புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
Page 19 of 20 •
Page 19 of 20 • 1 ... 11 ... 18, 19, 20
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
அந்த காலத்து சூழ்நிலையில் அது நடை படுத்த முடிந்தது .
இப்போது முடியாது .
"காலத்தே உறங்கி அதிகாலை எழுதல் ".
ஒரு வேளை அரசு பணியாளர்களால் முடியுமோ என்னவோ .
ரமணியன்
இப்போது முடியாது .
"காலத்தே உறங்கி அதிகாலை எழுதல் ".
ஒரு வேளை அரசு பணியாளர்களால் முடியுமோ என்னவோ .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1199962T.N.Balasubramanian wrote:அந்த காலத்து சூழ்நிலையில் அது நடை படுத்த முடிந்தது .
இப்போது முடியாது .
"காலத்தே உறங்கி அதிகாலை எழுதல் ".
ஒரு வேளை அரசு பணியாளர்களால் முடியுமோ என்னவோ .
ரமணியன்
வாஸ்த்தவம் ஐயா, இப்போதெல்லாம் இரவு நெடுநேரம் விழித்திருப்பது என்கிற கலாசாரம் வந்திருக்கு
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சூப்பர் மாமியார் நீங்கள்...krishnaamma wrote:4.30 மணி முதல் 6.00 மணி வரையுள்ள காலத்தை உஷத் காலம், அருணோதய காலம் என்றெல்லாம் சொல்வர்.
இப்படி சொல்லி சொல்லி, எங்க அம்மா எங்களை எழுப்பி விடுவது வழக்கம்...........ஆனால் அந்த வழக்கம் அம்மா ஆத்தோடு போச்சு............கோடை விடுமுறை தினத்தில் கூட சூரியோதயத்துக்கு முன் எல்லோரும் குளித்து விடணும் என்பது எங்கள் அம்மா ஆத்தில் எழுதாத சட்டம்...............
ஆனால் கல்யாணம் ஆகி வந்து ஒரு நாள் கூட அப்படி எழுந்தது இல்லை........... ....பாட்டியே 5.30க்குத் தான் எழுந்திருப்பார்கள்..........நாங்க அப்புறம் தான்.........அதே போலத்தான் இப்போ ஆர்த்தி கிருஷ்ணாவையும் நான் எழுப்பவே மாட்டேன்..........குழந்தைகள் கொஞ்சநாள் தூங்கட்டுமே என்று விட்டுடுவேன்
பாவம், இத்தனைநாள் பரீட்சை அது இது என்று கால நேரம் இல்லாமல் எழுந்து படித்தார்களே அதனால் இப்போ அனுபவிக்கட்டும் என்று விட்டுவிடுவேன் ; )
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நினைத்தாலே இனிக்கும்! (24)
அழிப்பதற்காக ருத்ர மூர்த்தி தோன்றினார். அவர் ஆண்பாதி, பெண்பாதியாக அர்த்தநாரீஸ்வராக இருந்தார். அவரின் ஆண்பாகம் 11 வடிவாகப் பிரிந்தது. அவர்கள் "ஏகாதச ருத்ரர்கள்' என்று பெயர் பெற்றனர்.
இவ்வாறாக வாசுதேவன், பிரம்மா, ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளும் தாத்தா, பிள்ளை, பேரன் என்னும் விதத்தில் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலையும்
மேற்கொண்டனர்.
பூமியில் இருந்து விஞ்ஞானி வெவ்வேறு கிரகங்களுக்கு செயற்கை கோளை விண்ணில் ஏவுகிறார்கள். பூமியில் மைய ஈர்ப்பு விசை கீழ் நோக்கி இழுப்பதால், அதை எதிர்த்துக் கொண்டு மேலே செல்ல வேண்டியிருப்பதால், செயற்கைக்கோள் முன்னோக்கிச் செல்ல உந்துசக்தி அதிகம் தேவைப்படும்.
இதைப் போலவே, பாவம் புண்ணியத்தை ஏற்படுத்தும் பிறவிச்சுழலில் இருந்து உயிர்கள் அவ்வளவு எளிதில் விடுபட முடியாது. அதற்கு வைராக்கியம் தேவை. அதற்கு பெருமாளின் பரம கருணை இல்லாவிட்டால் ஒருக்காலும் முடியாது. அப்போது தான் ஒரு ஜீவன், பிறவி என்பதே இல்லாத முக்தி இன்பத்தை அடைய முடியும்.
108 திவ்ய தேசங்களில் கோயில், திருமலை, பெருமாள் கோயில் என்று குறிப்பிடப்படும் தலங்கள் ஸ்ரீரங்கநாதர் கோயில், திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயில்கள். இங்கு அடியவர்கள் வாழ்வில் நடந்ததைப் பார்ப்போம்.
திருப்பதியில் வாழ்ந்தவர் குரும்பறுத்த நம்பி. இவர் குயவர் குலத்தைச் சேர்ந்தவர். தினமும் மண்பாண்டங்களைச் செய்து விட்டு, மீதி மண்ணில் அழகான மலர்களைச் செய்து சீனிவாசப் பெருமாளுக்கு அர்ப்பணித்து வந்தார். அதே சீனிவாசருக்கு தொண்டைமான் சக்கரவர்த்தி பொன் மலர்களால் பூஜை செய்து வந்தார்.
ஆனால், நம்பியின் மண்மலர்களை பெருமாள் உவப்புடன் ஏற்றுக் கொண்டார். இதை அறிந்து வருந்திய மன்னரை, நம்பியிடம் நேரில் சென்று வரும் படி ஸ்ரீநிவாசப்பெருமாளே கட்டளை இட்டார். அதன்படி அங்கு செல்ல, நம்பியின் மேலான பக்தியுணர்வை நேரில் கண்டு மன்னர் தன்னையும் அறியாமல் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து வணங்கினார்.
ஸ்ரீரங்கம் லோகசாரங்கர் என்னும் அந்தணர் ஒருமுறை காவிரியில் தீர்த்தம் எடுக்கச் சென்றார், வழிமறித்து நின்ற பாணனைக் கல்லால் அடித்து விட்டு வந்தார். இதனால், கோபம் கொண்ட ரங்கநாதர் சந்நிதிக் கதவைத் திறக்க முடியாமல் செய்ததோடு, தன் பக்தனான பாணரை பணிவுடன் தோளில் சுமந்தே கோயிலுக்கு வருமாறு கட்டளையிட்டார். பாணரும் அவ்வாறே வந்து, நம்பெருமாளைத் தரிசித்து திருமாலைப் பாசுரங்களைப் பாடி மகிந்தார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு ஆலவட்டம் என்னும் விசிறிவீசும் பாக்கியம் பெற்றவர் திருக்கச்சிநம்பி. தாழ்குலத்தில் அவதரித்த இவர் உண்ட மிச்சத்தை உயர்குலத்தில் பிறந்த ராமானுஜர் மிகவும் விரும்பினார்.
ஜாதியைப் பொறுத்து யாரும் உயர்வு, தாழ்வு பாராட்டக் கூடாது. கடவுள் பக்தி கொண்டவன் உயர்ந்தவன். பக்தி அற்றவன் தாழ்ந்தவன் என்பது தான் வைணவத்தின் அடிப்படை.
மகாபாரதத்தில் வரும் விதுரர் தாழ்குலத்தில் பிறந்தாலும் அவரை வியாசர் போற்றி வணங்குகிறார். வேடனாக இருந்தாலும் குகனை ராமபிரான் தம்பியாக ஏற்றுக் கொண்டு அவன் அளித்த உணவை ஏற்றதையும், பக்தியுடன் தான் சுவைத்த பழங்களைக் கொடுத்த சபரியின் தூய அன்பை ராமன் ஏற்றதையும் ராமாயணத்தின் மூலம் அறிகிறோம்.
"ஒரு மனிதன் இழிந்த சண்டாள குலத்தில் பிறந்தவன் என்றாலும், வலக்கையில் சக்ராயுதம் தாங்கி நிற்கும் திருமாலின் அடியவர்' என்று
ஒருமுறை சொல்லி விட்டால் போதும்! "அவரே என் தலைவனுக்குத் தலைவனுக்குத் தலைவன்' என்கிறார் ஞானமே வடிவான நம்மாழ்வார்.
இப்படியாக, செய்யும் தொழிலைப் பொறுத்து நால்வகை வர்ணமாக மக்கள் வகுக்கப்பட்டதை பராசர மகரிஷி விஷ்ணு புராணத்தில் விளக்குகிறார். மனிதர்கள் யாகம், ஹோமங்களைச் செய்து "ஹவிஸ்' உணவை தேவர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும். அதற்குப் பயனாக தேவர்கள் இயற்கையைப் பாதுகாத்து உதவி செய்ய வேண்டும் என்ற நியதி உண்டாக்கப்பட்டது.
ஆனால், இது போன்ற விஷயங்கள் கலியுகத்தில் கேலிக்குரியதாகி விட்டன. அதனால் தான் நீர்வளம், நிலவளம் குறைந்து மனித சமூகம் துன்பத்திற்குள்ளாகத் தொடங்கியுள்ளது.
இவ்வாறாக வாசுதேவன், பிரம்மா, ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளும் தாத்தா, பிள்ளை, பேரன் என்னும் விதத்தில் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலையும்
மேற்கொண்டனர்.
பூமியில் இருந்து விஞ்ஞானி வெவ்வேறு கிரகங்களுக்கு செயற்கை கோளை விண்ணில் ஏவுகிறார்கள். பூமியில் மைய ஈர்ப்பு விசை கீழ் நோக்கி இழுப்பதால், அதை எதிர்த்துக் கொண்டு மேலே செல்ல வேண்டியிருப்பதால், செயற்கைக்கோள் முன்னோக்கிச் செல்ல உந்துசக்தி அதிகம் தேவைப்படும்.
இதைப் போலவே, பாவம் புண்ணியத்தை ஏற்படுத்தும் பிறவிச்சுழலில் இருந்து உயிர்கள் அவ்வளவு எளிதில் விடுபட முடியாது. அதற்கு வைராக்கியம் தேவை. அதற்கு பெருமாளின் பரம கருணை இல்லாவிட்டால் ஒருக்காலும் முடியாது. அப்போது தான் ஒரு ஜீவன், பிறவி என்பதே இல்லாத முக்தி இன்பத்தை அடைய முடியும்.
108 திவ்ய தேசங்களில் கோயில், திருமலை, பெருமாள் கோயில் என்று குறிப்பிடப்படும் தலங்கள் ஸ்ரீரங்கநாதர் கோயில், திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயில்கள். இங்கு அடியவர்கள் வாழ்வில் நடந்ததைப் பார்ப்போம்.
திருப்பதியில் வாழ்ந்தவர் குரும்பறுத்த நம்பி. இவர் குயவர் குலத்தைச் சேர்ந்தவர். தினமும் மண்பாண்டங்களைச் செய்து விட்டு, மீதி மண்ணில் அழகான மலர்களைச் செய்து சீனிவாசப் பெருமாளுக்கு அர்ப்பணித்து வந்தார். அதே சீனிவாசருக்கு தொண்டைமான் சக்கரவர்த்தி பொன் மலர்களால் பூஜை செய்து வந்தார்.
ஆனால், நம்பியின் மண்மலர்களை பெருமாள் உவப்புடன் ஏற்றுக் கொண்டார். இதை அறிந்து வருந்திய மன்னரை, நம்பியிடம் நேரில் சென்று வரும் படி ஸ்ரீநிவாசப்பெருமாளே கட்டளை இட்டார். அதன்படி அங்கு செல்ல, நம்பியின் மேலான பக்தியுணர்வை நேரில் கண்டு மன்னர் தன்னையும் அறியாமல் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து வணங்கினார்.
ஸ்ரீரங்கம் லோகசாரங்கர் என்னும் அந்தணர் ஒருமுறை காவிரியில் தீர்த்தம் எடுக்கச் சென்றார், வழிமறித்து நின்ற பாணனைக் கல்லால் அடித்து விட்டு வந்தார். இதனால், கோபம் கொண்ட ரங்கநாதர் சந்நிதிக் கதவைத் திறக்க முடியாமல் செய்ததோடு, தன் பக்தனான பாணரை பணிவுடன் தோளில் சுமந்தே கோயிலுக்கு வருமாறு கட்டளையிட்டார். பாணரும் அவ்வாறே வந்து, நம்பெருமாளைத் தரிசித்து திருமாலைப் பாசுரங்களைப் பாடி மகிந்தார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு ஆலவட்டம் என்னும் விசிறிவீசும் பாக்கியம் பெற்றவர் திருக்கச்சிநம்பி. தாழ்குலத்தில் அவதரித்த இவர் உண்ட மிச்சத்தை உயர்குலத்தில் பிறந்த ராமானுஜர் மிகவும் விரும்பினார்.
ஜாதியைப் பொறுத்து யாரும் உயர்வு, தாழ்வு பாராட்டக் கூடாது. கடவுள் பக்தி கொண்டவன் உயர்ந்தவன். பக்தி அற்றவன் தாழ்ந்தவன் என்பது தான் வைணவத்தின் அடிப்படை.
மகாபாரதத்தில் வரும் விதுரர் தாழ்குலத்தில் பிறந்தாலும் அவரை வியாசர் போற்றி வணங்குகிறார். வேடனாக இருந்தாலும் குகனை ராமபிரான் தம்பியாக ஏற்றுக் கொண்டு அவன் அளித்த உணவை ஏற்றதையும், பக்தியுடன் தான் சுவைத்த பழங்களைக் கொடுத்த சபரியின் தூய அன்பை ராமன் ஏற்றதையும் ராமாயணத்தின் மூலம் அறிகிறோம்.
"ஒரு மனிதன் இழிந்த சண்டாள குலத்தில் பிறந்தவன் என்றாலும், வலக்கையில் சக்ராயுதம் தாங்கி நிற்கும் திருமாலின் அடியவர்' என்று
ஒருமுறை சொல்லி விட்டால் போதும்! "அவரே என் தலைவனுக்குத் தலைவனுக்குத் தலைவன்' என்கிறார் ஞானமே வடிவான நம்மாழ்வார்.
இப்படியாக, செய்யும் தொழிலைப் பொறுத்து நால்வகை வர்ணமாக மக்கள் வகுக்கப்பட்டதை பராசர மகரிஷி விஷ்ணு புராணத்தில் விளக்குகிறார். மனிதர்கள் யாகம், ஹோமங்களைச் செய்து "ஹவிஸ்' உணவை தேவர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும். அதற்குப் பயனாக தேவர்கள் இயற்கையைப் பாதுகாத்து உதவி செய்ய வேண்டும் என்ற நியதி உண்டாக்கப்பட்டது.
ஆனால், இது போன்ற விஷயங்கள் கலியுகத்தில் கேலிக்குரியதாகி விட்டன. அதனால் தான் நீர்வளம், நிலவளம் குறைந்து மனித சமூகம் துன்பத்திற்குள்ளாகத் தொடங்கியுள்ளது.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கிருத, திரேதா, துவாபர யுகங்களில் அந்தணர்கள் வேதநெறி தவறாமல் வாழ்வு நடத்தினர். அவர்களின் தேவையும் மிக குறைவாகவே இருந்தது.
தற்போது அந்தணர்கள் தங்களின் தேவையை அதிகமாக்கிக் கொண்டனர். அதனால், மற்ற வர்ணத்தாரும் அவர்களுக்கு உதவ முடியாத சூழல் ஏற்பட்டது. அந்த யுகங்களில் இருந்த மனநிறைவு, நிம்மதி எல்லாம் இப்போது நம்மிடம் இல்லாமல் போனது.
பிராமணர்கள் தங்களுக்குரிய பிரம்மச்சர்ய விரதத்தை தவறாமல் அனுஷ்டித்து வேத நெறியில் வாழ்ந்தால், இறுதியில் பிதுர்லோகத்தைச் சென்றடைவர்.
படைவீரர்கள் போரில் புறமுதுகிட்டு ஓடாமல் வீரமுடன் வாழ்ந்தால், இந்திர லோகத்தில் வாழும் பாக்கியம் பெறுவர்.
வியாபாரிகள் நேர்மையுடன் வியாபாரம் செய்தால் வாயுலோகத்தில் வாழும் பேறு பெறுவர்.
சூத்திரர்கள் தங்களுக்குரிய தர்மத்தைச் சரிவர செய்தால் கந்தர்வ உலகை அடைவர்.
பிரம்மச்சாரி என்பதற்கு "பிரம்மம் என்னும் பரம்பொருளைத் தேடுபவன்' என்பது பொருள். சாதாரணமாக திருமணத்திற்கு முன்புள்ள வயதை பிரம்மச்சர்யம் என்று சொல்வர். இதில் நியமம் அதிகமாகவே இருக்கும். சாப்பாட்டு விஷயத்தில் ஆர்வம் கூடாது. ஒரு ஆடைக்கும் மேல் இன்னொரு ஆடை வைத்துக் கொள்ளத் தேவையில்லை.
ஞானத்தைத் தேடுவதில் ஆர்வம் இருக்கவேண்டும். குருகுல வாசமாக 12 ஆண்டுகள் தங்கி படிக்க வேண்டும்.
பிரமாணனை, சாஸ்திரம் "துவிஜன்' என்று குறிப்பிடும். "இருபிறப்பாளன்' என்பது பொருள். தாய்வயிற்றில் பிறந்தது ஒருபிறவி. குருவிடம் உபதேசம் பெற்று ஞானஜென்மம் என்னும் அறிவுப்பிறவி எடுப்பது இரண்டாவது பிறவி.
சமஸ்கிருத்தில் பல்லுக்கும் இப்பெயர் உண்டு. ஏனென்றால் பால் பல்லாக முளைத்துபின், விழுந்து விட்டு மீண்டும் முளைப்பதால். பிரம்மச்சாரியாக இருக்கும் போது முப்புரியாக பூணூல் இருக்கும். அதுவே கிரகஸ்தம் என்னும் திருமணத்தில் ஆறு புரியாகி விடும்.
பிரம்மச்சர்யத்தில் கீழாடை மட்டுமே இருந்தால் போதும். ஆனால், இல்லறத்தில் மேலாடை இல்லாமல் ஒருபோதும் இருப்பது கூடாது என்கிறது சாஸ்திரம்.
குருவையும், குருபத்தினியையும் தெய்வமாக மதிக்க வேண்டும். எந்த சுகத்தையும் பிரம்மச்சாரி எதிர்பார்க்கக் கூடாது. சக்கரவர்த்தி திருமகனான ராமன் கூட குருகுலவாசத்தில் தரையில் படுத்து தூங்கியதாக ராமாயணம் கூறுகிறது. இதிலிருந்து அறிவுத்தேடலைத் தவிர வேறெந்த சிந்தனைக்கும் குருகுலத்தில் இடமில்லை என்பது தெளிவாகிறது.
தற்போது அந்தணர்கள் தங்களின் தேவையை அதிகமாக்கிக் கொண்டனர். அதனால், மற்ற வர்ணத்தாரும் அவர்களுக்கு உதவ முடியாத சூழல் ஏற்பட்டது. அந்த யுகங்களில் இருந்த மனநிறைவு, நிம்மதி எல்லாம் இப்போது நம்மிடம் இல்லாமல் போனது.
பிராமணர்கள் தங்களுக்குரிய பிரம்மச்சர்ய விரதத்தை தவறாமல் அனுஷ்டித்து வேத நெறியில் வாழ்ந்தால், இறுதியில் பிதுர்லோகத்தைச் சென்றடைவர்.
படைவீரர்கள் போரில் புறமுதுகிட்டு ஓடாமல் வீரமுடன் வாழ்ந்தால், இந்திர லோகத்தில் வாழும் பாக்கியம் பெறுவர்.
வியாபாரிகள் நேர்மையுடன் வியாபாரம் செய்தால் வாயுலோகத்தில் வாழும் பேறு பெறுவர்.
சூத்திரர்கள் தங்களுக்குரிய தர்மத்தைச் சரிவர செய்தால் கந்தர்வ உலகை அடைவர்.
பிரம்மச்சாரி என்பதற்கு "பிரம்மம் என்னும் பரம்பொருளைத் தேடுபவன்' என்பது பொருள். சாதாரணமாக திருமணத்திற்கு முன்புள்ள வயதை பிரம்மச்சர்யம் என்று சொல்வர். இதில் நியமம் அதிகமாகவே இருக்கும். சாப்பாட்டு விஷயத்தில் ஆர்வம் கூடாது. ஒரு ஆடைக்கும் மேல் இன்னொரு ஆடை வைத்துக் கொள்ளத் தேவையில்லை.
ஞானத்தைத் தேடுவதில் ஆர்வம் இருக்கவேண்டும். குருகுல வாசமாக 12 ஆண்டுகள் தங்கி படிக்க வேண்டும்.
பிரமாணனை, சாஸ்திரம் "துவிஜன்' என்று குறிப்பிடும். "இருபிறப்பாளன்' என்பது பொருள். தாய்வயிற்றில் பிறந்தது ஒருபிறவி. குருவிடம் உபதேசம் பெற்று ஞானஜென்மம் என்னும் அறிவுப்பிறவி எடுப்பது இரண்டாவது பிறவி.
சமஸ்கிருத்தில் பல்லுக்கும் இப்பெயர் உண்டு. ஏனென்றால் பால் பல்லாக முளைத்துபின், விழுந்து விட்டு மீண்டும் முளைப்பதால். பிரம்மச்சாரியாக இருக்கும் போது முப்புரியாக பூணூல் இருக்கும். அதுவே கிரகஸ்தம் என்னும் திருமணத்தில் ஆறு புரியாகி விடும்.
பிரம்மச்சர்யத்தில் கீழாடை மட்டுமே இருந்தால் போதும். ஆனால், இல்லறத்தில் மேலாடை இல்லாமல் ஒருபோதும் இருப்பது கூடாது என்கிறது சாஸ்திரம்.
குருவையும், குருபத்தினியையும் தெய்வமாக மதிக்க வேண்டும். எந்த சுகத்தையும் பிரம்மச்சாரி எதிர்பார்க்கக் கூடாது. சக்கரவர்த்தி திருமகனான ராமன் கூட குருகுலவாசத்தில் தரையில் படுத்து தூங்கியதாக ராமாயணம் கூறுகிறது. இதிலிருந்து அறிவுத்தேடலைத் தவிர வேறெந்த சிந்தனைக்கும் குருகுலத்தில் இடமில்லை என்பது தெளிவாகிறது.
இன்னும் இனிக்கும்.......
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
பிரமாணனை, சாஸ்திரம் "துவிஜன்' என்று குறிப்பிடும். "இருபிறப்பாளன்' என்பது பொருள். தாய்வயிற்றில் பிறந்தது ஒருபிறவி. குருவிடம் உபதேசம் பெற்று ஞானஜென்மம் என்னும் அறிவுப்பிறவி எடுப்பது இரண்டாவது பிறவி.
நான் அறிந்தவரையில் தாய் வயிற்றில் பிறந்தது ஒரு பிறவி .
அடுத்தது தந்தை மூலம் பிரம்மோபதேசம் நடைபெறுகையில் .
ஒரு வேளை ,தந்தை இங்கே குருஸ்தானத்தில் இருப்பதாக இருக்கலாம் .
நன்றி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1200121விமந்தனி wrote:சூப்பர் மாமியார் நீங்கள்...krishnaamma wrote:4.30 மணி முதல் 6.00 மணி வரையுள்ள காலத்தை உஷத் காலம், அருணோதய காலம் என்றெல்லாம் சொல்வர்.
இப்படி சொல்லி சொல்லி, எங்க அம்மா எங்களை எழுப்பி விடுவது வழக்கம்...........ஆனால் அந்த வழக்கம் அம்மா ஆத்தோடு போச்சு............கோடை விடுமுறை தினத்தில் கூட சூரியோதயத்துக்கு முன் எல்லோரும் குளித்து விடணும் என்பது எங்கள் அம்மா ஆத்தில் எழுதாத சட்டம்...............
ஆனால் கல்யாணம் ஆகி வந்து ஒரு நாள் கூட அப்படி எழுந்தது இல்லை........... ....பாட்டியே 5.30க்குத் தான் எழுந்திருப்பார்கள்..........நாங்க அப்புறம் தான்.........அதே போலத்தான் இப்போ ஆர்த்தி கிருஷ்ணாவையும் நான் எழுப்பவே மாட்டேன்..........குழந்தைகள் கொஞ்சநாள் தூங்கட்டுமே என்று விட்டுடுவேன்
பாவம், இத்தனைநாள் பரீட்சை அது இது என்று கால நேரம் இல்லாமல் எழுந்து படித்தார்களே அதனால் இப்போ அனுபவிக்கட்டும் என்று விட்டுவிடுவேன் ; )
ம்ம்.. எங்காத்திலும் இப்படித்தான் சொல்வார்கள் ......நன்றி விமந்தனி !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இன்றைய பதிவுகளை நாளை வந்து படிக்கிறேன் விமந்தனி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நினைத்தாலே இனிக்கும்! (25)
அந்த காலத்தில் பிரம்மச்சாரிகள் குருகுலவாசமாக 12 ஆண்டுகள் கல்வி கற்பது வழக்கம். இப்படி படிக்கும் காலத்தில் அறிவு பெறுவதை தவிர சாப்பாடு, ஆடை, ஆபரணம் போன்ற உலகியல் விஷயங்களில் எந்த நாட்டமும் கொள்ளக் கூடாது.
குருவையும், குருபத்தினியையும் தெய்வமாகக் கருத வேண்டும். குருபத்தினியே தாய் போல இருந்து சீடர்களுக்கெல்லாம் நித்யபடியாக சோறிடுவாள். இப்படி சாப்பிட்ட சீடனைப் பற்றிய வேடிக்கை கதை ஒன்று சொல்வார்கள்.
ஒரு குருகுலத்தில் ஒரு சீடன் தினமும் குருபத்தினி இடும் உணவை சாப்பிட்டு வந்தான். அவனுக்கு ஒருநாள் அவள் சாதமும், குழம்பும் விட்டு அதில் நெய் விடுவதற்குப் பதிலாக எண்ணெய்யை ஊற்றி விட்டாள். உடனே சீடன், ""அம்மா! என்ன நெய் ஊற்றினால் அல்லவா
சாப்பிட முடியும்? நீங்கள் எண்ணெய்யை சாதத்தில் விடுகிறீர்களே'' என்றான்.
அவள் குருவிடம் போய் ""இந்த பிள்ளை குருகுலத்திற்கு வந்து 12 வருஷம் ஆகி விட்டது. இனி இவனை அனுப்பி விடுவது தான் சரி'' என்றாள். விஷயமறிந்த சீடனும்,""ஏன் என்னை அனுப்பச் சொல்கிறீர்கள்?'' என்று கேட்டான்.
அதற்கு குருபத்தினி, ""நீ வந்த நாளில் இருந்து 12 வருஷமாகவே எண்ணெய் தான் ஊற்றி வந்தேன். பாடத்தில் கவனம் இருந்ததால்,
நீ சாப்பிடுவது இன்னதென்றே தெரியாமல் சாப்பிட்டு வந்தாய். இப்போதோ, உலகியல் விஷயத்தில் நாட்டம் வந்து விட்டது. உன்னை அனுப்புவது தான் சரி,'' என்றாள். இப்படி, குருவை விட குருபத்தினிகளும் சீடர்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்தார்கள் என்பதற்காக இதைச் சொல்வார்கள்.
இப்படி பிரம்மச்சாரியாக இருக்கும் போது, சாப்பாட்டில் ஆசை வைக்க கூடாது.
அதற்காக, திருமணம் ஆன பிறகு விருப்பமானதை சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று எண்ணக் கூடாது. அப்போது கிரகஸ்தனுக்கு உரிய இல்லற தர்மத்தில் தான் கவனம் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
குடும்பம், குழந்தை என்று வாழ்ந்து முடிந்து வயோதிகம் வரும் போதாவது சாப்பிடலாமா என்று கேட்டால், அப்போது சாப்பாடு மட்டுமில்லாமல் எந்த விதத்திலும் ஆசை இருக்கக் கூடாது என்கிறது வேதம்.
ஆக, பிறந்தது முதல் மனிதனுக்கு சாப்பாட்டின் மேல் ஆசை கூடாது என்பது தான் விதி. உயிர் வாழ்வதற்காக தான் உணவே ஒழிய, உணவு உண்பதற்காக உயிர் வாழ்வது கூடாது.
ஒருநாளில் உச்சிப்பொழுதான 12 மணிக்கு பெருமாளுக்கு திருவாராதனம்(வழிபாடு) முடித்து விட்டு, ஒருவேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். மீண்டும் மறுநாள் மதியவேளையில் தான் சாப்பாடு. இப்படி தான் அந்தக் காலத்தில், வைதீக தர்மத்தில் நம்மவர்கள் வாழ்ந்து வந்தார்கள்.
இப்படி ஒருவேளை சாப்பிடுபவனை யோகி என்கிறது வேதம்.
பசி தாங்க முடியாதவர்கள் இருவேளை உணவு சாப்பிட்டார்கள். அதாவது 12 மணிநேரம் பட்டினி கிடந்தார்கள். அவர்களுக்கு "போகி' என்று பெயர்.
இரண்டு வேளை சாப்பிட்டாலும் போதவில்லை என்று மூன்று வேளை சாப்பிட்டும் வந்தார்கள். அவர்களை "ரோகி' என்கிறது வேதம். பசி என்னும் நோயால் பீடித்திருப்பதால் இவர்களுக்கு "ரோகி' என்று பெயர்.
இப்போதெல்லாம் வயிற்றில் அமிலம் சுரக்கிறது. அதிக நேரம் பட்டினி போடுவது ஆகாது என்றெல்லாம் சொல்கிறார்கள். அறிவியலாளர்கள் 4மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிடலாம் என்று கூடச் சொல்கிறார்கள். அப்படி சாப்பிடுபவர்களுக்கு வேதத்தில் பெயர் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
குருவையும், குருபத்தினியையும் தெய்வமாகக் கருத வேண்டும். குருபத்தினியே தாய் போல இருந்து சீடர்களுக்கெல்லாம் நித்யபடியாக சோறிடுவாள். இப்படி சாப்பிட்ட சீடனைப் பற்றிய வேடிக்கை கதை ஒன்று சொல்வார்கள்.
ஒரு குருகுலத்தில் ஒரு சீடன் தினமும் குருபத்தினி இடும் உணவை சாப்பிட்டு வந்தான். அவனுக்கு ஒருநாள் அவள் சாதமும், குழம்பும் விட்டு அதில் நெய் விடுவதற்குப் பதிலாக எண்ணெய்யை ஊற்றி விட்டாள். உடனே சீடன், ""அம்மா! என்ன நெய் ஊற்றினால் அல்லவா
சாப்பிட முடியும்? நீங்கள் எண்ணெய்யை சாதத்தில் விடுகிறீர்களே'' என்றான்.
அவள் குருவிடம் போய் ""இந்த பிள்ளை குருகுலத்திற்கு வந்து 12 வருஷம் ஆகி விட்டது. இனி இவனை அனுப்பி விடுவது தான் சரி'' என்றாள். விஷயமறிந்த சீடனும்,""ஏன் என்னை அனுப்பச் சொல்கிறீர்கள்?'' என்று கேட்டான்.
அதற்கு குருபத்தினி, ""நீ வந்த நாளில் இருந்து 12 வருஷமாகவே எண்ணெய் தான் ஊற்றி வந்தேன். பாடத்தில் கவனம் இருந்ததால்,
நீ சாப்பிடுவது இன்னதென்றே தெரியாமல் சாப்பிட்டு வந்தாய். இப்போதோ, உலகியல் விஷயத்தில் நாட்டம் வந்து விட்டது. உன்னை அனுப்புவது தான் சரி,'' என்றாள். இப்படி, குருவை விட குருபத்தினிகளும் சீடர்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்தார்கள் என்பதற்காக இதைச் சொல்வார்கள்.
இப்படி பிரம்மச்சாரியாக இருக்கும் போது, சாப்பாட்டில் ஆசை வைக்க கூடாது.
அதற்காக, திருமணம் ஆன பிறகு விருப்பமானதை சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று எண்ணக் கூடாது. அப்போது கிரகஸ்தனுக்கு உரிய இல்லற தர்மத்தில் தான் கவனம் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
குடும்பம், குழந்தை என்று வாழ்ந்து முடிந்து வயோதிகம் வரும் போதாவது சாப்பிடலாமா என்று கேட்டால், அப்போது சாப்பாடு மட்டுமில்லாமல் எந்த விதத்திலும் ஆசை இருக்கக் கூடாது என்கிறது வேதம்.
ஆக, பிறந்தது முதல் மனிதனுக்கு சாப்பாட்டின் மேல் ஆசை கூடாது என்பது தான் விதி. உயிர் வாழ்வதற்காக தான் உணவே ஒழிய, உணவு உண்பதற்காக உயிர் வாழ்வது கூடாது.
ஒருநாளில் உச்சிப்பொழுதான 12 மணிக்கு பெருமாளுக்கு திருவாராதனம்(வழிபாடு) முடித்து விட்டு, ஒருவேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். மீண்டும் மறுநாள் மதியவேளையில் தான் சாப்பாடு. இப்படி தான் அந்தக் காலத்தில், வைதீக தர்மத்தில் நம்மவர்கள் வாழ்ந்து வந்தார்கள்.
இப்படி ஒருவேளை சாப்பிடுபவனை யோகி என்கிறது வேதம்.
பசி தாங்க முடியாதவர்கள் இருவேளை உணவு சாப்பிட்டார்கள். அதாவது 12 மணிநேரம் பட்டினி கிடந்தார்கள். அவர்களுக்கு "போகி' என்று பெயர்.
இரண்டு வேளை சாப்பிட்டாலும் போதவில்லை என்று மூன்று வேளை சாப்பிட்டும் வந்தார்கள். அவர்களை "ரோகி' என்கிறது வேதம். பசி என்னும் நோயால் பீடித்திருப்பதால் இவர்களுக்கு "ரோகி' என்று பெயர்.
இப்போதெல்லாம் வயிற்றில் அமிலம் சுரக்கிறது. அதிக நேரம் பட்டினி போடுவது ஆகாது என்றெல்லாம் சொல்கிறார்கள். அறிவியலாளர்கள் 4மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிடலாம் என்று கூடச் சொல்கிறார்கள். அப்படி சாப்பிடுபவர்களுக்கு வேதத்தில் பெயர் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பிரம்மச்சாரி எந்த வித போகப்பொருளையும் பயன்படுத்தக் கூடாது. சந்தனம் பூசுவது, பூமாலை அணிவது, வெற்றிலை இடுவது கூடாது என்கிறது சாஸ்திரம்.
இப்படி தான் ஒரு சீடன் தாம்பூலம் தரிக்க ஆசை கொண்டு சாப்பிட்டு விட்டான். இதைக் கண்டவர், "பிரம்மச்சாரியான நீ வெற்றிலை போடலாமா?'' என்றார்.
""பிரம்மச்சாரியாக இருப்பவன் கல்யாணமே செய்து கொள்ளும்போது, வெற்றிலை போடுவதில் என்ன தவறு?'' என்று பதில் கேள்வி கேட்டான். இப்படி விவாதம் செய்வது கூடாது.
சாஸ்திரம் கூறிய நியதிகளை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஞானவேட்கையோடு உலகியல் இன்பத்தில் நாட்டம் வைக்காமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்தால் 88,000 யாகம் செய்த புண்ணிய பலனை ஒரு மனிதன் அடைகிறான்.
ஒரு பெண்ணை மணந்து கொண்டு வாழ்வது கிரகஸ்தம் என்னும் குடும்பவாழ்க்கை.
அதன் பின் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாக விட்டால் அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, காட்டுக்குச் சென்று வாழ்வது வானப்பிரஸ்தம்.
சுகபோகங்களை அனுபவிக்கும் ராஜாக்கள் கூட ராஜ்ய பரிபாலனத்தை பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டு காட்டிற்குச் சென்று வாழ்ந்தனர்.
சுகம், துக்கம் இரண்டையும் மனிதன் ஒன்றாகவே கருத வேண்டும் என்பதற்காகவே இப்படி எல்லாம் சாஸ்திரம் நிர்ணயித்திருக்கிறது. பின், ஆசை என்பதையே அறவே விடுத்து சந்நியாசியாக வாழ்வது இறுதி நிலை.
பிரம்மச்சர்யம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்னும் நால்வகை ஆஸ்ரமங்களிலும் அந்தந்த தர்மத்திற்குரியவற்றைப் பின்பற்றி வாழ்ந்தவர்கள் இறுதியில் பிரம்மலோகத்தை அடையும் பாக்கியம் பெறுகின்றனர்.
நமக்குரிய கடமைகள் என்னென்ன என்பதை சாஸ்திரம் தெளிவாக வரையறை செய்திருக்கிறது. இது எதுவும் எனக்கு தெரியாது என்று நாம் சொல்லக் கூடாது. அதை தெரிந்து கொள்ள நாம் முயல்வதில்லை. ஆனால், தெரிந்து கொள்ளவில்லை என்பதற்காக ஒருவருக்கு விதிவிலக்கு அளிக்க முடியாது.
கொள்ளைக்காரன் ஒருவனுக்கு சட்டஅறிவு என்பது துளியும் இல்லை. "திருடுவது குற்றம் என்பதே எனக்கு தெரியாது' என்று அவன் நீதிமன்றத்தில் வாதிட்டான். இதை நீதிமன்றம் ஏற்குமா என்றால் நிச்சயம் ஏற்காது. அதனால், பொதுவான விஷயங்கள் தெரியாவிட்டாலும், அந்த விஷயமே இல்லை என்று ஆகிவிடாது.
நால்வகை வர்ணம், ஆஸ்ரமம் என விளக்கிய விஷ்ணு புராணத்தில் தொடர்ந்து, படைப்புக் கடவுளாகிய பிரம்மா ருத்திரராகிய பரமசிவனாரைப் படைத்து அவருக்கு பார்வதியோடு திருமணம் நடந்ததை பராசரர் விவரிக்கிறார்.
அதன் பின் பாற்கடலில் பிறந்த திருமகளின் வரலாற்றை விளக்குகிறார். பிருகு முனிவரின் மகளாக வளர்ந்ததால் திருமகளுக்கு பார்கவி என்று பெயர். அவளே திருமாலைத் திருமணம் செய்து கொண்டாள். திருமால், மகாலட்சுமி போன்றவர்கள் என்றென்றும் நித்யமானவர்கள். அவர்களுக்குப் பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை.
அதனால் தான் எம்பெருமான் எழுந்தருளிஇருக்கும் ஸ்ரீவைகுண்டத்தை "நித்ய விபூதி' என்றும், அங்கு வாசம் செய்யும் முக்தி பெற்ற உயிர்களை "நித்ய சூரிகள்' என்றும் சொல்கிறார்கள்.
சீனிவாச கல்யாணம், சீதாகல்யாணம் என்றதும், பெருமாள் சீனிவாசராக இப்போது தான் பிறந்து இளைஞராக வளர்ந்திருக்கிறார் என்று நினைக்க கூடாது.
அவர்களுக்கு பிறப்போ, இறப்போ கிடையாது. அவர்கள் என்றென்றும் நித்யமாக இருக்கிறார்கள். நமக்காக கல்யாணக் கோலத்தில் மணமக்களாக எழுந்தருள்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்படி தான் ஒரு சீடன் தாம்பூலம் தரிக்க ஆசை கொண்டு சாப்பிட்டு விட்டான். இதைக் கண்டவர், "பிரம்மச்சாரியான நீ வெற்றிலை போடலாமா?'' என்றார்.
""பிரம்மச்சாரியாக இருப்பவன் கல்யாணமே செய்து கொள்ளும்போது, வெற்றிலை போடுவதில் என்ன தவறு?'' என்று பதில் கேள்வி கேட்டான். இப்படி விவாதம் செய்வது கூடாது.
சாஸ்திரம் கூறிய நியதிகளை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஞானவேட்கையோடு உலகியல் இன்பத்தில் நாட்டம் வைக்காமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்தால் 88,000 யாகம் செய்த புண்ணிய பலனை ஒரு மனிதன் அடைகிறான்.
ஒரு பெண்ணை மணந்து கொண்டு வாழ்வது கிரகஸ்தம் என்னும் குடும்பவாழ்க்கை.
அதன் பின் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாக விட்டால் அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, காட்டுக்குச் சென்று வாழ்வது வானப்பிரஸ்தம்.
சுகபோகங்களை அனுபவிக்கும் ராஜாக்கள் கூட ராஜ்ய பரிபாலனத்தை பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டு காட்டிற்குச் சென்று வாழ்ந்தனர்.
சுகம், துக்கம் இரண்டையும் மனிதன் ஒன்றாகவே கருத வேண்டும் என்பதற்காகவே இப்படி எல்லாம் சாஸ்திரம் நிர்ணயித்திருக்கிறது. பின், ஆசை என்பதையே அறவே விடுத்து சந்நியாசியாக வாழ்வது இறுதி நிலை.
பிரம்மச்சர்யம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்னும் நால்வகை ஆஸ்ரமங்களிலும் அந்தந்த தர்மத்திற்குரியவற்றைப் பின்பற்றி வாழ்ந்தவர்கள் இறுதியில் பிரம்மலோகத்தை அடையும் பாக்கியம் பெறுகின்றனர்.
நமக்குரிய கடமைகள் என்னென்ன என்பதை சாஸ்திரம் தெளிவாக வரையறை செய்திருக்கிறது. இது எதுவும் எனக்கு தெரியாது என்று நாம் சொல்லக் கூடாது. அதை தெரிந்து கொள்ள நாம் முயல்வதில்லை. ஆனால், தெரிந்து கொள்ளவில்லை என்பதற்காக ஒருவருக்கு விதிவிலக்கு அளிக்க முடியாது.
கொள்ளைக்காரன் ஒருவனுக்கு சட்டஅறிவு என்பது துளியும் இல்லை. "திருடுவது குற்றம் என்பதே எனக்கு தெரியாது' என்று அவன் நீதிமன்றத்தில் வாதிட்டான். இதை நீதிமன்றம் ஏற்குமா என்றால் நிச்சயம் ஏற்காது. அதனால், பொதுவான விஷயங்கள் தெரியாவிட்டாலும், அந்த விஷயமே இல்லை என்று ஆகிவிடாது.
நால்வகை வர்ணம், ஆஸ்ரமம் என விளக்கிய விஷ்ணு புராணத்தில் தொடர்ந்து, படைப்புக் கடவுளாகிய பிரம்மா ருத்திரராகிய பரமசிவனாரைப் படைத்து அவருக்கு பார்வதியோடு திருமணம் நடந்ததை பராசரர் விவரிக்கிறார்.
அதன் பின் பாற்கடலில் பிறந்த திருமகளின் வரலாற்றை விளக்குகிறார். பிருகு முனிவரின் மகளாக வளர்ந்ததால் திருமகளுக்கு பார்கவி என்று பெயர். அவளே திருமாலைத் திருமணம் செய்து கொண்டாள். திருமால், மகாலட்சுமி போன்றவர்கள் என்றென்றும் நித்யமானவர்கள். அவர்களுக்குப் பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை.
அதனால் தான் எம்பெருமான் எழுந்தருளிஇருக்கும் ஸ்ரீவைகுண்டத்தை "நித்ய விபூதி' என்றும், அங்கு வாசம் செய்யும் முக்தி பெற்ற உயிர்களை "நித்ய சூரிகள்' என்றும் சொல்கிறார்கள்.
சீனிவாச கல்யாணம், சீதாகல்யாணம் என்றதும், பெருமாள் சீனிவாசராக இப்போது தான் பிறந்து இளைஞராக வளர்ந்திருக்கிறார் என்று நினைக்க கூடாது.
அவர்களுக்கு பிறப்போ, இறப்போ கிடையாது. அவர்கள் என்றென்றும் நித்யமாக இருக்கிறார்கள். நமக்காக கல்யாணக் கோலத்தில் மணமக்களாக எழுந்தருள்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்னும் இனிக்கும்.....
- Sponsored content
Page 19 of 20 • 1 ... 11 ... 18, 19, 20
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 19 of 20
|
|