புதிய பதிவுகள்
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_m10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_m10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10 
48 Posts - 41%
mohamed nizamudeen
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_m10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10 
4 Posts - 3%
prajai
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_m10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10 
4 Posts - 3%
Jenila
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_m10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_m10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_m10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10 
1 Post - 1%
M. Priya
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_m10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10 
1 Post - 1%
kargan86
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_m10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10 
1 Post - 1%
jairam
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_m10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_m10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_m10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10 
48 Posts - 28%
mohamed nizamudeen
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_m10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10 
8 Posts - 5%
prajai
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_m10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10 
6 Posts - 3%
Jenila
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_m10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10 
4 Posts - 2%
Rutu
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_m10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_m10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_m10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10 
2 Posts - 1%
viyasan
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_m10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10 
1 Post - 1%
M. Priya
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_m10கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jan 21, 2014 9:40 pm

தமிழ் அறிஞர்கள் அறிவோம்: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை - DINAMANI

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்து இருபதாம் நூற்றாண்டில் புகழ்பெற்று விளங்கிய கவிஞர்கள் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆகிய நால்வருமாவர். அவருள், பாரதி ஒரு விடுதலை இயக்கக் கவிஞர்; பாவேந்தர் ஒரு திராவிட இயக்கக் கவிஞர்; நாமக்கல்லார் ஒரு தேசிய இயக்கக் கவிஞர். ஆயின், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஓர் இயக்கம் சாரா இனிமைக் கவிஞர், எளிமைக் கவிஞர், உண்மைக் கவிஞர், உணர்ச்சிக் கவிஞர் எனக் கூறுதல் சாலப் பொருந்தும். இவர் தேனொழுகக் கவிபாடுவதில் வல்லவர். கவிதை நூல்களோடு பல ஆராய்ச்சி நூல்களையும் இவர் படைத்துள்ளார்.

பிறப்பு: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தேரூரில் 1876 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 27 ஆம் நாள் வேளாளர் குலத்தில் சிவதாணுப்பிள்ளை - ஆதிலட்சுமியம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

கல்வி: ஐந்தாவது வயதில் தேரூர் ஆரம்பப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். அவர் வாழ்ந்து வந்த நாஞ்சில்நாடு மலையாள நாட்டின் ஒரு பகுதியாக இருந்ததால், பள்ளியில் மலையாள மொழி கற்க வேண்டியவரானார். எனினும் தேரூரை அடுத்த வாணன்திட்டிலிருந்த திருவாவடுதுறை மடத்தின் தலைவர் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார். கவிபுனையும் ஆற்றலும் கைவரப் பெற்றார். ஆரம்பப் பள்ளிக் கல்விக்குப்பின் கோட்டாறு அரசுப் பள்ளியில் பயின்றார். திருவனந்தபுரம் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்றார்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jan 21, 2014 9:41 pm

ஆசிரியர் பணி: கோட்டாற்றில் மத்தியதரப் பாடசாலையின் உதவி ஆசிரியராகவும், பின்னர் நாகர்கோவில் போதனா முறைப் பாடசாலையிலும் திருவனந்தை பெண் போதனா முறைப் பாடசாலையிலும் உதவியாசிரியராகவும் அமர்ந்தார். விஞ்ஞான ஆசிரியராகவே பணிபுரிந்தார். ஆனால் இலக்கியக் கல்வியில் தொடர்ந்து தன்னைக் கரைத்துக்கொண்டு வந்தார். மேலும் மேலும் நூல்களைக் கற்பதும் ஆராய்ச்சி செய்வதும் பாடல்களை இயற்றுவதும் இவரது அன்றாட வாழ்க்கையாயிற்று. தமிழ்க்கல்வியும் ஆங்கிலக் கல்வியும் கவிமணியின் பண்பாட்டுணர்ச்சியை மிகவும் ஆழமாக வளர்த்தன.

ஓர் அறிவியல் கண்ணோட்டம் இயல்பாக இவரிடம் வெளிப்பட்டது. அத்துடன் நாட்டின் பண்டைய வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வமும் இயல்பாக வெளிப்பட்டது. அதுகாறுமான மரபுவழிச் சிந்தனை அணுகுமுறைகளுடன் புதிய நவீனப் பாங்குடைய சிந்தனைச் சேகரமும் கவிமணியின் பார்வையை ஆழப்படுத்தியது. அகலப்படுத்தியது. முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகவும், கல்லூரி விரிவுரையாள ராகவும் பணிபுரிந்து, 1931ல் ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின் தம் மனைவியின் ஊராகிய புத்தேரியில் தங்கிக் கவிதை இயற்றுவதிலும் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார்.

இலக்கியப் படைப்புகள்: இந்த நூற்றாண்டில் எழுந்த இனிய கவிதைகளில், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல்கள் புகழ் பெற்றவை. பழைய மரபின்படியும் புதிய முறைகளின்படியும் பல புதிய சோதனை முயற்சிகளைக் கவிதைகளில் செயல்படுத்த வேண்டுமென்று முனைப்புடன் இயங்கியவர். போராட்டமும், பரபரப்பும் மிகுந்த காலக்கட்டத்தில் வாழ்ந்தபோதும்கூட இவருடைய கவிதைகளில் அமைதியும், இனிமையும் இழையோடிக் கொண்டிருந்தது. வெண்பாக்களின் வழியாகச் சொல்ல வந்ததை எளிமையாகவும், தெளிவாகவும் கையாண்டவர்.

- பக்திப் பாடல்கள்,

- இலக்கியம் பற்றிய பாடல்கள்,

- வரலாற்று நோக்குடைய கவிதைகள்,

- குழந்தைப் பாடல்கள்,

- இயற்கைப் பாட்டுகள்,

- வாழ்வியல் போராட்டக் கவிதைகள்,

- சமூகப் பாடல்கள்,

- தேசியப் பாடல்கள்,

- வாழ்த்துப்பாக்கள்,

- கையறுநிலைக் கவிதைகள்,

- பல்சுவைப் பாக்கள்... என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jan 21, 2014 9:41 pm

கவிமணியின் படைப்புகள்: மலரும் மாலையும்(1938), ஆசிய ஜோதி(1941), நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம் (1942), உமார்கய்யாம் பாடல்கள்(1945), கதர் பிறந்த கதை(1947), தேவியின் கீர்த்தனங்கள், குழந்தைச்செல்வம், கவிமணியின் உரைமணிகள் போன்றவற்றை படைத்துள்ளார். இவை மிக இலக்கியத்தரம் வாய்ந்தவை.

மலரும் மாலையும்: பழந்தமிழ்ப்பண்பும், தமிழ்மணமும், புதுமைக் கருத்துகளும் நிறைந்த பல பாடல்களைக் கவிமணி எழுதியுள்ளார். இப்பாடல்களின் தொகுப்பே "மலரும் மாலையும்" என்னும் நூலகாக வெளியிடப் பெற்றது. இந்நூலில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மூலம் கவிமணியின் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இறைவழிபாடு, சாதிபேதம் கடிதல், குழந்தைகளிடம் கொண்ட பற்று ஆகியவற்றை அறியலாம்.

பாட்டுக் கொருபுலவன் பாரதிஅடா! - அவன்

பாட்டைப் பண்ணொடொருவன் பாடினான், அடா!கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா! - அந்தக் கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாய், அடா!

சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமே, அடா! - கவி

துள்ளும் மறியைப்போலத் துள்ளுமே, அடா !கல்லும் கனிந்துகனி யாகுமே, அடா ! - பசுங்

கன்றும் பால் உண்டிடாது கேட்குமே, அடா!

மருமக்கள்வழி மான்மியம்:

கவிமணியின் ‘நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’ மிகவும் பரபரப்பாக அக்காலத்தில் பேசப்பட்டது. இது சமுதாயச் சீர்கேடான ஒரு பழமையான வழக்கத்தின் தீமையை நீக்குதற்காகப் பாடப்பெற்ற ஒரு புரட்சிக்காவியம். மருமக்கள் வழி மான்மியம் என்பது திருவிதாங்கூரில் அக்காலத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்த சொத்துரிமை சம்பந்தமான ஒரு ஏற்பாடு. சட்டம்போல் கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த முறையின்படி ஒருவருக்குப் பிறந்த மகனுக்கோ, அல்லது மகளுக்கோ தகப்பனாரின் சொத்தில் உரிமை கிடையாது. மருமகன்(சகோதரியின் மகன்)களுக்கே தந்தையின் சொத்துகள் போய்ச் சேர்ந்துவிட வேண்டும். அரசர்களுக்கும் அப்படித்தான். இவ்வாறுதான் திருவிதாங்கூரின் அரசர்கள் அனைவரும் ஆட்சிக்கு வந்தார்கள். இத்தகு புதுமையான நடைமுறையால், நாஞ்சில் நாட்டுத் தமிழர்கள் மிகுந்த அல்லலுக்கு உட்பட்டனர். மன்னர்கள் கொண்டொழுகிய மருமக்கள் தாயமுறை, கேரள மக்களை மட்டுமன்றி, நாஞ்சில் நாட்டுத் தமிழர்களையும் பற்றிக் கொண்டது. கவிமணி இம்மாதிரியான ஏற்பாட்டிற்கும், சட்டங்களுக்கும் எதிர்ப்பாளர். இதனை அழித்தொழிக்கக் கவி ஆயுதம் ஏந்தினார். அதன் விளைவே 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழிமான்மியம்'!

'தேவியின் கீர்த்தனங்கள்' என்ற இசைப் பாடல்களின் தொகுப்பில் இடம் பெற்றுள்ள பாடல்கள் பலவற்றை இன்னிசை வித்தகர்கள் பலர் மேடைகளில் விரும்பிப் பாடுவது அந்தத் தொகுப்பின் சிறப்பு என்று கூறலாம். கவிமணியின் சொற்பொழிவுகளும் உரைநடைகளும் 'கவிமணியின் உரைமணிகள்' என நூலுருவம் பெற்றுள்ளது. இதன் மூலம் கவிமணியின் சிந்தனைப் பரப்பு எத்தகைய ஆழம் மற்றும் நவீனம் கொண்டது என்பது தெளிவாகிறது.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jan 21, 2014 9:42 pm

இனிமைக் கவிஞர்: தேசம், மொழி, மக்கள், உலகம் எனப் பெரும் வட்டத்தைத் தன் பாடல்களுக்குள் அடக்கி

சத்தமில்லாமல் தமிழ் உலகில் சஞ்சாரம் செய்தவர். சமரச நோக்கு, நீதிநெறி போன்ற அடிப்படைக் கருத்துகளை மையமாக வைத்து அழகிய ஆழமான அமரத் தன்மை மிகு தீஞ்சுவைத் தமிழ்ப் பாடல்களைப் பாடியுள்ளார்.

உள்ளத் துள்ளது கவிதை - இன்பம்

உருவெ டுப்பது கவிதை

தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை

தெரிந்து ரைப்பது கவிதை.

என்னும் கவிமணியின் கவிதை பற்றிய விளக்கம் அவரின் கவிதைகளுக்கு நன்கு பொருந்துவதாகும்.

கவிமணி தமிழுக்குத் தொண்டாற்றிய புலவரைப் போற்றுகிறார். தமிழ்நூல்களின் சிறப்புகளைக் கூறுகிறார். தமிழ்மொழி வளரப் பழைமையோடு புதுமையையும் வரவேற்கின்றார். தமிழில் புதுப்புதுத் துறைகளைத் தோற்றுவித்து வளர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். "அறிவின் எல்லை கண்டோன், உலகை அளந்து கணக்கிட்டோன்," என வள்ளுவரையும், "நெல்லிக்கனியைத் தின்றுலகில் நீடுவாழும் தமிழ்க்கிழவி," என ஔவையாரையும், "இந்திர சாலமெல்லாம் கவியில் இயற்றிக்காட்டிடுவான்," எனக் கம்பரையும், "பாட்டைக் கேட்டு கிறுகிறுத்துப் போனேனேயடா, அந்தக் கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா," எனப் பாரதியையும் போற்றிக் கவியாரம் சூட்டுகிறார்.

குழந்தைக் கவிஞர்: கவிமணி ஒரு தலைசிறந்த குழந்தைக் கவிஞர். பெரியவர்களுக்கு மாத்திரம் என்று இல்லாமல், குழந்தைப் பாடல்கள் பலவும் மிகச்சிறப்பாக இயற்றியுள்ளார். இதுவரையிலான தமிழ் ஆளுமைகளில் குழந்தைகளின் பிரபஞ்சத்தில் சுதந்திரமாய் நுழைந்து உலவியர் கவிமணி ஒருவரே. குழந்தைகளுக்கான பாடல்களை கவிமணி அளவிற்கு இனி யாராலும் எழுதிவிட முடியாது என்பதை நிறுவியவர். "ஆங்கிலத்தில் உள்ளதைப் போல் தமிழில் குழந்தைப் பாடல்களில்லையே என்று நான் பள்ளிப் பிள்ளைகளுக்கு எளிய நடையில் சில பாடல்களை எழுதினேன்," என்று தன்னுடைய குழந்தைப் பாடல்கள் குறித்துக் கவிமணி சொல்கிறார். அவர் சொன்னதுபடியே தன் வாழ்வில் பெரும்பகுதியைக் குழந்தைப் பாடல்கள் எழுதுவதற்காகவே செலவிட்டவர். இவர் குழந்தைகளுக்காகத் தாய்மார் பாடும் தாலாட்டுப் பாடல்களையும், குழந்தைகள் தாமே பாடி மகிழத்தக்க எளிய அழகிய பாடல்களையும் பாடியுள்ளார்.

காக்கை, கோழி முதலிய பறவைகளைக் குழந்தை விளித்துப்பாடும் பாடல்கள் சுவைமிக்கன.

காக்காய்! காக்காய்! பறந்து வா

கண்ணுக்கு மை கொண்டு வா

கோழி! கோழி! கூவி வா

குழந்தைக்குப் பூக்கொண்டு வா



கோழி! கோழி! வா வா

கொக்கொக்கோ என்று வா

கோழி! ஓடி வாவா

கொண்டைப்பூவைக் காட்டு வா



"தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு - அங்கே

துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி அம்மா என்றது வெள்ளைப்பசு - உடன்

அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி."

போன்ற எளிமையான வருணனைகள் அடங்கிய வரிகளின்வழி குழந்தைகளின் உலகில் சிநேகிதமாய்ச் சஞ்சரித்தவர். எளிமையான பாடல்களின் மூலம் குழந்தைகளுக்கு அறிவு புகட்டவும் செய்தார்.



'தம்பியே பார், தங்கையே பார், சைக்கிள் வண்டி இதுவே பார்',

போன்ற குழந்தைப்பாடல்கள், அக்காலங்களில் ஆரம்பப் பள்ளிப் புத்தகங்களில் தவறாது இடம் பெறுவது வழக்கம்.

தான்கண்ட மெய்ம்மையான காந்தியத்தை;

"கூனக்கிழவி நிலவினிலே - இராட்டில்

கொட்டை நூற்கும் பணி செய்வதை - இம்

மாநிலம் கண்டு மகிழ்ந்திடவே - காந்தி

மாமதி யோங்கி வளருதம்மா."

என்கிற இயற்கை வர்ணனையோடு ஒட்டிக் குழந்தைகளுக்குப் புரிய வைத்தவர். பல்வேறு உத்தி முறைகளில் பாடி குழந்தைப் பாடல்களைப் பல்வேறு தளத்திற்கும் பரவச் செய்தவர் கவிமணி.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jan 21, 2014 9:43 pm

சமுதாயக் கவிஞர்: பாரதியாரைப் போலவே இவரும் தமிழ் மக்களிடையே வழங்கிவரும் சில நாட்டுப் பாடல்களின் இசை வடிவங்களைப் பயன்படுத்தித் "தீண்டாதோர் விண்ணப்பம்" என்ற பாடலையும் பாடியிருக்கிறார். அக்காலக் கட்டத்தின் சமூகக் கொடுமைகளுக்கும், அன்னியரின் அடிமைத்தனத்திற்கும் எதிரான கவிமணியின் பாடல்களில் தீர்க்கமான முற்போக்குப் பார்வையாளராக அவரை இனங்காண முடிகிறது.

"கண்ணப்பன் பூசை கொளும்

கடவுளர் திருக்கோவிலிலே நண்ணக் கூடாதோ நாங்கள்

நடையில் வரல் ஆகாதோ."

என்று தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலில் நுழைவதைப் பற்றி, சைவப்பிள்ளை ஆச்சார மரபிலிருந்து கொண்டு சிந்தித்தவர்.

"அல்லும் பகலும் உழைப்பவர்ஆர் - உள்ளத்து

அன்பு ததும்பி யெழுபவர்ஆர்? கல்லும் கனியும் கசிந்துருகித் - தெய்வக்

கற்பனை வேண்டித் தொழுபவர்ஆர்?"

எனப் பாடியதன் மூலம் அவர் காலத்தில் நிலவி வந்த பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்தவர்.



மனத்தூய்மையின்றிச் செய்யும் இறைவழிப்பாட்டினால் பயனில்லை என்பது கவிமணியின் கருத்து. இதனை வலியுறுத்தும் பாடல்:

"கண்ணுக் கினியன கண்டு - மனதைக்

காட்டில் அலைய விட்டு பண்ணிடும் பூசையாலே - தோழி

பயனொன்றில்லையடி



உள்ளத்தில் உள்ளானடி - அது நீ

உணர வேண்டும் அடி உள்ளத்தில் காண்பாயெனில் - கோயில்

உள்ளேயும் காண்பாயடி."

கவிமணி தம் கவிதைகளில் சாதிபேதங்களைச் சாடுகிறார். "சாதியிரண்டொழிய வேறில்லை," என்றார் ஔவையார். சாதி இறைவனால் வகுக்கப்படவில்லை. மக்களின் கற்பனையே. பிறர்க்காக உழைப்பவர் உயர்ந்தவர். தன்னலம் பேணுவோர் தாழ்ந்தவர். இதனை,

"மன்னுயிர்க்காக உழைப்பவரே - இந்த

மாநிலத் தோங்கும் குலத்தினராம்

தன்னுயிர் போற்றித் திரிபவரே - என்றும்

தாழ்ந்த குலத்தில் பிறந்தோர் அம்மா." எனப் பாடுகிறார்.



விடுதலைக் கவிஞர்: சுதந்திர வேட்கை தீயாய்க் கொழுந்துவிட்டுக் கொண்டிருந்த காலத்தில் காந்தியத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துச் சமாதானத்தை வலியுறுத்தியவர். காந்தியின் கொள்கையான மதுவிலக்கு குறித்து,

"கள்ள ரக்கா! குலத்தோடு நீ

கப்ப லேறத் தாமதம் ஏன்?

வள்ளல் எங்கள் காந்தி மகான்

வாக்கு முற்றும் பலித்ததினி."

என்று உற்சாகமாய்ப் பாடுகிறார்.

ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டதாகக் குதூகலித்த பாரதிக்குச் சுதந்திர இந்தியாவில் வாழக் கொடுத்து வைக்கவில்லை. ஆயின் கவிமணி விடுதலை பெற்ற இந்தியாவில் ஏழாண்டுகள் வாழும் பேறு பெற்றார். "பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்பது நமது கடமை என்றும், உரிமை வாழ்வின் பயனை நினையாது வாதினை விளைவித்துச் சண்டை செய்வது தேவையற்றது," என்றும் வலியுறுத்தினார். நம்நாட்டு மக்களுக்கு ஊக்கமும் உழைப்பும் வேண்டும். "உண்ணும் உணவுக்கும், உடுக்கும் உடைக்கும் அந்நியரை நம்பி வாழ்தல் கூடாது." "பலதொழில்கள் செய்து பஞ்சப் பேயினைத் துரத்த வேண்டும்." "அண்ணல் காந்தியினை அடியொற்றி வாழ்வோம்," என்பதைக் கீழ்காணும் கவிதை வலியுறுத்தும்.

"ஆக்கம் வேண்டுமெனில்- நன்மை

அடைய வேண்டுமெனில்

ஊக்கம் வேண்டுமப்பா - ஓயாது

உழைக்க வேண்டுமப்பா



உண்ணும் உணவுக்கும் - இடுப்பில்

உடுக்கும் ஆடைக்கும்

மண்ணில் அந்நியரை நம்பி

வாழ்தல் வாழ்வாமோ?



உண்ணும் உணவுக் கேங்காமல்

உடுக்கும் ஆடைக் கலையாமல்

பண்ணும் தொழில்கள் பலகாண்போம்

பஞ்சப் பேயைத் துரத்திடுவோம்

அண்ணல் காந்திவழி பற்றி

அகிலம் புகழ வாழ்ந்திடுவோம்."

இந்தியாவில் சமாதானம் நிலவ வேண்டும் என்றில்லாமல், உலகம் முழுவதும் சமாதானம் நிலவ வேண்டுமென விரும்பியவர். இரண்டாம் உலகப் போரினால் மக்கள் அடைந்த துயரை,

"போரில் எழுந்த பஞ்சம் - பாரத

பூமியைத் தாக்குதைய்யா நேருங் கொடுமை யெல்லாம் - நினைக்க

நெஞ்சு துடிக்குதைய்யா."

என்ற பாடலின் மூலம் விளக்குகிறார்.

உணர்ச்சிக் கவிஞர்: அக்காலத்தில் நீதிமன்றச் செயல்பாடுகளை மிகவும் தைரியமாக விமர்சனம் செய்திருக்கிறார். ஒரு நீதிமன்றக் காட்சி, சாட்சியிடம் வக்கீல் ஒருவர் கேள்வி கேட்டு விசாரணை செய்கிறார்.

வக்கீல் : ஓடுற குதிரைக்கு கொம்பு ஒண்ணா? ரெண்டா?

சாட்சி : குதிரைக்கு ஏதுங்க கொம்பு.

வக்கீல் : கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது. கேட்ட கேள்விக்கு பதில். கொம்பு ஒண்ணா? ரெண்டா? அதைத்தான் சொல்லணும்.

இவ்வாறுதான் நீதிமன்ற நடவடிக்கை அக்காலத்தில் திருவிதாங்கூரில் இருந்ததாகத் தெரிவிக்கிறார்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jan 21, 2014 9:44 pm

மொழிபெயர்ப்புகள்: பிறமொழிக் கவிஞர்தம் பாடல்களைத் தழுவி தமிழில் எழுதி, தமிழிலக்கியச் சாளரத்தின் வழியாக பிற நாட்டுக் காற்று உள்ளே வர அனுமதியளித்தவர் கவிமணி. பாரசீகக் கவிஞர் உமர்கய்யாம் பாடல்களை ‘எட்வர்ட் பிட்ஸ் ஜெரால்டு’ ஆங்கிலத்தில் ஆக்கியுள்ளார். கவிமணி ஆங்கில நூலைத் தழுவித் தம் நூலைப் படைத்துள்ளார்.

ஆசிய ஜோதி: சர். எட்வின் அர்னால்டு எழுதிய "The Light of Asia" என்னும் நூலைத் தழுவி எழுதப் பெற்ற அரிய நூல் "ஆசிய ஜோதி" ஆகும். இந்நூல் புத்தர் பெருமானின் வரலாற்றை விளக்குவது. சுத்தோதனர் மனைவி மாயாதேவி இறைவன் தன் மூலமாகப் பிறக்க விருப்பதைக் கனவாகக் காண்கிறாள். "Dreamed a strange dream" என்பதை "எந்நாளும் காணாத கனவொன்று கண்டாள்" எனக் கவிமணி, மொழியாக்கம் எனத் தோன்றா வகையில் ஆக்கியுள்ள அருமை போற்றத்தக்கது. இப்பாடலின் தழுவலாக கவிமணி எழுதிய கீழ்க்கண்ட பாடல் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றது.

வெய்யிற் கேற்ற நிழலுண்டு

வீசும் தென்றல் காற்றுண்டு

கையில் கம்பன் கவியுண்டு

கலசம் நிறைய மதுவுண்டு

தெய்வ கீதம் பலவுண்டு

தெரிந்து பாட நீயுண்டு

வையந் தருமிவ் வனமன்றி

வாழும் சொர்க்கம் வேறுண்டோ!

ஆராய்ச்சிகள்: கவிமணி பல்துறைகளிலும் கால் பதித்து விட வேண்டுமென முனைப்புடன் செயல்பட்டவர். ஆராய்ச்சித் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். 1922-இல் 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார். கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார். 'காந்தளூர்ச்சாலை' பற்றிய ஆய்வு நூலை ஆங்கிலத்தில் எழுதினார்.

வையாபுரிப்பிள்ளை, இராஜாஜி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.கே. சண்முகம் போன்றோருடன் நட்பு அடிப்படையிலும், புலமைத்துவ அடிப்படையிலும் நெருங்கிய தொடர்புகொண்டிருந்தவர். மேற்கண்டவர்களின் வழியாகவும் பல்வேறு துறைகளைப் பற்றிய அறிவைச் சாகும்வரை சேகரித்துக் கொண்டிருந்தவர். அவருடைய படைப்புலகத்தையும், ஆய்வுலகத்தையும் நோக்கின் பாரதிக்கு இணையாக அவரும் தீவிரமாகச் செயல்பட்டுள்ளார் என்பதை அறிய முடிகிறது.

திரைத்துறையில் கவிமணி: முதன்முதலில் என்.எஸ்.கே பிக்சர்ஸ் தயாரித்த பைத்தியக்காரன் (1947) படத்தில் இவரது பாடல் பயன்படுத்தப்பட்டது. இதையடுத்து 1951ல் இதே நிறுவனத்தின் தயாரிப்பான 'மணமகள்' படத்தில் ஒரு பாடல், பின்பு 'தாயுள்ளம்' என்கிற படத்தில்

கோயில் முழுதும் கண்டேன் - உயர் கோபுரம் ஏரி கண்டேன்

தேவாதி தேவனை நான்

எங்கெங்கும் தேடினும் கண்டிலனே

என்கிற ஒரு அற்புதமான பாடலை எம்.எல் வசந்தகுமாரி பாட அப்பாடல் மிகவும் பிரபலமாயிற்று. இவைதவிர 1952ல் வேலைக்காரன், 1955ல் கள்வனின் காதலி, 1956ல் கண்ணின் மணிகள், நன் நம்பிக்கை ஆகிய படங்களிலும் இவரது பாடல் இடம் பெற்றன.

'கள்வனின் காதலி' படத்தில் இவரது

வெய்யிற்கேற்ற நிழலுண்டு

வீசும் தென்றல் காற்றுண்டு

கையில் கம்பன் கவியுண்டு

கலசம் நிறைய மதுவுண்டு

தெய்வகீதம் பலவுண்டு

தெரிந்து பாட நீயுண்டு

வையந் தருமிவ் வனமன்றி

வாழும் சொர்க்கம் வேறுண்டோ!

பாடல் பி. பானுமதி, கண்டசாலா குரலில் மிகவும் வெற்றியடைந்தது. இவராகத் திரைப்படத் துறையில் இவரது பல பாடல்களைத் திரையுலகம் அவ்வப்போது பயன்படுத்தி வந்திருக்கிறது. மேற்கண்ட பாடல்கள் கூட திரைப்படத்திற்காக எழுதப்பட்டவை அல்ல. இவரது பாடல்களை திரைத்துறை பயன்படுத்தியதே தவிரே, இவராகத் திரைப்படத் துறையின் பக்கம் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாராட்டுகளும் விருதுகளும்: "அழகு என்பதே உண்மை, உண்மை என்பதே அழகு" என்றார் ஆங்கிலக் கவிஞர் கீட்ஸ். கவிமணியின் பாடல்களில் உண்மையும் அழகும் கைகோர்த்துச் செல்வதை உணர முடியும். கரும்பினும் இனிமை பெற்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெருஞ்செல்வம், அரிய செல்வம், தெவிட்டாத அமிர்தம் எனப் புகழ்வார் இரசிகமணி டி.கே.சி.

“தேசிக விநாயகத்தின் கவிப்பெருமை தினமும் கேட்பது என் செவிப்பெருமை” என சக காலத்தில் வாழ்ந்த நாமக்கல் கவிஞரால் பாராட்டப்பட்டவர்.

"இவரது உண்மையுள்ளம், உண்மைப் பாடல்களின் மூலமாய் உண்மை வித்துகளைக் கற்பவர் மனத்தில் விதைத்து, உண்மைப் பயிரைச் செழித்தோங்கச் செய்கிறது. இவர் பாடல்களில் காணும் தெளிவும், இனிமையும், இவரது உள்ளத்திலேயுள்ள தெளிவு, இனிமை முதலிய சிறந்த இயல்புகளின் நிழற்படமேயாகும்," என்பார் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை.

25 டிசம்பர் 1940 இல் தமிழ்ச்சங்கம் சென்னை பச்சைப்பன் கல்லூரியில் நிகழ்த்திய 7வது ஆண்டு விழாவில் இவர்தம் கவிபாடும் புலமையைப் பாராட்டி, தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் இவருக்குக் "கவிமணி" என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தனர்.

1943 இல் அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பெரும் பொருள் வழங்க முன் வந்தபோது அதை வாங்க மறுத்து விட்டார்.

1954 இல் கவிமணிக்கு தேருரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது.

அக்டோபர் 2005 இல் இந்திய அரசு முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தது.

மறைவு: 78 ஆண்டு நிறைவான வாழ்க்கை வாழ்ந்து வந்த கவிமணி மனைவியின் ஊராகிய புத்தேரி' என்கிற ஊரில் 26.09.1954 இல் வாழ்நாள் முழுவதும் தமிழ்மணி ஒலித்துக் கொண்டிருந்த ஒளிரும் தமிழ்மணி, நம் ஒப்பற்ற கவிமணியின் நா ஓய்ந்தது. எனினும் அவர் பாடல்கள் செவிகளில் ஒலித்துக் கொண்டே உள்ளன.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82035
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 21, 2014 9:54 pm

பயனுள்ள பகிர்வு
-
கவிமணி அவர்களை இந்திய அஞ்சல் துறை
தபால் தலை வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளது
-
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! JZIyF9VlRH6xI4Lc7eD5+stamp

subasu
subasu
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 25/10/2013

Postsubasu Wed Jan 22, 2014 5:31 pm

மகிழ்ச்சி அறிய தந்தமைக்கு நன்றி சாமி  மகிழ்ச்சி 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக