புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை Poll_c10என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை Poll_m10என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை Poll_c10 
30 Posts - 50%
heezulia
என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை Poll_c10என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை Poll_m10என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை Poll_c10என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை Poll_m10என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை Poll_c10என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை Poll_m10என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை Poll_c10 
72 Posts - 57%
heezulia
என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை Poll_c10என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை Poll_m10என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை Poll_c10என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை Poll_m10என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை Poll_c10என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை Poll_m10என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Mon May 28, 2012 6:11 pm

என்னுடைய பார்வையில் கடவுள்....


இந்த பதிவை படித்து முடிக்கும் வரை ஒரு ஒரு நிமிடம் கடவுள் என்பதை பற்றி நாம் இது வரை எண்ணி வந்ததை அப்படியே நிருத்திவிடுவோம். அப்போதுதான் கடவுளை பற்றி நான் என்ன கூற முயல்கிறேன் என எளிதில் உணரலாம்.




உலகைப் படைத்தது யார்..?

உயிரை படைத்தது யார்..?

நம்மை இயங்கச் செய்வது யார்..?

இது அணைத்திற்க்கும் காரணம் யார்..?

இதற்கு என்னால் இரண்டு பதில்கள் பொருந்தும் விதத்தில் கூற முடியும்


1.இவையனைத்தும் எதேட்சையாக நடந்திருக்கும்.

அதாவது அணைத்தும் எதிர்பாராமல் நடந்திருக்கலாம்.

கணித கோட்பாடான நிகழ்தகவின் (probability) படி பார்த்தால்,
நம் பெருவெளியில் எத்தனையோ கோடி கோள்கள் உள்ளன.
அதில் உயிர்கள் வாழ ஏதுவான இடத்தில் ஒரு கோள் அமைந்ததற்கு நாம் வியக்க வேண்டியதில்லை. அப்படி அமையப்பெற்றதுதான் நம் பூமி,அதில் தோன்றிய உயிர்கள் மற்றும் அணைத்தும்.

ஆனால் பூமியானது உயிர்வாழ முழுதும் தகுந்த இடமாக உள்ளதே, ‘ஒரு சிறந்த ஆசிரியர் இன்றி சிறந்த மாணவன் உண்டாக முடியுமா?’, ‘ஒரு சிறந்த குயவன் இன்றி சிறந்த பாணை உண்டாகுமா?’, ‘ஒரு சக்தி இல்லாமல் இது முடியுமா?’ என நமக்கு தோன்றும்.

2.எனவே ஒரு சக்தி இதை செய்கிறது என கொள்ளலாம். அதை நாம் இயற்கை சக்தி என வைத்துக்கொள்வோம். கடவுள் என்றாலும் சரியே.

அடுத்தது இப்படி ஒரு சக்தி இருக்கிறது என்றால், அதன் வலிமை, அதன் பலம், அதன் ஆற்றல், சக்தி எந்த அளவு இருக்கும் என ஆராய்வது மிக மிக முக்கியமான ஒன்று.

இது 'அளவு கடந்த, நினைத்ததை உடனே நடத்தி முடிக்கக் கூடிய, தவறே செய்யாத,நம்மை ஆபத்திலிருந்து காக்க கூடிய ஒன்றா? 'என கேட்டால் இல்லவே இல்லை என்பதுதான் என் பதில். இதற்கு ஆதாரம் தருகிறேன். ஏனெனில்
ஆராயாமல் பிறர் கூறுவதை உன்மைதான் என்று சிந்திக்காமல் கடைபிடிப்பவன் மூடன் என்று, நான் கூறவில்லை ஐயன் வள்ளுவன் கூறியுள்ளான்.

ஆதாரம் 1.

இந்த ‘இயற்கை அல்லது கடவுள் சக்தி’ எல்லையற்ற ஆற்றல் பெற்றது எனில் இந்த பூமியை ஒரே கணத்தில் படைத்து. அடுத்த கணத்தில் சூரியனை, தாவரங்களை படைத்து அதற்கு அடுத்த கணத்தில் விலங்குகளை படைத்து அதையுண்ணும் விலங்குகளையும் படைத்திருந்திருக்கலாம்.
ஆனால் அவ்வாறு நடந்ததா?. இல்லையே.
பெருவெடிப்பு நடந்தது, சூரியன் உண்டானது. அது உடைந்து பூமி வந்தது. அது நன்கு எரிந்து ,அவைந்தது. குளிர்ந்த்து. இப்படி பல லட்சோப லட்ச ஆண்டுகள் கூடித்தான் இந்த பூமியை உருவாக்கியது. ஏனெனில் இந்த கடவுள் அளவான சக்தி யுடையதே , உடனே நினைத்ததை முடிக்க அதனால் இயலாது.


ஆதாரம் 2.

ஆம் இதற்கான சான்றுதான் பரிணாம வளர்ச்சி.
ஒரு தட்சன் ஒரு மரப்பிடி செய்து அது மண்வெட்டியுடன் பொருந்தவில்லை என்றால் என்ன செய்வான் மீண்டும் செதுக்கி பொருத்துவான் . அதைத்தான் இயற்கை செய்கிறது.
முதலில் பாம்பை காலுடன் படைத்தது. அது அதை அதிகம் பயன்படுத்தாமல் இருந்ததால் அதை நீக்கி விட்டது.
மனிதனுக்குகூட கீழ் முதுகில் பயனற்ற சிறு எலும்பு உள்ளதாம்.
அது முன்னர் வாலாய் இருந்து. பயன் படுத்தாமல் இருந்ததால், தேய்ந்ததாம். வரும் காலத்தில் அது முற்றிலும் மறைந்துவிடுமாம்.
இதன்மூலம் நாம் உணர்வது இந்த இயற்கை அல்லது கடவுள் சக்தி தவறு செய்யக்கூடியது.
அதை உணர்ந்து மற்ற வெகு காலம் ஆகும்.


ஆதாரம் 3.

இயற்கை தாவரங்களை படைத்து. பின்னர் ஏன் அதையுண்ணும் விலங்குகளையும் படைத்தது?. தாவரத்தை கடவுளுக்கு பிடிக்காததனாலா?
இல்லை, விலங்குகளை கடவுளுக்கு பிடித்ததனாலா? அப்படி பிடித்திருந்தால்
ஊண் உண்ணிகளை படைத்திருக்காதே..!
ஒரே ஒரு காரணம்தான் “இயற்கை ஒரு சமநிலை விரும்பி”.
தாவரத்தை கட்டுப்படுத்த விலங்குகளையும் அதை கட்டுப்படுத்த ஊண் உண்ணிகளையும் படைத்தது.
கொள்ளப்படுதலும் கொள்ளுதலும் இதன் படைப்பே.
ஒன்றை யோசியங்கள் நமக்கு தீமை செய்பரை கடவுள் தண்டிப்பார் என்றால் நாம் எத்தனை தாவரங்களை கொல்கிறோம். இதற்கு கடவுள் நம்மை தண்டிப்பார் என்றால் நாம் படைக்கப்பட்டிருப்போமா. நலமாக வாழ்வோமா?
இருந்தாலும் இயற்கை நம்மை படைக்கிறது. பிற ‘உயிரை கொள்ளும் மிருகங்களையும்’ படைக்கிறது.
ஏன் ?
காரணம் இயற்கை அல்லது கடவுளை பொறுத்தமட்டில் தீமைகள் என்று ஏதும் இல்லை.
உண்மை என்னவென்றால் இவை (தீமை செய்பவை என கருதப்படுபவை) படைக்கப்பட்டதன் நோக்கமே நாம் 'கொடியது' என நிணைப்பதை செய்வதற்க்குத்தான்.
மான் கடவுளை வணங்கினால் புலிகளெல்லாம் சைவமாகிவிடுமா?
ஆவப்போவதில்லை, புலியை சமாளிக்க திறன் இருந்தால் மான் வாழட்டும்.
நாம் கடவுளை வணங்கினால் மட்டும் எப்படி நம்மை நாடும் தீயன நீங்கிவிடும்?


கடைசி ஆதாரம்

கடல் ஆண் சீல்களில் 90 சதவிதம் இனப்பெருக்கம் செய்ய முடிவதில்லை
காரணம் என்னவென்று தெரியுமா?
பலம் வாய்ந்த ஒரு ஆண் சீல் தன் பகுதியில் உள்ள அணைத்து பெண்களையும் கைப்பற்றி விடும் . ஏதேனும் ஓர் இளம் ஆண் சீல் உணர்ச்சிவசப்பட்டு ஏதேனும் செய்துவிட்டால் அதற்கு மரணதண்டனைதான்.
இப்படி படைக்கப்பட காரணம் என்ன கடவுள் கொடுமை காரனா?
ஆம் நமக்கு அவ்வாறுதான் தெரியும். ஆனால் இயற்கையின் மற்றொரு
கொள்கை இங்கு உள்ளது.
பலமுள்ளவை நிலைத்திருக்கும் என்பது.(Fittest will survive)
பலமுள்ள சீல் பலமுள்ள சந்ததியை உருவாக்கும் .பலமற்றது பலமற்ற சந்ததியை உருவாக்கும்.
இதன் விளைவை யோசித்து பாருங்கள்.
அந்த பலமற்றது நன்றாக தன் உடலை வலுப்படுத்தும்.
இவ்வாறு எல்லா இளம் சீல்களும் எண்ணும் இதனால் ஒரு வலிமையான சீல் சமூகம் உண்டாகும்.
என்ன இயற்கையின் அறிவு.

இப்படிப்பட்ட இயற்கைக்கு நன்றி கூறலாம்.
வேண்டுதல் என்பது தேவையற்றது.
அதை வேண்டுவதால் ஆவது ஒன்றுமில்லை.
நாம் வேண்டுவதையும் அது நிரைவேற்றப்போவதில்லை.
நாம் வேண்டுவது அதற்கு தெரியப்போவதுமில்லை.
அதைத்தான் எனது முதல் பதிவான

கடவுளை வணங்கவேண்டுமா........?-ல்

பதித்திருந்தேன்

சரி கடவுள் எல்லைகளற்றவர் என நம் முன்னோர்கள் கூறி வந்தனரே
அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று எனது பதிவான

வாங்க யோசிக்கலாம் 'கடவுள்' எனும் கற்பனையைப் பற்றி..!–ல்

கூற முயன்றுள்ளேன்.

இப்போது இந்த பதிவு எனது கடவுள் பற்றிய கருத்தையும் முந்தைய பதிவுகளுக்கு எனது பதிலாகவும் அமையும் எனும் நம்பிக்கையில் முடிக்கும் உங்கள் நன்பன்.

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.


நன்றி



Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon May 28, 2012 6:17 pm

மிகவும் நன்று நந்து அவர்களே...நன்றாக உள்ளது...தொடருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Mon May 28, 2012 9:42 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று நந்து அவர்களே...நன்றாக உள்ளது...தொடருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்பரே.

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Mon May 28, 2012 10:57 pm

பலம் வாய்ந்த ஒரு ஆண் சீலால் தானே அந்த 90 சதவீத இனப்பெருக்கம் செய்யமுடியாத சீல்கள் பிறந்தன பிறகு ஏன் ?



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Tue May 29, 2012 1:23 pm

சிங்கம் wrote:பலம் வாய்ந்த ஒரு ஆண் சீலால் தானே அந்த 90 சதவீத இனப்பெருக்கம் செய்யமுடியாத சீல்கள் பிறந்தன பிறகு ஏன் ?
ஒவ்வொரு ஆண்டிலும் இனப்பெருக்க காலத்தில் ஆண் சீல்கள் வெகு ஆவேசமாக சண்டையிட்டுக்கொள்ளும் அதில் வெற்றிபெற்ற சீல் பரிசாக அனைத்து பெண் சீல்களையும் எடுத்துக்கொள்ளும் உறவு கொள்வதை தன் முழு நேர பணியாக கொள்ளும்.
9௦ சதவிதம் என்ற புள்ளிவிவரம் டிஸ்கவ்ரி-ல் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் வர்ணனையாளர் கூறியது.
இது சீல்களில் மட்டும் நடைபெருவதில்லை. மான், மலையாடு,வரிக்குதிரை,ஏன் மனிதனிலும் கூட நடந்தது. கலாச்சார வளர்ச்சியால் ஒருவனுக்கு ஒருத்தி என்றானது.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 29, 2012 2:06 pm

நண்பரே எனக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் உங்கள் பதிவுகளை படிக்கும் போது தான் கடவுள் என்ற ஒன்றை நினைக்கிறேன் புன்னகை இல்லை என்று முடிவு செய்து விட்டால் இல்லை அதை மீண்டும் மீண்டும் இருக்கிறதா இல்லையா என நினைப்பதில்லை மற்றவர்களின் எண்ணங்களையும் நம்பிக்கையும் மாற்றவும் விரும்புவது இல்லை... என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை 102564
ஒரே ஒரு கேள்வி நண்பரே
நீங்கள் கோவில்களுக்கு இப்பொழுது எல்லாம் செல்வீர்களா?என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை 755837



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Tue May 29, 2012 4:02 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
நீங்கள் கோவில்களுக்கு இப்பொழுது எல்லாம் செல்வீர்களா?

இப்போதுமட்டுமல்ல நன்பரே எப்போதும் கோவில்களுக்கு செல்வேன்

ஏன் நன்பரே திடிரென்று ? ஒன்னும் புரியல

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 29, 2012 9:16 pm

நந்து wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:
நீங்கள் கோவில்களுக்கு இப்பொழுது எல்லாம் செல்வீர்களா?

இப்போதுமட்டுமல்ல நன்பரே எப்போதும் கோவில்களுக்கு செல்வேன்

ஏன் நன்பரே திடிரென்று ? என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை 838572
என்னுடன் படிக்கும் நண்பன் ஒருவன் சாமி இல்லை என்று சொல்லுவான் கோவிலுக்கும் வர மாட்டான் அதனால் தான் கேட்டேன் நண்பரே... புன்னகை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 29, 2012 9:40 pm

நண்பர் நந்துவின் பதிவுகள் அனைத்தும் கடவுள் இல்லை கோட்பாடு பற்றியதாகவும் அவரை வணங்கவேன்டுமா? என்பன போன்றவைகளாகவும் இருக்கிறது...

நண்பர் நந்துவின் மென்மையான ஆரோக்கியமான விவாதங்களுக்கும் முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

உங்களிடம் நண்பனாக ஒரு கேள்வி?
இதுபோன்ற கட்டுரைகளால் தாங்கள் ஈகரை நண்பர்களுக்கு சொல்லவரும் கருத்து என்ன? மற்றவர்கள் கடவுளை வணங்க வேன்டாம் என்று சொல்ல வருகிறீர்களா?

நிர்வாக உறுப்பினராக :
பொதுவாக ஈகரையில் மதம் சம்பந்தப்பட்ட விசயங்களை ஆன்மீகம் பகுதியில் மட்டும் அவரவர் மதங்களை பற்றிய பெருமைகளையும் நல்லவைகளையும் பதிந்தால் சுமுகமான உறவு நண்பர்களிடையே இருக்கும்.
ரா.ரமேஷ்குமார் wrote:நண்பரே எனக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் உங்கள் பதிவுகளை படிக்கும் போது தான் கடவுள் என்ற ஒன்றை நினைக்கிறேன் புன்னகை இல்லை என்று முடிவு செய்து விட்டால் இல்லை அதை மீண்டும் மீண்டும் இருக்கிறதா இல்லையா என நினைப்பதில்லை மற்றவர்களின் எண்ணங்களையும் நம்பிக்கையும் மாற்றவும் விரும்புவது இல்லை... என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை 102564
ஒரே ஒரு கேள்வி நண்பரே
நீங்கள் கோவில்களுக்கு இப்பொழுது எல்லாம் செல்வீர்களா?என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை 755837
ரமேஷின் இந்த பதிவை நான் மிகவும் விரும்பினேன்... வெல் செட் ரமேஷ் மகிழ்ச்சி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 29, 2012 9:51 pm

வாத்தியார் wrote:ரமேஷின் இந்த பதிவை நான் மிகவும் விரும்பினேன்... வெல் செட் ரமேஷ் என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை 677196
என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை 677196அண்ணா... என்னுடைய பார்வையில் கடவுள்....ஒரு மாறுபட்ட சிந்தனை 678642



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக