புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருவெம்பாவை - Page 3 Poll_c10திருவெம்பாவை - Page 3 Poll_m10திருவெம்பாவை - Page 3 Poll_c10 
61 Posts - 48%
ayyasamy ram
திருவெம்பாவை - Page 3 Poll_c10திருவெம்பாவை - Page 3 Poll_m10திருவெம்பாவை - Page 3 Poll_c10 
54 Posts - 42%
mohamed nizamudeen
திருவெம்பாவை - Page 3 Poll_c10திருவெம்பாவை - Page 3 Poll_m10திருவெம்பாவை - Page 3 Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
திருவெம்பாவை - Page 3 Poll_c10திருவெம்பாவை - Page 3 Poll_m10திருவெம்பாவை - Page 3 Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
திருவெம்பாவை - Page 3 Poll_c10திருவெம்பாவை - Page 3 Poll_m10திருவெம்பாவை - Page 3 Poll_c10 
1 Post - 1%
Kavithas
திருவெம்பாவை - Page 3 Poll_c10திருவெம்பாவை - Page 3 Poll_m10திருவெம்பாவை - Page 3 Poll_c10 
1 Post - 1%
bala_t
திருவெம்பாவை - Page 3 Poll_c10திருவெம்பாவை - Page 3 Poll_m10திருவெம்பாவை - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
திருவெம்பாவை - Page 3 Poll_c10திருவெம்பாவை - Page 3 Poll_m10திருவெம்பாவை - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவெம்பாவை - Page 3 Poll_c10திருவெம்பாவை - Page 3 Poll_m10திருவெம்பாவை - Page 3 Poll_c10 
285 Posts - 42%
heezulia
திருவெம்பாவை - Page 3 Poll_c10திருவெம்பாவை - Page 3 Poll_m10திருவெம்பாவை - Page 3 Poll_c10 
278 Posts - 41%
Dr.S.Soundarapandian
திருவெம்பாவை - Page 3 Poll_c10திருவெம்பாவை - Page 3 Poll_m10திருவெம்பாவை - Page 3 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
திருவெம்பாவை - Page 3 Poll_c10திருவெம்பாவை - Page 3 Poll_m10திருவெம்பாவை - Page 3 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
திருவெம்பாவை - Page 3 Poll_c10திருவெம்பாவை - Page 3 Poll_m10திருவெம்பாவை - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருவெம்பாவை - Page 3 Poll_c10திருவெம்பாவை - Page 3 Poll_m10திருவெம்பாவை - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
திருவெம்பாவை - Page 3 Poll_c10திருவெம்பாவை - Page 3 Poll_m10திருவெம்பாவை - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
திருவெம்பாவை - Page 3 Poll_c10திருவெம்பாவை - Page 3 Poll_m10திருவெம்பாவை - Page 3 Poll_c10 
5 Posts - 1%
manikavi
திருவெம்பாவை - Page 3 Poll_c10திருவெம்பாவை - Page 3 Poll_m10திருவெம்பாவை - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
திருவெம்பாவை - Page 3 Poll_c10திருவெம்பாவை - Page 3 Poll_m10திருவெம்பாவை - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவெம்பாவை


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Dec 14, 2013 6:24 am

First topic message reminder :

திருவெம்பாவை - Page 3 ETL4zjnZTwCriZPyKfRp+thiruvembaavai

புலமை இரண்டு வகைப்படும். ஒன்று கல்விப் புலமை; மற்றொன்று அருட்புலமை. அருட்புலமை இறைவனது திருவருளை உடன் கொண்டதாகும். அத்தகைய அருட்புலவர் பலர் தொன்றுதொட்டு தமிழகத்திலேயே விளங்கி வந்துள்ளனர். அந்த வரிசையில் திகழ்ந்தவர் "ஆளுடைய அடிகள்'. "திருவாதவூரடிகள்' என்றும் சிறப்பித்துச் சொல்லப் பெறுபவர் மாணிக்கவாசகர்.

÷பெரும்பாலும் உலகியல் இலக்கியமாகவே விளங்கிவந்த தமிழ் இலக்கியத்தை, அருளியலிலக்கியமாக மாற்றியவர் மாணிக்கவாசகர் என்றால் அது ஒரு சிறிதும் மிகையாகாது. அதற்கு முதல் எடுத்துக்காட்டாக அவர் அருளிச் செய்த திருக்கோவையாரைக் கூறலாம். அடுத்து திருவாசகத்திலும் பல பாடல்கள் மகளிர் விளையாட்டுப் பாடல்களாக உள்ளன. அவைகளில் சிவபெருமானையே தலைவனாகக் கொண்டு பக்திப் பாடல்களாக இருப்பதைக் காண்கிறோம்.

÷இது முதலான சில காரணங்களால் திருவாசகம் ஓர் ஒப்பற்ற பக்தி இலக்கியம் என்பதைத் ""திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்'' என்னும் பழமொழி உணர்த்துகின்றது. இம்முறையில் அமைந்த பாடல்களுள் "திருவெம்பாவை'ப் பாடல்கள் முதலிடத்தைப் பெறுகின்றன.

÷ஓர் ஆண்டில் நிகழும் பன்னிரண்டு திங்களில் மார்கழித் திங்கள் சிறப்புடையதாக நம் முன்னோரால் பாராட்டப்பட்டு வருகின்றது. அத்திங்கள் முழுவதும் இறை வழிபாட்டுத் திங்களாகவே முன்னோரால் கொள்ளப்பட்டது.

÷மக்கள் ஆண்டில் ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாள் என்றும், அந்த நாளில் விடியற்காலை நேரம் மார்கழித் திங்கள் என்னும் மரபாகக் கொள்ளப்பட்டு வருகின்றது. அதனால் மற்றை நாட்களிலெல்லாம் எவ்வாறு இருப்பினும், மார்கழித் திங்களில் பெரும்பாலும் எல்லா மக்களுமே விடியலில் எழுவதும், நீராடுவதும், திருக்கோயில் சென்று வழிபடுவதும் ஆகிய ஒழுக்கமுடையவர்களாய் இருப்பர். அவர்களில் மணம் ஆகாத கன்னிப் பெண்டிர் அத்திங்களில் ஒருவரையொருவர் எழுப்பி, ஒன்றாகக் கூடிக்கொண்டு நீர்த்துறை சென்று நீராடித் தமக்கு இறையன்பு மிக்கவரே கணவராக வாய்க்க வேண்டும் என்று இறைவனை நோக்கிப் பாடியும் வணங்கியும் வருவார்கள்.

இந் நிலைமையில் சிவநெறிச் செல்வரது மகளிர் நிலையில் வைத்து மாணிக்கவாசகர் "திருவெம்பாவை'யை அம்மகளிர் கூற்றாக அருளிச் செய்துள்ளார். இப்பகுதியில் இலக்கியச் சுவையான நவரசங்களையும் நாம் காண்பதோடு, சிவபெருமானது அளவிலா பக்திச் சிறப்பையும் காண்கிறோம். தேவர்கள் முப்பத்து மூன்று கோடியினர் என்பது ஒரு வழக்கம். எண்ணிறந்த தேவர்கள் யாவருக்கும் தலைவனாக விளங்குபவன் சிவபெருமானே என்பது சைவ சமய முடிவான கொள்கை. அத்தகைய அவனது பெருமையை திருவெம்பாவையில் மிக விளக்கமாக உணர முடிகின்றது. ÷திருவெம்பாவைப் பாடல்கள் இருபது. அவைகளில் பதினெட்டாவது பாடல் ""அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்'' எனத் தொடங்குவது. திருவெம்பாவையை மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் அருளிச்செய்தார் என்பது புராணம். அதுபற்றி சிவபெருமானை "அண்ணாமலையான்' என்றே குறிப்பிடுகின்றார். அவருடைய திருவடியின் சிறப்பை இதன் இறுதிப் பாடலில் விரிவாக அருளுகின்றார்.

சிவபெருமான் திருவடிகளே உலகத்திற்கு முதலும் முடிவுமாய் உள்ளது என்பதையும்; அவைகளே ஐந்தொழில் ஆற்றுகின்றன என்பதையும் அப்பாடல் கூறும். எனவே, அவைகளிலும் மிக்க பொருள் வேறொன்று இல்லை என்பது விளங்கும். அகநிலையில் இவ்வாறு இருப்பினும், புறநிலையிலும் அவற்றின் சிறப்பை மாணிக்கவாசகர் இப்பாடலில் விளக்குகின்றார்.

அனைத்துத் தேவர்களும் சிவபெருமானிடம் சென்று அவனுடைய திருவடிமேல் வீழ்ந்து வணங்குகின்றார்கள். அவ்வாறு வீழ்ந்து வணங்கும் யாவரும் ஒளிமிகுந்த மணிக்கற்களால் இழைக்கப்பெற்ற முடி புனைந்தவர்களேயாவர். அம் முடிகள் எல்லாம் சிவபெருமான் திருவடியில் படும்பொழுது மணிக்கற்கள் பலவும் ஒளி வீசுகின்றன. அதே சமயத்தில் சிவபெருமான் திருவடிகளும் ஒளியை வீசுகின்றன. இவைகளில் எந்த ஒளி பேரொளி என்பதை இங்கே மாணிக்கவாசகர் குறிப்பிடுகின்றார். ÷அனைத்துத் தேவர்களுடைய முடிகளிலுள்ள மணிகளின் ஒளித்திரட்சி சிவபெருமானின் திருவடிகள் வீசும் ஒளியின் முன் வேறு காணப்படாது அதனுள் அடங்கிவிடுகின்றன. இந்தச் செய்தியை மாணிக்கவாசகர், நீராடச் சென்ற பெண்கள், "விண்மீன் ஒளிகள் கதிரவன் ஒளியால் மறைவதற்கு முன் நீராட வேண்டும்' என்பதைக் குறிக்குமிடத்தில் இடம்பெறச் செய்கிறார்.

(மேற்கண்டவை மகாவித்துவான் சி. அருணைவடிவேல் முதலியார் எழுதிய கட்டுரையின் சுருக்கம்.)

தொடரும்


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jan 03, 2014 10:33 am

அருமையான பாடல்கள், அழகான விளக்கம்...

தொடருங்கள் சாமி



சதாசிவம்
திருவெம்பாவை - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jan 05, 2014 12:28 pm

"ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள்என் னேஎன்னே
ஈதேஎம் தோழி பரிசேலோர் எம்பாவாய்''

என்பது திருவெம்பாவையின் முதற்பாடல். இப்பாடல் இரு பெண்களைப் பற்றிப் பேசுகிறதா? அன்றி ஒரு பெண்ணைப் பற்றிப் பேசுகிறதா? என்னும் ஐயம் உரையாசிரியர்களிடையே நிலவுகிறது.

வரதராஜபிள்ளை இப்பாட்டிற்கு, ""ஒளி பொருந்திய நீண்ட கண்களையுடைய பெண்ணே, முதலும் முடிவுமில்லாத அரிய பெரிய சோதிப்பிழம்பான இறைவனை நாங்கள் பாடுவதைக் கேட்டும் உறங்குகின்றனையோ? உன் காது ஓசை புகாத வலிய காதோ? மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று தெருவின்கண் கேட்ட அளவிலேயே எங்கள் தோழி ஒருத்தி, பொருமி அழுது, உடம்பை மறந்து, மலர்நிறைந்த படுக்கையின்மீதிருந்து புரண்டு விழுந்து, இந்நிலத்தே ஒன்றுக்கும் ஆகாதவள் போல மூர்ச்சித்துக் கிடந்தாள். இஃது அவள் தன்மை. என்ன வியப்பு!'' என்று பொருள் கொண்டுள்ளார். அவர் கருத்துப்படி இப்பாடல் எழுப்பப்படும் பெண்ணொருத்தியும், வாழ்த்தொலி கேட்டு மயங்கிய பெண்ணொருத்தியுமாக இருவர் நிலையைக் கூறுவதாகும்.

அருணைவடிவேல் முதலியார், ""மாதேவன் வாழ்த்திய வாழ்த்தொலியைக் கேட்டவளும் உள்ளே கிடப்பவளும் ஒருத்தியே'' என்கிறார். அஃது இன்னொரு பெண்ணின் நிலையினைக் கூறுவதாயின், அவள் கிடந்தாள் என்று மட்டும் கூறியொழியாது பின்னர் எழுந்து வந்தாள் என்றும் ஒருதலையாகக் கூறவேண்டும். அப்படிக் கூறாமையால் பொருந்தாது என்கிறார். மேலும்,

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

என்பது வரை, ""சென்ற மகளிர் உறங்குவாளை நோக்கிக் கூறியன என்றும், எஞ்சிய பகுதி அவளைப் பற்றி அவர்கள் தங்களுள் நகையாடிக் கூறுவன என்றும் இவையும் அவள் கேட்டு எழுந்துவருவாள் என்னும் கருத்தினால் கூறுவனவேயாம்'' என்றும் தெரிவிக்கிறார். "நம் தோழி உறக்கத்தால் எழாது இருக்கிறாள் அல்லள்; நமது பாடல் வீதியில் எழும்போதே அதனைக் கேட்டு மனம் உருகிப் படுக்கையிலேயே மெய்ம்மறந்து கிடக்கிறாள்; இவளது அன்பின் பெருமை எத்தகையது?' என்பது அப்பகுதியின் திரண்ட பொருள் என்று எழுதுகிறார்.

இப்பாடலில் ஒரு பெண்ணின் நிலையே பேசப்படுகிறது என்பது சரியே. ஆனால், பாட்டில் "வாழ்த்தொலிபோய்' என்னும் தொடர் அமைந்துள்ளது. "வாழ்த்தொலி இங்குப் போயிற்று' என்று வாராது; "அங்குப் போயிற்று' என்றுதான் வரும். எழுப்ப வந்த பெண்கள், உறங்குபவள் வீட்டின் வாசலில் நிற்கிறார்கள். ஆகவே, வாழ்த்திய வாழ்த்தொலி அங்கு வீதியில் போய் ஒலிக்க, இங்கு இவள் அதனைக் கேட்டு மயங்கிக் கிடக்கிறாள் என்று பொருள் கொள்வது பொருந்தாது. பலரும் இந்தப் "போய்' என்பதனை விடுத்து வீதியில் வாழ்த்திக்கொண்டு வந்தது கேட்டு என்றே பொருள் கூறியுள்ளனர். இப்படிப் பொருள்கொள்ளும்போது "போய்' என்பது வறிதே நிற்கிறது. இச்சொல் ஏடு எழுதுபவரால் ஓசையின்பத்திற்காகச் சேர்க்கப்பட்டுவிட்டதோ என்னும் ஐயம் உண்டாகிறது. "வாழ்த்தொலிபோய் வீதிவாய்' என்பது காய் முன் நேராய் வெண்சீர் வெண்டளை ஆகும். "வாழ்த்தொலி வீதிவாய்' என்பது விளமுன் நேராய் இயற்சீர் வெண்டளை ஆகும்.

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

என்று இருந்தாலும் யாப்புக் கெடாது. நாம் வாழ்த்திய வாழ்த்தொலி வீதிமுனையில் கேட்டலும் விம்மி விம்மி அழுதாள் என்று பொருளும் பொருத்தமாக அமைகிறது. இப்பாட்டிலேயே ஆறு இடங்களில் இயற்சீர் வெண்டளை வருதல் காணலாம். இது குறித்து அறிஞர்கள் சிந்திப்பார்களாக. - முனைவர் தெ. ஞானசுந்தரம் / dinamani

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jan 07, 2014 7:21 am

பாடல் எண் : 17
செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.


விளக்கம் :
மணம் பொருந்திய கரிய கூந்தலை உடைய பெண்ணே! சிவந்த கண்களையுடைய திருமாலிடத்தும், நான்முக னிடத்தும், பிற தேவர்களிடத்தும், எங்கும் மற்றவர்களிடத்தும் இல்லாததாகிய, ஒப்பற்ற ஆனந்தம் நம்மிடத்து ஆகும்படி, நம்மைப் பெருமைப் படுத்தி, இவ்வுலகிலே நம் வீடுகள் தோறும் எழுந்தருளி வந்து, செந்தாமரை போன்ற அழகிய திருவடியைக் கொடுத்தருளு கின்ற வீரனை, அழகிய கருணை நோக்குடைய மன்னனை, அடிமை களாகிய நமக்கு அமுதம் போல்வானை, நம் தலைவனைப் புகழ்ந்து பாடி, நன்மைகள் பெருக, தாமரை மலர் நிறைந்த நீரில் குதித்து ஆடுவாயாக.
(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jan 08, 2014 6:53 am

பாடல் எண் : 18
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.


விளக்கம் :
தோழியே! திரு அண்ணாமலை அண்ணலது திருவடித் தாமரையைப் போய் வணங்குகின்ற தேவர்களது முடி யிலுள்ள இரத்தினங்களின் தொகுதி, ஒளி இழந்தாற்போல கண் களுக்கு நிறையும் சூரியன் தனது கிரணங்களுடன் தோன்றின மையால், இருளானது மறைய நட்சத்திரங்கள் குளிர்ச்சி பொருந்திய ஒளி குன்றி ஒழிய அப்போழ்தில், பெண்ணாகியும், ஆணாகியும், அலி யாகியும், விளங்குகின்ற ஒளி பொருந்திய ஆகாயமாகியும் பூமியாகியும் இத்தனைக்கும் வேறுபட்டும் கண்ணால் பருகப்படுகின்ற அமுதமாய் நின்றவனாகிய இறைவனது திருவடியைப் பாடி இப்புது நீரில் வீழ்ந்து ஆடுவாயாக.
(தொடரும்)


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Jan 09, 2014 10:05 pm

பாடல் எண் : 19
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்
றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்.



விளக்கம் :
எங்கள் தலைவனே! உன் கையில், என் குழந்தை அடைக்கலப் பொருளாகும் என்று வழங்கிவரும் அப்பழமொழியைப் புதுப்பிக்கின்றோம் என்று அஞ்சி, உனக்கு ஒரு விண்ணப்பத்தைச் செய்கின்றோம். கேட்டருள்வாயாக. எங்கள் தனங்கள் உன்னடியவர் அல்லாதார் தோள்களைத் தழுவாதிருக்க; எம் கைகள் உனக்கன்றிப் பிறதேவர்க்கு எவ்வகையான தொண்டும் செய்யாதிருக்க; இரவும், பகலும், எம் கண்கள் உன்னையன்றி வேறு எந்தப் பொருளையும் காணாதிருக்க; இந்நிலவுலகில் இம்முறையே எங்கள் தலைவனே! நீ எங்களுக்கு அருளுவாயாயின், சூரியன் எத்திக்கில் உதித்தால் எங்களுக்கு என்ன?
(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jan 11, 2014 6:28 am

திருவெம்பாவை - Page 3 DPNGK0bMSxulKk1WRrrh+sivan

பாடல் எண் : 20
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.


விளக்கம் :
எப்பொருளுக்கும் முதலாயுள்ள உன் திருவடி மலருக்கு வணக்கம்.
எவற்றுக்கும் முடிவாயுள்ள, செந்தளிர் போலும் திருவடிகளுக்கு வணக்கம்;
எல்லாவுயிர்களுக்கும் தோன்றுதற்குக் காரணமாகிய பொன்போன்ற திருவடிகளுக்கு வணக்கம்,
எல்லாவுயிர் களுக்கும் நிலைபெறுதற்குரிய பாதுகாப்பாகிய அழகிய கழலணிந்த திருவடிகளுக்கு வணக்கம். எல்லாவுயிர்களுக்கும் முடிவு எய்துதற்குக் காரணமாகிய திருவடிகள் இரண்டிற்கும் வணக்கம்.
திருமாலும், பிரமனும், காணமுடியாத திருவடித் தாமரை மலருக்கு வணக்கம்.
நாம் உய்யும்படி ஆட்கொண்டருளுகின்ற தாமரை மலர்போலும் திருவடி களுக்கு வணக்கம்.
இங்ஙனம் கூறிப் போற்றி இறைவனை வணங்கி, நாம் மூழ்குவதற்குரிய மார்கழி நீரில் ஆடுவோமாக.

(பாடலுக்கு உண்டான விளக்கம், தேவாரம் இணையதளத்திலிருந்து எடுத்தாளப்பட்டது. நன்றி!)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jan 12, 2014 8:35 am

“திருவடிக்கீழ் சொல்லிய பாட்டு”

பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம் மூழ்கிய புனிதன் மொழிந்த திருவாசகத்தினுள் சிவபுராணத்துக்கு ஒத்தநிலையில் உலகில் உள்ள பல்வேறு மக்களாலும் உணரப்பெற்ற பெருமையுடைய பகுதிகளே திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும்.

திருஞானசம்பந்தப் பெருமான் தோணித்துறை புகுந்தவர்; திருநாவுக்கரசர் அறத்துறை புகுந்தவர்; சுந்தரர் பெருமான் அருட்டுறை புக்கவர்; மணிவாசகப்பெருமான் பெருந்துறை புகுந்தவர்.

தோணித்துறை, அறத்துறை, அருட்டுறை ஆகிய மூன்றையும் மருவியுயர்ந்து நின்றதால் பெருந்துறை எனப்பெற்றது. இங்கே குறிப்பிடப் பெற்றவைகளையெல்லாம் தலங்களாக எண்ணுவது ஒருவகை. அனுபவப்படிகளாகக் கொள்ளுதல் திருவாசகத்தை அனுபவிப்பதற்குத் துணை செய்யும்.

திருவாசகத்தை மணிவாசகப் பெருந்தகை செல்லும் தலங்கள் தோறும் நின்று இறையனுபவம் பெற்றுப்பாடியனவாக அமைத்துக்கொள்ளுவது ஒரு வகை. ஆயினும் இன்று நமக்குக் கிடைக்கும் திருவாசகம் இரண்டாம் முறையாகப் பாடப்பெற்றதாக அமைத்துக்கொள்வது பொருத்தமுடையது.

தில்லைக் கூத்தப்பெருமான் மணிவாசகரைத் திருவாசகத்தைப் பாடுமாறு அருளிச்செய்ய; அவரும் பாட, எழுதிக்கொண்ட வடிவமைப்புடையதே இன்று நாம் பெற்றிருக்கும் திருவாசகம். இதனாலேயே மணிவாசகப் பெருந்தகை,
“திருவடிக்கீழ் சொல்லிய பாட்டு”
என்று சிவபுராணத்திற் கூறியருள்வாராயினர். இதனாலேயே கோவைத்திருவாசகம் எனப்பெற்றது. கோவையாக அமைத்து நிரலே வடிவமைத்துச் சொல்லப் பெற்ற திருவாசகம் என்பது பொருள்.

- பேராசிரியர் டாக்டர். வை. இரத்தினசபாபதி

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Dec 16, 2014 6:34 am

இன்று சிலை மாதம் (மார்கழி) பிறக்கிறது உறவுகளே!

திருவெம்பாவை ஓதி பயன்பெறுங்கள்!

அன்புடன்
சாமி

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Dec 16, 2014 6:46 am

தனுர் மாதத்தில் படிக்க வேண்டிய @ பாடவேண்டி பாடல் ...பயன்படுத்துவோம்...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81953
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 16, 2014 8:56 am

திருவெம்பாவை - Page 3 103459460
-
திருவெம்பாவை - Page 3 GyHBEVCRDCBacO0z6bOA+download(2)

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக