புதிய பதிவுகள்
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Today at 6:30 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
by ayyasamy ram Today at 6:30 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
bhaarath123 | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’!
ஒரு பேருந்தின் நடத்துநர் எப்படி இருப்பார்? அவருக்கு தெரிந்த வார்த்தைகள் என்னவாக இருக்கும்?
கொஞ்சம் சிடு சிடு முகத்துடன், ‘சார்.. டிக்கெட்… டிக்கெட்… சில்லறையா கொடுங்க.. படிக்கட்டுல நிக்காதீங்க… உள்ள வாங்க… காலங்காத்தால 100 ரூபா நோட்டக் கொடுத்து இம்சை பண்ணா எப்படிங்க?’
ஆனால் கனகு சுப்பிரமணியைப் பார்த்தால், உங்கள் நினைப்பு அடியோடு மாறிப் போகும். பாட்ஷா பார்த்த பிறகு ஆட்டோக்காரர்களை பரிவுடன் பார்க்கத் தொடங்கியது போல, கனகுவைப் பார்த்த பிறகு கண்டக்டர்கள் என்றதும் ஒரு மரியாதை வந்துவிடும்.
அப்படி என்னதான் பெரிதாக செய்துவிட்டார் கனகு?
பெரிதாக அல்ல… தன்னால் முடிந்த ஒரு நல்ல விஷயத்தை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்.
எல் கனகு சுப்பிரமணியம் ஒரு அரசுப் பணியாளர். மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் அரசுப் பேருந்தில் நடத்துநர் பணி.
கனகுவின் காலை திருக்குறளுடன் விடிகிறது. ஒரு குறளையும், அதற்கான விளக்கத்தையும் நன்கு படித்து வைத்துக் கொள்கிறார். ஓரிரு திருக்குறள் புத்தகங்களையும் உடன் எடுத்துக் கொண்டு மேட்டுப்பாளையும் பேருந்து நிலையத்துக்கு வருகிறார். காலையில் கிளம்பும் முதல் பேருந்தில் தன் பணியை ஆரம்பிக்கிறார். பயணிகளுக்கு சீட்டு கொடுத்துவிட்டு, அமர்கிறார்.
காலை 7.15 மணிக்கு பேருந்து கல்லார் என்ற இடத்தில் சில நிமிடம் நிற்கிறது. உடனே செயலில் இறங்குகிறார் கனகு. டிக்கெட் பையை வைத்துவிட்டு, பேருந்தின் படிக்கட்டில் நின்றபடி பயணிகளை நோக்கி, “அன்பு பயணிகளுக்கு… காலை வணக்கம். உங்களுடைய இரண்டு நிமிடத்தை எடுத்துக் கொள்ளலாமா?” என்று கேட்டுவிட்டு, ஒரு திருக்குறளையும் அதற்கான விளக்கத்தையும் சொல்கிறார் கனகு.
காலை நேர இதமான குளிரில், கனகுவின் திருக்குறள் விளக்கம் பயணிகளை சிலிர்க்க வைக்கிறது. அத்தோடு நில்லாத கனகு, அடுத்து பேருந்தை சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள், சுற்றுப் புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள், சாலையில் பாதுகாப்புடன் செல்லுங்கள் என பொதுவான விழிப்புணர்வு செய்திகளை சொல்கிறார்.
“பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், முடிந்த வரை மரங்கள் வளர்ப்போம், அட நட முடியாவிட்டாலும் பரவாயில்லை.. இருக்கும் மரங்களை அழிக்காமல் இருப்போம். ஒவ்வொருவரும் ரத்த தானம் செய்வோம், பல உயிர்களைக் காக்க அது உதவும்,” என்பதுடன் அவரது அன்றாட விழிப்புணர்வு பரப்புரை நிறைவடைகிறது.
அத்தோடு நில்லாமல், அடுத்து அவர் செய்வது பயணிகளை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அந்தப் பேருந்தில் பயணிப்பவர்களில் யாராவது பிறந்த நாள் அல்லது திருமண நாள் கொண்டாடுபவர்களாக இருந்தால் அவர்களுக்கு ஒரு திருக்குறள் புத்தகத்தைப் பரிசளிக்கிறார்.
அப்படி யாருமே கொண்டாடவில்லை என்றால், அந்தப் பேருந்தில் பயணிக்கும் ஒரு ஆசிரியர் அல்லது போலீஸ்காரருக்கு அந்தப் புத்தகத்தைக் கொடுத்து கவுரவிக்கிறார். அட, அலுவலகத்தில் ஓய்வு பெற்ற யாராவது வந்தாலும் இந்தப் பேருந்திலேயே பிரிவுபசார விழாவும் உண்டு!
இவ்வளவையும் மிகச் சில நிமிடங்களில் முடித்துவிட்டு, மீண்டும் பயணிகளுக்கு வாழ்த்துக் கூறுகிறார் கனகு. பேருந்து ஊட்டியௌ நோக்கிச் செல்ல, புது உற்சாகம், நிறைவான மன நிலையுடன் தொடர்கின்றனர் பயணிகள்.
கனகு சுப்பிரமணியத்துக்கு வேண்டியதெல்லாம் இந்த சந்தோஷமும் நிறைவும்தான். தன்னைப் பொறுத்தவரை, பயணிகளும் அவரது குடும்பத்தினரைப் போன்றவர்களே என்கிறார் கனகு. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரையிலான அந்த சிலமணி நேரப் பயணம் பயணிகளுக்கு பயனுள்ளதாக, விழிப்புணர்வு தருவதாக, மகிழ்ச்சியானதாக அமைய வேண்டும் என்பதுதான் அவரது இந்த பணியின் நோக்கம்.
எப்போதிலிருந்து இந்த சேவையை அவர் செய்கிறார்?
“ஒரு முறை இரு பயணிகள், பேருந்துக்குள் எழுதப்பட்டிருந்த குறள்களைக் காட்டி, இதுக்கெல்லாம் கண்டக்டருக்கும் டிரைவருக்கும் அர்த்தம் தெரியுமா?” என்று கிண்டலாகக் கேட்டனர். அன்று ஆரம்பித்ததுதான் இந்த திருக்குறள் பணி,” எனும் கனகு கடந்த 10 ஆண்டுகளாக திருக்குறள் புத்தகங்களைப் பரிசளித்து வருகிறார். பல நூறு பேர் இவரிடம் திருக்குறள் பரிசு பெற்றுள்ளனர்!
கனகுவின் இன்னொரு முக்கியப் பணி, தனது ஓய்வு நேரத்தில் கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு இலக்கிய வகுப்பு எடுப்பது. “சிறையில் உள்ள கைதிகள் விடுதலையாகி திரும்பும்போது மீண்டும் குற்றச் செயல்களுக்கு அவர்கள் மனம் செல்லக் கூடாது. அதற்கு இந்த வகுப்புகள் உதவக்கூடும். யார் கண்டார்கள், நாளை அவர்களில் பல எழுத்தாளர்களும் கவிஞர்களும் கூட உருவாகக் கூடும்,” என்கிறார்.
இதுதவிர, இந்தக் கைதிகளுக்காகவே ஒரு இசை ஆசிரியரை தனது செந்தமிழ் அறக்கட்டளை மூலம் நியமித்துள்ளார். வாராவாரம் இவர் கைதிகளுக்கு இசை சொல்லித் தருகிறார். கைதிகளிள் திறமையுள்ளவரைப் பாட வைக்கவும் செய்கிறார்கள்.
வருகிற மகளிர் தினத்தன்று, சிறையில் உள்ள பெண் கைதிகள் இடையே ஒரு கருத்தரங்கமும் நடத்த திட்டமிட்டுள்ளார் கனகு.
பெண் கைதிகள் உள்ள பிரிவில் கனகுவை அடிக்கடி பேசச் சொல்லி கேட்பார்களாம். பழைய பாடல்கள், குறிப்பாக எம்ஜிஆர் பாடல்களை அருமையாகப் பாடுகிறார் கனகு. பெண் கைதிகள் மத்தியில் இவர் பாட்டுக்கு ஏக வரவேற்பு. குறிப்பாக ‘தாயில்லாமல் நானில்லை…’ என்ற பாடலைப் பாடும்போதெல்லாம், பாடும் இவரும், கேட்கும் பெண்களும் கண்ணீர் வடிப்பது வழக்கம் என்கிறார்.
தன்னுடைய இந்தப் பணிக்கு, சிறு வயதில் தான் கஷ்டப்பட்ட போது உதவிய ஆசிரியர் அற்புதராஜ்தான் காரணம் என்று நினைவு கூறும் கனகு, வாழ்க்கையில் தனக்கு வழிகாட்டியாகக் கூறுவது புரட்சித் தலைவர் எம்ஜிஆரைத்தான்.
“சின்ன வயதிலிருந்தே அவர் படத்தைத்தான் பார்த்து வளர்ந்தேன். அவர்தான் எனக்கு ரோல் மாடல். ஒழுக்கம் தவறாமை, நல்ல பழக்கங்கள், பெரியவர்களை மதித்தல், முடிந்த உதவியைச் செய்தல் என எல்லாவற்றுக்கும் அவர்தான் எனக்கு வழிகாட்டி. எம்ஜிஆர் பாடல்களைப் பாடாமல் நான் என் பேச்சை ஒருபோதும் முடித்ததில்லை,” என்கிறார் உணர்ச்சிப் பொங்க!
கனகு சுப்பிரமணியத்தை பாராட்ட வேண்டும், பேச வேண்டும் என்று உங்கள் மனசு துடிப்பது தெரிகிறது… இதோ அவரது அலைபேசி எண்: 96009-87811
Courtesy: The ஹிந்து
http://www.thehindu.com/life-and-style/metroplus/article2896247.ece
அற்புதமான மனிதரைப்பற்றியப் பகிர்வு..ஆங்காங்கே இவரைப்போன்ற நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.. என்ன, கெட்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகங்கள் இதுபோன்ற நல்லவிசயங்களையும், நல்லவர்களையும் அடையாளங்காட்டினால் மற்றவர்களுக்கு இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஆர்வம் வரும்.. ஊடகங்கள் செய்யவேண்டிய வேலையை நம்போன்ற சமூகத்தளம் உபயோகிப்பவர்கள் செய்வொம்...நல்லதை பரப்புவோம்.பகிர்விற்கு நன்றி...
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன்
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
- GuestGuest
அருமை பதிவு நண்பா...
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
முதலில் நடத்துனருக்கு ஒரு சபாஷ் பதிந்த ரஷ்லக் அவருக்கும் நன்றிகள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
திரு. கனகு அவர்களுக்கு என் புகழாரம்.
சிடு சிடு முகமோ இல்லை
சில்லறைக்கு சண்டை இல்லை
சிரிப்பது தொலைவதில்லை
சிந்திக்க வைப்பதே எல்லை
தினம் ஒரு குறளது சொல்லி
திருத்துவார் மனிதர் தம்மை
தினம் ஒரு திருக்குறள் நூலை
திருப்தியாய் தருவதே வேலை
பேருந்தைப் பேணிக் காக்கும்
சுற்றுப்புற சூழல் காக்கும்
சாலைகள் சோலைகள் காக்கும்
கனகுவை தெய்வம் காக்கும்
பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் என்பார்
மரங்களை நடுவோம் என்பார்
மரம்நட முடியா விட்டால்
நட்டதை வெட்டோம் என்பார்
கைதிக்கு இயல் இசை
கைதிக்குக் கருத்தரங்கம்
கைதியின் இதயச் சிறையில்
கனகுதான் ஆயுள் கைதி
எம்ஜியார் எளியோரின் தலைவர்
கனகுவோ கைதிகள் தலைவர்
கைதியை நல்வழி திருத்துனர்
கனகுதான் என்னையும் நடத்துனர்.
சிடு சிடு முகமோ இல்லை
சில்லறைக்கு சண்டை இல்லை
சிரிப்பது தொலைவதில்லை
சிந்திக்க வைப்பதே எல்லை
தினம் ஒரு குறளது சொல்லி
திருத்துவார் மனிதர் தம்மை
தினம் ஒரு திருக்குறள் நூலை
திருப்தியாய் தருவதே வேலை
பேருந்தைப் பேணிக் காக்கும்
சுற்றுப்புற சூழல் காக்கும்
சாலைகள் சோலைகள் காக்கும்
கனகுவை தெய்வம் காக்கும்
பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் என்பார்
மரங்களை நடுவோம் என்பார்
மரம்நட முடியா விட்டால்
நட்டதை வெட்டோம் என்பார்
கைதிக்கு இயல் இசை
கைதிக்குக் கருத்தரங்கம்
கைதியின் இதயச் சிறையில்
கனகுதான் ஆயுள் கைதி
எம்ஜியார் எளியோரின் தலைவர்
கனகுவோ கைதிகள் தலைவர்
கைதியை நல்வழி திருத்துனர்
கனகுதான் என்னையும் நடத்துனர்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பாராட்டு கவிதை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|