புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_c10 
3 Posts - 60%
Manimegala
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_c10 
11 Posts - 4%
prajai
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_c10 
9 Posts - 4%
Jenila
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Rutu
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Barushree
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
jairam
அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_c10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_m10அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம் - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகங்களும் முகங்களும் - சு. வில்வரெத்தினம்


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 10:29 pm

First topic message reminder :


1. தியானம்

உலகமே
இருளினுள் மூழ்கித் துயிலும்
ஒரு கரீய பெரீய முட்டையாய்.

உறங்காது
நானோ
உள்விழித்திருப்பேன்.

உள்திரளும் பரிதிக் குஞ்சின்
உதயம் தியானித்து.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 10:45 pm

24. நிலவுக்கு எழுதல்

யாரிட்டார் சாபம் இந்த நிலவுக்கு?

கறையோடு உடன் பிறந்தும்
கண்ணை உறுத்தாது
காலமெலாம் பொழிந்த
நிலவுக்கு நேர்ந்த தென்ன?

காவிய காலக் கனவே சிதைந்ததென
இன்று வெறுங் குறுமதியாய்...
யாரிட்ட சாபமோ?

காலங் காலமாய் கன்னியர்க்கு உதாரணித்தும்
"நிலவின் துகிலைக் கலை" யென்று
உடுத்தியும் உரிந்தும்
வேசையாடித் தீர்த்த கவிஞரின்
வெறித்தனம் ஓய
'காவிய நிலா'வின் காலம் தேய்ந்தது.

கால வளர்ச்சியில்
காத்திருந்து.
இதோ பாரென்று
கற்றை விரித்தது விஞ்ஞான நிலா
மனிதக் காலடிச் சுவடுகள் ஏந்தி.

'சுவடு பற்றி எழுக!" என்றார்த்தார்;
எழுந்தவர் என்ன கண்டோம்?

விண்ணிலும் வேலி போடத்
தொடங்கினர் விஞ்ஞானத்தார்.

நிலவின் குண்டு குழிகள் எங்கள்
நெஞ்சிலும் கொண்டேகி
நிலவுலாவிய நிகழ்வு என் செயும்?

அன்று ஆதி சிவன் சூடினான்
இன்று நாம் சூடுவோம் என்று
வல்லரசுகள் எழுந்து வல்லூறாய்ப் பறக்க
வாழுகின்ற பூமியிலே-

விஞ்ஞான யுத்த காண்டம்
விளைவித்த மனுச் சாம்பல்
புழுதி கண் மறைக்க
நிலவெங்கே தோற்றும்?

நிலவின் கிரகணமே
நித்திய தரிசனமாச்சு.

நிலவுக்கு எழுதலே இவரின்
நீசத்தனங்களை
மறைக்க எழுப்பும்
மாயையாச்சு.

மாயை முகில் திரைகிழித்து
கறையிலா நிலவினிக் காரிக்குமோ?
நாமெல்லாம்
தூவெண் மதி சூடும் நாளென்ன
வெகு தொலைவோ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 10:46 pm

25. பொழிவு

புலன்கள் அதிர
மின்னி முழங்கிப் பொழிந்தாற்றான்
பொழிவா?

பொழிந்த பெருமழைக்குப் பின்னால்
காத்திருந்து மெல்ல எழுமே
ஒர் பேர் மௌனப் பெருக்கு.

அடை மழைக்குப் பின் முளைக்கும்
கதிர் விரி காலையில்
வழியுமே
ஓர் எல்லையற்ற பேரமைதி.

கழுவித் துடைத்த வானின்
ந‡த்ர விழிகள்
சொரியுமே
ஓர் ஸ்ருதி சுத்தம்.

புலன்கள் உறைந்து போக
இவற்றின்
பொழிவில் நனைந்திலையா?

இலையுதிர்ந்த நெடுமரமாய்
ஏகப் பெரு வெளியின்
சங்கீதம் குளித்திலையா?
......

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 10:46 pm

26. எதிர்ப்பு

எதையும் எதிர்கொள்
முகந் திருப்பாதே;
மனஞ் சலிக்காதே.

தடைகள்;
புறத் தடைகள்
மடைத்தனம்,
வாமன ரூபம்
மூவுலகளந்ததே!

ஆகாயம் மேவிய
பாய்ச்சலில்,
தடைகள் வெறுந் தோற்றம்.

"மெல்லெனப் பாயும் தண்ணீர்
கல்லையும் உருவிப் பாயும்," - வெறும்
பாறைப் பழம் மொழி
தாமதத் தத்துவம்.

ஓடிவரும் கிளை நதிகள்
உட் தேக்கி
வேகமாய்ப் பாய்
வீச்சோடு.

மனஞ் சலிக்காதே,
முகந் திருப் பாதே,
எதிர் கொள் எதையும்;
எதிர்ப்பில் முளைகொள்....
.....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 10:47 pm

27. இடிபாடுகளின்மேல் ஒரு படைவீடு

கோபுரங்கள் எழும்பிய கோயில்களை விடவும்
இடிபாடுற்றவைகளில்
எனக்கு அதிகம் ஈடுபாடு.

இடிபாடு களிடையேயும்
'இதோ நான் எழுந்தருளி' என்று
சிதிலங்களின் மேலாய்க் கூவும்குரலை
நான் கேட்பதிங்கேதான் ஆதலினால்,

இடிபாடுகளிடையேயும் இறை காணார்
எழுப்புவார் கோபுரம்.

எல்லாமே இடிந்த வெளியில்
திரு நடம் காண வேண்டும்.
பரந்தில்லை வெளியில் அந்த
நடம் காணாப் பேர்வழிகள்
இடிபாடுகள் நீக்க எழுகிறார் தூண்களாக.
தூக்கி நிறுத்தும் ஒவ்வொரு தூணிலும்
நாமம் பொறிக்கும் காமிகள் எழுகிறார்.

இடிந்து விழப் போகும் இந்த
நடமாடுந் தூண்கள்
எழுப்பிய தூண்கள் நிற்கவா போகுது?
கோபுரத்தை பொம்மைகளா தாங்கி நிற்குது?
இளிச்சவாய்ப் பொம்மைகள்.

எல்லாமே ஒருநாள் இடிவிழுந்த குண்டாகாதோ?
எழும்பிய கோயில் வேறு இடிவிழுந்தகுண்டு வேறா?
இடிவிழுந்த குண்டினுள்ளும்
நீரூற்று முகங்காட்டும்.

அழிவிலும் ஆக்கமுண்டு
தன்னின் அழிவு தரிசனம் காட்டும்
தன்னை எழுப்பினால் சூரனின் தலைமாற்றம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 10:47 pm

2

சூரன் போர் நடந்தது
கோயில் ஒன்றில்.
கோபுரம் எழும்பிய கோயில்.

சூரன் வந்தான் வீதியெல்லாம்
சுற்றித்திரிந்து தலைகாட்டினான்.
தலைசுழற்றி தலைமாற்றி
'கலை' யாடித் திரிந்தான்.
"உருவேறிய சூரனின் உடல் அற
சேவலும் மயிலும் வரும்" என்றார் ஒருவர்.

(சேவலுக்கும் மயிலுக்குமா சூரன்
உடல் கிழித்தான் முருகன்?)

'சூரன் யார்? யார் சூரன்?'
'சூரனைச் செய்தவன் சூரனா?'
'சூரனைக் காவியவன் சூரனா?'

சூரவிமர்சனங்களில் சுற்றி நின்றோர் ஈடுபட
சூரனைக் காவினோரும் முருகனைக் காவினோரும்
சுறுசுறுப்பாய் முன்பின்னாய்ச் சுழன்று வர
திடீரென்று
மோதுண்டு வீழ்ந்தார்
கோயில் முதலாளி, குருக்கள், நாரத வேடர்
பலரும் வீசுண்டு வீழ்ந்து முழங்காலில்
நோவுண்டு எழுந்து மெல்ல நொண்டிநடக்க.....

வானிலே என்ன அது?
சூறைக் காற்றுச் சுழன்றடிக்க
சூரனாய்ப் பருத்த மேகங்கள் கர்ஜிக்க
பீறிவரும் வேலாயுதங்களென மின்னல் பெருக்குதிர
பொழியும் மழைக்குருதி.

சூரன் போர் இப்போது வானில் இடமாற்றம்
சுற்றிநின்றோர் அஞ்சி கோயிலின் உட்பதுங்க
கோபுரமே தகர்ந்து கொட்டுவதாய்
இடிமுழக்கம்.

'கோபுரத்தில் இடிவிழக் கூடுமோ?' என்று
அஞ்சுந் தொனிகள்: ஏக்கம் கௌவிய
முகங்கள் கற்சிலைகளாய் விறைத்துநிற்க--

இடிவிழுந்தால் தான் என்ன?
இடியும் இடி விழுந்த பள்ளமும்....
கடலும் கரைகடந்த வெள்ளமும்....
தீயும் தீக்கடைந்த ஊழியும்....
ஊழிக்காற்றின் 'ஹோ'வென்ற இரைச்சலும்....?

'உலகழிந்து போகுமே!'

உலகழிந்து போனால் தான் என்ன?
சூரனாய்ப் பருத்துக் கிடக்கும் உலகு.
சூரனின் அழிவில் சுகம் இல்லையா?

சூரனின் கோட்டை சுக்கு நூறாய்ச் சிதற
இடிபாடுகளையே படைவீடாக்கி
இறை கொலுவிருக்காதா?

முப்புரங்கள் எரிந்த சாம்பரிடை
மூன்றாவது கண் ஜுவாலித்ததே.

சருகுகள் 'குபீரெ'ன்று பற்றி எரிகையிலும்
ஓர் இசை எழல் உண்டன்றே.

எல்லாமே இடிந்த வெளியில் திருநடம்
இந்த இசையின் பின்னணி லயத்திலே அன்றோ!

இதனால்தான்
கோபுரங்கள் எழும்பிய கோயில்களைவிடவும்
இடிபாடுகளில் எனக்குப் பிரியம் அதிகம்.

இடிபாடுகளிடையே எழும்
புழுதியிடைத் தோயாச் சுவடுகளின்
தூரத்துச் சிலம்பொலி
காதில் விழுவது இங்கேதான்.

காது கொடுங்கள் அக்கழலொலிக்கு.
எல்லாமே இடிந்த பரவெளியில்
திருநடம் காண வாரும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 10:48 pm

28. தூரக் கடல் தாண்டி.....

ஓடத்தில் ஏறிச் செல்வோமே
தொடுவானம் குறியாக
நீல நெடுங் கனவாய் விரிகடலில்
ஓலமிடும் அலைகள் நடுவே.

பிரிந்து செல்லும் துறைமுகத்தில்-துயர்
சொரிந்தெரியும் விளக்குகளில்
எங்கள் நெஞ்சங்கள் ஏங்குவதோ?
எங்குமே துன்பங்கள்தான் சொந்தமோ?

விடிவை நோக்கிய பயணமிது
விடிவதெப்போ? பயணம் முடிவதெப்போ?
ஒளியின் கீற்றுகள் வெளிப்படுமோ?
இருளின் பாறைதான் தொடர் இருப்போ?

விடியும் விடியும் என்றெவரோ சொன்னார்
இருளின் பாழில் எழுந்த குரல்களோ?
மயங்கும் மனங்களின் மாயங்கள் தாண்டி
துயிலும் நம்பிக்கைச் சுடர் தூண்டிப் போவோம்.

ஒளியும் இருளும் உலகின் விதி என்ற
இருளின் வலையில் விழுந்து படாமல்
துயிலும் நம்பிக்கைச் சுடர் தூண்டிப் போவோம்
தோணி எடுத்தோம் துடுப்பை வலிப்போம்.

ஒளிக்கும் ஒளியாக உற்ற துயருக்கு விடிவாக
வெளிக்கும் வெளியாக வெளிச்சமே வாழ்வாக
உன்னதம் ஒன்றின் இருப்புளது
துன்பக் கடல் தாண்டிப் போவோமே
துன்பக் கடல் தாண்டிப் போவோமே.
........

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 10:48 pm

29. சுழலின் மையம் தேடி....

அம்மா ஒவ்வொரு நாளும்
முற்றம் பெருக்குவாள்
குப்பைகள் சேரும் கொளுத்தி எரிப்பாள்.

கொளுத்தக் கொளுத்தக் குப்பைகள் சேரும்
குப்பைகள் சேரச்சேர கொளுத்தலும் தொடரும்
கொளுத்திய பின் எஞ்சிய சாம்பலை
காற்றெடுத்துத் தூவ
விழுந்த தூசிகள் விழிகளை உறுத்தும்.

பக்கத்து வீட்டில் குப்பைகள் சேர்ந்தால்
வெட்டித் தாழ்ப்பார் பசளையாய் மாறும்
பசளையின் மேலே பச்சை கொடி விழும்
கொடிவிட்டுத் தளிர்த்தவை
நாட்செல நாட்செல சருகுகள் உதிர்க்கும்.
தளிர்ப்பதும் உதிர்ப்பதும் உதிர்ப்பதும் தளிர்ப்பதும்
ஒரே சுழல் வட்டம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 10:49 pm

2

எப்போதிருந்து இவ்வுலகம்
குப்பை கொட்ட ஆரம்பித்திருக்கும்?
உலகங்கள் தானென்ன ஒன்றா இரண்டா?
அவையும்
கொட்டிக் கிடக்குதே குப்பைக் கணக்கில்

வான மண்டலத்தில் தூசிகள் திரண்டு
திணிந்து பெருத்து ஊதி
வெடித்த ஒரு கணந் தொட்டு
பருத்திக் கொட்டைப் பஞ்சுகளாய்
இருட்டில் விழிக்கும் உலகங்கள்தான்

எத்தனை! எத்தனை!

பால் வழிப் பயணிகள்,
உடுக் கொத்து ஊர்வல
மத்தாப்பூச் சிதறல்கள்.
எண்ணுதற்கு எட்டாப் பெருவெளியில்
பின்னிப் பின்னிக் கண்ணைச் சிமிட்டும்
அரைவிழிப்பு, கால்விழிப்பு தூக்கக் கலக்கங்கள்,
ஒளிவருடத் திரைமறைப்புகள்
குறாவிக் கிடக்கும் ரஹஸ்யங்கள்
இன்னும்
எம்மையே ஆளும் இயல்பினராய
உன்னத நாகரீகத்து ஒளி விளக்குகள்.

இப்படி இப்படி
எத்தனை உலகம் சித்துகள் போல.

எல்லையறு விண்வெளியின் ஏகாந்தத் தாலாட்டில்
கண்ணயர்வன போல் காணும் அண்டமெல்லாம்
அள்ளுண்ட வானப் பேராறாய்
எங்கோ எங்கோ எங்கோவாய்
முடிவிலி என்னும் பரவையுட் பாய்ந்தபடி.....
ஒரே பிரபஞ்ச ஓட்டம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 10:49 pm

3

இங்கேயும்
எமதகத்துள் எத்தனை நகர்வுகள்.

மனவெளியில் குரவையிடும்
எண்ணத் துணுக்குகள்
சிறுச் சிறு கணங்களின்
சேர்க்கை வலங்கள்-
லய மெல்லொழுக்குகளாய்
உடைப் பெடுத் தோடல்களாய்....

மனதின் ஓரவிழி நோக்கில்
ஆழப் புதைகுழி நீத்துக் கிளர்வுறும்
உணர்வுகளின் முளை மீறல்கள்,
கிளைத்துப் படர்ந்து
பூச்சொரியும் இன் கனவுகள்,
துயர் சுமந்து கசியும் மென்பனித் தூறல்கள்,
சடைத்த இருட் தோப்புள்
ஆழ்துயிலும் மர்மங்கள்,
இருட்தோப்பை ஊடுருவி நின்ற நிசப்தத்தின் பேரிரைச்சல்
மூச்சின் நரம்பதிரும் மின்வெட்டுகள்.

இருளிடை மின்மினி வலங்களாய், இப்படி
ஒன்றையன்று விழுங்கியும் உமிழ்ந்தும்
துரத்திக் கொண்டோடும் எண்ணத் துணுக்குகளின்
ஓட்டம் இடையறா ஓட்டம்.

ஜீவன் அறுந்தபின்னும் காற்று வெளியில்
தூவிய கருத்தின் துகள்களாய்
மனோசூக்குமத்தின் மாயப் பந்தயம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 09, 2014 10:49 pm

4

அகவெளி முற்றந் தொட்டு
அண்டவெளி முற்றம் வரையும்
எத்தனை நிகழ்வுகள்! எத்தனை நகர்வுகள்!
அத்தனை நிகழ்வுப் புயல்களும் வாரிக்
குப்பை கொட்ட
தொங்கும் தொட்டிகளா இவ்வுலகங்கள்?
பிரபஞ்சமே குப்பைமயம் தூசிமயமா?
எனின் இந்தத்
தூசிகள் அகல்வதெப்போ?
குப்பைகள் ஒழிவதெப்போ?

அத்தனை உலகும் தீப்பட்டழிந்த
ஊழியின் முடிவில் ஒழியுமா
நெஞ்சின் விழியுறு தூசி?
பிரச்சனையின் முடிவு
பிரபஞ்சத்தின் பிடிசாம்பரில் கிடைக்குமா?

பிடிசாம்பரிடையும் பிரபஞ்ச அணுவிலிருந்து
அடைகாத்து முடுகி முறுகி பெருத்தூதி
மீண்டும் கோளங்கள் பொரித்தால்....?
குப்பைகள் மீண்டும் சேர்ந்தால்....?

உதிர்தலும் தளிர்தலும்
உள்ளிழுத்தலும் உமிழ்தலும்
ஒரே சுழல் வட்டத் தொடர் நிகழ்லீலையாம்.
தொடர்நிகழ் லீலையில்
எனது இருப்பு எங்கே?

சுழல்வட்ட நகர்வில் எனதும்
ஓர் சிறுத்துளி நகர்வே.
எனின்
நகர்விலா எனது இருப்பு?
அன்றி
துளி நகர்வெனும் துண் அணுப்புரைய
விரியும் பேர் வெளியிலா?
ஓயாது உழலும் பிரபஞ்சத்தின்
உள் மௌனத் தொனியிலா?
.....

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக