளத் தலையசைத்து, தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஏற்றார்.

வர்கள் பேசிக்கொண்டு நடந்த அதே பொழுதில், எவ்வியூரின் தென்புறக்காட்டில் மருதமர அடிவாரம் ஒன்றில் மயிலாவின் மடியில் தலைசாய்த்துக்கிடந்தான் நீலன். இரவில் எருமையின் தலையை வெட்டி, பொங்கும் குருதியோடு நீலன் ஆடிய ஆட்டத்தைப் பார்த்தவர்கள், இன்னும் நடுக்கம் மீளாமல்தான் இருக்கின்றனர். தான் பார்த்து அறியாத நீலனை நேற்றுதான் கண்டுணர்ந்தாள் மயிலா.

தனது மடியில் தலைசாய்த்துக்கிடக்கும் அவனை, கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் முதல்முறையாக கொற்றவைக்கூத்துக்கு இப்போதுதான் வந்திருக்கிறாள். நீலனோடு இருவார காலம் எவ்வியூரில் மகிழ்ந்திருக்கலாம் என்பதற்காகத்தான் வந்தாள். ஆனால், வைகையில் ஓடிய குருதி அவனது உடலில் தேங்கிக்கிடக்கிறது என்பது இங்கு வந்த பிறகுதான் அவளுக்குத் தெரியும். வாளோடும் வலியோடும் ஒட்டிப்பிறந்த ஒருவன், அவள் மடிமீது தலைவைத்துத் துயில்கிறான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 P83d
இரவில் நீலன் ஆடியது, ஆட்டம் அல்ல; ஒரு போர்க்களத்தின் இறுதிப்பாய்ச்சல். வெட்டிய காட்டு எருமையின் குருதியை உடல் முழுவதும் பூசியபடி நிலம் அதிர ஆடினான். நிலத்தில் பட்டும் வானில் சுழன்றும் திரிந்த நீலனின் கால் அசைவுகளுக்கு ஈடுகொடுக்க முயன்று, திம்... திம்...திம்... திம்... எனப் பறையைக் கொட்டிய பாணர்களின் கைகள் நொந்ததுதான் மிச்சம். அவனது காலடி அசைவுகளுக்கு, பறையொலியால் இறுதிவரை ஈடுகொடுக்க இயலவில்லை. பறை அடிக்கும் கோல்கள் நார் நாராகப் பிரிந்தன. கிணைப்பறையின் கண் கிழிந்த பிறகும் நீலனின் ஆட்டம் நிற்கவில்லை. கூட்டத்தின் குலவை ஒலி மலை எங்கும் எதிரொலித்த ஒரு கணத்தில், உடலின் ஆவேசம் உச்சம் அடைந்து மயக்கநிலை கொண்டான் நீலன். அவன் சரிந்துவிழப் போகிறான் என யூகித்த பாரி, தன் இருக்கையைவிட்டு எழுந்து அவனை நோக்கி ஓடினான். ஆவேசத்தோடு நிலத்தைச் சுற்றிய வேகத்தில், ஒடிந்த கொம்புபோல் சரிந்தான் நீலன். சரியும் அவனது உடல் மண்ணைத் தொடும் முன் தாங்கிப்பிடித்தன குலநாகினியின் கரங்கள்.

உக்கிரம் ஏறிய குலநாகினி, நீலனை இரு கைகள் ஏந்தி எதிர்க்களமாடினாள். போர்க்களத்தில் சினம்கொண்டு ஆடும் கொற்றவையின் ஆட்டம் அது. தாவர வேர்கள் உடல் எல்லாம் சரசரக்க, கூகைக்குஞ்சுகள் எங்கும் சிதறி விழ, நாகப்பச்சை நாயகி, வேளீர்குல நாகினி, நீலனை ஏந்தி களம் முழுவதும் வலம்வந்தாள். குலவை ஒலிகளும் பறையொலியும் விண்ணை முட்டின. ஆடுகளம், ஆவேசத்தால் குலுங்கியது. நாகினியின் முன் மண்டியிட்டு இரு கைகள் ஏந்தி நின்றான் பாரி. கண்களில் இருந்து நீர் சரிவதைப்போல, அவளது கரங்களில் இருந்து சரிந்த நீலனைத் தாங்கின பாரியின் கரங்கள்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 P83e
அந்த உடல்தான் தளர்ந்து மயிலாவின் மடியில் சாய்ந்துகிடக்கிறது. அவளால் அவனைத் தொட முடியவில்லை. காதல்கொண்டு நெருங்க முடியாத ஒரு மானுடனை என்ன செய்வது எனத் தெரியாமல் அவள் திகைத்துக்கிடந்தாள். பெரும் வனத்தை சிறு பூ ஒன்று காதல்கொள்வதைப் போல் அவளுக்குத் தோன்றியது.

திகைப்பில் இருந்து மீள முடியாமல்தான் இருவரும் நடந்தனர். ஆனால், எந்த ஓர் உரையாடலை நடத்தினாலும், அது மேலும் திகைப்பைக் கூட்டவேசெய்யும் என்பது இருவருக்கும் தெரியும். ஏனென்றால், அகுதையின் குலக்கதை இந்த மண்ணில் எல்லோரும் அறிந்ததே. எல்லோரும் அறிந்த கதையை அறிஞர்கள் இன்னும் அடியாழத்தில் இருந்து அள்ளித்தருவர். கபிலரின் சொற்கேட்க ஆவலோடு இருந்தான் பாரி.

கபிலர் சொன்னார், ``மருத நிலத்தில் ஒரு பறவை இருந்தது. அதன் பெயர் `அசுணமா’. இசைக்கு மயங்கும் பறவை அது. கூடல்வாசிகள் வைகைக் கரையில் அமர்ந்து, மாலைப்பொழுதில் சிறு யாழ் மீட்டி மகிழ்ந்திருப்பர். அசுணமா சிற்றொலி எழுப்பியபடி நாணல்களுக்குள் இருந்து ஒவ்வொன்றாகப் பறந்து வரும். யாழ் இசைக்கப்பட்டுக்கொண்டே இருக்க, இசைப்பவனைச் சுற்றி அசுணமா வந்து இறங்கும். கொன்றை மரக் கிளையால் செய்யப்பட்ட யாழையே கூடல்வாசிகள் மீட்டுவர். அசுணமா, கொன்றை மரத்தில் மட்டுமே அடையக்கூடிய பறவை. யாழின் இசை செவியிலும் கொன்றையின் வாசனை நாசியிலும் ஏற, அசுணமா கிறங்கி, அந்த இடத்திலேயே அடையத் தவிக்கும். நேரம் ஆக ஆக அது இசைப்பவனை நெருங்கும். பின்னர் அவன் மேலே ஏறத் தொடங்கும். அவனது தோள், கால், கை என எங்கும் சிற்றீசல்போல் மொய்க்கத் தொடங்கும். மயங்கிய அசுணமா, இசைப்பவனோடு கொஞ்சும்; தனது சிறு அலகால் அவனது கூந்தலைக் கோதும்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 P83f
மலரின் இதழ் விரிவதற்காக, அவற்றுக்கு எதிரே பறந்தபடியே காத்திருக்கும் தேனீக்கள் போல, இசைப்பவனின் இமைக்கு நேரே இறக்கைகளை அசைத்தபடி அது தள்ளாடித் தள்ளாடி மிதக்கும். இசைப்பவன் அதைக் கண்டு சிரித்துக்கொண்டே யாழ் மீட்டுவான். அந்தச் சிரிப்பை தனது அலகால் கொத்த அவனது இதழை முட்டும். அதன் கொஞ்சலில் இருந்து விடுபட முடியா இசைஞன், இரவு எல்லாம் யாழ் மீட்டிக்கிடப்பான்” எனச் சொல்லும்போதே கபிலரின் குரல் உடையத் தொடங்கியது.
“கூடல்வாசிகளுக்கு அசுணமாதான் குலப்பறவை. இசை கேட்டுத் தலையாட்டும் அசுணமா, இன்று இந்த நிலவுலகில் எங்கும் இல்லை. அந்தப் பறவை இனம் எங்கே போனது, எப்படி அழிந்தது என யாருக்கும் தெரியவில்லை. `குட்டூர் முடவனார்’தான் ஒரு கவிதை பாடினார், அகுதையின் குலம் அழிந்த மறுநாள், யாழ் நரம்பில் வந்து மோதி மோதி, தங்களின் கழுத்தை அறுத்துக்கொண்டு அசுணமாக்களும் அழிந்தன என்று.”

விரல்களால் அவனது தலைமுடியை மெள்ளக் கோதினாள். ஆற்றல் இன்றி அயர்ந்துகிடந்த நீலன், கண்விழிக்க முயன்றான். அவள் கன்னம் தொட்டு, தூங்குமாறு இமை மூடினாள். அவனுக்குள் இரவின் ஆவேசம் மேலே எழும்பியபடியே இருந்தது. கிணைப்பாணனின் குரல் செவிப்பறைக்குள் மீண்டும் மீண்டும் வந்து மோதியது. நினைவுகள் அவனது கழுத்தை நெரித்தன. எல்லாவற்றையும் சட்டென மறுத்து கண் விழித்தான். அவள் சற்றே அச்சம்கொண்டாள். அவளது விரல்கள் கன்னம் தொட அஞ்சின.

அவன் கழுத்தைத் தூக்கி எழ முயலும்போது, அவள் நெஞ்சில் கைவைத்து அழுத்தி, அவனைப் படுக்கச் செய்தாள். அவன் மனம் இரவில் இருந்து மீள முயன்றது. அவள் விரல்களால் அவனது உடல் முகர்ந்து, வெளிவர வழி அமைத்துக்கொண்டிருந்தாள்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 P83g
பாரி கேட்டான், “கூடல்வாசிகளுக்கு மட்டும் உழவு சிறப்பாக வசப்பட்டது எப்படி?'’

“எல்லோரும் காட்டை அழித்து விளைநிலமாக்கியபோது, காட்டை அறிந்துகொண்டு நிலத்தை விளையவைத்தவர்கள் அவர்கள்.”

ஆர்வத்தோடு பாரி வினவினான், ``எப்படி?”

``பன்றி அகழ்ந்த நிலத்தில் பயிர் நட்ட மலை அனுபவம்தான், சமதளத்தில் பயிர் நடுமுன் மண்ணை ஏர்கொண்டு கிளறச் சொல்லியது. பன்றியின் முன் உதடு பூமியின் தன்மையை உணரும். அதுபோல பூமியை உணரவும், அதைக் கிழித்து இறங்கும் மரத்தை உணரவும் முயன்றனர் கூடல்வாசிகள்.

வண்டல் மண்ணுக்கு, இறுகிய மண்ணுக்கு, இளமண்ணுக்கு என உழுபடைகளை வகைப்படுத்தி உருவாக்கினர். தாளி மரமும் வேலா மரமும் வெக்காளி மரமும்கொண்டு கலப்பைகள் செய்து, மண்ணின் தன்மைக்கு ஏற்ப அவற்றைப் பயன்படுத்தினர். உழு மரங்கள் மண்ணுக்கு ஏற்ற ஆழம்கொண்டு உழுதன. எல்லோரும் நிலத்தை உழ வேண்டும் என அறிந்திருந்தனர். ஆனால், உழும் நிலத்தை உணர வேண்டும் என்று அறிந்தவர்கள் அவர்களே.”

ணர முடியா இடத்தில் கிடந்த நீலனை உணரத் தலைப்பட்டாள் மயிலா. இடதுகையால் கழுத்தோடு அணைத்து அவனைத் தூக்கினாள்.அவனது முகம் முழுவதும் அவளது கூந்தல் உழுது இறங்கியது. மேல் உதடு கிளறி உள்ளிறங்கத் துடித்தன அவளது இதழ்கள். ஆனால், அவன் சோர்வில் இருந்து விடுபடாமல் இருந்தான். மூடி வைத்திருந்த சிறு கலயத்தை எடுத்து அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள். அவன் கைகள் மிகவும் துவண்டிருந்தன. அவளது வலதுகை, கலயத்தைத் தாங்கியிருக்க... அவன் குடித்தான்.

நினைவுகளை உதிர்த்துவிட்டு வெளிவரத் துடிக்கும் அவனது வேட்கை, கண்களில் தெரிந்தது. நீராகாரம் உள்ளுக்குள் இறங்கி மயக்கம் கலைக்கத் தொடங்கியது. நீலன் நினைவின் ஆழத்தில் இருந்து மேலேறி மேலேறி, அவளது மார்பின் சரிவுக்கு வந்து சேர்ந்தான்.

பிலர், தான் கேள்விப்பட்ட அந்தப் பூர்வகதையை வியப்பு குறையாமலே சொன்னார்...

``அது மட்டும் அல்ல. ஏர்க்கலப்பையை மாடு இழுக்க, அதன் கழுத்தில் போடும் குறுக்கு ஆரத்தை (நேக்கா) எல்லா மரங்களிலும் செய்து மாட்டின் கழுத்தில் மாட்டி இழுக்கவைத்தனர். அகுதையின் குலம்தான் முதலில் கண்டறிந்தது, அத்தி மரம்தான் ஆவினத்தின் சேர்மானம் என்று. குறுக்கு ஆரத்தை அத்திமரத்தில் செய்தனர். அதுதான் கனம் குறைவாக இருக்கும். எவ்வளவு இழுத்தாலும் மாட்டின் கழுத்துத் தோலில் வடு பிடிக்காது. அதன் கழுத்து நரம்புக்கு எண்ணெய் நீவியதுபோல், சிறு நெளிவுக்குக்கூட சரிந்துகொடுத்துச் செல்லும்.”

பாரி வியப்போடு கேட்டான், “கால்நடைகளை மரங்களோடு இணைத்துப் பொருத்த மதிநுட்பம் தேவை. காடும் கால்நடைகளும் அதிசய உறவுகொண்டவை.”

‘ஆம்’ என்று தலையாட்டிய கபிலர் சொன்னார், “மரத்தையும் மாட்டையும் இணைத்தது மட்டும் அல்லாமல், தாவரத்தையும் மண்ணையும் இணைத்தனர். ஆவார இலையை அடிமண்ணில் போட்டபோது அவர்கள் சொல்வதை யாரும் நம்பவில்லை. அறுவடை நாளில் அம்பாரமாகக் குவிந்த விளைச்சல் கண்டு வாய் பிளந்தவர்கள், அந்தத் தாவரத்தின் பெயர் என்ன என மீண்டும் மீண்டும் வந்து கேட்டுப் போயினர்.”

``எதற்கும் ஆகார்” எனக் கேலி பேசிச் சிரித்த அவர்களின் பெருங்கிழவன் ஒருவன்தான், அந்த இலையைக் கண்டறிந்து நிலத்தில் போட்டு அமுக்கியவன். `பயிர்களுக்கு நல்ல ஆகாரம் இந்த இலை’ என அவன் சொன்னதை இரண்டு விளைச்சலுக்குப் பிறகே உண்மை என கூடல்வாசிகள் ஏற்றனர். `ஆகார இலை' என்று அந்த இலைக்குப் பெயர் சூட்டினர். அவர்களே அறியாமல் அது ஆவார இலையாக வளைந்துகொண்டது.”

வன் நீராகாரத்தைக் குடித்து முடித்தான். அவனது முகம் சற்றே அமைதிகொண்டது. மயிலா அவனை எப்படி உள்வாங்குவது எனத் தெரியாமல் தவித்தாள். அவனது முகத்தை மார்போடு அணைத்தபோது அவளது கைகள் நடுங்கின. தன்னை எத்தனையோ முறை தழுவிக்கிடந்த நீலன்தான் இவன். ஆனால், குலநாகினி கையில் ஏந்த நின்ற அந்தக் காட்சியைப் பார்த்தப் பிறகு, அவனைத் தொடவே ஆழ்மனம் அஞ்சுகிறது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 P83h
“நேற்றைய இரவில் நான் பார்த்த நீலன் நீதானா?” என்று அவனைப் பார்த்துக் கேட்கவே, அவள் தலை குனிந்தாள். அந்தச் சமயம் அவனது தலை நிமிர்ந்தது. உதடுகள் உணர நிலம் கிளறி உள்ளிறங்கினான். இதழ்கள் இணைந்தபோதும் அவள் கொண்டுவந்ததை அவன் குடித்துக்கொண்டுதான் இருந்தான்.

சிறிதுநேரம் கழித்து, இதழ்கள் விலக்கி பெருமூச்சு வாங்கியபடி தன்நிலைக்கு வந்தாள்.

``நீ ஏன் உன்னைப் பற்றி என்னிடம் இதுவரை சொல்லவில்லை?’’

மயிலாவின் கேள்விக்கு, அவன் பதில் ஏதும் சொல்லவில்லை. அவளது இமைகள் துடித்து ஆடுவதையே பார்த்துக்கொண்டிருந்தான். அடிமண்ணில் ஆகாரமாகச் சேர்ந்துகிடக்கும் குலக்கதைகள் வெளிப்பார்வைக்குச் சட்டெனத் தெரியாதே!
“உனது தோள்கள் எனது அணைப்புக்கு அப்பாற்பட்டவையாக மாறியுள்ளன என உணர்கிறேன். உனக்குள் இருக்கும் நெருப்புக்கு முன் நம் காதல் நிலைகொள்ள மறுக்கிறது” எனச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவளது கண்களில் இருந்து நீர் வழிந்தது. ஒரு கணம் கண்களை மூடி தன்னை நிதானப்படுத்தினாள்.

பறம்பின் எல்லா பெண்களையும்போல அவளுக்கும் அந்தச் சமயம் வள்ளியே நினைவுக்கு வந்தாள். வள்ளியின் உறுதிப்பாட்டுக்கு இணை சொல்ல யாரும் இல்லை. பெண்ணின் வீரிய வடிவம் அவள். மயிலாவின் மனம் வள்ளியை நினைத்துக்கொண்டிருந்தபோது தன்னைத் தூக்கிக்கொண்டு செல்வதுபோல உணர்ந்தாள். வள்ளியின் நினைவு எந்தத் துயரத்தில் இருந்தும் வெளியேற்றும். நினைவின் சுகத்தை உடல் உணர்ந்துகொண்டிருந்தது.

சட்டென கண்விழித்துப் பார்த்தாள் மயிலா. நீலன் தன் இரு கைகளால் அவளைத் தூக்கியபடி மர நிழல்விட்டு வெயில் இறங்கும் நிலம் நோக்கி வந்து நின்றான்.

சூரிய ஒளி இருவர் மீதும் பொழிந்து இறங்கியது. அவளின் கண்களைப் பார்த்து நீலன் சொன்னான், “நான் அகுதை, நீ அசுணமா. வாழ்ந்தாலும் அழிந்தாலும் பிரிவில்லை நமக்கு.”

``மலையில் இருந்தவர்கள், காட்டில் இருந்தவர்கள், கடற்கரையில் இருந்தவர்கள் எல்லோரும் வெட்டிச் சாய்க்கும் வாள்முனையின் பின்னும் பாய்ந்து இறங்கும் அம்புமுனையின் பின்புமே அலைந்துகொண்டிருந்தனர். ஆனால், கூடல்வாசிகள்தான் எந்நேரமும் ஊர்ந்து நகரும் மண்புழுவின் பின்னும், சிறு துவாரம் உருவாக்கி மறுகணம் சிறகு விரிக்கும் ஈசலின் பின்னும் அலைந்துகொண்டிருந்தனர்” என்றார் கபிலர்

“உண்மைதான். ஆனால், வாள்முனைதானே வெற்றிகொண்டது. எந்த மண்ணிலும் விளைய வைக்கத் தெரிந்தவர்களை, விதைநெல்லே அறியாதவர்கள் வீழ்த்திவிட்டனரே. காலம் வைகையின் சாட்சியாகச் சொல்லும் செய்தி ஒன்றுதான். எந்தக் கணமும் நீ தாக்கப்படலாம். ஆனால், அதற்கு முந்தைய கணம் உன்னுடையது. அதில் நீ கையறுநிலையில் நின்றால் ஆறோடு உன் குலம் போகும்” என்றான் பாரி.

கபிலர் தலையசைத்து ஆமோதித்தார். ``அகுதை மாவீரன்தான். ஆனால், திருநாளின் அதிகாலையில் கொலைவாள் கொண்டு சூழப்படுவோம் என்பதை எதிர்பார்க்கும் அளவுக்கு அவன் மனம் சீர்கெடவில்லை.”

``தீயவர்களின் வீழ்ச்சி, மகிழ்வைக் கொடுக்கும்; பாதிப்பை ஏற்படுத்தாது. நல்லவர்களின் வீழ்ச்சியோ, துயரத்தோடு நிற்காது; பெரும்பாதிப்பை உருவாக்கும். அகுதையின் தோல்விதான் இந்த மண்ணின் சமநிலை சரியக் காரணமானது. வளமான பூமி தன் கை வந்ததும் வென்றவன் பெரும் வலிமைகொண்டவன் ஆனான். அதே போன்ற ஒரு கொலைவெறித் தாக்குதலை எதிர்பாராத பொழுதில் நிகழ்த்தினால், நாமும் பெரும்வளம் பெற்றவர்களாக மாறுவோம் என்ற எண்ணம் எல்லோருக்கும் வரத் தொடங்கியது. அதைவிடப் பெரும் தாக்குதலை நிகழ்த்தி அடுத்தடுத்து மூன்று குலங்களை அழித்ததனால், சேர குலம் முதல்நிலை பெற்றது. போர் என்பது அறை கூவி நிகழ்த்துவது என்ற மரபை உடைத்தான் கொற்கைப்பாண்டியன். அகுதையின் மீது தொடுக்கப்பட்டது போர் அல்ல.”

பாரி பேசிக்கொண்டிருக்கும்போது இடதுபுறம் இருந்த புதருக்குள் இருந்து செந்நாய் ஒன்று பாய்ந்து ஓடியது. அது ஓடிய திசைநோக்கி விரைந்தான் பாரி. அது அடுத்தடுத்த புதர்களுக்குள் நுழைந்து வேகம்கொண்டது. அதன் திசையைக் கூர்ந்து கவனித்தபடி தனது கையில் இருந்த ஈட்டியை இழுத்து வீசினான். செடிகொடிகளைக் கிழித்துக்கொண்டு அதன் விலாவிலே இறங்கியது ஈட்டி.

பாரியை நோக்கி ஓடிவந்து நின்ற கபிலர், மூச்சிரைத்தபடியே கேட்டார், ``அது இறந்துவிட்டதா?”

“ஆம்” என்றான் பாரி.

தன்போக்கில் போகும் விலங்கை ஈட்டி எரிந்து கொல்லும் செயல், கபிலருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது. `பாரிதானா இது?!' எனப் பதறியபடி பார்த்தார்.

புதருக்குள் போன பாரி, தான் எறிந்த ஈட்டியை அதன் உடலில் இருந்து பிடுங்கி எடுத்து வந்தான். கபிலரின் முகத்தில் இருந்த வெறுப்பைப் பார்த்தபடி இலைகளால் ஈட்டியில் இருந்த குருதியைத் துடைத்துக்கொண்டே சொன்னான், “விலங்குகள் தமது உணவுக்காக பிற விலங்குகளை வேட்டையாடித் தின்கின்றன. ஆனால், தனது உணவுக்காகவும் தேவைக்காகவும் மட்டும் அல்லாமல், கண்ணில் படும் எல்லா விலங்குகளையும் கொன்றுபோடும் இயல்புடைய விலங்கு இது மட்டும்தான். கண்ணில் படும் நாடுகளை எல்லாம் விழுங்கப்பார்க்கும் வேந்தர்களைப்போல.”

கபிலர் அதிர்ந்து பார்த்தார்.

“காட்டு உயிர்களின் அழிவுச்சக்தி இதுவே. அழிவுச்சக்திகளை எந்த இடத்தில் கண்டாலும் பறம்பின் ஈட்டி பாயும்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 08, 2018 5:23 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 83p1
ரண்டாம் நாள் நள்ளிரவுக்கு முன்பே தெய்வவாக்கு விலங்கு, மரம் இறங்கி பழத்தை எடுத்தது. முன்புறம் நடப்பதுபோலவே பின்புறமும் நடப்பது இந்த விலங்கின் இயல்பு. பழம் எடுத்ததும், சில நேரம் திரும்பி நடந்து மரக்கிளையின் மீது ஏறும்; சில நேரம் யாரும் தன்னை நெருங்கிவிடுவார்களோ என்ற பயத்தால் முன்பக்கம் பார்த்தபடியே கால்களைப் பின்னால் நகர்த்திப் போகும். இந்த முறை அப்படித்தான் போனது. அது பின்னால் நடந்து போனால், இரட்டை விளக்கு ஏற்றப்பட வேண்டும் என்பது வழக்கம். மரத்துக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த தீச்சட்டியில் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. எண்ணெயில் முக்கி எடுத்த சிறு மரத்துண்டுகளைக் கொண்டுவந்து அதில் பக்குவமாக வைத்தனர். குலநாகினியின் கண்கள் அதைப் பார்த்துக்கொண்டிருக்க, பிற நாகினிகள் அந்த வேலையைச் செய்தனர்.

விளக்கில் தீயின் கனஅளவு அதிகமாகி, தழல் இரு கூறுகளாகப் பிரிந்து எரிந்தது. தீயின் கனஅளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதையும், தழல் எத்தனை கூறுகளாகப் பிரிய வேண்டும் என்பதையும் அவர்கள் முடிவுசெய்தனர். நீர்பாய்ச்சுவதைப்போல, தீயையும் கட்டுப்படுத்திப் பாய்ச்ச அவர்கள் கற்றிருந்தனர். குலநாகினி பார்த்துக்கொண்டிருக்க, எழும் நெருப்பின் தழல் பல கூறுகளாகப் பிரிந்து இரு கூறுகளாக நிலைகொண்டது.
நேற்றைப்போலவே தெய்வவாக்கு விலங்கு பழம் எடுத்ததும் பாணர் கூட்டம் உள்ளிறங்கும் என எதிர்பார்த்திருந்த கபிலருக்கு, சற்றே ஏமாற்றமாக இருந்தது. வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 83p5

“கூத்து தொடங்க நேரமாகும். வாருங்கள் நாம் இந்த மரத்தைச் சுற்றிப்பார்த்துவிட்டு வருவோம்” எனச் சொல்லி, கபிலரை அழைத்துக்கொண்டு நடந்தான் பாரி.

கொற்றவை நிலைகொண்டிருக்கும் மரக்கூட்டம் பெரும் அடர்த்திகொண்டது. மனிதனால் உள்நுழைய முடியாத அளவுக்குப் பின்னிக்கிடப்பது. பாரியோடு கபிலர் அந்த மரத்தைச் சுற்றி நடந்துகொண்டிருந்தார். அடர்ந்த காட்டில், பந்த வெளிச்சத்தில் ஆங்காங்கே தனித்தனியான வீடுகள் இருப்பது தெரிந்தது.

“இந்த அடர்வனத்தில் தனி வீடுகள் ஏன் இருக்கின்றன?” எனக் கேட்டார் கபிலர்.

“இது ஒரு மர விலங்கு. காலகாலமாக இந்த ஒரு மரத்தில் மட்டுமே இந்த விலங்கு வாழ்கிறது. வேறு எந்த மரத்திலும் இது ஏறாது. எனவே, இந்த இடம் தவிர, வேறு எங்கேயும் இந்தப் பிராணியை நீங்கள் பார்க்க முடியாது. இந்த விலங்கு, வேட்டை விலங்குகளுக்கு மிகவும் பிடித்த உணவு. இந்த மரப் புதருக்குள் நுழைந்து இதை எப்படியாவது தின்றுவிட அவை முயல்கின்றன. அதனால்தான் இதைப் பாதுகாக்க காவற்குடிகள் இங்கு இருக்கின்றனர்.”
பேசிக்கொண்டிருக்கும்போது துடிப்பறையின் ஒலி கேட்கத் தொடங்கியது. `‘வாருங்கள்’’ எனச் சொல்லி வேகமாக முன் நடந்தான் பாரி.

செம்பாதேவியின் கதை இது. எனவே, ஆடுகளம் முழுவதையும் நிறைத்து ஓர் அழகிய கோலம் போடப்பட்டிருந்தது. பாரியும் கபிலரும் இருக்கையில் வந்து அமர்ந்தனர். அப்போதுதான் தரையை மெழுகி, கோலம் போட்டிருந்ததால் சாணத்தின் வாசனை எங்கும் வீசியது. அதன் ஈரம் காயவில்லை. கோலத்தின் நடுவில் வெண்ணெயில் தானியங்களை உருட்டிச் செய்யப்பட்ட `வெண்சாந்து உருண்டை’ வைக்கப்பட்டிருந்தது. அந்த உருண்டையின் நடுவில் மாட்டின் இரு கொம்புகளை நட்டுவைத்திருந்தனர். வெண்சாந்து உருண்டையின் வாசனை எங்கும் பரவியிருந்தது.

கோலத்தின் முன்பு பெண் ஒருத்தி அமர்ந்து உடுக்கை வகையைச் சேர்ந்த துடிப்பறையை அடிக்கத் தொடங்கினாள்.

“இவர்கள் பாணர்களா?” எனக் கேட்டார் கபிலர்.

“இல்லை... பறம்பு மக்கள்” என்றான் பாரி.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 83p2
துடியின் ஓசை பேராந்தையின் ஓசையைப்போல அச்சத்தை ஏற்படுத்தக்கூடியது. நீருக்குள் பொடி கரைவதைப்போல, இருளுக்குள் துடி கரையத் தொடங்கியது. தங்களுக்கு என்று பாணர்கள் அற்ற குலம் இவர்களுடையது. அந்தக் குலப்பெண் செம்பாதேவியின் கதையைத் தொடங்கினாள். கபிலர் கேள்விப்பட்டிராத கதை இது.

ஆதிகாலத்தில் மலைமக்களில் ஒரு பிரிவினர் கால்நடைகளை வளர்க்கப் பழகியபோது, மேய்ச்சல் நிலங்களை நோக்கி தந்தரைக்கு இறங்கினர். குறிஞ்சி நிலத்தைவிட்டு இறங்கிய ஐந்து குடும்பங்கள் செம்மலையின் அடிவாரத்தில் குடில் அமைத்தனர். கால்நடைகளை மேய்த்துப் பல்கிப் பெருக்கினர். ஐந்து வகைக் குடும்பத்தின் குலவழி தழைத்தது.

அந்தக் குலவழியின் வகையை அடிப்படையாகக்கொண்டு அடையாளங்களை உருவாக்கவேண்டிய தேவை வந்தது. குலத்துக்கு ஒரு வகை என ஐவகையான சூட்டுக்காயங்களை ஆண்கள் தம் வலது தோளிலே உருவாக்கிக் கொண்டனர். பெண்களுக்கு அதே போல சூட்டுக்காயத்தை உருவாக்கினால் திருமணத்துக்குப் பின்னர் அவளது குடும்ப அடையாளம் மாறும், எனவே சூட்டுக்காயம் சரிப்பட்டு வராது. வேறு வழிகளைச் சிந்தித்தனர். பெண்களே அதற்கு ஒரு முடிவும் கண்டனர். தங்களின் தலைமுடியை, குலத்துக்கு ஒரு வகை என ஐந்து வகைகளாகப் பின்னிக்கொள்வது என முடிவு எடுத்தனர்.

ஐவகைக் கொண்டைகளை உருவாக்கினர். அந்தக் காலத்தில், எல்லா நாட்டுப் பெண்களுக்கும் தலைமுடியைச் சுருட்டி கொண்டைபோடும் பழக்கம் மட்டும்தான் இருந்தது. ஆனால், உச்சந்தலையில் வகிடு எடுத்து இரு பக்கங்களும் முடி சரிய இரு கொண்டைகள்... அதேபோல மூன்று, நான்கு, ஐந்து என ஐந்து விதமான கொண்டைகளை இவர்கள் முடிந்தனர். ஐந்து விதங்களிலும் சடைகளைப் பின்னினர். அதில் மேய்ச்சலுக்குச் செல்லும் வெவ்வேறு நிலத்தின் பூக்கள் சூடப்பட, இவர்களைப் பார்க்கும் ஆணும் பெண்ணும் சொக்கிப்போனார்கள். `அழகைப் பேணும் அதிசயக் கூட்டம்' என இவர்களைப் பற்றி திசை எங்கும் பேச்சு பரவியது.

மேய்ச்சலின்போது கால்நடைகளின் கோமியம் வெவ்வேறு வகையில் வளைந்து வளைந்து வடிவம்கொள்வதை, காலம்பூராவும் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இந்தப் பெண்கள். அந்த நீர்க்கோலம் மனதுக்கு எப்போதும் ஒரு காட்சி இன்பத்தை ஏற்படுத்தக்கூடியது. ஆனால், கணப்பொழுதில் அந்தக் காட்சி மறைந்துவிடும். புன்னகை, காற்றில் மறைவதைப்போல மண்ணில் மறையும் மஞ்சள் வண்ண நீர் அது.

தனது குடிலின் வாசலில் அதே போன்ற ஒரு கோலத்தை வரைந்தால் என்ன என எண்ணினர். இடித்த குருணையின் தொலியைச் சிறுகத் தூவியபடி அவர்களின் விரல்கள் வலமும் இடமுமாக வளைய ஆரம்பித்தன. ஐந்து விதமாக தலைமுடியைப் பின்னியும் கொண்டைபோட்டும் பழக்கப்பட்ட விரல்களுக்கு வளைந்து நெளியும் கோலம் எளிதில் வசப்பட்டது. மாடு பெய்த நீரின் எல்லா வளைவுகளையும் தனது ஒற்றைக் கோலத்துக்குள் கொண்டுவர அவர்களுக்கு அதிக காலம் ஆகவில்லை.

செம்மலையின் அடிவாரத்தில் உள்ள பெண்கள் விதவிதமாகக் கொண்டை போட்டு, தரை எங்கும் கோலம் போடும் அழகு அரசிகள் என எல்லோராலும் பேசப்பட்டனர். காட்டு வழியிலும் உமணர்களின் காது வழியிலும் இந்தச் செய்தி எல்லா பகுதிகளுக்கும் பரவியது. இவர்கள் இருக்கும் பகுதிக்கு `கோலநாடு' எனப் பெயர் உருவாயிற்று.

புதிய நாகரிகத்தின் அடையாளமாக செம்மலை மாறியது. இதில் வெளி உலகுக்குத் தெரியாத இன்னொன்றும் இருந்தது. ஐந்து குடும்பங்களும் தங்களின் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துப்போய்விட்டு வந்து, ஐந்து தனித்தனிப் பட்டியில்தான் அடைக்க வேண்டும். அப்படி என்றால், அவற்றுக்கும் தனித்தனி அடையாளம் தேவை. மாடுகளுக்கு, பிற இடங்களில் சூட்டுக்குறி, காது அறுத்தக் குறிகள் எல்லாம் போட்டிருப்பதைக் கேள்விப்பட்டனர். கால்நடைகளே தங்களின் தெய்வம். எனவே, அவற்றைத் துன்புறுத்தாத வழியில் அடையாளம் இட விரும்பினர்.

மூத்த கிழவி ஒருத்தி, `இந்தச் செம்மலையில் இத்தனை வகையான வண்ணக்கற்கள் கிடக்கின்றன. அவற்றை எடுத்து, ஒரு குடும்பத்துக்கு ஒரு வண்ணம் என முடிவுசெய்யுங்கள். அந்த வண்ணக்கல்லையே அந்தக் குடும்பத்தின் மாடுகளுக்கும் நெற்றிப்பட்டமாகச் சூட்டுங்கள்’ என்றாள். அதில் இருந்து ஐந்து வகையான வண்ணக் கற்களைக்கொண்டு கொம்புகளுக்கு இடையில் கயிறு முடிந்து நெற்றிப்பட்டத்தை உருவாக்கினர்.

மாடுகள் எந்த நிலையிலும் துன்பப்படக் கூடாது என்பதே இவர்களின் எண்ணமாக இருந்தது. கிடைமாடுகளின் மேல் சிறுபூச்சிகளும் உண்ணிகளும் நிறைந்துகிடந்தன. அவற்றைக் கொத்தித் தின்ன எந்த நேரமும் பறவைகள் அவற்றின் மீதே அமர்ந்து இருந்தன.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 83p3
இதைத் தடுக்க ஒரு வழியைக் கண்டறிந்தனர். திரட்டப்பட்ட வெண்ணெயில் தானியங்களைக் கலந்து, பெரிய வெண்சாந்து உருண்டைகளை உருவாக்கினர். அந்த உருண்டையை நாணல்கூடையில் வைத்து கிடையின் ஓரம் ஏதாவது ஓர் இடத்தில் வைத்துவிட்டால் போதும். பறவைகள் முழுக்க வெண்சாந்து உருண்டையைத்தான் மொய்த்துக்கிடந்து, மாடுகளின் பக்கம் போகவே போகாது.

ஒருநாள் இரவு வெண்சாந்து உருண்டை வைக்கப்பட்டிருந்த நாணல் கூடையை குடிலுக்குள் வைக்காமல், மறந்து வெளியில் வைத்துவிட்டுத் தூங்கிவிட்டனர். நாணல் கூடையின் இண்டு இடுக்குகளில் ஒட்டியிருப்பதை இரவு முழுவதும் பறவைகள் கொத்தித் தின்றுள்ளன. காலையில் எழுந்து பார்த்தபோது, நாணல் கூடை நார்நாராக உதிர்ந்துகிடந்தது. வெண்சாந்து உருண்டையின் சுவை, பறவைகளையே வெறிகொள்ளச் செய்துள்ளது.
நாடோடி நாகரிகம் எல்லா உயிர்களையும் தனதாக்கி நேசித்தது. இவர்களின் குலம் தலைமுறைத் தலைமுறையாகத் தழைத்து முன்னேறியது. மனிதர்களும் கால்நடைகளும் பல்கிப் பெருகின.

கோல நாட்டினர், பல்வேறு குழுக்களாக ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாதம் பிரிந்து மேய்ச்சலுக்குப் போவார்கள்; மீண்டும் ஆவணி மாதம் செம்மலைக்குத் திரும்புவார்கள். எல்லோரும் கொண்டுவரும் மாடுகள் குடும்ப அடையாளத்தோடு பிரிக்கப்பட்டு, கணக்கு வைத்துக்கொள்ளப்படும்.

வழக்கம்போல் மார்கழி மாதம் கோல நாட்டில் இருந்து மேய்ச்சலுக்காகப் பல்வேறு திசைகளில் கிடைபோட குழுக்கள் புறப்பட்டுப் போயின. ஒரு குழு, காவிரி ஆற்றின் படுகையில் நகர்ந்தது. பதினெட்டுக் குடும்பங்களையும் இருநூறு மாடுகளையும் கொண்டிருந்தது அந்தக் கிடை. அந்தக் கிடையில் சுடர்ந்து ஒளிவீசும் தழல்போல் இருப்பவள் செம்பா. வகிடு எடுத்து இரு சடை பின்னிய குடும்பம் அவளுடையது. கோவனின் தோள்கள் மாட்டின் திமில்போல் உருத்திரண்டு இருக்கும். அவனது வலது தோளில் பொறிக்கப்பட்ட மூன்று சூட்டு அடையாளத்தின் மீது சிறுவயதில் விரல்வைத்துப் பார்த்த செம்பா, இப்போது இதழ் பதித்துப் பார்க்கவே ஆசைப்படுகிறாள்.

கிடையின் முன்னால் நடந்துபோகும் கோவனின் நடையைத் தொடர்ந்து மொத்த மாடுகளும் நகர்ந்தன. கிடையின் இடது ஓரம், நாணல் கூடை தூக்கி நடக்கும் செம்பாவைச் சுற்றி பறவைக் கூட்டம் மிதந்து வந்தது. மாட்டின் காதுகள் விடைத்து ஆட, பறவைகளின் இறக்கைகள் படபடத்து அடிக்க, பசுக்களுக்கும் பறவைகளுக்கும் நடுவில் செழித்து வளர்ந்தது அவர்களின் காதல்.

கிடைமாடு நடந்துகொண்டிருக்கும்போதே குட்டியை ஈனும். அந்தக் குட்டியால் உடனடியாக கிடையின் வேகத்துக்கு நடக்க முடியாது. பால் குடிக்கும் நேரம் தவிர, பிற நேரத்தில் அதைத் தோளிலே தூக்கித்தான் நடக்க வேண்டும். கோவன் இளங்குட்டியைத் தோளில் தூக்கி நடக்க, ஈன்ற பசு அவனை உரசியே நடந்து வந்து, குட்டியை நாவால் நக்கி இன்புற்றது. செம்பாவின் கண்கள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தன. தோளில் கிடக்கும் இளங்குட்டியின் மீது ஒரு கணம் பொறாமை வந்து விலகியது.

மாலையில் மாடுகளைக் கிடைபோட்டு, இரவு கஞ்சி குடித்து, தங்களின் குடிலுக்கு நடுவில் சிறு கூத்து நிகழ்த்துவர். எல்லோருக்கும் பாடத் தெரியும். ஆள் மாற்றி ஆள் பாடுவர். கிடையில் காவலுக்கு நிற்பவன்கூட எட்ட இருந்தே தனது பாடலைப் பாடுவான். எல்லோரின் பாடலுக்கும் துடிப்பறை முழங்கி இசை கொடுப்பவன் கோவன்தான். இடது கை துடியை இழுத்துப் பிடிக்க வலது கை விரல்களால் அதன் வலதுபுறத்தை அடித்து அடித்து தாளம் எழுப்பும் அழகைப் பார்த்து மகிழ்வாள் செம்பா. அன்று கோவனின் துடியிசை வழக்கத்துக்கு மாறாகத் துள்ளலோடு இருந்தது. கூத்து முடிந்ததும் எல்லோரும் தங்களின் குடிலுக்குப் போக செம்பா, கோவனின் காது அருகே போய்ச் சொன்னாள், “துடியின் இடப்பக்கம் போலவே நானும் உனது விரல்படாமல் இருக்கிறேன்.”

கோவன் கலங்கிப்போனான். அன்று இரவு முழுவதும் துடியின் இடதுபுறம் பற்றியே நினைத்திருந்தான். கிடைக் காவல்காரனின் பார்வைக்குத் தப்பி குடில் தாண்ட முடியாது. வேறு வழியின்றி கோவன் ஒடுங்கிப் படுத்தான்.வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 83p6
மறுநாள் பக்கத்தில் இருக்கும் ஊருக்கு வெண்ணெய் விற்கப் போனாள் செம்பா. வெண்ணெய் விற்று, தானியம் பெற்றுவருவது பெண்களின் வேலை. உழவு செழிப்பாக நடந்துகொண்டிருந்த ஊர் அது. இரு தெருக்களைத் தாண்டும் முன்பே அவள் கொண்டுவந்த வெண்ணெய் விற்றுத் தீர்ந்தது. தானியங்களைப் பெற்றுக்கொண்டு மர அடிவாரத்தில் காத்திருந்தாள். எதிர்ப்பக்கம் விற்கப்போன அவள் தோழி இன்னும் வரவில்லை. அங்கும் இங்குமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். சற்றுத் தொலைவில் நின்றிருந்த இளைஞன் ஒருவன் தன்னையே பார்த்துக்கொண்டிருந்ததை அவள் கவனித்தாள். தோழியை கண்கள் தேடிக்கொண்டிருக்க, தன்னைக் கடந்துபோகும் பெரியவரிடம், ``இந்த ஊர் பெயர் என்ன?’’ எனக் கேட்டாள்.

“உறையூர்” என்றார் அவர்.

பார்த்துக்கொண்டிருந்தவனைக் கடந்து தோழி நடந்து வந்தாள். இருவரும் கிடை நோக்கி தானியங்களைத் தூக்கிக்கொண்டு நடந்தனர். தானிய முடியை மறுதோளுக்கு மாற்றியபடியே தோழி சொன்னாள். “உன்னைப் பார்த்துக்கொண்டே நின்றவன் இந்த ஊர் குலத்தலைவரின் மகனாம். ஊருக்குள் நுழைந்ததில் இருந்து உன் பின்னால்தான் வந்துகொண்டிருக்கிறானாம். கிள்ளி என அவனை அழைத்தார்கள்.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 83p4
``புதுவிதமான பெயராக இருக்கிறதே?”

“ `எதிரிகளின் தலையைக் கிள்ளி எடுத்ததால் இந்தப் பெயர் உருவாயிற்று’ என்று ஒரு மூதாட்டி சொன்னாள். ஆனால், உன்னைப் பார்த்துக்கொண்டிருந்த அவனது கண்களும் அதே வேலையைத்தான் செய்தன.”

அவள் சொல்வதைப் பொருட்படுத்தாத செம்பா, மகிழ்வோடு சொன்னாள், “இன்று சிறு சோளம் கிடைத்திருக்கிறது. காரமாட்டுப்பாலில் இருந்து கடையப்பட்ட இளவெண்ணெயைப் பிசைந்து சாப்பிட்டால், அப்படி ஒரு சுவை இருக்கும். நினைக்கும்போதே நாவூறுகிறது” என்றாள்.

இரவு, கஞ்சி குடித்த பிறகு கூத்து முடிந்து எல்லோரும் கலைந்தனர். அன்றைய கிடைக்காவல் முறையில் கோவனும் உண்டு. செம்பா அவனுக்காகச் சமைத்த கஞ்சியைச் சிறு கலயத்தில் ஏந்தி குடிலுக்குப் பின் காத்திருந்தாள். இருள் நன்றாக அடங்கிய பிறகு குடிலுக்குப் பின்புறமாக மறைவாக வந்து சேர்ந்தான் கோவன். அந்த இடமே சுவையால் மணத்துக்கிடக்க, பூத்து நின்றாள் செம்பா. பிசைந்த உணவை ஊட்ட அவன் வாய் அருகே கையைக்கொண்டு சென்றபோது நாவால் விரல் தொட்டு வாங்கினான்.

அந்தச் சிறு தொடுதல் மொத்த உடலையும் குலுக்கியது. காதலின் கூர்மிகு ஆயுதம் நீர்சுரக்கும் நுனி நாக்கு. சற்றும் எதிர்பாராமல் கோவன் அதைப் பயன்படுத்தியபோது செம்பா நடுங்கிப்போனாள்.

உணவு அருந்தியபடியே துடியின் இடதுபுறத்தின் மீது அவனது விரல்கள் படரத் தொடங்கின. அவள் உள்நடுங்கிக் குலுங்கினாள். அவள் கண்செருகி மீண்டபோது கடைசிக் குடிலுக்குப் பின்னால் குதிரையில் ஒருவன் போவது தெரிந்தது. கிடையில் கிடந்த நாய்கள் சுதாரித்து அந்தத் திசைநோக்கிப் பாயத் தொடங்கின. ஆனால், குதிரை படுவேகத்தில் மறைந்தது. நாயின் குரைப்பொலியில் அனைவரும் எழுந்துவிட்டனர். வேல்கம்பைத் தூக்கியபடி முன்னால் ஓடி நின்றான் கோவன். அவிழ்ந்த நூல்களைக் கட்டியபடி குடிலுக்குள் நுழைந்த செம்பாவிடம் எதிர்ப்பட்ட தோழி சொன்னாள்... “வந்தது அவன்தான்”. சொல்லியபோது செம்பாவின் கட்டு கழன்று இருந்ததை அதிர்ச்சியோடு பார்த்தாள் தோழி.

செம்பா, தலையை மறுத்தபடி ஆட்டி, சற்றே வெட்கப்பட்டுச் சொன்னாள்...

“கோவன்.”

தோழி திரும்பிப் பார்த்தாள். கோவன் வேல்கம்போடு முன்னிலையில் நின்றுகொண்டிருந்தான். காதல், கண நேரத்துக்குள் எல்லோரையும் கண்ணைக்கட்டி விளையாடிக்கொண்டிருந்தது. நாய்கள் திருடனோடு சேர்ந்து ஓடுபவனைக் குரைத்தன. தோழி கோவனின் அருகில் போய் காதோடு சொன்னாள், “இனி நீ கிடைக்காவல் நிற்கும் நாள் எல்லாம், நான் இடைக்காவலுக்கு நிற்பேன்.”

மறுநாள் மாலையில், கிடைக்கு இடப்புறம் இருந்த பெருமேட்டிலே தந்தையோடு வந்து நின்றான் கிள்ளி. சற்றுத் தொலைவில் மாட்டுக்கிடையும் குடில்களும் இருந்தன. தந்தையின் கண்கள் மாடுகளை எண்ணின.

“இருநூறுக்கும் குறைவாகத்தான் இருக்கிறது. இதைவிட பெருஞ்செல்வம் இருக்கும் இடத்தில் பெண் எடுப்போம்” என்றார்.

அவனோ அவர் சொல்வதை ஏற்கவில்லை. “அவள் பேரழகு, அதற்கு இணையான செல்வம் எதுவும் இல்லை” என்றான்.

அவரோ மறுத்துப் பேசி அவனது மனதை மாற்ற முயன்றுகொண்டிருந்தார். நடக்கவில்லை. சரி, நமது மாளிகைக்குப் போய் பேசிக்கொள்வோம் என முடிவு எடுத்து குதிரையின் மீது ஏறப்போகும்போது சொன்னான்... “இன்னும் சிறிது நேரத்தில் குடிலுக்கு நடுவில் பந்தம் ஏற்றி கூத்து நிகழ்த்துவார்கள். அப்போது அவள் குடிலுக்குள் இருந்து வெளியில் வருவாள். அவளை நீங்கள் பாருங்கள். நான் சொல்வதை ஏற்பீர்கள்” என்றான்.

இருள் கூடியது. பந்தங்கள் ஏற்றப்பட்டன. எல்லோரும் வந்து கோலத்தைச் சுற்றி அமர்ந்தனர். கோவன் வழக்கம்போல துடியோடு வந்து உட்கார்ந்தான். நேர் எதிரில் தோழி வந்து உட்கார்ந்தாள். கோவன் சற்றே தலையைத் திருப்பி தனக்குள் சொல்லிக்கொண்டான்... “துடியின் இடப்புறத்தை ஊர் திரும்பி மணம் முடிப்பது வரை நினைக்கக் கூடாது.”

அவள் இன்னும் ஏன் குடில்விட்டு வெளிவரவில்லை என ஆவலோடு பார்த்தபடி தொலைவில் நின்றுகொண்டிருந்தான் கிள்ளி. எங்கும் கும்மிருட்டுச் சூழ்ந்திருந்தது. பந்த வெளிச்சத்தில் எதிர்சுடர் வீச அவள் குடிலுக்குள் இருந்து வெளியேறி வந்து, கோவனுக்கு எதிரில் உட்கார்ந்தாள். நேற்று கலைந்த வெட்கம், இன்று கூடி நின்றது. கோவனால் அவளை நேர்கொண்டு பார்க்க முடியவில்லை. அவனது விரல்கள் துடியின் மீது படவே அஞ்சின. தாளம் கூடவில்லை. ஓசையும் அவனைப்போலவே பம்மியது. கிடையின் பெரியாம்பளைச் சொன்னார், “டேய்... நேத்து கஞ்சி குடிச்சவன் மாதிரி அடிச்சுக்கிட்டு இருக்க, சத்தமே கேட்கலை. இழுத்து அடிடா.”

தோழி சொன்னாள்...

“பெருசு, நேத்தும் அவன் கஞ்சி குடிக்கலை. அதுதான் விரல் செத்துப்போய் கிடக்கு.”

செம்பா அதிர்ச்சியோடு தோழியைப் பார்த்தபோது, அவளோ சற்றே ஆணவச் சிரிப்போடு கோவனைப் பார்த்தாள்.

தொலைவில் இருந்து பார்த்தபடி அவள் பேரழகில் மயங்கி வாய்பிளந்து நின்ற கிள்ளி, தந்தையிடம் காட்ட அவரை நோக்கித் திரும்பினான். அவரோ ஒலியற்ற இருளின் திசையை நோக்கி வாய்பிளந்து பார்த்தபடி, அதிர்ச்சியில் உறைந்து நின்றார்!

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Wed May 09, 2018 2:34 pm

அன்பர்
ரா.ரமேஷ்குமார்
அவர்களே


தங்களிடம் கோரிய வாறு
யானே ஒரு மாதிரி 6 அங்குல
புத்தகங்களை இணைத்துள்ளேன்

விருப்பம் உள்ள அன்பர்கள்
வோர்ட் ஆவணத்தில் தொடரலாம் ..........

15 அத்தியாயங்கள்  .....


நன்றி ....

aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Wed May 09, 2018 2:35 pm

....வீரயுக நாயகன் வேள் பாரி

(https://www.mediafire.com/file/ah8kja2b8h4q1c4/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF.pdf)


http://www.mediafire.com/file/ah8kja2b8h4q1c4/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF.pdf

aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Wed May 09, 2018 2:42 pm

வீரயுக நாயகன் வேள் பாரி

வேர்ட் டாகுமெண்ட்

(https://www.mediafire.com/file/blxuhambazei7yt/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF.docx)

http://www.mediafire.com/file/blxuhambazei7yt/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF.docx

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed May 09, 2018 4:28 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 3838410834 வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 3838410834 மிக்க நன்றி நண்பரே ... நன்றி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed May 09, 2018 5:05 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 83p1
துடிப்பறை அடிக்கும் பெண், மரம் நோக்கி உட்கார்ந்திருந்தாள். அவளது விரல்கள், துடியின் வலதுபுறத்தை இழுத்து இழுத்து அடித்து ஓசையை எழுப்பிக்கொண்டிருந்தன. நான்கு பின்னல் சடையைப் பின்னிய பெண்கள் உள்ளிறங்கினர். உச்சி எடுத்து இருபக்கச் சடைப்பின்னல் மட்டும் யாரும் போடவில்லை. எனவே, அது துடி வாசிக்கும் பெண்ணுக்கு உரியது என்பது கபிலருக்குப் புரிந்தது. அந்தப் பெண்ணை இதற்கு முன்னால் பார்த்ததுபோல் இருக்கிறது. ஆனால், எங்கு என்று நினைவில்லை.

உள்ளிறங்கிய பெண்கள், தாங்கள் பின்னியிருந்த சடைமுடியை அவிழ்த்தனர். கூந்தல் பரவி தோள் முழுக்கச் சரிந்தது. மெள்ள தலையை ஆட்டியபடி இருந்தனர்.

“அணங்குகள் இறங்குகின்றன’’ என்றான் பாரி.

`மோகினி’ என அஞ்சப்படும் வனதேவதைகளே அணங்குகள் ஆவர். அணங்குகள் முனங்கும் ஓசை விரிந்த கூந்தலின் வழியே வெளிவரத் தொடங்கியது. கபிலர் உற்றுப்பார்த்தபடி இருந்தார். அவரது கவனம் பாடுபவள் சொல்லிச் செல்லும் கதையின் மீதே இருந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 83p2
றையூரைவிட்டு கிடை புறப்பட்டது. கோடைவெயில் தகித்துக்கொண்டிருந்தது. அவர்கள் அதற்கு ஏற்ற நிலப்பகுதியைப் பார்த்து கிடையைச் செலுத்திக்கொண்டிருந்தனர். தோழியைக் கண்டு பம்மியபடி நகர்ந்து கொண்டிருந்தான் கோவன். அவனது பம்மலுக்கான காரணம் செம்பாவுக்கு முதலில் புரியவில்லை. நிலைகொண்டு தங்காமல் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது கிடை. கோவன் மறைந்து மறைந்து சிரித்துக்கொண்டு இருந்தான். ஒரு பிற்பகல் நேரத்தில் தோழி நாணல்கூடையில் வெண்சாந்து உருண்டையைத் தூக்கியபடி கிடையின் பின்புற ஓரத்தில் வந்துகொண்டிருந்தாள். முன்புறத்தின் இடது ஓரத்தில் நடந்துகொண்டிருந்தான் கோவன். அவனது தோளில், ஈன்றகுட்டி ஒன்று கிடந்தது. பின்னால் வரும் தாய்ப்பசு நாவால் நக்க, அது துள்ளியபடி இருந்தது. அந்தக் கன்று துள்ளிவிடாதபடி அதன் கால்களை தனது இரு கைகளாலும் இறுகப்பிடித்து நடந்துகொண்டிருந்தான். அவனைக் கடந்துபோன செம்பா, தாய்ப்பசு கத்தும் ஓசையோடு சேர்த்து வலதுபுற இடுப்பில் இரு விரல்கொண்டு ஒரு நிமிண்டு நிமிண்டினாள்.

பால் பீச்சும் விரல்கள் மூங்கில் நாரைவிட வலுமிக்கவை. நிமிண்டிய விரல்களை எடுக்கும் முன்னர் துள்ளி வில்லைப்போல் வளைந்தான் கோவன். அவனைத் தாண்டி குதித்தோடியது தோளில் கிடந்த குட்டி. அது வேறு திசையில் ஓடிவிடக் கூடாது என்பதற்காகப் பாய்ந்து விழுந்து பிடித்தான். விழுந்தவனின் அருகில் புன்முறுவலோடு மண்டியிட்டு உட்கார்ந்தாள் செம்பா. அவன் பிடியில் இருந்து குட்டியை விடுவித்தாள். அவளது பிடியில் இருந்து, தன்னை விடுவித்துக்கொள்ள அவன் முயற்சி செய்யவில்லை. முயன்றாலும் அது நடக்காது எனத் தெரியும். கிடைமாடுகள் அவர்களைச் சுற்றி விலகி நடந்தன. அவளின் கன்னத்தை வாலால் தட்டிவிட்டுப்போனது கிடாரி ஒன்று. 

பறவைகள் மொய்த்துக்கிடக்கும் நாணல் கூடையைத் தூக்கிவந்த தோழியின் கண்கள் கிடையை மேய்ந்தன. இருவரையும் காணவில்லை. குறுக்கும் நெடுக்குமாக பறவைகள் பறந்தபடியிருக்க, அவளால் எந்தப் பகுதியையும் உற்றுப்பார்க்க முடியவில்லை. இளங்கன்று, வயிறு நிறைய பால் குடித்து முடித்தது. கோவன் மீண்டும் கன்றைத் தோளில் தூக்கியபடி எழுந்தான். உடன் எழுந்தபடி செம்பா சொன்னாள், “அவள் இன்னொரு முறை வந்து கேட்டாள் சொல்... நீ இடைக்காவல்தான் இருக்க முடியும். இதழுக்குக் காவல் இருக்க முடியாது என்று.''

உரசி நகரும் கிடை வாழ்க்கை எந்நேரமும் காதலைப் பற்றவைத்தபடியே இருந்தது.  கடையப்பட்ட தயிர் மத்தின் விளிம்புகளுக்கு இடையில் விரல் தேய்த்து வெண்ணெயை எடுப்பதைப்போல, திரளத்திரளக் காதலை எடுத்துக்கொண்டே நடந்தனர் செம்பாவும் கோவனும். அவர்கள் சற்றே கவனக்குறைவாக இருந்தாலும், தோழி அடிக்க வருவதாக நினைத்து புது மத்தைக் கையில் கொடுத்துவிட்டுப் போய்விடுவாள். அதற்குள் இன்னொரு பசு கன்றை ஈனும். துள்ள முடியாதபடி கோவன் கன்றையும், செம்பா அவனையும் பிடித்தபடி இருப்பார்கள். அவ்வப்போது விரல்கள் நிமிண்டித் திருகின. விலகும் கிடைக்கு இடையில் நிலம்தொட்டு காதல் துள்ளி எழுந்தது. 
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 83p3
ந்தக் கிடைக்குப் பின்னால், வெகுதொலைவில் குதிரை வீரர்கள் சிலர் பல நாட்களாக வந்துகொண்டிருந்தனர். குலத்தலைவனின் உத்தரவு அது. செம்பாவை வாய் பிளந்து பார்த்தபடி கிள்ளி நின்றுகொண்டிருந்த போது, அவனது தந்தை இருட்டுக்குள் இருந்த கிடை மாடுகளைத்தான் வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான். மாடுகளின் கொம்புகளுக்கு இடையில் கயிறு முறுக்கிக் கட்டப்பட்டிருந்த நெற்றிப்பட்டத்தில் இளஞ்சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை, கருஞ்சிவப்பு என ஐந்து வண்ணங்களில் கற்கள் ஒளிவிட்டுக்கொண்டிருந்தன. அவனது கண்களையே அவனால் நம்ப முடியவில்லை.

மாளிகைக்கு அழைத்துப்போய் மகனைக் கட்டித்தழுவி முத்தமிட்டான் தந்தை.

“ `இருளிலும் சுடர்போல் ஒளிரும்’ என்று நீ சொன்னபோது பெண்ணைச் சொல்கிறாயோ எனத் தவறாக நினைத்துவிட்டேன். எல்லாம் மணிக்கற்கள். யாருக்கும் கிடைக்காத மணிக்கற்கள். அவற்றை நாம் அடையவேண்டும்” எனச் சொல்லி கிடையை அறிந்து வர ஆள் அனுப்பினான்.

போய்வந்தவர்கள் சொன்னார்கள்...  “அவர்களின் ஊர் இருக்கும் மலை முழுவதும் இந்தக் கல் கிடக்கிறதாம். அதைவைத்துதான் மாட்டுக்குப் பட்டம் கட்டியுள்ளனர்.”

“அவர்களின் மலை எங்கும் கிடப்பது மணிக்கற்கள் என அந்த மூடர்களுக்குத் தெரியவில்லை. நாம் இந்த இருநூறு கற்களோடு ஏமாந்துவிடக் கூடாது. இந்தக் கிடையைப் பின்தொடர்ந்தே போங்கள். அந்த ஊரை அடைந்ததும் தகவல் சொல்லுங்கள்” எனச் சொல்லி அனுப்பினான். வீரர்கள் அவர்களின் பின்னால் வந்துகொண்டே இருந்தனர்.

ஒரு முன்மாலைப்பொழுதில் கிடை நகர்ந்துகொண்டிருந்தபோது, தோழி  ஓசை எழுப்பி செம்பாவை அழைத்தாள்.

“அருகில் இருக்கும் ஓடையில் நீர் அருந்தி வருகிறேன். அதுவரை நீ தூக்கி வா” எனச் சொல்லி வெண்சாந்து உருண்டை இருந்த நாணல்கூடையை செம்பாவின் தலைக்கு மாற்றினாள்.

கூடை மாற்றுவதை மிகக் கவனமாகச் செய்ய வேண்டும். வெண்சாந்து உருண்டைகள் தோளில் சிந்திவிட்டால், அவற்றைக் கையால் தட்டும் முன் பறவையின் அலகு கொத்தி எடுத்துவிடும். காக்கை கொத்தினால் தோளில் சிறு கீறல் ஏற்படும். மைனாவின் அலகோ சிறு துளையிட்டு எடுக்கும். அதுவே மரங்கொத்தியாக இருந்தால், காயம் ஆற ஒரு வாரம் ஆகும்.

பறவைக் கூட்டம் இப்போது செம்பாவின் தலையைச் சுற்றி இடம் மாறியது. பறவைகளின் இடைவிடாத  கீச்சொலிக்கு இடையில் செம்பா கூப்பிட்டது கோவனுக்குக் கேட்கவில்லை. முதுகிலே சுள்ளென கல் விழுந்த பிறகுதான் திரும்பிப் பார்த்தான். 

தோழியைச் சுற்றும்முற்றும் பார்த்தபடி செம்பாவின் அருகில் வந்தான் கோவன். அவள் கூடையை அவன் தலைக்கு மாற்றினாள். பறவைகள் தேனீக்கள் மொய்ப்பதைப்போல அவர்கள் இருவரையும் சுற்றி, படபடத்து, மொய்த்துக்கொண்டிருந்தன. உடல் மேல் சிந்திய வெண்சாந்து உருண்டையை பறவைகள் கொத்தி எடுப்பதால்தான், அவன் இப்படி நெளிந்தும் வளைந்தும் பாடாய்ப்படுகிறான் எனப் பார்த்தவர்கள் நினைத்தனர்.

பசுக்களுக்கு இடையில் படர்ந்ததைப்போல, பறவைகளுக்கு இடையிலும் சுழன்றது அந்தக் காதல். பசுக்கள் விலகி நடக்கவும், பறவைகள் கூடிப்பறக்கவும் இவர்களுக்காகவே கற்றுக்கொண்டதுபோல் இருந்தது. குருவி ஒன்று அவர்களின் இதழைக் கொத்திய பிறகுதான், செம்பா அவனைவிட்டு விலகி, நீர் அருந்தி வருவதாகக் கூறி, ஓடையை நோக்கிச் சென்றாள்.

தோழி போன அதே ஓடைப்பாதையில் அவள் நடந்தபோது எதிரில் வந்துகொண்டிருந்தாள் தோழி.

“பறவையின் இறகு ஒன்று கண்ணில் விழுந்துவிட்டது, ஊதிவிடு” எனச் சொல்லி தோழியிடம் முகத்தை நீட்டினாள் செம்பா. அவள், இடது கன்னத்தைப் பிடித்து கண்ணுக்குள் ஊதப்போகும் போதுதான் இவளுக்கு நினைவு வந்தது, பதிந்துகிடக்கும் பல் தடத்தை அவள் பார்த்துவிடுவாளோ என்று. சட்டெனக் கன்னத்தை அவள் கையில் இருந்து விலக்கி, “சரியாகிவிட்டது” என்றாள் செம்பா.

தோழியோ,  “இன்னும் ஊதவே இல்லையடி” எனச் சொன்னபோதும், “இல்லை… இல்லை...சரியாகிவிட்டது” எனக் கூறி விலக முயன்ற செம்பாவின் முகத்தை, இரு கைகளாலும் அழுத்திப் பிடித்து நிறுத்தினாள் தோழி.

செம்பா அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தாள்.

“திரும்பிப் பார்க்காதே, குதிரைகள் இன்னும் நம்மைப் பின்தொடர்ந்துதான் வந்துகொண்டி ருக்கின்றன.”

தோழியின் சொல் செம்பாவை இடி எனத் தாக்கியது. கலங்கியிருந்த கண்களைப் பார்த்த தோழி, “தூசி இன்னும் இருக்கிறது” எனச் சொல்லியபடி இழுத்து மூச்சுவாங்கி ஊதிவிட்டாள். செம்பாவின் கண்ணீர்த்துளி, காற்றில் பறந்தது.

இரவு, கிடை பெரியாம்பளைகளிடம் செய்தியைச் சொன்னார்கள். கிடையின் திசைவழியை மாற்றி ஊர் நோக்கி நடந்தார்கள். துள்ளிக்குதித்து கிடை எங்கும் பரவியபடி இருக்கும் செம்பாவின் சிரிப்பை அதன் பிறகு கோவன் பார்க்கவே இல்லை. இரு நாட்களுக்கு ஒருமுறை புதிதாக ஈனும் குட்டிகளை, அவன் தோளில் சுமந்தபடி நடந்துகொண்டே இருந்தான். செம்பா அருகில் வரவே இல்லை. பெரியாம்பளைகள் ஏன் கிடையின் போக்கை மாற்றி ஊருக்குப் போக முடிவு எடுத்தார்கள் என்பதும் அவனுக்கு விளங்கவில்லை. சரி, ஊருக்கு வேகமாகப் போனால், செம்பாவுடனான தனது திருமணம் வேகமாக நடக்கும். அதனால் நாமும் வேகமாகவே நடப்போம் என முடிவு எடுத்த கோவனின் கால்கள் கிடையின் முன்கால்களாக மண் மிதித்துச் சென்றன.

இரு மாதங்களுக்கு முன்னரே இந்தக் கிடை ஊர் திரும்பிவிட்டது. ஊரில் இருந்தது கிழவன்களும் கிழவிகளும்தான். மற்றவர்கள் எல்லாம் கிடை போட போயிருக்கின்றனர். வழக்கம்போல ஆவணி மாதம்தான் வருவார்கள். ஊர் முழுவதும் இடையில் திரும்பிய கிடையைப் பற்றித்தான் பேச்சாக இருந்தது. கோவனுக்குச் செய்தி இப்போதுதான் தெரியவந்தது. பெரியாம்பளைகளோடு சண்டைக்குப் போனான்.

``அவசரப்பட்டு முடிவு எடுத்துவிட்டீர்கள் அவர்கள் இப்போது செம்பாவைத் தூக்க ஊருக்குப் படை திரட்டி வந்தால் என்ன செய்வது? நமது கூட்டம் வந்துசேர இரண்டு மாதங்கள் ஆகும்” என்றான்.
பெரியவர் ஒருவர் சொன்னார், “ஆளுக்கு ஒரு திசையில் போய், கிடைகளை வேகமாக வரச் சொல்வோமா?”

“ஓடித் திரும்பும் வலுவோடு இருப்பது இருபது பேர். அவர்களையும் அனுப்பிவிட்டு என்ன செய்வது?”

எல்லோருக்குள்ளும் பதற்றம் இருந்தது. ஆனால், குதிரைக்காரர்கள் யாரும் கண்ணில் படவில்லை. நாட்கள் கழிந்துகொண்டிருந்தன. 

“வரும் நான்காம் நாள் செம்பாவுக்கும் கோவனுக்கும் மணம் முடித்துவிடுவோம்” என யோசனை சொன்னார் ஒரு பெரியாம்பளை.

“முடிப்பது என்று முடிவான பிறகு நான்காம் நாள் வரை ஏன் காத்திருக்க வேண்டும்? இன்று இரவே மணம் முடிப்போம்” என்றாள் கிழவி.

அச்சத்தை மகிழ்ச்சிகொண்டு கடக்க முடிவுசெய்தனர். மணவிழாவுக்கான ஏற்பாடுகள்  தொடங்கின. சாணம்வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 83p5 கரைத்து தெரு எங்கும் மெழுகினர். கோவன் இளைஞர்களோடு செம்மலையின் குகைகளுக்குள் அமர்ந்து பாதுகாப்புக்கான திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருந்தான்.  இப்போது அந்த இருபது இளைஞர்களோடு இருநூறு மாடுகளும் பதிமூன்றும் கிடை நாய்களும் மட்டுமே இருந்தன. அவற்றைக்கொண்டு எதையும் சமாளிக்க முடியும் என அந்த இருபது பேரும் நம்பினர்.

“நான், அந்த ஊருக்குள் போகவில்லை. ஆனால், வளமான ஊர். படைபலம் சற்றே அதிகம் இருக்கும் என்று நினைக்கிறேன். அதற்கு ஏற்ப திட்டம் வேண்டும்” என்றான் கோவன்.

செம்மலையின் மேற்கிலும் வடக்கிலும் அடர்ந்த காடு. அதற்குள் எந்தப் படையும் ஊடுருவி வர முடியாது. படைகள் வந்தால்  கிழக்கிலும் தெற்கிலும் இருந்துதான் வர முடியும். வருவதை அறிய பல காதத் தொலைவுக்கு முன்னரே கிடை நாயோடு ஆட்கள் நிறுத்தப்பட்டார்கள்.

மலை எங்கும் கோவனைத் தேடி அலைந்த சிறுவன் உச்சிவெயிலில் பச்சைக் குகைக்குள் அவனைப் பார்த்தான்.

“இன்னிக்கு இரவுல உனக்கும் செம்பாவுக்கும் திருமணமாம். பெரியாம்பளை சொல்லிவிட்டாரு” என்றான் அவன்.

கோவனுக்கு ஆத்திரம் ஏறி வந்தது.

“எல்லாம் தப்புத்தப்பா முடிவு எடுக்கிறான் அந்தக் கிழவன்” எனக் கொதித்தான். மற்றவர்கள் அவனைச் சமாதானப்படுத்தினர். சிறுவனிடம், “மாலையில் மணமேடைக்கு கோவன் வருவான்” எனச் சொல்லி அனுப்பினர்.

இருநூறு மாடுகளில் கொள்ளிக்கொம்பு மாடுகள் இருபது இருந்தன. விரிகொம்பு மாடுகள் முப்பது இருந்தன. நெற்றியில் மூன்று சுழியும் ஒன்றுடன் ஒன்று எதிர்த்திருக்கும் இடிமேலி மாடுகள் இருபத்தி ஆறு இருந்தன. மற்றவை எல்லாம் சொல்லிக்கொள்ளும்படியான மாடுகள் இல்லை. ஆனாலும் கொம்பு உள்ள மாடுகள்தான். அவற்றைப் பயன்படுத்துவதற்கான திட்டத்தை வகுத்துக்கொண்டிருந்தான் கோவன்.

மலையைவிட்டு ஊருக்குள் இறங்கி வந்த மூன்று இளைஞர்கள், கோவன் சொல்லி அனுப்பிய எரிசாற்றுப் பச்சிலையை அரைத்துக் கொடுக்கச் சொல்லிக் கேட்டனர். அதைக் கேள்விப்பட்டு ஊரே நடுங்கியது.

“குலமே அழிந்தாலும் செய்யக் கூடாத செயல் இது. எங்களின் உயிரே போனாலும் நாங்கள் அதை அரைத்துக் கொடுக்க மாட்டோம்” என்று எல்லா கிழவிகளும் சொல்லிவிட்டனர். வேறு வழி இன்றி இளைஞர்கள் மலை திரும்பும்போது குறுக்கிட்ட செம்பா, மூன்று கலயங்களை நீட்டினாள். அவர்கள் கேட்டதைவிட அதிகமானதாகவே அது இருந்தது.

பொழுது இறங்கத் தொடங்கியது. ஊர் முழுவதும் சாணம் மெழுகி, கோலம்போட்டு முடித்தனர். ஊரே கூடிக் கொண்டாடவேண்டிய திருமணம், இப்படி கையளவு ஆட்களை வைத்து நடத்தவேண்டியது ஆகிவிட்டதே என்று எல்லோருக்குள்ளும் கவலை படர்ந்திருந்தது. ஆனால், வாசலில் கோலம் மலர்ந்துவிட்டால், கவலைகள் எல்லாம் காற்றாகப் பறந்துபோகும்.

நீராட்டுச் சடங்கு தொடங்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. பிற நான்கு வீட்டுப் பெண்களும் செம்பாவை அழைத்துக்கொண்டு, ஊரின் மேற்குப் பக்கக் காட்டுக்கு நடுவில் இருக்கும் செங்குளத்துக்குப் போனார்கள்.
சூரியன் இறங்கத் தொடங்கியபோது தூரத்து மேட்டில் கிடை நாய் ஒன்று பாய்ந்துவருவதை மலை மேல் இருந்து கவனித்தான் கோவன். திட்டங்களைச் செயல்படுத்தும் நேரம் நெருங்கிவிட்டது.
 
``ஊரார்களை மலைக்கு மேல் ஏற்றுங்கள்’’ என்றான்.

பேரோசைக்கும் கூச்சலுக்கும் நடுவில் எல்லோரும் மலை ஏறினர். செம்பாவைத் தேடின கோவனின் கண்கள். மண நீராட்டுக்காக செங்குளத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டி ருப்பதாகச் சொன்னார்கள். இந்த ஏற்பாடுகளைச் செய்த கிழவனை வெட்டிக் கொல்ல வேண்டும்போல் இருந்தது. ``மின்னல் எனப் போய்த் திரும்புகிறேன்'' எனச் சொல்லி மேற்குத் திசைக் காட்டுக்குள் ஓடினான் கோவன். போகும்போது அவனுக்குப் பிடிபட்டது, கிழவன் செய்த செயல் ஒருவிதத்தில் நல்லதே.

செம்பாவை, நான்கு வீட்டுத் தோழிகளும் நீராட்டினர். உச்சி எடுத்துப் பின்னியிருந்த அவளது இரட்டைப் பின்னல் கூந்தலை மெள்ளக் கழற்றி, கோவனின் வீட்டு அடையாளமான மூன்று சடைப்பின்னலைப் பின்னத்  தொடங்கினர். வழக்கமாக இந்தச் சடங்கின்போது கேலிப் பேச்சும் கிண்டல் சொல்லுமாக செங்குளமே கலங்கிப்போயிருக்கும். ஆனால், இன்று அப்படி அல்ல.

நான்கு பெண்களும் மூன்று பின்னல் சடையைப் பின்னி முடித்தபோது, குளக்கரையில் வந்து நின்றான் கோவன். அவர்கள் நால்வரை மட்டும் தனியாக அழைத்தான். சுற்றிமுற்றிப் பார்த்தான். வெண்சாந்து உருண்டை வைக்கப் பயன்பட்ட பழைய நாணல்கூடை ஒன்று நைந்த நிலையில் கிடந்தது. அதை எடுத்துவந்து அதன் மீது கைவைத்தபடி வாக்கு கேட்டான்.

“என்ன நடந்தாலும் செம்பாவை ஊருக்குள் கூட்டி வரக் கூடாது. அவர்கள் கையில் சிக்காமல் வெளியேற வேண்டும்.”

நான்கு பெண்களும் பயந்து தயங்கியபடி இருக்க, செம்பாவின் கை நாணல்கூடையை இறுக்கிப் பிடித்து அவனுக்கான வாக்கை அளித்தது. கோவன் மலை நோக்கி ஓடினான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 83p4
தீப்பந்தங்களோடு அவர்களின் படை கிழக்கிலும் தெற்கிலுமாக ஊரைச் சூழ்ந்தது. ஊருக்குள் எதிர்ப்புகள் எதுவும் இல்லை. உறையூர் படைக்கு வாள் வீசாமலே வெற்றி கைகூடுவதுபோல் இருந்தது. ஊருக்கும் செம்மலைக்கும் இடையில் இருக்கும் இடைவெளிக்கு அந்தப் படை வரட்டும் எனக் காத்திருந்தான் கோவன்.

அவன் எதிர்பார்த்த இடத்துக்குப் படை வந்தது. கொம்பின் உச்சிமுனை வாள்போல மடித்து நீட்டியபடி இருக்கும் கொள்ளிக்கொம்பு மாடுகளை, இரு திசைகளுக்கும் பத்து எனப் பிரித்த கோவன், அவற்றின் மூக்கில் பச்சிலையை வைத்து நுழைத்தபடி கயிறுகளை உருவிவிட சைகை செய்தான். உற்றுப்பார்த்தால் தீ நிறத்தில் இருக்கும் அவற்றின் கண்கள் பச்சிலைச் சாறு மூக்கில் ஏறியபோது கண்ணில்பட்ட தீப்பந்தங்களை எல்லாம் குத்திக் கிழித்துக்கொண்டு நுழைந்தன.

இடது பக்கமும் வலது பக்கமும் இரு கைகளை விரித்ததைப்போல் கொம்புகள் விரிந்துகிடக்கும் ‘விரிகொம்பு’ மாடுகள் முப்பதும் உள்ளிறங்கின. அவை உள்ளே ஓடினாலே இரு பக்கங்களும் உள்ள குதிரைகளின் விலாவினைச் சீவிச் சரிந்தபடி இருக்கும். பச்சிலை உருண்டையை  இரு காதுகளுக்குள்ளும் திணித்த பிறகு தலையை மறுத்து மறுத்து ஆட்டி, ஆவேசம்கொண்டு உள்ளிறங்கின. அவற்றின் மண்டைக்குள் இறங்கும் பச்சிலையின் எரிசாறு கணப்பொழுதில் நூறுமுறை தலையை மறுத்தாட்டி வெறிகொள்ளச் செய்தது.

மீதி இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் எல்லாம் சிறப்புத் தகுதியற்ற மாடுகள்தான். ஆனால், கொம்பு உள்ளவை. அது ஒன்று போதும். பிற மாடுகளைவிட வலிமையாக அவற்றைப் பயன்படுத்த முடியும் என்பது கோவனுக்குத் தெரியும். அவற்றின் குதத்துக்குள் கைகளை நுழைத்து இலை உருண்டைகளை அமுக்கினர். சிறிது நேரத்தில் அவற்றின் குடல் பிறண்டு தலைக்கு ஏறிக்கொண்டிருந்தது. பின்புறக் கால்களை உதறியபடி அவை வந்த வேகத்தில் பாறைகள் உருண்டன. மாடுகளின் நிலைகொள்ளாத சீற்றம் குதிரைகளைக் கலங்கடித்தது. தாவிச் சரிந்து உள்நுழைந்தன மாடுகள்.

ஊருக்குள் பட்டிபோட்டு அடைக்கப் பட்டிருந்தன கிடை நாய்கள். வயல்வெளிகளில் கிடையைவிட்டுத் வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 83p6தனித்துப் பிரியும் முட்டுக்காளைகளையே குரைத்தபடி மிரட்டி நகர்த்தும் பழக்கம் உள்ள நாய்கள் அவை. குதிரையைத் தாண்டிக் குதிக்கக்கூடியவை. நாக்கை மடித்து சீழ்க்கை அடித்தபடி ஒரு வங்கிழவன் பட்டியைத் திறந்துவிட்டான். பெரும் குரைப்பொலியோடு குதிரைகளின் பின்னங்கால் சப்பைகளின் மீது அவை பாய்ந்துகொண்டிருந்தன. உறையூர் படைக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. நாய்களின் பாய்ச்சலையும் மாடுகளின் ஆவேசத்தையும் எதிர்கொள்ளத் திணறிய நேரத்தில், கோவன் தனது இறுதி ஆயுதத்தை இறக்க முடிவுசெய்தான்.  

மலையின் பின்புறம் நின்றுகொண்டிருந்த இடிமேலி மாடுகள் இருபத்தியாறையும் மலையுச்சியில் அணிவகுத்து நிறுத்தினான். இடிமேல் இடிவிழுந்தாலும் அஞ்சாமல் முன்னால் நகரும் மாட்டு இனம் அது. தான் செய்யப்போகும் செயலுக்கான கலக்கம் எதுவும் இல்லாமல்தான் கோவனின் முகம் இருந்தது. பெரிய பெரிய வைக்கோற்கட்டுகளை அவற்றின் கொம்புகளின் மேல் செருகினர். இரு திசைகளிலும் பாய்ந்து இறங்குவதைப்போல அவை நின்றுகொண்டிருந்த போது, வைக்கோல் கட்டுகளின் மேல் தீவைத்து கழுத்துக் கயிறுகளை உருவிவிட்டனர்.  

மிகப்பெரிய மர உருளைகளில் தீயைப் பற்றவைத்தபடி மலை உச்சியில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் இறங்குவதைப்போல அந்தக் காட்சி இருந்தது. உறையூர் படை கதிகலங்கிய நேரத்தில், எரிந்து இறங்கும் தீப்பந்தத்தின் தழலில் செம்மலையின் மணிக்கற்கள் எல்லாம் ஒளிவீசின. மலை எங்கும் இருந்து பல்லாயிரம் பேர் பந்தங்களோடு இறங்குவதைப் போல் தெரிந்தது. இது கோவனாலும் திட்டமிடப்படாதது. நிலைமை அதிபயங்கரமானதை உணர்ந்த உறையூர் படை, உயிர் தப்பித்தால் போதும் என ஓடத்  தொடங்கியது. குறுக்கும் நெடுக்குமாக ஆவேசத்துடன் அலையும் கிடைமாடுகள் நிலைகொண்ட இடத்தில் இருந்து எளிதில் வெளியேறாதவை. அவற்றைக் கடந்து வெளியேற முடியாமல், உறையூரின் முழுப்படையும் அழிந்துகொண்டிருந்தது. வலையைத் தாண்டி மீன்கள் தவ்வுவதைப்போல குதிரைகளைத் தாண்டியபடி நாய்களின் பாய்ச்சல் நிகழ்ந்துகொண்டே இருந்தது. மிச்சம் மீதியை கோவனின் கூட்டாளிகள் உள்ளிறங்கி வெட்டிச் சரித்தனர். 

பொழுது புலர்ந்தது. உறையூர் படை தோற்று ஓடியதை உறுதிப்படுத்தினான் கோவன்.  குடல் சரிந்த குதிரைகளும் உறையூர் வீரர்களின் உடல்களும் எங்கும் கிடந்தன. அவற்றுக்கு நடுவில் நடந்துகொண்டிருந்தான். பெரும்வாள் கொண்டு தலை இருகூறுகளாகப் பிளக்கப்பட்ட விரிகொம்பு மாடு ஒன்று செத்துக்கிடந்தது. `மாடுகளை, பூச்சிகளும் உண்ணிகளும் கடிப்பதையே பொறுத்துக்கொள்ள முடியாமல் வெண்சாந்து உருண்டை செய்த குலத்தில் பிறந்த நான், எம் மாடுகள் அனைத்தும் அழிய பச்சிலை எரிச்சாற்றை என் கையாலே தந்துவிட்டேனே’ எனக் கதறியபடி, செத்துக்கிடந்த மாட்டின் முன் மண்டியிட்டு உட்கார்ந்தான். சரிந்துகிடந்த அதன் இருபக்கக் கொம்புகளையும் பிய்த்து எடுத்தான். தான் செய்யப்போகும் செயலுக்கான கலக்கம் எதுவும் இல்லாமல்தான், அவனது முகம் இருந்தது. சூரியன் அவனுக்கு நேர் எதிராக மேலே எழுந்தபோது, இரு கொம்புகளையும் முழு விசையோடு செலுத்தி, தொண்டைக்குள் இறக்கினான் கோவன். சூரியனைப் பார்த்தபடி அவனது உடல் மண்ணில் சரிந்தது.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed May 09, 2018 5:53 pm

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 P83bவீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 P83c1
ணங்கேறி ஆடிய பெண்கள் உக்கிரம்கொண்டனர். போர்க்களத்தில், விரிந்த கூந்தலும் பிளந்த வாயுமாக நிணத்தைத் தின்று குதித்தாடும் பேயாடல் தொடங்கியது. துடியின் ஓசை காதைக் கிழித்தது. கூட்டத்தின் குலவை ஒலி பயங்கர அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

முன்புறம் கொற்றவையின் திசைநோக்கி துடியடித்துக் குலப்பாடலைப் பாடிக்கொண்டிருந்த பெண், ஆவேசம் மேலிட துடியை வீசியெறிந்து பின்புறம் திரும்பினாள். நெருப்புக்கோலமாக இருந்தன அவளது கண்கள். அணங்குகளின் பேய் ஆட்டத்தால் நிலம் நடுங்கிக்கொண்டிருந்தது. பின்புறம் திரும்பியவள் களத்தின் நடுவில் வரையப்பட்டிருந்த கோலத்தைக் கால்களால் குறுக்கும் நெடுக்குமாக அழித்து அலங்கோலமாக்கினாள். “செம்பாதேவி…வேணாந்தாயீ…” என ஆண்களும் பெண்களும் பெருங்குரலெடுத்து வேண்டினர். கதறலும் கண்ணீரும் கரைபுரண்டன.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 P83a
கோலத்தின் நடுவில் நாணல் கூடையில் வைக்கப்பட்டிருந்த வெண்சாந்து உருண்டையை நோக்கிப் போனாள் அவள். அவளது கண்களில் இருந்த ஆவேசத்தையும் கைகளின் வேகத்தையும் கண்டு கூட்டம் நடுங்கியது.

`அங்கு என்ன நடக்கப்போகிறதோ?!' என்ற பதற்றத்தில் கூச்சல் உச்சத்துக்குப்போனது. குலவை ஒலி பீறிட எல்லோரும் களத்தை நெருங்கிக்கொண்டிருந்தனர். ஆனால், அணங்குகளின் ஆட்டத்தைத் தாண்டி யாரும் உள்ளே நுழைய முடியவில்லை.
வெண்சாந்து உருண்டையில் வைக்கப்பட்டிருந்த இரு கொம்புகளையும் ஆவேசத்தோடு பிடுங்கி எடுத்தாள் அவள். கூட்டம் கதறியது. பிறர் அவளை நெருங்க முடியாத வளையத்தை அணங்குகள் உருவாக்கினர். “வேண்டாந்தாயீ…” என உயிர் நடுங்கக் கத்தினர். கத்தும் குரல்களுக்கு நடுவில், அவளோ பிடுங்கிய கொம்புகளை தனது இரு மார்புகளை நோக்கி உள்ளிறக்கத் துணிந்தபோது, கண்ணிமைக்கும் நேரத்தில் இடதுபுறத்தில் இருந்து தாக்கப்பட்டு, தூக்கி வீசப்பட்டாள்.

இரு கொம்புகளும் எங்கோ போய் உருண்டன. கூட்டத்தினர் வாய் பிளந்து நின்றனர். தாக்கிய குலநாகினி, அணங்குகளுக்கு நடுவில் மூச்சிரைக்க நின்றாள். அணங்குகளின் ஆத்திரம் தணிய ஆரம்பித்தது. ஆவேசம்கொண்ட குலநாகினி காலத்தையும் கதையையும் தனது இரு கைகளைக்கொண்டு இறுக்கி நிறுத்தினாள். கூட்டம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 P83d
தள்ளப்பட்டு கீழே விழுந்தவளுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. பற்களை நறநறவெனக் கடித்தபடி குலநாகினியை நோக்கிப் பாய்ந்து வந்தாள். மரமே நிலைகுலைந்து சரிந்துவிழுவதுபோல் இருந்தது அவளின் பாய்ச்சல். அவளின் வேகத்தை எதிர்கொண்டு தாங்கி அசையவிடாமல் பிடித்து நிறுத்தினாள் குலநாகினி. கூடியிருந்தவர்களின் குலவை ஒலி மீண்டும் உச்சத்துக்குப்போனது. அவளது இரு கைகளையும் பிடித்த குலநாகினி, அப்படியே அழுத்தி வெண்சாந்து உருண்டை வைக்கப்பட்டிருந்த கூடைக்கு முன் அமரவைத்தாள். கூடையைப் பார்த்ததும் அவளின் கொதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அடங்கத் தொடங்கியது.

குலநாகினியை அண்ணாந்து பார்த்தபடி, அனைத்துப் பற்களும் தெரிவதைப்போல முழு வாயிலும் சிரிப்பைக் காட்டித் தலையாட்டினாள். அதே போன்ற சிரிப்புடன் தலையை வேகமாக ஆட்டி அமைதிப்படுத்தினாள் குலநாகினி. அணங்கு ஆடிய நான்கு பெண்களும் பல்வரிசை காட்டிச் சிரித்தபடியே அவளைச் சுற்றி அமர்ந்தனர். குலநாகினி, அந்த வட்டத்தைவிட்டு வெளியேறி தனது இடத்துக்குப் போனாள்.

கபிலருக்கு உடல் முழுவதும் வியர்த்து வடிந்தது. கூட்டத்தின் நெரிசலில் பாரி எங்கு நிற்கிறான் எனத் தெரியவில்லை. நிலைமை அமைதியான பிறகுதான் பாரியின் அருகில் அவரால் வர முடிந்தது.

“கணிக்க முடியாத நிகழ்வுகளைக் கைக்கொள்ள யாரால் முடியும்? இது காலங்களுக்கு இடையில் நடக்கும் போர். நினைவுகளின் வழியே குருதி வழிகிறது. நம்மால் என்ன செய்ய முடியும்? வெட்டுக்காயம் இருப்பதோ, பல நூறு ஆண்டுகளுக்கு முன்” பாரியின் வார்த்தைகளை கபிலரால் பற்ற முடியவில்லை. காட்சிகள் ஏற்படுத்திய கொதிப்பால் அவர் மனம் திணறிக்கிடந்தது.
மூச்சுவிட முடியாத திணறலோடுதான் பாரியின் குரலும் இருந்தது. கபிலர், பாரியை உற்றுப்பார்த்தார். புருவம் உயர்த்தி பெருமூச்சு விட்டபடி பாரி சொன்னான், “கதை இன்னும் முடியவில்லை.”

கபிலரின் கருவிழிகள் அசைவற்று நின்றன.

மூன்று வாரங்களுக்குப் பிறகு பெரும்படையோடு உறையூர் தலைவன் செம்மலை அடிவாரம் போனான். அப்போது அவர்களை எதிர்த்துப் போரிட அங்கு யாரும் இல்லை. அந்தப் பெரும் பொக்கிஷ மலை, தங்களின் ஆளுகைக்கு வரக் காரணமான மகன் கிள்ளியைக் கொண்டாடித் தீர்த்தான் தந்தை.

சில மாதங்களுக்குப் பிறகு, கிள்ளியின் குதிரை உறையூரின் பெரும்வீதியைக் கடந்தபோது தொலைவில் வெண்ணெய் விற்கும் பெண் ஒருத்தி போவது தெரிந்தது. சற்றே அருகில் போய்ப் பார்த்தான். அவனால் நம்பவே முடியவில்லை, தலையில் கூடையைச் சுமந்து போய்க்கொண்டிருந்தவள் செம்பா. வாய் பிளந்து நின்றான். `அன்று நள்ளிரவு நடந்த தாக்குதலில் இந்த அழகு தேவதை அழிந்துபோனாள் என்று அல்லவா எண்ணியிருந்தேன். எனக்காகவே மீண்டு வந்தவள்போல், அதே தெருவில் வந்து நிற்கிறாளே!' என்று திகைத்துப்போனான் கிள்ளி.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 P83g
சற்றே திரும்பி அவனைப் பார்த்த செம்பா, சின்னதாகச் சிரித்துவிட்டு நடந்தாள். அன்று பார்த்ததைவிட மெருகேறிய அழகு. அருகில் இருந்தவனை அழைத்து குதிரையை அவன் கையில் கொடுத்த கிள்ளி, “போய் தந்தையை அழைத்து வா. அன்று பார்க்காத அழகை இன்றாவது பார்த்துத் தெரிந்துகொள்ளட்டும்” என்று சொல்லி அனுப்பிவிட்டு, அவள் பின்னால் நடந்தான்.

இறங்கு வெயிலில் ஊரைவிட்டு மிகத் தள்ளி, முன்னர் கிடைபோட்டிருந்த நிலத்தை நோக்கி அவள் நடந்தாள். அடர்ந்த செடி கொடிகள் துளிர்த்துக்கிடக்கும் பாதையில் அவள் நடந்துபோகும் அழகை ரசித்தபடி பின்னால் நடந்தான் கிள்ளி. அவள் வேண்டுமென்றே எதையும் செய்வதுபோல் தெரியவில்லை. கைகளை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக நீட்டி பூக்களைப் பறிப்பதும் பூச்சிகளைத் தட்டிவிடுவதுமாக அவள் நடந்துகொண்டிருந்தாள். பின்னால் வரும் ஒருவனுக்கு, அவை அனைத்தும் சமிக்ஞைகளாக இருந்தன.

காற்றில் பறந்தபடி காமம்கொண்ட இணைத் தும்பிகள் அவளின் முகத்துக்கு நேராகப் பறந்தபோது, தலைவணங்கி அந்த இடம் கடந்தாள். பின்னால் வந்தவனால் அந்தக் காட்சியைக் கடக்க முடியவில்லை.

பெருங்கூடையைக் கவிழ்த்துப்போட்டதைப் போன்ற அந்தச் சிறுகுடில் தனித்து இருந்தது. அவனைத் திரும்பிப் பார்க்காமலேயே குடிலுக்குள் நுழைந்த செம்பா, படலை மூடாமல் திறந்தேவைத்தாள். அவள் நடக்கத் தொடங்கிய பொழுதில் இருந்து அவனை அழைத்தபடிதான் இருக்கிறாள். வீட்டுக்குள் நுழையும்போது தனியாக அழைக்க வேண்டுமா என்ன? அவன் குடிலுக்குள் தலை நுழைத்தான். அதற்குள் வைக்கோல் பாய் ஒன்றை விரித்திருந்தாள். அதன் நடுவில் கால் மடக்கி அவள் அமர்ந்தபோது, தும்பி உடல் மடக்கிப் பறந்தது அவனின் நினைவுக்கு வந்தது. முன்செல்லும் தும்பியை நினைத்தபடி பின்னந்தலை சரிய, பாயில் படுத்தான்.வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 P83e

செம்பாவின் முதுகின் மேல் கை வைக்கப்போகும்போதுதான், அவனுக்கு உள்ளிருந்த ஆபத்து பிடிபடத் தொடங்கியது. குடிலின் நான்கு திசைகளிலும் செம்பாவைப் போலவே நான்கு பெண்கள் குத்தவைத்த நிலையில் உட்கார்ந்து இருந்தனர். பார்த்த கணத்தில் சட்டென எழ முயற்சி செய்யும்போது ஆளுக்கு ஒருவராக அவனது கைகளையும் கால்களையும் பிடித்தனர். அவன் கடுங்கோபத்தோடு கூச்சலிட்டு, தன்னை விடுவிக்க முயன்றான். அவர்கள் பெரும் அழுத்தம் கொடுக்காமல் மிக இயல்பாக அவனை அழுத்திப் பிடித்திருந்தனர். நாள் ஒன்றுக்கு நூறு மாடுகளின் நானூறு காம்புகளில் பால் கறக்கும் விரல்கள். பெரும் கிடைக்குள் விதவிதமான கொம்புகளோடு உரசிக்கிடக்கும் எண்ணற்ற மாடுகளை விலக்கி, நகர்த்தி, தள்ளி வெளிவரும் கைகள். அதுவும் ஒருவர் இருவர் அல்ல, நான்கு பேர். அவனால் என்ன செய்ய முடியும்?

செம்பா, குடிலின் மேல் செருகிவைக்கப்பட்டிருந்த இரண்டு கொம்புகளை உருவி எடுத்தாள். அதுவரை கத்திக்கொண்டிருந்தவன், கண்களின் முன் மரணத்தின் வடிவத்தைப் பார்த்து உறைந்துபோனான். குருதிக்கறையேறி இருந்த கொம்புகள். கோவனின் தொண்டைக்குழிக்குள் இறங்கியவை.

“விட்டுவிடுங்கள்... விட்டுவிடுங்கள்...'' என்று மீண்டும் மீண்டும் உயிர்போகக் கத்தினான். காவிரி ஆற்றங்கரையில் செழித்துக்கிடக்கும் மரப்புதர்களைத் தாண்டி, தனித்து இருக்கும் குடிலுக்குள் போடும் கத்தல் யாருக்குக் கேட்கும்? செம்பா, கால் மடக்கி அவன் அருகில் உட்கார்ந்தாள். நெஞ்சுக்குழிக்குள் கொம்பை இறக்கப்போகிறாள் என அவன் நடுங்கியபோது, அவனது மார்பில் கோவனுக்குப் பிடித்த ஒற்றைச்சுழிக் கோலத்தைப் போட்டாள் செம்பா.

கொம்பின் நுனி அவன் நெஞ்சின் மேல்தோலைக் கீறியபடி நகர, நெஞ்சு நிறைய மெள்ள ஊறும் குருதியின் வழியே ஒற்றைச்சுழிக் கோலம் உருவானது. அவள் என்ன செய்கிறாள் என அவனுக்குப் புரியவில்லை. நெஞ்சுப் பகுதியை முடித்த பிறகு இடுப்புக்குக் கீழ் இரு கால்களிலும் வளைந்த இரு கோடுகளைக் கொம்பின் கூர்முனைகொண்டு இழுத்தாள். கதறலை நிறுத்திய அவன், அவளது விநோதமான செயலால் உறைந்துபோனான்.

நான்கு பெண்களும் அவனை அப்படியே புரட்டிப்போட்டனர். முதுகிலும் ஒற்றைச்சுழிக் கோலத்தைப் போட்டு, இடுப்புக்குக் கீழ் பாதம் வரை இருகோடுகளை இழுத்தாள் செம்பா.

கொம்புகளால் குத்திக் கொல்லாமல் மேலெழுந்தபடி கீறிவிடுகிறாள். `இதுபோதும் எப்படியாவது உயிர் பிழைத்துவிடலாம்!' என்ற நம்பிக்கை அவனது கண்களில் உயிர்கொண்டபோது, அவனைத் தூக்கி நிறுத்தினர். சட்டென கையை உதறி தன்னை விடுவிக்க முயற்சித்தபோது, இடதுபுறம் நின்றவள் ஒரு முறுக்கு முறுக்கினாள். நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் மூக்கில், பச்சிலை சாறு விடவேண்டும். அப்போது அதன் கொம்புகளை முறுக்கி மூக்கை மேல்நோக்கித் திருப்பியபடி சாறு இறங்கும் வரை பிடித்திருக்க வேண்டும். மாடு, தனது முழு பலத்தால் கொம்பைத் திருகும். ஆனால், அதைப் பிடித்திருப்பவர் அசையவிடக் கூடாது. மாட்டின் கொம்பைத் திருகி நிறுத்தும் பணிதான், கிடையில் அவளுக்குப் பல நாள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அவனது கையை சற்றே திருகியபோது உள்ளுக்குள் எத்தனை எலும்புகள் நொறுங்கின எனத் தெரியவில்லை. ஆனால், இவ்வளவு நேரமும் அவன் கத்திய மொத்தக் கதறலும் இப்போது ஒரே நேரத்தில் வெளிவந்தது. போதும் என நினைத்துத் திரும்பிய செம்பா, அப்போதுதான் அவனது தோள்களைப் பார்த்தாள். வலதுகை தோள்பட்டையில் ஒரு சுழியைக் கீறி, விரல்கள் வரை இறக்கினாள். அதே போல இடது கையிலும் இழுத்தாள்.

கொம்பை மீண்டும் மேற்கூரையில் செருகிய செம்பா, குடிலின் ஓரத்தில் மூடிவைக்கப்பட்டிருந்த நாணல்கூடையை எடுத்தாள். அதில் மணமணத்துக்கிடந்தது வெண்சாந்து உருண்டை. அதை இரு கைகளாலும் அள்ளி அவனது கால்கணுவில் இருந்து கழுத்து வரை பூசினாள். வெண்ணெயின் குளுமை அவனது உடலெங்கும் பரவியது. கூடை நிறைய இருந்த வெண்சாந்து உருண்டை அவன் உடல் முழுவதும் மணமணத்தது. நால்வரும் பிடியைவிட்டு விலகினர். உயிர்பிழைத்தால் போதும் என, குடிலைவிட்டு வெளியே ஓடினான் கிள்ளி.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, வெண்சாந்து உருண்டையின் மணம் காற்றில் பரவி, பறவைகளின் மூக்குக்குள் இறங்கியது. ஓடிய கிள்ளியின் இடதுபுறத் தோளிலே வந்து அமர்ந்தது ஒரு காகம். ஒரு கையால் அதைத் தட்டிவிட்டு திரும்பும்போது மூன்று காகங்கள் வலதுபுறத் தோளில் அமர வந்தன. இன்னொரு கையைத் தூக்க முடியாததால், வலதுகையாலே அவற்றைத் தட்டி விரட்ட முயன்றபோது தோளின் கிழிபாடுகளுக்குள் இறங்கி எழுந்தது காக்கையின் அலகு. “அய்யோ” எனக் கத்த வாயெடுத்தவனின் செயலை, மறுகணமே வாயடைக்கவைத்தது எதிர் திசையில் படபடத்து வந்துகொண்டிருந்த பறவைகளின் பெருங்கூட்டம். காய்ந்த நாணல்கூடையையே நார்நாராகக் கிழிக்கும் அளவுக்கு பறவைகளை வெறிகொள்ளச் செய்தது வெண்சாந்து உருண்டை.

மாலை நேரத்தில் பறவைகள் வலசை போகின்றன என ஊரார்கள் நினைத்தபோது, அவை அனைத்தும் அலை அலையாக வந்து இவன் மீது இறங்கிக்கொண்டிருந்தன. துள்ளத் துடிக்கக் கதறியபடி அவன் ஓட ஓட,  பறவைகளின் கூட்டம் மகிழ்ந்து அவனைச் சூழ்ந்தது. பறவைகளின் அலகுகள் கொத்தியெடுக்கும் இடம் எல்லாம் வெண்சாந்து உருண்டை உருகி உள்ளேபோனது. அடுத்த பறவையின் அலகு, ஆழத்துக்குள் போய் அதை எடுத்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 3 P83f1
செம்பா வெண்சாந்து உருண்டையை மேலெல்லாம் பூசும்போது, அவனது முகத்தில் சிறு துளிகூடப் படாமல் பூசினாள். ஏன் என்பது, உடன் இருந்த நான்கு பெண்களுக்குக்கூட விளங்கவில்லை. குடிலின் வாசலில் நின்று பார்க்கும்போதுதான் அவர்களுக்கு விளங்கியது. பறவைகள் அவனது உடலை துகள்துகளாகக் கிள்ளி எடுப்பதை, கண்களில் கடைசித்துளி உயிர் இருக்கும் வரை அவன் பார்க்க வேண்டும்.

அழிவு அணு அணுவாக நிகழ்ந்துகொண்டிருந்த அந்த இடத்துக்கு மிகவும் தாமதமாக வந்து சேர்ந்தன மரங்கொத்திகள். அவற்றால் உள்நுழைய முடியவில்லை. காக்கைகளின் இடைவிடாத கரைச்சலும் பிற பறவைகளின் கத்தலுமாகப் பேரிரைச்சல் நிலவிய அந்த இடத்தில், மரங்கொத்திப் பறவை ஒன்று, அவனது இடதுபுற மார்பை நோக்கி ஓர் அம்பு நுழைவதைப்போல பாய்ந்து, அதே வேகத்தில் வெளியே இழுத்தது தனது கூரிய அலகை.

பிலர் மறுநாள் காலையில் எழுந்தபோது உடல் முழுவதும் நடுக்கம்கொண்டிருந்தது. மூலிகைச் சாற்றைக் கொடுத்தார்கள். வாங்கிக் குடித்தார். பகல் முழுவதும் நடுக்கம் நீடித்தது. கண்ணுக்குள் செம்பாதேவி நிலைகொண்டிருந்தாள். ஆடுகளத்தில் உருண்டு விழுந்த இரு கொம்புகளை எடுத்துவந்து அவள் முன் வணங்கி நின்றான் முடியன். அதில் ஒன்றை அவனது இடுப்பு உறையில் செருகினாள். மற்றொன்றை அவளின் காலடியைத் தொட்டு வணங்கிக்கிடந்த வீரன் ஒருவனின் இடுப்பில் செருகினாள்.

குலப்பாடலைத் துடியடித்துப் பாடிய அந்தப் பெண்ணின் முகத்தை அப்போதுதான் கூர்ந்து பார்த்தார் கபிலர். அவருக்கு அறிமுகமான முகம் அது. ‘எங்கே பார்த்திருக்கிறோம்?’ என யோசித்தபோது புலிவால் குகை அவரின் நினைவுக்கு வந்தது. பன்றிக்கறியை அவளின் கையில் கொடுத்த கணம் நிழலாட, கைகூப்பி கபிலர் சொன்னார், “மகள் அல்லள், என் தாய் நீ”.

மாலை நெருங்கியபோது, கபிலரின் இருப்பிடத்துக்கு வந்தான் பாரி. உடல் நடுக்கம் இருக்கத்தான் செய்தது. அதைக் காட்டிக்கொள்ளக் கூடாது என அவர் செய்த முயற்சி, பலன் அளிக்கவில்லை.

``உங்களின் நடுக்கத்துக்குக் காரணம் உடல் அல்ல, மனம். அது கலங்கிப்போய் இருக்கிறது” என்றான் பாரி.

அதை ஏற்பதைப்போல தலையாட்டிய கபிலர் சற்று மெளனத்துக்குப் பிறகு, “சிந்தப்பட்ட குருதி, கதைகளின் வழியே தலைமுறைகளுக்குக் கைமாறி வந்துகொண்டே இருக்கிறது. கதைகள்தான் மனித நினைவுகளில் இருந்து, குருதிவாடை அகலாமல் இருக்கக் காரணமா?” என்றார்.

`ஆம்' எனத் தலையசைத்தபடி பாரி சொன்னான், “கடித்து இழுக்க விலங்குகளுக்குப் பல் இருப்பதைப்போல் மனிதனுக்குக் கதை.”

நடுங்கி எழுந்தார் கபிலர். மனம் அல்ல, சொல்லால் நிகழ்கிறது நடுக்கம்.

“கிள்ளியின் முன்புறம் பாய்ந்த மரங்கொத்தி, பின்புறமாக வெளியேறிச் சென்றதைப் பேசும் கதைதான் நம்பிக்கையின் வேராக இருக்கிறது. அது இல்லையென்றால், `மேலெல்லாம் வைரக்கல் பதித்த பெரும்வடம் அணிந்தபடி கிள்ளி ஆட்சிசெய்து, எல்லோரையும் வாழவைத்தான்' என்றே கதைகள் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்.

கதைகள்தான் நல்லவர்களுக்கான கடைசி நம்பிக்கை. பறவைகள், விலங்குகள், மரம், செடி கொடி என இயற்கை எல்லாம் நமக்கு துணை நிற்க, அழித்தொழிப்பவர்கள் வீழ்வார்கள்; அழிக்கப்பட்டவர்கள் எழுவார்கள் என்ற நம்பிக்கையை, கதையன்றி வேறு யார் கொடுப்பது?” - பாரி சொல்வதை, கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார் கபிலர்.

பாரி தொடர்ந்தான், “ஈட்டியை விசைகொண்டு எறியும் எங்கள் வீரர்களின் கை தன்னிகரற்ற வலிமைகொண்டிருப்பது சதையால் அன்று, கதையால்.”

‘இந்தப் பதிலில் இருக்கும் நியாயங்கள் ஏன் என்னை வந்து சேரவில்லை? அதைத் தடுத்துக்கொண்டிருந்த உண்மைகள் என்ன?’ என்று யோசித்தார் கபிலர். வேந்தர்களுடன் தான்கொண்ட நட்புக்கு மனம் நம்பிக்கையாக இருக்க நினைக்கிறது. தன்னைப் பேணிப் போற்றுவதில் வேந்தர்கள் காட்டிய அக்கறையை பொய் என எப்படிச் சொல்ல முடியும்? எண்ணங்கள், மனக்கலக்கத்தை மேலும் அதிகப்படுத்தின. அவர் பாரி சொன்னதை வழிமொழியவில்லை. முகம் உணர்வுகளை வெளிக்காட்டிவிடக் கூடாது என நினைத்து சற்றே இறுக்கத்துடன் தலைசாய்த்தார்.

கவனித்த பாரி, சின்னதாகப் புன்முறுவல் பூத்தபடி இருக்கையைவிட்டு எழுந்தான். “நீங்கள் நன்றாக ஓய்வெடுங்கள். நாளை காலை நான் வந்து பார்க்கிறேன்” என்றான்.

“ஏன், நான் இன்று வர வேண்டாமா?”

“உங்களது உடல்நிலை அப்படியிருப்பதால் `ஓய்வெடுங்கள்' என்று சொல்கிறேன். இன்று மூன்றாம் நாள். பிற நாளைப்போல இருக்காது. சற்றே அச்சமூட்டுவதாக இருக்கும்.”

அச்சம் என்பதற்கு அவன் கொண்டுள்ள விளக்கத்துக்குள் நேற்றைய நாள் இடம் பெறவில்லைபோலும். கடந்த இரு நாள்களில் நடந்தவற்றை நினைவுகூர்ந்தவாறே கபிலர் கேட்டார், `‘தெய்வவாக்கு விலங்கு பழம் எடுத்தப் பிறகுதானே குலப்பாணன் உள்ளிறங்குவான். முன்கூட்டியே எப்படிச் சொல்கிறீர்கள்?”

“மூன்றாம் நாளில் தெய்வவாக்கு விலங்குக்கு வேலை இல்லை. காலம் காலமாகப் பின்பற்றப்படும் மரபு இது.”

“மரபுகளுக்குக் காரணம் இருக்க வேண்டும் அல்லவா?”

“நீங்கள் வருவதில் உறுதியாக இருக்கிறீர்களா?”

``ஆம்” என்றார் கபிலர்.

“சரி வாருங்கள், பேசிக்கொண்டே போவோம்” என்றான் பாரி.

இருவரும் கொற்றவை மரம் நோக்கி புறப்பட்டபோது இருள் முழுமை கொண்டுவிட்டது. கபிலர் சொன்னார், “மரபுக்கான காரணத்தைச் சொல்லாமல் அமைதி காப்பது எதனால்?”

“தனித்தக் காரணம் ஒன்றும் இல்லை. நான் வேறு சிந்தனையில் இருந்ததால் மறந்துவிட்டேன்” என்று சொன்ன பாரி மேலும் கூறினான். “உடலெல்லாம் அச்சம்கொண்ட தெய்வவாக்கு விலங்கால் பழங்களைத்தான் எடுக்க முடியும், பாம்புகளை எப்படி எடுக்க முடியும்?”

“புரியவில்லை” என்றார் கபிலர்.

“இன்று சொல்லப்படப்போவது நாகக்குடியின் கதை”.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

Sponsored content

PostSponsored content



Page 2 of 19 Previous  1, 2, 3 ... 10 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக