புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
27 Posts - 69%
ayyasamy ram
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
10 Posts - 26%
Ammu Swarnalatha
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
1 Post - 3%
M. Priya
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
70 Posts - 72%
ayyasamy ram
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
10 Posts - 10%
mohamed nizamudeen
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
4 Posts - 4%
Rutu
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
2 Posts - 2%
prajai
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
2 Posts - 2%
Jenila
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
2 Posts - 2%
viyasan
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
1 Post - 1%
M. Priya
என்ன பாவம் செய்தோமோ! Poll_c10என்ன பாவம் செய்தோமோ! Poll_m10என்ன பாவம் செய்தோமோ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன பாவம் செய்தோமோ!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Jan 18, 2013 9:51 am

போகிப் பண்டிகையின்போது பலராலும் குறிப்பிடப்படும்சொற்றொடர்: பழையன கழிதலும் புதியன புகுதலும். ஆனால், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தைப் பொருத்தவரை, புதிய துணை வேந்தராக டாக்டர் டி.சாந்தாராம் பொறுப்பேற்ற 30 நாள்களிலேயே, தை பிறந்தவுடன், புதியன கழிதலும், பழையன புகுதலுமாகமுடிந்துள்ளது.
:-
மருத்துவ மாணவர்கள் ஒவ்வொரு பாடத்தேர்விலும் (எழுத்துத்தேர்வு இரு தாள் (தியரி) மற்றும் செய்முறைத் தேர்வு) குறைந்தது 50% மதிப்பெண் பெற்றால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என்று முந்தைய துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் கொண்டுவந்த நடைமுறையைக் கைவிட்டு, பழையநடைமுறைக்கே திரும்புவது என்று புதிய துணைவேந்தர் முடிவெடுத்து அறிவித்துள்ளார். இது மருத்துவ மாணவர்களிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதில் வியப்பொன்றுமில்லை.
:-
எழுத்துத் தேர்வில் 40% கட்டாயம் என்றும், ஆனால் எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு ஆகியவற்றின் மதிப்பெண்களின் மொத்த சராசரியில் 50% இருக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.
எழுத்துத் தேர்வுக்கு 40% மதிப்பெண் கட்டாயம் என்பதை ஏன் செய்முறைத் தேர்வுக்கும் அறிவிக்கவில்லை? காரணம், எழுத்துத்தேர்வில் மாணவர்கள் எழுதுவதுதான் விடை. ஆனால், செய்முறைத் தேர்வில் ஆசிரியர்கள் கூடுதலாக மதிப்பெண் போட்டுக் கொடுக்க வாய்ப்புண்டு. ஆகவே, ஒரு மாணவர் மொத்த சராசரி 50% பெற செய்முறைத் தேர்வு துணைபுரியும்.
:-
இதுமட்டுமல்ல, ஆண்டுக்கு 270 வேலைநாள்கள் என்பதை 240ஆக பழையபடி குறைத்துவிட்டார். மாணவர்களின் வருகைப்பதிவு 90% கட்டாயம் என்பதையும் சற்று தளர்த்தி 85% ஆக குறைத்துள்ளார். 30 வேலைநாள்களைக் குறைப்பது மாணவர்களுக்கு மகிழ்ச்சி என்பது ஒருபக்கம் இருக்க, கற்பித்தல் பணியில் உள்ள மருத்துவப் பேராசிரியர்களுக்கு பெருமகிழ்ச்சியை அளித்துள்ளது.
:-
மருத்துவக் கல்வியில் மிக இன்றியமையாத் தேவை, "பிரேக்சிஸ்டம்' எனப்படும் முறை மாற்றப்பட வேண்டும் என்பது மட்டுமே. மதிப்பெண்களைக் குறைப்பதல்ல.
ஒரு மாணவர் முதலாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால், அந்த வகுப்பிலேயே தொடர வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல. உடனடியாக அவர்களுக்கு மறுதேர்வு நடத்தி, அவர்கள் படிக்கவும் மறுதேர்வு எழுதவும் அடுத்த சில நாள்களிலேயே ஒரு வாய்ப்பு கொடுப்பது அவசியம். அத்துடன் மற்ற தொழில்நுட்பக் கல்வி நடைமுறையைப்போல, அடுத்த பருவத் தேர்வில் அந்த"அரியர்ஸை' எழுதித் தேர்ச்சி பெறும் நடைமுறையையும் அமல்படுத்தலாம்.
:-
இது ஒன்றைத் தவிர, ஒவ்வொரு தேர்விலும் கட்டாய மதிப்பெண் 50 என்பதை மீண்டும் மொத்த சராசரி மதிப்பெண் 50% என்று மாற்றுவதோ, கட்டாய எழுத்துத் தேர்வுக்குக் கட்டாய மதிப்பெண் 40% என்றுகுறைப்பதோ, மாணவர்களுக்கு மகிழ்ச்சி தருமே தவிர, வருங்காலத் தமிழக மக்களுக்கு நன்மை சேர்க்காது.
:-
மருத்துவ மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை மனதிற்கொண்டு அறிவிக்கப்படும் இத்தகைய மாற்றங்கள், தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாகப் பெருகியுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்குப் பேருதவியாக அமையும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் அனைவரும் பெரும் பணக்காரர்களின் பிள்ளைகள் அல்லது ஏற்கெனவே மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர்களின் பிள்ளைகள். இவர்களைக் கரை சேர்ப்பதற்கு இத்தகைய நெளிவு சுளிவுகள் உதவக்கூடும்.
:-
பொதுஒதுக்கீடு, இடஒதுக்கீடு எதுவான போதிலும், பிளஸ் 2 தேர்வின் முதன்மைப் பாடங்கள் ஒவ்வொன்றிலும் குறைந்தது மதிப்பெண் 98% எடுக்க முடிகின்ற மாணவர்களால்தான்கலந்தாய்வு மூலம் மருத்துவக் கல்லூரியில் சேர முடிகிறது. அப்படியிருக்கும்போது, மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவுடன் மதிப்பெண் 50% பெறுவதே பெரும்பாடாக மாறிவிடுகிறது என்றால், அதற்கு என்ன காரணம்?
:-
எழுத்துத் தேர்வில் 200க்கு 190க்கு மேல் பெறும் மாணவர்களை தமிழகத்தின் சிறந்த மாணவர்கள் என்றுதான் கருதியாக வேண்டும். இப்படிப்பட்ட மாணவர்கள், கலந்தாய்வின் மூலம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த பிறகு, அவர்களால் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 50% மதிப்பெண் பெற முடியவில்லை என்றால், பிரச்னை கல்விமுறையில்தான்என்பது தெளிவு.
:-
இந்த மாணவர்கள் மனப்பாடக் கல்வி முறைப் பயிற்று முறையில் மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் அவர்களுக்கு சுயமான அறிவுப்புலன் இல்லை என்று பொருள். அதனால்தான் அவர்களுக்கு 50% மதிப்பெண்கள்கூட கடினமாக இருக்கிறது.
:-
மருத்துவக் கல்லூரி மாணவர்சேர்க்கைக்கு முன்புபோலவே, மீண்டும் நுழைவுத் தேர்வு நடத்தி, நுழைவுத்தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மதிப்பெண்களின் கூட்டுத்தொகை அடிப்படையில்"கட்-ஆஃப்' அறிவிப்பதுதான், தமிழ்நாட்டில் நாளைய மருத்துவர்கள் திறமையானவர்களாக இருக்க வழிசெய்வதாக அமையும்.
:-
அப்படி இல்லாத நிலையில், பிளஸ் 2 தேர்வில் வெறும் கிளிப்பிள்ளைகளை 200க்கு 200 மதிப்பெண் பெறச் செய்து, மருத்துவக் கல்லூரியில் அவர்களைச் சேர்த்துக்கொண்ட பின்னர், பல்கலைக்கழக கெளரவத்தைக் காப்பாற்ற "எப்படியாவது' தேர்ச்சி அளிக்கும் இப்போதைய மாறிய நடைமுறை, தரமற்ற இளம் மருத்துவர்களைத் தமிழ்நாட்டில் உருவாக்கத்தான் உதவும்.
வெளிநாடுகளில் இப்போதெல்லாம் இந்திய மருத்துவர்கள் என்றாலே சோதனைக்கு உட்படுத்தி திறமையைப் பரிசோதித்த பிறகுதான் உயர் கல்விக்கோ வேலைக்கோ எடுத்துக் கொள்கிறார்கள். அந்த வசதி நமக்குக் கிடையாதே! நமது மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கிவிடும் மருத்துவர்களிடம் சிகிச்சைபெறுவதைத் தவிர நமக்கு வேறுஎன்ன வழி...
:-
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக