புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_c10தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_m10தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_c10 
60 Posts - 49%
ayyasamy ram
தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_c10தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_m10தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_c10தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_m10தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_c10தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_m10தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_c10 
3 Posts - 2%
Kavithas
தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_c10தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_m10தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_c10 
1 Post - 1%
bala_t
தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_c10தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_m10தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_c10 
1 Post - 1%
prajai
தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_c10தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_m10தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_c10தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_m10தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_c10தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_m10தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_c10 
280 Posts - 41%
heezulia
தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_c10தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_m10தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_c10தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_m10தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_c10தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_m10தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_c10தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_m10தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_c10தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_m10தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_c10 
6 Posts - 1%
prajai
தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_c10தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_m10தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_c10தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_m10தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_c10 
5 Posts - 1%
manikavi
தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_c10தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_m10தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_c10 
4 Posts - 1%
Kavithas
தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_c10தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_m10தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 29, 2017 6:23 pm


தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?  DpaYNkd0S72gwsAOY1EI+bharathidasan01_15355
-
``நாங்கள் தமிழில் கவிதைகள் எழுத வேண்டும்.
எங்களுக்கு உங்களின் அறிவுரை என்ன?’ என பாவேந்தர்
பாரதிதாசனிடம் புதிதாகக் கவிதை எழுத வந்த இளைஞர்கள்
கேட்டபோது, பாரதிதாசன் சட்டென சொன்ன பதில்...
`ஆழ்வார் பாசுரங்களைப் படியுங்கள்’' என்பதுதான்.

``நீங்கள் பகுத்தறிவுப் பாவலர். அப்படியிருக்க, பாசுரங்களைப்
படிக்கச் சொல்கிறீர்களே?’’ என்று கேட்க,

``பாசுரங்களைப் படிக்காமல், உங்களால் எப்படி தமிழ்க்
கவிதைகள் எழுதிவிட முடியும்?’’ என்று பதில் சொல்லி
இருக்கிறார். இதுதான் பாரதிதாசன். பிடித்தால் உடும்பு பிடி...
அடித்தால் அதிரடி. அவரின் 126-வது பிறந்த நாள் இன்று.

‘`திராவிடக் கலை, இலக்கியத்தின் மையப்புள்ளியே
பாவேந்தர் பாரதிதாசன்தான். பொதுவாக, தமிழில்
கவிதைகளுக்கும் பாடல்களுக்கும்தான் உரை எழுதுவார்கள்.

ஆனால், தந்தை பெரியாரின் உரைகளுக்கெல்லாம் கவிதை
எழுதியவர் பாவேந்தர் பாரதிதாசன்.

1950-களில்தான் அரசாங்கம் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைப்
பற்றி பேசியது; பிரசாரம் செய்தது. ஆனால், பெரியார்
1930-களிலேயே குடும்பக் கட்டுப்பாடு திட்டம் பற்றிப் பேசினார்.

`பிள்ளை பெறுவது என்பது, பெண்களின் கடமை அல்ல;
அவர்களது உரிமை. அவர்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால்
அவர்களை பிள்ளை பெற்றுக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தக்
கூடாது’ என்றார் பெரியார்.

இதை, `காதலுக்கு வழிவிட்டு கருப்பாதை சாத்த
கதவு ஒன்று கண்டறிவோம்
இதில் என்ன குற்றம்...’ என 1937-ம் ஆண்டு கவிதை
பாடினார் பாவேந்தர்.
-
----------------------------------------
கதிர்பாரதி
-விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 29, 2017 6:26 pm


`இரணியன் அல்லது இணையற்ற வீரன்’


”1934-ம் ஆண்டு பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய,
`இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ என்கிற அவரின்
முதல் நாடகம், சென்னை விக்டோரியா மஹாலில்
நடைப்பெற்றது. நடித்தவர்கள் திராவிடக் கலைஞர்கள்
நாடக மன்றத்தினர். தலைமை, தந்தை பெரியார்.

இந்த நாடகத்தை, 1948-ம் ஆண்டு அன்றைய அரசாங்கம்
தடைசெய்தது. தடையை மீறி நாடகம் நடந்தது. அதனால்
நாடகத்தில் நடித்த அத்தனை கலைஞர்களும் சிறையில்
அடைக்கப்பட்டனர். மூன்று மாதம் மூன்று வாரம்
சிறைவாசத்துக்குப் பிறகு, 1948-ம் ஆண்டு டிசம்பர் மாதம்
விடுதலையாகி வெளியே வந்தபோது, அவர்களை முதலில்
செய்யாற்றில் வரவேற்றவர் தந்தை பெரியார்.

அங்கிருந்து ஊர்வலமாக வந்த நாடகக் கலைஞர்களை
காஞ்சிபுரத்தில் வரவேற்றவர் அறிஞர் அண்ணா.

இந்த நிகழ்வில் என்ன ஒரு முரண் என்றால், சுதந்திரம்
வாங்கும் வரை ஆங்கிலேயர்கள் அனுமதித்த நாடகத்தை,
சுதந்திரம் வாங்கிய ஒரே வருடத்தில் நமது ஆள்கள்
தடைசெய்ததுதான்’’ என்கிறார் பேராசிரியர்
சுப வீரபாண்டியன்.
-
--------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 29, 2017 6:30 pm


ஸ்ரீராமானுஜர் படத்துக்குப் பாடல் எழுதிய பாரதிதாசன்…

``திராவிட இயக்கத்திலிருந்து தமிழ்த் திரைப்படத் துறையின்
முதல் நுழைவுகூட பாவேந்தர் பாரதிதாசன்தான். இவருக்குப்
பிறகுதான் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி
ஆகியோரின் திரையுலகப் பிரவேசம் நடந்தது.

1937-ம் ஆண்டு வெளிவந்த `பாலாமணி அல்லது பக்கா திருடன்’
படத்தின் அத்துணை பாடல்களையும் எழுதினார் பாரதிதாசன்.
இதற்கு அடுத்ததாக எழுத்தாளர் வ.ரா-வின் கதையில் உருவான
`ஸ்ரீராமனுஜர்’ படத்துக்கு அனைத்துப் பாடல்களையும் எழுதினார்.

அப்போது பாரதிதாசனிடம் `நீங்களோ பகுத்தறிவுக் கவிஞர்.
ஆனால், ஆன்மிகப் படமான ஸ்ரீராமானுஜர் படத்துக்குப் பாடல்கள்
எழுதுகிறீர்களே?' என்று கேட்டபோது,

‘உனக்கு ஒண்ணு தெரியுமா? சினிமாவுல நுழையுறது அவ்வளவு
சுலபம் இல்லை. என்னை நிலைநிறுத்திக்கிட்ட பிறகு பாரு,
நான் நினைக்கிற படம் எடுக்கிறேன்’ என்றார்.

அதுபோலவே 1950-ம் ஆண்டு `பொன்முடி’ படத்தை எடுத்தார்.
முழுக்க முழுக்கப் பகுத்தறிவுச் சிந்தனைகளைக் கொண்ட படம்
அது. அவரின் `எதிர்பாராத முத்தம்’ என்ற குறுங்காப்பியத்தின்
தழுவல்தான் `பொன்முடி’ திரைப்படம்.

`எதிர்பாராத முத்தம்’ என்பது புதுவையில் நிலவிவரும்
பிரெஞ்சுக் கலாசாரம். ஒருவரை ஒருவர் பார்த்ததும் முத்தமிட்டு
முகமன் கூறி வணங்குவார். இதை மையமாக வைத்துதான்
`எதிர்பாராத முத்தம்’ குறுங்காப்பியத்தை எழுதியிருப்பார்
பாரதிதாசன்.

`பாவேந்தரின் `பொன்முடி’ படத்துக்கு முன்பே
அண்ணாவின் `வேலைக்காரி’, `நல்லத்தம்பி’ படங்கள்
உருவாகின’ என்பார்கள். ஆனால், வெளிவந்ததில் முதலாவது
`பொன்முடி’தான். அந்த வகையில் தமிழ்த் திரைத் துறையின்
முதலாவது திராவிட நுழைவு பாரதிதாசன்தான்.

இன்றைக்கும் தமிழர்களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட பல
கவிதை வரிகளை எழுதியவர் பாவேந்தர்தான்.
`எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே
முழங்கு,’
`கொலைவாளினை எடடா மிகக்கொடியோர் செயல் அறவே’,
`தமிழுக்கும் அமுதென்று பேர்’... என்பன போன்ற வரிகள்
இன்றைய இளைய தமிழ்த் தலைமுறையை எழுச்சியோடு
வைத்திருக்கின்றன.

1942-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா `திராவிட நாடு' பத்திரிகையைத்
தொடங்கியபோது,
`தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்ற கவிதை வரிகளைத்தான்,
அதன் முகப்பு வரியாகப் போட்டார்’’ என்கிறார் பேராசியர்
சுப வீரபாண்டியன்.

இவை எல்லாம் பாரதிதாசனின் முதல் புத்தகமான
`பாவேந்தர் பாரதிதாசன் கவிதை’ நூலில் உள்ள வரிகள்தான்.
1937-ல் வெளிவந்த இந்த வெளியிட்டவர் குத்தூசி குருசாமியின்
மனைவி குஞ்சிதம் குருசாமி. பெண்ணடிமைத்தனம் வேரோடிக்
கிடந்த அந்தக் காலகட்டத்தில் ஒரு பெண்ணை தன் முதல்
புத்தகத்தை வெளியிடவைத்துப் பெருமைப்படுத்தியவர் பாவேந்தர்.
-
மாற்றுச் சிந்தனை கொண்டோரையும் தன் தமிழால் மயக்கிய
கவிக்குயில் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ்மொழியின் கம்பீர
அடையாளங்களில் முக்கியமானவர்!
-
---------------------------------------

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக