புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி  Poll_c10ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி  Poll_m10ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி  Poll_c10 
83 Posts - 55%
heezulia
ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி  Poll_c10ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி  Poll_m10ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி  Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி  Poll_c10ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி  Poll_m10ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி  Poll_c10ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி  Poll_m10ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி  Poll_c10ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி  Poll_m10ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி  Poll_c10ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி  Poll_m10ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி  Poll_c10ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி  Poll_m10ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி  Poll_c10ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி  Poll_m10ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி  Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி  Poll_c10ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி  Poll_m10ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி  Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி  Poll_c10ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி  Poll_m10ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி  Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 07, 2017 7:30 am

ஜென் கதை : பயத்தை போக்கும் ஒளி  NL1ZwUXQ3BZF2T1p9Fw1+201707031733114521_Zen-story-Light-of-fear_SECVPF.gif
-
அந்த ஆசிரமம் ஊரில் இருந்து கொஞ்சம் ஒதுக்குப்புறமாக,
வனத்தை ஒட்டி அமைந்திருந்தது. மக்கள் வசிக்கும் இடத்தில்
இருந்து நெடுந்தொலைவில் இருந்த அந்த ஆசிரமத்தில்
ஒரே ஒரு குரு மட்டுமே தங்கியிருந்தார்.

அடர்ந்தக் காட்டுப்பகுதி அது என்றாலும், அந்த குருவைக் காண
பகல் நேரத்தில் ஏராளமான மக்கள் வந்து செல்வதை வழக்கமாகக்
கொண்டிருந்தனர். அவரும் தன்னைக் காண வரும் மக்களிடம்
நல்லபடியாக உரையாடி உபசரித்து, அவர்களுக்குத் தேவையான
அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைப்பார்.

ஒரு நாள் குருவைக் காண்பதற்காக அவரது பழைய சீடன் ஒருவன்
வந்திருந்தான். அன்று முழுவதும் குருவின் அருகிலேயே இருந்து,
அவரது போதனைகளைக் கேட்டான். பேச்சு சுவாரஸ்யத்தில்
இருவருக்கும் நேரம் போனதே தெரியவில்லை. மாலை நேரம்
முடிந்து இருள் சூழத் தொடங்கி விட்டது.

சீடன் அங்கிருந்து புறப்பட நினைத்தான். குரு அவனைத் தடுத்து,
‘இரவு நேரமாகி விட்டது. நீ இங்கேயே தங்கியிருந்து, நாளைக்
காலையில் புறப்பட்டுச் செல்’ என்றார்.

ஆனால் சீடன் மறுத்தான். ‘இல்லை குருவே! எனக்கு ஒரு
முக்கியமான பணி இருக்கிறது. அதனால் நான் இன்று இரவே
இங்கிருந்து போயாக வேண்டும்’ என்றான்.

அதற்கு மேல் அவனை தடுத்து நிறுத்த விரும்பாத குரு, ‘நல்லது,
பத்திரமாகப் போய் வா’ என்று விடை கொடுத்தார்.

மடத்தின் வாசல் வரை வந்த சீடன் தயங்கியபடி நின்றான்.
வெளியே இருள் கவ்விக் கிடந்தது. மடத்தின் வெளிச்சத்தைத் தவிர,
வேறு எங்கும் ஒரு துளி ஒளி இல்லை. ஆனால் அவனுக்கிருந்த பணி,
அவனை அங்கேயே தங்கி விடவும் அனுமதிக்கவில்லை.

சீடன் தடுமாறுவதைக் கவனித்த குரு, உள்ளே போய் ஒரு விளக்கை
ஏற்றி எடுத்து வந்தார். அதை சீடனின் கையில் கொடுத்து, ‘புறப்படு’
என்றார்.

தன்னுடைய மனநிலையை சரியாக கணித்துவிட்ட குருவைக்
கண்டு பெருமிதம் கொண்ட சீடன், அவருக்கு நன்றியை தெரிவித்து
விட்டு அவரிடம் இருந்து விடைபெற்றான்.

ஆனால் அவன் கொஞ்ச தூரம் போனதுமே, ‘நில்!’ என்றார் குரு.

சீடன் நின்றதும், அவனருகே விரைந்து சென்ற குரு, அவன் கையில்
இருந்த விளக்கின் தீபத்தை, வாயால் ஊதி அணைத்தார்.
பின்னர் ‘இப்போது புறப்படு’ என்றார்.

சீடன் திகைத்துப் போய் குருவைப் பார்த்தான்.

அவனது பார்வையில் இருந்த கேள்வியைப் புரிந்து கொண்ட குரு
அவனிடம் விளக்கம் அளிக்கலானார்.

‘இரவல் வெளிச்சம் உனக்கு நெடுந்தூரம் துணைக்கு வராது.
உன் விளக்கு உனக்குள்ளேயே இருக்கிறது. அது எரியாதவரை,
இந்த விளக்கால் எந்த பயனும் இல்லை. உன் கையில் விளக்கு தேவை
என்றால், உன் உள்ளே பயம் உறைகிறது என்று பொருள்.

உள்ளத்தில் துணிவிருந்தால், வெளியே விளக்குத் தேவையில்லை.
உள்ளுக்குள் இருக்கும் பயம் போகாதவரை உன்னால், வாழ்க்கையில்
முன்னேறவே முடியாது. இதே இருள், இதே பாதை.. இவை
எப்பொழுதும் இங்கேயேதான் இருக்கும். ஆனால் உன் துணிவு
என்னும் ஒளியால் உன் பயணம் தொடரும்’ என்றார்.

சீடன் இப்போது மன உறுதியுடன் அங்கிருந்து நடக்கத்
தொடங்கினான்.

எல்லா பாதைகளும் இருள் சூழ்ந்தவைதான்.
முன்னேறும் துணிவுடையவன் எந்த விளக்கையும் எதிர்பார்ப்பதில்லை.

விளக்குடன் முன்னேறியவர்களை விட, விளக்கின்றி
முன்னேறியவர்கள்தான் அதிக அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள்.
ஒவ்வொருவருக்கும் அவரவர் அகமே விளக்கு. அதுதான் நமக்கு
கடைசிவரை ஒளி தந்து வழி காட்டும்.
-
-----------------------------------
தினத்தந்தி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக