புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_m10தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10 
21 Posts - 66%
heezulia
தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_m10தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_m10தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10 
63 Posts - 64%
heezulia
தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_m10தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_m10தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_m10தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 11, 2014 1:24 am


சென்னை : கொசு ஒழிப்பில் சிறப்புக் கவனம் செலுத்தாததால், தமிழகம் முழுவதும், டெங்கு பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. விழுப்புரத்தில் பெண் ஒருவர் இறந்துள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில், அரசு தீவிரம் காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில், கடந்த இரண்டு மாதங்களாகவே, ஆங்காங்கே காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. அத்துடன் உடல் சோர்வு, மூட்டு வலியும் இருப்பதால், எந்த மாதிரியான காய்ச்சல் என்று தெரியாமல், மக்கள், அரசு, தனியார் மருத்துவமனைக்கு அலைந்து திரிகின்றனர்.

விரிவான கட்டுரை :

தமிழகத்தில், டெங்கு அறிகுறி, ஜூன் மாதத்திலேயே ஏற்பட்டது. தர்மபுரி மாாவட்டம், ஜம்புகானாகோட்டை பகுதியில், பலர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டனர். 'தமிழக அரசு, நோய் தடுப்பில் கவனம் செலுத்தா விட்டால், செப்., மாதங்களில் இதன் பாதிப்பு அதிகமாகும்; உயிரிழிப்புக்கு வழிவகுத்து விடும்' என, ஜூன் 25ல், 'தினமலர்' நாளிதழில், விரிவான கட்டுரை வெளியானது.ஆனால், 'இரண்டு ஆண்டுகளாக, டெங்கு உயிரிழப்பே இல்லை, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது' என, தமிழக அரசு அறிவித்தது.இந்நிலையில், டெங்கு பாதிப்பு, தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில், குணசுந்தரி, 50, டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார். மேலும், 10க்கும் மேற்பட்டோர், டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பெற்று வருவதை, சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.தர்மபுரி, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில், பாதிப்பு அதிகமாக உள்ளது.

காரணம் என்ன?

வெப்பச்சலனத்தால், ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்ததால், டெங்குவுக்கு காரணமான, 'ஏடிஸ்' வகை கொசுக்கள் உருவாகி விட்டன. இதை கட்டுப்படுத்த சிறப்புக் கவனம் செலுத்தாததே, தற்போதைய சிக்கலுக்கு காரணம் என, கூறப்படுகிறது.இரண்டு ஆண்டுகளுக்கு முன், இதே கால கட்டத்தில் தான் (ஆகஸ்டு முதல் அக்டோபர் வரை), தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிகமாகி, 66 பேர் இறந்தனர். திணறிய தமிழக அரசு, நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு கொடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது.அதுபோன்ற நிலை மீண்டும் வராமல் இருக்க, தமிழக அரசு, இனியாவது டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்த, சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்பதே, மக்களின் எதிர்பார்ப்பு.

இதுகுறித்து, சுகாதாரத் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'டெங்கு பாதிப்பைத் தடுக்க, எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. விழுப்புரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு, ரத்த மாதிரிகள் எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். அரசு, தனியார் மருத்துவமனைகளில், காய்ச்சலால் வருவோர் பற்றி ஆய்வு செய்து, பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது. மக்கள் அச்சம் அடைய தேவையில்லை' என்றார்.

தர்மபுரியில் 50 பேர் பாதிப்பு:

தர்மபுரி மாவட்டம், அரூர், வீரப்பநாயக்கன்பட்டியை அடுத்த, பாளையம் கிராமத்தில், சிறு குழந்தைகள், முதியோர் என, 50க்கும் மேற்பட்டோர், மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலர் வீடுகளில் முடங்கி உள்ளனர்.ஆரம்ப சுகாதார நிலையத்தில், போதிய வசதி இல்லாததால், 20 கி.மீ., தூரம் தாண்டி தனியார் மருத்துவமனை செல்லும் நிலை உள்ளது. 'மாவட்ட நிர்வாகம், சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், கண்டு கொள்ளவில்லை. கிராமத்தில் சிறப்பு முகாம் நடத்தி, உயர் சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தப்பிக்க என்ன வழி?

*'ஏடிஸ்' எனும், பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால், டெங்கு பாதிப்பு வருகிறது. இதைத் தடுக்க, பகல் நேரத்தில் முழுக்கைச் சட்டை, உடல் முழுவதும் மறைக்கும் வகையிலான உடைகளை அணியலாம்.

*அடர் வண்ண உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.

*மனிதனின் உடலில் சுரக்கும் வியர்வையின் வாடை, கொசுக்களை ஈர்க்கும். இதைத் தடுக்க, தினமும் இரண்டு முறை குளிப்பது, வியர்வை வாடை மறைக்க, வாசனை திரவியங்கள் தடவிக் கொள்வது நல்லது.

*வீட்டின் உள் பகுதியிலும், சுற்றுப்புற பகுதிகளிலும், நாட்கணக்கில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேல்நிலைத் தொட்டி, கீழ்நிலைத் தொட்டிகள், தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை, வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.

*வீட்டைச் சுற்றி தேவையின்றி கிடக்கும் பிளாஸ்டிக் கப், டயர், தேங்காய் மட்டை போன்ற, தேவையற்ற பொருட்களை அகற்றி, அழிக்க வேண்டும்.

*நோய் பாதிப்பு தோன்றினால், எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, நிலவேம்பு கஷாயம் குடிக்கலாம்.




தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 11, 2014 6:39 am

தமிழகத்தில் வேகமாக பரவும் 'டெங்கு': அலட்சியம் காட்டினால் ஆபத்து 103459460

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக