புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ayyasamy ram Today at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பரந்தாமனின் அவதாரங்கள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
வைகுண்டத்தில் ஸ்ரீமத் நாராயணன் லட்சுமிதேவியடன் அமர்ந்து அண்ட சராசரங்களையும் கவனித்ததுக் கொண்டிருந்தார். படைப்புக் கடவுளான பிரம்மா தன் பணிகளை முடித்து உறங்கத் தொடங்கினார். அப்போது கல்பம் முடியப்போகும் தறுவாயிலிருந்தது. பிரம்மா தூங்கும் போது அவருடைய நாசியிலிருந்து நான்கு வேதங்கள் வெளியே வந்து விட்டன. இந்த சந்தர்ப்பத்தை வெகு காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த ஹயக்கிரீவன் என்ற அரக்கன் ஓடோடி வந்தான். நான்கு வேதங்களையும் அபகரித்துக்கொண்டு கடலுக்குள் பாய்ந்து சென்று மறைந்தான். இதை வைகுண்டபதி பார்த்துப் புன்முறுவல் செய்தார். அவர் வைகுண்டத்திலிருந்து புறப்பட்டார். முற்பிறப்பிலும் இப்பிறப்பிலும் பகவான் நாராயணனிடம் பூரண பக்தி கொண்டிருந்த சத்திய விரதன் எனும் அரசனுக்கு கருணை காட்ட பகவான் விரும்பினார்.
அப்போது மாலை நேரம், சத்தியவிரதன் நதியில் நீராடி ஜல தர்ப்பணம் செய்து கொண்டிருந்தான். அவன் இரண்டு கைகளிலும் தண்ணீரை எடுத்த போது அதில் ஒரு சிறு மீன் காணப்பட்டது. தாராள குணமுள்ள அவன் தண்ணீருடன் மீனை நதியில் சேர்த்தான். மீன் அவனை நோக்கி ~~ அரசனே! ஜீவ ஜந்துக்களிடம் கருணை உள்ளம் படைத்தவனே! என் இனத்தவர் எளியவரை வலியவர் கொன்று தின்னும் பழக்கமுடையவர்கள். உம்முடைய கையில் அடைக்கலம் புகுந்த என்னை நதியில் விட்டுவிட்டாயே|| என்று கேட்டது. அரசன் மறு பேச்சுப் பேசாமல் கமண்டலத்து நீருடன் மீனையும் எடுத்துச் சென்றான். தன் இருப்பிடத்தை அடைந்த சமயம் கமண்டலத்திலிருந்த சிறிய மீன் கமண்டலம் முழுவதும் நிறைந்து வளர்ந்திருப்பதைக் கண்டு ஒரு பெரிய கொப்பறையில் தண்ணீரை நிரப்பி அதில் மீனை விட்டான். மறு நாள் பொழுது விடிவதற்குள் மீன் கொப்பறை அளவிற்கு வளர்ந்து விட்டது. குளம், மடு முதலிய இடங்களில் விட்ட போதும் மீன் வளர்ந்து பெரிதாகிக்கொண்டே இருந்தது. இறுதியில் மீனை எடுத்துச் சென்று கடலில் விட்டான். உடனே அந்த மீன் ~~என்னைக் கடலில் விடுகிறாயே, மகா பெரிய மீன்கள் என்னைத் தின்று விடுமே!|| என்றது. சத்திய விரதன் அந்த மீன் யார் என்பதைத் தெரிந்து கொண்டான்.
~~ நாராயணரே! தங்களின் லீலையை யார் அறிவார்? கருணைக் கடலே உங்களை வணங்குகிறேன். எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்யும் நோக்கத்துடன் மீனாக வந்திருக்கிறீர்கள். இதில் சந்தேகமே இல்லை. தங்களுடைய அவதார காரணத்தை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்|| என்றான். அதற்கு பகவான், ~~ இன்றிலிருந்து ஏழாவது நாள் பிரளயம் தோன்றப் போகிறது. அச்சமயம் உலகம் நீரில் மூழ்கிவிடும். பிரளயம் தோன்றுவதற்கு முதல் நாள் ஒரு தோணியை அனுப்புகிறேன். அதில் சப்த ரிசிகளை ஏற்றிக்கொள். மூலிகைச் செடிகளையும் மரங்கள் செடிகள் கொடிகளின் விதைகளையும் எடுத்து வைத்துக்கொண்டு நீயும் தோணியில் ஏறி அமர்ந்து கொள். எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டு சப்த ரிஷிகளுடன் கடற்கரையிலேயே இரு எதைப்பற்றியும் கவலைப்படாதே || என்று கூறிவிட்டு மறைந்தார். பரந்தாமனுடைய கட்டளைப்படி சப்த ரிஷிகளையும் அழைத்துக் கொண்டு பகவான் கூறிய வண்ணம் தோணியை எதிர்பார்த்துக் கடற்கரையில் காத்திருந்தான் சத்தியவிரதன். ஏழாவது நாள் அதிகாலை ஒரு பெரிய தோணி அவனை நோக்கி வந்து நின்றது. சப்தரிஷிகளுடனும் பகவான் கூறிய பொருட்களுடனும் தோணியில் ஏறி அமர்ந்துகொண்டான். அனைவரும் பகவானைத் துதிக்கத்தொடங்கினார்கள்.
மேகம் கறுத்தது. தென்றல்போல வீசிய காற்று புயலாகியது. இலேசாகத்தொடங்கிய மழை சடுதியாய் மாரியாகி உலகத்தையே மூழ்கடிப்பது போல் பயங்கரமாகப் பொழிந்தது. அண்ட சராசரங்களும் நடுங்க இடியும் மின்னலும் தோன்றியது. அச்சமயம் ஒரு பெரிய மீன் தோணியை நோக்கி வந்தது. மீனின் முகத்தில் ஒற்றைக்கொம்பு காணப்பட்டது. பகவானுடைய கட்டளைப்படி வாசுகி என்ற சர்ப்பம் ஓடத்தை வாலால் பிணைத்துக்கொண்டு மீனின் கொம்பில் தலையால் சுற்றிவிட்டது. தோணி நகரத் தொடங்கிய அதே சமயம் கடல் பொங்கிற்று. உலகம் தண்ணீர்க் காடாகி விட்டது. சத்தியவிரதனுக்குப் பகவான் சாங்கிய யோகம், கர்ம யோகம் ஆகியவற்றை உபதேசித்தார். பிரளயம் முடிந்தது. மச்சாவதாரமெடுத்த பகவான் கடலுக் கடியில் சென்று ஹயக்கிரீவனுடன் போர் செய்து அவனை அழித்து நான்கு வேதங்களையும் மீட்டு வந்து பிரம்மதேவரிடம் ஒப்படைத்தார். நாராயணனுடைய கிருபையினால் சத்தியவிரதன் இந்த கல்பத்தில் வைவஸ்வத மனுவாக ஆனான்.
மச்சாவதாரம்
வைகுண்டத்தில் ஸ்ரீமத் நாராயணன் லட்சுமிதேவியடன் அமர்ந்து அண்ட சராசரங்களையும் கவனித்ததுக் கொண்டிருந்தார். படைப்புக் கடவுளான பிரம்மா தன் பணிகளை முடித்து உறங்கத் தொடங்கினார். அப்போது கல்பம் முடியப்போகும் தறுவாயிலிருந்தது. பிரம்மா தூங்கும் போது அவருடைய நாசியிலிருந்து நான்கு வேதங்கள் வெளியே வந்து விட்டன. இந்த சந்தர்ப்பத்தை வெகு காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த ஹயக்கிரீவன் என்ற அரக்கன் ஓடோடி வந்தான். நான்கு வேதங்களையும் அபகரித்துக்கொண்டு கடலுக்குள் பாய்ந்து சென்று மறைந்தான். இதை வைகுண்டபதி பார்த்துப் புன்முறுவல் செய்தார். அவர் வைகுண்டத்திலிருந்து புறப்பட்டார். முற்பிறப்பிலும் இப்பிறப்பிலும் பகவான் நாராயணனிடம் பூரண பக்தி கொண்டிருந்த சத்திய விரதன் எனும் அரசனுக்கு கருணை காட்ட பகவான் விரும்பினார்.
அப்போது மாலை நேரம், சத்தியவிரதன் நதியில் நீராடி ஜல தர்ப்பணம் செய்து கொண்டிருந்தான். அவன் இரண்டு கைகளிலும் தண்ணீரை எடுத்த போது அதில் ஒரு சிறு மீன் காணப்பட்டது. தாராள குணமுள்ள அவன் தண்ணீருடன் மீனை நதியில் சேர்த்தான். மீன் அவனை நோக்கி ~~ அரசனே! ஜீவ ஜந்துக்களிடம் கருணை உள்ளம் படைத்தவனே! என் இனத்தவர் எளியவரை வலியவர் கொன்று தின்னும் பழக்கமுடையவர்கள். உம்முடைய கையில் அடைக்கலம் புகுந்த என்னை நதியில் விட்டுவிட்டாயே|| என்று கேட்டது. அரசன் மறு பேச்சுப் பேசாமல் கமண்டலத்து நீருடன் மீனையும் எடுத்துச் சென்றான். தன் இருப்பிடத்தை அடைந்த சமயம் கமண்டலத்திலிருந்த சிறிய மீன் கமண்டலம் முழுவதும் நிறைந்து வளர்ந்திருப்பதைக் கண்டு ஒரு பெரிய கொப்பறையில் தண்ணீரை நிரப்பி அதில் மீனை விட்டான். மறு நாள் பொழுது விடிவதற்குள் மீன் கொப்பறை அளவிற்கு வளர்ந்து விட்டது. குளம், மடு முதலிய இடங்களில் விட்ட போதும் மீன் வளர்ந்து பெரிதாகிக்கொண்டே இருந்தது. இறுதியில் மீனை எடுத்துச் சென்று கடலில் விட்டான். உடனே அந்த மீன் ~~என்னைக் கடலில் விடுகிறாயே, மகா பெரிய மீன்கள் என்னைத் தின்று விடுமே!|| என்றது. சத்திய விரதன் அந்த மீன் யார் என்பதைத் தெரிந்து கொண்டான்.
~~ நாராயணரே! தங்களின் லீலையை யார் அறிவார்? கருணைக் கடலே உங்களை வணங்குகிறேன். எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்யும் நோக்கத்துடன் மீனாக வந்திருக்கிறீர்கள். இதில் சந்தேகமே இல்லை. தங்களுடைய அவதார காரணத்தை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்|| என்றான். அதற்கு பகவான், ~~ இன்றிலிருந்து ஏழாவது நாள் பிரளயம் தோன்றப் போகிறது. அச்சமயம் உலகம் நீரில் மூழ்கிவிடும். பிரளயம் தோன்றுவதற்கு முதல் நாள் ஒரு தோணியை அனுப்புகிறேன். அதில் சப்த ரிசிகளை ஏற்றிக்கொள். மூலிகைச் செடிகளையும் மரங்கள் செடிகள் கொடிகளின் விதைகளையும் எடுத்து வைத்துக்கொண்டு நீயும் தோணியில் ஏறி அமர்ந்து கொள். எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டு சப்த ரிஷிகளுடன் கடற்கரையிலேயே இரு எதைப்பற்றியும் கவலைப்படாதே || என்று கூறிவிட்டு மறைந்தார். பரந்தாமனுடைய கட்டளைப்படி சப்த ரிஷிகளையும் அழைத்துக் கொண்டு பகவான் கூறிய வண்ணம் தோணியை எதிர்பார்த்துக் கடற்கரையில் காத்திருந்தான் சத்தியவிரதன். ஏழாவது நாள் அதிகாலை ஒரு பெரிய தோணி அவனை நோக்கி வந்து நின்றது. சப்தரிஷிகளுடனும் பகவான் கூறிய பொருட்களுடனும் தோணியில் ஏறி அமர்ந்துகொண்டான். அனைவரும் பகவானைத் துதிக்கத்தொடங்கினார்கள்.
மேகம் கறுத்தது. தென்றல்போல வீசிய காற்று புயலாகியது. இலேசாகத்தொடங்கிய மழை சடுதியாய் மாரியாகி உலகத்தையே மூழ்கடிப்பது போல் பயங்கரமாகப் பொழிந்தது. அண்ட சராசரங்களும் நடுங்க இடியும் மின்னலும் தோன்றியது. அச்சமயம் ஒரு பெரிய மீன் தோணியை நோக்கி வந்தது. மீனின் முகத்தில் ஒற்றைக்கொம்பு காணப்பட்டது. பகவானுடைய கட்டளைப்படி வாசுகி என்ற சர்ப்பம் ஓடத்தை வாலால் பிணைத்துக்கொண்டு மீனின் கொம்பில் தலையால் சுற்றிவிட்டது. தோணி நகரத் தொடங்கிய அதே சமயம் கடல் பொங்கிற்று. உலகம் தண்ணீர்க் காடாகி விட்டது. சத்தியவிரதனுக்குப் பகவான் சாங்கிய யோகம், கர்ம யோகம் ஆகியவற்றை உபதேசித்தார். பிரளயம் முடிந்தது. மச்சாவதாரமெடுத்த பகவான் கடலுக் கடியில் சென்று ஹயக்கிரீவனுடன் போர் செய்து அவனை அழித்து நான்கு வேதங்களையும் மீட்டு வந்து பிரம்மதேவரிடம் ஒப்படைத்தார். நாராயணனுடைய கிருபையினால் சத்தியவிரதன் இந்த கல்பத்தில் வைவஸ்வத மனுவாக ஆனான்.
~~ ஆசை மனிதனை அல்லல் படுத்திவிடும். மூன்றடி மண்ணால் திருப்தி அடையாதவன் மூன்று உலகத்தைக் கொடுத்தாலும் திருப்தி அடைய மாட்டான். எனக்கு மூன்றடி மண் கொடுத்தாலே போதுமானது || என்றார் வாமனர். பலிச் சக்கரவர்த்தி அதற்கு மேல் ஏதும் சொல்லாமல் கேட்டதைக் கொடுப்பதற்காக தண்ணீர் நிறைந்த கிண்டியை எடுத்தார். அதைப் பார்த்து பதறிப்போன குலகுரு சுக்கிராச்சாரியார் பலிச் சக்கரவர்த்தியைப் பார்த்து எச்சரித்தார். ~~ சர்க்கரவர்த்தி! குறளனாக வந்து உன்னிடம் மூன்றடி மண் கேட்பது வேறு யாருமல்ல தேவர்களுக்கு நன்மை செய்வதற்காக அதிதியின் பிள்ளையாகத் தோன்றிய நாராயணரே அது. நீ இவர் கேட்கும் மூன்றடி மண்ணைக் கொடுத்தால் உனக்கும் அரக்கர் குலத்திற்கும் கெடுதி உண்டாகும். கொடுப்பதாகக் கூறி கொடுக்காமல் இருப்பது பாவம்தான். ஆனால் தனக்கே ஆபத்தெனில் வாக்குத் தவறுவது குற்றமல்ல. நீ கொடுப்பதாகச் சொன்னதைக் கொடுக்காதே.|| பலி குலகுரு சொன்னதைச் சிந்தித்தான். பின் கூறினான். ~~ஆச்சாரியரே! தாங்கள் கூறவருவது தர்மமாக இருந்தாலும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதால் நரகம் கிடைத்தாலும் மகிழ்ச்சியே அடைவேன். மூன்றடி மண் கேட்டு வந்திருப்பது நாராயணரானால் அதைவிட மகிழ்ச்சியான செயல் வேறு என்ன இருக்க முடியும்? நாராயணருக்கே நான் தானம் கொடுப்பதால் எனக்குப் பெருமைதான் ஏற்படும். ||
பலியின் பதில் சுக்கிராச்சாரியாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர் கோபமாக, ~~ உனக்கு அகம்பாவம் பிடித்திருக்கிறது. குருவின் சொல்லையே தட்டி விட்டாய். எனவே உன் செல்வம் பதவியெல்லாம் இழந்து விடுவாய் || எனச் சாபமிட்டார். குருவின் சாபத்தைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாத பலி மனைவியை தண்ணீர் கொண்டுவரச் சொல்லி வாமனரின் பாதங்களை நீர்விட்டு சுத்தம் செய்து தண்ணீரை தன் மீதும் மனைவி மீதும் தெளித்து பகவான் கேட்ட வண்ணம் மூன்றடி மண்ணைத் தாரை வார்த்தான். இதைக் கண்ட தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். மங்கல வாத்தியங்கள் முழங்கின. குறளனாக வந்த திருமால் விராட புருஷராக உயர்ந்தார். அவருடைய திருமேனியில் பலி சகல லோகங்களையும் ஜீவ ராசிகளையும் கண்டான். மெய் மறந்து பரந்தாமரைத் துதித்தான். ஒரு அடியால் பூமியையும் மறு அடியால் வானத்தையும் அளந்த பெருமாள் மூன்றாவது அடிக்கான இடத்தைக் கேட்டார். பலிச் சர்க்கரவர்த்தி சிறிதும் தயங்காமல் ~~ இதோ என் சிரசில் மூன்றாவது அடியை அளந்து கொள்ளுங்கள். || என்று மண்டியிட்டு கரங்குவித்து தலை வணங்கி உட்கார்ந்தான். அப்போது பிரகலாதன், பிரம்மா மற்றும் தேவர்கள். அங்கு வந்தனர். அனைவரும் பகவானைத் துதித்தனர். பகவானை நோக்கிப் பிரம்மா பலிச்சக்கரவர்த்திக்கு கருணை காட்டும்படி வேண்டினார்.
~~ பிரம்ம தேவரே! நான் ஆட்கொள்ள விரும்புபவரின் ஆசாபாசங்கள், செல்வச்செருக்கு அனைத்தையும் முதலில் அழிப்பேன். பிறகே அருள் புரிவேன் || என்று கூறிய வாமனர் பலியை பார்த்து ~~ நீ உன் உற்றார் உறவினர் அனைவரையும் அழைத்துக்கொண்டு அதலத்துக்குப் போ. அங்கு உனக்கோ உன் உற்றார் உறவினருக்கோ யார் தீமை செய்ய நினைத்தாலும் எனது சுதர்சனம் அவர்களைக் கவனித்துக் கொள்ளும் || என்றார்.
பலி ஆனந்தக்கண்ணீர் பெருக பகவானை மூன்று முறை வலம்வந்து வணங்கினான். பின் உற்றார் உறவினருடன் அதலத்துக்குச் சென்றான். இந்திரனுக்கு தேவலோகத்தை அளித்து விட்டு வாமனர் மறைந்தார்.
பலியின் பதில் சுக்கிராச்சாரியாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர் கோபமாக, ~~ உனக்கு அகம்பாவம் பிடித்திருக்கிறது. குருவின் சொல்லையே தட்டி விட்டாய். எனவே உன் செல்வம் பதவியெல்லாம் இழந்து விடுவாய் || எனச் சாபமிட்டார். குருவின் சாபத்தைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாத பலி மனைவியை தண்ணீர் கொண்டுவரச் சொல்லி வாமனரின் பாதங்களை நீர்விட்டு சுத்தம் செய்து தண்ணீரை தன் மீதும் மனைவி மீதும் தெளித்து பகவான் கேட்ட வண்ணம் மூன்றடி மண்ணைத் தாரை வார்த்தான். இதைக் கண்ட தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். மங்கல வாத்தியங்கள் முழங்கின. குறளனாக வந்த திருமால் விராட புருஷராக உயர்ந்தார். அவருடைய திருமேனியில் பலி சகல லோகங்களையும் ஜீவ ராசிகளையும் கண்டான். மெய் மறந்து பரந்தாமரைத் துதித்தான். ஒரு அடியால் பூமியையும் மறு அடியால் வானத்தையும் அளந்த பெருமாள் மூன்றாவது அடிக்கான இடத்தைக் கேட்டார். பலிச் சர்க்கரவர்த்தி சிறிதும் தயங்காமல் ~~ இதோ என் சிரசில் மூன்றாவது அடியை அளந்து கொள்ளுங்கள். || என்று மண்டியிட்டு கரங்குவித்து தலை வணங்கி உட்கார்ந்தான். அப்போது பிரகலாதன், பிரம்மா மற்றும் தேவர்கள். அங்கு வந்தனர். அனைவரும் பகவானைத் துதித்தனர். பகவானை நோக்கிப் பிரம்மா பலிச்சக்கரவர்த்திக்கு கருணை காட்டும்படி வேண்டினார்.
~~ பிரம்ம தேவரே! நான் ஆட்கொள்ள விரும்புபவரின் ஆசாபாசங்கள், செல்வச்செருக்கு அனைத்தையும் முதலில் அழிப்பேன். பிறகே அருள் புரிவேன் || என்று கூறிய வாமனர் பலியை பார்த்து ~~ நீ உன் உற்றார் உறவினர் அனைவரையும் அழைத்துக்கொண்டு அதலத்துக்குப் போ. அங்கு உனக்கோ உன் உற்றார் உறவினருக்கோ யார் தீமை செய்ய நினைத்தாலும் எனது சுதர்சனம் அவர்களைக் கவனித்துக் கொள்ளும் || என்றார்.
பலி ஆனந்தக்கண்ணீர் பெருக பகவானை மூன்று முறை வலம்வந்து வணங்கினான். பின் உற்றார் உறவினருடன் அதலத்துக்குச் சென்றான். இந்திரனுக்கு தேவலோகத்தை அளித்து விட்டு வாமனர் மறைந்தார்.
பரசுராமாவதாரம்
அவர்களின் மகிழ்ச்சியான இல்லறத்தின் பயனாக அவர்களுக்கு ஆறு பிள்ளைகள் பிறந்தார்கள். அப்பிள்ளைகளில் விஜயன் சகல கலைகளையும் கற்றான். சத்தியத்துடன் நேர்மையாக வாழ்ந்தான். அவனுடைய வம்சத்தில் காதி தோன்றினான். காதிக்கு அழகான பெண் பிறந்தாள். அவளுக்கு சத்தியவதி என்ற பெயர் சூட்டி அருமையாக வளர்த்து வந்தான். கலைகள் அனைத்தையும் கற்றுக் கொடுத்தான். ரிசிகர் என்ற முனிவர் சத்தியவதியை தனக்குத் திருமணம் செய்து தரும்படி காதியிடம் கேட்டார். காதிக்கோ ரிசிகருக்கு திருமணம் செய்து கொடுக்க விருப்பமில்லை. அதை நேரிடையாகச் சொல்லாமல் ரிசிகரால் நிறைவேற்ற முடியாத நிபந்தனையைச் சொன்னார். ~~ உடல் முழுவதும் வெள்ளையாகவும் காதுகள் கறுப்பாகவுமுள்ள ஆயிரம் குதிரைகளைக் கொடுத்தால் சத்தியவதியை திருமணம் செய்து கொடுக்கிறேன் || என்றார்
ரிசிகர் அப்படியே செய்வதாகக் கூறிச்சென்று, சில நாட்களுக்குள்ளாகவே காதி கேட்டது போல் ஆயிரம் குதிரைகளுடன் காதியிடம் சென்று விட்டார். இதற்குமேல் சொல் மாறக் கூடாது என்று காதி சத்தியவதியை ரிசிகருக்கு மணமுடித்து வைத்தார். ரிசிகருக்கும் சத்தியவதிக்கும் ஜமதக்னி என்ற ஆண் குழந்தை பிறந்தது. ஜமதக்னி சகல சாஸ்திரங்களையும் போர்க் கலைகளையும் கற்று அறிஞனாகவும் வீரனாகவும் விளங்கினான். அவனுக்கு ரேணுகா என்ற அழகியைத் திருமணம் செய்து வைத்தார்கள். ஜமதக்னி இல்லறத்தை நடத்திக்கொண்டே தவமும் செய்து கொண்டிருந்தார். அவர்களுக்குப் பல புதல்வர்கள் பிறந்தார்கள். அவர்களுள் ராமன் என்பவனும் ஒருவன். ஜமதக்னி தாம் அறிந்த கலைகள் யாவற்றையும் புதல்வருக்கும் கற்றுக் கொடுத்தார். ராமன் போர்க்கலையில் தேர்ந்தவனாகவும் பரசு என்ற ஆயுதப் போரில் வல்லவனாகவும் திகழ்ந்தான். அதனால் அவனைப் பரசுராமன் என்ற பெயரால் அழைத்தனர். ஜமதக்னி கங்கைக் கரையில் குடில் அமைத்து தவத்தில் ஈடுபட்டிருந்தார். அவருடைய பிள்ளைகளையும் ஆத்மீகத்திலேயே ஈடுபடுத்தியிருந்தார். மனைவி ரேணுகா கணவருக்குப் பணிவிடை செய்து கொண்டே கணவரின் தவத்திற்கு உதவியாக இருந்தாள். ஹைஹய நாட்டின் அரசன் காந்தவீரியார்ச்சுனன் என்பவன் திருமாலை நோக்கித் தவமிருந்து அபார உடல் வலிமையையும் ஆயிரம் கரங்களையும் பெற்றான். அவன் அழகில் மயங்கி நூற்றுக்கணக்கான பெண்கள் அவனை மணந்தனர்.
ஒரு சமயம் காந்தவீரியாச்சுனன் ரேவா நதியில் பல பெண்களுடன் நீராடிக் கொண்டிருந்தான். அவன் நதியில் வேகமாக நீரைக்கலக்கி விளையாடியதால் ஆற்றின் நீர் கரையையும் கடந்து பாய்ந்தது. நதிக் கரையில் இலங்கையின் அதிபன் இராவணன் குடில் அமைத்து தவம் செய்து கொண்டிருந்தான். நதி வெள்ளம் வேகமாகப் பாய்நது அவனது குடிலையும் அடித்துச் சென்றது. தனது குடில் அடித்துச் செல்லப் பட்டதற்கு காந்தவீரியார்ச்சுனன் தான் காரணமென்பதை உணர்ந்த இராவணன் உடனே அவனைக் கொல்வதற்காக ஓடினான். இராவணனை ஒரு குழந்தையைப் பிடிப்பதைப்போல் பிடித்த காந்தவீரியார்ச்சுனனின் பிடியிலிருந்து விடுபட இராவணன் எவ்வளவு முயற்சித்தும் முடியவில்லை. இராவணனை சில நாட்கள் தனது பாதாளச் சிறையில் அடைத்து வைத்த காந்தவீரியார்ச்சுனன் பின் அவனை மனமிரங்கி விட்டுவிட்டான்.
ஒரு நாள் பரிவாரங்களுடன் நீண்டநேரம் வேட்டையில் ஈடுபட்டிருந்த காந்தவீரியார்ச்சுனன் தங்களுக்கேற்பட்ட பசியை தீர்க்க காட்டில் உணவும் தண்ணீரும் தேடித்திரிந்த நேரத்தில் ஜமதக்னி முனிவரின் ஆச்சிரமத்தைக் கண்டான். மன்னன் முனிவரை வணங்கி அவனும் பரிவாரங்களும் களைப்புடன் இருப்பதைக் கூறி உணவும் தண்ணீரும் தந்து உதவும்படி கேட்டான். முனிவரிடம் கேட்டதைக் கொடுக்கும் காமதேனு என்ற தெய்வப் பசு இருந்தது. அதன் உதவியால் மன்னனுக்கும் பரிவாரங்களுக்கும் முனிவர் சிறப்பான விருந்தளித்தார்.
காட்டில் தவம் செய்யும் முனிவரால் இவ்வாறு சிறப்பான விருந்து எப்படி அளிக்க முடிந்தது என்பதை ஆராய்ந்த மன்னன் முனிவரிடமுள்ள காமதேனுவைப் பற்றி அறிந்து, காமதேனுவை முனிவரிடமிருந்து கவர்ந்து செல்லத் தீர்மானித்தான். அவன் கட்டளைப்படி அவனது பரிவாரங்கள் காமதேனுவையும் அதன் கன்றையும் அவனது ராஜ்யத்தின் தலைநகரான மாகிஷமதிக்கு ஓட்டிச் சென்றார்கள.; அரசனின் இச் செயலால் கவலையும் சீற்றமும் அடைந்திருந்த முனிவர் முகவாட்டத்துடன் காணப்பட்டார். அச்சமயம் தனது கடமைகளைச் செய்ய வெளியே சென்றிருந்த பரசுராமன் திரும்பி வந்தான். தந்தையின் முக வாட்டத்தைக் கண்டு திடுக்கிட்டான். நடந்தவற்றை அறிந்து உடனே பரசுவைக் கையிலெடுத்துக் கொண்டு நகரத்திற்கு விரைந்தான். பரசுராமன் வருவது தெரிந்ததும், பரசுராமனை அழிப்பதற்காக காந்தவீரியார்ச்சுனன் பதினேழு அக்ரோணி சேனையை அனுப்பி வைத்தான். பல ஆயுதங்களால் தன்னைத் தாக்கிய பதினேழு அக்ரோணி சேனையையும் பரசுராமன் ஒருவனாகவே தாக்கி அழித்தான்.
சேனை முழுவதும் அழிந்ததை அறிந்த காந்தவீரியார்ச்சுனன் தனது ஆயிரம் கைகளிலும் ஆயிரம் விதமான ஆயுதங்களை எடுத்துக் கொண்டு போர்முனைக்கு வந்தான். கடுமையாக நடைபெற்ற போரில் காந்தவீரியார்ச்சுனன் படைக்கலங்கள் முடிவுற்ற நிலையில் மரங்களையும் பெரிய பாறைகளையும் பெயர்த்து எடுத்து அடித்தான். அவற்றையெல்லாம் தடுத்த பரசுராமர் இறுதியில் அவனுடைய கைகளை ஒவ்வொன்றாகத் துண்டித்து இறுதியில் அவன் தலையை ஒரே வெட்டில் உடலிலிருந்து வேறாக்கினான்.
காமதேனுவையும் கன்றையும் ஓட்டிக் கொண்டு குடிலுக்கு வந்து தந்தையிடம் ஒப்படைத்தான். நடந்ததை அறிந்த முனிவர் பெரிதும் வருத்தப்பட்டார். ~~ மகனே! அரசர்கள் திருமாலின் அம்சமாவார்கள். திருமாலின் அம்சமாகிய அரசனைக் கொன்றது மகா பாவமாகும். அந்தணர்களாகிய நாம் கொலைபாதகச் செயலில் ஈடுபடக் கூடாது. ஆத்திரத்திற்கு இடம் கொடாது பொறுமை பேண வேண்டும். நீ செய்த பாவத்தைப் போக்க புனித நதிகளைத் தேடி நீராடி வா || என்றார்.
தந்தையின் அறிவுரைப்படி பரசுராமன் சுமார் ஓராண்டு காலம் புனித நதிகளில் நீராடி பின் குடிலுக்குத் திரும்பினார். ஒரு நாள் வழக்கம் போல அதிகாலையில் ரேணுகா கணவரின் நித்திய கடமைகளுக்காக நீர் எடுத்துவரக் கங்கைக்குச் சென்றாள். அவள் வழக்கமாக கங்கையில் நீராடி எழுந்து கணவனை மனதில் நினைத்து தண்ணீரில் விரலால் ஒரு வட்டம் போடுவாள். உடனே நதியின் அடியிலிருந்து மண் குடமாக உருவாகி கங்கை நீருடன் மேலே எழுந்து வரும். இதை எடுத்துக் கொண்டு ரேணுகாதேவி குடிலுக்கு வருவாள். ஆனால் அன்று அவள் நீராடி எழுந்து கங்கையில் வட்டம் போடும் சமயம் வானவீதியில் சென்ற கந்தர்வன் ஒருவனுடைய உருவம் நதி நீரில் பிரதி பலித்தது. கந்தர்வனின் அப+ர்வ அழகைக் கண்டு இப்படி அழகுடையவர்கள் இருக்கிறார்களா என்று நினைத்தாள். அவள் போட்ட வட்டம் வட்டமாகவே இருந்தது. குடம் தண்ணீருடன் மேலெழுந்து வரவில்லை. பல முறை முயற்சித்தும் பயனில்லை. ரேணுகா தேவி மனக் கலக்கத்துடன் குடிலை நோக்கி வெறுங்கையுடன் வந்தாள்.
ரேணுகா முகவாட்டத்துடன் நாணிக்கோணி நிற்பதைப் பார்த்த முனிவர் நடந்ததை உணர்ந்து கொண்டார். உடனே பிள்ளைகள் ஒவ்வொருவராக அழைத்தார் தாயை வெட்டிக் கொலை செய்யும்படி கூறினார். ஒருவர் பின் ஒருவராக மறுத்து விட்டனர். இறுதியாகப் பரசுராமனை அழைத்துத் தாயாரையும் சகோதரர்களையும் தலையைத் துண்டித்துக் கொல்லும்படி கட்டளையிட்டார். பரசுராமர் எதிர்த்து ஒரு சொல்லும் சொல்லாமல் பரசுவால் தாயாரினதும் சகோதரர்களினதும் தலையைத் துண்டித்தார். பின் தந்தையின் முன் வந்து நின்று வணங்கினார்முனிவர் மகிழ்ச்சியடைந்து ~~ மகனே உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் தருகிறேன். || என்றார். சற்றும் தயங்காமல் பரசுராமன் ~~ தங்களின் கட்டளையின் கீழ் என்னால் கொல்லப்பட்ட தாயாரும் சகோதரர்களும் உயிர்பெற்று எழ வேண்டும் || என்று கேட்டார். முனிவர் மகிழ்ச்சியடைந்து ~~ போய் அவரவர் உடலில் தலைகளைப் பொருத்தி அவர்களின் பெயர்களை சொல்லி அழைத்தால் அவர்கள் எழுவார்கள். || என்று கூறினார்.
தந்தையின் அறிவுரைப்படி பரசுராமன் சுமார் ஓராண்டு காலம் புனித நதிகளில் நீராடி பின் குடிலுக்குத் திரும்பினார். ஒரு நாள் வழக்கம் போல அதிகாலையில் ரேணுகா கணவரின் நித்திய கடமைகளுக்காக நீர் எடுத்துவரக் கங்கைக்குச் சென்றாள். அவள் வழக்கமாக கங்கையில் நீராடி எழுந்து கணவனை மனதில் நினைத்து தண்ணீரில் விரலால் ஒரு வட்டம் போடுவாள். உடனே நதியின் அடியிலிருந்து மண் குடமாக உருவாகி கங்கை நீருடன் மேலே எழுந்து வரும். இதை எடுத்துக் கொண்டு ரேணுகாதேவி குடிலுக்கு வருவாள். ஆனால் அன்று அவள் நீராடி எழுந்து கங்கையில் வட்டம் போடும் சமயம் வானவீதியில் சென்ற கந்தர்வன் ஒருவனுடைய உருவம் நதி நீரில் பிரதி பலித்தது. கந்தர்வனின் அப+ர்வ அழகைக் கண்டு இப்படி அழகுடையவர்கள் இருக்கிறார்களா என்று நினைத்தாள். அவள் போட்ட வட்டம் வட்டமாகவே இருந்தது. குடம் தண்ணீருடன் மேலெழுந்து வரவில்லை. பல முறை முயற்சித்தும் பயனில்லை. ரேணுகா தேவி மனக் கலக்கத்துடன் குடிலை நோக்கி வெறுங்கையுடன் வந்தாள்.
ரேணுகா முகவாட்டத்துடன் நாணிக்கோணி நிற்பதைப் பார்த்த முனிவர் நடந்ததை உணர்ந்து கொண்டார். உடனே பிள்ளைகள் ஒவ்வொருவராக அழைத்தார் தாயை வெட்டிக் கொலை செய்யும்படி கூறினார். ஒருவர் பின் ஒருவராக மறுத்து விட்டனர். இறுதியாகப் பரசுராமனை அழைத்துத் தாயாரையும் சகோதரர்களையும் தலையைத் துண்டித்துக் கொல்லும்படி கட்டளையிட்டார். பரசுராமர் எதிர்த்து ஒரு சொல்லும் சொல்லாமல் பரசுவால் தாயாரினதும் சகோதரர்களினதும் தலையைத் துண்டித்தார். பின் தந்தையின் முன் வந்து நின்று வணங்கினார்முனிவர் மகிழ்ச்சியடைந்து ~~ மகனே உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் தருகிறேன். || என்றார். சற்றும் தயங்காமல் பரசுராமன் ~~ தங்களின் கட்டளையின் கீழ் என்னால் கொல்லப்பட்ட தாயாரும் சகோதரர்களும் உயிர்பெற்று எழ வேண்டும் || என்று கேட்டார். முனிவர் மகிழ்ச்சியடைந்து ~~ போய் அவரவர் உடலில் தலைகளைப் பொருத்தி அவர்களின் பெயர்களை சொல்லி அழைத்தால் அவர்கள் எழுவார்கள். || என்று கூறினார்.
பரசுராமன் தந்தையை வணங்கி சகோதரர்களின் உடல்களைப் பொருத்தி பெயர் சொல்லி அழைத்தான். அவர்கள் உயிர் பெற்று எழுந்தார்கள். தாயாரின் தலையை எடுத்துக் கொண்டு அவளுடைய உடலைத் தேடினான். அதற்குள் காட்டு விலங்கு ஒன்று அவளின் உடலைத் தூக்கிச் சென்று விட்டது. என்ன செய்வது என்ற கலக்கத்துடன் இருக்கும் சமயம் வேறு ஒரு பெண்ணின் உடல் காணப்பட்டது. அவ்வுடலில் தாயாரின் தலையைப் பொருத்தி ~~ அம்மா || என்று அழைத்தான். உயிர்பெற்று எழுந்த அவள் தனது உடல் வேறுயாருடையதோ என்று தெரிந்ததும் வெட்கப்பட்டு கணவருக்கு முன்னே செல்லப் பயந்து சுவருக்குப் பின்னே உடலை மறைத்துக்கொண்டு முகத்தைக் காட்டினாள். மனைவியின் முகத்தைப் பார்த்து உண்மையை உணர்ந்த முனிவர் ~~ ரேணுகா இன்று முதல் நீ மாரியம்மன் என்ற பெயரில் கிராம தேவதையாக விளங்குவாயாக || என்றார். அன்று முதல் ரேணுகாதேவி கிராம தேவதையாக மக்களால் போற்றி வணங்கப் படுகிறாள். அவள் மூலமாகத்தான் மழை பொழிவதாக மக்கள் நம்பத் தொடங்கினார்கள்.
காந்தவீரியார்ச்சுனனின் பிள்ளைகள் தங்களது தந்தையைக் கொன்ற பரசுராமனைப் பழிவாங்க தருணம் பார்த்திருந்தார்கள். ஒருநாள் பரசுராமன் தன் சகோதரர்களுடன் காட்டில் காய் கனிகளைப் பறித்துவரச் சென்றான். அப்போது ஜமதக்னி முனிவர் தியானத்தில் ஈடுபட்டிருந்தார். இதுதான் சரியான சமயம் என்று குடிலுக்கு வந்த காந்தவீரியார்ச்சுனனின் பிள்ளைகள், ரேணுகா எவ்வளவோ கதறி அழுதும் கெஞ்சியும் கேட்ட போதும் அவளின் கதறலைக் காதில் வாங்காமலேயே முனிவரின் தலையைத் துண்டித்து அதை எடுத்துச் சென்று விட்டார்கள். ரேணுகாவின் அழுகுரல் கேட்டு பரசுராமனும் சகோதரர்களும் குடிலுக்கு ஓடி வந்தார்கள். தந்தையின் தலை வெட்டப்பட்டுக் கிடப்பதைக் கண்டார்கள். தலையற்ற முண்டத்தை பாதுகாத்து வைத்திருக்கச் சொல்லிவிட்டு பரசுராமன் ஆயுதத்தை எடுத்துக்கொண்டு நகரத்தை நோக்கி விரைந்தான். காந்தவீரியார்ச்சுனனின் பிள்ளைகளையும் ஷத்திரியர்களையும் கொன்று குவித்தான். தந்தையின் தலையை எடுத்து வந்தான். அவரின் உடலில் பொருத்தினான். முனிவர் உயிர் பெற்று எழுந்தார். பிறகு சப்தரிஷி மண்டலத்தில் ஒரு நட்சத்திரமாகச் சென்று விட்டார். தந்தையைக் கொன்ற அரச குலத்தவரை பரசுராமன் மன்னிக்கவில்லை. இருபத்தொரு தலைமுறை அரச குலத்தைக் கொன்று குவித்தான். இரத்த வெள்ளம் ஆறாகப் பெருகியது. பரசுராமன் செய்த இந்த வதங்களை சமந்த பஞ்சகம் என்பர். அதன் பின்னர் மகேந்திர மலைக்குச் சென்று வசிக்கத் தொடங்கினாலும் தந்தையைக் கொன்ற அரச குலத்தவரை மன்னிக்காது அவ்வப்போது வந்து அரச குலத்தவரை அச்சுறுத்திக் கொண்டிருந்தான்.
காந்தவீரியார்ச்சுனனின் பிள்ளைகள் தங்களது தந்தையைக் கொன்ற பரசுராமனைப் பழிவாங்க தருணம் பார்த்திருந்தார்கள். ஒருநாள் பரசுராமன் தன் சகோதரர்களுடன் காட்டில் காய் கனிகளைப் பறித்துவரச் சென்றான். அப்போது ஜமதக்னி முனிவர் தியானத்தில் ஈடுபட்டிருந்தார். இதுதான் சரியான சமயம் என்று குடிலுக்கு வந்த காந்தவீரியார்ச்சுனனின் பிள்ளைகள், ரேணுகா எவ்வளவோ கதறி அழுதும் கெஞ்சியும் கேட்ட போதும் அவளின் கதறலைக் காதில் வாங்காமலேயே முனிவரின் தலையைத் துண்டித்து அதை எடுத்துச் சென்று விட்டார்கள். ரேணுகாவின் அழுகுரல் கேட்டு பரசுராமனும் சகோதரர்களும் குடிலுக்கு ஓடி வந்தார்கள். தந்தையின் தலை வெட்டப்பட்டுக் கிடப்பதைக் கண்டார்கள். தலையற்ற முண்டத்தை பாதுகாத்து வைத்திருக்கச் சொல்லிவிட்டு பரசுராமன் ஆயுதத்தை எடுத்துக்கொண்டு நகரத்தை நோக்கி விரைந்தான். காந்தவீரியார்ச்சுனனின் பிள்ளைகளையும் ஷத்திரியர்களையும் கொன்று குவித்தான். தந்தையின் தலையை எடுத்து வந்தான். அவரின் உடலில் பொருத்தினான். முனிவர் உயிர் பெற்று எழுந்தார். பிறகு சப்தரிஷி மண்டலத்தில் ஒரு நட்சத்திரமாகச் சென்று விட்டார். தந்தையைக் கொன்ற அரச குலத்தவரை பரசுராமன் மன்னிக்கவில்லை. இருபத்தொரு தலைமுறை அரச குலத்தைக் கொன்று குவித்தான். இரத்த வெள்ளம் ஆறாகப் பெருகியது. பரசுராமன் செய்த இந்த வதங்களை சமந்த பஞ்சகம் என்பர். அதன் பின்னர் மகேந்திர மலைக்குச் சென்று வசிக்கத் தொடங்கினாலும் தந்தையைக் கொன்ற அரச குலத்தவரை மன்னிக்காது அவ்வப்போது வந்து அரச குலத்தவரை அச்சுறுத்திக் கொண்டிருந்தான்.
கல்கி அவதாரம்
பரித்திராணாய சாதூனாம் வினசயச்
துஷ்கிருதாம்
தர்ம ஸம்ஸ்தாப ஸார்த்தாய
சம்பவாமி யுகே யுகே
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|