புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாமரர் தேவாரம் - Page 3 Poll_c10பாமரர் தேவாரம் - Page 3 Poll_m10பாமரர் தேவாரம் - Page 3 Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
பாமரர் தேவாரம் - Page 3 Poll_c10பாமரர் தேவாரம் - Page 3 Poll_m10பாமரர் தேவாரம் - Page 3 Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
பாமரர் தேவாரம் - Page 3 Poll_c10பாமரர் தேவாரம் - Page 3 Poll_m10பாமரர் தேவாரம் - Page 3 Poll_c10 
3 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
பாமரர் தேவாரம் - Page 3 Poll_c10பாமரர் தேவாரம் - Page 3 Poll_m10பாமரர் தேவாரம் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
viyasan
பாமரர் தேவாரம் - Page 3 Poll_c10பாமரர் தேவாரம் - Page 3 Poll_m10பாமரர் தேவாரம் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
prajai
பாமரர் தேவாரம் - Page 3 Poll_c10பாமரர் தேவாரம் - Page 3 Poll_m10பாமரர் தேவாரம் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Baarushree
பாமரர் தேவாரம் - Page 3 Poll_c10பாமரர் தேவாரம் - Page 3 Poll_m10பாமரர் தேவாரம் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
manikavi
பாமரர் தேவாரம் - Page 3 Poll_c10பாமரர் தேவாரம் - Page 3 Poll_m10பாமரர் தேவாரம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Rutu
பாமரர் தேவாரம் - Page 3 Poll_c10பாமரர் தேவாரம் - Page 3 Poll_m10பாமரர் தேவாரம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
சிவா
பாமரர் தேவாரம் - Page 3 Poll_c10பாமரர் தேவாரம் - Page 3 Poll_m10பாமரர் தேவாரம் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாமரர் தேவாரம் - Page 3 Poll_c10பாமரர் தேவாரம் - Page 3 Poll_m10பாமரர் தேவாரம் - Page 3 Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
பாமரர் தேவாரம் - Page 3 Poll_c10பாமரர் தேவாரம் - Page 3 Poll_m10பாமரர் தேவாரம் - Page 3 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
பாமரர் தேவாரம் - Page 3 Poll_c10பாமரர் தேவாரம் - Page 3 Poll_m10பாமரர் தேவாரம் - Page 3 Poll_c10 
2 Posts - 6%
Rutu
பாமரர் தேவாரம் - Page 3 Poll_c10பாமரர் தேவாரம் - Page 3 Poll_m10பாமரர் தேவாரம் - Page 3 Poll_c10 
1 Post - 3%
manikavi
பாமரர் தேவாரம் - Page 3 Poll_c10பாமரர் தேவாரம் - Page 3 Poll_m10பாமரர் தேவாரம் - Page 3 Poll_c10 
1 Post - 3%
viyasan
பாமரர் தேவாரம் - Page 3 Poll_c10பாமரர் தேவாரம் - Page 3 Poll_m10பாமரர் தேவாரம் - Page 3 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாமரர் தேவாரம்


   
   

Page 3 of 20 Previous  1, 2, 3, 4 ... 11 ... 20  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Jan 07, 2014 9:34 am

First topic message reminder :

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை
(கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்)

(கோவில்: Chottruth Thurai
பதிகம்: thiru aDangkal)

அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம்
முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே
அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர்
இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1

[அன்னதானச் செய்தி: Aadalvallan

மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை
மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக்
காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான்
ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... 2

[முழுதோன்=சிவன், ’முன்னோன் காண்க முழுதோன் காண்க’, திருவாசகம் 3.30]

கலையும் மழுவும் கழுவும் அழலும் கரம்தாங்கத்
தலையில் ஆறும் கலையும் தாங்கும் சடையானைத்
தொலையாச் செல்வ நாதர் சோற்றுத் துறைகாணில்
தொலையும் பசியும் பிணியும் பிறப்பும் தொடராதே. ... 3

[கழு=சூலம்; கலை=மான், பிறைச் சந்திரன்;
தொலையாச் செல்வநாதர்=கோவில் மூலவர் பெயர்]

ஏழூர் தலத்தில் மூன்றா வதென இதுவாக
வேழம் உரித்தான் சோற்றுத் துறையான் விடையோனும்
ஏழை யூரின் பஞ்சம் தீர்க்க எழுந்தேதான்
தாழாச் சோறார் கலமொன் றினையே அளித்தானே. ... 4

[ஏழூர் தலம் = சப்த ஸ்தான ஸ்தலங்கள் முறையே: திருவையாறு, திருப்பழனம்,
திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருமழபாடி]

புலிக்கால் முனிபெண் விடையார் மணமே புரிந்தாரே
நலிவோர் மணமும் நன்றே குதிர நடத்தாரோ?
கலையான் மறையான் சோற்றுத் துறையின் அருளாளன்
மலையாள் கூறன் மனமா ரவினை மறையாதோ? ... 5

[புலிக்கால் முனிபெண் = வியாக்ரபாதரின் மகள் சுயம்பிரகாசையை
நந்திதேவர் மணமுடித்த ஐதீகம் இந்தக் கோவிலில் ஓர் உற்சவமாகக்
கொண்டாடப் படுகிறது.]

அழலாய் எழுந்தே அயன்மால் காணா வடிவானான்
கழலின் விரலால் அரக்கன் அழுத்தி யருள்செய்தான்
உழலும் நெஞ்சம் அரனை சோற்றுத் துறைகாணில்
கழலும் வினையே காமன் அழித்தான் அருளாலே. ... 6

உடுக்கை யொலிக்கக் கூளிக ளாடச் சுடுகாட்டில்
நெடுவெண் ணுடலில் வெண்ணீ றணிந்தே அழலாடி
விடம்கொள் பாம்பும் கழுவோ டுமையும் இடமாடும்
நடனம் சோற்றுத் துறையில் கண்டால் நலிவேது? ... 7

கூற்றைக் காலால் உதைத்தே சிறுவன் உயிர்காத்தான்
காற்றின் கடுகும் கணையால் புரமூன் றழித்தானே
சோற்றுத் துறையூர்க் கோவில் மேவும் துடிகொண்டான்
ஊற்றாய் ஞானம் பெருகச் செய்வான் உயிர்காத்தே. ... 8

பார்த்தன் போற்றப் பாசு பதமும் அளித்தானைத்
தீர்த்தம் ஆடிக் கீர்த்தி பாடி மலராலே
ஆர்த்தே உள்ளம் உருகத் தொழுதே பதம்வீழ்ந்தால்
தூர்த்தே வினைகள் மாய்ப்பன் சோற்றுத் துறையானே. ... 9

ஓதும் வேதப் பொருளை உணரும் உளமின்றி
தீது மொழிகள் பேசித் திரிவார் சிறுசொல்லர்
ஆதி சோற்றுத் துறையான் மறையான் அருளாலே
ஏதும் பிறசொல் கேளார் நெறியிற் பிறழாரே. ... 10

ஆயுள் மேனி ஆன்ம நலமும் அறவாழ்வும்
தாயுள் ளம்போல் அன்பும் செயலும் சலியாதே
ஆயும் அறியும் மேன்மை உணரும் தகவெல்லாம்
பாயில் விழுமுன் பரமன் அருளப் பணிவோமே. ... 11

--ரமணி, 06-07/01/2014, கலி.23/09/5114

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Apr 24, 2014 7:56 am

வேகாத செங்கலதைப் பச்சை யென்பர்
. வேதியிலே வேகாத பதிகம் பச்சை
ஆகாதோ அம்மையப்பன் ஞானப் பிள்ளை
. அமணரெலாம் தோற்றிடவே தீயில் இட்டே
பாகான பைந்தமிழில் பரமன் போற்றிப்
. பாண்டியனைத் தாயறமே திரும்பச் செய்த
வாகான தேவாரம் வேதம் போற்றும்
. மாதேவன் மேவுதலம் பூவ னூரே. ... 5

குறிப்பு:

சமணர்களுடன் சம்பந்தர் அனல்வாதம் செய்தபோது தாம் முன்பே பாடிய
திருநள்ளாற்றுத் திருப்பதிகத்தை நெருப்பில் இட்டபோது அது எரியாமல்
பச்சென்றிருந்ததால் அப்பதிகம் ’பச்சைப் பதிகம்’ என்றழைக்கப்படுகிறது.

புரமூன்றும் சிரித்தழித்தே மூவர் ஆன்மா
. உருவாகத் தன்சபையிற் கொண்ட தேவன்
அருளன்னை இடப்பக்கம் கொண்டே மேவி
. ஆட்கொள்ளும் தலமாகும் பூவ னூரில்
விரிசடையும் முக்கண்ணும் புரிநூல் மார்பில்
. வெண்ணீறும் புலியதளும் செம்பொற் றாளும்
தரிசனமாய்க் காண்போர்தம் உளத்தில் தங்கி
. அறநெறியில் உய்விக்கத் திரளும் அன்பே. ... 6

*****


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Thu Apr 24, 2014 11:38 am

தேடிப் படித்துப் பதிந்து பகிர்கிறீர்கள் தொடருங்கள் சார்..
ந.க.துறைவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ந.க.துறைவன்

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Apr 25, 2014 6:30 am

கண்படைத்தே வழிபட்டு மகிழச் செய்தே
. காத்தருளும் ஆழிதனைப் பெற்றான் மாயன்
பெண்ணவளைக் கொளும்நம்பி யாரூர் தம்மை
. வெண்ணெய்நல் லூர்த்தலத்தில் கொண்டான் பித்தன்
வெண்ணீறன் வில்லாளி விமலைக் கூறன்
. வினையாளும் வித்தகனைப் பூவ னூரில்
கண்ணாரக் காணுமுளம் களியில் ஆர்ந்தே
. அண்ணலவன் தாள்நாடப் பெருகும் அன்பே. ... 7

வல்லரக்கன் கரம்பற்ற மலையும் ஆட
. வஞ்சியவள் நடுங்கிடவே கயிலை யீசன்
தொல்லைதனைக் கால்விரலால் தலைகள் பத்தும்
. தோயநிலம் அழுத்தியவன் செருக்கைக் கொண்டே
பல்விதமாய் அருள்செய்தே காத்து நின்ற
. பரமனவன் மேவுதலம் பூவ னூரில்
செல்கதியாய் நாடியுள மார வாழ்த்தின்
. எல்லையிலா அன்பினிலே வாழ்வ துண்டே! ... 8

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Apr 26, 2014 8:40 am

(இறுதிப் பகுதி)

அழலோங்கும் தூணாக யீசன் நிற்க
. அடிமுடியை அயன்மாலும் தேடிக் காணாத்
தழலாகும் தண்ணிலவின் கிரணம் போல
. தருக்கினையே உருத்தெரியா தொழித்தே நின்றால்!
கழலிணையே கதியெனவே திண்ணம் கொண்டால்
. கடைக்கண்ணால் இன்னல்கள் தீரச் செய்யும்
மழுவாளி மேவிநிற்கும் பூவ னூரில்
. வழுத்துவோர்க்கு வாழ்வினிலே என்றும் அன்பே. ... 9

தீயதனில் வேதநெறி இறையைக் காணத்
. தீயதென அதுபழிக்கும் நெறிகள் தள்ளி
ஆயிழையாள் இடம்கொண்டே அமரும் தேவன்
. ஆதிபக வனுருவாக அறியும் நெஞ்சில்
மாயயெலாம் விலகிடவே தெரியும் உண்மை
. மாண்பதனை நிலைநிற்கச் செய்தே நம்மைச்
சேயதனைத் தாயவள்போல் காக்கும் ஈசன்
. செம்பொருளாய் மேவுதலம் பூவ னூரே. ... 10

புனிதனெனத் துணைவனென ஆதி நாதன்
. புற்றரவன் பாதியானான் பூத நாதன்
மனிதரிலே தலையானோர் போற்று மீசன்
. மன்நின்றே அறிவொண்ணா இயல்பி னானான்
என்னனாகி மனையாகி எந்தை யாகி
. என்தனமாய் மேவுதலம் பூவ னூரே
என்றெல்லாம் திருநாவுக் கரசர் போற்றும்
. எண்குணன்நம் எண்ணமுறில் வினைகள் போமே. ... 11

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat May 17, 2014 12:00 pm

தில்லை (சிதம்பரம்)
கோவில்: http://temple.dinamalar.com/New.php?id=492

சந்தக் கலிவிருத்தம்: மா(3) கூவிளம்(4) தேமா(3) கூவிளம்(5)
(’தொண்டெ லாமலர் தூவி யேத்தநஞ்’--சம்பந்தர் தேவாரம்: 2.28.1.)

மூவர் பாடிய மூல வேடுகள்
தேவன் ஆடிய தில்லை யூரினில்
மேவு முத்திரை ஏற வந்தருள்
பாவ நாசனின் பாலன் வாழியே! ... 1

ஈழம் வேய்தலில் ஏடு காண்டலில் ... [ஈழம் = பொன்]
சோழ வேந்தரும் சேவை மேற்கொள
பாழி தில்லையில் ஆடும் கூத்தனை
ஆழி தாண்டிட ஆசி வேண்டுவோம். ... 2


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun May 18, 2014 9:27 am

ஐந்து மன்றினில் ஆவி யாறவே
பைந்த மிழ்தனில் நால்வர் பாடவே
வேய்ந்த பொன்னடி வேடன் ஆடவே
பாய்ந்த வின்னருள் பாவம் தீர்க்குமே. ... 3

நாலு திக்கினில் நால்வர் வந்தனர்
ஆலன் பேர்புகழ் பாடி யருளினர்
ஞாலம் நீக்கிய ஞானி யர்நாதன்
கோலம் கண்டிடக் கூத்து மாடுவான். ... 4



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon May 19, 2014 7:34 am

மாசில் சீடனும் வாத வூரரே
நேச நண்பனும் ஏம சுந்தரர்
தாச னாய்த்திரு நாவின் வேந்தரே
பாச மைந்தசம் பந்த ரானரே. ... 5

ஆதி சேடனின் பாக மாமுனி
பாதி மேனிபுல் பாத மாமுனி ... [புல் = புலி]
காதல் மேலுற ஆடல் காணநாம்
ஆதி தில்லையில் காண முக்தியே. ... 6



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue May 20, 2014 6:23 pm

உருவில் ஆடலன் கூத்து நோக்கியும்
அருவில் தில்லை வானம் நோக்கியும்
அருவும் ரூபமும் லிங்கம் நோக்கியும்
மருவு மாசைகள் மாய வாழ்வமே. ... 7

அஞ்செ ழுத்தினில் ஐயன் மந்திரம்
அஞ்செ னும்வகை ஐயன் காரியம்
அஞ்சு சக்தியில் தில்லை நாயகன் .. [ஆதி, பரா, இச்சா, கிரியா, ஞான சக்திகள்]
பஞ்ச பூதமும் ஆள ஞாலமே. ... 8



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu May 22, 2014 6:31 pm

(இறுதிப் பகுதி)

வேத னாடலை வேழ மைந்தனில்
பாத கிண்கிணி யாக மாடவே ... [ஆகம் = உடல்]
ஊதும் கோபத் தூர்வ மாமுனி ... [ஊதும் = பெருத்திடும்]
காத மூர்ந்தே கண்ட தில்லையே. ... 9

[தூர்வாச முனிக்காகத் தில்லைக் கற்பக விநாயகர் தன் தந்தையின் நடனத்தை
ஆடிக் காட்டியதாக வரலாறு.
http://natarajadeekshidhar.blogspot.in/2012/03/blog-post.html

போதன் கூறெனும் பூவன் வாழையும்
மாத வன்புகழ் வாழை மொந்தையும்
பேத மில்சிவன் பேயன் வாழையும்
வேத நாயகர் மேவும் பேரிலே. ... 10

[பிரம்மனின் அம்சமாகப் பூவன் வாழையும், விஷ்ணுவின் அம்சமாக மொந்தை (முகுந்த) வாழையும்,
சிவனின் அம்சமாகப் பேயன் வாழையும் கருதப்படுவதன் பின்னுள்ள கதை இங்கே:
http://natarajadeekshidhar.blogspot.in/2010/09/blog-post_20.html]

பஞ்ச பூதமும் அஞ்சு மன்றமும்
அஞ்சு சுற்றென அஞ்சு கோசமும்
அஞ்செ ழுத்தினன் ஆகும் தில்லையைத்
தஞ்ச மாக்கொள அஞ்சை வெல்லலாம். ... 11

விளக்கம்:
பஞ்ச பூதங்களின் தில்லை ஆகாயத் தலம்; கோவிலின் ஐந்து பிரகாரங்கள்
உயிரின் ஐந்து கோசங்களைக் குறிப்பன (அன்ன, மனோ, பிராண, விஞ்ஞான ஆனந்த கோசங்கள்);
அஞ்சை வெல்லுதல் = ஐந்து புலன்களை அடக்கியாளுதல்.

--ரமணி, 05/05/2014

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri May 30, 2014 10:38 am

திருமழபாடி
(கலித்துறை: விளம் தேமா விளம் தேமா புளிமாங்காய்)
(’நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே(று)’--சம்பந்தர் தேவாரம் - 1.98.1)

கோயில்:
http://temple.dinamalar.com/New.php?id=438
http://www.shivatemples.com/nofct/nct54.php
http://templesoftamilnadu.co.in/tag/temple-for-getting-married/

நந்திகல் யாணம் செய்தவோர் கோவில் நலம்பாடச்
சுந்தரர் பாடல் விரும்பிய ஈசன் துதிபாட
வந்தருள் செய்தே விந்தையோர் கோவில் மழபாடிச்
சுந்தரப் பிள்ளை யார்துணை நிற்க விழைவேனே. ... 1

நரமுக மாவும் அயனுறை லோகத் தரன்லிங்கம் ... [நரமுக மா = புருடாமிருகம்]
உரமுடன் நன்றாய்த் தாபனம் செய்ய உறைந்தானே
மருத்துவன் ஈசன் கொள்ளிடம் பாயும் மழபாடி
உருவினில் வைரத் தூணென அப்பர் பதிகத்தே. ... 2


Sponsored content

PostSponsored content



Page 3 of 20 Previous  1, 2, 3, 4 ... 11 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக