புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சங்ககாலத்தில் வீடுகள் Poll_c10சங்ககாலத்தில் வீடுகள் Poll_m10சங்ககாலத்தில் வீடுகள் Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
சங்ககாலத்தில் வீடுகள் Poll_c10சங்ககாலத்தில் வீடுகள் Poll_m10சங்ககாலத்தில் வீடுகள் Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
சங்ககாலத்தில் வீடுகள் Poll_c10சங்ககாலத்தில் வீடுகள் Poll_m10சங்ககாலத்தில் வீடுகள் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
சங்ககாலத்தில் வீடுகள் Poll_c10சங்ககாலத்தில் வீடுகள் Poll_m10சங்ககாலத்தில் வீடுகள் Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
சங்ககாலத்தில் வீடுகள் Poll_c10சங்ககாலத்தில் வீடுகள் Poll_m10சங்ககாலத்தில் வீடுகள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
சங்ககாலத்தில் வீடுகள் Poll_c10சங்ககாலத்தில் வீடுகள் Poll_m10சங்ககாலத்தில் வீடுகள் Poll_c10 
1 Post - 1%
bala_t
சங்ககாலத்தில் வீடுகள் Poll_c10சங்ககாலத்தில் வீடுகள் Poll_m10சங்ககாலத்தில் வீடுகள் Poll_c10 
1 Post - 1%
prajai
சங்ககாலத்தில் வீடுகள் Poll_c10சங்ககாலத்தில் வீடுகள் Poll_m10சங்ககாலத்தில் வீடுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்ககாலத்தில் வீடுகள் Poll_c10சங்ககாலத்தில் வீடுகள் Poll_m10சங்ககாலத்தில் வீடுகள் Poll_c10 
293 Posts - 42%
heezulia
சங்ககாலத்தில் வீடுகள் Poll_c10சங்ககாலத்தில் வீடுகள் Poll_m10சங்ககாலத்தில் வீடுகள் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
சங்ககாலத்தில் வீடுகள் Poll_c10சங்ககாலத்தில் வீடுகள் Poll_m10சங்ககாலத்தில் வீடுகள் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சங்ககாலத்தில் வீடுகள் Poll_c10சங்ககாலத்தில் வீடுகள் Poll_m10சங்ககாலத்தில் வீடுகள் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
சங்ககாலத்தில் வீடுகள் Poll_c10சங்ககாலத்தில் வீடுகள் Poll_m10சங்ககாலத்தில் வீடுகள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சங்ககாலத்தில் வீடுகள் Poll_c10சங்ககாலத்தில் வீடுகள் Poll_m10சங்ககாலத்தில் வீடுகள் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
சங்ககாலத்தில் வீடுகள் Poll_c10சங்ககாலத்தில் வீடுகள் Poll_m10சங்ககாலத்தில் வீடுகள் Poll_c10 
6 Posts - 1%
prajai
சங்ககாலத்தில் வீடுகள் Poll_c10சங்ககாலத்தில் வீடுகள் Poll_m10சங்ககாலத்தில் வீடுகள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சங்ககாலத்தில் வீடுகள் Poll_c10சங்ககாலத்தில் வீடுகள் Poll_m10சங்ககாலத்தில் வீடுகள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
சங்ககாலத்தில் வீடுகள் Poll_c10சங்ககாலத்தில் வீடுகள் Poll_m10சங்ககாலத்தில் வீடுகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்ககாலத்தில் வீடுகள்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 31, 2009 8:05 pm

‘குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் ‘ என்ற கூற்றுக்கு ஏற்பத் தொடக்கத்தில் மனிதன் மரக்கிளைகளையும் மலைக் குகைகளையும் தன் வாழிடமாகக்கொண்டிருந்தான் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கொடிய விலங்குகளின் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக அவற்றில் வாழ்ந்த மனிதன், மழை, புயல், பனி முதலிய இயற்கை உற்பாதங்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபாட்டுடலானான். இலை, தழை, புல் முதலியவற்றாலும் கழிகளாலும் குடிசைகள் அமைத்து வாழக்கற்றுக் கொண்டான். அவற்றை, இலைவேய் குரம்பை புல்வேய் குரம்பை என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஈந்தின் இலைகளால் மனிதன் அமைத்து வாழ்ந்த ‘எய்ப்புறக் குரம்பை” குறித்தும் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த எயினர்களும் மேய்ச்சல் சமூகமாக வாழ்ந்த இடையர்களும் குறிஞ்சி நிலத்திலும், முல்லை நிலத்திலும் அரண்களும் குடியிருப்புகளும் அமைத்து வாழ்ந்தது குறித்தும் சங்க இலக்கியங்கள் கூறும் செய்திகள் முன்னர்க் கூறப்பட்டுள்ளன.

சங்ககாலத்தில் வீடுகள் Hut_350 இரும்பு கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வானது, சமூகமாற்றத்துக்கு ஒரு முக்கிய காரணியாக அமைந்தது. வேட்டைச் சமூகம் மேய்ச்சல் சமூகமாக மாறிய நிலையில், தாய் வழிச்சமூகம் படிப்படியாக மாறி தந்தை வழிச் சமூகம் தோன்றியது. ஆணாதிக்கம் தலையெடுத்தது: பெண் அடிமையாக்கப்பட்டாள். தந்தை வழிச்சமூகத்தின் தலைவர்களாக இருந்த ஆண்கள் அடிமைச் சமூகத்தில் ஆண்டைகள் ஆயினர். உழைக்கும் மக்களும் பெண்களும் அடிமையாக்கப்பட்டனர். அடிமையாக்கப்பட்டது. தெதரியாமலே அடிமையாயினர். அவர்களின் உழைப்பால் பெறப்பட்ட மிகுவிளைச்சலும் உபரி உற்பத்தியும் அவர்களைச் சென்றடையவில்லை. ஆண்டைகளால் உறிஞ்சப்பட்டது. ஆண்டைகள் தம் ஆடம்பரம் மிக்க சுயநலமான சுகபோக வாழ்க்கைக்காக அவற்றைக் கவர்ந்து கொண்டனர். அடிமைச் சமூகத்தில் உற்பத்தி பெருகி உபரி நிலை ஏற்பட்டிருந்தும் கூட உழைக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை. தாழ்நிலையிலேயே இருந்தது. வேட்டைச் சமூகமாக வாழ்ந்த கால கட்டத்தில் இருந்தது போன்ற பற்றாக்குறையான நிலையே அவர்கள் வாழ்க்கையில்தொடர்ந்து நீடித்தது. உழைக்கும் மக்களது உழைப்பின்பயன் ஆண்டைகளால் சுரண்டப்பட்டதே இதற்குக் காரணம் ஆகும்.

இரும்பு கண்டுபிடிக்கப்பட்டதன் பயனாகத் தொழில்கள் வளர்ந்தன. கொற்றொழில் தச்சுத்தொழில், மண் பாண்டத்தொழில் நெசவு முதலிய தொழில்கள் வளர்ந்தன. ஆனால் இத்தொழில்களைச் செய்த தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர்.கைத்தொழில் வளர்ச்சியால் கட்டடக்கலை பெரிதும் வளர்ந்தது. ஆண்டைகள் மற்றும் அரசர்களின் சுகபோக வாழ்க்கைக்காக வசதி மிக்க வளமனைகள் பல கட்டப்பட்டன. அவர்களின் பாதுகாப்புக்காகக் கோட்டைகளும் கொத்தளங்களும் அமைக்கப்பட்டன. கோட்டைகளைச் சூழ ஆழம்மிக்க அகழிகள் அகழப்பட்டன. அவற்றின் பெருமையும் சிறப்பும் குறித்துச் சங்க இலக்கியங்கள் விரிவாகவும் விளக்கமாகவும் கூறுகின்றன. மனைகள் மற்றும் மதில்களின் உயர்ச்சி குறித்து,

‘விண்டோய்மாடத்து விளங்கு சுவருடுத்த நன்னகர் ( விளங்குகின்ற மதில் சூழ்ந்த விண்ணைத்தீண்டும் மாடங்களையுடைய நகர் ) என்றும்.

( ‘சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பு’

( சுட்ட செங்கல்லால் செய்யப்பட்ட உயர்ந்த புறப்படை வீட்டைச் சேர்ந்த மதில் ) என்றும்

‘இடஞ்சிறந்துயரிய எழுநிலை மாடம்’

( தனக்குள்ள இடமெல்லாம் பொன்னாலும் மணியாலும் சிறப்புப் பெற்று உயர்ந்த ஏழுநிலைகளையுடைய மாடம் ) என்றும் ‘மலைபுரை மாடம்’ என்றும் அவை பேசுகின்றன.

‘வான மூன்றிய மதலை போல
ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி
விண்பொர நிவந்த வேயாமாடம்’

( ஆகாயத்துக்கு முட்டுக்காலாக ஊன்றி வைத்த ஒரு பற்றுக் கோடு போல விண்ணைத் தீண்டும்படி ஓங்கினதும் தன்னிடத்துச் சார்த்திய ஏணியால் ஏறுதற்கரிய தலைமையினையுடையதும் கற்றை முதலியவற்றால் வேயாது தட்டோடிட்டுச் சாந்து வாரப்பட்டதுமான மாடம் ) என்று நூல்கள் புகழ்கின்றன.

அரசர்கள் அமைத்த அகழிகள் கோட்டைகள் மற்றும் கொத்தளங்கள் குறித்து,

‘மண்ணுற ஆழ்ந்த மணி நீர்க் கிடங்கின்
விண்ணுற வோங்கிய பல்படைப் புரிசைத்
தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை
நெய்படக் கரிந்த திண் போர்க் கதவின்
மழையாடு மலையின் நிவந்த மாட மொடு
வையை யன்ன வழக்குடை வாயில்
வகைபெற எழுந்து வான மூழ்கிச்
சில் காற்றிசைக்கும் பல் புழை நல்லில்
ஆறு கிடந்தன்ன அகல் நெடுந் தெரு’

( மண்ணுள்ள அளவும் ஆழ்ந்து நீல மணி போலும் நீரையுடைய கிடங்கினையும் தேவருலகிலே செல்லும்படி உயர்ந்த பலகற்படைகளையுடைய மதிலினையும் பழைய தாகிய வலி நிலைபெற்ற வாயிலில் தெய்வத்தையுடைத்தாகிய நிலையினையும் நெய் பலகாலும் இடுதலால் கருகின திண்ணிய செருவினையுடைய கதவினையும் மேகம் உலாவும் மலை போல் ஓங்கினமாடத்தோடே, வைiயாறு இடைவிடாது ஓடுமாறு போன்ற மாந்தரும் மாவும் வழங்குகின்ற வாயில் என்றும் ( மண்டபம் , கூடம், தாய்க்கட்டு, அடுக்களை என்றாற் போலக் கூறுபாடாகிய பெயர்களைத்தாம் பெறும்படி உயர்ந்து, தேவருலகிலே சென்று தென்றற்காற்று ஒலிக்கும் பல சாளரங்களையுடைய நன்றாகிய அகங்கள் ) என்றும் மதுரைக்காஞ்சி ( 531 – 59 ) கூறுகிறது.

தச்சர் முதலிய தொழில் வல்லார் அம்மனைகளை வகுத்தமைத்தது குறித்து. ‘நூலறிபுலவர் நுண்ணிதின் கயிறிட்டு

தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி
பெரும் பெயர்மன்னர்க் கொப்ப மனைவகுத்து
ஒருங்குடன் வளைஇய ஓங்குநிலை வரைப்பு” நெடுல்வாடை : 74-77

(சிற்பநூல் அறிந்த தச்சர் கூடுதலாக நூலை நேரே பிடித்து திசைகளைக் குறித்துக் கொண்டு அத்திசைகளில் நிற்கும் தெய்வங்களையும் குறைவறப்பார்த்து பெரிய பெயரினையுடைய அரசர்க் கொப்பமனைகளையும் வாயில்களையும் மண்டபங்களையும் கூறுபடுத்தி, இவ்விடங்களையெல்லாம் சேரவளைத்து உயர்ந்த மதிலின் வாயில்) என்று, அடிமைகளான தொழிலாளர்கள் அவற்றை ஆண்டைகளுக்காகச் சிறப்புற அமைத்தது குறித்துச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன.

மண்ணைக் குழைத்து மதில் எழுப்பி ஈந்தின் இலையும் தினைத் தாளும் வரகு வைக்கோலும் கொண்டு கூரை வேய்ந்த நிலை மாறியது. சுட்ட செங்கல்லும் சுண்ணாம்பும் கொண்டு மதில்களும் மனைகளும் கட்டப்பட்டன. மாடங்கள் தட்டோடிட்டுச்சாந்துவாரப்பட்டன. இதனை’செம்பியன்றன்ன செஞ்சுவர்” என்று சங்க நூல்கள் கூறுகின்றன. அம்மனைகளின் அகற்சிக்கும் உயர்ச்சிக்கும் சான்றளிக்கின்றன.

இவ்வாறு, அரசரும் ஆண்டைகளுமான சுரண்டும் வர்க்கத்தாரின் ஆடம்பரமான சுகபோகத்துக்காகவும் பாதுகாப்புக்காவும் வானுற உயர்ந்த வளமனைகள் பல வசதிகளோடு அழகுற அமைக்கப்பட்டன. இவற்றை அமைக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட அடிமைகளின் உழைப்பு அளவற்றது. ஆண்டைகளுக்காகவும் அரசர்களுக்காகவும் அரண்மனைகளும் வளமனைகளும் அமைத்துக் கொடுத்த அடிமைகளான உழைப்பாளிகள் ஓட்டையும் பொத்தலுமான குடிசைகளில் ஊருக்கு ஒதுக்குப்புறமான சேரிகளில் ஒதுங்கி வாழுமாறு நிர்பந்திக்கப்பட்டனர். அவர்கள் வாழும் சேரிகளைப்பாடுவதும் கூடத்தீட்டு என்று புலவர்கள் கருதினர் என்பதையும் சங்க இலக்கியங்கள் நமக்குக் கூறுகின்றன. அடிமைகளின் வாழ்வில் அன்று தொடங்கிய இந்த அவலம் இன்றும் தொடர்வது மனித சமூகம் வெட்கித் தலை குனிய வேண்டிய நிலை ஆகும்.


நன்றி - வெ.பெருமாள்சாமி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 31, 2009 8:06 pm

அணிகலன்கள் ஆபரணங்கள்

அணிகலன்களையும் ஆடை ஆபரணங்களையும் அணிந்து தன்னை அலங்கரித்துக் கொள்வதில் மனிதன் அளவற்ற ஆசை கொண்டவன். இதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை. ஆடைகளால் தன்னை அழகுபடுத்திஅலங்கரித்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவது இருபாலர்க்கும் பொதுவான இயல்பே ஆகும்.

சங்ககாலத்தில் வீடுகள் Jewels_400 மகளிரைப் போல ஆடவரும் பொன் அணிகளால் தம்மை அலங்கரித்துக் கொண்டதனைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.

‘வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும்
விரவு மணி யொளிர் வரும் அரவுறாழார மொடு
புரையோன் மேனிப் பூந்துகிற் கலிங்கம்
உரைசெல அருளினோன்” – புறநானூறு : 398

(மலை போன்ற மார்பில் அணிந்த, உலகமெல்லாம் விலைமதிக்க தக்க பலமணிகள் கோர்க்கப்பட்டு, ஒளிவிளங்கும் பாம்பு போல வளைந்து கிடக்கும் ஆரமும் பூ வேலை செய்யப்பட்ட ஆடையும் தன்புகழ் எங்கும் பரவ நல்கினான்) என்றும், ‘கோடியர் முழவுமருள் திருமணி மிடைந்த தோள் அரவுறழாரம்” (கூத்தரது முழவு போன்றதும் அழகிய மணியாற் செய்யப்பட்ட வாகுவலயம் அணிந்ததுமான தோளிற் கிடக்கும் பாம்பு போலும் ஆரம்) என்றும் புறநானூறுற்றுச் செய்யுளடிகள் ஆடவர் அணிந்த அணிகளைப் பற்றிக் கூறுகின்றன.

விலங்கு நிலையில் இருந்து காட்டு மிராண்டியாக மாற்றமடைந்து, பின் வேட்டைச் சமூகமாகவும் மேய்ச்சல் சமூகமாகவும் மாறி வளர்ந்து முன்னேறிய மனிதன் மானத்தை மறைத்துக் கொள்ள முற்பட்டு முனைந்த போது இயற்கையில் கிடைத்த பொருள்களான இலை தழை களால் மாலை கண்ணி முதலிய வற்றைத் தொடுத்துக் கழுத்திலும் மார்பிலும் தலையிலும் அணிந்து கொண்டான். தோலை ஆடையாக அணிந்த மனிதன், இலை தழை மலர் முதலிய வற்றைத் தொடுத்து மாலையாகவும், கண்ணியாகவும் அணிந்தான்.

‘கோட்டவும் கொடியவும் விரைஇக்காட்ட
பல்பூமிடைந்த படலைக் கண்ணி
ஒன்றமருடுக்கைக் கூழாரிடையன்” என்று பெரும்பாணாற்றுப்படை (173 -75)

இது குறித்துக் கூறுகிறது.

‘பாசிலை தொடுத்த உவலைக் கண்ணி
மாசூணுடுக்கை மடி வாயிடையன்”
- புறநானூறு : 54

(பசிய இலையால் தொடுக்கப்பட்ட தழைக் கண்ணியையும் மாசு பொருந்திய உடையையும் உடைய இடையன்) என்றும்,” உவலைக் கண்ணி வன் சொலிளைஞர்” (தழை விரவின கண்ணியையும் கடிய சொல்லையும் உடைய இளைஞர்) என்று (மதுரைக் காஞ்சி) இலக்கியங்கள் கூறுகின்றன. இவ்வாறு, கணசமூகமாக வேட்டையாடியும் நிரை மேய்த்தும் வாழ்ந்த கால கட்டத்தில் மனிதன் தன்னை இலைதழைகளால் அலங்கரித்துக் கொண்ட செய்தியைச் சங்க நூல்கள் கூறுகின்றன.

அந்தக் கால கட்டத்தில் வெள்ளி பொன் முதலிய உலோகங்களால் ஆபரணங்களும் அணிகலன்களும் ஆக்கி அணிந்து அலங்கரித்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை மனிதனுக்கு ஏற்பட்டிருக்கவில்லை, அவற்றை ஆக்கிக் கொள்ளும் நிலையினையோ அணிந்து அழகுபடுத்திக் கொள்ளும் நிலையினையோ மனிதன் எய்தியிருக்கவில்லை. அதற்கு அவனுக்கு ஓய்வு கிடைக்க வில்லை. அவன் வாழ்ந்த சமூக அமைப்பே அதற்குக் காரணம் ஆகும். (மனிதன் அநாகரிக நிலையில் வாழ்ந்த காலகட்டத்தில் நேர்த்தியற்ற ஆபரணங்களைச் செய்து அணிந்து கொண்டான் எங்கல்ஸ் அவர்கள் கூறியுள்ளார்கள்)

அடிமைச் சமூகத்திலும் நிலப்பிரபுத்துவ சமூகத்திலும் உழைப்பாளிகளின் உழைப்பைச் சுரண்டிக் கொழுத்த செல்வர்களான தனிமனிதர்கள் பொன் வெள்ளி முதலியவற்றால் ஆன ஆபரணங்களை அணிந்து தம்மை அலங்கரித்துக் கொண்டனர். அவற்றை அணிவதைப் பெருமைக்குரியதாகவும் மதிப்புக்குரியதாகவும் கருதிக் கொண்டனர். உழைக்கும் மக்களை விடத்தாங்கள் உயர்ந்தவர்கள் என்று காட்டிக் கொள்ளவே அவர்கள் அவற்றை அணிந்தனர்.

தாம் அனுபவிக்கும் செல்வமும் சுக போகமும் கடவுள் தங்களுக்குக் கொடுத்த வரம் என்றும் பூர்வ ஜென்ம புண்ணியம் என்றும் ஆண்டைகள் கூறிக் கொண்டனர். இம்மை மறுமை மோட்சம் நரகம் என்ற கருத்துக்கள் மக்களிடையே பரப்பபட்டன. தங்களது சுரண்டல் நடவடிக்கைகளை மக்கள் உணர்ந்து கொள்ளாதபடி, அவர்களது கவனத்தை திசை திருப்பவே அவர்கள் அவ்வாறு கூறிக் கொண்டனர். அரசர்கள் தெய்வாம்சம் பொருந்தியவர்கள் என்றும் மக்களிடையே பிரச்சாரம் செய்யப்பட்டது.

பொதுவுடைமை வகைப்பட்ட கணசமூகமாக மக்கள் வேட்டையாடியும் நிரைமேய்த்தும் வாழ்ந்த கால கட்டத்தில் மனிதன் அணிகலன் அணியும் பழக்கம் நிலவவில்லை. இதற்குச் சங்க இலக்கியங்கள் சான்றளிக்கின்றன. குறிஞ்சி முல்லை நிலங்களில் வேட்டைச் சமூகமாகவும் மேய்ச்சல் சமூகமாகவும் வாழ்ந்த மக்களைப் பற்றிய சங்க இலக்கியப் பாடல்களில், அந்நிலத்துப் பெண்கள் அணிகள் அணிந்தது பற்றிய குறிப்புகள் எவையும் காணப்படவில்லை பொதுவாக தமிழ் இலக்கியங்கள் பெண்களைப் பற்றி பேச நேரும் பொழுது அவர்கள் அணிந்திருந்த அணிகலன்களோடு தொடர்பு படுத்தியே அவர்களைப் பற்றிக் கூறும். ‘மாணிழை மகளிர்” ‘வாலிழை மகளிர்” என அணிகலன் பற்றிய அடை மொழிகளோடேயே மகளிர் குறிக்கப்பட்டனர். மகளிரைப் பற்றிய அடைமொழிகள், அவர்கள் அணிந்த அணிகல்களின் சிறப்பைக் குறிப்பன வாகவே இருக்கும் வள்ளுவரும் கூட “கனங்குழை மாதர்” என்று கூறுகிறார்.

ஆனால் கணசமூகத்து மகளிரைப் பற்றிய சங்க இலக்கியப் பாடல்களில் அத்தகைய அடைமொழிகள் காணப்படவில்லை. அரிவை எயிற்றி, தாய், பிணா, பெண்டு, மகடூஉ, மகளிர், மனைவி மனையோள், முதியோள் என்பன போன்ற, அணிகள் பற்றிய அடைமொழிகள் எவையும் பெய்யப்படாத சொற்களாலேயே மகளிர் குறிக்கப்பட்டுள்ளனர். மக்கள் கணசமூகமாக வாழ்ந்த காலகட்டத்தில் அணிகலன் எவையும் செய்யப்படாத நிலையினையும் மகளிர் அவற்றை அணிந்திராத நிலையினையுமே இச்சொற்கள் உணர்த்துகின்றன. அணிகலன்கள் செய்து அணிந்து கொள்ளும் சமூகச்சூழல் அந்தக் கால கட்டத்தில் தோன்றியிருக்கவில்லை என்பதையும் இச்சொற்கள் உணர்த்துகின்றன.

ஆனால் சமூக மாற்றம் நிகழ்ந்து வேட்டைச் சமூகமும் மேய்ச்சல் சமூகமும் அடிமைச் சமூகமாக மாற்றம் கண்ட கால கட்டத்தில் அடிமை எஜமானர்களான ஆண்டைகளும் செல்வர்களும் அவர்தம் பெண்களும் அணிந்து கொண்ட அணிகலன்களின் சிறப்பைக் குறித்துச் சங்க இலக்கியங்கள் சுவைபடப் பேசுகின்றன. பெண்களைக் குறிக்கும் சொற்களாகிய மங்கை மடந்தை அரிவை முதலான சொற்கள் அவர்கள் அணிந்த அணிகலன்களைப் பற்றிய அடைமொழிகளுடனேயே குறிக்கப்பட்டுள்ளன. அவ்வடைமொழிகள் அம்மகளிர் அணிந்திருந்த அணிகலன்களின் சிறப்புப் பற்றியும் அவர்தம் செல்வச் செருக்குப் பற்றியும் தெளிவாக உணர்த்துகின்றன. கோவலன் ‘மாசறு பொன்னே வலம்புரிமுத்தே” என்று கண்ணகியைப் பொன்னாகவும் முத்தாகவும் வருணித்துப் புகழ்ந்ததாக இளங்கோவடிகள் கூறுகிறார். ‘ செறியரிச் சிலம்பின் குறுந்தொடிமகளிர்” (புறம் 36) ஒண்டொடி மகளிர் (புறம் 24) வாலிழை மங்கையர் (புறம் 11) என்று சுரண்டும் வர்க்கத்துப் பெண்கள் குறிக்கப்படுகின்றனர். இத்தொடர்கள் அம்மங்கையர் அணிந்திருந்த அணிகள் பற்றிய அடைமொழிகளோடு கூறப்பட்டுள்ளமை இங்கு நோக்கத்தக்கது.

அழகி ஒருத்தி அணிகலன் பல அணிந்து மணலில் உலவிய செய்தியைப் புறநானூறு கூறுகிறது.

‘ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த
பொலஞ்செய் பல் காசணிந்த வல்குல்
ஈகைக் கண்ணி இலங்கத் தை இத்
தரு மணலியல் வோள் - புறநானூறு : 253

(குற்றமில்லாத பொற்கொல்லன் பழுதறச் செய்த பொன்னாலாகிய பல மணியணிந்த மேகலையும் பொன்னாற் செய்த கண்ணியும் விளக்க முற ஒப்பனை செய்து கொண்டு,புதிதாகப் பரப்பிய மணலில் நடந்து உலாவுகின்றவள்) என்று காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் அழகி அணிந்த ஆபரணச் சிறப்புக் குறித்துக் கூறுகிறார்.

பொன்னாற் செய்த வளைந்த ஆபரணங்கள் அணிந்த மகளிர் வானுற உயர்ந்த மாடங்களில் வாழ்ந்ததையும் அம்மகளிர் பல்வகை மணிகள் கோத்த வடங்களை அணிந்திருந்ததையும் கால்களில் பொன்னாற் செய்த பூண்களுடன் பொற்சிலம்பும் கைகளில் பொன் வளையல்களும் அணிந்திருந்ததையும் பந்தாடிய அப்பெண்கள் பொன்னாற் செய்த கழங்கு கொண்டு ஆடியதையும் பெரும் பாணாற்றுப்படை (327-335) கூறுகிறது.

..............................................கொடும்பூண் மகளிர்
கொன்றை மென் சினை பனிதவழ் பவை போற்
பைங்காழ் அல்குல் நுண்டுகில் நுடங்கி
மால் வரைச் சிலம்பின் மகிழ்சிறந்தாலும்
பீலி மஞ்ஞையி னியலிக் கால
தமனியப் பொற்சிலம் பொலிப்பவுயர் நிலை
வான் றோய் மாடத்து வரிப்பந்தைசைஇக்
கைபுனை குறுந்தொடிதத்தப்பைப்பய
முத்தவார் மணற் பொற்கழங்காடும்”

(உயர்ந்த நிலையினை யுடைய தேவருலகத்தைத் தீண்டும் மாடத்து உறையும் வளர்ந்த பேரணிகலன்களையுடைய மகளிர் கொன்றையிடத்து அரும்புகளையுடைய மெல்லிய கொம்புகளையுடைய அல்குலில் கிடக்கின்ற மெல்லிய துகில் அசைய பெருமையுடைய பக்க மலையிலே மனவெழுச்சி மிக்கு ஆரவாரிக்கும் தோகையுடைய மயில் போலே உலாவி, பொற்பூண்களையுடைய கால்களிடத்தனவாகிய பொன்னாற்செய்த சிலம்புகள் ஆரவரிப்ப நூலால் வரிதலையுடைய பந்தினையடித்து இளைத்து, முத்தையொத்த வார்ந்த மணலிலே மெத்தெனப் பொன்னாற் செய்த கழங்கினைக் கொண்டு விளையாடும்) என்பது கடியலூர் உருத்திரங்கண்ணனார் கூற்று.

புகார் நகரத்தில் செல்வர்தம் மனைகளின் முற்றத்தில் உலருகின்ற நெல்லைத் தின்னவந்த கோழிகளை மனைத்தலைவி தன்செவிகளில் அணிந்திருந்த மகரக் குழையால் எறிந்து விரட்டினாளாம். அக்குழைகள், அவர்களின் பிள்ளைகள் உருட்டித் திரிந்த மூன்று உருளைகளையுடைய சிறு தேரினது வழியைத் தடுத்து விலக்கியதாம். இதனை,

‘அகநகர் வியன் முற்றத்துச் சுடர்நுதல் மட நோக்கின்
நேரிழை மகளிர் உணங்குணாக்கவரும்
கோழியெறிந்த கொடுங்காற் கனங்குழை
பொற்காற் புதல்வர் புரவியின்றுருட்டும்
முக்காற் சிறுதேர் முன் வழி விலக்கும்”

என்னும் பட்டினப் பாலையடிகள் (20-25) கூறுகின்றன.

மேற்குறித்த பாடலடிகள் செல்வர்மனைகளில் மகளிர் அணிந்திருந்தஅணிகளின் சிறப்பை மட்டுமல்லாது அவர்களின் குழந்தைகள் பற்றியும் அம்மகளிரின் செல்வச் செருக்கு குறித்தும் கூறுகின்றன.

அடிமை எஜமானர்களான செல்வர் மனைகளில் அவர்தம் பெண்டிர் பொன்னாலும் நவரத்தினங்களாலும் புனையப்பட்ட அழகுமிக்க அணிகளை அணிந்து தம்மை அலங்கரித்துக் கொண்டு ஆடம்பரமாகவும் உல்லாசமாகவும் வாழ்;ந்தனர். ஆனால் உழைக்கும் வர்க்கத்தவர் ஆன களமரும் தொழுவரும் கடையரும் தம் உழைப்பின்பயனைச் சுரண்டும் வர்க்கத்ததாரிடம் பறி கொடுத்து விட்ட நிலையில், பொன் அணிகள் அணிந்திட வகையற்றவராய் வெறுங்கையராக வெற்றுக் கழுத்தினராக மூக்கும் காதும் மூளியாக இருந்தனர். செல்வர் மனைகளில் அடிமை எஜமானிகள் தம் கைகளில் பல்வகை வேலைப்பாடுகள் அமைந்த நவரத்தினங்களால் செய்யப்பட்ட வளையல் அணிந்து அழகு பார்த்தனர். அதனைக் கண்ட கடைசியர் தாமும் அவர்களைப் போல் தம் கைகளில் வளையல் அணிந்து கொள்ள ஆசைப்பட்டனர். ஆனால் அவர்களின் அடிமை நிலை அவர்களுக்கு அந்த வாய்ப்பை மறுத்துவிட்ட நிலையில் வயலில் களைபறித்த அப்பெண்கள், அங்கு களையாகப் பறித்துப் போட்டிருந்த குவளை ஆம்பல் முதலியவற்றின் தண்டுகளைக் கொண்டு வளையல் செய்து தம் கைகளில் அணிந்து அழகு பார்த்துக் கொண்டார்கள். இந்த அவலக் காட்சியை’கழனி ஆம்பல் வள்ளி தொடிக்கை மகளிர்’ என்று புறநானூறு (352) கூறுகிறது.

வயலில் களைபறித்த பெண்கள் வயலுக்கு உரியவளான தலைவியைப் பார்க்கிறார்கள். அவர்கள் தம் கைகளில் பவளத்தால் ஆன வளையல்களை அணிந்து அழகு படுத்திக் கொண்டதைப் பார்க்கிறார்கள். அடிமைகளான கடைசியர் பவள வளையலுக்கு எங்கே போவார்கள்? எனவே, வயலில் களையாக முளைத்து வளர்ந்திருந்த ஆம்பல் குவளை ஆகியவற்றின் தண்டுகளை வளையல்களாகச் செய்து தம்கைகளில் அணிந்து அழகு பார்த்துக்கொண்டார்கள். இக்காட்சியினை,

‘பவள வளைசெறிந்தாட்கண்டு அணிந்தாள்பச்சைக்
குவளைப் பசுந்தண்டு கொண்டு’ என்று பரிபாடல் ஆசிரியர் பரிவுடன் காட்டுகிறார்.

இவ்வாறு உழைக்கும் வர்க்கத்தவர் ஆன அடிமைப் பெண்கள் தம் அணிகல ஆசையைத் தணித்துக் கொண்டஅவலத்தைச் சங்க நூல்கள் நமக்குக் காட்டுகின்றன. இன்றும் கிராமப்புறங்களில் இத்தகைய காட்சிகளைக் காண முடிகிறது.

‘உவலைக் கண்ணி வன்சொல் இளைஞன்” என்றும் ‘பாசிலை தொடுத்த உவலைக் கண்ணியன் ‘ என்றும் ‘கோட்டவும் கொடியவும் விரைஇக்காட்டபல்பூமிடைந்த படலைக் கண்ணியன்’என்றும் கண சமூகமாக குறிஞ்சி முல்லை நிலங்களில் வாழ்ந்த மக்கள் இலைதழைகளால் மாலையும் கண்ணியும் தொடுத்து அணிந்து கொண்ட காட்சியைச் சங்க இலக்கியங்கள் நமக்குக் காட்டுகின்றன. வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட்டிருந்த அடிமைச் சமூகத்திலும் உழைக்கும் மக்கள் இலைதழைகளையே அணிகளாகவும் உடைகளாகவும் (தழையுடை) அணிந்து கொண்டகாட்சியையும் காட்டுகின்றன. கணசமூகத்தில் ‘உவலைக்கண்ணி வன்சொல் இளைஞனாக இருந்தவன், அடிமைச்சமூகத்தில் ‘உவலைக்கண்ணித் துடியனா”கவே இருந்தான் என்பதையும் தெளிவாகவே கூறுகின்றன.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 31, 2009 8:07 pm

சங்ககாலத்தில் உடை


உலகமெங்கும் மனிதர்களின் முதல் தேவை உணவும் உடையுமேயாகும்.

‘தெண்கடல் வளாகம் பொதுமை இன்றியும்
வெண்குடை நிழற்றிய வொருமையோர்க்கும்
நடுநாள்யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா வொருவற்கும்
உண்பது நாழி, உடுப்பவையிரண்டே’ புறநானூறு : 189

சங்ககாலத்தில் வீடுகள் Ancient_king_400 என்பது, மனிதனது இன்றியமையாத் தேவைகள் குறித்து நக்கீரர் கூறும் செய்தியாகும். மண்ணாளும் வேந்தனாயினும் கல்வியறிவற்ற வேடனாயினும் மனிதனது அடிப்படைத்தேவைகள் இவ்விரண்டுமேயாகும். அவனது பிறதேவைகள் வேறுபடலாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமையலாம். எனவே, ‘பிறவு மெல்லாம் ஓரொக்குமே” என்றார்.

குரங்கில் இருந்து மனிதனாகப் பரிணமித்த மனிதன் மானத்தை மறைத்துக் கொள்ள முயன்ற காலம் எது என்பது யாருக்கும் தெரியாது. மனித குலத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் ஆகப்பெரிய காலப் பகுதியில் அவன் விலங்குகளைப் போல், மலைக்குகைகளையும் மரக்கிளைகளையுமே தன் உறைவிடமாகக் கொண்டு வாழந்தான். உணவுக்காக விலங்குகளை வேட்டையாடினான். விலங்குகளைப் போலவே ஆடை எதுவும் அணியாமல் வாழ்ந்தான். கால வோட்டத்தில் மானத்தை மறைத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்ட பொழுது அவனுக்கு ஆடையாகக் கிடைத்தவை இலைகள், தழைகள், மரப்பட்டைகள் மற்றும் விலங்குகளின் தோல்களுமேயாகும். எனவே தொடக்கத்தில் அவன் அவற்றையே ஆடையாக அணிந்தான். அவ்வழக்கம் வரலாற்றின் நீண்ட நெடிய காலப்பகுதி வரை அவனிடம் நீடித்திருந்தது. அவ்வழக்கம் சங்க காலத்திலும் அவனிடம் தொடர்ந்து நீடித்தது. அதற்குச் சங்க இலக்கியங்கள் சான்றளிக்கின்றன.

மரப்பட்டைகள் ஆடையாக அணியப்பட்டமை குறித்தும் பெண்கள் தழையுடை அணிந்தமை குறித்தும் சங்க இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன. ‘சீரைதைஇய உடுக்கையர்” என்று திருமுருகாற்றுப்படை கூறுகிறது. (சீரை ஸ்ரீ மரவுரி)

இலைதழைகளையும் மலர்களையும் மரல்நாரிலும் நறை நாரிலும் தொடுத்துக் கட்டித் தழையுடையாகப் பெண்கள் அணிந்ததற்குச் சங்க இலக்கியங்கள் சான்றளிக்கின்றன.

முடிந்த குல்லை இலையுடை நறும்பூ
செங்கான் மரா அத்தவாலிண ரிடையிடுபு
சுரும்புணத் தொடுத்த பெருந்தண்மாத்தழை
திருந்து காழல் குல் திளைப்ப உடீஇ”
- திருமுருகு – 201-204

(இலையைத்தலையிலே உடைய கஞ்சங்குல்லையையும் (கஞ்சா) இலையை யுடைய நறிய பூங்கொத்துக் களையும் செவ்விய காலினையுடைய மராத்தினது வெள்ளிய கொத்துக்களையும் நடு நடுவே வைத்து வண்டுகள் தேனையுண்ணும்படி தொடுத்த பெரிய குளிர்ந்த அழகினையுடைய தழையை வடங்கள் திருந்தும் அல்குலிடத்தே அசையும்படி உடுத்தனர்) என்று மகளிர் தழையுடையணிந்த செய்தியை நக்கீரர் கூறுகிறார்.

‘தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளைக்
கூம்பவிழ் முழுநெறி புரள வரும் அல்குல்’ – புறநானூறு : 116

(இனிய நீரையுடைய ஆழ்ந்த சுனைக்கண் பூத்த செங்கழுநீரினது முகையவிழ்ந்த புறவிதழ் ஒடித்த முழுப் பூவாற் செய்யப்பட்ட தழையசையும் அல்குல்) என்று கபிலரும்

‘அளியதாமே சிறு வெள்ளாம்பல்
இளையமாகத் தழையாயினவே – புறநானூறு 248

(சிறிய வெள்ளிய ஆம்பல்கள் இரங்கத்தக்கன, அவைதாம் யாம் இளையமாய் இருக்க முற்காலத்தே தழையுடையாய் உதவின) என்று ஓக்கூர் மாசாத்தனாரும் கூறியுள்ளனர்.

‘நீரறவறியா நிலமுதற்கலந்த
கருங்குரனொச்சிக் கண்ணார் குரூஉத்தழை
மெல்லியல் மகளிரைதகலல் குற்
றொடலை யாகவும் கண்டனம்” – புறநானூறு :271

(நீர் தொலைதலையறியாத நிலத்தில் நிற்கும் கரிய கொத்துக்களையுடைய நொச்சியினது அழகிய நிறத்தையுடைய தழை, இளமகளிருடைய அல்குலிடத்தே தழையுடையாக அணியப்பட்டதனை யாம் முன்பு கண்டோம்) என்று நொச்சித்தழைகள் பெண்களால் தழையுடையாக அணியப்பட்டதற்கு வெறிபாடிய காமக் காணியார் சான்றளிக்கிறார். இதனையே மோசிகீரனாரும்

மணிதுணர்ந்தன்ன மாக்குரனொச்சி
தொடியுடை மகளிரல் குலுங்கிடத்தி -புறநானூறு : 272

(மணிகள் கொத்துக்கொத்தாய் அமைந்தாற் போன்ற கரிய கொத்துக்களையுடைய நொச்சியே, தொடியணிந்த இளமகளிர் அல்குலிடத்தே தழையுடையாகவுங்கிடப்பாய்) என்று நொச்சியை நோக்கிக்கூறுவதாகப்பாடியுள்ளார்.

‘தலைவி தோழியருடன் 99 வகைப்பட்ட மலர்களைக் காட்டிற்கொய்து வந்து பாறையிலே குவித்து அவற்றின் புறவிதழ்களை நீக்கி, பாம்பின் படம் போலப் பரந்த அல்குலிடத்தே தழையுடையாக அணிந்தாள்” என்று, கபிலர் குறிஞ்ப்பாட்டில் கூறுகிறார். மக்கள் கணசமூகமாக வாழ்ந்த காலகட்டத்தில் மானத்தை மறைத்திட அம்மக்கள் தழையும் தோலும் உடையாக அணிந்தனர் என்பதனை இலக்கியங்கள் கூறுகின்றன.

தொடக்கத்தில் மனிதன், தென்னை ஓலை, பனையோலை, பனையகணி, மரல்நார், நறை நார் முதலியவற்றைக்கொண்டு பெட்டி, கடகம், பேழை, பிழா, வட்டி, வலை முதலியவற்றைச்செய்யத்தெரிந்து கொண்டிருந்தான். பின்னர் பருத்தியில் இருந்து பஞ்செடுக்கவும் நூல் நூற்கவும் ஆடை நெய்யவும் தெரிந்து கொண்டிருந்தான். அவ்வாறு நூல் நூற்கவும் ஆடை நெய்யவும் மனிதன் தெரிந்து கொண்ட காலம் எது என்பது யாருக்கும் தெரியாது. அது நிகழ்ந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகியிருக்கலாம். சங்க காலத்தில் பருத்தி நெசவுத்தொழில் பெற்றிருந்த வளர்ச்சியைச் சங்க நூல்கள் நமக்கு காட்டுகின்றன.

முல்லை நிலத்தில் ஊரைச் சூழ இருந்த நிலங்களில் பருத்தி விளைந்தது. பருத்திச் செடியில் விளைந்து முற்றி வெடித்துக்கிடந்த பருத்தியைச் சேகரித்து மூடைகளிடல் திணித்து அடைத்து வீடுகளுக்குக் கொண்டு வந்தனர். இச்செய்தியை, ‘கோடைப்பருத்தி வீடுநிறைபெய்த மூடைப்பண்டம்” என்று புறநானூறு (393) கூறுகிறது.

பரிசில் வேண்டிவந்த பாணர்க்குச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் உணவளித்து உண்பித்த செயலுக்கு, பருத்தியை மூடைகளில் அடைத்து திணித்த செயலை நல்லிறையனார் என்ற புலவர் உவமையாகக்காட்டுகிறார். ‘கோடையிற் கொண்ட பருத்தியினின்றும் கொட்டை நீக்கிச் சுகிர்ந்த பஞ்சியானது நிறையத்திணித்த பொதியாகிய பண்டம் நிறைந்திருப்பது போல வெள்ளிய ஊன் துண்டங்களைக்கொடுத்து உண்பித்தான்” என்று கிணைப்பொருநன் கூற்றாக வைத்து அவர் பாடியுள்ளார்.

‘பருத்திக்காய் முற்றி வெடித்ததனாற் கிடைக்கும் பஞ்சை வில்லால் அடித்துச்சுத்தம் செய்தனர்” என்று நற்றிணை (299) கூறுகிறது. பருத்தியில் இருந்து கொட்டை நீக்கிப் பஞ்செடுத்து வில்லால்அடித்துச் சுத்தம் செய்தல் நூல் நூற்றல் முதலிய வேலைகளைப் பெண்களே செய்தனர். அப்பெண்கள் ‘பருத்திப் பெண்டிர்” எனப்பட்டனர் . இவ்வேலைகளைப் பெண்கள் பகலில் மட்டுமல்லாது, இரவு நேரங்களிலும் விளக்கு வைத்துக்கொண்டு நெடுநேரம் வரை செய்தனர். இதனை,

‘ சிறையுஞ் செற்றையும்புடையுநளெழுந்த
பருத்திப்பெண்டிர் சிறு தீ விளக்கம் “

(பக்கங்களையும் குப்பைகளையும் புடைத்து நீக்குவாளாய் எழுந்திருந்த பருத்தி நூற்கும் பெண்டாட்டியினுடைய சிறிய விளக்கின் ஒளி) என்ற புறநானூற்றுப் பாடலடிகளும் (326)

‘ ஆளில் பெண்டிர் தாளிற் செய்த
நுணங்கு நுண்பனுவல் “ என்னும்

நற்றிணைப்பாடலடிகளும்(353) தெளிவுற உணர்த்துகின்றன. ‘ நுண்ணிய பலவாய பஞ்சு நுனிகளால் கைவல் மகடூஉ தனது செய்கை மாண்பினால் ஓரிழைப்படுத்தலாம், உலகத்து நூல் நூற்றலென்பது “ என்று பஞ்சில் இருந்து பெண்கள் நூல் நூற்றது குறித்து இறையனார் களவியல் சூத்திர உரைகாரர் கூறுகிறார். இதனையே ‘பருத்திப்பெண்டிர் பனுவல் “ (பருத்தி நூற்கும் பெண்டாட்டியது சுகிர்ந்த பஞ்சு) என்று புறநானூறு கூறுகிறது.

அடிமைச் சமூகத்தில் ஆணடைகளின் சொகுசு மிக்க சுகபோகமான வாழ்க்கைக்காக அடிமைகளாக்கப்பட்ட ஆண்களும் பெண்களும் இரவு பகல் பாராது இவ்வேலைகளைச் செய்தனர். அதனால் அவர்களின் குடிசை முற்றமெங்கும் பஞ்சுத்துய் பரவிக்கிடந்தது. இது குறித்து ‘ பஞ்சி முன்றிற் சிற்றில்” (பஞ்சு பரந்த முற்றத்தையுடைய சிற்றில்) என்று புறநானூறு (116) கூறுகிறது.

பஞ்சிலிருந்து நூற்கப்பட்ட நூலில் இருந்து ஆடைகள் நெய்யப்பட்டன. ஆடைகளின் நுண்மையும் மென்மையும் நோக்கி அவை ‘நுண் பூங்கலிங்கம்” எனப்பட்டன. கலிங்க நாட்டினின்றும் ஆடைகள் இறக்குமதி செய்யப்பட்டமையால் அவை கலிங்கம் எனப்பட்டன. பட்டு சீனத்தில் இருந்தும் பருத்தி ஆடைகள் கலிங்கத்தில் இருந்தும் தமிழகம் வந்தன என்பதையும் இலக்கியங்கள் கூறுகின்றன.

‘ பாம்புரியன்ன வடிவின காம்பின்
கழைபடு சொலியின் இழையணிவாரா
ஒண்பூங் கலிங்கம்’ -புறநானூறு : 383

(பாம்பின் தோல் போன்ற வடிவினையுடையவாய், மூங்கிற் புறத்தேயுள்ள தோல் போன்ற, நெய்யப்பட்ட இழைகளின் வரிசையை அறிய இயலாத ஒள்ளிய பூவேலைப்பாடு செய்யப்பட்ட ஆடை) என்றும் ‘ திருமலரன்ன புது மடி” (அகன்ற பகன்றை மலர் போன்ற புத்தாடை) (புறநானூறு 390) என்றும் ஆடைகளின் மென்மையும் நுண்மையும் குறித்துச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. ‘நீலக்கச்சைப் பூவாராடை” ( நீலநிறமுடைய பூத்தொழில் செய்யப்பட்ட ஆடை) என்று புறநானூறு (274) கூறுகிறது. ‘கோபத்தன்ன தோயாப் பூந்துகில்” (இந்திர கோபத்தையொத்த நிறம் பிடியாத இயல்பான சிவப்பாகிய பூத்தொழிலினையுடைய துகில்) என்று திருமுருகாற்றுப்படை (15) கூறுகிறது. ‘புகை முகந்தன்ன மாசில் தூவுடை” (புகையை முகந்தாலொத்த அழுக்கேறாத தூய உடை) என்று செல்வர்கள் அணிந்த ஆடைகளின் மென்மையும் தூய்மையும் குறித்து அந்நூல் (138) மேலும் பேசுகிறது. ஆண்டைகள் அணிந்த ஆடைகளின் மென்மையும் மேன்மையும் பற்றியும் அழகிய பூவேலைப்பாடுகளுடன் அவ்வாடைகள் விளங்கினமை குறித்தும் சங்க இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன. ஆடைகள் நீலம் செம்மை முதலிய வண்ணங்கள் தோய்க்கப்பட்டடிருந்த செய்தியையும் அவை குறிப்பிடுகின்றன.

செல்வர்களும் அரசர்களும் அழகிய வேலைப்பாடு மிக்க நுண்ணிய பட்டாடைகளைத் தாமும் உடுத்தினர், தம்மைப் புகழ்ந்து பாடிய புலவர்களுக்கும் தானமாக வழங்கினர் என்ற செய்தியை,

‘பாசி வேரின் மாசொடு குறைந்த
துன்னற் சிதா அர் நீக்கித் தூய
கொட்டைக் கரைய பட்டுடை நல்கி”

( கொட்டைப் பாசியினது வேர் போலே அழுக்கோடு குறைந்த, தையலையுடைய துணிகளைப் போக்கி, தூயவாகிய திரள முடிந்த முடிகளைக் கரையிலே யுடைய பட்டாடைகளை நல்கினான் ) என்றும்

‘மாசில் காம்பு சொலித்தன்ன அறுவையுடீஇ”

( குற்றமில்தாத மூங்கில் ஆடையை உரித்தாலொத்த உடையினை உடுக்கப் பண்ணினான் ) என்றும்.

‘புரையோன் மேனிப் பூந்துகிற் கலிங்கம்
உரைசெல வருளியோனே
பறையிசை யருவிப் பாயற் கோவே” - புறநானூறு 398

(பறைபோல முழங்கும் அருவிகளையுடைய பாயல்மலைக்குத் தலைவனும் உயர்ந்தோனுமாகிய அவன், தன்மேனிக்கண்கிடந்து விளங்கும் பூவேலை செய்யப்பட்ட உடைகளைத் தன் புகழ் எங்கும் பரவ நல்கினான் ) என்றும் இலக்கியங்கள் விரிவாகக் கூறுகின்றன.

செல்வர்களும் ஆண்டைகளும் அரசர்களும் அணிந்திருந்த ஆடைகளை மட்டுமல்லாது, அரசர்கள் பயன்படுத்திய குடைகள், கொடிகள், பதாகைகள் முதலியவற்றையும் அடிமைகள் செய்து கொடுத்தனர். அழுக்கான ஆடைகளைப் புலைத்தி ஆண்டைகளுக்கு வெளுத்துக் கொடுத்தசெய்தியையும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

‘களர்ப்படு கூவற் றோண்டி நாளும்
புலைத்திகழீ இய தூவெள்ளறுவை.....

(களர் நிலத்து உண்டாகிய கூவலைத் தோண்டி நாள்தோறும் வண்ணாத்தி துவைத்து வெளுத்த ஆடை ) என்று புறநானூறு கூறும் இச்செய்தி முன்னர்க் கூறப்பட்டுள்ளது.

‘நலத்தகைப் புலைத்தி பசை தோய்த் தெடுத்துத்
தலைப்புடை போக்கித் தண்கயத்திட்ட
நீரிற் பிரியாப் பரூஉத்திரி”

(ஆடைகளுக்குப் பசை தோய்த்து அவற்றைப் பெரிய திரிபோல முறுக்கிப் புலைத்தி குளத்தில் இட்டுத் தோய்த்தாள்”) என்ற செய்தியைக் குறுந்தொகை (330) கூறுகிறது.

“ சோறமைவுற்ற நீருடைக் கலிங்கம்’ என்று மதுரைக் காஞ்சி (721) கூறுகிறது.

விழா நாட்களில் புலைத்தி மிகுதியான ஆடைகளை ஆண்டைகளுக்கு வெளுத்துக் கொடுத்தாள் என்ற செய்தியை நற்றிணை கூறுகிறது. வெளுத்த ஆடைகளுக்கு அகிற்புகை யூட்டப்பட்ட செய்தியை மதுரைக் காஞ்சி கூறுகிறது (554) ‘மென்னூற் கலிங்கம் கமழ்புகை மடுப்ப” என்பது மாங்குடி மருதனாரின் கூற்றாகும்.

உழைக்கும் மக்களான உழவர் களமர் முதலான அடிமைகள் மாற்றுடைக்கு வழியில்லாமல் கோவணத்துடனும் அழுக்கான ஆடையுடனும் தான் இருந்தனர். அழுக்கும் கந்தலுமான ஆடைகள் குறித்துப் பரிசிலரும் பாணருமான புலவர்கள் கூறியுள்ள செய்திகள் கடையர் கடைசியரான உழைக்கும் மக்களுக்கும் பொருந்தும். வயல்களில் தொளிகலக்குதல், நாற்றுநடுதல், களைபறித்தல் முதலான பணிகளைச் செய்த பெண்கள் கடைசியர் எனத் தாழ்வாகக் கருதப்பட்டனர். அப்பெண்கள் தழையையே உடையாக அணிந்து மானத்தை மறைத்துக் கொண்டனர்.

மக்கள் கணசமூகமாக வேட்டையாடியும் நிரை மேய்த்தும் வாழ்ந்த கால கட்டத்தில் நிலவிய வறுமையும் பற்றாக் குறையுமான நிலைமை, உற்பத்திப் பெருக்கமும் செல்வப் பெருக்கமும் ஏற்பட்டிருந்த அடிமைச் சமூகத்திலும் உழைக்கும் மக்கள் வாழ்க்கையில் நீடிக்கவே செய்தது.

‘கொண்டைக் கூழைத்தண்டழைக் கடைசியர்
சிறமாணெய்தல் ஆம்பலொடு கட்கும்
மலங்குமிளிர் செறு”

என்று வயலில்களை பறித்த கடைசியர் தழையுடையே அணிந்திருந்தனர் என்ற தனைப் புறநானூறு கூறுகிறது.

அடிமைகளான ஆண்களும் பெண்களும் தங்களது உழைப்பின் பயனை, ஆண்டைகளிடம் பறிகொடுத்தனர். ஆண்டைகள் தங்களின் சுக போகத்துக்காகவும் ஆடம்பரத்துக்காகவும் அடிமைகளின் உழைப்பை உறிஞ்சினர். அடிமைகள் உழைத்து உற்பத்தி செய்து கொடுத்த ஆடைகளையும் ஆபரணங்களையும்; ஆண்டைகள் அணிந்து தம்மை அலங்கரித்துக் கொண்டு ஆடம்பர மாக வாழ்ந்தனர். உணவும் உடையும் பிறவும் உற்பத்தி செய்த உழைப்பாளிகள் அவற்றை அனுபவிக்க முடியவில்லை. ஆண்டைகளிடம் அவற்றைப் பறிகொடுத்து விட்டு அல்லல் பட்டனர். வறுமையில் வாடினர், வேட்டைச் சமூகமாகவும் மேய்ச்சல் சமூகமாகவும் வாழ்ந்த காலகட்டத்தில் தழையும் தோலும் ஆடையாக அணிந்து காலந்தள்ளியது போலவே, உற்பத்தி பெருகி உபரிநிலை எய்தியிருந்த அடிமைச் சமூகத்திலும் தழையுடையும் அழுக்கான கந்தல் ஆடையும் அணிந்து அல்லல் பட்டனர் என்ற செய்தியைச் சங்க இலக்கியங்கள் நமக்குக் காட்டுகின்றன.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 31, 2009 8:09 pm

சங்ககாலத்தில் குடி



குடி குடியைக் கெடுக்கும்” என்பது பழமொழி. மனிதன் குடிப்பழக்கத்தைக் கைவிடச் செய்திட திருவள்ளுவர் முதல் காந்தியடிகள் வரை சான்றோர் பலரும் முயன்று பாடுபட்டனர். ஆனால் இன்று வரை அம் முயற்சி வெற்றி பெறவில்லை என்பதே உண்மை. மனிதன் குடிப் பழக்கத்தைக் கைக் கொள்ளத் தொடங்கிய காலம் எது என்பது விடைதெரியாத வினாவேயாகும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே மனிதன் அப்பழக்கத்தைக் கைக் கொணடிருத்தல் கூடும். மனிதன் காட்டு மிராண்டி நிலையில் நரமாமிசம் உண்டு வாழ்ந்த காலத்திலேயெ குடிப்பழக்கம் உடையவனாகவும் இருந்தான் என்பதற்குச் சங்க இலக்கியங்கள் சான்றளிக்கின்றன.

தமிழில் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலைகாப்பியத்தில் அதன் ஆசிரியரான மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார். நாகர்கள் என்பவரைப் பற்றிக் கூறியுள்ளார். நாகர் என்போர் கீழைக்கடல் தீவுகளில் ஒன்றான நாகத்தீவில் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தவராவர். ஆடை எதுவும் அணியாத நிலையில் நிர்வாணமாகத் திரிந்த அவர்களை நக்க சாரணர் என்று சாத்தனார் குறிப்பிடுகிறார். அவர்கள் நரமாமிசம் உண்ணும் பழக்கம் உடையோராகவும் இருந்தனர். ‘காட்டுமிராண்டி நிலையின் இடைக் கட்டம் வரையிலும் மனிதன் நரமாமிசம் உண்டு வாழ்ந்தான்” என்று தோழர் எங்கல்ஸ் அவர்கள் கூறுவது இங்கு நம் கவனத்துக்கு உரியதாகிறது.

காட்டுமிராண்டிகளான நாகர்களின் தலைவனைப்பற்றிக் கூறும் சாத்தனார், அவன்

கள்ளடு குழிசியும் கழிமுடை நாற்றமும்
வெள்ளென் புணங்கலும் விரவிய இருக்கையில்
எண்கு தன்பிணவோடு இருந்து போல ‘ இருந்ததாகக் கூறுகிறார். நாகர் கூடிக்குழுமியிருந்த இடத்தில் கள்ளைக் காய்ச்சும் பானைகள் இருந்ததாக சாத்தனார் குறிப்பிடுகிறார். இவரது இக்கூற்று, மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்த காலகட்டத்திலேயே கள்ளைக் காய்ச்சத் தெரிந்திருந்தான் என்ற செய்தியை உணர்த்துகிறது. தீயின் உபயோகத்தை மனிதன் தெரிந்து கொண்ட காலமாகிய காட்டுமிராண்டி நிலையின் இடைக்கட்டத்திலேயே அவன் மண்பாண்டங்கள் செய்யத் தெரிந்து வைத்திருந்தான் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அங்ஙனம் தெரிந்திருந்ததனால் தான் வரகு தினை முதலிய தானியங்களைக் குற்றிச் சமைக்கவும் வேட்டையாடிய விலங்குகளின் ஊனை வேக வைத்து உண்ணவும் அவனால் இயன்றது. இது பற்றி முன்னர் கூறப்பட்டுள்ளது.

அநாகரிக நிலையில் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த காலத்தில் மனிதன் மதுவைக் காய்ச்சி உண்டது பற்றிச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன.

‘அவையா அரிசி அங்களித் துழவை
மலர்வாய்ப் பிழாவில் உலரவாற்றி
பாம்புறை புற்றிற் குரும்பி யேய்க்கும்
பூம்புற நல்லடை அளைஇத் தேம்பட
எல்லையுமிரவும் இருமுறை கழிப்பி
வல்வாய்ச்சாடி வளைச்சற விளைந்த
வெந்நீரரியல் விரலலை நறும்பிழி”

(குற்றாத கொழியலரிசியை அழகினையுடைய களியாகத்துழாவிச் சமைத்த கூழை, அகன்ற வாயையுடைய தட்டுப் பிழாவிலே உலர ஆற்றி, பாம்பு கிடக்கின்ற புற்றிற் கிடக்கும் புற்றாம் பழச்சோற்றையொக்கும் பொலிவுபெற்ற புறத்தினையுடைய நல்ல முளையினை இடித்துச் சேர அதனை அதிலே கலந்து இனிமை பிறக்கும்படி இரண்டு பகலும் இரண்டு இரவும் அரியாமல் வைத்து வலிய வாயினையுடைய சாடியின்கண்ணே இளமையறும் படிமுற்றின, விரலாலே அலைத்து அரிக்கும் தன்மையுடைத்தாகிய வௌ;விய நீhமையையுடைய கள் ) என்று பெரும்பாணாற்றுப்படை (275-81) கள்ளை இல்லிற்சமைத்தது குறித்துக் கூறுகிறது. இல்லிற் சமைத்த இக்கள்ளை, ‘பாப்புக் கடுப்பன்ன தோப்பி”, என்றும்’ தேட்கடுப்பன்ன நாட்படுதேறல்” என்றும் (பாம்புக்கடி போன்றும் தேள்கடி போன்றும் விறுவிறுப்பான போதை) இலக்கியங்கள் கூறுகின்றன.

சங்க காலத்தில் தமிழகத்தில் - ஏன், இந்தியா முழுவதிலும் பரவியிருந்த உலகாயதர்கள் பிறப்பு இறப்பு பற்றிய தங்கள் கொள்கையை மக்களுக்கு எளிமையாக எடுத்துரைப்பதற்குக் கள்ளைக் காய்ச்சும் இத்தொழில் நுட்பத்தையே உதாரணமாகக் காட்டினார்கள்.

சாத்தனார் தம் மணிமேகலை நூலில் உலகாயதம் பற்றியும் உலகாயதர் பற்றியும் தெளிவாகக் கூறியுள்ளார். வஞ்சி மாநகரில் சமயவாதிகள் பலருடன் மணிமேகலையானவள் அவர்தம் சமயக்கருத்துக் களைக் குறித்து வாதம் புரிந்தாள். அப்போது அவள் உலகாயதனாகிய பூதவாதியை அழைத்து அவனது கருத்துக்களைக் கூறுமாறு கேட்டாள். அவனும் தன் கருத்துக்களைக் கூறினான். பூதவாதியின் கூற்று இது:

பூதவாதியைப் புகல் நீ என்ன
தாதகிப்பூவும் கட்டியும் இட்டு
மற்றும் கூட்ட மதுக்களி பிறந்தாங்கு
உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும்
அவ்வுணர்வு அவ்வப்பூதத்து அழிவுகளின்
வௌ;வேறு பிரியும் பறையோசையிற் கெடும்
உயிரோடு கூடிய உணர்வின் பூதமும்
உயிரில்லாத உணர்வு இல் பூதமும்
அவ்வப்பூதவழி யவை யவை பிறக்கும்
மெய்வகை இதுவே, வேறு வேறு விகற்பமும்
உண்மைப் பொருளும் உலகாயதன் உணர்வே,
கண்கூடல்லது கருத்தளவழியும்
இம்மையும் இம்மைப்பயனும் இப்பிறப்பே,
பொய்மை மறுமையுண்டாய் வினைதுய்த்தல்”

என்று பூதவாதி தன் கருத்துக்களை மணிமேகலைக்கு எடுத்துக்கூறியதாகச் சாத்தனார்; கூறுகிறார்.

நிலம், நீர், தீ காற்று என பூதம் நான்கேயாகும். அவற்றின் சேர்க்கையால் உடம்பு தோன்றுகிறது.

ஆத்திப்பூவையும் கருப்புக் கட்டியையும் இட்டு வேறு பொருள்களையும் கலந்து காய்ச்சுவதால் கள் உண்டாகி அக்கள்ளில் களிப்பு (போதை) தோன்றுகிறது. அது போல் பூதங்கள் பொருந்திக்கூடுவதால் உணர்வு பிறக்கும். அப்பூதங்களின் கூட்டம் கலைந்து நீங்கும் போது, பறையோசை தூரத்தே செல்லச் செல்லத் தேய்ந்து கெடுவது போல உணர்வும் வேறு வேறாகப் பிரிந்து தத்தம் முதலோடு ஒன்றி விடும். உண்மைநெறியிதுவேயாகும். என்று உடம்பு, உயிர் ஆகியவற்றின் தோற்றம் அழிவு ஆகியவற்றுக்குக் கள்ளைக் காய்ச்சும் தொழில் நுட்பம் பூதவாதியால் உவமையாகக் கூறப்படுகிறது.

மேலும் அளவை நூலார் கூறுகின்ற காட்சியளவை அனுமான அளவை ஆகம அளவை ஆகியவற்றில் காட்சியளவை ஒன்றைத் தவிர, ஏனை அனுமான ஆகம அளவைகளை பூத வாதிகள் ஏற்பதில்லை. அது போலவே இம்மை மறுமை மோட்சம் நரகம் நல்வினை தீவினை வினைப்பயன் முதலியவற்றையும் பூதவாதிகள் ஏற்பதில்;லை. அவற்றைப் பொய் என்றே அவர்கள் கூறுகின்றனர். ஐம்பூதக்கொள்கையை பூதவாதிகள் ஏற்பதில்லை. ஆகாயத்தை ஒரு பூதமாக அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இப்பிறவியும் இப்பிறவியில் பெறும் இன்பமும் துன்பமும் இப்பிறவியோடே கழிவன. மறுபிறப்பு இல்லை. இப்பிறவியில் செய்யும் வினையின் பயனை மறுபிறவியில் நுகர வேண்டும் என்ற கருத்துக்கள் பொய்யுரை யாகும் ‘ என்பது பூதவாதியின் கூற்று.இங்கு கள்ளடும் தொழில் நுட்பம் உடம்பு உயிர் ஆகியவற்றின் தோற்றத்துக்கு உவமையாக பூதவாதியால் காட்டப்பட்டது.

சங்க காலத்தில் அரிசியைக் கொண்டு கள் காய்ச்சி வடிக்கப்பட்டது போல, பனைமரங்களில் இருந்து கள் இறக்கப்பட்டது. இதனை ‘ பிணர் பெண்ணைப் பிழி” (பனiயின் கள்) என்று பட்டினப்பாலை கூறுகிறது.

மதுவின் ஊறலை நிலத்தில் புதைத்து வைத்துப் பல நாட்கள் கழித்து எடுத்துப் பயன்படுத்தும் பழக்கம் பழையகாலத்திலேயே இருந்துள்ளது.

நிலம் புதை பழுனிய மட்டின் தேறல்
புல் வேய்குரம்பை குடி தொறும் பகர்ந்து
- புறநானூறு : 120

(நிலத்தில் புதைக்கப்பட்டு முற்றிய தேறலை, புல்லாலே வேய்ந்தசிறிய மனையின்கண் குடியுள்ள இடந்தோறும் நுகரக் கொடுத்தனர்) என்னும் தொடர் நிலத்தில் புதைத்து வைத்த முற்றிய தேறலைக் கண சமூகமாக வாழ்ந்த கானவர் தம்முள் பகிர்ந்து உண்டதனைக் கூறுகிறது. எயினர் தேறலை மூங்கிற் குழாய்களில் பெய்து நிலத்தில் புதைத்து வைத்து முற்றிய பின் அதனை எடுத்து உண்டு வேங்கை மரத்தினடியில் குரவைக் கூத்து ஆடினர் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

‘குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள்
வாங்கமை பழுனிய தேறல் மகிழ்ந்து
வேங்கை முன்றிற் குரவையயரும்” – புறநானூறு : 120

(குறிய இறப்பையுடைய சிறிய மனையின் கண் குறவர்கள் வளைந்த மூங்கிற் குழாயின்கண் வார்த்து வைத்து முற்றிய மதுவை நுகர்ந்து வேங்கை மரத்தையுடைய முற்றத்தில் குரவைக் கூத்து ஆடினர்) என்றும்.
‘மன்ற வேங்கை மணநாட் பூத்த
மணியேரரும்பின் பொன்வீ தாஅய்
வியலறை வரிக்கும் முன்றிற் குறவர்
மனைமுதிர் மகளிரோடு குரவையயரும்’ என்றும்
‘பெருமலை
வாங்கமை பழுனிய நறவுண்டு
வேங்கை முன்றிற் குரவையுங்கண்டே” - நற்றிணை ; 276

என்றும் சங்க இலக்கியங்கள், நறவுண்ட குறமாக்கள் தம் குடிசையின் முற்றத்தில் வேங்கை மரத்தின் நிழலில் மகளிரொடு குரவைக் கூத்து ஆடிய செய்தியைக் கூறுகின்றன. மேலும் மூங்கில் குழாயினுள் தேறலைப் பெய்து பல நாள் நிலத்தில் புதைத்து வைத்;திருந்து முற்றிய பின் எடுத்து உண்டு மகிழ்ந்ததையும் கூறுகின்றன. மக்கள் கணசமூகமாக வாழ்ந்த கால கட்டத்தில் மண்டை கோய் கலயம் முதலான மட்கலங்களும் பனையோலை முதலியனவும் கள்ளுண்ணும் கலங்களாகப் பயன்படுத்தப்பட்டன. கள்ளுண்ணும் எளிய மக்கள் இன்றும் பனை யோலையையும் மொந்தை எனப்படும் மட்கலத்தையுமே கள் உண்ணப் பயன்படுத்துகின்றனர்.

சமூக மாற்றம் நிகழ்ந்தபின் அடிமைச் சமூகத்திலும் நிலப்பிரபுத்துவ சமூகத்திலும் செல்வர்களின் உண்கலங்களைப் போலவே, கட்கலயங்களும் வெள்ளியாலும் பொன்னாலும் செய்யப்பட்டு அழகிய வேலைப்பாடுகளுடன் விளங்கின. அக்கலங்களில் உயர்தரமான மது வகைளைப் பெய்து இளமகளிர் எடுத்து ஊட்டிட செல்வர்கள் உண்டு மகிழ்ந்தனர் என்ற செய்தியைச் சங்க நூல்கள் அறிவிக்கின்றன.

உழைக்கும் மக்களை அடிமையாக்கிச் சுரண்டிய செல்வர்கள் உண்;ட உணவைப் போலவே மதுவும் உயர்தரமானதாக இருந்தது. அம்மதுவைச் செல்வர்களோடு சேர்ந்து சுவைத்து மகிழ்ந்த புலவர்கள் அதனை’தண்கமழ் தேறல், மணங்கமழ் தேறல், பூக்கமழ்தேறல்” என்றெல்லாம் பாராட்டிப்புழ்ந்தனர். அப்பாராட்டுக்கு ஏற்ப, போதையுடன் மணமும் ஊட்டுவதற்காக குங்குமப்பூ முதலிய பொருட்களையும் சேர்த்து மது வடிக்கப்பட்டது.

மது காமபானம், வீரபானம் என இருவகைப்படும். கள் வீரபானம் எனப்பட்டது. போருக்குச் செல்லும் வீரர்களுக்கு அரசர்கள் வீரபானமாகிய கள் வழங்கியது குறித்துச் சங்க இலக்கியங்கள் சுவைபடக் கூறுகின்றன. அது குறித்த செய்தி முன்னர்க் கூறப்பட்டுள்ளது.

புணர்ச்சியின் போது நுகரப்படும் மது காமபானம் எனப்பட்டது. ‘பட்டு நீக்கித்துகிலுடுத்தும் மட்டு நீக்கி மது அருந்தியும்” என்று இரவில் புணர்ச்சியின் போது மகளிர் மது அருந்தியது குறித்துப் பட்டினப்பாலை ( 107-8 ) பேசுகிறது. இலக்கியங்களில் மணங்கமழ்தேறல் பூக்கமழ்தேறல் என்று கூறப்படும் மது காமபானம் ஆகும். செல்வர்கள் புணர்ச்சியின் போது காம பானம் உண்டு மகிழ்;ச்சி மிக்கு விளங்கினர். உயர்வகை மதுவான காமபானத்தைப் பொற்கலங்களிற்பெய்து அழகிய இளமகளிர் எடுத்து உண்பிக்க, அரசர்களும் ஆண்டைகளும் உண்டு மகிழ்ந்த செய்தியை இலக்கியங்கள் சுவைபடக் கூறுகின்றன.

பூக்கமழ் தேறல் என்ற தொடரில் உள்ள பூ என்பது பஞ்சவாசத்துள் ஒன்றாகிய குங்குமப்பூ என்று நச்சினார்க்கினியர் இதற்கு விளக்கம் கூறுகிறார். இவ்வாறு தேனுடன் மணம்மிக்க பூக்களும் மா.பலா, வாழை முதலிய சுவை மிகு கனிகளும் சேர்த்து மதுவகைகள் செல்வர் மனைகளில் தயாரிக்கப்பட்டன. அங்ஙனம் மணமும் சுவையும் மிக்கதாக தயாரிக்கப்பட்ட மதுவே புலவர்களால் பூக்கமழ் தேறல் மணங்கமழ் தேறல் என்று புகழப்பட்டது. அதுவே காம பானம் எனப்பட்டது.

‘ஒண்டொடி மகளிர் பொலங்கலத் தேந்நிய
தண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்கினிது ஒழுகு மதி’ – புறநானூறு : 24

( ஒளி பொருந்திய வளையல் அணிந்த இளமகளிர் பொற்கலத்தில் ஏந்திய குளிர்ந்த நறுநாற்றத்தையுடைய மதுவை மடுப்ப அதனை உண்டு மகிழ்வாயாக ) என்று, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ் செழியனை மாங்குடி மருதனார் வாழ்த்துகிறார்.

அரசர்களும் செல்வர்களும் தம் வளமனைகளில் வடிக்கப்பட்ட மணமும் சுவையும் மிக்க மதுவகைகளேயல்லாது. யவனர் நல்ல குப்பிகளில் கொண்டு வந்த மதுவையும் உண்டு களித்தனர். இது குறித்து

யவனர்
நன்கலந் தந்த தண்கமழ் தேறல்
பொன் செய் புனைகலத் தேந்தி நாளும்
ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்கினிது ஒழுகுமதி ‘ புறானூறு : 56

( யவனர் குப்பியிற்கொண்டு வரப்பட்ட குளிர்ந்த நறுநாற்றத்தையுடைய தேறலைப் பொன்னாற் செய்யப்பட்ட புனைகலத்தின் கண் ஏந்தி நாடோறும் ஒள்ளிய வளையணிந்த மகளிர் ஊட்டிட உண்டு மகிழ்ச்சி மிக்கு இனிதாக நடப்பாயாக) என்று, நன்மாறன் என்பானை நக்கீரர் வாழ்த்துகிறார்.

‘இலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்திய
மணங்கமழ் தேறல் மடுப்ப மகிழ்ந்து”
- மதுரைக் காஞ்சி : 779 – 80

(விளங்குகின்ற பூண் அணிந்த பொன்னாற் செய்த வட்டில்களிலே யெடுத்த மணம் நாறுகின்றன காமபானத்தைத் தர அதனை யுண்டு மகிழ்ச்சியெய்தி மகளிர் தோள்புணர்க) என்றும்

‘செங்கண்மகளிரொடு சிறுதுனியளைஇ
அங்கட்டேறலாய்கலத்துகுப்பக்
கெடலருந் திருவ வுண்மோ” – புறநானூறு 366

(கெடாத செல்வத்தையுடையவனே, சிவந்த கண்களையுடைய மகளிருடனே, சிறிதாகிய துனிகலந்து அழகிய கள்ளினது தெளிவினை, ஆராய்ந்த கலத்திற் பெய்து தர உண்பாயாக) என்றும்

பாசிமழை பொலங்கலத்தேந்திய
நாரரி தேறல் மாந்தி மகிழ் சிறந்து – புறநானூறு: 367

(பசிய இழையணிந்த மகளிர் பொன்வள்ளங்களில் எடுத்துக் கொடுத்த நாரால் வடிக்கப்பட்ட கட்டெளிவையுண்டுகளித்திடுக) என்றும்

‘வில்லென விலங்கிய புருவத்து வல்லென
நல்கின் நாவஞ்சு முள்ளெயிற்று மகளிர்
அல்குல் தாங்கா அசைஇ மெல்லெனக்
கலங் கலந் தேறல் பொலங் கலத்தேந்தி
அமிழ்தென மடுப்ப மாந்தி”

(வில் போன்ற வளைந்த புருவத்தையும் வல்லென வொரு சொல் வழங்கின் நா அஞ்சுதற்கேது வாகிய முள்போன்ற பற்களையும் உடைய மகளிர் அல்குலில் அணிந்த மேகலையைத் தாங்கமாட்டாது. தளர்ந்து மென்மையாக, கலங்கலாகிய கள்ளைப் பொன்வள்ளத்தில் ஏந்தி அமிழ்தம் உண்பிப்பாரைப் போல உண்பிக்க உண்டு மகிழ்ந்தனர்) என்றும் ஆண்டைகளான செல்வர்கள் மற்றும் அரசர்களின் காமக் களியாட்டங்கள் குறித்துச் சங்க இலக்கியங்கள் விரிவாகவே பேசுகின்றன.

அடிமைச் சமூகத்தில் ஆண்டைகள் ஆடம்பரம் மிக்க சுகபோகத்தில் மூழ்கிக் கிடந்தனர். தம்மைப் புகழ்ந்து பாடிய புலவர்களுக்கும் பாணர்களுக்கும் உணவும் கள்ளும் உடையும் பிறவும் தந்து மகிழ்ந்தனர். இதனை

‘முதுநீர்ப்பாசியன்ன வுடை களைந்து
திருமலரன்ன புதுமடி கொளீஇ
மகிழ்தரன் மரபின் மட்டேயன்றியும்
அமிழ்தன்ன மரபின் ஊன்றுவை யடிசில்
வெள்ளி வெண்கலத்தூட்டலன்றி
முன்னூர்ப் பொதியிற் சேர்ந்த மென்னடை
இரும்பேரொக்கல் பெரும்புலம்பகன்ற
அகடுநனை வேங்கை வீ கண்டன்ன
பகடுதரு செந்நெல் போரொடு நல்கி”.

(பழையவான நீர்ப்பாசிபோல் சிதர்ந்திருந்த ஆடையை நீக்கி அழகிய பகன்றை மலர் போன்ற புத்தாடை கொடுத்து உடுப்பித்துக் களிப்பினைத் தரும் முறைமையினையுடைய கள்ளோடு அமிழ்;து போற்சுவையுடைய ஊன் துவையலோடு கூடிய சோற்றை வெள்ளியாலாகிய கலத்தே பெய்து உண்பித்ததோடு, ஊர்க்கு முன்னிடமான மன்றத்தில் தங்கியிருந்த தளர்ந்த நடையினையுடைய பெரிய சுற்றத்தார் என் பிரிவால் உண்டாகிய தனிமைப் பெருந்துயரைப் போக்க, தேனால் உள்ளிடம் நனைந்த வேங்கைப் பூவைப் போன்ற செந்நெற்குவியலை நெற் போரோடுங்கொடுத்தான் ) என்று புறநானூறு (390) பேசுகிறது.

ஆனால் உழைக்கும் மக்களை அடிமைப்படுத்தி அவர்களின் உழைப்பைச் சுரண்டி, ஆண்டைகள் அவர்களை வறுமையில் ஆழ்த்தினர். உற்பத்திக் கருவிகளில் ஏற்பட்ட வளர்ச்சியாலும் முன்னேற்றத்தாலும் களமரின் கடினமான உழைப்பாலும் சமூகத்தில் ஏற்பட்ட நெல்லும் கால்நடைகளுமாகிய செல்வத்தின் பெருக்கம் உழைக்கும் மக்களைச் சென்றடையவில்லை. அவர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுத்த ஆண்டைகளால் உறிஞ்சப்பட்டது. வேட்டைச் சமூகமாகவும் மேய்ச்சல் சமூகமாகவும் வாழ்ந்த காலகட்;டத்தில் மக்கள் வாழ்வில் நிலவிய வறுமையும் பற்றாக்குறையும், வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட்டிருந்த அடிமைச் சமூகத்திலும் நீடிக்கவே செய்தது. உழைக்கும் மக்கள் வறுமையில் ஆழ்த்தப்பட்டனர். அடிமைகளான களமரின் அவலவாழ்வையும் ஆண்டைகளின் ஆடம்பரமான சுகபோகம் மிக்க சொகுசு வாழ்வையும் சங்க இலக்கியங்கள் நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றன.

மூவன்

மூவன் என்றொரு தலைவன், அடிமை எஜமானன். அவனது ஊர் மருதவளஞ்சான்ற பகுதியைச் சார்ந்தது. அடிமைகளான தொழுவரும் களமரும் அவனது வயல்களில் விளைந்த நெல்லையறுத்துப் போரடுக்கிக் கடாவிட்டுப் பொலி தூற்றும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். வேலையின் இடையில் அத்தொழுவரும் களமரும் வேலைக்களைப்பை உணராதிருத்தற்பொருட்டுக் கள் உண்டனர். கள் மட்டும் தான். கள்ளுக்குத் தொடு கறியாக ஊன்துண்டங்களோ மீன் துண்டங்களோ இல்லை. கள்ளையும் அவர்கள் மண்கலயங்களில் வாங்கி உண்ணவில்லை. அதற்குரிய வசதியும் வாய்ப்பும் அவர்களுக்கு வாய்க்கவில்லை, எனவே அவர்கள், ஆம்பல் இலைகளில் தான் அதனை வாங்கி உண்டனர்.

“ நெய்தலங்கழனி நெல்லரி தொழுவர்
கூம்புவிடு மென்பிணி அவிழ்ந்த ஆம்பல்
அகலடை அரியல் மாந்தி” –புறநானூறு : 209

(நெய்தலையுடைய அழகிய வயற்கண் நெல்லையறுக்கும் உழவர் முகையவிழ்கின்ற மெல்லிய இதழ்கள் நெகிழ்ந்த ஆம்பலினது அகன்ற இலையதனாலே மதுவையுண்டனர்) என்று அடிமைகளான களமர் ஆம்பல் இலையில் கள்ளுண்ட காட்சியைப் புலவர் சாத்தனார் நமக்குக் காட்டினார்.

அடிமை எஜமனான் ஆன மூவன் தன் வளமனையில் அழகுமிக்க இளம் பெண்கள் பலருடன் காமக்களியாட்டத்தில் அப்போது திளைத்துக் கொண்டிருந்தான் . அந்த நேரத்தில் புலவர் பெருந்தலைச் சாத்தனார் அவனைக்காண அங்கு சென்றார். இளமகளிர் புடைசூழச் சிற்றின்பச் சேற்றில் புதைந்திருந்த மூவன், புலவரது பெருமையையும் புலமைச் சிறப்பையும் மதியாது அவரைப் பெரிதும் அவமதித்து அலட்சியப்படுத்தினான். மூவன் ‘சிற்றிடைமகளிர் தற்புறஞ்சூழச் சிற்றின்பத்தில் மூழ்கிக் கிடந்த காட்சியையும் புலவர் நமக்குக் காட்டுகிறார்.

‘நறும்பலொலி வரும் கதுப்பிற்றே மொழி
தெரியிழை மகளிர் பாணிபார்க்கும்
பெருவரையன்ன மார்பிற்
செருவெஞ்சேய்” – புறநானூறு : 209

(நாள்தோறும் நறிய பலவாகிய தழைத்த மயிரையும் தேன் போலும் சொல்லையும் ஆராய்ந்த ஆபரணத்தையும் உடைய மகளிர் ஒருவரினொருவர் புணர்தற்குக் காலம்பார்க்கும் பெரிய மலை போலும் மார்பையுடையோன்) என்று அவன் தன் வளமனையில் பெண்டிர் பலருடன் சிற்றின்பத்தில் மூழ்கித்திளைத்திருந்த காட்சியையும் நமக்குக் காட்டினார்.

இவ்வாறு அடிமைகளின் உழைப்பைச் சுரண்டிக் கொழுத்த ஆண்டைகள் உல்லாசமான சுகபோகவாழ்க்கையை மேற்கொண்டிருந்ததனை இலக்கியங்கள் கூறுகின்றன. அடிமை எஜமானர்களான செல்வர்கள் பெண்களை அடிமைகளாக்கித் தம் காமக்களியாட்டங்களுக்கு ஈடு கொடுத்து இணங்கிப் போகுமாறு செய்தனர். இதற்கு அவர்கள் அடிமைகளைச் சுரண்டிச் சேர்;த்த செல்வம் பெரிதும்; துணையாயிருந்தது. ஆண்டைகள், தண்கமழ் தேறலாகிய காமபானத்தைப் பொற்கலங்களில் பெய்து தரப்பணித்தனர், ‘ஒண்டொடிமகளிர் பொலங்கத் தேந்திய தண்கமழ்தேறல் மடுப்ப’ உண்டு மகிழ்ந்தனர்.

ஆனால் அடிமைகளான களமர்’ நெல்விளைகழனிப் படுபுள்ளோப்பி ஒழிமடல் விறகிற் கழிமீன் சுட்டு வெங்கட்டொலைச்சினர். (வயல்களில் விளைந்து முற்றிய நெல்லிற்படியும் பறவைகளை ஓட்டும் பணிகளைச் செய்த உழவர்கள் பனங்கருக்காகிய விறகால், உப்பங்கழிகளில் பிடித்த மீனைச் சுட்டடுத்தின்று ஆம்பல் இலையில்கள்ளை உண்டனர்) என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

நன்றி - வெ.பெருமாள்சாமி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 31, 2009 10:33 pm

சங்ககாலத்தில் வீடுகள் Animated_chick சங்ககாலத்தில் வீடுகள் Animated_chick சங்ககாலத்தில் வீடுகள் Animated_chick சங்ககாலத்தில் வீடுகள் Animated_chick



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக