புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போன் தொந்தரவு  Poll_c10செல்போன் தொந்தரவு  Poll_m10செல்போன் தொந்தரவு  Poll_c10 
49 Posts - 52%
heezulia
செல்போன் தொந்தரவு  Poll_c10செல்போன் தொந்தரவு  Poll_m10செல்போன் தொந்தரவு  Poll_c10 
41 Posts - 43%
mohamed nizamudeen
செல்போன் தொந்தரவு  Poll_c10செல்போன் தொந்தரவு  Poll_m10செல்போன் தொந்தரவு  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
செல்போன் தொந்தரவு  Poll_c10செல்போன் தொந்தரவு  Poll_m10செல்போன் தொந்தரவு  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போன் தொந்தரவு  Poll_c10செல்போன் தொந்தரவு  Poll_m10செல்போன் தொந்தரவு  Poll_c10 
91 Posts - 56%
heezulia
செல்போன் தொந்தரவு  Poll_c10செல்போன் தொந்தரவு  Poll_m10செல்போன் தொந்தரவு  Poll_c10 
62 Posts - 38%
mohamed nizamudeen
செல்போன் தொந்தரவு  Poll_c10செல்போன் தொந்தரவு  Poll_m10செல்போன் தொந்தரவு  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
செல்போன் தொந்தரவு  Poll_c10செல்போன் தொந்தரவு  Poll_m10செல்போன் தொந்தரவு  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போன் தொந்தரவு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 21, 2011 11:06 am

இந்தியாவில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக செல்போன்களின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. இந்தியாவில் செல்போன்களின் எண்ணிக்கை 90 கோடியை நெருங்கிவிட்டது. தமிழ்நாட்டில் செல்போன் இல்லாதவர்களே இல்லை என்று கூறும் நிலை உருவாகியுள்ளது. தகவல் பரிமாற்றத்தில் மின்னலையும் மிஞ்சும் அளவுக்கு செயல்பாடுகள் இருக்கிறது என்று ஒரு பக்கம் பெருமைப்பட்டுக்கொண்டாலும், தவிர்க்கக்கூடிய குறைபாடுகளும் இருக்கின்றன என்பதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ நிச்சயமாக முடியாது. செல்போன்களை அதிகம் பயன்படுத்துவது உடல் நலத்துக்கு கேடு, குறிப்பாக சின்னஞ்சிறு குழந்தைகள் அதிகமாக பயன்படுத்துவது ஆரோக்கியமானதல்ல என்ற கருத்து உலகம் முழுவதும் நிலவுகிறது. செல்போனில் தேவைக்கு மட்டும் பேசிவிட்டு, கூடுமானவரையில் எஸ்.எம்.எஸ். அனுப்புவதை ஊக்குவிக்கவேண்டும் என்று கூறுகிறார்கள். செல்போன் டவர்களில் இருந்து வெளியேறும் காந்த அலைகள் பல நோய்களை ஏற்படுத்திவிடுகின்றன என்ற செய்தியும் வெளிவருகிறது.

இதுமட்டுமல்லாமல், மக்கள் கூட்டம் இருக்கும் இடங்களில் செல்போனில் பேசுவது மட்டுமல்லாமல், அதில் இருந்து வரும் `ரிங்டோனும்' இம்சையாக இருக்கிறது. ரெயிலில் இரவு நேரத்தில் தூங்கும் வசதிகொண்ட பெட்டியில் ரிசர்வ் செய்து பயணம் செய்பவர்களுக்கு, இந்த அனுபவம் இருக்கும். நடுநிசியில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது, பக்கத்து `பெர்த்'தில் இருப்பவரின் செல்போனில் இருந்து `தூங்காதே தம்பி, தூங்காதே...' என்று `ரிங்டோன்' ஒலிக்கும். அதன்பிறகு, அவர் போனை எடுத்து உரத்த குரலில் பேசி முடிப்பதற்குள் எல்லோருடைய தூக்கமும் போய், சிவராத்திரி ஆகிவிடும். இதுபோல, சாவு வீட்டில் மங்களகரமான பாடல்களும், திருமண வீட்டில் துக்கமான பாடல்களும் ரிங்டோனாக ஒலித்து அனைவரையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவிடும். இதனால்தான் முக்கிய கருத்தரங்குகள், கூட்டங்களில் செல்போனை கொண்டுவராதீர்கள், செல்போனை `ஆப்' செய்துவிடுங்கள் என்பதை நிபந்தனையாக முதலிலேயே தெரிவித்துவிடுகிறார்கள். இந்த செல்போன் சத்தம் கூட்டத்தின் முக்கியத்துவத்துக்கே தடைக்கல் ஆகிவிடும்.

இந்த நிலையில், சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் ஒரு விசித்திரமான வழக்கு, அதுவும் செல்போன் தொடர்புடைய ஒரு வழக்கு நீதியரசர் கே.சந்துரு முன்னிலையில் வந்தது. வருவாய் கோட்ட அதிகாரியான துர்கா மூர்த்தி கோர்ட்டு ஹாலுக்குள் தன் செல்போனை பயன்படுத்தினார், இதற்காக அவரைத் தண்டிக்க வேண்டும் என்பதுதான் வழக்கு. துர்கா மூர்த்தியும், தான் செல்போன் பயன்படுத்தியதை மறுக்கவில்லை. பார்வையாளர் மாடத்தில் இருந்த நான், எனது செல்போனை `சைலண்ட் மோடில்'தான் வைத்திருந்தேன். அதாவது சத்தம் கேட்காத நிலையில்தான் வைத்திருந்தேன். அந்த நேரத்தில் சிவகங்கை மாவட்ட கலெக்டரிடம் இருந்து போன் வந்ததால், போனை எடுத்து மிக மெல்லிய குரலில், யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் பேசினேன் என்று பதில் அளித்துள்ளார். நேர்மையான அதிகாரி. நான் பேசவில்லை என்று சொல்லாமல் பேசினேன் என்று உண்மையை ஒத்துக்கொண்டார். நீதியரசர் சந்துருவின் தீர்ப்பு என்றாலே நிச்சயமாக அரசியல் சட்டத்தின் வரைமுறைகள், மற்றும் தொடர்புடைய சட்டங்களின் எல்லைக்குள்ளேயே அலசி ஆராய்ந்து இருக்கும். நமது சட்டத்தின் பொருள் இதுதானா? என்று சட்டத்தின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ளும் அளவில், அவர் தீர்ப்புகள் இருக்கும்.

இந்த வழக்கில் அவர் வழங்கிய தீர்ப்பு, இனி மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை அரசுக்கு கோடிட்டுக் காட்டியுள்ளது. கோர்ட்டுக்குள் செல்போனை பயன்படுத்தியதற்காக நடவடிக்கை எடுக்க மறுத்துள்ள நீதியரசர், அதற்கான காரணத்தையும் தெளிவாக சொல்லிவிட்டார். சட்டத்தின்கீழ் தடை செய்யப்படாத ஒரு செயலுக்காக ஒருவரைத் தண்டிப்பது மிகவும் ஆபத்தானது என்று கூறியுள்ளார். ஆக, நமது உயர்நீதிமன்ற நீதிபதி சொல்லாமல் சொல்லிவிட்டார். பல இடங்களில் செல்போனை பயன்படுத்தாதீர்கள், செல்போனை கொண்டு வரக்கூடாது என்று போர்டு போட்டிருந்தாலும், அது சட்டமாகவோ, அதற்கான விதிமுறைகளோ இல்லை. நவீன யுகத்தில் செல்போனை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. எல்லா இடத்திலும் செல்போனைக் கொண்டுவரக்கூடாது என்றால், அது கண்டு பிடிக்கப்பட்டதின் நோக்கமே அடிபட்டுப்போய்விடும். எனவே பொதுஇடங்களில் செல்போனை பயன்படுத்துவதற்கும், ரிங்டோன் நிர்ணயிப்பதற்கும் சில விதிமுறைகளையோ, அல்லது சட்டமோ வகுக்க மத்திய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் அனைவரின் மனதிலும் இந்த எண்ணம் இருந்தது. ஆனால் யாரும் சொல்லவில்லை. நீதியரசர் வழியைக் காட்டிவிட்டார்.

தினதந்தி



செல்போன் தொந்தரவு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 21, 2011 12:04 pm

சிவா wrote:
இதுமட்டுமல்லாமல், மக்கள் கூட்டம் இருக்கும் இடங்களில் செல்போனில் பேசுவது மட்டுமல்லாமல், அதில் இருந்து வரும் `ரிங்டோனும்' இம்சையாக இருக்கிறது. ரெயிலில் இரவு நேரத்தில் தூங்கும் வசதிகொண்ட பெட்டியில் ரிசர்வ் செய்து பயணம் செய்பவர்களுக்கு, இந்த அனுபவம் இருக்கும். நடுநிசியில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது, பக்கத்து `பெர்த்'தில் இருப்பவரின் செல்போனில் இருந்து `தூங்காதே தம்பி, தூங்காதே...' என்று `ரிங்டோன்' ஒலிக்கும். அதன்பிறகு, அவர் போனை எடுத்து உரத்த குரலில் பேசி முடிப்பதற்குள் எல்லோருடைய தூக்கமும் போய், சிவராத்திரி ஆகிவிடும். இதுபோல, சாவு வீட்டில் மங்களகரமான பாடல்களும், திருமண வீட்டில் துக்கமான பாடல்களும் ரிங்டோனாக ஒலித்து அனைவரையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவிடும்.

சோகம் சோகம் சோகம் சோகம்



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 21, 2011 12:43 pm

என்ன செய்தாலும் விஞ்ஞான முன்னேற்றத்தில் சில குறை நிறைகள் இருக்கத் தான் செய்யும் ஒண்ணும் பண்ணமுடியாது என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக