புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
31 Posts - 36%
prajai
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
3 Posts - 3%
Jenila
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
2 Posts - 2%
jairam
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
1 Post - 1%
M. Priya
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
7 Posts - 5%
prajai
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
6 Posts - 4%
Jenila
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
4 Posts - 3%
Rutu
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
2 Posts - 1%
viyasan
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
1 Post - 1%
M. Priya
இது நான் பெற்ற பெண்!  Poll_c10இது நான் பெற்ற பெண்!  Poll_m10இது நான் பெற்ற பெண்!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது நான் பெற்ற பெண்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jul 21, 2012 10:38 pm

திருமயிலாப்பூரிலே சிவநேசஞ்செட்டியார் என்றொருவர் வாழ்ந்து வந்தார். பரமேசுவரனிடத்திலே மிகுந்த ஈடுபாடு. ஒரு கோடிக்குச் சொத்திருக்கும். அவர் மனைவியார் மிக்க உத்தமி. அவர் வீட்டில் கட்டில் இருந்தது. தொட்டில் இல்லை. கட்டில் நம்ம விருப்பத்துக்கு வரும். தொட்டில் இறைவன் கொடுத்து வர வேண்டும். குழந்தை இல்லையே என்று ஏங்கினார்.

தானம், தர்மம், தவம் முதலியன செய்தார். பிரதோச விரதம், கார்த்திகை விரதம், சோமவார விரதம் முதலியன அனுட்டித்தார்.
அவர் செய்த தவத்தின் பயனாக அந்த அம்மை மணிவயிறு வாய்க்கப் பெற்றாள். பத்துமாதம் பொறுத்து ஒரு பெண் குழந்தை இலட்சுமியைப் போலப் பிறந்தது. பூம்பாவை என்று பெயர் சூட்டினார்.

ஐந்து வயதானவுடனே ஆசிரியர்கள் எல்லாம் வந்து பயிற்றுவித்தனர். கற்பூரத்தில் தீ வைக்கிற மாதிரி கல்வி ஞானம் உண்டாயிற்று. வயது ஏழானது. தலைவாரிப்பின்னிச் சடையிட்டால் நிலத்தில் வந்து விழும் நடுவில் ஒட்டில்லாமல். தந்தையாருக்கு அளவற்ற மகிழ்ச்சி.

என் குழந்தையை ஞானசம்பந்தருக்குத் தருவேன் என்றும் உற்றாரும் ஊராரும் அறிய பிரகடனம் செய்தார். அவர்களது திருமாளிகைக்குப் பின்புறம் நந்தவனம். அங்கே மலர் பறிக்க பூம்பாவை போனாள். அங்கிருந்த அரவம் தீண்டியது. எத்தனை எத்தனையோ மருத்துவம். எத்தனை எத்தனையோ மாந்திரீகம் செய்தும் குழந்தைப் பிழைக்கவில்லை. விதியை வென்றவர்கள் யார்?
குழந்தை மாண்டுவிட்டது. தாய் தந்தையருக்கு அளவு படாத துன்பம். அழுது அழுது நின்றனர். பின்னர் பிரேதத்தைச் சுட்டுச் சாம்பலையும் எலும்பையும் ஒரு மண் ஏனத்திலே வைத்து குழந்தை பூண்டிருந்த அணிகலன்களை இட்டுப் பார்த்துப் பார்த்து அழுகின்றார்கள்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்து ஐந்தாண்டுகள் அப்பாலே ஞானசம்பந்தர் திருவொற்றியூருக்கு எழுந்தருளினார். அவரை திருமயிலாப்பூருக்கு அழைத்துச் சென்றார்கள். சம்பந்தப் பெருமான், கற்பகவல்லி அம்மையையும் கபாலீச்சுரப் பெருமானையும் வணங்கினார். அப்போது செட்டியார் சம்பந்தப்பெருமானுடைய திருவடியில் வீழ்ந்து அந்த மண் பானையை வைத்தார். அதிலேயிருந்த எலும்பும் சாம்பலும் கள்டு, “செட்டியாரே இது என்ன’” என்று பெருமான் கேட்டார்.

அவர் அழுது கொண்டே, “குருநாதா, குழந்தையில்லாத அடியேன் தவஞ்செய்து ஒரு பெண் மகவைப்பெற்றேன். பூம்பாவை என்று பெயரிட்டேன். அப்பெண்ணைத் தங்களுக்குத் தருவதாகப் பிரகடனம் செய்தேன். ஐயனே, நீங்கள் தீண்டவில்லை. அரவம் தீண்டி விட்டது. உடையவரிடத்திலே உடமையை ஒப்புவித்து விட்டேன்” என்றார்.

சுற்றிலும் சமண முனிவர்கள் இருந்து வேடிக்கை பார்க்கின்றார்கள். அப்போது சம்பந்தர், :செட்டியார், உங்கள் குழந்தை பிழைக்கும். ஏனென்றால், உடம்புதானே போய் விட்டது. ஆன்மாவுக்கு அழிவில்லையே. ஆன்மா என்றைக்கும் உண்டு என்றார். பின்வரும் பதிகத்தையும் பாடினார்.

மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.

மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்.

வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்தொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.

ஊர்திரை வேலை யுலாவும் உயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்.

மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடுந்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
அடலானே றூரும் அடிக ளடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்.

மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்திரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்.

தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
பண்ணார் பதினெண் கணங்கள்தம் அட்டமிநாள்
கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்.

நற்றாமரை மலர்மேல் நான்முகனும் நாரணனும்
உற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக்
கற்றார்க ளேத்துங் கபாலீச்சரம் அமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய்.

உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப் போர்க்கும்
இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான்
பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்.

கானமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான்
ஞானசம் பந்தன் நலம்புகழ்ந்த பத்தும்வலார்
வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே.

.
பதிகம் பாடியவுடன் குடம் வெடித்துப் பன்னிரண்டு வயதுப் பெண் வெளியே வந்தாள். ஆயிரமாற்றுத் தங்க விக்கிரகம் போல் விளங்கினாள். சமணர்கள் கண்டு வெட்கினர்.

தாய் தந்தையர் அளவற்ற மகிழ்ச்சியடைந்தனர். சிவநேசஞ்செட்டியார், சம்பந்தப் பெருமானை வணங்கி “ சுவாமி, ஒரு கோடி சொத்து சீர்வரிசைக்கும் குறைவில்லை. என் பெண்ணை எற்றுக் கொள்ளுங்கள்.என்றார். பெற்ற அப்பாவே பெண்ணைத்தர சம்மதித்தால் எந்தக் கிழவன் வேண்டாமென்பான்?

சைவத்திலே வந்தவர்கள் ஆசாபாசம் துறந்தவர்கள். ஞானசம்பந்தப் பெருமகனார், “செட்டியார், நீங்கள் பெற்ற பெண் மாண்டுவிட்டது. இது நான் பெற்ற பெண். இது என்னுடைய குழந்தை” என்றார்.

(திருமுருக கிருபானந்த வாரியார் சொற்பொழிவில் இருந்து)


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jul 21, 2012 10:43 pm

பகிர்விற்கு நன்றி சாமி அண்ணா நன்றி

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon Jul 23, 2012 9:41 am

சைவத்திலே வந்தவர்கள் ஆசாபாசம் துறந்தவர்கள். ஞானசம்பந்தப் பெருமகனார், “செட்டியார், நீங்கள் பெற்ற பெண் மாண்டுவிட்டது. இது நான் பெற்ற பெண். இது என்னுடைய குழந்தை” என்றார்.

இப்படிப்பட்ட சம்பந்தர் ஆரம்பித்த மதுரை ஆதீன மடத்தில் இப்போது நடக்கும் கொடுமையை என்ன சொல்வது?

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Tue Jul 24, 2012 9:36 am

நல்ல பதிவு!!! புன்னகை

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jul 25, 2012 11:12 pm

ஆரூரன் wrote:சைவத்திலே வந்தவர்கள் ஆசாபாசம் துறந்தவர்கள். ஞானசம்பந்தப் பெருமகனார், “செட்டியார், நீங்கள் பெற்ற பெண் மாண்டுவிட்டது. இது நான் பெற்ற பெண். இது என்னுடைய குழந்தை” என்றார்.

இப்படிப்பட்ட சம்பந்தர் ஆரம்பித்த மதுரை ஆதீன மடத்தில் இப்போது நடக்கும் கொடுமையை என்ன சொல்வது?


மதுரை ஆதின மடம் சம்பந்தர் ஆரம்பித்தது அல்ல ஆரூரன். அந்தப் பக்கம் வந்தபொழுது அங்கே தங்கியுள்ளார்.. அவ்வளவே!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக