புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலாசாரங்களை, அடையாளங்களை காப்பாற்ற இயலுமா? Poll_c10கலாசாரங்களை, அடையாளங்களை காப்பாற்ற இயலுமா? Poll_m10கலாசாரங்களை, அடையாளங்களை காப்பாற்ற இயலுமா? Poll_c10 
20 Posts - 65%
heezulia
கலாசாரங்களை, அடையாளங்களை காப்பாற்ற இயலுமா? Poll_c10கலாசாரங்களை, அடையாளங்களை காப்பாற்ற இயலுமா? Poll_m10கலாசாரங்களை, அடையாளங்களை காப்பாற்ற இயலுமா? Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலாசாரங்களை, அடையாளங்களை காப்பாற்ற இயலுமா? Poll_c10கலாசாரங்களை, அடையாளங்களை காப்பாற்ற இயலுமா? Poll_m10கலாசாரங்களை, அடையாளங்களை காப்பாற்ற இயலுமா? Poll_c10 
62 Posts - 63%
heezulia
கலாசாரங்களை, அடையாளங்களை காப்பாற்ற இயலுமா? Poll_c10கலாசாரங்களை, அடையாளங்களை காப்பாற்ற இயலுமா? Poll_m10கலாசாரங்களை, அடையாளங்களை காப்பாற்ற இயலுமா? Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
கலாசாரங்களை, அடையாளங்களை காப்பாற்ற இயலுமா? Poll_c10கலாசாரங்களை, அடையாளங்களை காப்பாற்ற இயலுமா? Poll_m10கலாசாரங்களை, அடையாளங்களை காப்பாற்ற இயலுமா? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கலாசாரங்களை, அடையாளங்களை காப்பாற்ற இயலுமா? Poll_c10கலாசாரங்களை, அடையாளங்களை காப்பாற்ற இயலுமா? Poll_m10கலாசாரங்களை, அடையாளங்களை காப்பாற்ற இயலுமா? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலாசாரங்களை, அடையாளங்களை காப்பாற்ற இயலுமா?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Apr 02, 2013 7:41 pm

http://3.bp.blogspot.com/-q7ekGQKyLRs/UVp8RurztjI/AAAAAAAAHz8/3AbR5YPrOSg/s320/pic-1.jpg
ஒரு பக்கம் மாண்டு போன நாகரீகத்தை, இனங்களின் அடையாளத்தை தேடிக் கொண்டிருக்க, அது அழிந்த கதைகளை பக்க பக்கமாய் எழுதி கொண்டிருக்கிறோம். மறுபுறம் தங்கள் கலாசாரங்களை, தம் மதங்களை தம் மக்களின் அடையாளங்களை அழிந்து போகாமல் இருக்க காக்க முயன்று கொண்டிருக்கிறார்கள்."இத்தகைய முயற்சிகள் பலன் அளிக்குமா?" மாண்டு போன கலாசாரங்கள் "உலகில் நிலையானது என்று எதுவுமில்லை" என்ற தத்துவத்தையே போதிக்கிறது.
-
இயற்கைக்கு முன்னால் எதுவும் தன்னை காப்பாற்றி கொள்ள இயலாது என்பதே உண்மை. ஆனாலும் மனிதர்கள் தம் கலாசாரத்தை, அடையாளத்தை, மொழியை, மதத்தை பேண போராடுகிறார்கள். அந்த போராட்டம் பலனளிக்குமா? நேர்மையான ஆய்வும், அதனால்சரியான பாடமும் கற்று கொண்டால் நம் அடையாளத்தை காக்கலாம் - அதுவும் ஓரளவுக்கேனும் தான். தம்மைதமிழர்கள் என்பதை மறுத்து திராவிடர்கள் என்று சொல்லி கொள்பவர்களுக்கு"நேர்மையான ஆய்வும், அதனால் சரியான பாடமும் கற்று" கொள்ளும் மனநிலை உள்ளதா?
-
தமிழ் கலாச்சாரத்தை காக்க வேண்டும் என்பதிலாவது ஒற்றுமையாக இருக்கிறதா தமிழ்ச்சமுகம். எப்படி இருக்கும். தம்மை எப்படி அழைப்பது (தமிழனா, திராவிடனா) என்பதிலேயே அவனிடம் ஒற்றுமை இல்லையே. ஒற்றுமை தான் இல்லை. இந்த ஆய்வை வெளிக்கொண்ர் வதிலாவது ஒற்றுமையோ, கருத்துகளில் - உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்கிற அவாவது உள்ளதா? எதுவும் இல்லை. வழக்கம் போல தமிழர்கள் தம் அடையாளத்தை பேணுவதில் இரண்டாக பிளவுபட்டிருக்கிறார்கள்.
http://1.bp.blogspot.com/-f0TKBa3Kc2c/UVp8YMJ4I3I/AAAAAAAAH0E/3-zdVGPBdGM/s320/b4403408c6.jpg
ஒரு பிரிவுக்கு மதம் சார்ந்த விஷயங்களே அடையாளமாக, கலாசாரமாக தெரிகிறது. பிற அடையாளங்கள் அழிவதில், மொழி சிதைவதில் யாதொரு அக்கறையும் இல்லை. மற்றொருபிரிவு இதற்கு முற்றிலும் மாறுபட்டு... மதத்தை தவிர பிற அடையாளங்களை மாத்திரமே தமிழர் அடையாளமாக முன் வைக்கிறது.இந்த நூற்றாண்டில் மதம், கலாச்சாரம், பண்பாடு என அனைத்தும் செல்லாக்காசாக மாறி வருகிற நிலை. ஆனாலும்,யாருக்கு எது தேவையோ அதை மட்டுமே முன்னிறுத்தி"காக்கப்பட வேண்டும்" என்கிற கருத்தை முன் வைக்கிறார்கள்.
-
தமிழ் கலாசாரம் அழிவது, அதை ஆக்ரமித்த பல்வேறு மதம் குறித்த ஒரு கட்டுரையை வாசித்தேன். ஓரளவுக்கு நேர்மையாக சொன்னது. எஸ்.ராமகிருஷணன் எழுதியதில் ஒரு பத்தி."இந்த நூற்றாண்டில் தவறுகள் இல்லை. எல்லாமே விவாதத்திற்குட்பட்டு, கேள்விக்குட்படுத்தப்பட்டு, மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படக் கூடிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கு வரலாறு என்பது உண்மை பேசுபவர்களுக்கான ஒரு விஷயம் மட்டும் கிடையாது. உண்மையைச் சொல்வதற்கான _ உண்மையை அறிவதற்கான ஒரு தேடும் வழி. இந்த உண்மையைத் தேடுகிற எல்லோருமே வரலாற்றைத் தேடுகிறவர்கள்தான். ஆனால்,என்ன உண்மையென்று அவர்கள் சொல்லும்போதுதான் அவர்கள்யார் பக்கம் இருக்கிறார்கள் என்று தெரியும்" என்கிறார்.
-
மிக சரியாக சொல்லி இருக்கிறார். உண்மைக்கு மாறான தகவல்களை ஒருவர் வரலாறாக மாற்ற முனையும்போது தான் தெரிகிறது "வரலாறுகளில் பாதி பொய்களே" என்று. வரலாற்றை பக்க பக்கமாக உண்மை இல்லாமலே எழுத முனைகிறார்கள். வரலாறு பற்றி பேசுபவர்களின் நிகழ்காலமே - அவர்கள் நம்பகத்தன்மை கொண்டவர்களாஇல்லையா என்று பார்த்து, அவர்கள் எழுதுவதை படிப்பதா, வேண்டாமா என்கிறயோசனையை தோற்றுவிக்கிறது.
http://4.bp.blogspot.com/-SWtf3AIum3M/UVp8ekUFWvI/AAAAAAAAH0M/nbx1jaRZUxM/s320/indiaharappagateway.jpg
சில மாதங்களுக்கு முன்னால் தமிழ் பெயர் வைப்பதிலும் தமிழ் கலாசாரத்தின் உயிருள்ளது என்றொருவர் தம் கட்டுரையை துவக்கி - தமிழர்களின் பெயர்கள், தலைமுறைக்குள்ளேயே உருமாறி தமிழ் பெயர்கள் சிதைவதை இப்படி சொன்னார்.
-
அபிஷேக், த/பெ மாறன்...
தனுஜா, த/பெ அழகிரி...
ஸ்ரீ சைதன்யா, த/பெ விஜயன்...
ராகேஷ், த/பெ அறிவழகன்... என்பதாக தூய தமிழ் பெயர்களில் இருந்து வடமொழிக்கு தமிழர்களின் பெயர்கள் மாறுகிறது என்று ஆதங்கப்பட்டார். நல்ல விஷயமான அதற்கு, அந்த பதிவுக்கு நான் மறுமொழியிட்டேன்.
-
ஸ்டாலின், த/பெ கருணாநிதி...
டேவிட், த/பெ சண்முகம்,
மார்க்ஸ், த/பெ போஸ்,
ஏஞ்சல், த/பெ சரவணன் என்றெல்லாமும் கூட பெயர்கள் தமிழுக்கு சம்பந்தமில்லாத மொழிகளில்உருமாறுகிறது. அதனாலும் தமிழ் பெயர்கள், தமிழ் கலாசாரம் அழியப்படும். இதையும் தங்கள் கட்டுரையில் விரும்பினால்இணைக்கலாம் என்று எழுதினேன். அவர் மறுமொழியையும் இணைக்கவில்லை. எம் குறிப்பையும் கட்டுரையில்சேர்க்கவில்லை. வட மொழி சொற்களுக்கு ஒரு நியாயம், பிற மொழி சொற்களுக்கு ஒரு நியாயம்.
ஆக, நாம் எல்லாவற்றிலும் இரட்டை வேடம் போட்டு கொண்டு கலாசாரத்தை காக்க புறப்படுகிறோம். அது யாதொரு பலனையும் தராது. நாம் என்றோ தமிழர்களின் அடையாளம் அழிய காரணமாக இருந்த பார்ப்பனியத்தை இன்றும் சாடிக் கொண்டிருக்கிறோம். தவறில்லை. ஆனால் இன்று தமிழர்களின் அடையாளத்தை, தமிழர்களின் பெருமைகளை இருட்டடிப்பு செய்யும் பல் வேறு விஷயங்களை கண்டும் காணாமல் இருக்கிறோம்.
http://4.bp.blogspot.com/--xqmc4MYd7k/UVp8hKoilwI/AAAAAAAAH0U/OziPuKMJVa8/s320/aryan-bow_1.jpg
ஒரு தமிழ் பண்பாட்டு ஆர்வலர் வேதனையுடன் சொன்னது. "நாம் புறநானூறு வீரத்தை பற்றி பெருமையாக பேசி கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்களுக்கு சேகுவாராவை தவிர வேறு எதுவும் தெரியாது" என்றார். வந்தேறிகளின் மதமோ, கலாசாரம் மட்டுமே ஒரு நாகரீகத்தின் வீழ்ச்சிக்கு காரணம் என்பதை மாற்ற சொல்வதாக இருந்தது அவரது கருத்து. தமிழர்களின் பண்பாட்டை சிதறடிக்க நிறைய விஷயங்கள் வந்தாயிற்று. நாம் அதை ஆராய முனைவதில்லை. எல்லா நாகரீகமும் அழியும் போதும் இது தான் நடந்தது.
தமிழர்களின் உலகம் கலாசாரம் நாகரீகம் என்பது வேறு. அவன் எந்த ஒரு கருத்தை வைப்பதாக இருந்தாலும் உலக பொது மறையாம் திருக்குறளில் இருந்தே மேற் கொள் காட்டுவான்.



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Apr 02, 2013 7:45 pm

கம்யூனிஸ்ட்கள்"மூலதனத்தில்" இருந்து மேற்கோள் காட்டுவார்கள். எந்த மதத்தவரும் தங்கள் வேதப்புத்தகத்தை தாண்டி, வேறு ஒரு கருத்தை முன் வைக்க நினைக்கவும் மாட்டார்கள். திராவிடர்களுக்கு பெரியார் கருத்துகளே வேத வாக்கு. இன்றைக்காவது திருக்குறளை பற்றி பேச சிலராவது இருக்கிறார்கள்.
வந்தேறிகளின் மதங்களும் மற்றும் சோஷலிச கொள்கைகளும் தவிர்க்கப்படமுடியாத சக்தியாகும்போது - தமிழர்களின் அடையாளம் மட்டுமல்ல, இந்தியாவில் எந்த ஒரு இனத்தின் அடையாளமும் கேள்விக்குறியாகும். ஒன்றுமற்றொன்றை அழிப்பதற்கே பிறக்கிறது - இறந்த நாகரீகமும் இருக்கிற நாகரீகமும் அதையே எடுத்துரைக்கிறது. அரபுலகம் போல இரும்பு திரைசட்டங்களை இயற்றினால் - கலாசாரங்கள், அடையாளங்கள் பிழைக்க வாய்ப்புள்ளது. ஆனால் சோஷலிச நாடுகளிலேயே அத்தகைய சட்டங்கள் இயலாத விஷயங்களாக ஆகிவிட்டபோது - ஜனநாயகம் பேணும் நாடுகளில் அது சாத்தியமில்லையே.
http://4.bp.blogspot.com/-SPF9fTOs7-Y/UVp8jkR6BTI/AAAAAAAAH0c/VvhtdOvJo6c/s320/ancientarakim02.jpg
புதியன புகுதலும், பழையன கழிதலும் என்பது நாகரீகங்களுக்கும் பொருந்தக்கூடியவையே. எந்த ஒரு புது நாகரீகமும் தமக்கு முன்னால் இருந்த நாகரீகத்தை"காட்டுமிராண்டிகளின் நாகரீகம்" என்று சொல்ல தவறியதே இல்லை.
-
நன்றி/http://oosssai.blogspot.com/2013/04/blog-post_2.html



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக