புதிய பதிவுகள்
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 
79 Posts - 44%
ayyasamy ram
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 
77 Posts - 43%
mohamed nizamudeen
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 
6 Posts - 3%
prajai
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Jenila
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 
122 Posts - 53%
ayyasamy ram
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 
10 Posts - 4%
prajai
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 
8 Posts - 3%
Jenila
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_m10 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேலியோ டயட் / நியாண்டர் செல்வன்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 30, 2015 12:21 am

First topic message reminder :


ஃபேஸ்புக்கில் ‘ஆரோக்கியம் & நல்வாழ்வு’ எனும் உடல்நலன் சார்ந்த இணையக் குழுமத்தை நடத்தி வருபவர். இக்குழுவில், ஆதிமனிதன் உண்ட உணவை ஒட்டிய உணவுமுறை மூலம் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, உடல் பருமன் போன்ற பல நோய்கள் மற்றும் உடல் சார்ந்த பிரச்னைகளுக்குமான டயட் முறைகளும் தீர்வுகளும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்தக் குழுவில் சுமார் 20,000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பலரும் இந்த உணவு முறையால் நல்ல பலனைக் கண்டுள்ளார்கள். பேலியோ டயட் (முன்னோர் உணவு) என ஆங்கிலத்தில் அழைக்கப் படும் இந்த உணவுமுறை, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பெருமளவில் பின்பற்றப்பட்டு வருகிறது.

நியாண்டர் செல்வன், பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் துறையில் முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவில் நிர்வாகவியல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். வரலாறு, உணவு, உடல்நலன், அறிவியல் போன்ற துறைகளைப் பற்றி கடந்த பத்து ஆண்டுகளாக வலைப்பதிவிலும், ஃபேஸ்புக்கிலும் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அவருடைய ஃபேஸ்புக் முகவரி –
https://www.facebook.com/neander.selvan

ஆரோக்கியம் & நல்வாழ்வுக் குழுமத்தின் ஃபேஸ்புக் முகவரி –
https://www.facebook.com/groups/tamilhealth/




 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 30, 2015 12:36 am


ஒரு எளிய உதாரணம் மூலம் புரிந்துகொள்வோம்.

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கதை என்று வைத்துக்கொள்வோம்.

வில்லன் ஒருவரைக் கொலை செய்துவிடுகிறான். அந்த இடத்துக்கு நம் அப்பாவி கதாநாயகன் வருகிறான். கொலை செய்யப்பட்டவரின் உடலில் சொருகப்பட்டிருந்த கத்தியை எடுக்கிறான். அவன் கைரேகை அதில் படிகிறது. அப்போது அந்தக் காட்சியைப் பார்க்கும் ஒருவர், ‘அய்யோ கொலை செய்துவிட்டாயா?’ எனச் சத்தம் போடுகிறார். அவரே போலீஸிடம் புகார் கூறுகிறார். போலீஸும் ‘கதாநாயகனின் கைரேகை கத்தியில் இருந்தது’ என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்து, தண்டனை வாங்கித் தருகிறது. அதன்பின் கதாநாயகன் சிறையில் இருந்து தப்பி, தான் நல்லவன் என்பதை நிரூபிக்கிறான். உண்மையான கொலைகாரன் கூண்டில் ஏற்றப்படுகிறான்.

‘கொலஸ்டிரால் எனும் நண்பன்’ படத்தின் கதையும் இதுதான். இங்கே கொல்லப்பட்டது நம் இதயம். கொலைகாரன் என தவறாகப் புரிந்து கொள்ளபட்ட கதாநாயகன் - கொலஸ்டிரால். கொலஸ்டிரால்தான் கொலைக்குக் காரணம் என புகார் கொடுப்பவர்கள், மருத்துவர்கள். இந்தப் படத்தின் கிளைமாக்ஸைத்தான் இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதாவது பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்ட கொலஸ்டிரால், தான் நல்லவன் என்பதை நிருபித்து, உண்மையான கொலையாளிக்குத் தண்டனை வாங்கித் தரும் நேரம் இது.

எனில், வில்லன் யார்?

இன்ஃப்ளமேஷன் (Inflammation) எனப்படும் உள்காயம். மாரடைப்பின் காரணி இதுவே.

அப்படியானால் உள்காயத்தால் உண்டாகும் மாரடைப்புக்கு, கொலஸ்டிரால் மீது ஏன் பழி சுமத்தப்படுகிறது? மருத்துவர்கள் ஏன் அவ்வாறு புகார் தெரிவிக்கிறார்கள்?

சினிமாவில், கதாநாயகன் கத்தியுடன் இருக்கும்போது ஒருவர் பார்த்துவிடுகிறார், போலீஸில் புகார் தெரிவிக்கிறார் என்று பார்த்தோம். இங்கும் அந்தக் கதைதான். மாரடைப்பு வந்து இறந்தவர்களின் இதய நாளங்களை திறந்து பார்த்தபோது, அதில் முழுக்க கொலஸ்டிரால் இருந்தது. கொலஸ்டிரால் இதயநாளச் சுவர்களில் படிவதால், ரத்த ஓட்டம் தடைபடுகிறது; மாரடைப்பு நிகழ்கிறது. எனவே, எந்தளவுக்கு இதய நாளங்களில் கொலஸ்டிரால் படிகிறதோ அந்தளவுக்கு மாரடைப்புக்கான அபாயம் உண்டாகும். இப்படித்தான் மருத்துவர்கள் நம் கதாநாயகன் மீது பழி சுமத்தினார்கள்.

சினிமாவில், கத்தி சொருகப்பட்டிருந்தவரைக் காப்பாற்ற கத்தியை வெளியே எடுத்தான் கதாநாயகன். அதேபோல, நம் உயிரைக் காக்கவே கொலஸ்டிரால் ரத்த நாளங்களில் படிகிறது.

அதாவது, ரத்த நாளங்களில் உள்காயம் எனப்படும் இன்ஃப்ளமேஷன் உருவாகிறது. நம் தோலில் காயம் பட்டால் அங்கே எரிச்சல் வந்து புண் ஆகும். புண்ணை ஆறவைக்க மேலே தோல் படியும் அல்லவா? அதேபோல இதய நாளங்களில் உள்காயம் ஏற்பட்டால் அதைக் குணப்படுத்த மேலே பூசப்படும் மருந்தே எல்டிஎல் கொலஸ்டிரால். எல்டிஎல் கொலஸ்டிரால்தான் உள்காயத்தை ஆற வைக்கிறது. ஆனால், அதே இடத்தில் உள்காயம் மேலும் மேலும் ஏற்படும்போது, மேலே அதிக அளவில் எல்டிஎல் படிகிறது. இப்படிக் காயம் ஏற்படுதலும், அதன் மேலே கொலஸ்டிரால் பூசப்படுவதும் தொடர்ந்து நடைபெறுவதால், ஒரு கட்டத்தில் ரத்த ஓட்டம் தடைபட்டு மாரடைப்பு வருகிறது.

ஆக, கதாநாயகனான கொலஸ்டிரால், இங்கே தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. ரத்த நாளங்களில் உள்காயம் ஏற்படாமல் இருந்தால் எல்டிஎல் கொலஸ்டிராலால் எவ்விதக் கெடுதலும் ஏற்படாது. உண்மையில், மொத்த கொலஸ்டிராலின் அளவு 300, 400, 500 ஆக இருந்தாலும் எந்த ஆபத்தும் கிடையாது. நம் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதே உள்காயத்தால்தான், கொலஸ்டிராலால் அல்ல.

அப்படியானால் உள்காயம் ஏன் உண்டாகிறது? இதற்கான காரணங்களைப் பார்க்கலாம்.

எளிய மாவுச்சத்து உணவுகளை (கார்போஹைட்ரேட்) உண்பதால் உள்காயம் உண்டாகும். அதாவது வெள்ளை அரிசி, சர்க்கரை, மைதா போன்றவை.

மாறுதல் அடையும் கொழுப்பு (Trans fat) எனப்படும் செயற்கைக் கொழுப்புகளை உண்பதாலும் உள்காயம் உண்டாகும். சமையலுக்கு நீங்கள் பயன்படுத்தும் சூரியகாந்தி எண்ணெயை எடுத்துக்கொள்வோம். செக்கில் ஆட்டி எடுத்த சூரியகாந்தி எண்ணெயை யாரும் பார்த்திருக்க முடியாது. காரணம் அது அதிகச் சூடு தாங்காது. அந்த எண்ணெயை வைத்து வடை செய்ய முயன்றால், எண்ணெயைக் கொதிக்க வைத்தவுடன் அது எரிந்து புகைமண்டலத்தை வீடெங்கும் பரப்பிவிடும்.

இதற்காக சூரியகாந்தி, கனோலா, சஃபோலா, நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்ற எண்ணெய்கள், லேபில் ஹைட்ரஜனேற்றம் என்கிற வேதிவினைக்கு உட்படுத்தப்படுகின்றன. அவற்றின் கொழுப்பில் ஒரு ஹைட்ரஜன் அணுவைச் செயற்கையாக உள்ளே நுழைக்கிறார்கள். இதனால் அந்த எண்ணெய்களின் கொழுப்புகள் திரிந்து டிரான்ஸ் ஃபேட் எனும் வகை கொழுப்பாக மாறிவிடுகிறது. அதன்பின் இந்த எண்ணெய்கள் ஜம் என சூடு தாங்குகின்றன. வடை, பூரி என சமையலுக்கு ஏற்றதாகிவிடுகிறது.

இதன்பின் இந்தச் செயற்கைக் கொழுப்புகள் என்ன ஆகின்றன? அவை நம் கல்லீரலுக்குச் செல்கின்றன. நம் உடலுக்கு இயற்கைக் கொழுப்புதான் நன்குப் பழக்கம்; இதுபோல உருவாக்கப்படும் செயற்கைக் கொழுப்பு வகைகளை என்ன செய்வது என்று உடலுக்குத் தெரியாது. இதனால் டிரான்ஸ் ஃபேட்டால் உள்காயம் அதிகரிக்கிறது.

மாரடைப்புக்கு மட்டுமல்ல, பல வகை வியாதிகளுக்கும் உள்காயமே காரணம். உள்காயம் இதயச் சுவர்களில் மட்டும் வராது அல்லவா? உடல் உறுப்புக்கள் அனைத்திலும் ஏற்படும். குடல் சுவர்களில் உண்டாகும் உள்காயத்தால் தீராத வயிற்றுவலி ஏற்பட வாய்ப்புண்டு. முதுகெலும்பில் ஏற்படும் உள்காயத்தால் தீராத முதுகுவலி வந்து அறுவை சிகிச்சை மூலம் முதுகுத்தண்டின் சில டிஸ்குகளை அகற்றும் நிலைக்கு ஆளாக நேரிடும். அத்துடன் மூட்டில் வரும் உள்காயத்தால் முடக்குவாத நோய் நம்மைத் தாக்கக்கூடும்.

வடைக்கு ஆசைப்பட்டு வியாதியை தேடிக்கொள்வது என்பது இதுதான் இல்லையா?

தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

இந்தக் குறளுக்கு என்ன அர்த்தம்?

நல்லவன் மீது சந்தேகப்படுவதும் கெட்டவனை நம்புவதும் தீராத துன்பத்தைத் தரும்.

இங்கும் அதே கதைதானே. நல்லவனான கொலஸ்டிராலை கெட்டவன் என்றோம்; ஆனால், கெட்டக் குணங்கள் கொண்ட தாவர எண்ணெய்களையும், தீட்டிய வெள்ளை அரிசியையும் நல்லது என நம்பி மோசம் போனோம். தீராத துன்பத்தை அனுபவித்தோம்.

இனிமேலாவது விழித்துக்கொள்வோம்.



 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 30, 2015 12:37 am

தானியம் எனும் எமன்!

தானியம் என இங்கே குறிப்பிடுவது அரிசி, கோதுமை, ராகி, கம்பு, சோளம் போன்றவற்றையே. தற்போது கின்வா (Quinoa), ஓட்ஸ், பார்லி போன்ற மேலைநாட்டுத் தானிய வகைகளும் பிரபலமாகி வருகின்றன. இவற்றின் குணங்களில் பெரிய வேறுபாடு இல்லை. எனவே, இந்தத் தானியங்களையும் எமன் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

தானியத்தை எமன் எனக் குறிப்பிடுவதால் பலரும் அதிர்ச்சி அடையலாம். ஏனெனில் இட்லி, தோசை, பணியாரம் போன்ற உணவுகள் நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படுபவை. மேலைநாட்டு மருத்துவமனைகளில், நோயாளிகளுக்குக் காலை உணவாக ரொட்டிகளை வழங்குவார்கள். அதேபோல நம் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குக் காலை உணவாக இட்லியை சாப்பிடச் சொல்வார்கள்.

சர்க்கரை வந்தால் கோதுமை சாப்பிடவேண்டும் என்பது பல சர்க்கரை நோயாளிகளுக்குக் கூறப்படும் அறிவுரை. இதற்குக் காரணம், தமிழக உணவுகள், பெரும்பாலும் அரிசியை அடிப்படையாகக் கொண்டவை. இதன் அடிப்படையில், அரிசிக்குப் பதில் கோதுமையைச் சாப்பிடச் சொன்னால், மக்கள் குறைவாகச் சாப்பிடுவார்கள் என எண்ணி அந்த அறிவுரை வழங்கப்படுகிறது.

இட்லி என்றால் பத்து, பன்னிரண்டு இட்லிகளை விழுங்குபவர்கள் கூட சப்பாத்தி, ரொட்டி என்றால் குறைவாகச் சாப்பிடுவதைக் காணமுடியும். தமிழ்நாட்டில் இப்படி என்றால் வடநாட்டில் என்ன நடக்கும் தெரியுமா? கோதுமையை அடிப்படையாகக் கொண்ட வடநாட்டில், சர்க்கரை நோயாளிகளிடம் கோதுமைக்குப் பதில் அரிசி சாப்பிட அறிவுறுத்தப்படும்! அதே காரணம்தான். அரிசி அவர்களுக்குப் பிடிக்காது என்பதால் குறைவாகச் சாப்பிடுவார்கள்.

நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படும், ஆரோக்கிய உணவு என பலரும் நம்பும் இட்லி, சப்பாத்தியால் உடல்நலனுக்கு எந்த நன்மையும் ஏற்படுவதில்லை. ஆனால், இவற்றினால் ஏற்படும் தீமைகள் அளவற்றவை. மனிதனுக்கு வரும் பல்வேறு வியாதிகளுக்கு இவை காரணமாக அமைகின்றன.

தீட்டிய வெள்ளை அரிசி மற்றும் மைதா போன்றவை கெடுதல் என்பது தமிழ்நாட்டில் உள்ள பலருக்கும் பரவலாகத் தெரிகிற விஷயம். ஆனால் பலரும் இதற்கு மாற்றாக சிறுதானியங்களையும், தீட்டாத முழு தானியங்களையும் தேடிச்செல்கிறார்கள். பல உணவகங்களில் சிறுதானிய உணவுகள் விற்கப்படுகின்றன. சிறுதானிய விழாக்கள் நடைபெறுகின்றன. குதிரைவாலி அரிசி, கைக்குத்தல் அரிசி, கேழ்வரகு அடை, கம்பு புட்டு, சோளதோசை போன்ற கிராம மக்களின் உணவுகள் நகர்ப்புறங்களிலும் பிரபலமாகி வருகின்றன. இங்கே வருத்தத்துடன் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். கைக்குத்தல் அரிசி, கம்பு, ராகி, சோளம், கோதுமை போன்றவை தீட்டிய வெள்ளை அரிசி, மைதாவுக்குச் சமமாக உடலுக்குக் கேடு விளைவிப்பவையே.

தானியங்களை நாம் உண்ண ஆரம்பித்து 10,000 ஆண்டுகளே ஆகின்றன. மனித இனத்தின் வரலாறு 1.6 கோடி ஆண்டுகள் பழமையானது. இந்த 1.6 கோடி ஆண்டுகளில் கடைசி பத்தாயிரம் ஆண்டுகளில் மட்டுமே நாம் அரிசி, கோதுமை, சோளம் போன்றவற்றை உண்ணத் தொடங்கியுள்ளோம். ஆக மனிதனின் 99.99% மரபணுக்கள் - தானியம் சாராமல், விவசாயம் செய்யத் தொடங்கும் முன்பு இருந்த காலகட்டத்தில் அதாவது இறைச்சி, காய்கறிகள் உண்ட காலத்தில் உருவானவை.

அதனால் என்ன? பத்தாயிரம் ஆண்டுகள் போதாதா, நம் மரபணுக்களுக்குத் தானியத்துடன் பரிச்சயம் ஏற்பட என நீங்கள் கேட்கலாம். ஆனால், ஒரு சராசரி மனிதன் வாழும் காலகட்டத்துடன் ஒப்பிட்டால் பத்தாயிரம் ஆண்டுகள் என்பது மிகப்பெரிய கால அளவாகத் தோன்றும். ஆனால், மரபணுக்களைப் பொறுத்தவரை பத்தாயிரம் ஆண்டுகள் என்பது, கண்ணிமைக்கும் பொழுதுக்கே சமமானவை. இந்தப் பத்தாயிரம் ஆண்டு காலகட்டத்தில் நம் மரபணுக்களில் வெகு குறைந்த அளவிலான மாற்றங்களே நிகழ்ந்துள்ளன.

ஒரு சிறிய உதாரணம். சுமார் 42 லட்சம் ஆண்டுகளுக்கு முன்புவரை நாம் நாலு கால் மிருகங்கள்தான். அன்று, நம் முன்னோர்கள் மரங்களில் நான்கு கால்களைப் பயன்படுத்தி கிளைக்குக் கிளை தாவிக்கொண்டிருந்தார்கள். பிறகு, ஏதோ ஒரு காரணத்தால் மனிதன் மரங்களில் இருந்து தரையில் இறங்கி நடக்க ஆரம்பித்தான். தரையில் நான்கு காலில் நடந்தவன், கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு கால்களில் நடக்கவும், மீதமிருக்கும் இரு கால்களைக் கைகளாகவும் பயன்படுத்தத் தொடங்கினான். அதன்பின், முழுக்க இரண்டுகால் பிராணியாக மனிதன் மாறிவிட்டான்.

42 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே, நாம் இரண்டு கால் பிராணியாக மாறிவிட்டாலும் நம் மரபணுக்கள் இன்னமும் அந்த மாற்றத்துக்குப் பழகவில்லை. இதை அறியும்போது உங்களுக்கு வியப்பாக இருக்கிறது இல்லையா!

உதாரணமாக, மனித இனத்தில்தான் பிரசவம் என்பது செத்துப் பிழைக்கும் விஷயமாக இருக்கிறது. மருத்துவ வசதிகள் மேம்பட்ட இந்தக் காலத்தில்தான் பிரசவ மரணங்கள் குறைந்துள்ளன. முன்பெல்லாம் பிரசவத்தை மறுபிழைப்பு என்றுகூட வர்ணிப்பார்கள். பேறுகால மரணங்களுக்கும், பிரசவ சிக்கல்களுக்கும் என்ன காரணம்? நாம் இரண்டு கால்களில் நடக்கத் தொடங்கியதால் உடலில் ஏற்பட்ட மாற்றங்களால் உண்டான விளைவு என விஞ்ஞானிகள் பதிலளிக்கிறார்கள். (ஆதாரம் - http://ngm.nationalgeographic.com/print/2006/07/bipedal-body/ackerman-text) பெண்களின் இடுப்பு எலும்பில் ஏற்பட்ட மாற்றத்தால் பிரசவ சமயத்தில் குழந்தை வெளியே வர அதிக நேரமும், வலியும், சிரமங்களும் ஏற்படுகின்றன. இதே சிம்பன்ஸி, உராங் உடான், கொரில்லா போன்ற பிற குரங்கினங்களுக்கு இந்தச் சிரமங்கள் இல்லை. உதாரணமாக சிம்பன்ஸியின் பிரசவம் சில நிமிடங்களில் முடிந்துவிடும். எந்த வலியும் இன்றி, சில நிமிடங்களில் சிம்பன்ஸி குட்டி, தாயின் கருப்பையிலிருந்து வெளியே வந்துவிடும். தாய் உடனே அதற்குப் பாலூட்டத் தொடங்கும். தாதிமார், மருத்துவர் என யாருடைய உதவியும் சிம்பன்ஸியின் பிரசவத்துக்குத் தேவைப்படாது.

எனவே, 42 லட்சம் ஆண்டுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு மாற்றம், இன்னமும் நம் மரபணுக்களில் சரியாகப் பதிவாகாமல் பாதிப்புகளை உண்டாக்குகின்றன. எனில் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தானிய உணவை உண்ணுதல் எனும் உணவு மாற்றம் நம் மரபணுக்களுக்குப் பழக இன்னும் எத்தனை லட்சம் ஆண்டுகள் ஆகுமோ? யோசித்தால் தலை சுற்றுகிறது இல்லையா? தானிய உணவு என்பது நம் மரபணுக்களுக்கு இன்னமும் பழகாத உணவு. மரபணுக்களுக்குப் பழகாத உணவை உண்பதால் நமக்குப் பல வியாதிகள், ஒவ்வாமைகள் ஏற்படுகின்றன.

தானியங்களின் முதல் தீமை, அதில் உள்ள அதிகப்படியான மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்). மாவுச்சத்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் அதிகரித்து, இன்சுலின் சுரந்து, உடல், கொழுப்பைச் சேகரிக்கத் தொடங்கும் என்பதை முந்தைய அத்தியாயங்களில் கண்டோம். இந்திய அரசு அளிக்கும் புள்ளிவிவரப்படி, சராசரியாக, ஒரு இந்தியர் வருடம் முழுக்க 166 கிலோ தானியத்தை உட்கொள்கிறார். அதாவது தினமும் 400 கிராம் அளவுக்கு அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் நம் உடலில் சேர்கின்றன. இதில் உலக வருட சராசரி 170 கிலோ. இந்தியர்களின் தானிய நுகர்வு உலகின் சராசரி அளவை ஒட்டியே இருக்கிறது. பெரிய வித்தியாசம் இல்லை.

அதே சமயம் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த மக்கள் சராசரியாக வருடத்துக்கு 120 கிலோ தானியங்களையே உட்கொள்கிறார்கள். அவர்களின் உணவில் இறைச்சியே பிரதான இடம் வகிக்கிறது. சராசரி ஐரோப்பியர் வருடத்துக்கு நூறு கிலோ இறைச்சி மற்றும் மீனை உட்கொள்கிறார். ஆனால் இந்தியர்கள், ஒரு வருடத்துக்கு வெறும் ஏழு கிலோ இறைச்சி மற்றும் மீனையே உட்கொள்கிறார்கள். உலக அளவில் மிக, மிக குறைந்த அளவில் இறைச்சி உண்ணும் நாடு – இந்தியா. இந்தியர்கள், புரதத்துக்குப் பருப்பை நம்பியே இருக்கிறார்கள். இங்கு, சராசரியாக வருடத்துக்கு 14 கிலோ பருப்பு ஒருவரால் உண்ணப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் சராசரி தனிமனிதப் பருப்பு நுகர்வு - ஆண்டுக்கு 2 கிலோ மட்டுமே.

இந்தியர்கள், கலோரிகளின் தேவையைப் பெருமளவு தானியங்கள் மூலமாகவே அடைகிறார்கள். சராசரியாகத் தினமும் 400 கிராம் அரிசி, கோதுமை போன்றவை இட்லி, சப்பாத்தி போன்ற உணவுகள் வழியாக நம் உடலை அடைகின்றன. நானூறு கிராம் அரிசியில் 112 கிராம் மாவுச்சத்து உள்ளது. தினமும் 112 கிராம் வெள்ளைச் சர்க்கரை உண்டால் உடலுக்கு என்னென்ன கெடுதல்கள் விளையுமோ அதெல்லாம் இந்த நானூறு கிராம் அரிசி நுகர்வாலும் ஏற்படுகின்றன. மற்றபடி அரிசியில் உள்ள மாவுச்சத்து க்ளுகோஸாக மாறி நம் ரத்தத்தில் கலந்தபின் அதற்கும், வெள்ளை சர்க்கரையில் உள்ள க்ளுகோஸுக்கும் எந்தவித வித்தியாசமும் கிடையாது. அரிசியும், சர்க்கரையும் உடலுக்குள் சென்றபின், இரண்டும் ஒரே அளவில் நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்கின்றன. இன்சுலின் சுரப்பும் இரண்டுக்கும் ஒரே மாதிரியானதாக இருக்கும்.




 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 30, 2015 12:38 am


சரி, தானியங்களில் மாவுச்சத்து இருப்பதுதானே பிரச்னை எனக் கேட்டால், அது மட்டும் இல்லை எனத் தாராளமாகச் சொல்லமுடியும்.

தானியங்களில் காய்ட்ரோஜன்கள் (Goitrogens) என அழைக்கப்படும் தைராய்டு சுரப்பைத் தடுக்கும் மூலப்பொருள்கள் உள்ளன. உதாரணமாக ராகி, தினை, வரகு, சாமை போன்ற சிறுதானியங்களை எடுத்துக்கொள்வோம்.

சிறுதானியங்களில் உள்ள புரதங்களை ஜீரணிக்க நம் உடல் மிகச் சிரமப்படும். இவற்றில் உள்ள காய்ட்ரோஜன்கள், தைராய்டு சுரப்பியின் (Thyroid Gland) செயல்திறனைக் குறைத்துவிடும். இதன் விளைவாகப் பலருக்கும் ஹைப்போதைராய்டு வியாதி (Hypothyroidism) உண்டாகும். இதனால் உடல் சோர்வடையும், உடல் பருமன் அதிகரிக்கும், குளிரைத் தாங்க முடியாது, ஞாபக சக்தி குறைவடையும். சில சமயம் இதனால் கழுத்தில் பெரிய கட்டிகள்கூட உருவாகும்.

முன்பு, கிராமங்களில் பலருக்கும் கழுத்தில் கட்டிகள் (Goiter) இருப்பதைக் கண்டிருக்க முடியும். அவர்கள் உடலில் போதுமான ஐயோடின் சத்து (Iodine) சேராததால், தைராய்டு சுரப்பிகள் வீங்கிப் பெருத்துவிடும். வரகு, சாமை போன்றவற்றில் உள்ள காய்ட்ரோஜன்கள், நம் உடலில் அயோடின் சத்து சேர்வதைத் தடுத்துவிடும் என்பதும் அறியவேண்டிய தகவல்.

இன்று நகர்ப்புறங்களில் யாரும் வரகு, சாமை போன்றவற்றை அந்தளவுக்கு உண்பதில்லை. ஆனாலும் தைராய்டு சுரப்பிகளில் வரும் இன்னொரு வகை வியாதியான ஹைப்போதைராய்டு வியாதி, நகர்ப்புற மனிதர்களிடம் தென்படக் காரணம் என்ன? இதே காய்ட்ரோஜன்கள், சிறு தானியங்களில் மட்டுமின்றி நிலக்கடலை மற்றும் கோதுமையிலும் உள்ளன. சில பத்தாண்டுகளுக்கு முன்பு யாருமே கேள்விப்பட்டிராத நிலக்கடலை வெண்ணெயின் (Peanut butter) பயன்பாடு இன்று நகர்ப்புறங்களில் அதிகமாகி வருகிறது. இவற்றின் நுகர்வு அதிகரிக்க, அதிகரிக்க ஹைப்போதைராய்டு வியாதியின் பாதிப்பையும் இனி அதிகமாகக் காணமுடியும்.

சர்க்கரை நோயாளிகளின் உணவாகக் கருதப்படுவது சப்பாத்தி. தானியங்களிலேயே மிகக் கெடுதலான தானியம் – கோதுமை. கோதுமையை விடவும் மிகக் கெடுதலான உணவு உலகில் ஏதேனும் உண்டா என்று சந்தேகிக்கும் அளவுக்கு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். முழு தானிய கோதுமை (Whole grain wheat), சர்க்கரை, அரிசி, மைதா போன்றவை எல்லாம் ஒரே அளவிலேயே நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஏற்றுகின்றன. வெள்ளைச் சர்க்கரை ஆரோக்கியமான உணவு, சர்க்கரை நோயாளிகள் உண்ணக்கூடிய உணவு எனக் கூறினால் அது எப்படி நகைப்புக்குரியதாக இருக்குமோ அதுபோல தான் கோதுமை, சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு என்பதும்.

கோதுமையில் உள்ள மாவுச்சத்தைத் தாண்டி, காய்ட்ரோஜன்களைத் தாண்டி அதில் உள்ள தீமை விளைவிக்கும் புரதம் - க்ளூடன் (Gluten). கோதுமையில் உள்ள க்ளூடன் வகைப் புரதத்தின் தீமைகள் பற்றிய ஆய்வுகள் ஒவ்வொன்றும் அச்சமூட்டுகின்றன. கோதுமை தவிர பார்லி போன்ற தானியங்களிலும் க்ளூடன் காணப்படுகிறது. க்ளூடன் புரதத்தால் பாதிப்படையாத உடல் உறுப்பு ஏதேனும் இருக்கிறதா என்பது சந்தேகமே. மூளை, இதயம், கிட்னி, நரம்பு, நோய் எதிர்ப்பு சக்தி... அவ்வளவு ஏன் நம் கைகால் விரல், நகங்கள் முதல் முடி வரை அனைத்துமே க்ளூடனால் பாதிப்படைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மாரடைப்பை வரவழைக்க காரணமாக இருப்பது உள்காயமே என சென்றவாரப் பதிவில் கண்டோம். உடல் உறுப்புகளில் உள்காயம் உள்ளவர்களில், 80% பேர் க்ளூடன் புரதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. க்ளூடனால் உண்டாகும் உள்காயம் நம் இதய நரம்புகள் முதல் மூட்டுகள், எலும்புகள், நரம்புகள், பெரும்குடல் ஆகிய பல பகுதிகளில் புண்களை உண்டாக்குகிறது. இதனால் ஏற்படும் சிக்கல்கள் - மாரடைப்பு, முடக்குவாதம், பெரும்குடல் சவ்வுகள் கிழிதல், ஜீரணக் குறைபாடுகள், தாள இயலாத வயிற்றுவலி, தொடர் வயிற்றுபோக்கு. கடைசியில் உள்ள பிரச்னைகள் தொடர்ந்தால் வயிற்றில் அல்சர் உருவாகும்.

உள்காயத்தால் வரும் வியாதிகள் எண்ணற்றவை. அல்சைமர் (Alzheimer’s disease) எனப்படும் ஞாபக மறதி வியாதி, பார்க்கின்சன் (Parkinson’s disease) எனப்படும் நரம்புமண்டல வியாதி ஆகியவை உள்காயத்தால் உருவாகின்றன. ஆக, உள்காயத்தை உருவாக்கும் க்ளூடன் புரதத்தால் நமக்கு வரக்கூடிய வியாதிகளின் எண்ணிக்கைக்கு கணக்கு, வழக்கு எதுவும் கிடையாது.

இது தவிர நம் ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் தொடர்ந்து அதிகமாக இருந்தால் மூளையில் பெரும் பாதிப்புகள் உண்டாகும். சர்க்கரை அளவுகளால் மூளையில் ஏற்படும் பாதிப்பே அல்சைமர் வியாதிக்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சியின் வழியாகச் சொல்கிறார்கள். தினமும் மூன்று வேளை மாவுச்சத்து நிரம்பிய தானியங்களை உண்பது மூளையின் அமைப்பையே சிதைத்து, மூளையின் அளவையும், செயல்திறனையும் குறைத்துவிடும்.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தானிய உணவை மனிதன் உண்ணாதபோது கிடைத்த எலும்புக்கூடுகளைத் தானியம் உண்ணத் தொடங்கிய காலகட்ட எலும்புக்கூடுகளுடன் ஒப்பிட்டபோது பெரும் வித்தியாசம் தென்பட்டது. தானியங்களை உண்ணத் தொடங்கியபிறகு சராசரி மனித உயரம் அரை அடி குறைந்து போனது. மூளையின் அளவும் குறைந்துள்ளது. பற்கள் கடுமையாகச் சீர்கெட்டன. தானியங்களை உண்ணாத ஆதிமனிதன் பற்பசை கொண்டு பல் துலக்கவில்லை, தற்போது பல ரகங்களில் கிடைக்கும் பற்பசைகளும், அவை அளிக்கும் பாதுகாப்பு வளையமும் அன்று இல்லை. (பல் மருத்துவர்களும் கிடையாதுதான்.) ஆனால் பல்கூட துலக்காத ஆதிமனிதனின் பற்களில் சொத்தை, ஓட்டைகள் போன்றவை வெகு, வெகு சொற்பமாகவே இருந்தன.

ஆனால் நம் உணவில் தானியங்கள் சேரத் தொடங்கிய பிறகு, பற்களில் கடும் சேதாரங்களும், சொத்தைகளும், பல் வியாதிகளும் ஏற்பட ஆரம்பித்தன. தானியங்களில் உள்ள மாவுச்சத்தை நம் பற்களால் அரைக்கும்போது பற்கள் முழுக்க மாவுச்சத்து பரவுகிறது. மாவுச்சத்தில் உள்ள சர்க்கரை, பற்களின் எனாமலை (பல்லின் மேல் இருக்கும் வெள்ளை நிறப் பகுதி ) கரைக்கும் தன்மை கொண்டது. பலவகை நுண்ணுயிரிகளுக்கும் சர்க்கரை விருப்ப உணவு என்பதால் அவை நம் பல்லில் குடியேறுகின்றன. பாக்டீரியா பாதிப்பால் சொத்தைப் பற்கள், பல் வியாதிகள் போன்றவை உண்டாகின்றன.

இவை எல்லாவற்றையும் விட க்ளூடன் போன்ற தானியப் புரதங்களால் நோய் எதிர்ப்பு சக்தி சார்ந்த வியாதிகள் (Autoimmune diseases) உருவாகின்றன. குறிப்பாக இன்று பலருக்கும் சொரியாசிஸ் (psoriasis) என்கிற தோல்வியாதிகள் வருகின்றன. சொரியாசிஸ் வந்தால் தோலெங்கும் கொடிய புண்கள் தோன்றும். உடலெங்கும் சிகப்புத் திட்டுக்கள் பரவும். இந்த இடங்களை சொறிய, சொறிய வலி மேலும் அதிகரிக்கும்.

சொரியாசிஸ் போன்ற தோல்வியாதிகளுக்குக் காரணம் தானியங்களே. தானியங்களில் உள்ள புரதத்தை நம் மரபணுக்கள் ஏற்பதில்லை. அதை ஏதோ நோயை ஏற்படுத்தும் பாக்டீரியா அல்லது வைரஸ் என நினைத்து நம் நோய் எதிர்ப்பு சக்தி உடனே செயலில் இறங்கி நம் உடல் உறுப்புக்கள் மேலேயே தாக்குதல் நடத்துகிறது. வீட்டில் காவலுக்கு இருக்கும் காவலாளியே வீட்டுக்குள் திருடன் நுழைந்ததாக நினைத்து வீட்டுக்குள் துப்பாக்கியால் சுடுவதற்கு ஒப்பானது இது. இதனால் உடலெங்கும் புண்களும், உள்காயமும் ஏற்பட்டு சொரியாசிஸ் எனும் தோல்வியாதி வருகிறது. இதைக் குணபடுத்த முடியாமல் மக்கள் காசு கொடுத்து பல மருந்துகளை வாங்கி உண்கிறார்கள். களிம்புகளை வாங்கி பூசுகிறார்கள். காசு கரைகிறதே ஒழிய நோய் குணமாவதில்லை.

சொரியாசிஸ் போன்ற தோல்வியாதிகள் குணமாக்க முடியாதவை என பலரும் நம்புகிறார்கள். இது முழுக்க தவறான முடிவு. தானியம் தவிர்க்கும் பேலியோ டயட்டால் சொரியாசிஸ் போன்ற வியாதிகளை நிச்சயம் குணமாக்க முடியும். நம் மரபு சார்ந்தவை, கலாசாரம் சார்ந்தவை, பலவகை நோய்களுக்கான தீர்வு என நினைத்து உட்கொள்ளும் தானியங்களே இதுபோன்ற கடும் விளைவுகளை உடலில் ஏற்படுத்தி பல வியாதிகளுக்கும் காரணமாகிவிடுகின்றன. அவ்வகைத் தானியங்களை எமன் என அழைப்பது பொருத்தம்தானே?



 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 30, 2015 12:39 am

சர்க்கரை வியாதிக்கு ஒரு தீர்வு!

சர்க்கரை வியாதி, ஆயுர்வேத நூல்களில் மதுமேகம் என அழைக்கப்பட்டது. மது என்றால் தேன். தேனைப் போன்ற இனிப்புடன் சர்க்கரை நோயாளிகளின் சிறுநீர் இருந்ததால் இவ்வியாதிக்கு மதுமேகம் எனப் பெயர் வந்தது.

ஒருவருடைய சிறுநீரைக் குடித்து அது இனிப்பாக இருந்தால் சம்பந்தப்பட்ட நபருக்குச் சர்க்கரை நோய் உள்ளது என்று அந்தக் காலத்தில் ஒரு வழிமுறை பின்பற்றப்பட்டது. இதைத் தொடங்கி வைத்தவர்கள் இந்தியர்களே. 20-ம் நூற்றாண்டு தொடக்கம் வரை இதுவே சர்க்கரை நோயைக் கண்டறியும் வழிமுறையாக இருந்தது. இதனால் ஆங்கிலத்திலும் சர்க்கரை நோய்க்கு Diabetes mellitus என்ற ‘தேனின் சுவையுள்ள டயபடிஸ்’ எனும் பெயரே சூட்டப்பட்டது.

சர்க்கரை வியாதி உள்ளவர்களின் ரத்தத்தில் அதிக க்ளுகோஸ் கலந்துவிடுவதால் சிறுநீரகத்தால் அதிக அளவில் அந்த க்ளுகோஸை வெளியேற்ற முடிவதில்லை. அதனால் அது அவர்களின் சிறுநீரில் கலந்துவிடுகிறது. சர்க்கரை நோயின் ஒரு அறிகுறி, இடைவிடாத பசி.

சர்க்கரை நோய்க்குக் காரணம் மாவுச்சத்தும், சர்க்கரையும் என்பது இன்றைய சர்க்கரை நோயாளிகளுக்கும், இந்திய டயபடிஸ் அசோசியேஷன், அமெரிக்க டயபடிஸ் அசோசியேஷன் போன்ற அமைப்புகளுக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் 1913-ல் பிரெட்ரிக் ஆலன் எனும் நீரிழிவு மருத்துவர் ‘சர்க்கரை நோய்க்குக் காரணம் மாவும், அரிசியும், சர்க்கரையும் என பண்டைய இந்திய மருத்துவர்கள் நம்பினார்கள். இதில் உண்மை உள்ளது’ எனக் குறிப்பிடுகிறார்.

மேலும் குறிப்பிடும்போது, ‘பண்டைய இந்திய மருத்துவர்கள் இவ்வாறு எழுதுகையில் அவர்களுக்கு மாவுச்சத்து என்ற ஒன்று இருப்பதோ அல்லது அரிசியில் பெரும்பான்மையாக இருப்பது மாவுச்சத்து என்பதோ கூடத் தெரியாது. ஆனால், அதைப் பற்றி எதுவும் தெரியாமலேயே இதைக் கண்டுபிடித்துள்ளார்கள். இதனால், சர்க்கரை நோயாளிகளின் உணவை அவர்கள் மிகத் தெளிவாக ஆராய்ந்திருப்பது தெரியவருகிறது’ என்கிறார்.

20-ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அமெரிக்காவில் வெளியான சர்க்கரை நோயாளிகளுக்கான நூல்களில் தானியங்களையும், பருப்புக்களையும், இனிப்புக்களையும், மாவுப்பொருள்களையும், ரொட்டி, பன், பழங்கள் போன்றவற்றைத் தவிர்க்கும்படி எழுதப்பட்டிருந்தன. சர்க்கரை நோயாளிகளுக்கு இறைச்சி, முட்டை, காய்கறிகள் போன்றவையே அன்று பரிந்துரைக்கப்பட்டன. இன்று சொல்வதுபோல 'சர்க்கரை நோய் இருந்தால் சப்பாத்தி சாப்பிடு’ என்கிற அறிவுரைகள் எல்லாம் அன்று கிடையாது. தானியங்களும், பழங்களும், மாவுச்சத்தும் சர்க்கரை நோயாளிகளின் எதிரிகளாக கருதப்பட்ட காலம் அது. (இணைப்பு: 1917-ல் எழுதப்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு நூல் - https://archive.org/stream/diabeticcookeryr00oppeiala#page/n0/mode/2up )

20-ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டது. இன்சுலின் தான் ரத்தத்தில் உள்ள மாவுச்சத்தைக் கையாளும் ஹார்மோன் என்பதும் கண்டறியப்பட்டது. மாவுச்சத்துள்ள உணவுப் பொருள்களை உண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் அதிகரிக்கும் என்பதும் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கண்டறியப்பட்டுவிட்டது.

அன்றைய மருத்துவர்கள் நோயாளிகளுக்கு இன்சுலின் கொடுப்பதும், மாவுச்சத்தை நிறுத்துவதும் இரண்டும் ஒன்றே என்பதை அறிந்திருந்தார்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு ஒன்று இன்சுலின் கொடுக்கவேண்டும், அல்லது உணவில் உள்ள மாவுச்சத்தை நிறுத்தவேண்டும் என்பதுதான் அவர்கள் கற்ற பாடம். இரண்டும் ஒரே மாதிரியான விளைவையே அளிக்கும் என்பதால் அதன் அடிப்படையில்தான் அவர்கள் மருத்துவம் பார்த்தார்கள். இப்படி அந்தக் கால மருத்துவர்களுக்குப் புரிந்த இந்த எளிய அறிவியல் இன்று மருத்துவம் பயில்பவர்களுக்கு ஏன் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை?

சர்க்கரை வியாதியைக் குணப்படுத்த முடியாத வியாதி என்று சொல்வதில் துளியும் உண்மை இல்லை. நம் மருத்துவ அமைப்புகள், இந்த விஷயத்தில் மக்களுக்குத் தவறான அறிவுரைகளை கூறி வருகின்றன.

ஒருவர் மருந்து கம்பனியை நடத்தி வருகிறார். அந்தத் தொழிலில் லாபம் வருவதை எப்படி உறுதி செய்வது? குறிப்பிட்ட நோயைக் குணப்படுத்தவே முடியாது என நோயாளிகளிடம் கூறவேண்டும். அதை மருந்தால் மட்டுமே கட்டுக்குள் வைக்கமுடியும் என்று சொல்லி நோயாளிகளை நம்பவைக்கவேண்டும். நோயாளி சாகவும் கூடாது, நோய் குணமாகவும் கூடாது. இப்படி ஆயுள் முழுக்க நோயுடனும், மருந்துடனும் வாழ்க்கையை நடத்தி வரும் நோயாளிகளால்தானே லாபம் கிடைக்கும்!

சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த வியாதி உள்ளவர்கள் எல்லாருமே இப்படி மருந்து நிறுவனங்களுக்குப் பணம் காய்ச்சி மரமாக ஆண்டுக்கணக்கில் இருந்து வருகிறார்கள்.

சர்க்கரை வியாதியில் இரு வகைகள் உண்டு. ஒன்று, பிறப்பால் வரும் டைப் 1 சர்க்கரை வியாதி. இதை உணவால் குணப்படுத்த இயலாது.

ஆனால், பெரும்பாலானவர்களுக்கு வருவது டைப் 2 சர்க்கரை வியாதி. இது உணவால் வரும் சர்க்கரை வியாதி. இதைச் சரியான உணவுமுறை மூலம் சில மாதங்களில் குணப்படுத்த முடியும். சில மாதங்கள் எனக் கூறினாலும் பேலியோ டயட்டை வலியுறுத்தும் ‘ஆரோக்கியம் & நல்வாழ்வு’ என்கிற ஃபேஸ்புக் குழுமத்தில் உள்ள பலரும் ஒரு சில வாரங்களில் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள். ஆண்டுக்கணக்கில் உண்டுவந்த மருந்துகளை நிறுத்தியுள்ளார்கள். ஒரு சில மாதங்களில் அவர்களுடைய சர்க்கரை அளவுகள் நார்மல் என்று சொல்லப்படும் இயல்பான அளவை எட்டியுள்ளன. காலை உணவுக்கு முந்தைய ஃபாஸ்டிங் சுகர் அளவுகள், உணவுக்குப் பிந்தைய சுகர் அளவுகள், ஏ1சி அளவுகள் என இந்த மூன்று அளவுகளும் ஒரு சில மாதங்களில் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன.




 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 30, 2015 12:41 am


சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கியம் & நல்வாழ்வுக் குழுவில் பரிந்துரைக்கப்படும் டயட்:

அசைவ டயட்

காலை உணவு: 4 முட்டைகள்

மதிய உணவு: காளிஃபிளவர் அரிசியுடன் 1/4 கிலோ பேலியோ காய்கறிகள்

மாலை: பேலியோ சாலட், 1 கப் முழுக் கொழுப்பு நிரம்பிய பால்

இரவு உணவு: பசி அடங்கும் வரை ஏதாவதொரு இறைச்சி (மட்டன், சிக்கன், மீன்)

முட்டை சேர்க்கும் சைவர்களுக்கான டயட்

காலை உணவு: 100 பாதாம் அல்லது பட்டர் டீ

மதிய உணவு: காளிஃபிளவர் அரிசியுடன் 1/4 கிலோ பேலியோ காய்கறிகள்

மாலை: பேலியோ சாலட், 1 கப் முழுக் கொழுப்பு நிரம்பிய பால்

இரவு உணவு: 4 முட்டைகள்

முட்டை சேர்க்காத சைவர்களுக்கான டயட்

காலை உணவு: 100 பாதாம் அல்லது பட்டர் டீ

மதிய உணவு: காளிஃபிளவர் அரிசியுடன் 1/4 கிலோ பேலியோ காய்கறிகள்

மாலை: பேலியோ சாலட், 1 கப் முழுக் கொழுப்பு நிரம்பிய பால்

இரவு உணவு: முழுக் கொழுப்பு நிரம்பிய பாலில் இருந்து எடுத்த பனீரில் பனீர் மஞ்சூரியன், பாலக் பனீர் போன்றவற்றைத் தயாரித்து உண்ணலாம்.

முக்கிய குறிப்பு: இது தவிர சர்க்கரை வியாதியைக் குணப்படுத்த வைட்டமின் டி மிக அவசியம் என்பதால் சர்க்கரை நோயாளிகள் மதிய வேளையில், நேரடி வெயில் தோலில் படும்வண்ணம் 15 - 20 நிமிடம் வெயிலில் நிற்பது நன்று. மதியம் 11 மணி முதல் 1 மணி வரை உள்ள வெயில் இதற்கு உகந்தது. தலைக்கு வெயில் தாக்காமல் இருக்க தொப்பி அணியவும். வெயில் அதிக அளவில் நம் உடலில் படவேண்டும் என்பதால் கையில்லாத பனியன், அரைக்கால் டிரவுசர் போன்றவற்றை அணிந்து நிற்பது நன்று.





 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 30, 2015 12:42 am

காளிஃபிளவர் அரிசியின் செய்முறை

சாதம் சாப்பிடுவதைத் தவிர்க்கச் சொல்வதால் அதற்கு மாற்றாக காளிஃபிளவர் அரிசியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


காளிஃபிளவர் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். சிறு, சிறு துண்டுகளாக நறுக்கவும். அதன்பின் ஒரு மிக்ஸி அல்லது ஃபுட் ப்ராசசரில் நாலைந்து நொடிகள் ஓடவிட்டு, நிறுத்தி, மறுபடியும் நாலைந்து நொடிகளுக்கு ஓடவிட்டு அரைக்கவேண்டும் (தொடர்ந்து அரைத்தால் கூழாக மாறிவிடும் என்பதை நினைவில் கொள்ளவும்). அரிசி போல சின்னஞ்சிறிய துண்டுகளாக ஆனதும் அதைப் புட்டுச்சட்டியில் ஆவியில் வேகவைத்தால் காளிஃபிளவர் அரிசி தயார். இதில் காய்கறிக் குழம்பை ஊற்றிச் சாப்பிட்டால் சுவை அபாரமாக இருக்கும். இதில் உள்ள மாவுச் சத்தின் அளவும் மிகக் குறைவு என்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவுகளும் அதிகரிக்காது.





 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 30, 2015 12:43 am

முக்கியமான கேள்விக்கு வருவோம்.

பேலியோ டயட் சர்க்கரை வியாதியை எப்படிக் குணப்படுத்துகிறது?

சர்க்கரை நோயை வரவழைப்பது மாவுச்சத்து நிரம்பிய அரிசி, கோதுமை, பருப்பு போன்ற தானிய உணவுகள். இந்நிலையில், அரிசி, கோதுமையைத் தொடர்ந்து உண்டுவந்தால் சர்க்கரை வியாதியைக் குணப்படுத்த முடியுமா?

நாம் சாப்பிடும் இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றில் மாவுச்சத்து அதிகம். மாவுச்சத்து உள்ள உணவை உண்டால் நம் ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் அதிகரிக்கும்.

இதனால் ஃபாஸ்டிங் சுகர் அளவு 200 ஆக உள்ள ஒருவர் (இயல்பான அளவு: 100க்குக் கீழ்) காலையில் ஐந்து இட்லியைச் சாப்பிடுகிறார் என வைத்துக்கொண்டால் அதன்பின் அவரது உணவுக்குப் பிந்தைய சர்க்கரை அளவு 200-ல் இருந்து 280 ஆக அதிகரிக்கும்.

இந்த 280 எனும் அளவைக் குறைக்க அவர் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளவேண்டும். அதன்பின்பு, சர்க்கரை அளவு 280-ல் இருந்து 230, 220 எனக் குறையும். அடுத்தவேளை உணவாக சாதமும், பருப்பும் சாப்பிட்டால் மீண்டும் உணவுக்குப் பிந்தைய சர்க்கரை அளவுகள் 280, 300 என எகிறிவிடும். மறுபடியும் இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டால்தான் அதைக் கட்டுக்குள் கொண்டுவரமுடியும்.

இந்தச் சர்க்கரை நோயாளி பேலியோவுக்கு மாறுகிறார் என வைத்துக்கொள்வோம். என்ன ஆகும்?

ஃபாஸ்டிங் சுகர் அளவு 200 ஆக இருக்கிறது. காலை உணவாக நெய்யில் வறுத்த 4 ஆம்லெட்களைச் சாப்பிடுகிறார். பசி முழுமையாக அடங்கிவிடுகிறது. முட்டையிலும், இறைச்சியிலும் துளியும் மாவுச்சத்து இல்லை என்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் ஏறாது. அவரது உடலைப் பொறுத்தவரை அவர் இன்னமும் உண்ணாநிலையில்தான் இருக்கிறார். எனவே இரண்டு, மூன்று மணிநேரம் கழித்து அவரது சர்க்கரை அளவு 200-ல் இருந்து 180, 170 ஆக குறையும்.

மதிய உணவு - காளிஃபிளவர் அரிசி அல்லது 100 பாதாம். இதிலும் மிகக் குறைந்த அளவே மாவுச்சத்து உள்ளது. இரவிலும் பேலியோ டயட்டைப் பின்பற்றுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

பேலியோ உணவால் சர்க்கரை அளவுகள் அதிகரிக்காமல் தொடர்ந்து குறைந்துகொண்டே வரும். ஒருசில நாள்களில் இன்சுலின் ஊசி அளவுகள், சர்க்கரை வியாதி மாத்திரை அளவுகளைக் குறைக்க அல்லது முழுவதும் நிறுத்தவேண்டிய நிலைமை உருவாகும். ஒரு சில மாதங்களில் உடலில் சர்க்கரை அளவுகள் இயல்பானதாக மாறிவிடும்.

சர்க்கரை நோய்க்கு பேலியோ டயட்டைப் பயன்படுத்தமுடியும் என்பதைப் பல மருத்துவ ஆய்வு வெளியீடுகள் (Medical journals) ஒப்புக்கொள்கின்றன.

மருத்துவ ஆய்வு வெளியீடுகளில், மருத்துவர்கள், மருத்துவ கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ ஆய்வாளர்களின் ஆய்வறிக்கைகள் இடம்பெற்றிருக்கும். மருத்துவத்துறையின் புதிய கண்டுபிடிப்புகள் அனைத்தும் மருத்துவ நிபுணர்களால் பரிசோதிக்கப்படும். இதன் சோதனை முடிவுகளே மருத்துவ ஜர்னல்களில் வெளியிடப்படும். இவை மருத்துவத்துறைசார் கருத்தரங்குகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் விவாதிக்கப்படும். பிறகு, முக்கியமான கண்டுபிடிப்புகள் மருத்துவப் பாடபுத்தகங்களில் இடம்பெறும். இதன் தொடர்ச்சியாக சிகிச்சைகளிலும் அந்த ஆய்வுகள் பின்பற்றப்படும்.

எனவே மருத்துவ ஜர்னல்கள் என்பவை அறிவியல் ரீதியாக நிரூபணமான ஆய்வுக்கட்டுரைகள் என்பதை மனத்தில் கொள்வோம்.

Diabetes Metabolism Research and Reviews எனும் அறிவியல் ஜர்னலில் 2011-ம் ஆண்டு ஆய்வுக்கட்டுரை எழுதிய மருத்துவப் பேராசிரியர் புசாட்டோ (Busetto) ‘சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்குக் குறைவான கொழுப்பு உள்ள டயட் அதிகாரபூர்வமாகப் பரிந்துரைக்கப்பட்டு வந்தாலும், உயர் புரதமும், குறைந்த அளவு மாவுச்சத்தும் நிரம்பிய பேலியோ டயட், சர்க்கரை நோயாளிகளின் உடல் எடையைக் குறைத்து, ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவுகளை குறைத்துயும், இதய நலனையும் மேம்படுத்துகிறது’ என்று கூறுகிறார். (இணைப்பு: http://www.ncbi.nlm.nih.gov/pubmed/21309052)

2008-ல், Nutritional Metabolism என்கிற லண்டன் மருத்துவ ஜர்னலில், பேராசிரியர் எரிக் வெஸ்ட்மெனின் (Eric Westman) ஆய்வுக்கட்டுரை வெளியிடப்பட்டது. அதில் குறைந்த அளவிலான மாவுச்சத்து உள்ள பேலியோ டயட்டும், சற்று அதிக அளவு மாவுச்சத்து உள்ள லோ-கிளைசெமிக் டயட்டும் (Low Glycemic diet) ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டன.

இந்த ஆய்வில் 49 பேர் பங்கேற்றார்கள். இந்த 49 பேரும் அதிக உடல் எடை கொண்ட சர்க்கரை நோயாளிகள். அதில் பாதி பேருக்கு பேலியோ டயட் பரிந்துரைக்கப்பட்டது. மற்றவர்களுக்கு லோ-கிளைசெமிக் டயட்.

ஆறுமாத ஆய்வுக்குப் பிறகு கிடைத்த முடிவுகள்: பேலியோ டயட்டைப் பின்பற்றிய நோயாளிகளுக்கு எச்பிஏ1சி (HBA1C) அளவுகள் சராசரியாக 1.5 புள்ளிகள் குறைந்திருந்தன. உடல் எடை சராசரியாக 11 கிலோ குறைந்திருந்தது. இதயத்தின் நலனை வெளிப்படுத்தும் நல்ல கொலஸ்டிராலான எச்டிஎல் கொலஸ்டிராலின் அளவுகள் 5.6 புள்ளிகள் அதிகமாகியிருந்தன. இதனால் சர்க்கரை நோய்க்கு பேலியோ டயட்டே உகந்தது என இந்த ஆய்வு முடிவு கூறியது. (இணைப்பு: http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2633336/)

Journal of American College Nutrition எனும் மற்றொரு மருத்துவ ஜர்னலில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது.

அதிக எடை உள்ள 14 டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு பேலியோ டயட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களின் உடலின் இன்சுலினைக் கையாளும் திறன், பிளட் சுகர் அளவைக் கையாளும் திறன் மற்றும் மாரடைப்பு அபாயம்/இதய நலன் போன்றவை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. மருத்துவ ஆய்வாளர் கிரெப்ஸ் (Krebs) தலைமையில் 2013-ம் ஆண்டு இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டது. 14 டைப் 2 சர்க்கரை நோயாளிகளும் ஆறு மாத காலத்துக்கு பேலியோ டயட்டைப் பின்பற்றினார்கள்.

முடிவில் அனைவருக்கும் சராசரியாக பத்து கிலோ எடை இறங்கியிருந்தது. உடலின் பிளட் சுகர் அளவைக் கையாளும் திறன் (HBA1C) சராசரியாக 1.1 புள்ளிகள் குறைந்திருந்தது. ஃபாஸ்டிங் சுகர் அளவுகள் கணிசமாக குறைந்து காணப்பட்டன. ரத்த அழுத்தம் பத்துப் புள்ளிகள் வரை குறைந்திருந்தது. நல்ல கொலஸ்டிராலான எச்டிஎல் கொலஸ்டிராலின் அளவுகள் 10 புள்ளிகள் வரை அதிகரித்திருந்தன. மொத்த கொலஸ்டிரால் அளவும், எல்டிஎல் கொலஸ்டிரால் அளவும் அதிகரித்திருந்தாலும், எச்டிஎல் கொலஸ்டிரால்/ டிரைகிளிசரைட்ஸ் விகிதம் கணிசமாகக் குறைந்து அவர்களின் இதயநலன் மேம்பட்டிருப்பதை வெளிப்படுத்தியது. (இணைப்பு: http://www.ncbi.nlm.nih.gov/pubmed/24015695)

*

பேலியோ டயட்டால் சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவுகள் கட்டுக்குள் வருவதையும், இதயநலன் மேம்படுவதையும், உடல்நலன் சார்ந்த இதர அளவுகள் முன்னேற்றம் காண்பதையும் ஆய்வுகளின் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. மருத்துவ ஜர்னல்களில் பேலியோ டயட்டின் பலன்கள் குறித்து தொடர்ந்து எழுதப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வருகின்றன. மருத்துவத்துறை சார் கருத்தரங்குகளில் இவை விவாதிக்கப்படுகின்றன. ஆனால் பேலியோ டயட் தொடர்புடைய ஆய்வுகள் மருத்துவக் கல்லூரி நூல்களிலும், பாடத் திட்டங்களிலும் இடம்பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதற்கான காரணமாக நான் கருதுபவை - பேலியோ டயட்தான் சர்க்கரை நோய்க்கு உகந்த டயட் எனத் தீர்மானம் ஆகி பாடநூல்களில் இடம்பெற்றுவிட்டால், இத்தனை நாள் சொல்லி வந்த ‘குறைந்த கொழுப்பு டயட்டே சிறந்தது’ என்கிற அறிவுரைகளுக்கு எதிரானதாக ஆகிவிடும். பல டயபடிஸ் அசோசியேஷன்கள் மீது வழக்குகள் தொடரப்படலாம். தவிரவும் குறைந்த கொழுப்பு உணவு மாடலை அடிப்படையாகக் கொண்டு பல உணவு நிறுவனங்கள் சீரியல், ஓட்ஸ் போன்ற காலை உணவுகளையும், தானிய அடிப்படையிலான நொறுக்குத் தீனிகளையும் தயாரித்து, விற்பனை செய்து வருகின்றன. பேலியோ டயட் ஏற்கப்பட்டுவிட்டால் அது அவர்களுக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும். அதனால் அவை அமெரிக்க அரசு மற்றும் அமெரிக்க அரசியல்வாதிகள் மூலமாகவும், தம் நிறுவனங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் தான் நடத்தி வரும் அறிவியல் ஆய்வுக்கழகங்கள் மூலமாகவும் பேலியோ டயட்டுக்கு எதிரான தடுப்பணைகளைக் கட்டியுள்ளன. இதனால்தான் மருத்துவ நூல்களில் பேலியோ டயட் குறித்து எதுவும் இடம்பெறுவதில்லை; ஊடகங்களிலும் இதற்கு ஆதரவான கட்டுரைகள் எழுதப்படுவதில்லை.

இத்தடைகளை எல்லாம் தாண்டி பேலியோ இயக்கம், மேற்கத்திய நாடுகளில் நூல்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக பெரும் மாற்றங்களை உண்டாக்கி வருகிறது. இதுபோன்ற ஒரு மாற்றம் இந்தியாவிலும் ஏற்படவேண்டும். பேலியோ டயட்டைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் அவரவருக்குரிய பங்களிப்பை அளிக்கவேண்டும். (உதாரணமாக, ஃபேஸ்புக், ட்விட்டர் வழியாக பேலியோ டயட் குறித்த தகவல்களை அளிப்பது)

டைப் 2 சர்க்கரை நோய் குணப்படுத்த முடியாதது என்கிற பிரமை உடைக்கப்படவேண்டும். ஆண்டுக்கணக்கில் சர்க்கரை வியாதியால் தவிக்கும் மக்களை, அந்தக் கொடுமையிலிருந்து விடுவிக்கும் பணியில் நாம் தொடர்ந்து ஈடுபடவேண்டும்.



 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 30, 2015 1:18 am

பேலியோ காய்கறிகள் - Paleo vegetables

காலிபிளவர் cauliflower
பிராக்களி brocolli
முட்டைகோஸ் cabbage
முள்ளங்கி radish
பாகற்காய் bitter gourd
காரட் carrot
பீட்ரூட் beetroot
தக்காளி tomato
வெங்காயம் onion
வெண்டைக்காய் okra
கத்திரிக்காய் eggplant
சுண்டைக்காய் solanum torvum(Turkey Berry)
வாழைத்தண்டு plantain stems
அனைத்துவகைகீரைகள் All spinaches
முருங்கை drumstick
ஆஸ்பாரகஸ் aseparagus
ருபார்ப் rubarp
ஆலிவ் olive
செலரி celery
வெள்ளரி cucumber
ஸுக்கனி zukkini
காப்ஸிகம் (பெல்பெப்பெர்), குடைமிளகாய் bellpepper
பச்சை, சிகப்பு மிளகாய் green, red chillies
பூசணி pumpkin
காளான் mushroom
தேங்காய் coconut
எலுமிச்சை lemon
பூண்டு garlic
இஞ்சி ginger
கொத்தமல்லி cilantro
மஞ்சள்கிழங்கு turmeric
அவகாடோ avocado
பீர்க்கங்காய் ridge gourd
புடலங்காய் snake gourd
சுரைக்காய gourd


தவிர்க்கவேண்டிய காய்கறிகள் - To avoid

மரவள்ளி cassava
சர்க்கரைவள்ளி sweet potato
உருளைகிழங்கு potato
பீன்ஸ் (ராஜ்மா உள்ளிட்டவை) beans (rajma and so on)
சென்னா chickpeas
சுண்டல் peas
பருப்புவகைகள் அனைத்தும் all lentils
பயறுவகைகள் அனைத்தும் all grains
நிலக்கடலை peanut
சோயா, டோஃபு, எடமாமி, டெம்ஃபே, மீல்மேக்கர் *சோயா எந்தவடிவிலும் ஆகாது* Soy, edamame, meal maker *soy is not good in any form*
அவரைக்காய் broadbeans
பனங்கிழங்கு palmyra root
பலாக்காய் jackfruit
வாழைக்காய் plantain
பழங்கள் அனைத்தும் all fruits




 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 30, 2015 1:28 am

நேற்று நான் இந்த டயட் முறையை பார்த்தேன் சிவா ஒரு பத்திரிக்கை இல் அதில் காரட் கூட சாப்பிடக்கூடாது என்று போட்டிருந்தார்கள்.......நீங்கள் கொடுத்துள்ள லிஸ்ட் இல் காரட் சாப்பிடலாம் என்று இருக்கு......நான் அந்த பத்திரிகையை தேடிப்பிடித்து இங்கு போடுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 30, 2015 1:32 am

krishnaamma wrote:நேற்று நான் இந்த டயட் முறையை பார்த்தேன் சிவா ஒரு பத்திரிக்கை இல் அதில் காரட் கூட சாப்பிடக்கூடாது என்று போட்டிருந்தார்கள்.......நீங்கள் கொடுத்துள்ள லிஸ்ட் இல் காரட் சாப்பிடலாம் என்று இருக்கு......நான் அந்த பத்திரிகையை தேடிப்பிடித்து இங்கு போடுகிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1159643

உங்களின் கேள்விகள் சந்தேகங்களை இந்தக் குழுவின் முகநூல் பக்கத்திற்குச் சென்று கேட்கலாம் அக்கா!



 பேலியோ டயட் / நியாண்டர் செல்வன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக