புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_m10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10 
21 Posts - 66%
heezulia
தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_m10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_m10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10 
63 Posts - 64%
heezulia
தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_m10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_m10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_m10தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 27, 2012 8:16 am

போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அவருடன் வேலை பார்த்த போலீஸ் ஏட்டு ஒருவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்

நெல்லை மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள இலஞ்சி யோகீசுவரர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி(வயது 57).

தென்காசி அருகே சுரண்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார். இவருடைய குடும்பத்தினர் தென்காசியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார்கள்.

சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி சுரண்டை போலீஸ் நிலையம் அருகில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். விடுமுறை நாட்களில் மட்டும் ஊருக்குச் சென்று வந்தார்.

ஒரே வீட்டில் தங்கினர்

சப்-இன்ஸ்பெக்டர் இசக்கியுடன் போலீஸ் ஏட்டு சண்முகராஜா (48) என்பவரும் தங்கி இருந்தார். இவருக்கு ஆவுடையானூர் அருகே உள்ள கோட்டைவிளைïர் கிராமம் சொந்த ஊர் ஆகும்.

வேலையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் அவர்களுக்குள் திடீர் என்று கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் அவ்வப்போது மோதல் ஏற்படத் தொடங்கியது. மேல் அதிகாரிகளிடம் ஒருவரைப் பற்றி ஒருவர் புகார் கூறி வருவதாக இருவரும் நினைத்ததால் பகை அதிகமானது.

திடீர் இடமாற்றம்

இந்த நிலையில், திடீர் என்று ஏட்டு சண்முகராஜா நெல்லை பேட்டையை அடுத்த சுத்தமல்லி போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.

தன்னைப் பற்றி மேல் அதிகாரிகளிடம் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி அவதூறாக ஏதோ கூறியதால்தான் இடமாற்றம் செய்யப்பட்டதாக சண்முகராஜா நினைத்தார்.

தேடிச் சென்றார்


நேற்று முன்தினம் சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் ஏட்டு சண்முகராஜா வேலையில் சேர்ந்தார்.

நேற்று மாலை 4 மணி அளவில் அவருக்கு பத்தமடையில் உள்ள ஒரு கோவில் விழா பாதுகாப்புக்கு செல்ல வேண்டும் என்று பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், மாலை 4 மணிக்கு பின்னரும் சண்முகராஜா வேலைக்கு செல்லவில்லை.

நேராக சுரண்டை போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி இல்லை. இதனால் போலீசார் ஓய்வுக்காக தங்கும் வாடகை வீட்டுக்குச் சென்றார். அவர் எதிர்பார்த்தபடி இசக்கி அந்த வீட்டில் இருந்தார்.

சண்முகராஜா சென்ற போது அங்கிருந்த மற்ற போலீசார் சென்றுவிட்டனர். இருவருக்கும் திடீர் என்று வாக்குவாதம் ஏற்பட்டது. ``சுத்தமல்லிக்கு என்னை பணிமாற்றம் செய்வதற்கு காரணம் நீதான்?'' என்று, கோபமாக இசக்கியைப் பார்த்து கூறினார். அவரும் பதிலுக்கு ஏதோ பேசினார்.

குத்திக் கொலை

இதில் ஆத்திரம் அடைந்த சண்முகராஜா மறைத்து எடுத்து வந்த கத்தியால் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கியின் வயிற்றில் பலமாக குத்தியதாக தெரிகிறது. இதை சற்றும் எதிர்பார்க்காத இசக்கி அலறினார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் ஏட்டு சண்முகராஜா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

தகவல் அறிந்து போலீஸ் நிலையத்தில் இருந்தும் போலீசார் ஓடி வந்தனர். வயிற்றில் பலமான கத்திக்குத்து என்பதால், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்து இசக்கி துடித்துக் கொண்டு இருந்தார். உடனடியாக வயிற்றில் கட்டு போட்டு, ஆம்புலன்ஸ் வேன் மூலம் அருகே உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்றனர்.

டாக்டர்கள் அவரை பரிசோதித்து விட்டு இசக்கியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறினர். சுமார் 5 அங்குல அளவுக்கு வயிற்றில் கத்திக்குத்து காயம் இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியில் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி பரிதாபமாக இறந்தார்.

தீவிரமாக தேடுகிறார்கள்

இதற்கிடையே இசக்கி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சுரண்டையில் காட்டுத்தீ போல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி, துணை சூப்பிரண்டு (ஆலங்குளம்) லயோலா இக்னேசியஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

தப்பி ஓடிய ஏட்டு சண்முகராஜாவை உடனடியாக கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

சம்பவம் குறித்து சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர்தேவ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

குடும்பத்தினர் கதறல்

குத்திக்கொலை செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிக்கு கல்யாணி பிரபா (47) என்ற மனைவியும், 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் ராதா, நித்தியா, சிந்தா என்ற சிவா ஆகிய 3 பேரையும் தூத்துக்குடியில் திருமணம் செய்து கொடுத்து உள்ளனர். கடைசி மகள் ஆனந்தி, மகன் திருமலைக்குமார் ஆகியோருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

தினத்தந்தி



தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Fri Jul 27, 2012 12:02 pm

இதில் ஆத்திரம் அடைந்த சண்முகராஜா மறைத்து எடுத்து வந்த கத்தியால் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கியின் வயிற்றில் பலமாக குத்தியதாக தெரிகிறது. இதை சற்றும் எதிர்பார்க்காத இசக்கி அலறினா

இது எங்க ஊரு தான், ஆரம்பிச்சிட்டாங்களா இவங்களுக்கு இதே வேலையா போச்சி எதிர்ப்பு



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

தென்காசி அருகே பயங்கரம்: சப்-இன்ஸ்பெக்டர் குத்திக் கொலை Mgr
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Jul 27, 2012 3:58 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம்



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக