புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மர்பி விதிகள்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
1947 முதல் 1949 வரை MX981 என்னும் புராஜக்ட் எட்வர்ட்ஸ் விமானப் படைத் தளத்தில் (முராக் எனும் இடத்தில்) ஒரு அறிவியல் சோதனை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது.
அதில் எட்வர்ட் மர்பி அவர்கள் மின்சார மீட்டர்களைப் பார்க்கும் வேலை செய்து வந்தார். அதில் ஏற்பட்ட ஒரு தவறுக்கு அவரது உதவியாளரைக் காரணம் காட்டி சொன்னதே முதல் மர்பி விதியாகும். அந்த விதி, "If that guy has any way of making a mistake, he will." அதன் பின்னரே, மிகவும் பிரசித்தி பெற்ற "ஒரு விஷயம் தவறாக நடக்க வாய்ப்பிருக்குமேயானால், அது தவறாகவே நடக்கும்" - "If it can go wrong, it will" போன்ற விதிகள் அவரால் சொல்லப்பட்டன.
ஆனால் இது வெளியே வந்ததற்கு முக்கியக் காரணம், அவரது மேலதிகாரி, ஸ்டேப் (Stapp) என்பவர் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் தனது உதவியாளர் மர்பியை மறக்காமல் குறிப்பிட்டு, அவரது இந்த விதிகளைத் தாங்கள் உதாசீனப்படுத்தாமல் கவனத்துடன் செயல்பட்டதால் தங்களால் சாதிக்க முடிந்தது என்று கூறியது தான்.
1947 முதல் 1949 வரை MX981 என்னும் புராஜக்ட் எட்வர்ட்ஸ் விமானப் படைத் தளத்தில் (முராக் எனும் இடத்தில்) ஒரு அறிவியல் சோதனை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது.
அதில் எட்வர்ட் மர்பி அவர்கள் மின்சார மீட்டர்களைப் பார்க்கும் வேலை செய்து வந்தார். அதில் ஏற்பட்ட ஒரு தவறுக்கு அவரது உதவியாளரைக் காரணம் காட்டி சொன்னதே முதல் மர்பி விதியாகும். அந்த விதி, "If that guy has any way of making a mistake, he will." அதன் பின்னரே, மிகவும் பிரசித்தி பெற்ற "ஒரு விஷயம் தவறாக நடக்க வாய்ப்பிருக்குமேயானால், அது தவறாகவே நடக்கும்" - "If it can go wrong, it will" போன்ற விதிகள் அவரால் சொல்லப்பட்டன.
ஆனால் இது வெளியே வந்ததற்கு முக்கியக் காரணம், அவரது மேலதிகாரி, ஸ்டேப் (Stapp) என்பவர் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் தனது உதவியாளர் மர்பியை மறக்காமல் குறிப்பிட்டு, அவரது இந்த விதிகளைத் தாங்கள் உதாசீனப்படுத்தாமல் கவனத்துடன் செயல்பட்டதால் தங்களால் சாதிக்க முடிந்தது என்று கூறியது தான்.
381. ஒரு நாட்டின் அதிகாரத்துவமும், சாக்கடையும் ஒன்று தான். கழிசடைகள் மட்டுமே மேலே வர முடியும்.
382. ஒரு நிறுவனத்தின் முன்னறையின் ஜொலிப்பும், அதன் வெற்றியும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.
383. ஒரு நாட்டில் இருக்கும் கொடுமைகளின் மொத்த அளவு ஒரு மாறிலியாகும். எனவே ஒருபுறம் ஏழ்மையும், வேலையில்லாத் திண்டாட்டமும் ஒழிந்தால் இன்னொருபுறம் கொள்ளையும் சுகாதாரக் கேடும், சுற்றுச் சூழல் பாதிப்பும் ஏற்படும்.
384. அடுத்தவரின் செலவு எப்போதும் ஊதாரித்தனமாகவும் தேவையில்லாததாகவும் இருக்கும்.
385. குறுக்கு வழி என்பது இரண்டு இடங்களுக்கிடையேயுள்ள அதிகபட்ச தூரத்தினைக் குறிக்கும்.
386. எப்படிப்பார்த்தாலும் காகிதத்தின் உபயோகம் குறையப் போவதில்லை. ஜனநாயகமாக இருந்தால் எந்த ஒரு படிவத்தையும் நான்கு படிகள் எடுத்தே கொடுக்கவேண்டும். முதலாளித்துவமாக இருந்தால் எந்த ஒரு பொருளையும் நான்கு தாள்கள் கொண்டு சுற்றிக் கொடுக்க வேண்டும்.
387. எந்த ஒரு மனிதனின் உரிமையும், உடமையும் பாதுகாப்பானதல்ல, பாராளுமன்றம் நடப்பில் இருக்கும் வரை. எப்போது வேண்டுமானாலும் சட்டம் இயற்றி அதைப் பறித்துக் கொள்ளலாம்.
388. கடையிலிருந்து வாகனம் இருக்கும் தூரமும் உங்களிடம் இருக்கும் பொருட்களின் எடையளவும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.
389. மாற்றம் என்பது ஒரு தலைமைக்குப் பொதுவானது. அதுவே மற்றவர்கள் செய்வதற்குள் செய்து விட்டால் வெற்றியாகிறது.
390. ஐந்து மாதங்களில் மூன்று நல்ல கூட்டங்கள் நடைபெற்றால் அவை அனைத்தும் ஒரே நாளில் அமையப் பெறும்.
391. வாகனத்திலிருந்து விழும் எந்த ஒரு பொருளும் அதன் புவிநடுப் புள்ளியில் தான் விழும்.
392. யார் ஒருவன் தவறு வரும் போது சிரிக்கிறானோ அவன் அந்தத் தவறை யார் மீது சுமத்தலாம் என்று தெரிந்து கொண்டான் என்று அர்த்தம்.
393. ஒரு வேலை நடக்க வேண்டுமாயின் அதைச் செய்பவரைத் தேடுங்கள். அதைப்பற்றி எழுதுபவரோ, மேற்பார்வை பார்ப்பவரோ, முறைப்படுத்துபவரையோ பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.
394. எந்த ஒரு அறிக்கையும் நான்கு காலங்களைக் கொண்டதாக இருக்கும். 1. இறந்த காலம் 2. நிகழ் காலம் 3. எதிர்காலம் 4. இவையனைத்துக்கும் மேலான ஊகம்.
395. எப்போதும் மேலாளர் தான் முதலில் வர வேண்டும்.
396. தமது பிரச்னைகளைத் தீர்க்க சிக்கனம்மாக இருப்பார்கள். மற்றவர்கள் பிரச்னைக்கோ தாராளமான ஆலோசனை சொல்வார்கள்
397. ஒரு விஷயத்தைக் காலி செய்ய வேண்டுமானால் அதை நிர்வகிக்க ஒரு கமிட்டியை உருவாக்கினால் போதும்.
398. நீங்கள் முன்பே ஒரு வழியில் ஒரு விஷயத்தைச் செய்திருந்தால் அது தவறானதாகவே இருந்திருக்கும்.
399. ப = க / சா. ஒரு நிர்வாகத்தில் ஒருவருக்கு இருக்கும் பதவியின் அளவு அவர் திறக்க வேண்டிய கதவுகளையும் அதற்கு அவர் வைத்திருக்கும் சாவிகளையும் பொருத்ததாகும். அதாவது காவலாளியிடம் 20 சாவிகள் இருக்கும், 20 கதவுகளுக்கு (ப = 1) . மேலாளருக்கு 2 கதவுகள், 1 சாவி (ப = 2), முதலாளிக்கோ சாவி தேவையில்லை (ப = ∞).
400. ஒரு கூட்டத்தின் பயனும் அதில் கலந்து கொண்டவர்களின் எண்ணீக்கையும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.
382. ஒரு நிறுவனத்தின் முன்னறையின் ஜொலிப்பும், அதன் வெற்றியும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.
383. ஒரு நாட்டில் இருக்கும் கொடுமைகளின் மொத்த அளவு ஒரு மாறிலியாகும். எனவே ஒருபுறம் ஏழ்மையும், வேலையில்லாத் திண்டாட்டமும் ஒழிந்தால் இன்னொருபுறம் கொள்ளையும் சுகாதாரக் கேடும், சுற்றுச் சூழல் பாதிப்பும் ஏற்படும்.
384. அடுத்தவரின் செலவு எப்போதும் ஊதாரித்தனமாகவும் தேவையில்லாததாகவும் இருக்கும்.
385. குறுக்கு வழி என்பது இரண்டு இடங்களுக்கிடையேயுள்ள அதிகபட்ச தூரத்தினைக் குறிக்கும்.
386. எப்படிப்பார்த்தாலும் காகிதத்தின் உபயோகம் குறையப் போவதில்லை. ஜனநாயகமாக இருந்தால் எந்த ஒரு படிவத்தையும் நான்கு படிகள் எடுத்தே கொடுக்கவேண்டும். முதலாளித்துவமாக இருந்தால் எந்த ஒரு பொருளையும் நான்கு தாள்கள் கொண்டு சுற்றிக் கொடுக்க வேண்டும்.
387. எந்த ஒரு மனிதனின் உரிமையும், உடமையும் பாதுகாப்பானதல்ல, பாராளுமன்றம் நடப்பில் இருக்கும் வரை. எப்போது வேண்டுமானாலும் சட்டம் இயற்றி அதைப் பறித்துக் கொள்ளலாம்.
388. கடையிலிருந்து வாகனம் இருக்கும் தூரமும் உங்களிடம் இருக்கும் பொருட்களின் எடையளவும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.
389. மாற்றம் என்பது ஒரு தலைமைக்குப் பொதுவானது. அதுவே மற்றவர்கள் செய்வதற்குள் செய்து விட்டால் வெற்றியாகிறது.
390. ஐந்து மாதங்களில் மூன்று நல்ல கூட்டங்கள் நடைபெற்றால் அவை அனைத்தும் ஒரே நாளில் அமையப் பெறும்.
391. வாகனத்திலிருந்து விழும் எந்த ஒரு பொருளும் அதன் புவிநடுப் புள்ளியில் தான் விழும்.
392. யார் ஒருவன் தவறு வரும் போது சிரிக்கிறானோ அவன் அந்தத் தவறை யார் மீது சுமத்தலாம் என்று தெரிந்து கொண்டான் என்று அர்த்தம்.
393. ஒரு வேலை நடக்க வேண்டுமாயின் அதைச் செய்பவரைத் தேடுங்கள். அதைப்பற்றி எழுதுபவரோ, மேற்பார்வை பார்ப்பவரோ, முறைப்படுத்துபவரையோ பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.
394. எந்த ஒரு அறிக்கையும் நான்கு காலங்களைக் கொண்டதாக இருக்கும். 1. இறந்த காலம் 2. நிகழ் காலம் 3. எதிர்காலம் 4. இவையனைத்துக்கும் மேலான ஊகம்.
395. எப்போதும் மேலாளர் தான் முதலில் வர வேண்டும்.
396. தமது பிரச்னைகளைத் தீர்க்க சிக்கனம்மாக இருப்பார்கள். மற்றவர்கள் பிரச்னைக்கோ தாராளமான ஆலோசனை சொல்வார்கள்
397. ஒரு விஷயத்தைக் காலி செய்ய வேண்டுமானால் அதை நிர்வகிக்க ஒரு கமிட்டியை உருவாக்கினால் போதும்.
398. நீங்கள் முன்பே ஒரு வழியில் ஒரு விஷயத்தைச் செய்திருந்தால் அது தவறானதாகவே இருந்திருக்கும்.
399. ப = க / சா. ஒரு நிர்வாகத்தில் ஒருவருக்கு இருக்கும் பதவியின் அளவு அவர் திறக்க வேண்டிய கதவுகளையும் அதற்கு அவர் வைத்திருக்கும் சாவிகளையும் பொருத்ததாகும். அதாவது காவலாளியிடம் 20 சாவிகள் இருக்கும், 20 கதவுகளுக்கு (ப = 1) . மேலாளருக்கு 2 கதவுகள், 1 சாவி (ப = 2), முதலாளிக்கோ சாவி தேவையில்லை (ப = ∞).
400. ஒரு கூட்டத்தின் பயனும் அதில் கலந்து கொண்டவர்களின் எண்ணீக்கையும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.
401. ஒரு பொருளுக்குத் தரப்பட்ட உத்திரவாதம் அந்தப் பொருளுக்கான பணத்தைச் செலுத்தியவுடன் முடிவுறுகிறது.
402. எந்த ஒரு துணியையும் சரியான அளவுக்கு வெட்டியவுடன் அது அளவில் சுருங்கிவிடும்.
403. நீங்கள் ஒரு பொருளின் காப்புரிமைக்கு விண்ணப்பம் அனுப்புவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னரே உங்களின் முகம் தெரியாத இன்னொரு நண்பரால் அதே பொருளுக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டிருக்கும்.
404. ஒரு இயந்திரத்தை உருவாக்க n பொருட்கள் தேவைப்படுமாயின் நம்மிடம் n-1 பொருட்கள் தான் இருக்கும்.
405. வாழ்க்கை என்பது நீங்கள் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் போது உங்களைக் கடந்து செல்வதாகும்.
406. பத்திரிகையில் காணப்படும் அனைத்தும் உண்மையானவை தான். நீங்களே நேரடியாக பார்த்த விஷயங்கள் தவிர. (எவ்வளவு உண்மை!)
407. ஒரு விஷயத்தின் கடினத் தன்மையும் அதைப் பற்றிய விவாதத்தின் நேரமும் எதிர்விகிதத்திலேயே இருக்கும்.
408. எந்த ஒரு விஷயம் நிறைய பேருக்கு அசௌகரியத்தைத் தருகிறதோ அது நடந்தே தீரும்.
409. யாருமே செய்யாத ஒரு காரியத்தை நீங்களாக எடுத்து செய்தால் அதை வாழ்க்கை முழுவதும் நீங்களே செய்ய வேண்டியிருக்கும்.
410. ஏமாற்றம் என்பது மறக்க முடியாத ஒன்று தான். ஆனால் நீங்கள் அடைய விரும்பியதை அடைவதால் ஏற்படும் கஷ்டங்களை விட அது பெரிதல்ல.
411. வரி செலுத்துபவர் யாரெனின், அரசாங்கத்துக்கு சேவை செய்வதற்காக IAS படிக்காதவர்!
412. சூடான பாத்திரமும் தண்மையான பாத்திரமும் பார்க்க ஒன்று போல தான் இருக்கும்.
413. எதுவுமே இன்னொன்றைச் சார்ந்தே இருக்கிறது.
414. வரி என்பது வரி செலுத்துபவரின் பயனுக்காக வசூலிக்கப்படுவதல்ல.
415. ரூ.100/-ஐ 7% வட்டிக்கு 200 ஆண்டுகளுக்கு ஒரு வங்கியில் போட்டு வைத்தோமேயானால் அதன் அளவு அப்போது ரூ. 1 கோடியையும் தாண்டி நிற்கும். ஆனால் அதன் மதிப்போ ரூ.100/-க்கும் குறைவாகவே இருக்கும்.
416. உள்ளூர்காரன் தான் தாமதமாக வருவான்.
417. ஒரே தவறைத் திரும்ப திரும்ப செய்தால் அது சரியாகி விடும்.
418. சத்தமாகப் பேசுவது தவறு செய்பவரின் கேடயம் ஆகும்.
419. எந்த ஒரு கண்டுபிடிப்பையும் நல்லவனை விட கெட்டவனே அதிகம் உபயோகிப்பான்.
420. எந்தத் தீர்மானம் ஒருமனதாக தீர்மானிக்கப்படுகிறதோ அது ஒரு மனதால் தீர்மானிக்கப்படுகிறது.
402. எந்த ஒரு துணியையும் சரியான அளவுக்கு வெட்டியவுடன் அது அளவில் சுருங்கிவிடும்.
403. நீங்கள் ஒரு பொருளின் காப்புரிமைக்கு விண்ணப்பம் அனுப்புவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னரே உங்களின் முகம் தெரியாத இன்னொரு நண்பரால் அதே பொருளுக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டிருக்கும்.
404. ஒரு இயந்திரத்தை உருவாக்க n பொருட்கள் தேவைப்படுமாயின் நம்மிடம் n-1 பொருட்கள் தான் இருக்கும்.
405. வாழ்க்கை என்பது நீங்கள் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் போது உங்களைக் கடந்து செல்வதாகும்.
406. பத்திரிகையில் காணப்படும் அனைத்தும் உண்மையானவை தான். நீங்களே நேரடியாக பார்த்த விஷயங்கள் தவிர. (எவ்வளவு உண்மை!)
407. ஒரு விஷயத்தின் கடினத் தன்மையும் அதைப் பற்றிய விவாதத்தின் நேரமும் எதிர்விகிதத்திலேயே இருக்கும்.
408. எந்த ஒரு விஷயம் நிறைய பேருக்கு அசௌகரியத்தைத் தருகிறதோ அது நடந்தே தீரும்.
409. யாருமே செய்யாத ஒரு காரியத்தை நீங்களாக எடுத்து செய்தால் அதை வாழ்க்கை முழுவதும் நீங்களே செய்ய வேண்டியிருக்கும்.
410. ஏமாற்றம் என்பது மறக்க முடியாத ஒன்று தான். ஆனால் நீங்கள் அடைய விரும்பியதை அடைவதால் ஏற்படும் கஷ்டங்களை விட அது பெரிதல்ல.
411. வரி செலுத்துபவர் யாரெனின், அரசாங்கத்துக்கு சேவை செய்வதற்காக IAS படிக்காதவர்!
412. சூடான பாத்திரமும் தண்மையான பாத்திரமும் பார்க்க ஒன்று போல தான் இருக்கும்.
413. எதுவுமே இன்னொன்றைச் சார்ந்தே இருக்கிறது.
414. வரி என்பது வரி செலுத்துபவரின் பயனுக்காக வசூலிக்கப்படுவதல்ல.
415. ரூ.100/-ஐ 7% வட்டிக்கு 200 ஆண்டுகளுக்கு ஒரு வங்கியில் போட்டு வைத்தோமேயானால் அதன் அளவு அப்போது ரூ. 1 கோடியையும் தாண்டி நிற்கும். ஆனால் அதன் மதிப்போ ரூ.100/-க்கும் குறைவாகவே இருக்கும்.
416. உள்ளூர்காரன் தான் தாமதமாக வருவான்.
417. ஒரே தவறைத் திரும்ப திரும்ப செய்தால் அது சரியாகி விடும்.
418. சத்தமாகப் பேசுவது தவறு செய்பவரின் கேடயம் ஆகும்.
419. எந்த ஒரு கண்டுபிடிப்பையும் நல்லவனை விட கெட்டவனே அதிகம் உபயோகிப்பான்.
420. எந்தத் தீர்மானம் ஒருமனதாக தீர்மானிக்கப்படுகிறதோ அது ஒரு மனதால் தீர்மானிக்கப்படுகிறது.
421. நகைச்சுவை வரவழைக்க பார்க்க சகிக்காதவராக இருக்க வேண்டும்.
422. ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு. அந்த சமயத்தில் பெரிய்ய்ய்ய மீன் வந்து கொக்கையே இழுத்துக் கொண்டு சென்றுவிடுமாம்!
423. வீதியில் கிடக்கும் குப்பையின் அளவும், வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையும் நேர்விகிதத்திலேயே இருக்கும்.
424. மேதைகள் சொல்வதை எந்நேரமும் கேட்டுக்கொள்ளுங்கள். அவர்களை எதை எப்போது செய்யக்கூடாது என்று சொல்கிறார்களோ, அதை அப்போது செய்யுங்கள். முன்னேறிவிடலாம்.
425. எந்த ஒரு தலைமுறை சரித்திரத்தை மறக்கிறதோ அவர்களுக்கு இறந்த காலம் இருக்காது. எதிர்காலமும்.
426. மனிதனின் முட்டாள்தனத்தைப் பற்றி மட்டும் குறைத்து எடை போடக்கூடாது.
427. ஒரு குடும்ப விவாதத்தில் நீங்கள் சொல்வது எப்போது சரி என்று தோன்றுகிறதோ அப்போதே மன்னிப்பு கேட்டுக் கொள்ளவேண்டும்.
428. வரலாறு எப்போதாவது பதிவு செய்திருக்கிறதா என்ன? பெரும்பான்மையினர் எடுக்கும் முடிவு சரியாய் இருக்கும் என்று.
429. ரகசியம் என்பது வதந்தியின் ஆரம்பம்.
430. சூழ்நிலை அமையும் போது தவறு செய்து விட வேண்டும். மீண்டும் ஒரு முறை சந்தர்ப்பம் வாய்க்குமா என்ன?
431. இயற்கையின் நியதிகளில் இரக்கத்துக்கு இடமே கிடையாது.
432. ஒரு கமிட்டி என்பது ஆறுக்கும் மேற்பட்ட கால்களுடைய மூளையே இல்லாத ஒரு உயிரமைப்பு ஆகும்.
433. எந்த ஒரு நல்ல விஷயமும் தண்டனைக்குத் தப்புவதில்லை.
434. ஒரு முக்காலியின் முக்கியமான கால் உடைந்து போன அந்த மூன்றாவது கால் தான்!
435. யார் தயங்குகிறார்களோ அவர்களே கடைசி.
436. நீங்கள் டைட்டானிக்கில் செல்வது என்றாகிவிட்டது. முதல் வகுப்பில் சென்றால் தான் என்ன?
437. நிர்வாகத்திறன் என்பது அந்த நிர்வாகத்துக்குத் தேவையான அளவை விட எப்போதுமே குறைவாகவே இருக்கும்.
438. பணம் சம்பாதிப்பதற்கான சிறந்த வழி அதை இழக்காமல் இருப்பதில் இருக்கிறது.
439. எந்த ஒரு நிர்வாகத்திலும் அதிகமாக மேலாளர்களே இருப்பார்கள்.
440. காதல் வேதியியல் சம்பந்தப்பட்டது. கலவியோ இயற்பியல்.
422. ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு. அந்த சமயத்தில் பெரிய்ய்ய்ய மீன் வந்து கொக்கையே இழுத்துக் கொண்டு சென்றுவிடுமாம்!
423. வீதியில் கிடக்கும் குப்பையின் அளவும், வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையும் நேர்விகிதத்திலேயே இருக்கும்.
424. மேதைகள் சொல்வதை எந்நேரமும் கேட்டுக்கொள்ளுங்கள். அவர்களை எதை எப்போது செய்யக்கூடாது என்று சொல்கிறார்களோ, அதை அப்போது செய்யுங்கள். முன்னேறிவிடலாம்.
425. எந்த ஒரு தலைமுறை சரித்திரத்தை மறக்கிறதோ அவர்களுக்கு இறந்த காலம் இருக்காது. எதிர்காலமும்.
426. மனிதனின் முட்டாள்தனத்தைப் பற்றி மட்டும் குறைத்து எடை போடக்கூடாது.
427. ஒரு குடும்ப விவாதத்தில் நீங்கள் சொல்வது எப்போது சரி என்று தோன்றுகிறதோ அப்போதே மன்னிப்பு கேட்டுக் கொள்ளவேண்டும்.
428. வரலாறு எப்போதாவது பதிவு செய்திருக்கிறதா என்ன? பெரும்பான்மையினர் எடுக்கும் முடிவு சரியாய் இருக்கும் என்று.
429. ரகசியம் என்பது வதந்தியின் ஆரம்பம்.
430. சூழ்நிலை அமையும் போது தவறு செய்து விட வேண்டும். மீண்டும் ஒரு முறை சந்தர்ப்பம் வாய்க்குமா என்ன?
431. இயற்கையின் நியதிகளில் இரக்கத்துக்கு இடமே கிடையாது.
432. ஒரு கமிட்டி என்பது ஆறுக்கும் மேற்பட்ட கால்களுடைய மூளையே இல்லாத ஒரு உயிரமைப்பு ஆகும்.
433. எந்த ஒரு நல்ல விஷயமும் தண்டனைக்குத் தப்புவதில்லை.
434. ஒரு முக்காலியின் முக்கியமான கால் உடைந்து போன அந்த மூன்றாவது கால் தான்!
435. யார் தயங்குகிறார்களோ அவர்களே கடைசி.
436. நீங்கள் டைட்டானிக்கில் செல்வது என்றாகிவிட்டது. முதல் வகுப்பில் சென்றால் தான் என்ன?
437. நிர்வாகத்திறன் என்பது அந்த நிர்வாகத்துக்குத் தேவையான அளவை விட எப்போதுமே குறைவாகவே இருக்கும்.
438. பணம் சம்பாதிப்பதற்கான சிறந்த வழி அதை இழக்காமல் இருப்பதில் இருக்கிறது.
439. எந்த ஒரு நிர்வாகத்திலும் அதிகமாக மேலாளர்களே இருப்பார்கள்.
440. காதல் வேதியியல் சம்பந்தப்பட்டது. கலவியோ இயற்பியல்.
441. எந்த ஒரு பனிப்பாறையின் எட்டில் ஏழு பங்கும் கண்ணுக்குத் தெரிவதில்லை.
442. ஒரு விஷயம் பற்றிய எந்த இரு மனிதர்களின் புரிதலும் சரி சமமாக இருப்பதில்லை.
443. ஒரு திட்டத்திற்கு ஒதுக்கப்படும் பணத்தின் அளவுக்கு அதன் செலவும் உயர்ந்து கொண்டே வரும்.
444. எந்த ஒரு கமிட்டியின் முடிவும் செலவை அதிகரிப்பதாகவே இருக்கும்.
445. ஒரு முட்டாள் உயர்ந்த பதவியில் இருந்தால் அதற்கு சிறந்த உதாரணம், ஒரு மலையின் மேல் ஒருவன் நிற்பதாகும். அவனுக்கும் அனைத்தும் சிறியதாகத் தெரியும். அவனைப் பார்ப்பவர்களுக்கும் அவன் சிறியதாகவே தெரிவான்!
446. எந்த ஒரு அரசியல்வாதி ஒரு பிரச்னையைத் தீர்ப்பதற்கு அதிகமாக செலவு செய்கிறாரோ அவரே தேர்ந்தெடுக்கப்படுவார். பிரச்னை வருவதை முன்கூட்டியே அறிந்து அதை வரும் முன் களைய முற்படும் அரசியல்வாதியோ சீக்கிரமே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்.
447. ஆலோசகர் என்பவர் உங்களிடமே தகவல்களை வாங்கி உங்களுக்கே திருப்பித் தருபவர் ஆவார்!
448. 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மனிதர்கள் (ஆண்களானாலும் பெண்களானாலும்) சில அடி தூரத்துக்குள் தங்கள் மாமியார் வந்தாலே வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள்.
449. யாரால் முடியுமோ அவர்கள் செய்கிறார்கள். யாரால் முடியவில்லையோ அவர்கள் கற்பிக்கிறார்கள். யாரால் கற்பிக்க முடிவதில்லையோ அவர்கள் நிர்வாகஸ்தர்கள் ஆகிறார்கள்.
450. ஒரு விஷயத்தைச் சரியான நேரத்துக்குள் முடிப்பதற்கு நேரமிருப்பதில்லை. ஆனால் அதை மீண்டும் செய்வதற்கு மட்டும் நேரமிருக்கும்.
451. குறைவே நிறைவு.
452. எதுவுமே நிரந்தரமுமல்ல. எதுவுமே முடிவுமல்ல.
453. ஒரு கயிறுக்கு ஒரு முனை இருந்தால் கண்டிப்பாக இன்னொரு முனையும் இருக்கும்!
454. நம்முடைய சிந்தனை அனைத்துமே "ரொம்ப காலம் கழித்து மெல்ல இறக்க வேண்டும். அதே சமயம் இளமையாகவும் இருக்க வேண்டும்" என்பதாகும். (கூழுக்கும் ஆசை. மீசைக்கும் ஆசை!)
455. பணம் சாணத்தைப் போன்றது. அதை கலந்து தெளித்துவிட்டால் நல்ல மருந்தாகும். ஆனால் ஒரே இடத்தில் தேக்கி வைத்து விட்டால் இடமே நாசமாகி விடும்.
456. ஆராய்ச்சி என்பது இதுவரை யாருமே படித்திராத இரண்டு புத்தகங்களைப் படித்து யாருமே படிக்கவிராத மூன்றாம் புத்தகத்தை எழுதுவதாகும்!
457. புள்ளியியல் என்பது ஒரு துல்லியமான அறிவியலாகும். அது சொல்வது எல்லாம் பாதி உண்மைகளை மட்டுமே.
458. வளர்ந்து கொண்டிருக்கும் நாட்டில் தண்ணீர் அருந்தாதே.(நீர் கெட்டிருக்கும்.) வளர்ந்து விட்ட நாட்டில் சுவாசம் செய்யாதே. (காற்றே கெட்டிருக்கும்.)
459. ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒரு அருமையான தீர்வு ஒன்று உண்டு. பிரச்னையே அதைக் கண்டுபிடிப்பது தான்! (இது எப்படி?)
460. ஒன்று சிகரத்தில் இருக்கவேண்டும். அல்லது அதல பாதாளத்தில் இருக்க வேண்டும். பாதியில் இருந்தால் கஷ்டம் தான் எப்போதும்.
442. ஒரு விஷயம் பற்றிய எந்த இரு மனிதர்களின் புரிதலும் சரி சமமாக இருப்பதில்லை.
443. ஒரு திட்டத்திற்கு ஒதுக்கப்படும் பணத்தின் அளவுக்கு அதன் செலவும் உயர்ந்து கொண்டே வரும்.
444. எந்த ஒரு கமிட்டியின் முடிவும் செலவை அதிகரிப்பதாகவே இருக்கும்.
445. ஒரு முட்டாள் உயர்ந்த பதவியில் இருந்தால் அதற்கு சிறந்த உதாரணம், ஒரு மலையின் மேல் ஒருவன் நிற்பதாகும். அவனுக்கும் அனைத்தும் சிறியதாகத் தெரியும். அவனைப் பார்ப்பவர்களுக்கும் அவன் சிறியதாகவே தெரிவான்!
446. எந்த ஒரு அரசியல்வாதி ஒரு பிரச்னையைத் தீர்ப்பதற்கு அதிகமாக செலவு செய்கிறாரோ அவரே தேர்ந்தெடுக்கப்படுவார். பிரச்னை வருவதை முன்கூட்டியே அறிந்து அதை வரும் முன் களைய முற்படும் அரசியல்வாதியோ சீக்கிரமே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்.
447. ஆலோசகர் என்பவர் உங்களிடமே தகவல்களை வாங்கி உங்களுக்கே திருப்பித் தருபவர் ஆவார்!
448. 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மனிதர்கள் (ஆண்களானாலும் பெண்களானாலும்) சில அடி தூரத்துக்குள் தங்கள் மாமியார் வந்தாலே வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள்.
449. யாரால் முடியுமோ அவர்கள் செய்கிறார்கள். யாரால் முடியவில்லையோ அவர்கள் கற்பிக்கிறார்கள். யாரால் கற்பிக்க முடிவதில்லையோ அவர்கள் நிர்வாகஸ்தர்கள் ஆகிறார்கள்.
450. ஒரு விஷயத்தைச் சரியான நேரத்துக்குள் முடிப்பதற்கு நேரமிருப்பதில்லை. ஆனால் அதை மீண்டும் செய்வதற்கு மட்டும் நேரமிருக்கும்.
451. குறைவே நிறைவு.
452. எதுவுமே நிரந்தரமுமல்ல. எதுவுமே முடிவுமல்ல.
453. ஒரு கயிறுக்கு ஒரு முனை இருந்தால் கண்டிப்பாக இன்னொரு முனையும் இருக்கும்!
454. நம்முடைய சிந்தனை அனைத்துமே "ரொம்ப காலம் கழித்து மெல்ல இறக்க வேண்டும். அதே சமயம் இளமையாகவும் இருக்க வேண்டும்" என்பதாகும். (கூழுக்கும் ஆசை. மீசைக்கும் ஆசை!)
455. பணம் சாணத்தைப் போன்றது. அதை கலந்து தெளித்துவிட்டால் நல்ல மருந்தாகும். ஆனால் ஒரே இடத்தில் தேக்கி வைத்து விட்டால் இடமே நாசமாகி விடும்.
456. ஆராய்ச்சி என்பது இதுவரை யாருமே படித்திராத இரண்டு புத்தகங்களைப் படித்து யாருமே படிக்கவிராத மூன்றாம் புத்தகத்தை எழுதுவதாகும்!
457. புள்ளியியல் என்பது ஒரு துல்லியமான அறிவியலாகும். அது சொல்வது எல்லாம் பாதி உண்மைகளை மட்டுமே.
458. வளர்ந்து கொண்டிருக்கும் நாட்டில் தண்ணீர் அருந்தாதே.(நீர் கெட்டிருக்கும்.) வளர்ந்து விட்ட நாட்டில் சுவாசம் செய்யாதே. (காற்றே கெட்டிருக்கும்.)
459. ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒரு அருமையான தீர்வு ஒன்று உண்டு. பிரச்னையே அதைக் கண்டுபிடிப்பது தான்! (இது எப்படி?)
460. ஒன்று சிகரத்தில் இருக்கவேண்டும். அல்லது அதல பாதாளத்தில் இருக்க வேண்டும். பாதியில் இருந்தால் கஷ்டம் தான் எப்போதும்.
461. தலைக்கு மேல் இருக்கும் பறவையை விட கையில் இருக்கும் பறவையே பாதுகாப்பானது!
462. ஒரு தவறின் தன்மையும் அதை மறைக்க அதிகாரிகள் எடுத்துக் கொள்ளும் முயற்சியும் நேர் விகிதத்திலேயே அமையும்.
463. 90 சதவீத வேலை 90 சதவீத நேரத்தை எடுத்துக் கொள்ளும். மீதி இருக்கும் 10 சதவீத வேலை இன்னும் 90 சதவீத நேரத்தை எடுத்துக் கொள்ளும்.
464. இரண்டு தவறுகள் சேர்ந்து செய்தும் ஒரு சரியானது நடக்கவில்லையென்றால் மூன்றாவதையும் முயற்சி செய்து பாருங்கள்!
465. வழுக்கை விழுந்து விட்டால் உங்களால் அமெரிக்க ஜனாதிபதி ஆக முடியாது!
466. (ரூ.357.73 விதி) தணிக்கையாளர்கள் ஐந்தால் வகுபடும் செலவுகளை நம்புவதில்லை.
467. சரியான காரணங்களுக்காக இதுவரை ஒரு காரியமும் செய்யப்பட்டதே இல்லை.
468. உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் கமிட்டி கூட்டங்களில் கலந்து கொள்வதையும் கையெழுத்து இடுவதையுமே பெரிய வேலையாக நினைப்பார்.
469. நேற்றைய தேவையை நாளை மதியத்துக்குள்ளாவது வாங்கிவிட வேண்டும்!
470. அனைத்துமே உடையக் கூடியது தான்.
471. ஒருவர் தான் இதுவரை பேசியதை சுருக்கமாக உரைக்கப்போவதாக சொன்னால், அவர் இதுவரை எடுத்துக் கொண்டதை விட அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்போகிறார் என்று அர்த்தமாகும்.
472. அனைத்துமே மாறாத பட்சத்தில், அனைத்துமே மாறுமே!
473. எது நல்லதோ அது சட்டத்துக்குப் புறம்பானதாகவும் வருத்தமளிப்பதாகவுமே இருக்கும்.
474. நீங்கள் விரும்பியதை அடைந்தும், வசதியாக வாழ்ந்தும் கொண்டிருந்தால் எதற்கு பணக்காரனாக வேண்டும்?
475. (20/80 விதி) உங்களின் 20 சதவீத வாடிக்கையாளரே 80 சதவீத விற்பனைக்கு வழி வகுப்பார். 20 சதவீத பொருட்களே 80 சதவீத விலை இருக்கும்.
476. ஒத்தி வைப்பு தீர்மானம் மட்டும் உடனே நிறைவேறிவிடும்.
477. ஒரு விஷயம் அதிக முறை நடந்து உங்களை எரிச்சலடையச் செய்யுமானால் அது மீண்டும் நடைபெறும்.
478. ஒரு மேலாளர் தமக்குக் கீழ் ஆட்களைக் கூட்டுவதற்கு விரும்புவாரேயொழிய தனக்கு சமமாகவோ மேலாகவோ யாருமே வருவதை விரும்பமாட்டார்.
479. ஒரு மேலாளர் இன்னொரு மேலாளருக்கு வேலையை உருவாக்குவதிலேயே பொழுதைப் போக்குவார்.
480. ஒரு முக்கியமான முடிவு எடுப்பதை நிறுத்த வழி ஒன்று இருக்குமானால் அதை அதிகாரிகள் எப்படியாவது கண்டறிந்து விடுவார்கள்.
462. ஒரு தவறின் தன்மையும் அதை மறைக்க அதிகாரிகள் எடுத்துக் கொள்ளும் முயற்சியும் நேர் விகிதத்திலேயே அமையும்.
463. 90 சதவீத வேலை 90 சதவீத நேரத்தை எடுத்துக் கொள்ளும். மீதி இருக்கும் 10 சதவீத வேலை இன்னும் 90 சதவீத நேரத்தை எடுத்துக் கொள்ளும்.
464. இரண்டு தவறுகள் சேர்ந்து செய்தும் ஒரு சரியானது நடக்கவில்லையென்றால் மூன்றாவதையும் முயற்சி செய்து பாருங்கள்!
465. வழுக்கை விழுந்து விட்டால் உங்களால் அமெரிக்க ஜனாதிபதி ஆக முடியாது!
466. (ரூ.357.73 விதி) தணிக்கையாளர்கள் ஐந்தால் வகுபடும் செலவுகளை நம்புவதில்லை.
467. சரியான காரணங்களுக்காக இதுவரை ஒரு காரியமும் செய்யப்பட்டதே இல்லை.
468. உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் கமிட்டி கூட்டங்களில் கலந்து கொள்வதையும் கையெழுத்து இடுவதையுமே பெரிய வேலையாக நினைப்பார்.
469. நேற்றைய தேவையை நாளை மதியத்துக்குள்ளாவது வாங்கிவிட வேண்டும்!
470. அனைத்துமே உடையக் கூடியது தான்.
471. ஒருவர் தான் இதுவரை பேசியதை சுருக்கமாக உரைக்கப்போவதாக சொன்னால், அவர் இதுவரை எடுத்துக் கொண்டதை விட அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்போகிறார் என்று அர்த்தமாகும்.
472. அனைத்துமே மாறாத பட்சத்தில், அனைத்துமே மாறுமே!
473. எது நல்லதோ அது சட்டத்துக்குப் புறம்பானதாகவும் வருத்தமளிப்பதாகவுமே இருக்கும்.
474. நீங்கள் விரும்பியதை அடைந்தும், வசதியாக வாழ்ந்தும் கொண்டிருந்தால் எதற்கு பணக்காரனாக வேண்டும்?
475. (20/80 விதி) உங்களின் 20 சதவீத வாடிக்கையாளரே 80 சதவீத விற்பனைக்கு வழி வகுப்பார். 20 சதவீத பொருட்களே 80 சதவீத விலை இருக்கும்.
476. ஒத்தி வைப்பு தீர்மானம் மட்டும் உடனே நிறைவேறிவிடும்.
477. ஒரு விஷயம் அதிக முறை நடந்து உங்களை எரிச்சலடையச் செய்யுமானால் அது மீண்டும் நடைபெறும்.
478. ஒரு மேலாளர் தமக்குக் கீழ் ஆட்களைக் கூட்டுவதற்கு விரும்புவாரேயொழிய தனக்கு சமமாகவோ மேலாகவோ யாருமே வருவதை விரும்பமாட்டார்.
479. ஒரு மேலாளர் இன்னொரு மேலாளருக்கு வேலையை உருவாக்குவதிலேயே பொழுதைப் போக்குவார்.
480. ஒரு முக்கியமான முடிவு எடுப்பதை நிறுத்த வழி ஒன்று இருக்குமானால் அதை அதிகாரிகள் எப்படியாவது கண்டறிந்து விடுவார்கள்.
481. கொடுக்கமாட்டேன் என்று சொல்வதை விட தாமதப்படுத்துதல் பெரிய விஷமாகும்.
482. ஒரு தொலைபேசியில் நீங்கள் பேச எடுத்துக் கொள்ளும் நேரமும் அந்தப் பேச்சில் இருக்கும் உருப்படியான விஷயங்களும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.
483. எந்த ஒரு நிறுவனம் 1000 பேருக்கு மேல் வேலையளிக்கிறதோ அது புற உலகத்துடன் தொடர்பே இல்லாத வகையில் அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கியிருக்கவேண்டும்.
484. நீங்கள் ஒரு கண்ணாடி கோப்பையைத் தவற விட்டு உடைத்திருந்தீர்களானால் அது உங்களிடம் இருப்பதிலேயே கீறலே இல்லாததாக இருந்திருக்கும்.
485. வேலை என்பது பகல் நேர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விட சுவாரசியம் மிக்கதாகவே இருக்கும்.
486. சாராயம் குடிப்பவர்களுக்கு எப்போதுமே இன்னும் கொஞ்சம் குடித்தாலும் நிதானமாக இருக்க முடிவதாகவே தோன்றும்.
487. உங்கள் சோதனை வெற்றி பெறுகிறதா? நன்றாகப் பாருங்கள் - தவறான அளவுகோலை உபயோகித்து இருப்பீர்கள்.
488. இன்றைக்கு உள்ள ஒரு நல்ல திட்டம் நாளைக்கு கிடைக்கப்போகும் கச்சிதமான திட்டத்தை விட மேலானதாகும்.
489. ஒரு வெற்றி கிடைப்பதும் அதற்கு என்று எடுக்கப்படும் முயற்சியின் அளவும் எப்போதும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.
490. ஒருவர் ஒரு வேலையைச் செய்ய செய்ய அதைச் செய்யும் தகுதியை இழக்கிறார்.
491. நீங்கள் தரையிலிருக்கும் போது அதை விடக் கீழே விழ இயலாது.
492. இருவர் சேர்ந்து ஒரு வேலையைச் செய்திருந்தால் அதில் இருக்கும் தவறுகளுக்கு யாருமே பொறுப்பாக மாட்டார்கள்.
493. நீங்கள் எந்த விதமான தவறான தகவலும் கணிணியில் பதிவு செய்துவிடாத படி உள்ளீடுகளில் கட்டுப்பாடைக் கொண்டுவந்தாலும் அதை எல்லாவற்றையும் மீறி ஒரு புத்திசாலி அதிலும் தவறான தகவலை உள்ளீடு செய்து விடுவான்.
494. உங்களால் பலரைச் சில காலமும் சிலரைப் பல காலமும் ஏமாற்ற முடியும். ஆனால் உங்கள் தாயை மட்டும் ஏமாற்றவே முடியாது.
495. வசதியே இல்லாதவர்கள் வாங்கிய கடனைக் கஷ்டப்பட்டு அடைப்பார்கள். வசதியுள்ளவர்களோ .... ஏப்பமிடுவார்கள்.
496. தகுதியில் தான் தகுதியின்மையின் விதை இருக்கிறது.
497. அதிகப்படியான தகுதி தகுதியின்மையை விட மோசமானது.
498. தேவையைத் தேவை என ஒத்துக் கொள்ள அதிக நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். தேவையே மறைந்துவிடும்.
499. பணத்தின் அளவு பெருகப் பெருக அதன் மதிப்பு குறையும்.
500. ஒரு திட்டத்தின் படிகள் - (1) மகிழ்ச்சி (2) கற்பனை (3) குழப்பம் (4) தவறு செய்தவரைத் தேடுதல் (5) தவறே செய்யாதவரைத் தண்டித்தல் (6) சம்பந்தமே இல்லாதவருக்குப் பரிசு வழங்குதல்.
482. ஒரு தொலைபேசியில் நீங்கள் பேச எடுத்துக் கொள்ளும் நேரமும் அந்தப் பேச்சில் இருக்கும் உருப்படியான விஷயங்களும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.
483. எந்த ஒரு நிறுவனம் 1000 பேருக்கு மேல் வேலையளிக்கிறதோ அது புற உலகத்துடன் தொடர்பே இல்லாத வகையில் அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கியிருக்கவேண்டும்.
484. நீங்கள் ஒரு கண்ணாடி கோப்பையைத் தவற விட்டு உடைத்திருந்தீர்களானால் அது உங்களிடம் இருப்பதிலேயே கீறலே இல்லாததாக இருந்திருக்கும்.
485. வேலை என்பது பகல் நேர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விட சுவாரசியம் மிக்கதாகவே இருக்கும்.
486. சாராயம் குடிப்பவர்களுக்கு எப்போதுமே இன்னும் கொஞ்சம் குடித்தாலும் நிதானமாக இருக்க முடிவதாகவே தோன்றும்.
487. உங்கள் சோதனை வெற்றி பெறுகிறதா? நன்றாகப் பாருங்கள் - தவறான அளவுகோலை உபயோகித்து இருப்பீர்கள்.
488. இன்றைக்கு உள்ள ஒரு நல்ல திட்டம் நாளைக்கு கிடைக்கப்போகும் கச்சிதமான திட்டத்தை விட மேலானதாகும்.
489. ஒரு வெற்றி கிடைப்பதும் அதற்கு என்று எடுக்கப்படும் முயற்சியின் அளவும் எப்போதும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.
490. ஒருவர் ஒரு வேலையைச் செய்ய செய்ய அதைச் செய்யும் தகுதியை இழக்கிறார்.
491. நீங்கள் தரையிலிருக்கும் போது அதை விடக் கீழே விழ இயலாது.
492. இருவர் சேர்ந்து ஒரு வேலையைச் செய்திருந்தால் அதில் இருக்கும் தவறுகளுக்கு யாருமே பொறுப்பாக மாட்டார்கள்.
493. நீங்கள் எந்த விதமான தவறான தகவலும் கணிணியில் பதிவு செய்துவிடாத படி உள்ளீடுகளில் கட்டுப்பாடைக் கொண்டுவந்தாலும் அதை எல்லாவற்றையும் மீறி ஒரு புத்திசாலி அதிலும் தவறான தகவலை உள்ளீடு செய்து விடுவான்.
494. உங்களால் பலரைச் சில காலமும் சிலரைப் பல காலமும் ஏமாற்ற முடியும். ஆனால் உங்கள் தாயை மட்டும் ஏமாற்றவே முடியாது.
495. வசதியே இல்லாதவர்கள் வாங்கிய கடனைக் கஷ்டப்பட்டு அடைப்பார்கள். வசதியுள்ளவர்களோ .... ஏப்பமிடுவார்கள்.
496. தகுதியில் தான் தகுதியின்மையின் விதை இருக்கிறது.
497. அதிகப்படியான தகுதி தகுதியின்மையை விட மோசமானது.
498. தேவையைத் தேவை என ஒத்துக் கொள்ள அதிக நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். தேவையே மறைந்துவிடும்.
499. பணத்தின் அளவு பெருகப் பெருக அதன் மதிப்பு குறையும்.
500. ஒரு திட்டத்தின் படிகள் - (1) மகிழ்ச்சி (2) கற்பனை (3) குழப்பம் (4) தவறு செய்தவரைத் தேடுதல் (5) தவறே செய்யாதவரைத் தண்டித்தல் (6) சம்பந்தமே இல்லாதவருக்குப் பரிசு வழங்குதல்.
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|