புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Kavithas
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
1 Post - 1%
bala_t
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
1 Post - 1%
prajai
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
284 Posts - 42%
heezulia
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
6 Posts - 1%
prajai
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
4 Posts - 1%
manikavi
நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_m10நாளும் ஒரு அழகின் அலை - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளும் ஒரு அழகின் அலை


   
   

Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Feb 02, 2014 6:09 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களுக்கு,

வணக்கம்.. சென்ற வருடம் முக நூலில் நாளும் ஒரு அழகின் அலை என்ற தலைப்பில் செளந்தர்ய லஹரி - 100 ஸ்லோகங்களுக்கு நான் புரிந்து கொண்டவற்றை எழுதிப் பார்த்தேன்..

கொஞ்சம் விருத்தங்கள்,வெண்பாக்கள் சில பல உதாரணங்கள் என எழுதிப் பார்த்திருக்கிறேன். அதை இங்கு இடுகிறேன்..

நாளும் ஒன்று என்றில்லை.. மூன்று நான்கும் வரும்..புன்னகை

அன்புடன்

சின்னக் கண்ணன்..


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Feb 09, 2014 10:22 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 18

****


மானாட்டம் தங்க மயிலாட்டம்
பூவாட்டம் வண்ணத் தேராட்டம்
தானாடும் மங்கை சதிராட்டம்
கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்”

“என்னய்யா வர்றச்சயே குஷாலா பாட்டுப்பாடிக்கினு வர்றே?”

“ஹாய்.. இன்னொரு பாட்டையும் கேளு…

கிழக்கு வெளுத்ததம்மா கீழ்வானம் சிவந்ததம்மா
கதிரவன் வரவு கண்டு கமலா முகம் மலர்ந்ததம்மா…”

“ஏய்..படுத்தாத…அது கமலா முகமில்லை..கமல முகம்…எதுக்காகப்பாடறே…?”

“விஷயமில்லாம இருக்குமா….காலங்கார்த்தால..கருக்கல்ல சித்திரச்செவ்வானம் எப்படி இருக்கு்ம்?”

“இன்னொரு பாட்டா…?”

“இல்லை..இல்லை..காலையில் சூரியன் எழும் போது செக்கச்செவேல்னு இருக்குமே அந்த மாதிரியான நிறம் கொண்டது அம்பாளின் தேகத்தின் தேஜஸ். ஒளி..ஈரேழு உலகமும் பரவி இருக்கிறதாம்.”

“அப்புறம்..மொதல்ல பாடினபாட்டுல சரோஜாதேவியப் பத்திச் சொல்லப் போறியா.”

“இல்லை..அபிநய சரஸ்வதி நாட்டு மான்… நான் சொல்றது காட்டு மான்… காட்டில இருக்கற இளம் மான் குட்டி என்ன பண்ணும் ஜம்னு குதிக்கும்..அக்கம்பக்கம் பாக்கும் கொய்ங்க் கொய்ங்க்னு பசிச்சா புல் மேயும்.அப்புறம் ஏதாவது சத்தம் போட்டா மருளும்..மிரண்ட பார்வை பார்க்கும்..அதாவது விழியிலே அபினயம் பிடிக்கும்.”

“சரி..இப்ப என்ன..”

“தேஜஸ் மிக்க அம்பாளை தியானித்தாலே அப்சரஸ்த்ரிகள் ரம்பா ஊர்வசி திலோத்தமா,தேவிகா எல்லாம் வசப்படுவார்களாம்..”

“உன்னைத் திருத்தவே முடியாது… தேவிகாவை விடவே மாட்டியே.. !

”கோபம் கொள்ளாதே மனசாட்சி.சும்மா சொன்னேன்..

.உனக்குத் தெரியுமா. பராசக்தியானவள் இவ்வுலகின் எல்லாப் பொருள்களிலும் ஊடுருவி இருக்கிறாள்..அப்படி ஒரு பக்தன் உணர்ந்து விட்டால் அதுவே பிரம்ம நிலைஅதாவது அவன் கண்ணில் படும் பெண்கள் எல்லாம் சக்தி ரூபமாகத் தென்படுவார்கள்…பொதுவாக இந்த சுலோகத்தில தேவகன்னிகைகள் எல்லாம் வசப்படுவார்கள்னு சொன்னாலுமே கூட இந்த ஸ்லோக பாராயணம் என்ன தரும் தெரியுமா…

“சொல்லு”

“காமனையும் வெல்லும் மனப் பக்குவம் கிடைக்குமாம்…”.

சரி ஸ்லோகத்தையும் பொருளையும் பயபக்தியோட சொல்லு.”

"இதோ”

******

Thanuschayabhi sthe tharuna-tharuni -srisarinibhi
Divam sarva-murvi-marunimani magnam smaranthi ya
Bhavanthasya thrasya-dhwana-harina shaleena nayana
Sahervasya vasya kathikathi na geervana Ganika

தனுச்சாயாபிஸ்-தே தருண-தரணி ஸ்ரீ ஸரணிபிர்
திவம் ஸர்வா-முர்வீ-மருணிமனி மக்னாம் ஸ்மரதி ய:
பவந்த்யஸ்ய த்ரஸ்யத்-வன-ஹரிண சாலீன நயனா
ஸஹோர்வச்யா வச்யா: கதிகதி ந கீர்வாண கணிகா


இளஞ்சிவப்பு நிறமுள்ள காலைக் கதிரவனின் கதிரைப் போன்ற நிறமுள்ள அன்னை ஜகன்மாதாவான உன் தேக ஒளியில் பூமி ஆகாயம் இரண்டுமே மூழ்கிக் கிடக்கின்றன

.இப்படி அம்பாளாகிய உன் அழகை எவன் ஒருவன் மன்ப்பூர்வமாக தியானிக்கிறானோ அவனுக்கு காட்டுமானைப் போன்ற மருள் விழிகளையுடைய தேவகன்னிகைகள் வசமாவார்கள்…


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Feb 09, 2014 10:25 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 19


“பெண்ணே உனது சிற்றிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன்
அடடா அவனே வள்ளலடி”

“ என்னடா..கொஞ்சம் விட்டா ஸ்லோகம் சொல்லாமப் பாட்டா பாடறே.. ஆனாலும் இந்தப்பாட்டிலயும் பிழையிருக்கு..இப்பல்லாம் பிரம்மன் வள்ளலாகிட்டார் சின்ன இடை விஷயத்தில..ஆமாம்பா நிறைய பேர் குண்டா இருக்காங்க..”

“என்ன மரியாதை இல்லாம பேசற மனசாட்சி..லிங்க் இல்லாம நான் ஏதாவது சொல்வேனா..அதுவும் லிங்க உருவிலான ஈசனோட பட்டமகிஷியப் பத்திப் பேசறச்சே..”

“சிலேடையாப் பேசறன்னு நினைப்பா என்ன.....சொல்லு”

“மேற்கண்ட பாட்டு மானிட நர ஸ்த்ரீயைப்பற்றி இந்தக்காலத்தில் வந்தபாட்டு.. இன்னிக்குப் பாக்கற ஸ்லோகம் அம்பாளோட சூட்சும ரூபத்தைப் பத்திப் பேசுது..”

“ம்”

“ஸ்ரீ சக்கரத்தின் மத்தியில் உள்ள பீடத்தை பிந்து என்பர்..அதுவே அம்பிகையின் முகம்..அம்பிகையின் முகத்தையும் அவயவங்களையும் தியானம் செய்து கொண்டு க்லீம் என்னும் மந்திரத்தைச் சொல்லி அவ் அவயவங்களில் தியானம் செய்கிறானோஅவன் தன் காம சக்திகளை வசப்படும்படி செய்கிறான்..இவ்வாறுஇந்த காமகலா மந்திரத்தை உபாசிப்பவனுக்கு என்ன ஆகும்?

“நீயே சொல்லு”

“சூர்ய சந்திரர்களைப் போன்ற நகில்களை உடைய மடந்தையர் விரும்புவர்..

“நகில்னா..ஓ அதான் மொதல்ல பாட்டுப் பாடினியா. புதுசா ஒரு வார்த்தை கத்துக்கிட்டியாக்கும்...”

“ம்.. ஆனா அந்த உபாசகன் மடந்தையர் விரும்பற நிலையெல்லாம் கடந்து உயர்ந்த பக்குவத்தை அடைந்திருப்பான்..”

“அப்புறம்”

“இந்த ஸ்லோக பாராயணம் பண்ணினா மறுபிறவியே கிடையாதாம்..குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும்..”

**

7Mukham bindun kruthva kucha yuga mada sthasya thadha dho
Harardha dhyayedhyo haramamahishi the manmathakalam
Sa sadhya samkshebham nayathi vanitha inyathiladhu
Thrilokimapyasu bramayathi ravindu sthana yugam.

முகம் பிந்தும் க்ருத்வா குசயுக-மதஸ் தஸ்ய தததோ
ஹரார்த்தம் த்யாயேத் யோ ஹரமஹிஷி தே மன்மதகலாம்
ஸ ஸ்த்ய: ஸம்ஷோபம் நயதி வநிதா இத்யதிலகு
த்ரிலோகீ மப்யாஸு ப்ரமயதி ரவீந்து-ஸ்தநயுகாம்


பரம சிவனின் பட்ட மகிஷியே.. ஸ்ரீ சக்ர ரூபத்தில் பிந்துவில் காமகலாரூபிணியான உன் முகத்தையும் அவயவங்களையும் தியானம் செய்துகொண்டு க்லீம் எனும் மந்திரத்தை உச்சரித்து யார் தியானம் செய்கிறானோ அவன் தனது காமத்தை வசப்படும்படி செய்கிறான்..காமத்தை வென்றவ்ன் ஆகிறான்.

.அவனை சூர்ய சந்திரர்கள் போன்ற நகில்கள்ள் படைத்த மூவுலகிலும் சிறந்த மடந்தையர் விரும்புவர்..இவ்வாறு இந்த தியானம் செய்பவன் தேவியின் ஸ்வரூபமாகவே ஆகி மோட்சமும் பெறுவான்


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Feb 09, 2014 10:27 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 20


Kirantim angebhyah kirana-nikurumba'mrta-rasam
Hrdi tvam adhatte hima-kara-sila murthimiva yah;
Sa sarpanam darpam samayati sakuntadhipa iva
Jvara-plustan drshtya sukhayati sudhadhara-siraya.

கிரந்தீம்-அங்கேப்ய: கிரண-நிகுரும்பாம்ருதரஸம்
ஹ்ருதி-த்வாம் ஆதத்தே ஹிமகர-சிலா மூர்த்திம் இவ ய:
ஸ ஸ்ர்பாணாம் தர்பம் சமயதி ஸகுந்தாதிப இவ
ஜ்வர-ப்லுஷ்டாந் த்ருஷ்ட்யா ஸுகயதி ஸுதாதார ஸிரயா


சந்திர காந்தக் கல் எப்படி சந்திரனைக் கண்டதும் நீரை விடுமோ அது போல அமுத கிரணங்கள் உனது அங்கங்களில் இருந்து பெருகுகின்றது.

.அம்பிகையே..உன்னை தியானிக்கும் அடியார்கள் உன் சக்தியினால் பாம்புகளின் வீர்யத்தை கருடன் அடக்குவ்துபோல வல்லமை பெற்றவர்கள் ஆகிறார்கள்…அவர்களது பார்வையானது சுரத்தினால் பாதிக்கப் பட்டவர்களையும் நலமடையச் செய்யும்..


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Mon Feb 10, 2014 10:29 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 21


யோகிங்கறது யார் தெரியுமா”

“தெரியாம என்ன தாடி மீசைல்லாம் வச்சுக்கிட்டு சரித்திர நாவல்கள்ல லாம் வருவாங்க…அப்பப்ப காட்டில சைட்ல மரங்களூடே குதிரைல போவாங்க..அங்கங்க மர்மச் சிரிப்பு சிரிப்பாங்க…அவங்க தானே..
“ உன் கிட்டப் போய்க் கேட்டேன் பாரு…காமம் குரோதம் போன்றவற்றை விட்டவங்களே யோகி..என்ன மகா யோகின்னு கூட சொல்லலாம்….அவர்கள் மூடத்தனம் மாயை இல்லாதவர்கள்..

“அப்படிங்கற”

“அப்படிப் பட்டவர்களால தான் அம்பாளோட இந்த அழகான சூட்சும வடிவை பார்க்க முடியும்

“சுலோகத்தை சொல்லு மனசாட்சி..

“**


Tatil-lekha-thanvim thapana-sasi-vaisvanara-mayim
Nishannam shannam apy upari kamalanam tava kalaam;
Maha-padma tavyam mrdita-mala-mayena manasa
Mahantah pasyanto dadhati parama'hlada-laharim.

தடில்லேகா-தன்வீம் தபன-சசி வைசானர-மயீம்
நிஷண்ணாம் ஷண்ணா-மப்யுபரி கமலானாம் தவ கலாம்
மஹாபத்மாடவ்யாம் ம்ருதித-மல மாயேன மனஸா
மஹாந்த: பச்யந்தோ தததி பரமாஹ்லாத-லஹரீம்

மஹாபத்ம வடனி என்கிற ஆயிரம் இதழ்களையுடைய தாமரை நமது உடலின் ஆறு சக்கரங்களுக்கும் மேலே இருக்கிறது..இதை சஹஸ்ரார கமலம் என்போம்..

அங்கிருந்து கொண்டு சூரியன் சந்திரன் ஆகியோரைக் கலைகளாகக்கொண்டு மின்னல் கொடி போல அம்பாள் தோன்றுவாள்..அந்தத் தோற்றத்தை காமம் குரோதம் விட்ட அறியாமை மூடத்தனம் இல்லாத மஹா யோகிகளால் மட்டுமே காண இயலும்

இந்த ஸ்லோக பாராயணம் வசீகரத் தன்மையை அதிகரிக்கும்


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Mon Feb 10, 2014 10:31 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 22


“பவானி ந்னா என்ன நினைவுக்கு வருது?”

“இந்த நிலவை நான் பார்த்தால் அது
எனக்கென வந்தது போல் இருக்கும்
என் நினைவை எடுத்து வரும்
உன் நெஞ்சினில் கொடுத்து வரும்..

நல்ல பாட்டு..ஜெய் எல் விஜயலஷ்மின்னு நினைக்கறேன் வழக்கம் போல என் மிகப் ப்ரிய கண்ணதாசன்…..ரொம்பப் பழைய படமாச்சே”

“ஏண்டா படுத்தறே…உனக்கு மனசாட்சியாப் பொறந்து நான் படற கஷ்டம் இருக்கே..பவானிங்கறது அம்பாளோட பேர்.

“தெரியுமே ஈசனுக்கு எட்டு பேர் உண்டு பவன், சர்வன், ஈசானான், பசுபதி, ருத்ரன், உக்ரன், பீமன், மஹாதேவன்..அதுல முதல் பெயர் பவன்…. பவனின் சக்தி பவானி..அம்பிகா…”

“அம்பிகைடா.. பரவால்ல எல்லாம் தெரிஞ்சு வச்சுண்டிருக்க..மஹாதேவம்,மன்மதம், ப்ரபஞ்சம் இம்மூன்றையும் பவா என்பார்கள்.. மூன்றையும் தன்னுள் கொண்டவள் பவானி..ஆரத்தி தெரியுமா..

”நான் ஏதாவது சொல்வேன்.. அப்புறம் நீ திட்டுவே..

“சரி நானே சொல்றேன் தேவர்கள் அம்பாளை வணங்கும் போது அவர்களது கிரீடத்தின் ஒளி அவள் பாதகமலங்களில் பட்டு ஆரத்தி எடுப்பது போல இருக்காம்..அப்புறம் அவளை பவானி அப்படின்னு கூப்பிடணும்னு நினைச்சாலே போதும்..அவள் ஓடி வந்து அருள் புரிவாள்.இந்த சாயுஜ்ய பதவி அதாவது அவளே சாயுஜ்யம் தானாம்.. அது பக்தனுக்குக் கிடைக்குமாம். அதைத் தான் சொல்கிறது இன்றைய ஸ்லோகம்.

“தவிர”

“இந்த ஸ்லோக பாராயணம் சகல காரிய சித்தியும் அளிக்குமாம்..”


**

Bhavani tvam daase mayi vitara drishtim sakarunam
Iti sthotum vanchan kadhayati Bhavani tvam iti yah;
Tadaiva tvam tasmai disasi nija-sayujya-padavim
Mukunda-brahmendra-sphuta-makuta-nirajita-padam.

பவானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம்
இதி ஸ்தோதும் வாஞ்சன் கதயதி பவானி த்வமிதி ய:
ததைவ த்வம் தஸ்மை திசஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம்
முகுந்த-ப்ரஹ்மேந்த்ர-ஸ்புட மகுட நீராஜித பதாம்

பவானி, அம்பிகையே…என்னிடத்தில் கருணையுடன் கூடிய உன் பார்வையை செலுத்துவாயாக – என எவனொருவன் வேண்டுகிறானோ அவனுக்கு தேவர்களின் கிரீடங்களின் ஒளியால் தீபாராதனை செய்யப்பட்ட உன் பாத கமலங்களை அடையும் படியான பெரும் பதவியை அவனுக்குக் கொடுக்கிறாய்...



சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Tue Feb 11, 2014 10:19 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 23


“அர்த்த நாரீன்னா தெரியுமோ”

”ஓ.. தி.ஜானகிராமன் கதைல வரும்னு நினைக்கிறேன்.. அத்துன்னு ஆர்ம்பிச்சு நிறையகதை எழுதியிருப்பார்..
“உன்னைப் போய்க் கேட்டேனே..சக்தி பாதி சிவன் பாதி..அதைத் தான் அர்த்த நாரீசுவரர்னு சொல்வா

“சரீ..அதுக்கென்ன..

“சக்தியோ அதிகாலைக் கதிரைப் போல சிவந்த நிறமுடையவள்..சிவனோ வெண்மை நிறம்..ஆக பாதியாக ஆகும் போது அம்பாளோட சிவந்த நிறம் முழுக்க சிவனுக்கு வந்துடுதாம்..அப்புறம்..அம்பாள்முக்கண்ளுடன் வளைந்த மேனியுடனும் அழகிய ஸ்தனங்களுடன் மகுடத்தில் இருக்காளாம்..ஆக சிவனே அம்பாளாகவும் உலகமே அவளாகவும் காட்சி தருகிறாளாம்..”

“ம்ம் அதைத் தான் இன்றைய ஸ்லோகம் சொல்கிறதா..

:ஆமாம்…இதை பயபக்தியாய் ப்பாராயணம் செய்தால் சகல சம்பத்தும், குடும்ப அமைதியும் நிலவுமாம்..

***

Tvaya hrithva vamam vapur aparitripthena manasa
Sarir'ardham sambhor aparam api sankhe hritham abhut;
Yad ethat tvadrupam sakalam arunabham trinayanam
Kuchabhyam anamram kutila-sadi-chuudala-makutam.

த்வயா ஹ்ருத்வா வாமம் வபு-ரபரித்ருப்தேன மனஸா
சரீரார்த்தம் சம்போ-ரபரமபி சங்கே ஹ்ருதமபூத்
யதேதத் த்வத்ரூபம் ஸகல-அருணபம் த்ரிநயனம்
குசாப்யா-மாநம்ரம் குடில-சசி-சூடால-மகுடம்

அம்பிகையே..காலைச் சூரியனைப் போல சிவந்த ஒளி கொண்டவள் நீ.. வெண்மை நிறமான சிவனின் பாதியில் கலந்து பின் அவரது மகுடத்தில் வளைந்த மேனியாய் அழகிய நகில்களுடன் முக்கண்ணும் சேர்ந்து காட்சியளிப்பது அவரே நீயாகவும் நீயே அவராகவும், இந்த உலக்மே நீயாகவும் காட்சி கொடுக்கிறது…



சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Tue Feb 11, 2014 10:22 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 24


“மூன்று தெய்வங்கள் பத்தி சொல்லு மனசாட்சி”

“ம்ம். ஆரம்பத்துலேயே சந்திரகலா நல்லா ஹம்பண்ணிக்கிட்டே நீராடுவாங்க. நல்லபாட்டு நினைவுக்கு வரமாட்டேங்குது’
“அடிப்பேன். என்ன ஆச்சு உனக்கு’

“உன் கூட சேர்ந்து நானும்கெட்டுப் போயிட்டேன்..!! சரி.. பிரம்மா விஷ்ணு சிவன்.. படைத்தல் காத்தல் அழித்தல் அதானே..ஆனா அதான் கிடையாது..”

“என்ன குழப்பற”

“இன்றைய் ஸ்லோகத்தில வருது பிரம்மா படைத்தல் விஷ்ணு காத்தல்..ஆனா சிவனுக்குமட்டும்மூன்று தொழில்களாம் ப்ளஸ் மூணு பேராம்..

ருத்ர்ன் – அழித்தல், ஈசானன் – மறைத்தல், சதாசிவன்.- அனுக்ரஹம் செய்தல்.

அதாவது பிரம்மா விஷ்ணு சிவ்ன் மூவரும் தத்தம் தொழில்களைச் செய்ய அவற்றை ஈசானன் தனக்குள் மறைத்துக் கொண்டு தானும் மறைந்து போகிறான்.

இதுல பார்த்தேன்னா சதாசிவங்கற் பரப்ப்ரும்மம் அம்பாளோட கொடி போன்ற புருவம் மூலமாக இந்த நால்வரது செயல்களையும் செயல்படுத்துகிறான்..

ஏன் புருவம் நெறிக்கிறே.. புரியலையா என்ன..?"

”கொஞ்சம் ஓரளவு புரியுது..ஆனா கொடி போல நெளியும் புருவம்..இதுவரைக்கும் வில்லுன்னுதான் கேள்விப் பட்டிருக்கேன்..வாலி வானில்விழும் வில் போல் புருவம் கொண்டாள்னு வானவில் பத்திச் சொல்லியிருப்பார்..

ஆலங்குடி சோமு பார்வை குனிந்திருக்கும் புருவம் மூன்றாம் பிறைன்னு பாடுவோர் பாடினால் பாட்டுலசொல்வார்..நர ஸ்த்ரீகளைப் பத்தி”

“சரி..வழக்கம் போல பாட்டச் சொல்லிட்டயா..ஸ்லோகத்துக்குப் போவோமா..

**


Jagat suthe dhata harir avati rudrah kshapayate
Tiraskurvan etat svam api vapurisastirayati;
Sada-purvah sarvam tad idamanugrhnati cha Shiva-
Stavajnam aalambya kshana-chalitayor bhru-latikayo

ஜகத்ஸுதே தாதா ஹரி-ரவதி ருத்ர: க்ஷபயதே
திரஸ்குர்வந்-நேதத் ஸ்வமபி வபுரீசத்-திரயதி
ஸதா-பூர்வ: ஸர்வம் ததித-மநுக்ருஹ்ணாதி ச சிவஸ்
தவாஜ்ஞா-மாலம்ப்ய க்ஷண-சலிதயோர் ப்ரூ-லதிகயோ


அம்பிகையே.பஞ்ச பிரம்மங்களான ப்ரம்மா விஷ்ணு சிவன் ஈசானன் சதாசிவன் இவர்களில் பிரம்மா விஷ்ணு சிவன் மூவரையும் ஈசானன் தன்னுள் மறைத்து தானும் மறைய பரப்ப்ரம்மமான சதாசிவனோ கொடிபோன்ற உன் புருவங்களின் அசைவினை ஆதாரமாகக் கொண்டு அவர்களைச் செயல்பட வைக்கிறான்.,

இந்த ஐந்து பெயர்களும் பஞ்ச க்ருத்ய பராயண என்னும் நாமத்தில் அடங்கும்..
இந்த் ஸ்லோக பாராயணம் பயத்தினைப் போக்கிடும்


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Tue Feb 11, 2014 10:25 am


நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 25


“டெலிபதின்னா என்னன்னு தெரியுமா மனசாட்சி”

“நான் கண்ணை மூடறேன்.. நீயும் கண்ணை மூடற.. அப்ப என்னாகும்”
“எல்லாருக்கும் சொல்லி அனுப்ப வேண்டியது தான்..!”

“தப்பா யோசிக்காதே..வாயைக் கழுவு… சரி..உனக்குப் புரியறமாதிரி சொல்றேன்.. நீ கண்ணை மூடற.. எதிர் வீட்டுப் பெண்ணும் கண் மூடுது நீ மனசுக்குள்ள பேசறது அவளுக்குக் கேட்குது.. அவ மனசுக்குள்ள பேசறது உனக்குக் கேக்குது..அப்ப…”

“அவ அப்பா என்னை வந்து அடிப்பார்..! சரி.சரி.. எனக்குப் புரியுது.. அதாவது நாம் பேச நினைக்கறது மத்தவங்களுக்கு கேக்கும்..அதானே..

“எக்ஸாக்ட்லி”

“ஸீ.. இந்த ஸ்லோகத்தில அந்த மாதிரி தான்.. அம்பாளை அவளோட பாத கமலங்களை தியானிச்சாலே போதும் விஷ்ணு, சிவன் , ப்ரம்மா எல்லாருக்கும் அந்த மெஸேஜ் போய்ச் சேர்ந்துடும்.. அதாவதுஅவாளை தனித் தனியா துதிக்க வேண்டியதில்லை

“ஓ அப்படியா”

“ஆமாம்.. இந்த சுலோகத்தைப் பாராயணம் செய்தால் அதிகாரம் மிக்க உயர்ந்த பதவிகள் தேடி வருமாம்..யாரங்கே……”

***


Trayanam devanam thri-guna-janitanam tava Sive
Bhavet puja puja tava charanayor ya virachita;
Tatha hi tvat-pado'dvahana-mani-pithasya nikate
Sthita hy'ete sasvan mukulita-karottamsa-makuta

த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண-ஜநிதானாம் தவ சிவே
பவேத் பூஜா பூஜா தவ சரணயோர்-யா விரசிதா
ததா ஹி த்வத் பாதோத்வஹன-மணிபீடஸ்ய நிகடே
ஸ்திதா ஹ்யேதே சச்வன்-முகுலித-க்ரோத்தம்ஸ மகுடா

திரிபுர சுந்தரீ, தேவி, மும்மூர்த்திகளான பிரம்மா விஷ்ணு ருத்ரன் உனது பாத கமலங்கள் தாங்கும் ரத்தினப் பலகையில் சிரஸை வைத்து உன்னை வணங்குகிறார்கள்..

எனில் உன் பாதங்களை வணங்கினாலே போதும்..அவர்களையும் வணங்கிய மாதிரி ஆகும்…


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Feb 12, 2014 10:06 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 26

“மக்கள் என்ன பேசிக்கறாங்க மனசாட்சி..”

“நீ இருக்கற ஊர்ல தானே.. பைப் ஒடஞ்சதனால தண்ணீர் பத்தியே பேசிக்கிட்டிருக்காங்க அதையே ஜெனரலாக் கேட்டேன்னா சீக்கிரம் உலகம் அழிஞ்சுடும்னு பேசிக்கறாங்க..

“உனக்கு எப்படி இருக்கு”

“கொஞ்சம் கஷ்டமாத் தான் இருக்கு..இருந்திருந்து ஏதோ நல்லதா எழுத நீ முயற்சி பண்ண இப்பத் தான் ஆரம்பிச்சுருக்க..அதுக்குள்ள இப்படி ஆய்டுத்துன்னா…

”’கவலைப் படாதே.. அடுத்த ஜென்மம் எடுத்து மறுபடி வ்ந்து ஸாரிங்க நடுல்ல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் நு சொல்லி அம்பாளைப் பத்தி எழுத ஆரம்பிக்கலாம்..”

சரீ…உலகம் அழியறதப் பத்தித் தமிழ்ல என்ன சொல்லுவாங்க தெரியுமா பிரளயம்..எங்கே திருப்பிச் சொல்லு

“ப்ரிலைன்ஸ்”

“அது ஐஸ்க்ரீமோட பேர்.. இந்த மஹாபிரளயம் ஊழிக் காலத்தில தான் பிரம்மா விஷ்ணு சிவன் யமன் குபேரன் முதலான தேவர்கள் எல்லாம் அழிந்து போகிறார்களம்..சதாசிவம் ஊழித் தாண்டவம் ஆடுவதை அம்பிகை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாளாம்.. இதைத் தான் சொல்கிறது இன்றைய ஸ்லோகம்

“அப்புறம்..”

“அப்புறம் என்ன.. இப்போ சதாசிவன் ஷக்தி மட்டும் தான் இருப்பார்கள்.. மறுபடி உலகைப் படைப்பார்கள்…இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் பண்ணினால் பகைமை என்பது அடியுடன் அழிந்து போகும்

***

Virincih panchatvam vrajati harir apnoti virathim
Vinasam kinaso bhajati dhanado yati nighanam;
Vitandri mahendri vithathir api sammeelita-drsa
Maha-samhare smin viharati sati tvat-patirasau.

விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்னோதி விரதிம்
விநாசம் கீனாசோ பஜதி தனதோ யாதி நிதனம்
விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித-த்ருசா
மஹா ஸம்ஸாரே அஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதி ரஸெள


தாயே.. மஹாபிரளய காலத்தில் விஷ்ணு ருத்ரன், ப்ர்ம்மா, யமன் குபேரன் போன்ற தேவர்களும் மற்றும் எல்லா தேவர்களும் அழிந்து போய்விட, நீ மட்டும் அழியாமல் உன் பதியான சதாசிவனின் ஊழித் தாண்டவத்தைப்பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறாய்…மறுபடியும் புதிய உலகினைப் படைக்கவும் செய்வாய்..




சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Wed Feb 12, 2014 10:09 am

நாளும் ஒரு அழகின் அலை....

செளந்தர்ய லஹரி

ஆனந்த லஹரி ஸ்லோகம் 27

நாவடக்கம் கொள்ளாமல் இருந்தேனே நேற்று
….. நானடக்கம் கொளவேணும் உன்னுளே இன்று
பாவடிக்கும் பாத்தியதை சற்றேனும் இன்றி
…..பாவையரின் பின்னாலே திரிந்ததுவும் போக
போவதற்கு இருக்கின்ற சிறிதான போதில்
….பேசுகிறேன் உன்னிடமே பலவிதமாய்த் தானே
பாவனைகள் கொண்டென்னை அருள்நோக்கு அம்மா
பாட்டினிலே பொருள்சொல்ல முயற்சிப்பேன் நானே

”என்னடா.. வந்தே..பாட்டுப் பாடறே..என்னாச்சு..ஆமா யாரந்தப் பாவையர்..தமன்னாவா அனுஷ்காவா..

“மனசாட்சி இதானே வேணாங்கறது..உனக்கு என்னைப் பத்தித் தெரியாதா என்ன..நேத்திக்கு என்ன படம் பார்த்தேன் தெய்வப் பிறவி..எம்.என்.ராஜம் என் தாத்தாவோட க.க.. அழகாத்தான் இருக்காங்க..”

“கஷ்டம்டா..ஒங்க தாத்தாக்கும் ஒன்ன மாத்ரியே டேஸ்ட்..ஆனா பாரு ஒனக்கு வேணும்னா வயசாகலாம்..எனக்கெல்லாம் வயசாகாதுப்பா.. ஆமா இன்றைய ஸ்லோகத்துப் பொருளை பாட்டுல சொல்லப் போறியா.

.
ஆமாம் மனசாட்சி..ஒரு சின்ன பார்ட் மட்டும் தான் எழுத முடிஞ்சது..அது…….

நானாய்ப் பேசும் பேச்செல்லாம்
… நங்கை உந்தன் ஜபமாகும்..
தானே கரங்கள் செய்கின்ற
…செயல்கள் உந்தன் பூஜைகளாம்
மானாய்க் கால்கள் நடப்பதுவும்
…மங்கை உன்னைச் சுற்றுவதாம்
ஊனாய் இருக்கும் உடலுக்கு
…உண்பது உனக்கே அர்ப்பணமாம்

நாம் செய்கின்ற செயல்கள் எல்லாமே அம்பிகைக்காக செய்யறதுங்கறது இன்றைய ஸ்லோகம்..இது ஞானியர்கள் வணங்குகிற முறைன்னு சொல்லலாம்..

“அதாவது…

“முற்றும் துறந்த முனிவர்கள் எல்லாம் தங்களது செயல்கள் எல்லாவ்ற்றையும் அம்பாளுக்கே அர்ப்பணிப்பார்களாம்..ஆமா ஏன் சிரிக்கிற..

“இந்தக் கால முனிவர்க்ளை நினச்சேன்….இந்த ஸ்லோகத்தோடபலன்…என்ன?

இந்த ஸ்லோக பாராயணம் ஆத்மாவைச் சுத்தம் செய்யுமாம்.. இதோ ஸ்லோகமும் பொருளும்....

***

Japo jalpah shilpam sakalam api mudra-virachana
Gatih pradaksinya-kramanam asanady'ahuti-vidhih;
Pranamah samvesah sukham akilam atmarpana-drsa
Saparya-paryayas tava bhavatu yan me vilasitam.

ஜபோ ஜல்ப: ஸில்பம் ஸகலமபி முத்ரா-விரசநா
கதி: ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மசநாத்யாஹுதி-விதி:
ப்ரணாம: ஸம்வேஸ: ஸுகமகில-மாத்மார்ப்பண-த்ருசா
ஸபர்யா-பர்யாயஸ்-தவ பவது யந்மே விலஸிதம்

அம்பிகையே… நான் பேசும் வார்த்தைகள் எல்லாம் உனக்கான மந்திர ஜபமாகவும் என் அங்க அசைவுக்ள் உன்னுடைய முத்திரைகளாகவும் நான் நடக்கும் நடை உன்னைப் பிரதட்சினம் சுற்றுவதைப் போலவும்,நான் உண்ணுவ்தெல்லாம் உனக்கு ஹோமப் பொருள்ளாகவும் நான் படுப்பது உன்னை வணங்குவதாகவும் ஆகட்டும்.. ஆக நான் எனது சுகத்திற்காக செய்கின்ற செயல்கள் எல்லாம் உனக்கு பூஜைகளாக ஆகட்டும்..




Sponsored content

PostSponsored content



Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக