புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கத்தோலிக்கர்களின் மரியாள் வழிபாடு - ஒரு ஆய்வு
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே
இந்த திரியின் மூலம் உங்களோடு சத்தியங்களை பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நமது நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த ஆய்வை மேற்கொள்கிறேன்.
தேவன் தமது சித்தத்தை பரிசுத்த வேதாகமத்தில் வெளிப்படுத்தியிருக்கின்றார். அதனை ஒவ்வொருவரும் அறிந்து, அதன்படி நடந்து, நாம் தேவனுக்குப் பிரியமாக வாழ வேண்டும் என்பது தேவனுடைய விருப்பம்.
தேவன் பரிசுத்த வேதாகமத்தில் வைத்துள்ள சத்தியங்களை அவர் நமக்கு தந்தபடியே உணரவும், அறியவும், கடைபிடிக்கவும் வேண்டும்.
வேத வசனங்களை தவறாக புரிந்து கொள்ளப்படுவதும், தவறாக வியாக்கியானம் பண்ணுவதும் நம்மை தவறான வழிபாட்டிற்கு கொண்டுபோய் விட்டுவிடக் கூடிய பேராபத்து உள்ளது.
மெய்யான சத்தியத்தை அறியாவிடின்... தேவ நோக்கமும் தேவனுடைய மீட்பின் திட்டமும் நம்மில் நிறைவேறாமற் போகக் கூடும்.
இந்தத்திரியில் எழுதப்படும் சத்தியங்களை கவனமாக வாசிப்பது மட்டுமல்ல... அதை பரிசுத்த வேத வார்த்தைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து சரியான சத்தியத்தை கண்டறியுங்கள். கிறஸ்தவர்களாகிய அனைத்துப் பிரிவினருக்கும் அடிப்படை தெளிவுபெற - பரிசுத்த வேதாகமம் மட்டுமே சரியான, முடிவான பதில் தர முடியும் என்பதனை நாமனைவரும் அறிவோம்.
எனவே, நீடிய பொறுமையோடும், சாந்தத்துடனும் இதை வாசித்து பயனடைய அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். சந்தேகங்கள், கேள்விகள் இருக்குமானால் கட்டுரை முடிவில் கேளுங்கள். பதில் தருகிறேன். இடையிடையே கேட்கும்போது... கட்டுரையின் நோக்கம், கருத்துக்கள் திசை மாறிவிட வாய்ப்புள்ளது.
நம் உறவுகள் தொடர்ந்து நல்லாதரவு வழங்கும்படி அன்புடன் கேட்கிறேன்.
எப்படியாகிலும் மெய்யான சத்தியத்தை அறிந்து, தேவனுக்குப் பிரியமான பிள்ளைகளாக வாழ்ந்து, தேவன் வைத்திருக்கும் சகல ஆசீர்வாதங்களையும், நித்திய மீட்பையும் சுதந்தரித்து கிறிஸ்தவர்கள் அனைவரும் அதை ஆண்டனுபவிக்க வேண்டும் என்ற வாஞ்சையோடு இப்பகுதியை தொடருகிறேன்... ... ...
இந்த திரியின் மூலம் உங்களோடு சத்தியங்களை பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நமது நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த ஆய்வை மேற்கொள்கிறேன்.
தேவன் தமது சித்தத்தை பரிசுத்த வேதாகமத்தில் வெளிப்படுத்தியிருக்கின்றார். அதனை ஒவ்வொருவரும் அறிந்து, அதன்படி நடந்து, நாம் தேவனுக்குப் பிரியமாக வாழ வேண்டும் என்பது தேவனுடைய விருப்பம்.
தேவன் பரிசுத்த வேதாகமத்தில் வைத்துள்ள சத்தியங்களை அவர் நமக்கு தந்தபடியே உணரவும், அறியவும், கடைபிடிக்கவும் வேண்டும்.
வேத வசனங்களை தவறாக புரிந்து கொள்ளப்படுவதும், தவறாக வியாக்கியானம் பண்ணுவதும் நம்மை தவறான வழிபாட்டிற்கு கொண்டுபோய் விட்டுவிடக் கூடிய பேராபத்து உள்ளது.
மெய்யான சத்தியத்தை அறியாவிடின்... தேவ நோக்கமும் தேவனுடைய மீட்பின் திட்டமும் நம்மில் நிறைவேறாமற் போகக் கூடும்.
இந்தத்திரியில் எழுதப்படும் சத்தியங்களை கவனமாக வாசிப்பது மட்டுமல்ல... அதை பரிசுத்த வேத வார்த்தைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து சரியான சத்தியத்தை கண்டறியுங்கள். கிறஸ்தவர்களாகிய அனைத்துப் பிரிவினருக்கும் அடிப்படை தெளிவுபெற - பரிசுத்த வேதாகமம் மட்டுமே சரியான, முடிவான பதில் தர முடியும் என்பதனை நாமனைவரும் அறிவோம்.
எனவே, நீடிய பொறுமையோடும், சாந்தத்துடனும் இதை வாசித்து பயனடைய அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். சந்தேகங்கள், கேள்விகள் இருக்குமானால் கட்டுரை முடிவில் கேளுங்கள். பதில் தருகிறேன். இடையிடையே கேட்கும்போது... கட்டுரையின் நோக்கம், கருத்துக்கள் திசை மாறிவிட வாய்ப்புள்ளது.
நம் உறவுகள் தொடர்ந்து நல்லாதரவு வழங்கும்படி அன்புடன் கேட்கிறேன்.
எப்படியாகிலும் மெய்யான சத்தியத்தை அறிந்து, தேவனுக்குப் பிரியமான பிள்ளைகளாக வாழ்ந்து, தேவன் வைத்திருக்கும் சகல ஆசீர்வாதங்களையும், நித்திய மீட்பையும் சுதந்தரித்து கிறிஸ்தவர்கள் அனைவரும் அதை ஆண்டனுபவிக்க வேண்டும் என்ற வாஞ்சையோடு இப்பகுதியை தொடருகிறேன்... ... ...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
"எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்" (1தீமோத்தேயு: 2:4)
"சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும்" (யோவான்: 8:32)
'வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே" (யோவான்: 5:39)
என்ற இறை வாக்கியத்தின்படி வேத வசனங்களைக் கொண்டு கருத்தாய் ஆய்வு செய்து, உண்மை சத்தியத்தை அறிந்து கொண்டு, நித்திய ஜீவனை சுதந்தரிப்போம்.
திருச்சபை வரலாற்று உண்மைகளை சம்பவங்களை வேதத்தின் வெளிச்சத்தில் ஆராயும்போதுதான் உண்மைகளை கண்டறிய முடியும்.
வேதத்தின் கட்டளைகளுக்கு, தேவ சித்தத்திற்கு ஒவ்வொரு கிறிஸ்தவனும் கீழ்படிய கடமைப்பட்டுள்ளான். கர்த்தருடைய சித்தத்திற்கு அவரது கட்டளை மற்றும் உபதேசத்திற்கு கீழ்படிபவனே உண்மையான கர்த்தருடைய பிள்ளையாக இருக்க முடியும் என்று ஆண்டவர் இயேசு கூறியுள்ளார்.(மத்தேயு: 12:46-50; மாற்கு: 3:31-35; லூக்கா: 8:19; 11:27-29).
"கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்" (சங்கீதம்: 119:1)
எனவே... பின்வரும் கருத்துக்களை ஜெபத்துடன்...திறந்த மனதுடன்...கர்த்தருடைய பெரிதான கிருபையினால் பின் தொடர்ந்து வாருங்கள்...
வசனத்தில் நடப்போம்... வேத வெளிச்சத்தில் நடந்து கர்த்தரின் மகிமையை சுதந்தரிப்போம்...
தொடரும்...
"சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும்" (யோவான்: 8:32)
'வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே" (யோவான்: 5:39)
என்ற இறை வாக்கியத்தின்படி வேத வசனங்களைக் கொண்டு கருத்தாய் ஆய்வு செய்து, உண்மை சத்தியத்தை அறிந்து கொண்டு, நித்திய ஜீவனை சுதந்தரிப்போம்.
திருச்சபை வரலாற்று உண்மைகளை சம்பவங்களை வேதத்தின் வெளிச்சத்தில் ஆராயும்போதுதான் உண்மைகளை கண்டறிய முடியும்.
வேதத்தின் கட்டளைகளுக்கு, தேவ சித்தத்திற்கு ஒவ்வொரு கிறிஸ்தவனும் கீழ்படிய கடமைப்பட்டுள்ளான். கர்த்தருடைய சித்தத்திற்கு அவரது கட்டளை மற்றும் உபதேசத்திற்கு கீழ்படிபவனே உண்மையான கர்த்தருடைய பிள்ளையாக இருக்க முடியும் என்று ஆண்டவர் இயேசு கூறியுள்ளார்.(மத்தேயு: 12:46-50; மாற்கு: 3:31-35; லூக்கா: 8:19; 11:27-29).
"கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்" (சங்கீதம்: 119:1)
எனவே... பின்வரும் கருத்துக்களை ஜெபத்துடன்...திறந்த மனதுடன்...கர்த்தருடைய பெரிதான கிருபையினால் பின் தொடர்ந்து வாருங்கள்...
வசனத்தில் நடப்போம்... வேத வெளிச்சத்தில் நடந்து கர்த்தரின் மகிமையை சுதந்தரிப்போம்...
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ரோமன் கத்தோலிக்க சபைதான் 'தாய் சபை' என்ற கருத்தின் விளக்கம்:
ரோம கத்தோலிக்க சகோதரர்கள் இன்றும் - கத்தோலிக்க சபைதான் தாய் சபை என்றும் மற்ற புராட்டஸ்டண்ட், பெந்தேகொஸ்தே சபையினரைப் 'பிரிந்துபோன சகோதரர்கள்' என்றும் கூறுவதைக் கேட்டிருக்கலாம்.
கத்தோலிக்க மதத்தின் ஞான உபதேசமும் "கிறிஸ்துவின் ஒரே சபை இதுவே. இதையே நாம் ஒரே பரிசுத்த, கத்தோலிக்க மற்றும் அப்போஸ்தல சபை என்று நம்முடைய கொள்கையாக அறிக்கையிடுகிறோம்" என்று கூறுகிறது. (Catechism of the catholic Church - page No: 166, 818,817, 169, 830)
திருச்சபை சரித்திரம் கூறுவது என்ன?
1. 'கத்தோலிக்க' என்ற பதம் "கத்தோலிக்கோஸ்" (Katholikos) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது. 'கத்தோலிக்கம்' என்றால் "அண்டங்கள் முழுவதும் சார்ந்த" (Universal) என்று பொருள்படும்.
"ரோம கத்தோலிக்கம்" என்றால் (Roman Catholic) கி.பி.1054 ஆம் ஆண்டில் மேற்கு சபையானது கிழக்கு மற்றும் மேற்கு சபையாகப் பிரிந்து போனபோது - மேற்கு சபையை 'ரோம கத்தோலிக்க சபை' என அடையாளம் காட்டப்பட்டது.
2. கி.பி.313 ஆம் ஆண்டு ரோம சாம்ராஜ்யத்தின் அரசன் கான்ஸ்டான்டைன் யுத்தத்திற்கு செல்லும்போது ஒரு சிலுவை தரிசனத்தை வானத்தில் கண்டு "இந்த அடையாளத்தினால் நீ வெற்றியைக் காண்பாய்" என்று இலத்தீன் மொழியில் எழுதப்பட்டதைக் கண்டு, தன் இராணுவத்திற்கு சிலுவை சின்னத்தை தரித்து யுத்தம் சென்று வெற்றி பெற்றதால் கிறிஸ்தவத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டான். கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு உபத்திரவம் நிறுத்தப்பட்டது.
கி.பி.380 ஆம் ஆண்டில் முதலாம் தியோடோசியஸின் (Theodosius) காலத்தில்தான் கிறிஸ்தவம் ரோம சாம்ராஜ்யத்தின் தேசிய மார்க்கமாக அறிவிக்கப்பட்டது.
எனவே, இயேசு கிறிஸ்துவின் காலம் முதல் கி.பி. 380 ஆம் வருடம் வரை ரோம கத்தோலிக்க சபை உருவாக்கப்படவில்லையென்றும், அப்போஸ்தலர் காலத்திருச்சபையே இருந்தது என்றும் அறிகிறோம்.
ரோம கத்தோலிக்க சகோதரர்கள் இன்றும் - கத்தோலிக்க சபைதான் தாய் சபை என்றும் மற்ற புராட்டஸ்டண்ட், பெந்தேகொஸ்தே சபையினரைப் 'பிரிந்துபோன சகோதரர்கள்' என்றும் கூறுவதைக் கேட்டிருக்கலாம்.
கத்தோலிக்க மதத்தின் ஞான உபதேசமும் "கிறிஸ்துவின் ஒரே சபை இதுவே. இதையே நாம் ஒரே பரிசுத்த, கத்தோலிக்க மற்றும் அப்போஸ்தல சபை என்று நம்முடைய கொள்கையாக அறிக்கையிடுகிறோம்" என்று கூறுகிறது. (Catechism of the catholic Church - page No: 166, 818,817, 169, 830)
திருச்சபை சரித்திரம் கூறுவது என்ன?
1. 'கத்தோலிக்க' என்ற பதம் "கத்தோலிக்கோஸ்" (Katholikos) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது. 'கத்தோலிக்கம்' என்றால் "அண்டங்கள் முழுவதும் சார்ந்த" (Universal) என்று பொருள்படும்.
"ரோம கத்தோலிக்கம்" என்றால் (Roman Catholic) கி.பி.1054 ஆம் ஆண்டில் மேற்கு சபையானது கிழக்கு மற்றும் மேற்கு சபையாகப் பிரிந்து போனபோது - மேற்கு சபையை 'ரோம கத்தோலிக்க சபை' என அடையாளம் காட்டப்பட்டது.
2. கி.பி.313 ஆம் ஆண்டு ரோம சாம்ராஜ்யத்தின் அரசன் கான்ஸ்டான்டைன் யுத்தத்திற்கு செல்லும்போது ஒரு சிலுவை தரிசனத்தை வானத்தில் கண்டு "இந்த அடையாளத்தினால் நீ வெற்றியைக் காண்பாய்" என்று இலத்தீன் மொழியில் எழுதப்பட்டதைக் கண்டு, தன் இராணுவத்திற்கு சிலுவை சின்னத்தை தரித்து யுத்தம் சென்று வெற்றி பெற்றதால் கிறிஸ்தவத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டான். கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு உபத்திரவம் நிறுத்தப்பட்டது.
கி.பி.380 ஆம் ஆண்டில் முதலாம் தியோடோசியஸின் (Theodosius) காலத்தில்தான் கிறிஸ்தவம் ரோம சாம்ராஜ்யத்தின் தேசிய மார்க்கமாக அறிவிக்கப்பட்டது.
எனவே, இயேசு கிறிஸ்துவின் காலம் முதல் கி.பி. 380 ஆம் வருடம் வரை ரோம கத்தோலிக்க சபை உருவாக்கப்படவில்லையென்றும், அப்போஸ்தலர் காலத்திருச்சபையே இருந்தது என்றும் அறிகிறோம்.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
திருவிவிலியம் கூறும் உண்மைகள்:
1. "உன் பெயர் பேதுரு; இந்த பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்" (மத்தேயு: 16:18; யோவான்: 21:15-17).
இந்த வசனங்களை அடிப்படையாகக் கொண்டு பேதுருவை சபைக்கு முதல் தலைவராக ஏற்படுத்தினாரென்றும், பேதுருதான் முதல் ரோமாபுரி பிஷப்பாக இருந்தார் என்ற பாரம்பரியக் கருத்திற்கும், வேதாகமத்தின்படியும், சரித்திரத்தின்படியும் எந்த ஆதாரமும் இல்லை.
மத்தேயு: 16:18-19 ன் படி "உன்பெயர் பேதுரு (பேதுரு - பெட்ராஸ்); இந்தப் பாறையின் மேல் (பாறை - பெட்ரா) என் திருச்சபையைக் கட்டுவேன்."
பேதுரு என்றால் கிரேக்க பதத்தில் "பெட்ராஸ்" . அதாவது "சிறிய கல்" என்றும்,
இந்தப் பாறையின் (கிறிஸ்து) மேல்., இங்கு பாறை என்பதற்கு "பெட்ரா" என்ற கிரேக்கப் பதம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் விளக்கம் "பெரிய படர்ந்த பாறை" என்பதாகும்.
1பேதுரு: 2:6-8 வசனங்களில் பேதுரு "கிறிஸ்து தானே மூலைக்கல்லாயிருக்கிறார் (பெட்ரா - கற்பாறையாயிருக்கிறார்)" என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, தேவன் இயேசு கிறிஸ்து என்ற கற்பாறையின் மீது திருச்சபையைக் கட்டி எழுப்புகிறார். ஆகவே, பேதுரு என்றால் சிறிய கல் என்று பொருள்படும். இயேசு கிறிஸ்துவே 'பெரிய படர்ந்த பாறை' என்பது தெளிவாகிறது.
மேலும், யோவான்: 20:19-23 ன் படி பிற திருத்தூதுப் பணியாளர்களுக்கும், ஆண்டவர் பேதுருவுக்கு கொடுத்த அதிகாரத்தைக் கொடுத்தார் என்பதையும் காணலாம்.
2. திருத்தூதர் பணிகள்: 2:1-4, 41, 47 ல் வாசிக்கும்போது இயேசு கிறிஸ்து தாம் எடுத்துக் கொள்ளப்பட்ட பின் 10 வது நாளாகிய பெந்தேகொஸ்து (Pentecost) நாளில் (பஸ்கா திருவிழாவுக்குப் பின் 50 வது நாள் - யுதர்களின் அறுவடை திருவிழா நாள்) தாம் வாக்குப் பண்ணிய தூய ஆவியானவரை (யோவான்: 14:16-20; திருத்தூதர்பணிகள்: 1:4, 5) எருசலேமில் மேல் மாடியிலிருந்த சீஷர்கள் மேல் ஊற்றி, சபையை ஆரம்பித்தார். மேலும், புதிய ஏற்பாட்டு புத்தகங்களை வாசிக்கும்போது, தேவன் முதலாம் நூற்றாண்டிலேயே திருச்சபையை ஸ்தாபித்திருக்கின்றார் என்பது தெளிவாகிறது.
மேலும், திருத்தூதர் பணிகள் மற்றும் திருமுகங்களில் (நிரூபங்களில்) வாசிக்கப்படும் அப்போஸ்தலக் கால திருச்சபை உபதேசங்களில் மரியாள் வணக்கம் இல்லை. விக்கிரக வழிபாடு இல்லை. பாவ சங்கீர்த்தனம் இல்லை. உத்தரிக்கும் ஸ்தல உபதேசம் இல்லை. பரிசுத்தவான்கள், வான தூதர்களை வணங்குதல் இல்லை. மற்றும் துறவறமும் இல்லை.
கி.பி. 392 ஆம் ஆண்டிற்குப்பின் (4 வது நூற்றாண்டிற்குப் பின்) ரோம அரசர்கள் ஆட்சியில் கத்தோலிக்கக் கிறிஸ்தவத்தில் மேற் கூறப்பட்ட புற ஜாதிய பழக்க வழக்கங்கள் திருச்சபைக்குள் ஒன்றன் பின் ஒன்றாக ரோம ராயர்கள் மூலமாகவும், தனிப்பட்ட மனிதர்களின் யோசனையினாலும், (வேத வசனத்தில் இல்லாததெல்லாம்) திருச்சபைக்குள் உபதேசமாக நுழைந்தது.
எனவே, வேதவசனங்களின்படி கிறிஸ்துவிற்கு சாட்சியாக வாழ்ந்த அப்போஸ்தலர் காலத் திருச்சபையே தாய் திருச்சபையாகும்.
சிந்தனைக்குரிய கேள்வி: இதற்கு சரியான பதிலை கூறுங்கள்..........
இயேசு கிறிஸ்துவின் திருத்தூதுவர்களும், சீடர்களும், இயேசுவின் தாய் மரியாளும் இறைவனிடம் வேண்டி, தூய ஆவியைப் பெற்றுக்கொண்டது ரோம கத்தோலிக்க சபையிலா?
பதில்: திருத்தூதர் பணிகள்: 1:13-15; 2:1-4; 41-44 .
பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா, பிலிப்பு, தோமா, பற்த்தலமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதியான சீமோன், யாக்கோபின் மகன் யுதா ஆகியோர் திரும்பி வந்த பின் தாங்கள் தங்கியிருந்த மேல்மாடிக்குச் சென்றார்கள். அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும் , அவருடைய தாயார் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்கள். (தி.தூ.பணிகள்: 1:13-14).
மேலும், நெருப்புப் போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கினார்கள். (தி.தூ.பணிகள்: 2:3,4)
அவருடைய வார்த்தைகளை ஏற்றுக் கொண்டவர்கள் திருமுழுக்குப் பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவர்களோடு சேர்க்கப்பட்டனர். அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள். மக்கள் அனைவரிடமும் அச்சம் நிலவியது. (தி.தூ.பணிகள்: 2:41,42).
1. "உன் பெயர் பேதுரு; இந்த பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்" (மத்தேயு: 16:18; யோவான்: 21:15-17).
இந்த வசனங்களை அடிப்படையாகக் கொண்டு பேதுருவை சபைக்கு முதல் தலைவராக ஏற்படுத்தினாரென்றும், பேதுருதான் முதல் ரோமாபுரி பிஷப்பாக இருந்தார் என்ற பாரம்பரியக் கருத்திற்கும், வேதாகமத்தின்படியும், சரித்திரத்தின்படியும் எந்த ஆதாரமும் இல்லை.
மத்தேயு: 16:18-19 ன் படி "உன்பெயர் பேதுரு (பேதுரு - பெட்ராஸ்); இந்தப் பாறையின் மேல் (பாறை - பெட்ரா) என் திருச்சபையைக் கட்டுவேன்."
பேதுரு என்றால் கிரேக்க பதத்தில் "பெட்ராஸ்" . அதாவது "சிறிய கல்" என்றும்,
இந்தப் பாறையின் (கிறிஸ்து) மேல்., இங்கு பாறை என்பதற்கு "பெட்ரா" என்ற கிரேக்கப் பதம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் விளக்கம் "பெரிய படர்ந்த பாறை" என்பதாகும்.
1பேதுரு: 2:6-8 வசனங்களில் பேதுரு "கிறிஸ்து தானே மூலைக்கல்லாயிருக்கிறார் (பெட்ரா - கற்பாறையாயிருக்கிறார்)" என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, தேவன் இயேசு கிறிஸ்து என்ற கற்பாறையின் மீது திருச்சபையைக் கட்டி எழுப்புகிறார். ஆகவே, பேதுரு என்றால் சிறிய கல் என்று பொருள்படும். இயேசு கிறிஸ்துவே 'பெரிய படர்ந்த பாறை' என்பது தெளிவாகிறது.
மேலும், யோவான்: 20:19-23 ன் படி பிற திருத்தூதுப் பணியாளர்களுக்கும், ஆண்டவர் பேதுருவுக்கு கொடுத்த அதிகாரத்தைக் கொடுத்தார் என்பதையும் காணலாம்.
2. திருத்தூதர் பணிகள்: 2:1-4, 41, 47 ல் வாசிக்கும்போது இயேசு கிறிஸ்து தாம் எடுத்துக் கொள்ளப்பட்ட பின் 10 வது நாளாகிய பெந்தேகொஸ்து (Pentecost) நாளில் (பஸ்கா திருவிழாவுக்குப் பின் 50 வது நாள் - யுதர்களின் அறுவடை திருவிழா நாள்) தாம் வாக்குப் பண்ணிய தூய ஆவியானவரை (யோவான்: 14:16-20; திருத்தூதர்பணிகள்: 1:4, 5) எருசலேமில் மேல் மாடியிலிருந்த சீஷர்கள் மேல் ஊற்றி, சபையை ஆரம்பித்தார். மேலும், புதிய ஏற்பாட்டு புத்தகங்களை வாசிக்கும்போது, தேவன் முதலாம் நூற்றாண்டிலேயே திருச்சபையை ஸ்தாபித்திருக்கின்றார் என்பது தெளிவாகிறது.
மேலும், திருத்தூதர் பணிகள் மற்றும் திருமுகங்களில் (நிரூபங்களில்) வாசிக்கப்படும் அப்போஸ்தலக் கால திருச்சபை உபதேசங்களில் மரியாள் வணக்கம் இல்லை. விக்கிரக வழிபாடு இல்லை. பாவ சங்கீர்த்தனம் இல்லை. உத்தரிக்கும் ஸ்தல உபதேசம் இல்லை. பரிசுத்தவான்கள், வான தூதர்களை வணங்குதல் இல்லை. மற்றும் துறவறமும் இல்லை.
கி.பி. 392 ஆம் ஆண்டிற்குப்பின் (4 வது நூற்றாண்டிற்குப் பின்) ரோம அரசர்கள் ஆட்சியில் கத்தோலிக்கக் கிறிஸ்தவத்தில் மேற் கூறப்பட்ட புற ஜாதிய பழக்க வழக்கங்கள் திருச்சபைக்குள் ஒன்றன் பின் ஒன்றாக ரோம ராயர்கள் மூலமாகவும், தனிப்பட்ட மனிதர்களின் யோசனையினாலும், (வேத வசனத்தில் இல்லாததெல்லாம்) திருச்சபைக்குள் உபதேசமாக நுழைந்தது.
எனவே, வேதவசனங்களின்படி கிறிஸ்துவிற்கு சாட்சியாக வாழ்ந்த அப்போஸ்தலர் காலத் திருச்சபையே தாய் திருச்சபையாகும்.
சிந்தனைக்குரிய கேள்வி: இதற்கு சரியான பதிலை கூறுங்கள்..........
இயேசு கிறிஸ்துவின் திருத்தூதுவர்களும், சீடர்களும், இயேசுவின் தாய் மரியாளும் இறைவனிடம் வேண்டி, தூய ஆவியைப் பெற்றுக்கொண்டது ரோம கத்தோலிக்க சபையிலா?
பதில்: திருத்தூதர் பணிகள்: 1:13-15; 2:1-4; 41-44 .
பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா, பிலிப்பு, தோமா, பற்த்தலமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதியான சீமோன், யாக்கோபின் மகன் யுதா ஆகியோர் திரும்பி வந்த பின் தாங்கள் தங்கியிருந்த மேல்மாடிக்குச் சென்றார்கள். அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும் , அவருடைய தாயார் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்கள். (தி.தூ.பணிகள்: 1:13-14).
மேலும், நெருப்புப் போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கினார்கள். (தி.தூ.பணிகள்: 2:3,4)
அவருடைய வார்த்தைகளை ஏற்றுக் கொண்டவர்கள் திருமுழுக்குப் பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவர்களோடு சேர்க்கப்பட்டனர். அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள். மக்கள் அனைவரிடமும் அச்சம் நிலவியது. (தி.தூ.பணிகள்: 2:41,42).
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
திருச்சபையில் சிலை வழிபாடு
கத்தோலிக்க ஞான உபதேசமானது, "...பரிசுத்த தேவமாதா, தூதர்கள் மற்றும் புனிதர்களின் புனிதமான உருவச்சிலைகள் மூலமாகவும் நாம் அவர்களுக்கு நம்முடைய பயபக்தியைக் காட்டுகிறோம்". ( Catechism of the catholic Church)
மேலும், இரண்டாம் வத்திகான் சங்கம் வலியுறுத்துவது என்னவென்றால், புனிதப் படங்களைக் கோயில்களில் வைத்து மரியாதை செலுத்துதல் போன்ற பழக்கங்கள் தொடர வேண்டும்.
கத்தோலிக்க ஞான உபதேசமானது, "...பரிசுத்த தேவமாதா, தூதர்கள் மற்றும் புனிதர்களின் புனிதமான உருவச்சிலைகள் மூலமாகவும் நாம் அவர்களுக்கு நம்முடைய பயபக்தியைக் காட்டுகிறோம்". ( Catechism of the catholic Church)
மேலும், இரண்டாம் வத்திகான் சங்கம் வலியுறுத்துவது என்னவென்றால், புனிதப் படங்களைக் கோயில்களில் வைத்து மரியாதை செலுத்துதல் போன்ற பழக்கங்கள் தொடர வேண்டும்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
திருச்சபையில் சிலை வழிபாடு
கத்தோலிக்க ஞான உபதேசமானது, "...பரிசுத்த தேவ மாதா, தூதர்கள் மற்றும் புனிதர்களின் புனிதமான உருவச்சிலைகள் மூலமாகவும் நாம் அவர்களுக்கு நம்முடைய பயபக்தியைக் காட்டுகிறோம்". ( Catechism of the catholic Church page no: 235, 1192 ) .
மேலும், இரண்டாம் வத்திகான் சங்கம் வலியுறுத்துவது என்னவென்றால், "புனிதப் படங்களைக் கோயில்களில் வைத்து மரியாதை செலுத்துதல் போன்ற பழக்கங்கள் தொடர வேண்டும்."
திருச்சபை சரித்திரம் கூறுவது என்ன?
நான்காவது நூற்றாண்டில்தான் திருச்சபையில் ஓவியம் வரைவது காணப்படுகிறது. தூரா என்ற இடத்தில் (DURA _ INPRESENT DAY _ IRAQ) இருந்த ஆலயத்தில்தான் முதன் முதலாக வேதாகமச் சம்பவங்கள் ஓவியமாக வரையப்பட்டது.
ஆனால், பல பரிசுத்தவான்களும் குறிப்பாக எபிபனேசியஸ் சாலமிஸ் (Epiphanius of Salamis A.D.315 - 403) என்ற சைப்ரஸ் சபைத் தந்தையும் (Church Fathers), சபைகளில் ஓவியம், மற்றும் சிலைகள் வைப்பதை வன்மையாக கண்டித்தார்கள். எதிர்த்தார்கள்.
பாலஸ்தீனத்தில் இருந்த ஒரு ஆலயத்தில் கிறிஸ்துவின் படம் வரையப்பட்ட தொங்கு திரையைக்கண்டு கோபப்பட்டு அதைக் கிழித்து எறிந்து எருசலேம் சபையின் பிஷப்பிற்கு இந்தத் தவறான காரியத்தைச் சுட்டிக் காட்டினர்.
எனவே, இயேசு கிறிஸ்துவின் கால முதல் நான்காவது நூற்றாண்டு வரை திருச்சபையில் விக்கிரகங்களோ, ஓவியமோ வைக்கப்படவில்லை என்பது தெளிவாகின்றது.
திருவிவிலியம் கூறும் உண்மை:
விடுதலைப் பயணம்: 20:1-17 ல் கடவுள் அருளிய கட்டளையைக் காண்கிறோம். இரண்டாம் கட்டளையாக: "என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது, மேலே விண் வெளியில், கீழே மண்ணுலகில், புமிக்கடியே நீர் திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். நீ அவைகளை வழிபடவோ, அவற்றிற்கு பணிபுரியவோ வேண்டாம். ஏனெனில், உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக் கொள்ள மாட்டேன்; என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் தண்டித்துத் தீர்ப்பேன். மாறாக, என் மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைபிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்."
கடவுளின் இந்த இரண்டாவது கட்டளை விக்கிரகங்களை வணங்கவோ, முத்தமிடவோ கூறுகிறதா? இல்லை.
கடவுளுடைய கட்டளை முதலாவதாக, விக்கிரகமோ, ஓவியமோ உருவாக்கக் கூடாது. 2வதாக அதை வழிபடவும், பணிவிடை செய்யவும் கூடாது.
படங்கள் , சிலைகள் மற்றவர்களுக்குப் போதிப்பதற்காக என்று கூறுவதும், சிலைகள், படங்களுக்குச் செலுத்தும் மதிப்பும் மரியாதையும் அந்தப் படத்திற்கல்ல, மாறாக அது யாரை வெளிப்படுத்துகிறதோ அவருக்கே மரியாதை, மதிப்பு என்று கூறுவதும் செய்வதும் கடவுளின் கட்டளையை மீறுவதாகும்.
கடவுளின் வார்த்தைக்கும், கட்டளைக்கும் கீழ்ப்படியாமல் மனிதனின் யோசனைக்கு செவி கொடுப்பது ஆபத்தைக் கொண்டு வரும். முடிவில் கீழ்ப்படியாதவர்களுக்கு என்று தேவன் நியமித்திருக்கும் புறம்பான இருளே காணப்படும்.
"கடவுள்" உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில் தான் வழிபட வேண்டும். (யோவான்: 4:24) என்று இயேசு கிறிஸ்து கூறியிருக்கிறார்.
சிலை வழிபாட்டினை தவிர்த்து ஆவியோடும், உண்மையோடும் தேவனை ஆராதனை செய்வோமாக.
சிந்தனைக்குரிய கேள்வி:
கடவுளின் இந்த இரண்டாவது கட்டளை விக்கிரகங்களை, சிலைகளை வணங்கவோ, முத்தமிடவோ அனுமதி தருகிறதா?
பதில்: விடுதலைப் பயணம்: 20:4,5.
மேலே விண் வெளியில், கீழே மண்ணுலகில், புமிக்கடியே நீர் திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்.
நீ அவைகளை வழிபடவோ, அவற்றிற்கு பணிபுரியவோ வேண்டாம். ஏனெனில், உன்
கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக் கொள்ள மாட்டேன்; என்னைப்
புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம்
தலைமுறை மட்டும் தண்டித்துத் தீர்ப்பேன். (விடுதலைப் பயணம்: 20:4,5).
கத்தோலிக்க ஞான உபதேசமானது, "...பரிசுத்த தேவ மாதா, தூதர்கள் மற்றும் புனிதர்களின் புனிதமான உருவச்சிலைகள் மூலமாகவும் நாம் அவர்களுக்கு நம்முடைய பயபக்தியைக் காட்டுகிறோம்". ( Catechism of the catholic Church page no: 235, 1192 ) .
மேலும், இரண்டாம் வத்திகான் சங்கம் வலியுறுத்துவது என்னவென்றால், "புனிதப் படங்களைக் கோயில்களில் வைத்து மரியாதை செலுத்துதல் போன்ற பழக்கங்கள் தொடர வேண்டும்."
திருச்சபை சரித்திரம் கூறுவது என்ன?
நான்காவது நூற்றாண்டில்தான் திருச்சபையில் ஓவியம் வரைவது காணப்படுகிறது. தூரா என்ற இடத்தில் (DURA _ INPRESENT DAY _ IRAQ) இருந்த ஆலயத்தில்தான் முதன் முதலாக வேதாகமச் சம்பவங்கள் ஓவியமாக வரையப்பட்டது.
ஆனால், பல பரிசுத்தவான்களும் குறிப்பாக எபிபனேசியஸ் சாலமிஸ் (Epiphanius of Salamis A.D.315 - 403) என்ற சைப்ரஸ் சபைத் தந்தையும் (Church Fathers), சபைகளில் ஓவியம், மற்றும் சிலைகள் வைப்பதை வன்மையாக கண்டித்தார்கள். எதிர்த்தார்கள்.
பாலஸ்தீனத்தில் இருந்த ஒரு ஆலயத்தில் கிறிஸ்துவின் படம் வரையப்பட்ட தொங்கு திரையைக்கண்டு கோபப்பட்டு அதைக் கிழித்து எறிந்து எருசலேம் சபையின் பிஷப்பிற்கு இந்தத் தவறான காரியத்தைச் சுட்டிக் காட்டினர்.
எனவே, இயேசு கிறிஸ்துவின் கால முதல் நான்காவது நூற்றாண்டு வரை திருச்சபையில் விக்கிரகங்களோ, ஓவியமோ வைக்கப்படவில்லை என்பது தெளிவாகின்றது.
திருவிவிலியம் கூறும் உண்மை:
விடுதலைப் பயணம்: 20:1-17 ல் கடவுள் அருளிய கட்டளையைக் காண்கிறோம். இரண்டாம் கட்டளையாக: "என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது, மேலே விண் வெளியில், கீழே மண்ணுலகில், புமிக்கடியே நீர் திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். நீ அவைகளை வழிபடவோ, அவற்றிற்கு பணிபுரியவோ வேண்டாம். ஏனெனில், உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக் கொள்ள மாட்டேன்; என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் தண்டித்துத் தீர்ப்பேன். மாறாக, என் மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைபிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்."
கடவுளின் இந்த இரண்டாவது கட்டளை விக்கிரகங்களை வணங்கவோ, முத்தமிடவோ கூறுகிறதா? இல்லை.
கடவுளுடைய கட்டளை முதலாவதாக, விக்கிரகமோ, ஓவியமோ உருவாக்கக் கூடாது. 2வதாக அதை வழிபடவும், பணிவிடை செய்யவும் கூடாது.
படங்கள் , சிலைகள் மற்றவர்களுக்குப் போதிப்பதற்காக என்று கூறுவதும், சிலைகள், படங்களுக்குச் செலுத்தும் மதிப்பும் மரியாதையும் அந்தப் படத்திற்கல்ல, மாறாக அது யாரை வெளிப்படுத்துகிறதோ அவருக்கே மரியாதை, மதிப்பு என்று கூறுவதும் செய்வதும் கடவுளின் கட்டளையை மீறுவதாகும்.
கடவுளின் வார்த்தைக்கும், கட்டளைக்கும் கீழ்ப்படியாமல் மனிதனின் யோசனைக்கு செவி கொடுப்பது ஆபத்தைக் கொண்டு வரும். முடிவில் கீழ்ப்படியாதவர்களுக்கு என்று தேவன் நியமித்திருக்கும் புறம்பான இருளே காணப்படும்.
"கடவுள்" உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில் தான் வழிபட வேண்டும். (யோவான்: 4:24) என்று இயேசு கிறிஸ்து கூறியிருக்கிறார்.
சிலை வழிபாட்டினை தவிர்த்து ஆவியோடும், உண்மையோடும் தேவனை ஆராதனை செய்வோமாக.
சிந்தனைக்குரிய கேள்வி:
கடவுளின் இந்த இரண்டாவது கட்டளை விக்கிரகங்களை, சிலைகளை வணங்கவோ, முத்தமிடவோ அனுமதி தருகிறதா?
பதில்: விடுதலைப் பயணம்: 20:4,5.
மேலே விண் வெளியில், கீழே மண்ணுலகில், புமிக்கடியே நீர் திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்.
நீ அவைகளை வழிபடவோ, அவற்றிற்கு பணிபுரியவோ வேண்டாம். ஏனெனில், உன்
கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக் கொள்ள மாட்டேன்; என்னைப்
புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம்
தலைமுறை மட்டும் தண்டித்துத் தீர்ப்பேன். (விடுதலைப் பயணம்: 20:4,5).
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
மரியாள் வணக்கம்; பெருமதிப்பு கொடுத்தல்
ரோம கத்தோலிக்க சகோதரர்கள் இயேசுவின் தாயாகிய மரியாளை தாங்கள் வணங்கி ஆராதிப்பதில்லை. மாறாக, பெருமதிப்புதான் (Veneration) கொடுக்கிறோம் என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கலாம்.
இயேசுவின் தாயாகிய மரியாளைக் குறித்து ரோம கத்தோலிக்க உபதேசம் கூறுவது என்ன?
அ) மரியாள் எப்பொழுதும் கன்னியாகவே வாழ்ந்தார் என்று பாரம்பரியம் கூறுகிறது. ( Catechism of the catholic Church page no: 193, 969, 970, 971 ) .
ஆ) மரியாள்... நமக்காகப் பேசுபவர், உதவியாளர், நன்மை செய்பவர், மத்தியஸ்தர் என்று பாரம்பரியம் கூறுகிறது.
இ) கன்னி மரியாள் தன் சரீரத்தோடு பரலோகத்திற்கு ஏறி போனாள் என்று கி.பி.1950 ல் போப் பயஸ் XII என்பவரால் அறிவிக்கப்பட்டது.
திரு விவிலியம் கூறும் உண்மை:
ரோம கத்தோலிக்க உபதேசம் மரியாளை கன்னி என்றும், மரியாள் சரீரத்தோடு பரலோகம் சென்றார் என்றும் கூறுவது மக்களின் இரட்சிப்பிற்கு தடையாயிருக்கிறது.
மேலே மரியாளைப் பற்றி கூறப்பட்டுள்ள கத்தோலிக்க உபதேசம் அனைத்தும் தனி மனிதர்களுடைய கற்பனை கூற்றே ஒழிய, இவையனைத்திற்கும் பரிசுத்த வேதாகமத்தில் ஆதாரம் ஒன்றுமில்லை என்பதும் நிரூபிக்கப்பட்ட வேத வல்லுனர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மைகள்.
தொடரும்...
ரோம கத்தோலிக்க சகோதரர்கள் இயேசுவின் தாயாகிய மரியாளை தாங்கள் வணங்கி ஆராதிப்பதில்லை. மாறாக, பெருமதிப்புதான் (Veneration) கொடுக்கிறோம் என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கலாம்.
இயேசுவின் தாயாகிய மரியாளைக் குறித்து ரோம கத்தோலிக்க உபதேசம் கூறுவது என்ன?
அ) மரியாள் எப்பொழுதும் கன்னியாகவே வாழ்ந்தார் என்று பாரம்பரியம் கூறுகிறது. ( Catechism of the catholic Church page no: 193, 969, 970, 971 ) .
ஆ) மரியாள்... நமக்காகப் பேசுபவர், உதவியாளர், நன்மை செய்பவர், மத்தியஸ்தர் என்று பாரம்பரியம் கூறுகிறது.
இ) கன்னி மரியாள் தன் சரீரத்தோடு பரலோகத்திற்கு ஏறி போனாள் என்று கி.பி.1950 ல் போப் பயஸ் XII என்பவரால் அறிவிக்கப்பட்டது.
திரு விவிலியம் கூறும் உண்மை:
ரோம கத்தோலிக்க உபதேசம் மரியாளை கன்னி என்றும், மரியாள் சரீரத்தோடு பரலோகம் சென்றார் என்றும் கூறுவது மக்களின் இரட்சிப்பிற்கு தடையாயிருக்கிறது.
மேலே மரியாளைப் பற்றி கூறப்பட்டுள்ள கத்தோலிக்க உபதேசம் அனைத்தும் தனி மனிதர்களுடைய கற்பனை கூற்றே ஒழிய, இவையனைத்திற்கும் பரிசுத்த வேதாகமத்தில் ஆதாரம் ஒன்றுமில்லை என்பதும் நிரூபிக்கப்பட்ட வேத வல்லுனர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மைகள்.
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
மரியாள் எப்பொழுதும் கன்னியா?
1. "மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை... " (மத்தேயு: 1:25).
"வரை" என்ற வார்த்தை, இயேசுவின் பிறப்பிற்கு பிறகு யோசேப்பும், மரியாவும் அவர்கள் திருமணமான தம்பதிகளாக இல்லற வாழ்வில் இணைந்து வாழ்ந்தார்கள் என்கிற உண்மையை வெளிப்படுத்தகிறது.1. "மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை... " (மத்தேயு: 1:25).
மேலும், இயேசுவுக்கு சகோதரர்களும், சகோதரிகளும் இருந்தார்கள் என்றும் பரிசுத்த வேதாகமம் தெளிவாகக் காட்டுகின்றது. மத்தேயு: 12:46, 47 ல் " அவருடைய தாயும், சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருந்தார்கள். ஒருவர் இயேசுவை நோக்கி, அதோ உம் தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள். என்றார்."
அவர் இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து, "என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்? என்று கேட்டார். பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி, என் தாயும் சகோதரர்களும் இவர்களே. விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும், சகோதரியும், தாயும் ஆவார்" என்றார். (மத்தேயு: 12:46-50; மாற்கு: 3:31-35; லூக்கா: 8:19; 11:27-29).
இயேசு கிறிஸ்து வெளியே காத்திருக்கும் தன் தாய் மற்றும் சகோதரரை உள்ளே ஏற்றுக் கொள்ளவோ அல்லது உடனே எழுந்து போகவோ, பதில் சொல்லவோ இல்லை.
இங்கே இயேசுவின் சகோதரர்கள், தங்களுடைய தாய் மரியாளோடு இயேசுவைத் தேடி வந்திருக்கிறார்கள்.
2. மாற்கு: 6:3 ல் - "... இவர் தச்சர் அல்லவா? மரியாவின் மகன் தானே! யாக்கோபு, யோசே, யுதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர்கள் அல்லவா?" என்றார்கள்.
இங்கு இயேசு தச்சு வேலை செய்தார் என்றும், இங்கு சொல்லப்பட்டுள்ள மரியாள் இயேசுவின் தாய் என்றும், யாக்கோபு, யோசே, யுதா, சீமோன் ஆகியோர் இயேசுவின் சகோதரர்கள் என்றும் நாம் அறிகிறோம்.
மேலும், பவுல் கலாத்தியர்: 1:19 - ல் "... ஆண்டவரின் சகோதரனான யாக்கோபைத் தவிர திருத்தூதருள் வேறு எவரையும் நான் போய்ப் பார்க்கவில்லை என்று குறிப்பாக இயேசுவின் சகோதரர் என்று எழுதியிருப்பதையும் காண முடியும்.
இயேசு கிறிஸ்து புமியில் வாழ்ந்த போது நூறு சதவிகிதம் மாமனிதனாகவும், நூறு சதவிகிதம் ஆண்டவராகிய தேவனாகவும் இருந்தார்.
மரியாள் - இயேசு என்கிற மாமனிதனின் தாய். ஆனால், கிறிஸ்து என்கிற ஆண்டவராகிய தேவனுக்கு தாய் அல்ல.
Mary was the mother of man Jesus But not the mother of God the son Christ Jesus
தேவனே மரியாளை சிருஷ்டித்தவர்
Mary was the mother of man Jesus But not the mother of God the son Christ Jesus
தேவனே மரியாளை சிருஷ்டித்தவர்
தொடரும்...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சிலை வழிபாட்டிற்கும் சுரூப வழிபாட்டிற்கும் வித்தியாசம் தெரியாமல் நீங்கள் இந்த தொடரை பதிப்பது வேதனையை தருகிறது. எதையும் யாரும் பார்க்கவில்லை, எல்லாம் 2000 வருடங்களுக்கு முன் நடந்தது. எல்லாம் ஒரு நம்பிக்கையில் தான் நாம் இங்கு பேசுவது வாதிடுவது எல்லாமே. இதில் யார் சொல்வது செய்வது சரி தவறு என்று தர்கம் செய்வது கேலிக்குரியது.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
அசுரன் wrote:சிலை வழிபாட்டிற்கும் சுரூப வழிபாட்டிற்கும் வித்தியாசம் தெரியாமல் நீங்கள் இந்த தொடரை பதிப்பது வேதனையை தருகிறது. எதையும் யாரும் பார்க்கவில்லை, எல்லாம் 2000 வருடங்களுக்கு முன் நடந்தது. எல்லாம் ஒரு நம்பிக்கையில் தான் நாம் இங்கு பேசுவது வாதிடுவது எல்லாமே. இதில் யார் சொல்வது செய்வது சரி தவறு என்று தர்கம் செய்வது கேலிக்குரியது.
ஒரு காரியத்தை ஆய்வு செய்யும் போது... சில விஷயங்கள் நமக்கு வருத்தமளிப்பது போலத் தெரிந்தாலும்... பரிசுத்த வேதாகமம் சொல்ல வரும் சரியான மெய்யான சத்தியம் முழுவதையும் அறிய வரும்போது கர்த்தருடைய பிள்ளைகளுக்கு முடிவில் களிப்பு உண்டாகும். (2கொரிந்தியர்: 7:8-10 வாசியுங்கள்)
ஆய்வின் ஆரம்பத்தில் நமக்கு சில விஷயங்கள் விளங்காதபோது, இப்படிப்பட்ட ஐயங்கள் கேள்விகள் வருத்தங்கள் வரத்தான் செய்யும். காரணம்... இப்படிப்பட்ட சத்தியங்களை இதற்கு முன் நாம் கேட்டறியாததுதான். இன்றைய கால கட்டத்தில் மெய்யான சத்தியத்தை போதிப்பவர்கள், போதிக்கும் திருச்சபைகள் மிக சொற்பமாக இருப்பதனால்தான். ஜனங்கள் சத்தியத்தை அறியாததினால் இன்னும், இருளிலும், பாரம்பரியத்திலும் தனிமனித கற்பனைகளிலும் சிக்கி தவித்து, மீள முடியாமல் அஞ்ஞான இருளில் விழுந்த கிடக்கிறார்கள். மக்களை அறியாதவைகளில் நடத்தி (அதாவது வேதம் சொல்லாத காரியங்களில்) ஆதாயம் தேடுகிறவர்களுக்கு ஆண்டவர் கடைசி நாட்களில் பலனிளிப்பார் என வேதம் வெளிப்படுத்தல் புத்தகத்தில் தெளிவாக கூறியுள்ளார்.
வருத்தமளிக்கும் உண்மைகளை பொறுமையுடன் வாசித்து வாருங்கள். முடிவில் அனைத்தும் விளங்க தூய ஆவியானவர் நிச்சயம் உதவி செய்வார்.
எனது நோக்கம் ... வாசிப்போர் வருத்தமடையவோ சோர்வடையோ வைப்பதல்ல. எப்படியாகிலும் தேவனுடைய மெய்யான சத்தியத்தை அறிந்து, அனைவரும் நித்திய ஜீவனைப் பெற வேண்டுமே என்ற ஆத்தும பாரமே. வீண் தர்க்கங்களுக்கு நான் தூரமானவன். மெய் சத்தியத்தை வேதக் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து அனைவரும் அறியும்படி வெளிப்படுத்துவதுதான் எனது வேலை.
மற்ற கேள்விகளுக்கு இறுதியில் பதில் கூறுகிறேன். கட்டுரையின் நோக்கம் திசைமாறிவிடக் கூடாதென்பதினால்... இனிவரும் எவ்விதக் கேள்விகளுக்கும் இறுதியில்தான் பதிலளிப்பேன் என இதன் மூலம் தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|