புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 8:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:52

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:12

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:03

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:52

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:07

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:02

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:00

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:46

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_c10 
1 Post - 1%
Kavithas
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_c10 
1 Post - 1%
bala_t
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_c10 
1 Post - 1%
prajai
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_c10 
284 Posts - 42%
heezulia
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_c10 
5 Posts - 1%
prajai
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_c10 
4 Posts - 1%
manikavi
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_c10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_m10பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி  - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu 28 Jan 2016 - 16:52

First topic message reminder :

பதின் பருவம். 
பார்ப்பவை எல்லாம் வண்ணத்துப்பூச்சிகளாய் வண்ணமயமாய் தெரிந்தது அவளுக்கு!! 
வானத்தில் பறக்கும் சிட்டுக்குருவியாய்சிறகுகளை விரித்து மகிழ்ச்சி என்னும் 
வண்ண மலர்களால் இறக்கை விரித்து சந்தோஷவானில் சிறகடித்து கொண்டிருந்தாள்!! 

இளமைக்கே உரிய வனப்பு அவள் வயதில் தெரிந்தது!!  விழிகளில் வெளிச்சம் பார்வையில் பரவசம் பார்ப்பவர்களை தடுமாற செய்யும் அழகு ஒருசேர ஒன்றமைய பெற்றிருந்தாள்!! 
ஆளுமையில் அடுத்தவர் ஆடிப்போகும் அளவுக்கு திறமைகளை பெற்றிருந்தாள்!  பட்டதெல்லாம் நல்லதாக நினைத்தாள்!! 

வாலிப வயதில் எதார்த்தமாய்  ஒரு ஆண் மகனை சந்தித்தாள் அவனும் அறிவுக்கும் திறமைக்கும் குறைச்சல் இல்லாதவன்!! பார்வைகள் காதலில்  விழுந்தன! இதயங்கள் இருமனம் திருமணம் முடித்து கொண்டன!! 
இவள் சிந்திய ஒற்றை  புன்னகை அவனை நிலை குலைய செய்தன!!  மகிழ்ச்சி வெள்ளத்தில்  இருவரும் அடித்துச் செல்லாமலிருக்க  அவ்வப்போது யாராவது தடுத்து கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது! 

காதலின் மிகுதியால் காமம் பிறந்தது இனி கன்னிக்கு வேலையில்லை திருமணம் செய்து கொள்ள 
காதலர் இருவரும் முடிவு செய்து வீட்டில் தெரிவித்தனர்!! 
பெண்  வீட்டில் பிரச்சினை பிறந்தது  ! அழகுள்ளவன் அறிவுள்ளவனாலும்  வயதில் மூத்தவன் விவாகம் வேண்டாம்  விட்டு விடு!!   மகளே பெற்றோர் கதறினர் 

அம்மா காதலில்  விழுந்தேன் என்னை கைப்பிடித்து கொடுத்து விடுங்கள் கெஞ்சினாள்! 
ஒரு மகள் அதுவும் செல்ல மகள் அவள் அழுகை அவர்களை உறங்க விடாமல் செய்தது!! 

பெண்ணே உன் விருப்பப்படி  என்னால் திருமணம் செய்து வைக்க முடியாது!  மன்னித்துவிடு--- இது தாய் 
வேண்டாம் விட்டு விடு  அவன் சகவாசம் சரியில்லை, என் தங்கையே, வேண்டாம் ---இது அண்ணன்கள்!! 

ம்ஹூம் எதுக்கும் அவள் கட்டப்படவில்லை பிடிவாதம்  அவள் ஒரே குறியாக இருந்தாள்!! இவனைத்தான் திருமணம் செய்து கொள்ள!!  வீட்டில் எதிர்ப்பு மீறி அவள் அவனுடன் சென்று திருமணம் செய்து கொண்டாள்!! 
வாழ்க்கையே தன் வசப்பட்டு விட்டது போல் உணர்ந்தால்! உற்சாகத்தில் உறைந்து போனாள்!!  கைப்பற்றி  நடந்து வந்த பெற்றோர் பற்றி நினைவு சிறிது கூட இல்லை!! 

மகிழ்ச்சி மட்டுமே அவள் கண்ணுக்கு தெரிந்தது!!  மற்றவை எல்லாம் மறைந்தே இருந்தது!! 
கலப்பின் மிகுதியால்  கருதரித்தாள்!! திருமணம் ஆகி மூன்று மாதங்கள் தான்!   உற்சாகம் கரைபுரண்து!! மசக்கையினால் முகம் வாடினாலும் மனது என்னமோ உற்சாகமாக தான் இருந்தது!! 

மசக்கையினால் மருத்துவ பரிசோதனைக்கு கணவன் மனைவி இருவரும் சென்றனர்!!! 
இருவருக்கும் பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும் இது த‌ற்போதைய நடைமுறை!! 
இருவரும் செய்து கொண்டனர்!! அதில் தான் பிரச்சனை தொடங்கியது!! 
பரிசோதனைகள் முடிவில்  கணவனுக்கு எச்ஐவி கிருமி இருப்பதாக உறுதி செய்யப்பட்டது!! 

இவனோ துன்பத்தில் உறைந்து போனான்!!  காதலித்து கரம்பிடித்தவளிடம் உண்மையை சொல்ல வேண்டாம் என கெஞ்சினான்!!  தான் திருமணத்திற்கு முன்பு நிறைய தவறுகள் இழைத்துவிட்டதாகவும்  அதன் பலனை தற்பொழுது  அனுபவிப்பதாகவும் கூறினான்!!! அழது புலம்பினான் வேறொன்றும் சொல்வதற்கு இல்லை!! 
மூன்று மாத கர்ப்பிணி தாய் மூவுலகமும் ஒன்று சேர்ந்தால் போன்ற மகிழ்ச்சி! 
அவளிடம் இதை சொல்லியாக வேண்டும்! எப்படி சொல்வது?? குழப்பம் கணவனோ வேண்டாம் என்கிறான் 
செல்லவில்லை என்றால் 100%வித வாய்ப்பு இருக்கிறது!! என்ன செய்வது!??

தொடரும்....



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat 30 Jan 2016 - 13:34

கிருஷ்ணா அம்மா விடம் இருந்து 
விவாதத்திற்கான பதில் வரவில்லையே. என்னிடம் ஏதும் கோபமா?? அம்மா......



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 30 Jan 2016 - 14:05

சசி wrote:கிருஷ்ணா அம்மா விடம் இருந்து 
விவாதத்திற்கான பதில் வரவில்லையே. என்னிடம் ஏதும் கோபமா?? அம்மா......

ஐயோ, அதெல்லாம் இல்லை சசி...........என்பதில்கள் கொஞ்சம் பத்தாம் பசிலித்தனமாய் இருக்கும் அது தான், எல்லாத்தையும் வெறுமன படித்தேன் இப்போ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat 30 Jan 2016 - 21:30

krishnaamma wrote:
சசி wrote:கிருஷ்ணா அம்மா விடம் இருந்து 
விவாதத்திற்கான பதில் வரவில்லையே. என்னிடம் ஏதும் கோபமா?? அம்மா......

ஐயோ, அதெல்லாம் இல்லை சசி...........என்பதில்கள் கொஞ்சம் பத்தாம் பசிலித்தனமாய் இருக்கும் அது தான், எல்லாத்தையும்  வெறுமன படித்தேன் இப்போ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190832

என்னமா இப்படி சொல்கிறீர்கள்.?நல்ல பல கருத்துகளை எளிய முறையில் அழகாக குறிப்பிடுபவர்கள் நீங்கள்.  பெண்ணாக கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் நீங்கள்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 2 Feb 2016 - 12:28

சசி wrote:
krishnaamma wrote:
சசி wrote:கிருஷ்ணா அம்மா விடம் இருந்து 
விவாதத்திற்கான பதில் வரவில்லையே. என்னிடம் ஏதும் கோபமா?? அம்மா......

ஐயோ, அதெல்லாம் இல்லை சசி...........என்பதில்கள் கொஞ்சம் பத்தாம் பசிலித்தனமாய் இருக்கும் அது தான், எல்லாத்தையும்  வெறுமன படித்தேன் இப்போ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190832

என்னமா இப்படி சொல்கிறீர்கள்.?நல்ல பல கருத்துகளை எளிய முறையில் அழகாக குறிப்பிடுபவர்கள் நீங்கள்.  பெண்ணாக கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் நீங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1190976

சரி, உங்களுக்கு எதுக்கு குறை..............போடுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 3 Feb 2016 - 12:57

என் பதிலை நான் ரொம்ப பெரிசாய் எழுதிவிட்டேன்......கொஞ்சம் பொறுமையாய் படியுங்கோ.................

ஏண்டா கேட்டோம் என்று ஆனால் நான் பொறுப்பல்ல ஜாலி ஜாலி ஜாலி ...படித்துவிட்டு அடிக்க ஓடி வராதீங்கோ.....எதானாலும் பேசி தீர்க்கலாம் புன்னகை

அந்த பத்து கேள்விகளில் 8 வது தவிர, மற்ற எல்லாத்துக்கும் பதில் ஒரே பதிவாக போடுகிறேன் சசி புன்னகை
..அனைத்துக்குமே என்றும் சொல்லலாம் தான், என்றாலும் 8க்கு மட்டும் ஒரு பாயிண்ட் அதிகமாய் எழுதணும் அது தான்.........

ஒரே வார்த்தை இல் சொல்லணும் என்றால், நாம் - பெற்றவர்கள் - வளர்ப்பின் குறைபாடு மட்டுமே அல்லது வேறு இல்லை.............ஆமாம், இன்று வரை படித்துக்கொண்டிருந்த பிள்ளைகளை வயது ஆகிவிட்ட காரணத்தினாலேயே 'சட்' என்று கல்யாணம் செய்து கொடுத்துவிடுகிறோம், அவர்களுக்கு பிள்ளை வளர்ப்பு பற்றி தெரியலை..........தங்கள் வீடுகளிலும் கற்கவில்லை, அதற்கான நேரமும் இல்லை, அப்போ என்னத்த வளர்ப்பார்கள்?..............

வேலைக்குப் போகும் பெண்களின் குழந்தைகளை கேட்டுப்பாருங்கள் தங்களுக்கு வேலைக்குப் போகாத பெண்கள் தான் மனைவியாக வரணும் என்று பெரும்பாலும் சொல்வார்கள்................கோபிக்க வேண்டாம், இந்தியாவில் எடுத்த ஒரு கணக்கெடுப்பில் ரிசல்ட் இது...............ஏன் என்றால், குழந்தைக்கு என்று சம்பாதிக்க வெளிய போகும் பெண் தான் என்னவெல்லாம் இழக்கிறாள், அவளிடமிருந்து பெறவேண்டிய எத்தனையை குழந்தையும் அவள் குடும்பமும் இழக்கிறது என்று எல்லோருக்குமே தெரியும்........

மேலும் இங்கு நம் தளத்திலேயே நிறைய கதைகள் போடப்பட்டிருக்கு, ஒரு டீச்சர் அம்மாவிடம் வரும் குழந்தை இன் டிவி கட்டுரை, தன் அப்பாவின் ஒரு நாள் சம்பளத்தை சேர்த்து வைத்துக்கொண்டு, அதை அவரிடம் கொடுத்துவிட்டு, தன்னுடன் இருக்க சொல்லும் குழந்தை இன் கதை இப்படிப் பலப்பல.................

(நான் நம்ப வெப் சைட் லேயே ஒரு கதை படித்தேன் இதோ அது : சிறுவன் கேட்ட வரம்! )


இதெல்லாம் படித்து விட்டும் , கண்டுக்காமல் வீட்டை விட்டு வெளியே போனால்?................அதற்காக வேலைக்கு போகும் பெண்கள் எல்லோரையும் வீட்டிலேயே இருங்கோ, என்றோ, அல்லது வீட்டில் இருப்பவர்களின் குழந்தைகள் எல்லாம் பத்தரை மாற்றுத் தங்கம் என்றோ நான் சொல்ல வரலை, நூல் கண்டு சிக்காகிவிட்டது, அதை எங்கிருந்தாவது அவிழ்க்க முயலணும் இல்லையா, ஏதாவது, எங்காவது ஒரு நுனி வேண்டுமே?...அதத்தான் தேடி தொடுகிறேன்............

இப்போ முதல் பிரச்னைக்கு வருகிறோம், கல்யாணம் ஆனதும் நாம் அப்பா அம்மா ஆக தகுதியாக இருக்கிறோமா என்று முதலில் நாமே நம்மை சுய பரிசோதனை செய்து கொள்ளணும்............நான் சொல்வது மன ரீதியாக.......நேற்று வரை நாமே குழந்தை இன்று திடீரென்று கல்யாணம் ஆனதும் பொறுப்பு வந்துடுமா?....வெளி நாடுகளில் கேள்விப்பட்டு இருப்பிர்கள் LIVING TOGETHER என்று அப்படி இருப்பவர்கள் எப்போ தங்களுக்கு குழந்தை வேண்டும் என்று நினைக்கிரர்களோ அப்போ தான் கல்யாணம் செய்து கொள்வார்கள். ...................

இந்த உதாரணத்தை, ஜஸ்ட் பொறுப்புக்காக மட்டுமே சொன்னேன்.....................அது போல முதலில் கொஞ்சம் நிதானித்து, நாம் யார், நம் பொறுப்பென்ன, எங்கு வந்திருக்கோம் என்று யோசிக்கணும்...............இப்போ நான் இருக்கும் இருப்பில் குழந்தை பெற்றுக்கொண்டால், என்னால் அதை நம் அம்மா அப்பா போல வளர்க்க முடியுமா?................

அதாவது, என்னைப்பார்த்து அது கற்றுக்கொள்ளும் அளவிற்கு என்னிடம் குணங்கள் இருக்கா?...............நான் என்னென்ன மாறணும்?............யோசிக்கணும்..........எல்லா பெண்குழந்தைகளுக்கும் தங்களின் அப்பாதான் ஹீரோ, மற்றும் அவள் சந்திக்கும் முதல் ஆண் அவர் தான்.................அதே போலத்தான் ஆண் குழந்தைகளுக்கும் தங்களின் அம்மா தான் சூப்பர் என்கிற எண்ணம் மேலோங்கி இருக்கும்.................

எனவே, தனக்கு வந்துள்ள பாட்னரிடம், அந்த சாயலை எதிர் பார்ப்பார்கள்......இதற்கு பிள்ளையாரும் விதி விலக்கல , தன் அம்மா போலவே பெண் வேண்டும் என்று குளத்தங்கரை இல் உட்கார்ந்து இருக்கார் பாருங்கோ புன்னகை ..............

தன் அப்பாவின் உன்னத குணத்தை கணவனிடம் தேடும் பெண், தன் அம்மாவின் குணத்தை மனைவிடம் தேடும் கணவன் இருவரும், இப்போ தாங்கள் அப்பா அம்மா ஆனால், நம் அப்பா அம்மா எவ்வளவு கிரேட் டோ அது போல நடக்க முடியுமா? என்று கொஞ்சம் சிந்திக்கணும்............இப்படி யோசித்து 'செட்டில் ' ஆகும் வரை கல்யாணத்தையே தள்ளிப்போட்டலும் தப்பில்லை. புன்னகை .அது வொர்த்.........நாம் மட்டுமா பிள்ளை பெறுகிறோம் ஆடு மாடு கூடத்தான் பெற்றுக்கொள்கிறது, அது போல ஆய்டக்கூடாது என்றால் கொஞ்சம் மெனக்கெடணும் தானே?.................

அந்த காலத்தில் சத் புத்திரன் , சத் புத்திரி வேண்டும் என்றால் இன்ன இன்ன நக்ஷத்திரத்தில் தான் கூடணும் என்கிற விதியை பின் பற்றினார்கள்...............வேண்டாத நேரம், வேண்டாத காலத்தை ஒதுக்கி, தங்களுக்கு வேண்டியபடி குழந்தைகள் பெற்றுக் கொண்டார்கள் ......இப்போ அதெல்லாம் போச்சு.......யாரும், பெரியவா சொல்வதை கேட்பது இல்லை புன்னகை

குறைந்த பக்ஷம், கீழே நான் இனி சொல்வதையாவது செய்ய முடிகிறதா பாருங்கள்! .ஏன் என்றால், நம்முடைய எதிர்காலம் மட்டும் அல்ல , நம் நாட்டின் வரும்காலம் கூட நம் குழந்தைகள் கை இல் தானே இருக்கு?....சசி சொன்னது போல சமுக எற்ற இறகங்களை நம்முடைய மெனக்கெடல்கள் சரி செய்யும் என்றால் , மெனக்கெடலாம் தானே?

தொடரும்..................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 3 Feb 2016 - 12:57

அதனால் முதலில் தம்பதிகள் தங்களுக்குள் , பேசி ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு பின் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுக்க வேண்டும்................. முன்று வயது வரை நம்மால் எத்தனை எத்தனை சொல்லிக்கொடுக்க முடியுமோ அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கலாம்......கவனியுங்கள்....' நாம் சொல்லிக்கொடுக்கலாம்', ப்ளே ஸ்கூல் கொண்டு விட்டு சொல்லித்தருவது இதில் சேராது புன்னகை ................. கூடாது கூடாது கூடாது

நாமே தான் சொல்லித்தரணும் , சரி 3 வயது வரை என்றால், எப்ப ஆரம்பிப்பது  என்கிற கேள்வி வரும்..............நாம் கருவை சுமக்கிறோம் என்று தெரிந்த நாளில் இருந்து ஆரம்பிக்கலாம். நாமே பிள்ளைகளை வடி வமைக்கலாம்.......இது 100 %நிஜம்..............

புராண கதைகளை கேட்டு வளர்ந்தேன் நான் எனவே, நாம் பேசுவதை கருவுக்குள் இருக்கும் சிசு கேட்கும் என்று ப்ரஹ்லாதன் கதை முலம் தெரிந்து கொண்டேன். அதையே நானும் செய்தேன்........பலன் கை  மேல் கிடைத்திருக்கு..............அதனால் தான் சொல்கிறேன், அப்போவே நம் பாடத்தை ஆரம்பித்துவிடணும்......... யாருக்குத்தான் சத் புத்திரன் மேல் ஆசை இல்லை?...சொல்லுங்கோ புன்னகை

எனவே, குழந்தையுடன் பேச ஆரம்பிக்கணும், அது ஆணோ பெண்ணோ , நோ ப்ரோப்ளேம், நம் குழந்தைக்கு , நல்ல நடத்தைகளை சொல்லித்தர என்ன பிரச்சனை நமக்கு?....நிறைய நேரம் அத்துடன் பேசணும்..........நம் புராணக்கதைகளை உரக்க படிக்கலாம், உபன்யாசங்கள் கேட்கலாம், ஸ்லோகங்கள் கேட்கலாம், கலாச்சாரம், பண்பாடு குறித்த புத்தகங்களை கொஞ்சம் உரக்க படிக்கலாம்,  மனதை ரொம்ப ரிலாக்சாக வைத்துக்கொள்ளலாம், நாம் செய்யும் ஒவ்வொன்றும் , சிற்பி ஜாக்கிரதையாக சிற்பத்தை செதுக்குவது போல என்று உணர்ந்து செயல்படணும்  . புன்னகை

கண்டிப்பாக நன்னடத்தையும் இறை உணர்வையும் நாம் இந்த நேரத்தில் சொல்லித்தந்து ஆகணும். இறை நம்பிக்கை , அது எந்த மதமானாலும் இருக்கலாம், எல்லா மதங்களுமே  நமக்கு நல்லது தான் சொல்லித்தருகிறது...........குறைந்த பக்ஷம் நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கு என்றாவது ஒப்புக் கொள்ளணும் .........அந்த சக்திக்கு  , அடங்கி தலை வணங்குவது வரணும்...........

( இதில் மாற்றுக்கருத்து வரலாம், வரும், இது என்கருத்து மட்டுமே.............மீண்டும் சொல்கிறேன் நான் சொல்வது எல்லாமே நான் செய்து பார்த்தது தான்...........Guest உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் ! )

இப்படி அணு அணுவாய் நம் குழந்தை யை கருவிலேயே திருவாக நாம் தான் வளர்க்கணும்.......வெளியே வந்ததும் கூட,

* நீ இப்போ என்னை சார்ந்து இருப்பது போல எனக்கு வயதானால்  நான் உன்னை சார்ந்து இருப்பேன்................

* நீ தப்பு செய்தால் எனக்கு ரொம்ப மனசு கஷ்டப்படும்..........

* உனக்கு என்ன வேண்டுமாணாலும்  செய்ய நான் இருக்கேன் ............

போன்றவற்றை  குழந்தைகள் உணரும் வண்ணம் சொல்லி வளர்க்கணும்....சிலர் சொல்வார்கள் சென்டிமென்ட் என்று, அதில் தப்பே இல்லை......'நீ இப்படி செய்தால் எனக்கு வருத்தம் வரும்' என்று தாராளமாய் குழந்தைகளிடம் சொல்லலாம்............

அதேபோல, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ரொம்ப பொறுப்பாக பதில் சொல்லணும்.............ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன் இங்கு, நாங்க அப்போ பரிதாபாதில் (Faridabath )   இருந்தோம், எங்க கிருஷ்ணா ஒன்றாம் கிளாஸ் படித்துக்கொண்டிருந்தான். அப்போ அங்கு வாரம்  ஒரு முட்டை யாவது சாப்பிடணும் என்று குழந்தைகளுக்கு சொல்லித்தந்தர்கள், ஒரு இனிமையான பாடல் முலம், நீங்க எல்லோரும் கூட கேட்டு இருப்பிங்க...........

அந்த பாடல் அதே மேட்டில் , கமல் படத்தில் , வரும் முதல் 2 அடி,

"மேரி ஜான், மேரி ஜான் முர்கிகா அண்டா  ....." என்று துவங்கி "சண்டேகி சண்டே கவோ அண்டே" என்பது போல முடியும்................

இதைக்கேட்டதும் கிருஷ்ணா என்னிடம் வந்து , " அது என்ன, 'அண்டா'?.......(அதாவது முட்டை? )...எங்க மிஸ் சொன்னா நாங்க எல்லோரும் சாப்பிடணுமாம், கிளாஸ் இல் சில பசங்க நாங்க சாப்பிடறோம் நு கை தூக்கினாங்க, ஒருத்தன் தன் டப்பாவிலிருந்து காட்டினான், அது 'ஆலு'  (உருளைகிழங்கு ) போல இருந்தது..............எனக்கும் தரியா?" என்றான்..................

நான் இப்போ இவனை manage  பண்ணியாகணும்..............உங்களுக்கு தெரிந்து இருக்கும் நாங்கள் பிராம்மணர்கள்........................ம்ம்...குழந்தைக்கு எப்படி சொல்லப்போகிறாய் என்பது போல கிருஷ்ணா அப்பா என்னை பார்த்தார்.............

நான் கொஞ்சம் யோசித்து, " ஆமாம் அது உடம்புக்கு ரொம்ப நல்லது தான் கிருஷ்ணா, ஆனால் அதில் ஒரு சின்ன பிரச்சனை இருக்கு" என்றேன்.................

"ம்..சொல்லு" என்பது போலப்பார்த்தான்  குழந்தை, ......

"நாமெல்லோரும் பிறக்கும்போதே, கோவிந்தா, நமக்கு இந்த பிறவிக்கு என்று நாம் செய்யக் கூடியது செய்யக் கூடாதது , சாப்பிடக்கூடியது சாப்பிடக் கூடாதது என்று ஒரு லிஸ்ட்
கொடுத்து இருக்கிறார், இந்த முட்டை நம் லிஸ்ட் இல் இல்லை டா ..........எனவே நாம் சாப்பிட முடியாது............ இது போல நிறைய இருக்கு, நீ கொஞ்சம் பெரியவனானதும் சொல்லலாம் என்று இருந்தேன், இன்று சொல்லும் படி ஆய்டுத்து " என்று சொல்லி நிறுத்தினேன்................

ஒரே நிமிடம் தான்," ஹோ!........அப்படியா?......கோவிந்தாவே சொல்லிட்டா  அப்புறம் என்ன இருக்கு?......அவா லிஸ்ட் இல் முட்டை இருக்கோ? என்றான்.........

நான், "ம்ம்.. இருக்கலாம்" என்றேன்.................

'சரி, நோ ப்ரோப்ளேம் ( இந்த வார்த்தை நாங்க நிறைய சொல்வோம் புன்னகை ) .நாளை நான் எங்க மிஸ் கிட்ட சொல்லிடறேன், அந்த 'அண்டாக்கு' பதிலாய் நான் நிறைய 'தூத்' குடிக்கறேன் என்று சொல்லிடறேன்' என்று சொல்லி விட்டு போய்விட்டான்..............

அவ்வளவு தான் ப்ரோப்ளேம் solved ...........கிட்ட தட்ட அவன் 5 வது படிக்கும் வரை எந்த புதிய உணவை பார்த்தாலும் என்னிடம் வந்து, "  இது நம் லிஸ்ட் இல் இருக்கா? ' என்று மறக்காமல் கேட்ட பிறகே தொடுவான் என்றால் ,  பார்த்துக்கொள்ளுங்கள்...............

இது ஒரு சின்ன விதை தான், நான் அந்த 'கோவிந்தா' லிஸ்ட் இல் பிறகு நிறைய சேர்த்து விட்டேன், ஆமாம் , விதை விதைப்பது தான் கஷ்டம், பின் அதை வளர்ப்பது சுலபம்புன்னகை.............முட்டை மட்டும் இல்லை, மற்றவைகள் பேரும் சொல்லி அதெல்லாமும் சாப்பிடக்கூடாது..............என்ன கஷ்டம் வந்தாலும் , சாப்பாடே கிடைக்காது  என்கிற நிலை வந்தாலும், வெளிநாட்டில் இருக்க நேர்ந்தாலும், வெறும் பிரட், பழம் , காய்கறிகளை மட்டுமே சாப்பிட்டு ஜீவிக்கணும்......சுயபாகம் ரொம்ப சிறந்தது என்று சொல்லி நான் அவனுக்கு சமைக்கவே கத்து கொடுத்துவிட்டேன்...........இதுக்கெல்லாம் முன்னோடி, நாம் அப்படி இருக்கணும் என்பதே...............

( அப்புறம், டர்க்ஸ்  , சிகரெட், மது எல்லாம் ஒவொன்றாக லிஸ்ட் இல் சேர்ந்து கொண்டது  கண்ணடி  கண்ணடி  கண்ணடி )



தொடரும்....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 3 Feb 2016 - 12:58

நாம் குடித்துக்கொண்டு சிகரெட் பிடித்துக்கொண்டு, குழந்தைகளை , 'நான் தான் கேட்டுவிட்டேன், நீ யாவது நல்லா இரு' என்றால், அவா இருக்க மாட்டா, 'நானும் இதையே என் குழந்தைக்கு சொல்லிக்கறேன்' என்று நினைப்பார்கள் .எனவே, நாம் நம் குழந்தைகளுக்கு என்ன சொல்கிறோமோ அது போல முதலில் நாம் நடந்து காட்டணும்..............


இப்போவெல்லாம், Good touch Bad touch என்று குழந்தைகளுக்கு சொல்லித்தர சொல்கிறார்கள்...............அதே போல பெண் குழந்தைகளுக்கு ஒரு 10 - 11 வயசானதும் நாம் அம்மாக்கள் அவளை கூட்டிவைத்து ,

"இனி நீ சின்னப்பெண் இல்லை, யாரையும் தொட்டு பேசக் கூடாது, ( ஏற்கனவே தான் சொல்லி இருக்கோமே, Good touch Bad touch , Private parts ஐ யாரையும் தொட அனுமதிக்கக் கூடாது என்று புன்னகை ) என்று மீண்டும் சொல்லி, திடீரென்று 'பெரியவளானால்' என்ன செய்யணும், எப்படி செய்யணு, பள்ளிகூடத்தில் இருந்தாலும் தனியே எப்படி handle செய்வது" என்று சொல்லித் தரணும். .............

அவள் பயப்பட்டால், அதை போக்குவது நம் கடமை..............

அதேபோல, ஆண் குழந்தைகளிடமும், அப்பா பேசணும், அவர்களுக்கும் அவர்களின் நிலைமையை விளக்கி சொல்லணும்.............எந்த சந்தேகம் வந்தாலும் என்னைக் கேள் நான் இருக்கேன் உனக்கு என்று ஆறுதல் சொல்லணும்.............இது எல்லோருக்கும் சகஜம் என்று அவங்களை சகஜப்படுத்தணும்..................

"இந்த வயதில் அதாவது டீன் ஏஜ் என்று சொல்லக் கூடிய வயதில் மனம் , ஆண் பெண் பேதம் பார்க்கும், அவர்களைப் பாத்ததும் இத்தனை நாள் இல்லாமல் வேறு மாதிரி தோணும் , அதெல்லாம் சகஜம், ஆனால் நாம் மன உறுதியுடன் இருக்கணும்...........இந்த 13 முதல் 21 வயது வரை உள்ள காலம் ரொம்ப பொல்லாதது, பார்த்து
நடந்து கொள்ளவில்லை யானால் வாழ்க்கை அதோ கதி தான், ஆனால் அதே இந்த 8 - 9 வருடங்களை எவன் ஒருவன் கட்டுப்படுகன் கடந்து வந்து விடுகிறோ அவன் காலடி இல் உலகமே கிடக்கும்" ...என்று சொல்லி சொல்லி அவர்களை வழிக்கு கொண்டு வரணும்..............

நான் ஏற்கனவே ஒரு பதிவில் போட்டிருப்பது தான் இது புன்னகை...............லிங்க் வேண்டுமானாலும் தருகிறேன்..இதோ அது புன்னகை குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ புன்னகை

எங்க அப்பாவின் ப்ரெண்ட் ஒருத்தர் சொல்வர், நாம் குழந்தைகளை எப்படி வளர்க்கணும் என்று :

1 லிருந்து 3 வயது வரை சுவாமி போல கொண்டாடனும்
4 லிருந்து 7 வயது வரை ராஜா போல நடத்தனும்
8 லிருந்து 12 வயது வரை குழந்தையாக பாவிக்கணும்
13 லிருந்து 19 வயது வரை ஒற்றன் போல கண்காணிக்கணும்
20 வயது வந்து தோளு க்கு உசந்துட்டா தோழன் போல வெச்சுக்கணும்
என்பார்.

ரொம்ப சத்தியமான வார்த்தைகள் இவை. இப்படி நாம குழந்தைகளை வளர்த்தால் பிற்காலத்தில் அதுங்களும் நன்னா இருக்கும் நம்மையும் நன்னா வெச்சுக்கும்.

"நாம் குருவி காக்காய் இல்ல, ரக்கை முளைத்ததும் பறந்து போவிட, அம்மா அப்பாவை மறந்து போய்விட, நமக்கு ஸ்வாமி ரெண்டு கைகள் கொடுத்தது எதுக்கு தெரியுமா?..............ஒருகையால் நம் அம்மா அப்பாவை அவர்களின் வயோதிகத்தில் அணைத்துக்கொள்ளவும், அதேநேரம் நாம் பெற்றெடுக்கும் குழந்தைகளை கை தூக்கிவிடவும் தான்"..என்று சொல்லணும்..............

'நீ செய்யும் ஏதொரு செயலும் என்னை பாதிக்கும்' என்று சொல்லணும்..............." நீ கேட்பதை எல்லாம் நான் எப்படி ஆசை ஆசையாக வாங்கித்தருகிறேன், அதற்கு பிரதியாக, ஒன்றே ஒன்று தான் எனக்கு வேண்டும் , என்னுடன் வந்து 100 பெண் வேண்டுமானாலும் பார்த்து வேண்டாம் என்று சொல், மோசமில்லை,, ஆனால் எனக்கு அந்த வாய்ப்பே தராமல் நீயாகவே முடிவேடுக்கதே உன் வாழ்க்கை விஷயத்தில் என்று சொல்லணும்"............

' அது பெற்றவர்களின் கனவு, பிள்ளைகள் அவர்களுக்குத்தரும் பெரும் அங்கீகாரம்' என்று புரியவைக்கணும்.................'பிறந்தபோது அதுக்கு பசிக்கும் என்று தெரிந்து பாலூடியவர்களுக்கு , குளிருக்கு போர்த்து விட்டவர்களுக்கு, 4 வயதில் பள்ளி இல் சேர்த்தவர்களுக்கு தெரியாதா தன குழந்தைக்கு பொருத்தமான துணை எப்போ வேண்டும் எப்படி வேண்டும் என்று?.................என் மேல் முழு நம்பிக்கி வை, நானும் உன் மேல் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கேன்' என்று விரிவாக பேசணும்................

'இந்த கஷ்டமான கால கட்டத்தை தாண்டித்தான் நானும் வந்திருக்கேன்' என்று புரியவைக்கணும்...............மீண்டும் சொல்கிறேன், காதலித்து மனம் புரிந்து கொண்டவர்களால் ஒரு எல்லைக்கு மேலே தன் குழந்தைகளை சொல்ல முடியாது, மேலே சொன்ன பீடி சிரரெட் போலத்தான் இதுவும்............சோகம்

கொஞ்சம் சொல்லலாம், தாங்கள் எவ்வளவு இழந்தோம் என்று...............என் வாழ்விலிருந்து நீங்கள் படிப்பு கட்றுக்கொளுங்கள் என்று சொல்லலாம், பசங்க கேட்டால் ................சூப்பர் ! புன்னகை ..............அதனால் தான் திரும்பத்திரும்ப சொல்கிறேன் நாம் ரொம்ப ஜாக்கிரதையாக handle பண்ணனும் என்று................

இந்த நேரத்தில், ( எப்பவுமே முக்கியம் தான் புன்னகை ) குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது என்பது ரொம்ப முக்கியம், இப்போ தாத்தா பாட்டி வீட்டில் இருந்தால் அந்த கவலை நமக்கு கொஞ்சம் குறையும்..........இல்லாவிட்டால் அவர்கள் role ம் நாமே எடுக்கவேண்டி வரும். நிறைய பேசணும், தினமும் பள்ளி இல் நடந்த விஷையங்களை அவர்கள் சொல்ல கேட்கணும்......பொறுமையாக ............

அவர்கள் முக்கியமாய் 'பொய்' சொல்லவேக் கூடாது................ கூடாது கூடாது கூடாது .....எல்லா தப்புகளுக்கும் ஆரம்பமே அது தான்......நம்மிடம் பயம் இருப்தால் தான் பொய்யே வருகிறது, அதனால் தான் நான் குழந்தைகளிடம் சகஜமாய் இருக்கணும் என்று சொல்கிறேன் ...............

பள்ளி இல் அல்லது அன்று நடந்ந்ததை நம்மிடம் பகிரும்போது, அவர்கள் தடுமாறினால் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம், உடனே என்னவென்று பார்க்கணும், கோபப்படக் கூடாது................இதுக்கெல்லாம் நேரம் செலவழிக்காமல் போனால் வேறு எதற்குத்தான் செலவழிப்பது?..............

கண்டிப்பாக privacy என்று சொல்லி, தனி அரை கொடுக்கவே கூடாது...............நம்முடன் லிவிங் ரூம் இல் தான் அவா இருக்கணும்..........நோ போன், நோ face புக்.................அதுக்கெல்லாம் வாழ்க்கை முழுவதும் இருக்கு, இந்த 8 - 9 வருடங்களை ஒரு யாகம் யக்ஞம் செய்வது போல கழிக்கணும் என்று சொல்லணும், நாமும் அவர்களுடன் சேர்ந்து அவர்களுக்கு தோள் கொடுக்கணும்.....................

விளையாடும் நேரத்தில் விளையாட்டு படிக்கும்நேரத்தில் படிப்பு என்பதில் குறியாக இருக்கனும், நேரம் கழித்து விட்டுக்கு வருவது போன்றவற்றை safety காரணங்களுக்காக, கூடியவரை தவிர்க்கணும்...............இது ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருவருக்குமே பொருந்தும்..............

மெயின் ஆக ஒன்று இரண்டுசொல்கிறேன்,

* எந்த வீட்டில் மனைவியை அந்த கணவன் மதிக்கிறாரோ, அந்த வீட்டில் குழந்தைகளும் தங்கள் அம்மாவை மதிக்கும்..............'ஒனக்கு ஒண்ணும் தெரியாது' குழந்தைகள் எதிரில் மட்டம் தட்டுகிற
ஆண்கள் இருக்கும் வீட்டில் குழந்தைகள் கெட்டுப்போக வாய்ப்புகள் அதிகம்...........இது கணவனை மட்டம் தட்டுகிற மனைவிகளுக்கும் பொருந்தும்.

* கூடுமானவரை அம்மா கண்டிப்புடனும் அப்பா செல்லமும் தரணும் புன்னகை............அதே போல , அப்பாக்கு பிடிக்காது இதை செய்யாதே என்று அம்மா சொன்னால், ஒ ..இவளுக்கு பிடிக்கும் , தன்னை இவள் அப்பாவிடமிருந்து காப்பாள் என்று குழந்தைகள் நினைத்துவிடும் ஆபத்து இருக்கு......எனவே, குழந்தைகள் செய்வது தப்பானால் கண்டிக்கலாமே தவிர கணவனிடமிருந்து மறக்கவே கூடாது.............

கண்டிப்பாக நீதி போதனைகள் குழந்தைகளுக்கு சொல்லித் தரணும், எல்லாத்துக்கும் ஆசிரியர்களையும் பள்ளிகளையுமே நம்பாமல், நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லித்தரணும் என்றே நினைக்கிறேன் புன்னகை......பிறகு இது பற்றி விரிவாக எழுதுகிறேன், இப்போவே நிறைய எழுதிவிட்டேன், கொஞ்சம் பிரேக் எடுக்கிறேன் சசி......பிறகு மீண்டும் தொடருகிறேன்................நான் சொல்ல வருவது எல்லாம் இது தான்,

நாம் வளர்க்கும்படிக்கு வளர்த்தால், நீங்கள் மேலே குறிப்பிட்ட சமூக அவலங்கள் நிச்சயம் மாறும்..............அவ்வை சொல்லலையா, " வரப்புயர" என்று................அது போலத்தான் இதுவும், நாம் மாம் குழந்தைகளை சரியாக வளர்த்தால், அதேபோல 10 -15 குடும்பகள் இருக்கும் குடி இருப்பு நல்லா இருக்கும், அதேபோல 10 -30 குடி இருப்புகளைக் கொண்ட தெரு நல்லா ஆகும்................இது தொடர்ந்து முன்னேறி நாடு நலம் பெரும்...............

இது ஒரு கூட்டு முயற்சி தான், அதுக்கு நாள் படும் தான் ஆனால் எங்காவது ஆரம்பிக்கணுமே, அது நாமாக இருக்கலாமே, ஊர்கூடித் தானே தேரை இழுத்தாகணும்?.................மனதில் வஞ்சகமும் துரோகமும் பேராசையும் தான் மனிதனை மிருகமாக்குகிறது.............. அதன் காரணமாகவும், ஆடம்பரமாக வாழவேண்டும் என்று சில பெண்கள் விரும்புவதாலும், மற்றும் ஏழ்மையாலும் தான் ......இது உங்களின் 8 வது கேள்விக்கான பதில் சசி புன்னகை

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed 3 Feb 2016 - 16:27

மிகவும் நன்றி அம்மா நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பதில் அளித்தற்கு.
எல்லாம் நமது குழந்தைகள் வளர்ப்பில் தான் இருக்கிறது அம்மா. நானும் இனியன் கிட்ட இப்படி தான் தான் சொல்வேன். சிவபெருமான் கோவிச்சுப்பார் என்பேன். சரி மா என்று புரிந்து கொள்வான். குழந்தைகள் வளர்ப்பில் நிச்சயம் அக்கறை ஒவ்வொரு பெற்றோரிடம் இருக்கவேண்டும். நல்ல சூழ்நிலையில் வளர ஏற்படுத்தி தரவேண்டும்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed 3 Feb 2016 - 17:58

அருமை அம்மா .........அனைத்தையும் அப்படியே மனதில் நிறுத்த முடியவில்லை அதனால் படியெடுத்து சேமித்து வைத்து கொண்டேன் . படித்து பின் அப்படியே விட்டுபோக மனமில்லை .அவசியமான பதிவாயிற்றே!!

மிகவும் நன்றி அம்மா ...

எங்கள் செல்லத்தை வளர்ப்பது பற்றிய சிறு ஆலோசனைக்காக தங்களை தனிமடலில் தொடர்புகொள்கிறேன் அம்மா .....



மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 3 Feb 2016 - 20:20

சசி wrote:மிகவும் நன்றி அம்மா நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பதில் அளித்தற்கு.
எல்லாம் நமது குழந்தைகள் வளர்ப்பில் தான் இருக்கிறது அம்மா. நானும் இனியன் கிட்ட இப்படி தான் தான் சொல்வேன். சிவபெருமான் கோவிச்சுப்பார் என்பேன். சரி மா என்று புரிந்து கொள்வான். குழந்தைகள் வளர்ப்பில் நிச்சயம் அக்கறை ஒவ்வொரு பெற்றோரிடம் இருக்கவேண்டும். நல்ல சூழ்நிலையில் வளர ஏற்படுத்தி தரவேண்டும்.

நல்லது சசி ஒன்றிரண்டு விட்டுப்போச்சு, அதை தனி பதிவாக போடுகிறேன் புன்னகை...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக