புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரயில்வே பட்ஜெட் 2014 Poll_c10ரயில்வே பட்ஜெட் 2014 Poll_m10ரயில்வே பட்ஜெட் 2014 Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரயில்வே பட்ஜெட் 2014 Poll_c10ரயில்வே பட்ஜெட் 2014 Poll_m10ரயில்வே பட்ஜெட் 2014 Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
ரயில்வே பட்ஜெட் 2014 Poll_c10ரயில்வே பட்ஜெட் 2014 Poll_m10ரயில்வே பட்ஜெட் 2014 Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
ரயில்வே பட்ஜெட் 2014 Poll_c10ரயில்வே பட்ஜெட் 2014 Poll_m10ரயில்வே பட்ஜெட் 2014 Poll_c10 
17 Posts - 4%
prajai
ரயில்வே பட்ஜெட் 2014 Poll_c10ரயில்வே பட்ஜெட் 2014 Poll_m10ரயில்வே பட்ஜெட் 2014 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ரயில்வே பட்ஜெட் 2014 Poll_c10ரயில்வே பட்ஜெட் 2014 Poll_m10ரயில்வே பட்ஜெட் 2014 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ரயில்வே பட்ஜெட் 2014 Poll_c10ரயில்வே பட்ஜெட் 2014 Poll_m10ரயில்வே பட்ஜெட் 2014 Poll_c10 
8 Posts - 2%
jairam
ரயில்வே பட்ஜெட் 2014 Poll_c10ரயில்வே பட்ஜெட் 2014 Poll_m10ரயில்வே பட்ஜெட் 2014 Poll_c10 
4 Posts - 1%
Jenila
ரயில்வே பட்ஜெட் 2014 Poll_c10ரயில்வே பட்ஜெட் 2014 Poll_m10ரயில்வே பட்ஜெட் 2014 Poll_c10 
4 Posts - 1%
Rutu
ரயில்வே பட்ஜெட் 2014 Poll_c10ரயில்வே பட்ஜெட் 2014 Poll_m10ரயில்வே பட்ஜெட் 2014 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ரயில்வே பட்ஜெட் 2014 Poll_c10ரயில்வே பட்ஜெட் 2014 Poll_m10ரயில்வே பட்ஜெட் 2014 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயில்வே பட்ஜெட் 2014


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 08, 2014 6:27 pm


நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின் முதல் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா பட்ஜெட்டை தாக்கல் செய்து, அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் முக்கிய அம்சங்கள்:


தமிழகம்: மேல்மருவத்தூர், வேளாங்கன்னி போன்ற புனித் தலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

ஷாலிமார் - சென்னை பிரீமியம் ஏ.சி. எக்ஸ்பிரஸ், காமாக்யா - சென்னை பிரீமியம் எக்ஸ்பிரஸ், மும்பை - ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் தொடங்கப்படும்.

புதிய ரயில்கள்: 5 ஜன்சதாரண் ரயில்கள், 5 பிரீமியம் ரயில்கள், 6 ஏ.சி. ரயில்கள், 27 எக்ஸ்பிரஸ் ரயில்கள், 8 பயணிகள் ரயில்கள் ஆகியன அறிமுகப்படுத்தப்படும். 11 ரயில்களின் சேவை நீட்டிக்கப்படும்.

ரயில் நிலையங்களில் பார்சல்களை பாதுகாக்க தனியார் உதவியுடன் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்படும்.

சரக்கு பெட்டிகள் புதிய வடிவமைப்பில் உருவாக்கப்படும். இதன் மூலம் கூடுதல் சரக்குகளை ஏற்றி வருமானத்தை அதிகரிக்கலாம்.

தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கப்படும். தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத படிப்புகள் பயிற்றுவிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 9 பகுதிகளில் இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை மணிக்கு 160கி.மீ முதல் 200 கி.மீ. வரை அதிகரிக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

ஆளில்லா லெவல் கிராஸிங்குகளை அப்புறப்படுத்தும் வகையில் ரூ.1785 கோடி செலவில் மேம்பாலங்கள், ரயில்வே மேம்பாலங்கள் போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

இ-டிக்கெட் சேவை தரம் உயர்த்தப்படும். ஒரு நிமிடத்தில் 7200 டிக்கெட்டுகளை பதிவு செய்யும் வகையிலும், ஒரே நேரத்தில் 1.2 லட்சம் வாடிக்கையாளர்கள் இணையத்தை அணுகும் வகையிலும் தொழில்நுட்பம் மேம்படுத்தப்படும்.

வடகிழக்கு மாநிலங்களில் நிலுவையில் உள்ள 23 ரயில்வே திட்டங்களையும் செயல்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.

பயணிகள் போன், எஸ்.எம்.எஸ். மூலமாக உணவு தேவை குறித்து தகவல் அனுப்ப வழிவகை செய்யப்படும். அதேபோல், பயணிகள் உணவுத்தரம் குறித்த பின்னூட்டத்தை ரயில்வே துறைக்கு அனுப்பவும் வசதி ஏற்படுத்தப்படும்.

ரயில்கள் வருகை, புறப்பாடு குறித்த தகவல்கள் (எஸ்.எம்.எஸ்) குறுஞ்செய்தி மூலம் அளிக்கப்படும்.

பெண்கள் ரயில் பெட்டிகளில் பயணிக்கும் பெண் காவலர்களுக்கு செல்போன் வழங்கப்படும்.

ரயில்களில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெண் பயணிகள் செல்லும் பிரத்யேக பெட்டியில் பெண் காவலர் பணியமர்த்தப்படுவார்.

இந்தியாவின் நீண்ட நாள் கனவான புல்லட் ரயில் திட்டம் தொடங்கப்பட வேண்டும். முதல் கட்டமாக அகமதாபாத் - மும்பை இடையே புல்லட் ரயில் சேவையை தொடங்கலாம்.

அதி வேக ரயில்களை இயக்குவதற்காக 'வைர நாற்கர' திட்டம் அமல்படுத்தப்படும்.

ஏ1 மற்றும் ஏ பிரிவு ரயில் நிலையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்களில் வைஃபை (Wifi) இன்டர்நெட் வசதி வழங்கப்படும்.

டிக்கெட் முன்பதிவு முறைகள் மேம்படுத்தப்படும். மொபைல் மூலமாக, தபால் நிலையங்கள் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது பிரபலப்படுத்தப்படும்.

முக்கிய ரயில் நிலையங்களில் இந்திய ரயில்வே துறை சார்பில் ஃபுட் கோர்ட் (உணவகங்கள்) தொடங்கப்படும்.

ரயில் நிலையங்களை சுத்தமாக பராமரிப்பதற்கு ஏதுவாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் ரயில் நிலையங்களை தத்து எடுத்துக் கொள்ள வரவேற்கப்படுகின்றன.

ரயில்வே துப்புரவு பணிகளுக்கான ஒதுக்கீடு 40 சதவீதம் வரை உயர்த்தப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 50 முக்கிய ரயில் நிலையங்களில், சுத்தப்படுத்தும் பணி அவுட்சோர்சிங் மூலம் மேற்கொள்ளப்படும்.

அனைத்து ரயில் நிலையங்களிலும் குடிநீர், கழிவறை வசதி மேம்படுத்தப்படும்.

ரயில்கள், ரயில் நிலையங்களை சுத்தப்படுத்தும் பணி சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும்.

ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் ஆர்.ஓ. சுத்திகரிப்பு வசதி பொருந்திய குடிநீர் குழாய்கள் அமைக்கப்படும்.

ரயில் இயக்கம் தவிர மற்ற துறைகளில் புதிய திட்டங்களை மேற்கொள்ள அந்நிய நேரடி முதலீடு வரவேற்கப்படுகிறது.

கட்டண உயர்வை மட்டும் நம்பி இருக்காமல் ரயில்வே துறை வருமானத்தை அதிகரிக்க மற்ற வழிமுறைகளையும் ஆராய வேண்டியுள்ளது.

ரயில் கட்டணத்தை உயர்த்தும் முடிவு மிகவும் சிக்கலானதாக இருந்தது. ஆனால் தேவை கருதியே அந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனால் ரயில்வே துறைக்கு கூடுதலாக ரூ.8000 கோடி வருமானம் கிடைக்கும்.

கடந்த காலங்களில் புதிய திட்டங்களை அறிவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டது. அவற்றை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தப்படவில்லை.

ரயில்வே துறை சவால் நிறைந்தது. சரக்கு ரயில் சேவையில் உலகில் முதன்மையான இடத்தை இந்தியா பிடிக்க வேண்டும் என்பதே ரயில்வே துறையின் லட்சியம்.

ரயில் சேவை போதுமான அளவு மக்களைச் சென்றடையவில்லை. 362 புதிய திட்டங்களை நிறைவேற்ற ரூ.1.82 லட்சம் கோடி தேவைப்படுகிறது.

புதிய ரயில்கள் பல அறிவிக்குமாறு கோரிக்கைகள் குவிந்துள்ளன.

புதிய திட்டங்களை அறிவிப்பதன் மூலம் அவையில் கைத்தட்டல் வாங்கலாம். ஆனால் அவ்வாறு அறிவித்தால், அது நெருக்கடியில் உள்ள ரயில்வே துறைக்கு அநீதி இழைப்பது ஆகிவிடும்.

ஏற்கெனவே ரயில்வே துறை மேற்கொண்டு வரும் திட்டங்களை முடிப்பதற்கே ஆண்டுக்கு ரூ.5 லட்சம் கோடி தேவைப்படுகிறது.

கவர்ச்சித் திட்டங்களும், நிர்வாக சீர்கேடும் ரயில்வே துறையை நெருக்கடியில் தள்ளியிருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில், 3,700 கி.மீ அளவிற்கு புதிய ரயில் பாதைகள் அமைப்பதற்காக ரயில்வே நிர்வாகம் ரூ.41,000 கோடி செலவிட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 08, 2014 6:28 pm

ரயில்வே பட்ஜெட்டில் 58 புதிய ரயில்கள்: முழு பட்டியல்

தமிழகத்தில் 4 ரயில்கள் உட்பட 58 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 5 ஜன சாதாரண ரயில்கள், 5 பிரீமியம் ரயில்கள், 6 குளிர்சாதன வேக ரயில்கள், 27 துரித ரயில்கள் 8 பாசஞ்சர் ரயில்கள், மெயின் பாதையில் 2 மின்சார ரயில் சேவை, 5 டீசல் ரயில் சேவைகள் ஆகியவை இதில் அடங்கும்.

மேல்மருவத்தூர், வேளாங்கன்னி, ஜலவார் போன்ற கோயில் திருவிழாக் காலங்களிலும் விடுமுறை தினங்களிலும் அதிகரிக்கும் பயணிகளின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவிடப்படும் சிறப்பு ரயில் சேவை தொடரும் என்றும் ரயில்வே அமைச்சர் கூறினார். புதிய ரயில்களின் முழு விவரம்:

ஜன்சாதரண் ரயில்கள்:


1. அகமதாபாத்- தர்பங்கா ஜன்சாதரண் விரைவு ரயில் (சூரத் வழியாக)

2. ஜே.நகர் - மும்பை ஜன்சாதரண் விரைவு ரயில்

3. மும்பை - கோரக்ப்பூர் ஜன்சாதரண் விரைவு ரயில்

4. சஹாரசா - ஆனந்த் விஹார் ஜன்சாதரண் விரைவு ரயில் (மொத்திஹரி)

5. சஹாரசா - அமிர்தசரஸ் ஜன்சாதரன் விரைவு ரயில்


ப்ரீமியம் ரயில்கள்:


1. மும்பை சென்ட்ரல்- புது டெல்லி ப்ரீமியம் ஏ.சி விரைவு ரயில்

2. ஷலிமர்- சென்னை ப்ரீமியம் ஏ.சி விரைவு ரயில்

3. செக்கந்திராபாத்- ஹஸ்ரத் நிஜாமூதீன் ப்ரீமியம் ஏ.சி விரைவு ரயில்

4. ஜெய்ப்பூர்- மதுரை ப்ரீமியம் விரைவு ரயில்

5. காமக்யா- பெங்களூரு ப்ரீமியம் விரைவு ரயில்


ஏ.சி விரைவு ரயில்கள்:


1. விஜயவாடா- புதுடெல்லி விரைவு ரயில் (தினமும்)

2. லோக்மான்ய திலக்- லக்னோ (வாராந்திரம்)

3. நாக்ப்பூர்- அமிர்தசரஸ் (வாராந்திரம்)

4. நஹர்லாகுன்- புதுடெல்லி (வாராந்திரம்)

5. நிஜாமூதீன்- புனே (வாராந்திரம்)


விரைவு ரயில்கள்:


1. அகமதாபாத்- பாட்னா விரைவு ரயில் (வாராந்திரம்) வாரணாசி வழியே

2. அகமதாபாத்- சென்னை விரைவு ரயில் (வாரம் இருமுறை) வசாய் சாலை வழியே

3. பெங்களூரு- மங்களூரு விரைவு ரயில் (தினம்)

4. பெங்களூரு- ஷிமோகா விரைவு ரயில் (வாரம் இருமுறை)

5. பந்த்ரா- ஜெய்ப்பூர் விரைவு ரயில் (வாராந்திரம்) நாக்டா, கோட்டா வழியே

6. பிதர்- மும்பை விரைவு ரயில் (வாராந்திரம்)

7. சப்ரா- லக்னோ விரைவு (வாரம் மூன்று முறை) பால்லியா, காஸிப்பூர், வாரணாசி வழியே

8. ஃபேரோஸ்ப்பூர்- சண்டிகர் விரைவு ரயில் (வாரம் 6 முறை)

9. கவுகாத்தி- நஹர்லகுன் இண்டர்சிட்டி விரைவு ரயில் (தினம்)

10. கவுகாத்தி- முர்காங்க்சேலேக் இண்டர் சிட்டி விரைவு ரயில் (தினம்)

11. கோரக்ப்பூர்- ஆனந்த் விஹார் விரைவு ரயில் (வாராந்திரம்)

12. ஹபா- பிலாஸ்ப்பூர் விரைவு ரயில் (வாராந்திரம்) நாக்ப்பூர் வழியே

13. ஹசூர் சாகெப் நந்தத்- பிகானேர் விரைவு ரயில் (வாராந்திரம்)

14. இந்தூர்- ஜம்மு தாவி விரை ரயில் (வாராந்திரம்)

15. காமக்யா- கத்ரா விரைவு ரயில் (வாராந்திரம்) தர்பங்கா வழியே

16. கான்பூர்- ஜம்மு தாவி விரைவு ரயில் (வாரம் இருமுறை)

17. லோக்மான்ய திலக்- அஸாம்கர் விரைவு ரயில் (வாராந்திரம்)

18. மும்பை- காசிபத் விரைவு ரயில் (வாராந்திரம்) பல்ஹர்ஷா வழியே

19. மும்பை- பலிடன்னா விரைவு ரயில் (வாராந்திரம்)

20. புதுடெல்லி- பாதிண்டா ஷதாப்தி விரைவு ரயில் (வாராந்திரம்)

21. புதுடெல்லி- வாரணாசி விரைவு ரயில் (தினம்)

22. பாராதீப்- ஹவுரா விரைவு ரயில் (வாராந்திரம்)

23. பாராதீப்- விசாகப்பட்டினம் விரைவு ரயில் (வாராந்திரம்)

24. ராஜ்காட்- ரேவா விரைவு ரயில் (வாராந்திரம்)

25. ராம்நகர்- ஆக்ரா விரைவு ரயில் (வாராந்திரம்)

26. டாடா நகர் பைய்யப்பனாஹலி விரைவு ரயில் (வாராந்திரம்) பெங்களூரு வழியே

27. விசாகப்பட்டினம்- சென்னை விரைவு ரயில் (வாராந்திரம்)


பயணிகள் ரயில்:


1. பிகானர்- ரேவாரி (தினசரி)

2. தர்வாத்- தந்தேலி (தினசரி) அல்னாவர் வழியே

3. கோரக்ப்பூர்- மெண்டிப்பத்தார் (தினசரி)

4. ஹத்தியா- ரூர்கேலா

5. பிந்தூர்- கஸ்ரக்காட் (தினசரி)

6. ரங்கப்பரா வடக்கு- ராங்கியா (தினசரி)

7. யெஷ்வந்த்ப்பூர்- தும்க்குர் (தினசரி)


MEMU (மெயின்லைன் எலெக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் சேவைகள்:


1. பெங்களூரு- ரமனாகரம் (வாரம் 6 முறை)

2. பல்வால்- டெல்லி- அலிகர் DEMU


DEMU (டீசல் எலெக்ட்ரிகல் மல்டிபிள் யூனிட்) சேவைகள்:


1. பெங்களூரு- நீல்மங்கலா (தினசரி)

2. சப்ரா- மந்துவாதீ (வாரம் 6 முறை) பாலியா வழியே

3. பாராமுலா- பனிஹல் (தினசரி)

4. சாம்பல்ப்பூர்- ரூர்கேலா (வாரம் 6 முறை)

5. யெஷ்வந்த்ப்பூர்- ஒசூர் (வாரம் 6 முறை)


ரயில் சேவைகளில் விரிவாக்கம்:


1. 22409/22410 ஆனந்த் விஹார் சாசாராம் கரீப் ரத் விரைவு ரயில் (சேரும் இடம்: கோவா)

2. 12455/12456 டெல்லி சராய் ரோஹில்லா ஸ்ரீகங்கா நகர் விரைவு ரயில் (சேரும் இடம்: பிகானர்)

3. 15231/15232 கோனிடியா முசாபர்நகர் விரைவு (சேரும் இடம்: பரூனி )

4. 12001/12002 புதுடெல்லி போபால் ஷதாப்தி விரைவு (சேரும் இடம்: ஹபீப்கஞ்சி)

5. 54602 லூதியானா- ஹெஸ்ஸார் (சேரும் இடம்: கோரக்ப்பூர் )

6. 55007/55008 சோன்பூர்- பக்தாங்கஞ் (சேருமிடம்: கோரக்ப்பூர்)

7. 55072/55073 கோரக்ப்பூர்- தாவே (சேரும் இடம்: சிவான்)

8. 63237/63238 பக்சார்- முகல்சராய் MEMU (சேரும் இடம்: வாரணாசி)

9. 63208/63211 ஜாஜா- பாட்னா MEMU (சேரும் இடம்: ஜசிதி)

10. 64221/64222 லக்னோ ஹர்தாய் MEMU (சேரும் படம்:ஷாஜஹான்ப்பூர் )

11. 68002/68007 ஹவுரா- பேல்தா MEMU (சேரும் இடம்: ஜலேஸ்வர்)



ரயில்வே பட்ஜெட் 2014 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 08, 2014 6:29 pm

மத்திய அரசின் பார்வை: கவர்ச்சித் திட்டங்கள் இல்லாத ரயில்வே பட்ஜெட்

கவர்ச்சித் திட்டங்கள், நிர்வாக சீர்கேட்டால் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் ரயில்வே நிதி நிலைமையை சீர் செய்யும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2014-15-க்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா இன்று தாக்கல் செய்தார். இது தொடர்பாக அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

"இன்று (செவ்வாய்கிழமை) தாக்கல் செய்யப்பட்ட 2014-15-க்கான ரயில்வே பட்ஜெட் பயணிகள் நலனில் அக்கறையும், அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் அமைந்துள்ளது.

மேலும் புதிய ரயில்வே திட்டங்களை குறிப்பிட்ட கால அளவில் நிறைவேற்றுவதும், நிதிநிலையை மேம்படுத்துவதும் இந்த பட்ஜெட்டின் சிறப்பு அம்சமாக உள்ளன. பயணிகள் ரயில் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணம் உயரத்தப்படவில்லை.

கவர்ச்சித் திட்டங்கள் இல்லை:

கவர்ச்சித் திட்டங்கள், நிர்வாக சீர்கேடு இவற்றால் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் மோசமான நிலையில் இருக்கும் ரயில்வே நிதி நிலைமையை சீர் செய்யும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ரயில்வே துறையில் அந்நிய நேரடி முதலீடு, பொதுத்துறை - தனியார் துறை பங்கீட்டில் செயல்திட்டங்களை நிறைவேற்றும் முறை ஆகியன அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

பயணிகள் வசதிக்கு முன்னுரிமை:

பட்ஜெட்டில் பயணிகள் வசதிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. பயணிகள், பாதுகாப்பாக, வசதியான பிரயாணம் மேற்கொள்ள கூடுதல் அக்கறை செலுத்தப்பட்டுள்ளது. ரயில்நிலையங்கள் மற்றும் ரயில்களில் சுகாதாத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும், எஸ்கலேட்டர்கள் மற்றும் லிப்ட் வசதிகள் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தடுப்பு நடவடிக்கை:

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய விபத்துகளை தடுப்பதற்காக உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நடவடிக்கைகளை ரயில்வே மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மெயின்லைன் மற்றும் புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் அறிமுகப்படுத்தப்படும். பெண் பயணிகள் பாதுகாப்புக்காக 4000 பெண் காவலர்கள் பணியமர்த்தப்படுவார்கள். பெண் காவலர்களுக்கு செல்போன் வழங்கப்படும் போன்ற அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

டிக்கெட் முன்பதிவில் மேம்பாடு:

இந்த ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் வசதிக்காக தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நடைமேடை டிக்கெட் மற்றும் முன்பதிவு செய்யப்படாத வகுப்புகளுக்கான டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் பெற வசதி செய்யப்படும். பயணிகள் தாங்கள் இறங்கும் இடத்தை அறிந்து கொள்ளும் வகையில் மொபைல் போனில் 'வேக்-அப் கால் சிஸ்டம்' அறிமுகப்படுத்தப்படும். ஏ1 மற்றும் ஏ பிரிவு ரயில் நிலையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்களில் வைஃபை (Wifi) இன்டர்நெட் வசதி செய்துதரப்படும். இ-டிக்கெட் சேவை தரம் உயர்த்தப்படும். ஒரு நிமிடத்தில் 7200 டிக்கெட்டுகளை பதிவு செய்யும் வகையிலும், ஒரே நேரத்தில் 1.2 லட்சம் வாடிக்கையாளர்கள் இணையத்தை அணுகும் வகையிலும் தொழில்நுட்பம் மேம்படுத்தப்படும்.

மேலும், பயணிகள் போன், எஸ்.எம்.எஸ். மூலமாக உணவு தேவை குறித்து தகவல் அனுப்ப வழிவகை செய்யப்படும். அதேபோல், பயணிகள் உணவுத்தரம் குறித்த பின்னூட்டத்தை ரயில்வே துறைக்கு அனுப்பவும் வசதி ஏற்படுத்தப்படும். ரயில்கள் வருகை, புறப்பாடு குறித்த தகவல்கள் (எஸ்.எம்.எஸ்) குறுஞ்செய்தி மூலம் அளிக்கப்படும். டிக்கெட் முன்பதிவு முறைகள் மேம்படுத்தப்படும். மொபைல் மூலமாக, தபால் நிலையங்கள் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது பிரபலப்படுத்தப்படும் போன்ற அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

ரயில்வே நிர்வாகத்தை மேலும் திறன் வாய்ந்ததாக உருவாக்கும் வகையில், தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாரா படிப்புகளை பயிற்றுவிக்கும் ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புல்லட் ரயில்கள்:

மும்பை - அகமதாபாத் மார்க்கத்தில் புல்லட் ரயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் பலமுறை விரிவாக ஆராயப்பட்டுள்ளன. எனவே அந்த மார்க்கத்தில் முதலில் புல்லட் ரயில் இயக்கலாம் என பட்ஜெட்டில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுதவிர, அதிவேக ரயில்களுக்கான 'வைர நாற்கர' திட்டம் செயல்படுத்தப்படும். குறிப்பிட்ட சில மார்க்கங்களில் செல்லும் ரயில்கள் வேகத்தை மணிக்கு 160 கி.மீ இருந்து 200 கி.மீ வரை அதிகரிக்கப்படும் போன்ற ரயில்வே துறையை நவீனப்படுத்துவதற்கான அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன. ரயில் நிலையங்கள், ரயில்வே கட்டிடங்கள், ரயில்வேக்கு சொந்தமான நிலங்களில் சூரிய மின்சக்தி திட்டங்கள் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வருவாய் அதிகரிப்பு திட்டங்கள்:

ரயில்வே துறையின் வருவாயை பெருக்கவும் பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பார்செல் வாகனங்கள் வசதிகளைப் பயன்படுத்துவதில் தனியார் நிறுவனங்களை ஊக்கப்படுத்துதல், பால் ஏற்றிச் செல்ல சிறப்பு கண்டெய்னர்கள் அறிமுகப்படுத்துதல், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை பெருமளவில் ரயில்களில் கொண்டு செல்லும் வகையில் கிடங்குகளுடன் புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளுதல், தனியார் சரக்கு முனையங்கள் அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை:

ரயில்வே நிர்வாகத்திலும், புதிய திட்டங்களை செயல்படுத்துவதிலும் வெளிப்படைத் தன்மை கடைபிடிக்கப்படும். அந்த வகையில், ரயில்வே திட்டங்களின் நிலவரம் குறித்து ஆன் லைனில் தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்படுகிறது. அதிக செலவில் வாங்கப்படும் உபகரணங்கள் ஆன்லைன் மூலம் வாங்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும். அடுத்த இரண்டு மாதங்களில், ரயில் பெட்டிகளையும் ஆன் லைன் மூலம் வாங்க வழிவகை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருநகரம் மற்றும் புறநகர் ரயில் சேவை பயணிகள் கூடுதலாக பயன் பெறும் வகையில் சீரமைக்கப்படும் என்ற அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகி இருக்கிறது. மும்பையில் அடுத்த 2 ஆண்டுகளில் 864 மின்சார ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

58 புதிய ரயில்கள்:

2014-15 ரயில்வே பட்ஜெட்டில் 58 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே உள்ள 11 ரயில்களின் சேவை நீட்டிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 28 மார்க்கங்களில் புதிதாக ரயில் சேவை அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். புனிதத்தலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். விவேகானந்தர் வாழ்க்கை மற்றும் அவரது படைப்புகள் குறித்து எடுத்துரைக்கும் வகையில் சிறப்பு ரயில் இயக்கப்படும் போன்ற அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன.

2014-15 நிதியாண்டில், ரயில்வே துறை ரூ.1,64,374 கோடி வருவாய் ஈட்டும், ரூ.1,49,176 கோடி செலவு செய்யும் என கணக்கிடப்பட்டுள்ளது." இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, கட்டண உயர்வு இல்லாத ரயில்வே பட்ஜெட் என்றாலும், முன்கூட்டியே ரயில் கட்டணங்கள் உயர்த்துப்பட்டுவிட்டது கவனிக்கத்தக்கது.



ரயில்வே பட்ஜெட் 2014 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 08, 2014 6:30 pm

ரயில்வே துறையில் அன்னிய நேரடி முதலீடுக்கு சதானந்த கவுடா பரிந்துரை

ரயில்வே துறையின் பணப் பற்றாக்குறையைப் போக்கி உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்த அன்னிய நேரடி முதலீட்டை வரவேற்க ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா முன்மொழிந்துள்ளார்.

இதற்கானக் கொள்கைகளைத் தளர்த்த நாடாளுமன்றம் வழிவகைகள் செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.

மக்களவையில் இன்று ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசும்போது, "ரயில்வே துறையில் வளர்ச்சி என்பது உள்கட்டமைப்புகளை மேம்படுத்த முதலீடு செய்யப்படுவதைப் பொறுத்தே அமையும்.

ரயில்வே துறை வருவாய் மற்றும் அரசு நிதியுதவி ஆகியவை வளர்ச்சிக்குப் போதுமானதாக இருக்காது. எனவே ரயில்வே துறை அமைச்சகம் அன்னிய நேரடி முதலீட்டிற்கு கொள்கைகளை எளிதாக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்திடம் கேட்டுக் கொள்ளவிருக்கிறது” என்றார்.

ஆனால் ரயில்கள் இயக்கப்படுவதில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட மாட்டாது என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

தனியார் - பொதுத்துறை - கூட்டுறவு ரயில்வே துறைக்கு போதுமான நிதி ஆதாரங்களைத் திரட்டித் தருவதில் வெற்றியடையவில்லை, ஆகவே எதிர்காலத் திட்டங்களை நிறைவேற்றுவதில், இந்த தனியார் - பொதுத்துறை - கூட்டுறவுத் திட்டத்தை வலுப்படுத்துவது முக்கியம் என்று தாம் கருதுவ்தாகவும், பல எதிர்காலத் திட்டங்களை நிறைவேற்ற இந்த முறையிலேயே முதலீடு வரவேற்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

உதாரணமாக, அதிவேக ரயில்கள், புல்லட் ரயில்களுக்கு அதிக முதலீடுத் தேவைப்படும் அதற்கு தனியார் -பொதுத்துறை - கூட்டுறவு மூலம் நிதிதிரட்டுவதே சுலபமான வழி என்று அவர் தெளிவுபடுத்தினார்.



ரயில்வே பட்ஜெட் 2014 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக