புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_c10""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_m10""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram
""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_c10""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_m10""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_c10 
14 Posts - 45%
T.N.Balasubramanian
""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_c10""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_m10""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_c10 
1 Post - 3%
Guna.D
""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_c10""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_m10""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_c10""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_m10""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_c10""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_m10""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_c10""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_m10""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_c10 
17 Posts - 4%
prajai
""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_c10""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_m10""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_c10""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_m10""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_c10""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_m10""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_c10 
9 Posts - 2%
jairam
""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_c10""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_m10""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_c10""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_m10""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_c10 
4 Posts - 1%
Jenila
""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_c10""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_m10""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_c10""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_m10""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

""கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி தேவையா?''


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Sep 11, 2013 9:24 pm

சுயநலத்துக்காக
கல்வி நிலையங்கள் என்பவை கல்வி, ஒழுக்கம் இரண்டையும் இரு கண்கள் எனப் போற்றுபவை. சில தனியார் கல்வி நிர்வாகங்கள் தங்களின் சுயநலத்துக்காக மத, மொழி அடிப்படையில் சிறுபான்மை என்ற அந்தஸ்தைப் பெறுகின்றன. இந் நிறுவனங்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள், படிக்கும் மாணவர்கள் அனைவரும் சிறுபான்மையினர் அல்ல. ஆசிரியர்களை அடிமைகளாக நடத்துவதற்கு இந்த உரிமை பயன்படுத்தப்படுகிறது. கல்வி வளர்ச்சியும் மாணவர் முன்னேற்றமும் சிறுபான்மை என்ற தகுதியால் மட்டுமே வந்துவிடாது. ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன், நல் வழிகாட்டலால் மூலமே அது சாத்தியம். மொழி, மதம், இனம் ஆகிய வேறுபாடுகள் இல்லாமல் வாழவேண்டும். மாணவர்கள் நெஞ்சில் அந்த எண்ணங்கள் வராமலிருக்க இந்தத் தகுதி தேவையில்லை.
செ. டேவிட் கோவில்பிள்ளை, தென்காசி.

கலாசாரம் ஒன்றே
ஜாதி, மதம், இனம், மொழி என்று வேறுபட்டிருந்தாலும் கலாசாரம், பண்பாடு என்ற வகையில் ஒன்றுபட்டே வாழ்கிறோம். "வேற்றுமையில் ஒற்றுமை' என்பதே சுதந்திர இந்தியாவின் தார்மிக முழக்கம். ஆனால் அரசியல்வாதிகள், "ஒற்றுமையில் வேற்றுமை' காண்பதே அரசியல் ஆதாயம் என்று சிந்தித்துச் செயல்படுகின்றனர். ஓட்டு வங்கிக்காகவே "சிறுபான்மையினர்' என்ற சொல்லாக்கத்தை உருவாக்கியிருக்கின்றனர். கல்விச் சலுகை, கட்டணச் சலுகை, கல்வி உதவித்தொகை சிறுபான்மையினருக்கு வழங்கப்படுகிறது. சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள்தான் இந்த நிறுவனங்களை நடத்துகின்றனர். பெரும்பாலும் "கொள்ளைதான்' நடக்கிறது. அனைவருக்குமான கட்டாயக் கல்வி மூலம் அரசு ஒதுக்கியுள்ள 25% ஒதுக்கீடு சட்டம் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தாது! கல்வி நிறுவனங்களில் கூடாது இந்தப் பிரிவினைத் தகுதி!
முருகு மகிழ்நன், உடுமலைப்பேட்டை.

தன்னாட்சி பெற்றவை
சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் "தன்னாட்சி பெற்ற' நிறுவனங்களாகவே செயல்பட்டுவருகின்றன. இந் நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் ஊதியம் உள்ளிட்ட செலவுகளையும் மாணவர்களுக்கான செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்கிறது. ஆனால் பணி நியமனம் செய்வது, இட மாற்றம் செய்வது, பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது போன்ற அதிகாரம் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதால் எதேச்சாதிகாரப் போக்கு காணப்படுகிறது. பிற மதங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு அதிக எண்ணிக்கையில் பணி வழங்கப்படுவதில்லை. பதவி உயர்விலும் பாரபட்சம் காட்டப்படுகிறது. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலும் பிற மதத்தினருக்கு அதிக இடங்கள் தரப்படுவதில்லை. தாளாளர் அல்லது செயலாளர் நியமனங்கள் முறையாக நடப்பதில்லை. அரசின் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு அரசின் அதிகார வரம்புக்குள் வராமல் தன்னிச்சையாகச் செயல்படும் சிறுபான்மை என்ற தகுதி தேவையில்லை. அரசு மறுபரிசீலனை செய்வது நல்லது.
மு.க. இப்ராஹிம், வேம்பார்.

ஒரு குடையின் கீழ்
சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி அனைத்துக் கல்வி நிறுவனங்களுமே ஒரு குடைக்கீழ் (அரசு கட்டுப்பாட்டுக்குள்) வரவேண்டும். முதலில் மாநகராட்சி, நகராட்சி, நலப்பள்ளிகள் ஆகியவற்றை அரசுப்பள்ளிகளாக்க வேண்டும்; அடுத்து அரசு உதவி பெறும் - ஜாதி அடிப்படையில் இயங்கும் - தனியார் பள்ளிகளை அரசுப்பள்ளிகளாக்க வேண்டும். சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் அவர்களுடைய மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் எவ்வளவு குறைவாக மதிப்பெண் பெற்றாலும் அதே பள்ளியிலேயே தக்கவைத்துக் கொள்கின்றனர். மற்ற மதத்தவரை மாற்றுச் சான்றிதழ் கொடுத்து கட்டாயமாக வெளியேற்றுகின்றனர். வேறு பள்ளிகளில் படித்தவர்களைச் சேர்த்துக்கொள்ளும்போதும், 60 விழுக்காட்டுக்கு மேல் மதிப்பெண் பெறும் படித்த மாணவர்களையே சேர்த்துக்கொண்டு, தங்கள் பள்ளிதான் சிறந்த பள்ளி என்கின்றனர். கல்வி நிறுவனங்களுக்கு இனியும் சிறுபான்மை என்ற தகுதி தேவையில்லை.
பூவை. பி. தயாபரன், புள்ளம்பாடி.

சமத்துவம் எது?
கல்வி நிறுவனங்களுக்குச் சிறுபான்மை என்ற தகுதி அளிக்கப்படுவதால், பொதுவான விதிகளுக்குக் கட்டுப்படாமல் தவறான சலுகைகளைப் பெற்றுப் பயனடைகின்றன. இது தவறு. அனைத்துக் கல்வி நிறுவனங்களும் பொதுவான கல்வித்துறை விதிகளைப் பின்பற்ற வேண்டும், இதுவே சமத்துவமாகும். சிறுபான்மை என்ற பாகுபாடு கூடாது.
ச.மு. விமலானந்தன், திருப்பத்தூர்.

அப்போதைய பொறுப்பு
மத, இனச் சிறுபான்மையினரைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருந்த அந்நாள்களில் சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்கள் சட்ட பாதுகாப்பு வரையறை செய்யப்பட்டு, கட்டடப் பராமரிப்பு, ஊதியம் மற்றும் சில சலுகைகளுடன் நிதியாதாரங்களும் வழங்கப்பட்டன. அதே நிலை இன்றும் தொடர்கிறது. இதற்குக் காலவரையறை செய்து நீக்கிவிடலாம். கல்வி தனியார்மயமானதால் ஏற்பட்ட முன்னேற்றத்தை, செழிப்பை, வெற்றியைக் கண்கூடாகப் பார்த்த பின்னரும் சிறுபான்மை எனப்பிரிக்கும் தகுதி தேவையற்றதே.
மு.அ.ஆ. செல்வராசு, வல்லம்.

மிஷினரிகளின் தொண்டு
ஒரு குறிப்பிட்ட ஜாதீய வட்டத்துக்குள் உள்ளவர்களுக்கு மட்டுமே கல்வி உரிமையானதாக இருந்த நிலையை மாற்றி,கடைநிலையில் உள்ளவர்களுக்கும் கல்வி கிடைக்கச் செய்தவர்கள் கிறிஸ்தவ மிஷினரிகள். அந்த அடிப்படையிலேயே கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை என்ற தகுதி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் கத்தோலிக்க திருச்சபை, தென்னிந்திய திருச்சபை போன்ற முறையான அமைப்பு நடத்தும் பள்ளிகளுக்கு மட்டுமே இந்தத் தகுதி வழங்கப்பட்டுள்ளது. தனி நபராக கிறிஸ்தவரோ, முஸ்லிம்களோ நடத்தும் பள்ளிகளுக்கு இந்த அந்தஸ்து வழங்கப்படுவதில்லை. சிறுபான்மைப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்ய மட்டுமே சலுகை வழங்கப்படுகிறதே தவிர மற்ற விசேஷ சலுகைகள் எதுவும் வழங்கப்படுவதில்லை. பிற தனியார் பள்ளிகளுக்கு உள்ள சலுகைகள்தான் சிறுபான்மைச் சமூக பள்ளிகளுக்கும் வழங்கப்படுகிறது.
ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

நிச்சயம் தேவை
கல்வி நிறுவனங்கள் அனைத்தும் வணிகமயமாகிவிட்டன. அரசியல்வாதிகள், பெருந்தொழிலதிபர்கள் தங்களுடைய கருப்புப் பணத்தை வெள்ளையாக்க, கல்விச் சேவை என்ற போர்வையில் கல்வி நிறுவனங்களைத் துவக்கி மக்கள் பணத்தைச் சுரண்டுகின்றனர். இந்தியாவில்தான் இந்தக் கல்வி வியாபாரம் அமோகமாக நடக்கின்றது. ஏழை, எளிய மக்களுக்கு உயர் கல்வி இன்னமும் எட்டாக்கனிதான், காரணம் உயர்ந்துவிட்ட கல்விக் கட்டணம். சிறுபான்மையினர், மலைவாழ் மக்கள், பழங்குடிகளுக்குச் சலுகைகள் அளிக்கப்படவில்லையெனில் உயர் ஜாதியினர்தான் கல்வியில் ஆதிக்கம் செலுத்துவர். இதன் எதிரொலி அனைத்து தளங்களிலும் இருக்கும். மொழி, மத, இனச் சிறுபான்மையினர் கல்வி பெற இந்தத் தகுதி அவசியமானது.
பி.ஜே. ஜீவன், கும்பகோணம்.

அணுகினால் தரலாம்
சிறுபான்மைத் தகுதி தேவை என்று அணுகும் கல்வி நிலையங்களுக்குக் கொடுக்கலாம். அணுகிய ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்துக்குச் சொந்தமான கல்வி நிலையங்களுக்கும், கிறிஸ்தவ, முஸ்லிம், சீக்கிய கல்வி நிறுவனங்களுக்கும் சிறுபான்மை என்ற தகுதி தேவைப்படும். இதனால் மாணவ, மாணவியருக்குக் கல்விக் கட்டணம் குறையும். சொத்துவரி விலக்கும் உண்டு.
எஸ். நாகராஜன், குரோம்பேட்டை.

தரமான கல்வி
சிறுபான்மைக் கல்வி நிலையங்களில் தரமான கல்வியுடன் ஒழுக்கத்தையும் வலியுறுத்துகின்றனர். மாணவ, மாணவிகளிடம் ஒழுக்கம் இல்லையென்றால் உடனே பெற்றோரை அழைத்து எடுத்துக்கூறி திருத்துகின்றனர். திருந்தாதவர்களைப் பள்ளியைவிட்டே அனுப்பவும் தயங்குவதில்லை. படிப்பில் மதிப்பெண் குறைந்தால் கூடுதல் நேரம் பள்ளியில் இருந்து படிக்கச் சொல்லி ஊக்குவிக்கின்றனர். எனவே இந்தத் தகுதி அவசியம்.
எஸ். ஃபரிதா பானு, காயல்பட்டினம்.

இனி தேவையில்லை
நாடு சுதந்திரம் அடைந்தபோது சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தோர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், நலிவுற்றோர் என்று எல்லா பிரிவுகளிலும் பெண்கள் கல்வியில் பின் தங்கியிருந்தனர். அவர்களின் முன்னேற்றத்துக்காக கல்விக்கூடங்கள் நிறையத் தேவைப்பட்டன. எனவே சிறுபான்மையினர் கல்விக்கூடங்களை நிறுவினர். அவற்றுக்கு அரசின் உதவியும் வழங்கப்பட்டன. இப்போது தனியார் துறையிலும் அரசு ஆதரவிலும் கல்விக்கூடங்களின் எண்ணிக்கைகள் பெருகிவிட்டன. இப்போது தரமான கல்வி தரும் தனியார் பள்ளிகளை மக்கள் நாடத் தொடங்கிவிட்டார்கள். பல சிறுபான்மைக் கல்வி நிலையங்கள் பணம் காய்க்கும் மரங்களாகிவிட்டன. இனியும் தனிச்சட்டமும் தனி அந்தஸ்தும் தேவையில்லை.
ஞானமகன், ஆரப்பள்ளம்.

பேதம் ஏன்?
கற்பிக்கப்படும் கல்வி அனைவருக்கும் பொதுவானது. இதில் கல்விக்கூடங்களில் சிறுபான்மை - பெரும்பான்மை என்ற பேதங்கள். சிறுபான்மை கல்விக்கூடம் என அழைக்கப்படும்போது,சமூகத்திலிருந்து ஒதுக்கிவைத்துவிட்ட உணர்வினைத் தருகிறது. சமூகக் கட்டமைப்பில் ஒவ்வொரு சிறுபான்மை இனங்களும் தனித்தனியாகப் பிரிந்து, இயங்க ஆரம்பிக்கும்போது ஒரே நாடு என்ற தனித்துவம் பலவீனப்பட்டு போகும். அனைத்து சமுதாய மக்களும் சமத்துவமான கல்வி பெற அரசும் கல்வியாளர்களும் முயல வேண்டும்.
எம்.எஸ். இப்ராகிம், சென்னை.
நன்றி-dinamani

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக