புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்?
Page 1 of 1 •
அன்றும் இன்றும்!
அரண்மனையை விட்டு வெளியேறிய சித்தார்த்தன், உலகை உய்விக்க வந்த புத்தராகிப் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனது சொந்த ஊரான கபிலவஸ்த்துவுக்கு வருகிறார். அப்போது சித்தார்த்தனின் மனைவி யசோதரையும் மகன் ராகுலனும் புத்தரைச் சந்திக்கிறார்கள்.
"நள்ளிரவில் அரண்மனையைவிட்டுப் போனீர்களே, எங்களை எழுப்பிச் சொல்லிவிட்டுப் போக வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?''
"எழுப்பிச் சொல்லியிருந்தால் நானும் ராகுலும் அழுது உங்கள் பயணத்தைத் தடுத்துவிடுவோம் என்று நினைத்தீர்களா?''
"கட்டிய மனைவியையும் குழந்தையையும் விட்டுவிட்டு நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் அரண்மனையைவிட்டுப் போன உங்களை "கெüதம புத்தர்' என்று கொண்டாடுகிறார்களே, நான் உங்களையும் குழந்தையையும் விட்டுவிட்டு நீங்கள் செய்ததுபோல யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் நள்ளிரவில் அரண்மனையை விட்டுப் போயிருந்தால் இந்த உலகம் என்னை என்ன சொல்லியிருக்கும்?''
சித்தார்த்தனின் மனைவி யசோதரை இப்படிக் கேட்டிருந்தால் புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார் என்று தெரியவில்லை.
ஆனால், தமிழ் இலக்கியத்தில் இதேபோல சந்தர்ப்பங்களும் அதற்கான பதிலும் காணப்படுகிறது. அப்படி ஒரு பெண்ணை "மணிமேகலை' என்று தமிழ் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை எனும் இரட்டைக் காப்பியங்களும் அந்தப் புத்தத் துறவியைப் போற்றுகின்றன.
இப்போதும் மணிமேகலை என்று தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். நாம் இடித்துக் கொண்டாலும் வாசல்நிலை இடித்துவிட்டது என்று சொல்கிறோம்; வழியில் தடுக்கி விழுந்தாலும் கல் தடுக்கிவிட்டது என்று காரணம் சொல்கிறோம்; குழந்தை வளர்ந்ததைச் சொல்லாமல் சட்டை சிறிதாகிவிட்டது என்கிறோம். மற்றவற்றின் மீது காரணத்தைச் சுமத்தித் தப்பித்துக் கொள்கிறோம்.
சுமத்துவதும் தப்பிப்பதும் சுயநலத்தின் பலவீனம்; நடந்ததற்கு வருந்துவது நல்ல மனதின் அடையாளம்; மன்னிப்புக் கேட்பது பெருந்தன்மையின் வெளிப்பாடு; தண்டனைக்கு உட்படுவது பண்பாட்டின் உச்சம்.
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமும், மனதைக் கொள்ளை கொள்ளும் மணிமேகலையும் பண்பாட்டின் உச்சமாக வெளிப்படுகின்றன...
சிலப்பதிகாரக் கானல்வரியில்,
திங்கள் மாலை வெண்குடையான்,
சென்னிச் செங்கோல் - அது ஒச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி!''
என்று கோவலன் பாடுகிறான்.
"சோழனுக்குக் காவிரி மனைவியாக இருந்தபோதும் கங்கையைச் சேர்த்துக்கொள்கிறான். அதற்காக ஊடல் கொள்ளாத காவிரி வாழ்க' என்று கோவலன் பாடியதும், மாதவி பதில் பாட்டுப் பாடுகிறாள்,
தம்முடைய தண்ணளியும், தாமும் தன்மான்தேரும்;
எம்மை நினையாது; விட்டாரோ? விட்டகல்க,
அம்மென் இரை அடும்புகாள்! அன்னங்காள்!
நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்!''
தமது அன்பினை மறந்து வேறொரு மங்கையிடம் அவன் மனம் விரும்பிப் போகிறது என்று நினைத்த மாதவி, காவிரியைப்போல் ஊடல் கொள்ளாமல் இருக்க நான் தயாரில்லை என்பதை அறிவிக்கிறாள்.
"எனது அன்பை நினைக்காமல் என்னை விட்டுப்போக நினைத்தால் போகட்டும்; என்னைவிட்டு அகல்க'' என்று பாடுகிறாள்.
கோபம்கொண்டு புறப்பட்டுப் போகிற கோவலன், மாதவியை, ""மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள்; சலம் புணர்க்கொள்கை சலதி'' என்றெல்லாம் திட்டுகிறான்.
கோவலன் கண்ணகியோடு பூம்புகாரை விட்டுப்போனது அறிந்த மாதவி மனம் வருந்தி ஒரு கடிதம் எழுதிக் கோசிகனிடம் கொடுத்து அனுப்புகிறாள். கடிதத்தைக் கோவலன் படிக்கிறான்.
அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்;
வடியாக் கிளவி மனம்கொளல் வேண்டும்;
குரவர்பணி அன்றியும் குலப்பிறப்பாட்டியோடு;
இரவிடைக் கழிதற்கு, என் பிழைப்பு அறியாது;
கையறு நெஞ்சம் கடிதல் வேண்டும்;
பொய்தீர்க் காட்சிப் புரையோய், போற்றி!'
இரவில், கண்ணகியோடு பூம்புகாரைவிட்டுப் புறப்பட்டுப் போனதற்கு நான் காரணமாகிவிட்டேனே என்று செய்யாத குற்றத்திற்குப் பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்கிறாள் மாதவி.
கடிதத்தைப் படித்த கோவலன், மாதவி தவறு செய்யவில்லை; நான்தான் தவறு செய்துவிட்டேன் என்று, ""தன்தீதிலள் எனத் தளர்ச்சி நீங்கி என்தீது என்றே எய்தியது'' உணர்ந்து வருத்தம் தெரிவிக்கிறான்.
கோவலன் கொலை செய்யப்பட்டதும் கண்ணகி, பொங்கி எழுந்து, பாண்டியன் அரண்மனைக்குச் சென்று வழக்குரைக்கிறாள். பாண்டியன் தவறு நடந்துவிட்டதை உணர்கிறான். ""பொன் செய் கொல்லன் தன்சொல் கேட்ட யானோ அரசன் யானே கள்வன்'' என்று கூறி உயிர்விடுகிறான். இவ்வளவுக்கும், என் தேவியின் கால் சிலம்பு ""கன்றிய கள்வன் கையதாகில் கொன்று அச்சிலம்பு கொணர்க'' என்றுதான் சொல்லி இருக்கிறான்.
அரசியின் காற்சிலம்பு அவன் கையில் இருந்தால்தான் கொல்லச் சொல்லி இருக்கிறான். சிலம்பு அரசியுடையதுதானா என்பதை உறுதி செய்யாமலேயே, கோவலன் கொல்லப்படுகிறான். ஆனாலும் கூட, பாண்டியன், கோவலன் கொல்லப்பட்டதற்குத் தான் பொறுப்பில்லை என்று கூறித் தப்பிக்க முயற்சி செய்யாமல் தனது ஆட்சியில் நடந்துவிட்ட தவறுக்குத் தானே பொறுப்பேற்று உயிர்விடுகிறான்.
கண்ணகியின் கோபம் தணியவில்லை. ""பட்டாங்குயானுமோர் பத்தினியேயாமாகில் ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும்'' என்று வஞ்சினம் கூறி ஊரையும் மக்களையும் எரிக்கிறாள்.
சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் எழுப்பிய பின்னர், புத்தமதத் துறவி மணிமேகலை, கண்ணகியையும் கோவலனையும் பார்க்க, பத்தினிக் கோட்டம் வருகிறாள். வணங்குகிறாள்.
மனதில் நெருடிக் கொண்டிருக்கும் கேள்வியோடு தெய்வச் சிலையாக இருக்கும் கண்ணகியைப் பார்க்கிறாள். சிலையோடும் உரையாடும் ஆற்றல் மணிமேகலைக்கு இருந்திருக்கிறது. கேள்வி அவளை விடவில்லை; கேட்டு விடுகிறாள்.
அன்புக் கடன் நில்லாது நற்றவம்படராது
கற்புக் கடன் பூண்டு நும்கடன்
முடித்தது அருளல் வேண்டும்''
என்று அழுது முன்நிற்கிறாள்.
அன்பு காட்டாமல் நல்ல நெறியில் நடக்காமல் ஊரையும் மக்களையும் எரித்தது ஏன் என்று கேட்கிறாள்.
தவறு செய்தது பாண்டிய மன்னரின் காவலர்கள். பாண்டியனும் தவறுக்குப் பொறுப்பேற்று உயிர் துறக்கிறான். பிறகும் ஏன் வெஞ்சினம் கொண்டு அப்பாவி மக்களை, மதுரை மாநகரைக் கண்ணகி தீக்கிரையாக்க வேண்டும்?
"ஆம் மகளே! தவறு செய்துவிட்டேன். கோபத்தில் செழுமையான நகரை எரித்துச் சிதைத்து விட்டேன். அந்தப் பாவம் என்னைவிடாது. எப்படியும் அதற்கான தண்டனையைப் பெறத்தான் போகிறேன்.'' என்று தான் செய்தது தவறுதான் என்பதை ஏற்றுக் கொள்கிறாள் கண்ணகி.
"சீற்றம் கொண்டு செழுநகர் சிதைத்தேன்.....அடுசினப்பாவம் எவ்வகையானும் எய்துதல் ஒழியாது!''
தண்டனைக்கு உட்படத்தான் போகிறேன் என்று கண்ணகி கூறியதாக மணிமேகலைக் காப்பியம் சொல்கிறது. மற்றவர்களே காரணம் என்று பழி சுமத்தாமல் தாமே உணர்ந்து வருந்துவதையும், ஆட்சியில் இருந்ததால் பொறுப்பேற்று உயிர்விடுவதையும், தப்பிக்க நினைக்காமல் தண்டனைக்கு உட்படுவதையும் சிலம்பும் மணிமேகலையும் காட்டுகின்றன. இவை மானுடப் பண்பாட்டின் சிகரங்கள்.
கண்ணகி எரித்த இடத்தில் மதுரை இப்போதும் இருக்கிறது. ஆனாலும் மாநகர்கள் தொடர்ந்து எரிக்கப்படுகின்றன. மக்கள் கொல்லப்படுகிறார்கள்; குழந்தைகளும் சிறுவர்களும் கூடக் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார்கள்.
கேள்வி கேட்கத்தான் மணிமேகலை போல புத்தமதத் துறவிகள் இல்லை. ஆனாலும் கேள்வி இருக்கிறது. மணிமேகலை என்கிற புத்தமதத் துறவியின் கேள்வியை இப்போது உலகம் கேட்கிறது!
ம. இராசேந்திரன் - கட்டுரையாளர்: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்.-நன்றி-தினமணி
அரண்மனையை விட்டு வெளியேறிய சித்தார்த்தன், உலகை உய்விக்க வந்த புத்தராகிப் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனது சொந்த ஊரான கபிலவஸ்த்துவுக்கு வருகிறார். அப்போது சித்தார்த்தனின் மனைவி யசோதரையும் மகன் ராகுலனும் புத்தரைச் சந்திக்கிறார்கள்.
"நள்ளிரவில் அரண்மனையைவிட்டுப் போனீர்களே, எங்களை எழுப்பிச் சொல்லிவிட்டுப் போக வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?''
"எழுப்பிச் சொல்லியிருந்தால் நானும் ராகுலும் அழுது உங்கள் பயணத்தைத் தடுத்துவிடுவோம் என்று நினைத்தீர்களா?''
"கட்டிய மனைவியையும் குழந்தையையும் விட்டுவிட்டு நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் அரண்மனையைவிட்டுப் போன உங்களை "கெüதம புத்தர்' என்று கொண்டாடுகிறார்களே, நான் உங்களையும் குழந்தையையும் விட்டுவிட்டு நீங்கள் செய்ததுபோல யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் நள்ளிரவில் அரண்மனையை விட்டுப் போயிருந்தால் இந்த உலகம் என்னை என்ன சொல்லியிருக்கும்?''
சித்தார்த்தனின் மனைவி யசோதரை இப்படிக் கேட்டிருந்தால் புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார் என்று தெரியவில்லை.
ஆனால், தமிழ் இலக்கியத்தில் இதேபோல சந்தர்ப்பங்களும் அதற்கான பதிலும் காணப்படுகிறது. அப்படி ஒரு பெண்ணை "மணிமேகலை' என்று தமிழ் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை எனும் இரட்டைக் காப்பியங்களும் அந்தப் புத்தத் துறவியைப் போற்றுகின்றன.
இப்போதும் மணிமேகலை என்று தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். நாம் இடித்துக் கொண்டாலும் வாசல்நிலை இடித்துவிட்டது என்று சொல்கிறோம்; வழியில் தடுக்கி விழுந்தாலும் கல் தடுக்கிவிட்டது என்று காரணம் சொல்கிறோம்; குழந்தை வளர்ந்ததைச் சொல்லாமல் சட்டை சிறிதாகிவிட்டது என்கிறோம். மற்றவற்றின் மீது காரணத்தைச் சுமத்தித் தப்பித்துக் கொள்கிறோம்.
சுமத்துவதும் தப்பிப்பதும் சுயநலத்தின் பலவீனம்; நடந்ததற்கு வருந்துவது நல்ல மனதின் அடையாளம்; மன்னிப்புக் கேட்பது பெருந்தன்மையின் வெளிப்பாடு; தண்டனைக்கு உட்படுவது பண்பாட்டின் உச்சம்.
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமும், மனதைக் கொள்ளை கொள்ளும் மணிமேகலையும் பண்பாட்டின் உச்சமாக வெளிப்படுகின்றன...
சிலப்பதிகாரக் கானல்வரியில்,
திங்கள் மாலை வெண்குடையான்,
சென்னிச் செங்கோல் - அது ஒச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி!''
என்று கோவலன் பாடுகிறான்.
"சோழனுக்குக் காவிரி மனைவியாக இருந்தபோதும் கங்கையைச் சேர்த்துக்கொள்கிறான். அதற்காக ஊடல் கொள்ளாத காவிரி வாழ்க' என்று கோவலன் பாடியதும், மாதவி பதில் பாட்டுப் பாடுகிறாள்,
தம்முடைய தண்ணளியும், தாமும் தன்மான்தேரும்;
எம்மை நினையாது; விட்டாரோ? விட்டகல்க,
அம்மென் இரை அடும்புகாள்! அன்னங்காள்!
நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்!''
தமது அன்பினை மறந்து வேறொரு மங்கையிடம் அவன் மனம் விரும்பிப் போகிறது என்று நினைத்த மாதவி, காவிரியைப்போல் ஊடல் கொள்ளாமல் இருக்க நான் தயாரில்லை என்பதை அறிவிக்கிறாள்.
"எனது அன்பை நினைக்காமல் என்னை விட்டுப்போக நினைத்தால் போகட்டும்; என்னைவிட்டு அகல்க'' என்று பாடுகிறாள்.
கோபம்கொண்டு புறப்பட்டுப் போகிற கோவலன், மாதவியை, ""மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள்; சலம் புணர்க்கொள்கை சலதி'' என்றெல்லாம் திட்டுகிறான்.
கோவலன் கண்ணகியோடு பூம்புகாரை விட்டுப்போனது அறிந்த மாதவி மனம் வருந்தி ஒரு கடிதம் எழுதிக் கோசிகனிடம் கொடுத்து அனுப்புகிறாள். கடிதத்தைக் கோவலன் படிக்கிறான்.
அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்;
வடியாக் கிளவி மனம்கொளல் வேண்டும்;
குரவர்பணி அன்றியும் குலப்பிறப்பாட்டியோடு;
இரவிடைக் கழிதற்கு, என் பிழைப்பு அறியாது;
கையறு நெஞ்சம் கடிதல் வேண்டும்;
பொய்தீர்க் காட்சிப் புரையோய், போற்றி!'
இரவில், கண்ணகியோடு பூம்புகாரைவிட்டுப் புறப்பட்டுப் போனதற்கு நான் காரணமாகிவிட்டேனே என்று செய்யாத குற்றத்திற்குப் பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்கிறாள் மாதவி.
கடிதத்தைப் படித்த கோவலன், மாதவி தவறு செய்யவில்லை; நான்தான் தவறு செய்துவிட்டேன் என்று, ""தன்தீதிலள் எனத் தளர்ச்சி நீங்கி என்தீது என்றே எய்தியது'' உணர்ந்து வருத்தம் தெரிவிக்கிறான்.
கோவலன் கொலை செய்யப்பட்டதும் கண்ணகி, பொங்கி எழுந்து, பாண்டியன் அரண்மனைக்குச் சென்று வழக்குரைக்கிறாள். பாண்டியன் தவறு நடந்துவிட்டதை உணர்கிறான். ""பொன் செய் கொல்லன் தன்சொல் கேட்ட யானோ அரசன் யானே கள்வன்'' என்று கூறி உயிர்விடுகிறான். இவ்வளவுக்கும், என் தேவியின் கால் சிலம்பு ""கன்றிய கள்வன் கையதாகில் கொன்று அச்சிலம்பு கொணர்க'' என்றுதான் சொல்லி இருக்கிறான்.
அரசியின் காற்சிலம்பு அவன் கையில் இருந்தால்தான் கொல்லச் சொல்லி இருக்கிறான். சிலம்பு அரசியுடையதுதானா என்பதை உறுதி செய்யாமலேயே, கோவலன் கொல்லப்படுகிறான். ஆனாலும் கூட, பாண்டியன், கோவலன் கொல்லப்பட்டதற்குத் தான் பொறுப்பில்லை என்று கூறித் தப்பிக்க முயற்சி செய்யாமல் தனது ஆட்சியில் நடந்துவிட்ட தவறுக்குத் தானே பொறுப்பேற்று உயிர்விடுகிறான்.
கண்ணகியின் கோபம் தணியவில்லை. ""பட்டாங்குயானுமோர் பத்தினியேயாமாகில் ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும்'' என்று வஞ்சினம் கூறி ஊரையும் மக்களையும் எரிக்கிறாள்.
சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் எழுப்பிய பின்னர், புத்தமதத் துறவி மணிமேகலை, கண்ணகியையும் கோவலனையும் பார்க்க, பத்தினிக் கோட்டம் வருகிறாள். வணங்குகிறாள்.
மனதில் நெருடிக் கொண்டிருக்கும் கேள்வியோடு தெய்வச் சிலையாக இருக்கும் கண்ணகியைப் பார்க்கிறாள். சிலையோடும் உரையாடும் ஆற்றல் மணிமேகலைக்கு இருந்திருக்கிறது. கேள்வி அவளை விடவில்லை; கேட்டு விடுகிறாள்.
அன்புக் கடன் நில்லாது நற்றவம்படராது
கற்புக் கடன் பூண்டு நும்கடன்
முடித்தது அருளல் வேண்டும்''
என்று அழுது முன்நிற்கிறாள்.
அன்பு காட்டாமல் நல்ல நெறியில் நடக்காமல் ஊரையும் மக்களையும் எரித்தது ஏன் என்று கேட்கிறாள்.
தவறு செய்தது பாண்டிய மன்னரின் காவலர்கள். பாண்டியனும் தவறுக்குப் பொறுப்பேற்று உயிர் துறக்கிறான். பிறகும் ஏன் வெஞ்சினம் கொண்டு அப்பாவி மக்களை, மதுரை மாநகரைக் கண்ணகி தீக்கிரையாக்க வேண்டும்?
"ஆம் மகளே! தவறு செய்துவிட்டேன். கோபத்தில் செழுமையான நகரை எரித்துச் சிதைத்து விட்டேன். அந்தப் பாவம் என்னைவிடாது. எப்படியும் அதற்கான தண்டனையைப் பெறத்தான் போகிறேன்.'' என்று தான் செய்தது தவறுதான் என்பதை ஏற்றுக் கொள்கிறாள் கண்ணகி.
"சீற்றம் கொண்டு செழுநகர் சிதைத்தேன்.....அடுசினப்பாவம் எவ்வகையானும் எய்துதல் ஒழியாது!''
தண்டனைக்கு உட்படத்தான் போகிறேன் என்று கண்ணகி கூறியதாக மணிமேகலைக் காப்பியம் சொல்கிறது. மற்றவர்களே காரணம் என்று பழி சுமத்தாமல் தாமே உணர்ந்து வருந்துவதையும், ஆட்சியில் இருந்ததால் பொறுப்பேற்று உயிர்விடுவதையும், தப்பிக்க நினைக்காமல் தண்டனைக்கு உட்படுவதையும் சிலம்பும் மணிமேகலையும் காட்டுகின்றன. இவை மானுடப் பண்பாட்டின் சிகரங்கள்.
கண்ணகி எரித்த இடத்தில் மதுரை இப்போதும் இருக்கிறது. ஆனாலும் மாநகர்கள் தொடர்ந்து எரிக்கப்படுகின்றன. மக்கள் கொல்லப்படுகிறார்கள்; குழந்தைகளும் சிறுவர்களும் கூடக் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார்கள்.
கேள்வி கேட்கத்தான் மணிமேகலை போல புத்தமதத் துறவிகள் இல்லை. ஆனாலும் கேள்வி இருக்கிறது. மணிமேகலை என்கிற புத்தமதத் துறவியின் கேள்வியை இப்போது உலகம் கேட்கிறது!
ம. இராசேந்திரன் - கட்டுரையாளர்: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்.-நன்றி-தினமணி
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
தெரிந்த காப்பியங்கள் தெரியாத விஷயங்கள் நன்றி paகிர்வுக்கு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|