புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_c10இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_m10இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_c10 
12 Posts - 86%
ஜாஹீதாபானு
இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_c10இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_m10இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_c10 
1 Post - 7%
Manimegala
இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_c10இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_m10இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_c10இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_m10இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_c10இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_m10இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_c10இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_m10இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_c10 
11 Posts - 4%
prajai
இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_c10இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_m10இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_c10 
9 Posts - 3%
Jenila
இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_c10இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_m10இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_c10 
4 Posts - 2%
Rutu
இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_c10இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_m10இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_c10இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_m10இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_c10இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_m10இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_c10 
2 Posts - 1%
Barushree
இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_c10இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_m10இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_c10இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_m10இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று உலக தபால் தினம் ! - 09.10.14


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 8:45 pm

இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 UxPPIVbgTriNz5Vwu07Y+Tamil_News_large_1087885

கல்லூரி வகுப்பில் உட்கார்ந்திருந்தேன்; கண்கள் என்னவோ வாசலையே பார்த்துக் கொண்டிருந்தன. கடைசி பெஞ்ச்சில் ஒரு வசதி, சபைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட வேண்டிய பல விஷயங்களை சாதாரணமாக செய்யலாம். மதிய உணவு இடைவேளையை நெருங்கிக் கொண்டிருந்த நேரம். ''கிளாஸ் முடிஞ்சதும் ஹாஸ்டல நோக்கி வேகமா ஓடணும். எப்படியும் இன்னைக்கு வந்திருக்கும்... நேத்துத்தான் ஏமாந்துட்டோம்...'' வகுப்பு முடிந்ததும் விடுதியை நோக்கி வேகமாக ஓடிவந்து அறை சாவியை எடுத்து, பூட்டைத் திறந்து உள்ளே ஓடி, கையிலிருந்த நோட்டுகளை மேஜைமேல வச்சிட்டு (பொய்.. வீசிட்டு) கட்டில்ல படுத்து பரபரப்போடு கடிதத்தை படித்து... திரும்பத் திரும்ப படித்து முடித்த போது எடைக்கு எடை வியர்த்திருந்தேன்.


புரியலையா...?: பள்ளிப் படிப்பு வரை பக்கத்து ஊர்களில் படித்து விட்டு, கல்லூரிக்காக வீடு கடத்தப்பட்டு, விடுதியில் சேர்ந்து, அம்மாவையும் அப்பாவையும், பாசத்தோடு கத்தும் பசுமாடு போன்ற வாயில்லா ஜீவன்களையும் பிரிந்து கண்ணீரில் முகம் கழுவிய என் போன்றவர்களுக்குத் தான் புரியும் வீட்டிலிருந்து வரும் கடிதங்களின் அருமை. வெளியூருக்கு பேச வேண்டுமென்றாலே, தபால் அலுவலகத்திற்கு போய் டிரங்கால் புக்கிங் செய்துவிட்டு (அதுவும் நாம் பேச நினைக்கிற நபர் வசிக்கும் ஊரில் போன் இருந்தால்...) காத்திருக்க வேண்டிய எண்பதுகளின் தொடக்கத்தில் குடும்பத்தை பிரிந்து தொலை தூரங்களில் வசித்தவர்களுக்குத் தான் புரியும் கடிதங்கள் என்பவை அப்பாவின் தோள், அம்மாவின் மடி, மனைவியின் அரவணைப்பு, காதலியின் முத்தம், நண்பனின் வார்த்தைகள் என்ற உண்மை.

கடுதாசிக்காரர்கள் மீதான பாசம் : தந்தி, டிரங் கால், எஸ்.டி.டி., மொபைல், குறுஞ்செய்தி, இணைய தளம், இ-மெயில், பேஸ் புக், ஸ்கைப், வாட்ஸ் அப். இப்படி அடுக்கடுக்காய் வளர்ந்திருக்கும் அத்தனை தகவல் தொடர்பு சாதனங்களுக்கும் தாயாக இருந்த கடிதத்தின் பெருமை தனித்துவமானது. அந்த கடிதங்களை பரிமாறும் தபால்காரர்களுக்கு இருக்கும் வரவேற்பே அதற்கு அத்தாட்சி. பேங்க்காரரை பணமாகவும், ஏட்டையாவை பயமாகவும், முன்சீப்பை பவ்யமாகவும், வாத்தியாரை பணிவாகவும் பார்க்கும் எந்த கிராமமும் கடுதாசிக்காரரை பாசமாக பார்க்கும். எனக்கு தெரிந்து ரேஷன் கார்டில் சேர்க்கப்படாமல் எல்லா குடும்பங்களிலும் உறுப்பினராக இருக்கும் ஒரே ஜீவன் தபால்காரர் தான். தபால்காரர்களை தெய்வமாகவே பார்த்த எத்தனைக் காதலர்களை நாம் சந்தித்திருக்கிறோம்...!
பெரும்பாலான கிராமங்களில் படித்துவிட்டு வேலைக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்களின் வட்டமேசை மாநாடு பகலில் நடக்கும் இடமாகவும் தவறாமல் இருந்தது தபால் ஆபீஸ் தெரு தான். விண்ணப்ப படிவத்தில் தொடங்கி வேலை உத்தரவிற்காக காத்திருக்கும் இளைஞர்கள் சிலர் பையில் பேனாவும், கையில் எம்ளாய்மென்ட் நியூசும் வைத்திருக்க, காதலியிடமிருந்து வரும் கடிதங்களுக்காக காத்திருப்பவர்கள், பையில் சீப்பும் கையில் கர்ச்சிப்புமாக அமர்ந்திருப்பதை பார்க்கலாம்.

கடிதங்களுக்கே அதிக முத்தம் : பணத்தை சேமித்து விட்டு தேவைப்படும் போது எடுத்துக் கொள்கிற வசதிகளை செய்திருப்பவை வங்கிகள் என்றால் உணர்வுகளையும், நினைவுகளையும் எழுத்துக்களாக சேமித்து வைத்து தேவைப்படும் போது, மறுபடியும் மீட்டுக் கொள்கிற வசதிகளை செய்பவை... செய்தவை கடிதங்கள் தான்.உலகத்தில் குழந்தைகளையும், காதலர் களையும் விட அதிக முத்தம் வாங்கிய பெருமை கடிதங்களுக்கு மட்டுமே உண்டு.
இன்றும் கிராமங்களில் துருப்பிடித்த கம்பிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் காலாவதியான தபால் பெட்டிகள் தான், காலாவதியாகாத உறவுகளின் உணர்வுகள்.
தனிமனித எழுத்து திறனுக்கு ஒரு பயிற்சி பாசறையாக இருப்பதுவும், வெளிச்சத்திற்கு வராத கட்டுரையாளர்களையும், கவிஞர்களையும், விமர்சகர்களையும் உருவாக்கி தனக்குள்ளேயே ஒளித்து வைத்திருக்கும் ஒப்பற்ற ஊடகமாக இருப்பதுவும் கடிதங்களே!
கடிதங்களை பற்றி 'நேயர் விருப்பத்தில்' எழுதிய அப்துல்ரகுமானும், 'கண்ணீர்
பூக்களில்' எழுதிய மேத்தாவும், 'இதுவரையில் நானில்' எழுதிய வைரமுத்துவும் தான் காதல், கவிதை, கடிதம் என்ற மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருப்பவை என்று என் போன்றவர்களுக்கு புரிய வைத்தார்கள்.

அடி பெண்ணே!
காதலை
மதத்தின் பெயரால்
மறுத்த
இந்த உன் கடிதத்தை
என்ன செய்வது...
உன் மதப்படி புதைப்பதா?
என் மதப்படி எரிப்பதா?
என்று மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் நான் படித்த காலத்தில் வாசித்த என் கவிதைக்கு கிடைத்த
கைத்தட்டல் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதற்கு பிறகு எனக்கு வந்த ஒரு கடிதம் எங்களுக்கு மட்டுமே தெரியும்.
நிலாச் சோறு, டூரிங் டாக்கிஸ், வில்லு வண்டி, அறுப்புக் கடை, ஊர் பஞ்சாயத்து, பம்பர விளையாட்டு... இன்னும் சிலவற்றை வாழ்க்கையாகவே பார்த்த எங்கள் தலைமுறை இதை வார்த்தையாகக் கூட பார்க்க முடியாமல் போன இன்றைய கணினித் தலைமுறையை பார்த்து பரிதாபப்பட மட்டுமே முடியும்.
மேற்சொன்ன வரிசையில் கடிதம் என்பதுவும் இணைந்துவிட்டதே
என்பது தான்
வலி தீரா வருத்தம்.

- கவிஞர் நெல்லை ஜெயந்தா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 8:47 pm

நானும் எக்கச்சக்கமாய் கடிதம் எழுதி இருக்கேன்....'இவருக்கு', அப்பா அம்மாக்கு, தாத்தா பாட்டிக்கு.....நண்பிகளுக்கு என்று பட்டியல் நீளும்....என் கடிதங்களுக்க்காகவே காத்திருந்தவர்களும் உண்டு புன்னகை அதாவது ரசிகப்பட்டாளம் இருந்தது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 11:02 pm

நாம் இன்று இ-மெயில், இன்டர்நெட், பேக்ஸ், மொபைல் என்று நவீன தொழில்நுட்ப உலகில் வாழ்கிறோம். பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களின் வரவால் உலகம் சுருங்கி விட்டது. இதன் காரணமாக உலகம் முழுவதும் நேரடியாகவே (லைவ்) கருத்துக்கள், புகைப்படங்கள், வீடியோ, ஆடியோ பரிமாறப்படுகிறது. ஆனால் அன்று இத்தகைய வசதி கிடையாது. ஒரு தகவலை மற்றவருக்கு தெரிவிக்க வேண்டுமெனில் தபால் மூலமே தெரிவிக்கப்பட்டது.

தபால் துறையின் மகத்துவம் பற்றி, இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது தபால் எழுதும் பழக்கம் இல்லாததால், சுயமாக எழுதும் பழக்கமும் இளைஞர்களிடம் குறைந்து வருகிறது. இருப்பினும் இன்றும் லட்சக்கணக்கான மக்களின் தினசரி வாழ்க்கையில் தபால் துறை ஏதாவது ஒரு வழியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அலுவல் ரீதியான கடிதங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு சேர்க்கும் பொறுப்பு இன்றும் தபால் துறை வசமே உள்ளது.
உலக தபால் அமைப்பு 1874ம் ஆண்டு சுவிட்சர்லாந்து தலைநகர் பெர்ன் நகரில் தொடங்கப்பட்டது. 1969ல் இதை நினைவுபடுத்தும் விதமாக அக்.,9, உலக தபால் தினமாக அறிவிக்கப்பட்டது. உலக தபால் அமைப்பில், இந்தியா உள்ளிட்ட 150 நாடுகள் உள்ளன. தபால் துறையின் சேவைகளை பாராட்டும் விதமாகவும், தபால் துறையின் திட்டங்கள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் அக்.,9ம் தேதி, உலக தபால் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் தபால் வாரமாக (அக்.,9 -- 15) கடைப்பிடிக்கப்படுகிறது.

உலகில் முதலிடம்:

இந்திய தபால் துறை 1764ல் துவக்கப்பட்டது. சுதந்திரம் பெற்ற தொடக்கத்தில் 23 ஆயிரம் தபால் நிலையங்கள் மட்டுமே இருந்தன. தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 89 சதவீதம் கிராமங்களில் உள்ளன. 12 ஆயிரம் தபால் நிலையங்கள் கம்ப்யூட்டர் மையமாக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக தபால் நிலையங்கள் கொண்டதாக இந்திய தபால் துறை திகழ்கிறது. 5 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் இத்துறையில் பணிபுரிகின்றனர்.

ஈடு தர முடியுமா:

ஸ்டாம்ப் விற்பனை, பதிவு தபால், விரைவு தபால், இ- போஸ்ட், மணி ஆர்டர், பார்சல் சர்வீஸ், சேமிப்பு கணக்குகள் போன்ற பணிகளை தபால் துறை செய்கிறது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Oct 10, 2014 7:17 am

தபால்துறையில் சிலபுல்லுரிவிகள் புழக்கடையில் தபால்களை பட்டுவாடா செய்த்தையும் செய்திதாளில் கண்டோமே ...!!! அவர்களை என்னென்பது....தபால்துறைதானேதகவலைபரிமாறசெய்ய ஓர்உன்னத துறை யாச்சே.....ஒலியில் (தந்தி)செய்தியை அனுப்பியதையும் மறக்கமுடியல என்னே விந்தையாய் செயல்பட்டது....
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 10, 2014 11:10 am

ரொம்ப சரி ராஜன் அண்ணா புன்னகை உங்கள் பின்னுட்டத்துக்கு நன்றி ! அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக