புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10 
1 Post - 1%
Kavithas
நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10 
1 Post - 1%
சிவா
நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10 
1 Post - 1%
bala_t
நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10 
1 Post - 1%
prajai
நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10 
297 Posts - 42%
heezulia
நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10 
6 Posts - 1%
prajai
நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10 
4 Posts - 1%
manikavi
நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 5 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம குலதெய்வம்


   
   

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Tue Jun 23, 2015 10:24 am

First topic message reminder :

இந்த திரியில் உங்களுக்கு தெரிந்த உங்கள் குலதெய்வம் களின் வரலாற்றை பதிவு செய்யலாம்

குலதெய்வங்களைப் பற்றி அறிய முற்பட்ட போது கிடைத்த பழையனூர் நீலியின் கதை. இந்தக் கதையுடன் வெள்ளாலர்களைப் பற்றிய தகவலும் வருகிறது என்பது கவணிக்கத் தக்கது. நீலியை இசக்கி என சில இனத்தவர் வழிபட்டு கொண்டிருக்கின்றார்கள் என்பதும் திருவாலங்காட்டிலிருந்து பழையனூர் முக்கால் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பதும் செய்தி.


நம்ம குலதெய்வம் - Page 5 ZY2OAceRhVkPZGSxlVjg+659px-isakki

காஞ்சிபுரத்தில் ஒரு வணிகன் வசித்து வந்தான். அவனது மனைவியின் பெயர் நீலி. அவளுடன் அவன் இன்பமாக வாழ்ந்து வந்தான். கணவனுக்கு நீலி ஒரு குறையையும் வைக்கவில்லை. என்றாலும் அந்த வணிகன் அடிக்கடி பாலியல் தொழில் புரிபவர்களின் வீட்டுக்கு சென்று வந்தான். நீலிக்கு இது பிடிக்கவில்லை. கண்டித்தாள். வணிகன் இதை பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து தனது லீலைகளை நடத்தி வந்தான். நீலியும் விடவில்லை. அவனை கண்டிப்பதையும் நிறுத்தவில்லை. தனது சந்தோஷத்துக்கு இடையூறாக நீலி இருப்பதால், சுபயோக சுபதினத்தில் அவளை அவன் கொன்று விட்டான்.

நீலி பேயாக மாறி அவனை பழிவாங்க அலைந்து கொண்டிருந்தாள். இந்த விஷயம் வணிகனுக்கு தெரிந்ததும் சாமியாரை தேடி ஓடினான். அவரிடமிருந்து ஒரு மந்திரவாளை பெற்றுக் கொண்டான். எங்கு சென்றாலும் அந்த வாளுடனேயே சென்றான்.

ஒருநாள் பழையனூருக்கு வியாபார விஷயமாக அவன் சென்றபோது, பேய் உருவில் இருந்த நீலி அவனை துரத்த ஆரம்பித்தாள். ஆனால், அவளால் அவனை எதுவும் செய்யமுடியவில்லை. அவனிடமிருந்த மந்திரவாள் அவளை தடுத்தது. உடனே நீலி, கள்ளிக்கொம்பை ஒடித்து அதை குழந்தையாக மாற்றினாள். தானும் ஒரு அழகிய பெண்ணாக மாறினாள். குழந்தையை இடுப்பில் சுமந்தபடி அவனை பின்தொடர்ந்தாள். வணிகன் பயந்துவிட்டான். நேராக பழையனூரில் உள்ள 70 வேளாளர்கள் அடங்கிய சபையில் முறையிட்டான். அழகிய பெண்ணாக உருமாறி இருந்த நீலி அழுதாள். இவர் என் கணவர். தாசி வலையில் விழுந்து என்னையும் எங்கள் குழந்தையையும் நிர்கதியாக விட்டுவிட்டார். எங்களை சேர்த்து வையுங்கள்…” என்று கதறினாள் .

இதை கேட்டு வணிகன் அலறினான். ” பொய். இவள் என் மனைவியே அல்ல. பேய்!” என ஓலமிட்டான். ஆனால், குழந்தை ஓடிச்சென்று அவனை கொஞ்சியது. ”அப்பா…” என்றழைத்து முத்தமிட்டது . இதனை பார்த்த வேளாளர்கள் வணிகன் பொய் சொல்வதாக நினைத்தனர். ”சரி, இன்றிரவு நீங்கள் மூவரும் இங்கேயே தங்குங்கள். நாளை காலையில் மற்ற விஷயங்களை பேசிக் கொள்ளலாம்” என்றபடி வணிகனையும், குழந்தையுடன் இருந்த அந்தப் பெண்ணையும் ஒரே அறையில் தங்க வைத்தனர். முரண்டு பிடித்த வணிகனை அடக்கினர். போகும்போது மறக்காமல் வணிகனிடமிருந்த அந்த மந்திர வாளை வாங்கி சென்றனர். ”உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் எழுபது பேர் இருக்கும்போது இந்த வாள் எதற்கு? உங்களுக்கு ஏதாவது ஆபத்தென்றால் நாங்கள் எழுபது பேரும் தீக்குளிக்கிறோம்” என்று சொல்லிவிட்டு சென்றனர்.

வணிகனின் கையைவிட்டு மந்திரவாள் சென்றதும் அழகிய பெண்ணாக உருமாறியிருந்த நீலி, தன் உருவத்துக்கு வந்தாள். வணிகனை கொன்று பழி தீர்த்தாள். மறுநாள் வணிகனை காப்பாற்ற முடியாமல் போனதற்காக எழுபது வேளாளர்களும் தீக்குளித்து இறந்தார்கள்.




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 23, 2015 4:55 pm

சரவணன் wrote:உங்களுக்கு சாக்ஷாத் அந்த பெருமாளே கணவரா வந்திருக்கார் போலருக்கு!  அதான் உங்க குல தெய்வம் பெருமாள்...
இனி அவர்தான் உங்க ஆள்...

நன்னா கும்பிட்டுக்கொங்கோ :வணக்கம்:

அந்த பெருமாளுக்கு மருமகனே வந்து அருள்வாக்கு சொன்னது போல் உள்ளது சரவணா.
நல்வார்த்தை சொன்ன உங்களை தான் நான் கும்பிடனும்...
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



நம்ம குலதெய்வம் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநம்ம குலதெய்வம் - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நம்ம குலதெய்வம் - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 23, 2015 4:59 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:இதற்கு  மனம் சங்கடப்படுவானேன் விமந்தனி புன்னகை..ஜோசியர் சொல்லித்தானே அவரை ஏற்றுக்கொண்டு இருக்கீங்க புன்னகை .....உங்க மாமனாருக்கும் தெரியலையா உங்க குல தெய்வம் எது என்று? சோகம்

அவருக்கு கூட தெரியாது கிருஷ்ணாம்மா. அவர்தான் குடும்பத்தில் மூத்தவரும் கூட. மேலும் அவருக்கு இதிலெல்லாம் நம்பிக்கை அவ்வளவாக கிடையாது. சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1147294

ம்ம்...சரி சரி..........அது தான் விட்டுப்போச்சு..............புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 23, 2015 5:05 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:ரொம்ப சக்திவாய்ந்த பெருமாள் 'வீர ராகவப்பெருமாள்'............... அவருக்கு 'வைத்தியனாத வீரராகவன்' என்று பேர் கூட உண்டு..தீராத வியாதிகள் எல்லாம் தீரும் புன்னகை
ஓம் நமோ நாராயணாய நம; :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1147296

நம்ம குலதெய்வம் - Page 5 ZcwiCTFS6CBFMT8VoHra+ThiruVallur-1024x645



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 23, 2015 5:07 pm

விமந்தனி wrote:
சரவணன் wrote:உங்களுக்கு சாக்ஷாத் அந்த பெருமாளே கணவரா வந்திருக்கார் போலருக்கு!  அதான் உங்க குல தெய்வம் பெருமாள்...
இனி அவர்தான் உங்க ஆள்...

நன்னா கும்பிட்டுக்கொங்கோ :வணக்கம்:

அந்த பெருமாளுக்கு மருமகனே வந்து அருள்வாக்கு சொன்னது போல் உள்ளது சரவணா.
நல்வார்த்தை சொன்ன உங்களை தான் நான் கும்பிடனும்...
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1147302

அது சரி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Wed Jun 24, 2015 10:02 am

இன்று அருண்பிரகாஷ் அவர்களின் குலதெய்வம் "கருப்பாய் அம்மாள்"  பற்றி பார்ப்போம்.

கருப்பாயி அம்மன் - பாப்பாத்தி அம்மன்

பாப்பாத்தி அம்மன், கருப்பாயி அம்மன் கதைகளை பார்க்கும்போது நம்முடைய முன்னோர்களின் வாழ்கையில் பிரிவு என்பது மிகக் கொடூரமாக இருப்பதை அறிய முடிகிறது. இன்றைய காலக்கட்டத்திலும் காதல் செய்த பலரை பிரிப்பது சமூகமாகவோ, பொருளாதாரமாகவோ இருக்கிறது. ஆனால் இவர்கள் கொண்ட நட்பை வறுமை பிரிக்க பார்க்கிறது. கதையை படியுங்கள், இது மனம் கனக்கும் தோழிமார் கதை.

குடுமியான் மலை. புதுக்கோட்டைக்கு அருகில் இருக்கும் கிராமம். சில தலைமுறைக்கு முன்னால் ஊரே மழையின்றி காய்ந்து போனது. நிலம் காய்ந்து போனதால், விவசாயத்தையே நம்பி இருந்தவர்களுக்கு ஏழ்மை மட்டுமே எஞ்சியது. எங்கு நோக்கினும் வறுமை தாண்டவம் ஆடியுது.

பஞ்சம் தணியும் எனக் காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போனார்கள். இறுதியாக என்ன செய்யலாம் என்று முடிவெடுக்க ஊர்க் கூட்டம் போட்டார்கள். கூடத்தில் இருந்த ஒருவர் மதுரைக்குப் பக்கம் சென்றால் பிழைப்பு தேட வழியுண்டு என்று சொல்ல. ஊரை விட்டு ஒட்டுமொத்தமாய் வெறியேற முடிவெடுத்தார்கள். ஆனால் காலம்காலமாக பாட்டன், பாட்டனுக்குப் பாட்டன் வசித்த பூமியை எளிதாக விட்டுச் செல்ல முடியவில்லை.

மக்களெல்லாம் மண்ணைப் பிரியும் துக்கத்தில் இருக்க, இரண்டு பெண்கள் மடடும் தாங்கள் பிரியப்போவதை எண்ணி அழுது கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்தி பாப்பன வீட்டுப் பெண் பாப்பாத்தி, மற்றொருத்தி கருப்பாயி. இருவரும் சிறுவயது முதல் தோழிகள். ஆச்சாரம் என்று பாப்பாத்தியை கருப்பாயுடன் சேர அனுமதிக்காவிட்டாலும், சாதிய கட்டுப்பாடுகளை தகர்த்து எரிந்துவி்டடு கருப்பாயுடன் நட்பாக இருந்தால் பாப்பாத்தி. வெவ்வேறு சாதியை சார்ந்த பெண்களாக இருந்தாலும் ஒருவர்மேல் ஒருவர் அளவுகட்ந்த அன்பு வைத்திருந்தார்கள்.

தொலைதொடர்பு வசதியெல்லாம் இல்லாத காலம் அது. இருவர் பிரிந்து வெவ்வேறு திசையில் பயணிக்க ஆரமித்தால் மீண்டும் வாழ்க்கையில் சந்திப்பதே கடினம். ஆனால் கருப்பாயி சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் முதலில் ஊரைவிட்டு செல்வதென முடிவெடுத்தார்கள். மாட்டு வண்டியில் பொருட்களையெல்லாம் ஏற்றிக் கொண்டு புறப்படத் தயாரானார்கள். “பாப்பாத்தியுடனே இருந்து கொள்கிறேன்” என உறவுகளுடனும், பெற்றவர்களுடனும் செல்ல மறுத்தாள் கருப்பாயி. பாப்பாத்தியோ “அவர்களுடன் நானும் செல்கிறேன். அனுமதிகொடுங்கள்” என்று கெஞ்சினாள்.

இருவரின் சொற்களையும் காதில் போட்டுக்கொள்ளக் கூட யாரும் தயாராய் இல்லை. பாப்பாத்தியை அவர்கள் வீட்டிற்குள் அடைத்துவைத்தார்கள். கருப்பாயை அவளின் சொந்தங்கள் கட்டாயப்படுத்தி அழைத்து சென்றார்கள். இருவருக்கும் அழுவது தவிற வேறெதையும் செய்ய முடியவில்லை. கருப்பாயி உறவுகள் நெடு நேரம் நடந்து சென்றார்கள். இரவு நெருங்கியதும் ஓய்வெடுக்க முடிவெடுத்தார்கள். நல்ல இடமாக பார்த்து எல்லோரும் தூங்கத் தொடங்கினார்கள். வண்டிமாடுகள் கூட கண்கள் அசந்தன. ஆனால் கருப்பாயி மட்டும் பாப்பத்தியைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாள்.

திடிரென ஒரு முடிவுக்கு வந்தவளாய், வந்த வழியே ஓடத்தொடங்கினாள் கருபப்பாயி. அவர்கள் தங்கியிருந்தப் பகுதி அடர்ந்த காடு. தனியாக செல்கிறோமென்ற பயமும் அவளிடம் இல்லை. பாப்பாயை பார்த்தால் போதும் என சக்தி வந்தவளாய் ஆவேசமாய் ஓடுகினாள். பாதி வழியில் எதிரே ஒரு உருவம் வருவது தெரிகிறது. அருகில் சென்று பார்த்தால் அது பாப்பாத்தி. யாருக்கும் தெரியாமல் பாப்பாத்தியை தேடி கருப்பாயி ஓடிவந்தது போலவே பாப்பாத்தியும் வந்திருந்தாள்.

கருப்பாயிக்கு என்ன யோசனை தோன்றியதோ, அதுவே பாப்பாத்திக்கும் தோன்றியது. கருப்பாயின் உறவுகள் பாப்பாத்தியை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. பாப்பாத்தியின் உறவுகள் கருப்பாயை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே “உயிரோடு இருந்தால் தானே பிரிப்பார்கள். ஒன்றாய் இறந்து போனால் என்ன செய்வார்கள் ” என விபரீதமான முடிவை சேர்ந்தே எடுத்தார்கள்.

பொழுது விடிந்ததும் கருப்பாயை காணாமல் ஒரு புறம் அவளின் உறவுகள் தேட, பாப்பாத்தியை காணாமல் மறுபுறம் அவளின் உறவுகள் தேடினார்கள். இந்த இரண்டு கூட்டமும் நடுக்காட்டில் சந்தித்துக் கொள்ள, இருவரையும் சேர்ந்து தேடத் தோடங்கினார்கள். அடர்ந்த காட்டையும், ஊரையும் சல்லடைப் போட்டு தேடிக் கொண்டிருக்கும் போது, ஒரு மொட்டைக் கிணற்றில் மிதந்து கொண்டிருந்தார்கள், கருப்பாயும், பாப்பாத்தியும்.

வாழ வேண்டிய வயதில் இரண்டு கன்னிப் பெண்களின் சாவைக் கண்டு கதிகலங்கி போனார்கள் இரண்டு கூட்டமும். சாதி பேரைச் சொல்லி இழந்தது போதுன்னு இரண்டு பிணங்களையும் ஒன்னாவே எரித்துவிட்டு, சாதி பார்க்காம இரண்டு பேரையும் வணங்கத் தொடங்கினார்கள்.



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 24, 2015 10:51 am

மனம் கனக்கும் கதை ...... அழுகை அழுகை அழுகை
.
.
.
பகிர்வுக்கு நன்றி ராஜ் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 24, 2015 11:14 am

விமந்தனி wrote:
எல்லாருக்கும் அம்மன் போன்ற பெண்தெய்வங்கள் / ஐயனார், மதுரை வீரன் போன்ற ஆண் தெய்வங்கள் குல தெய்வமாக இருக்கும் போது, எங்களுக்கு மட்டும் எப்படி பெருமாள்...? என்ற கேள்வி என்னுள் இன்னமும் குடைந்து கொண்டே தான் இருக்கிறது.
அதான் சொன்னேனே , குலதெய்வம் தெரியாதவர்கள் , பெருமாளை கும்பிட்டுகொள்வார்கள்.

எதற்கும் தமிழ்நேசன் சொன்னமாதிரி முயற்சி செய்து பாருங்கள் அக்கா , முன்னோர்கள் ஆசி உங்களுக்கு கிடைக்கும்





ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 24, 2015 11:44 am

விமந்தனி wrote:

இதுவும் பார்த்தேன் தமிழ். இதிலும் அசைவம் பிரச்சனையாக இருக்கிறதே. அது தான் வருத்தம்.
மேற்கோள் செய்த பதிவு: 1147273


குலதெய்வம் என்றாலே கிடாவெட்டி சரக்கு படையல் போட்டு கும்பிடுவது தானே புன்னகை அக்கா

அருண்பிரகாஷ்
அருண்பிரகாஷ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 04/07/2014

Postஅருண்பிரகாஷ் Wed Jun 24, 2015 12:02 pm

rajaalways wrote:இன்று அருண்பிரகாஷ் அவர்களின் குலதெய்வம் "கருப்பாய் அம்மாள்"  பற்றி பார்ப்போம்.

கருப்பாயி அம்மன் - பாப்பாத்தி அம்மன்

பாப்பாத்தி அம்மன், கருப்பாயி அம்மன் கதைகளை பார்க்கும்போது நம்முடைய முன்னோர்களின் வாழ்கையில் பிரிவு என்பது மிகக் கொடூரமாக இருப்பதை அறிய முடிகிறது. இன்றைய காலக்கட்டத்திலும் காதல் செய்த பலரை பிரிப்பது சமூகமாகவோ, பொருளாதாரமாகவோ இருக்கிறது. ஆனால் இவர்கள் கொண்ட நட்பை வறுமை பிரிக்க பார்க்கிறது. கதையை படியுங்கள், இது மனம் கனக்கும் தோழிமார் கதை.

குடுமியான் மலை. புதுக்கோட்டைக்கு அருகில் இருக்கும் கிராமம்.....
மேற்கோள் செய்த பதிவு: 1147506

மிக்க நன்றி ராஜா அவர்களே நம்ம குலதெய்வம் - Page 5 1571444738 ...உங்களுக்கு எப்படி என் குலதெய்வம்  "கருப்பாயீ அம்மாள்" பற்றிய தோழிமார் கதை கிடைத்தது...?

rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Wed Jun 24, 2015 3:30 pm

யாருக்கவது கருப்பு சாமியின் வரலாறு தெரியுமா?

Sponsored content

PostSponsored content



Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக