புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:11 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 7:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:48 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:40 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 1:31 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 1:28 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 1:03 pm

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 1:01 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:58 pm

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 12:55 pm

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 7:13 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:17 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 9:33 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 1:06 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 12:51 am

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:35 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 10:19 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:13 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 10:12 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:10 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 10:09 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 10:06 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:50 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 9:49 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 3:22 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 3:19 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 2:58 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 2:51 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 3:15 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 3:05 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 3:01 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 10:57 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri May 03, 2024 12:58 am

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 6:04 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:36 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 5:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_m10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_m10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_m10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10 
4 Posts - 3%
prajai
சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_m10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10 
4 Posts - 3%
Jenila
சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_m10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_m10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10 
1 Post - 1%
M. Priya
சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_m10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10 
1 Post - 1%
kargan86
சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_m10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10 
1 Post - 1%
jairam
சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_m10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_m10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_m10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_m10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_m10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10 
8 Posts - 5%
prajai
சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_m10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10 
6 Posts - 4%
Jenila
சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_m10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10 
4 Posts - 2%
Rutu
சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_m10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_m10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_m10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10 
2 Posts - 1%
viyasan
சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_m10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10 
1 Post - 1%
M. Priya
சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_m10சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 11, 2011 2:05 pm

ஒரு நாள் பூமியில் உள்ளவர்கள் கடவுளிடம் சென்று, உலகிலேயே இனிமையான, கவர்ச்சியான பெண் யாரென்று கேட்டார்கள். பதில் கிடைத்ததும் புதிய கேள்வியோடு திரும்பினார்கள். "யார் அந்த அர்ச்சனா?'

அர்ச்சனா யாரென்று எனக்கு தெரியும். ஏனென்றால், அர்ச்சனாவின் அப்பா நான்தான்.

நேற்று என்னுடன் பணிபுரியும் அனீஸ் ஃபாத்திமா தன் மகனுக்கு வேலை கிடைத்த செய்தியோ, இளம் பெண் ஒருத்தி தனக்கு வந்த ஆபாச எஸ்.எம்.எஸ்.களால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டாள் என்ற பத்திரிகைச் செய்தியையும் மதிய உணவின்போது பகிர்ந்து கொண்டாள். எனவே நான் தகப்பனுக்கே உரிய கற்பனைக் கவலையோடு அர்ச்சனாவின் செல்லை ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். அவள் கோயிலுக்குப் போயிருக்கிறாள்.

இன்பாக்ஸ், சென்ட் ஐயிட்டம் பகுதிகளைப் பரிசோதித்தபோது இரண்டு முடிவுகள் கிடைத்தன. ஒன்று, புத்திசாலிப் பெண்கள் தங்கள் ஆண் நண்பர்களுக்கு பெண்களின் பெயரைச் சூட்டி விடக்கூடும். இரண்டு, ஆண்களிடமிருந்து வரும் தகவல்கள் படிக்கப்பட்டவுடன் அழிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது.

டீன் ஏஜ் மகளின் பிடிவாதத்திற்காக செல் வாங்கிக் கொடுத்து, செல் அவள் கையில் இருப்பதைப் பார்த்தால் சந்தோஷமாய் இருக்கிறது. ஆனால், அதை அவள் உபயோகிப்பதைப் பார்த்தால் பயமாய் இருக்கிறது.

இந்த நேரத்தில் தான், பூமியில் உள்ளவர்கள் புதிய கேள்வியோடு திரும்பும் குருஞ்செய்தி வந்தது. மணி காலை 7.14 காலை வணக்கத்தோடு அனுப்பியது கிரண். இதிலிருந்து ஒருவனின் குமாதிசயங்களை முடிவு செய்ய முடிந்தால் கிரண் என்பவன் எப்படிப்பட்டவனாய் இருப்பான்? அழகு என்கிறான்; கவர்ச்சி என்கிறான்... ஆபத்தானவனாய் இருக்க வேண்டும். ஒல்லியாய் ஒருவன் வருவானே, அவனாக இருக்குமோ...? இவனை நண்பனாகக் கொண்ட என் பெண் எப்படி பத்தாவது பாஸ் செய்யப் போகிறாள்?

பீப்... பீப்... அடுத்த தகவல்.

7.17 வெற்றி இரயிலைப் போன்றது. உழைப்பு, திறமை, முயற்சி போன்ற பெட்டிகளைக் கொண்டது. அனைத்தையும் இழுப்பது தன்னம்பிக்கை இஞ்சின் கா.வ.

இது கி÷ஷாரின் சொந்தச் சரக்குதானா? இந்தக் காலத்தில் எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்காகவே நட்டு கொள்ளும் அளவிற்கு நட்பு மலிவாகிவிட்டது. செல் இருந்தால்தான் நட்பு வட்டாரத்திலேயே சேர்ப்பார்கள் போல. இவர்களின் உலகிலிருந்து செல்லும், எஸ்.எம்.எஸ். வசதிகளும் பிடுங்கப்பட்டால் திணறி விடுவார்கள். இந்தப் பையன்களை நான் பார்த்ததுகூட கிடையாது. ஆனால் அவர்களோ அரூபவடிவில் சர்வசாதாரணமாக என் வீட்டில் புழங்கி, தன் இருப்பை உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். எனது இளம் வயதில், என் கிராமத்து கூரைப் பள்ளிக்கூடத்தில் கேர்ள்ஸ் பாய்ஸ்களிடமும், பாய்ஸ், கேர்ள்ஸ்களிடமும் பேசக்கூடாது என்பது...

விட்டுக் கொடுக்கறதுல இல்ல ஃப்ரெண்ட்ஷிப். கடைசிவரைக்கும் விடாம இருக்கறதுதான் ஃப்ரெண்ட்ஷிப். ஸ்கூலில் சந்திப்போம். கா.வ.-ரியாஸ்.

அறிவிக்கப்படாத சட்டமாகவே இருந்தது. ஆனால் எங்களுக்கோ எங்கள் வகுப்புப் பெண்களிடம் பேச ஆசையாக இருக்கும். கூச்சமும், பயமும் தடுக்கும். பையன்கள்தான் என்றில்லை. வகுப்பில் தலைவன், தலைவி, ஊடல், காதல், பசலை போன்ற வார்த்தைகளைச் சொல்லும்போது குரல் தடுமாறி, கூச்சத்தால் தின்னப்பட ஆசிரியர்களும் உண்டு. அப்போதோ, அந்த வகுப்பு முடிகிறபோதோ கேர்ள்ஸ் பக்கம் திரும்பவே வெட்கமாக இருக்கும். அதுகளும் தலை குனிந்து சிரித்துவிட்டு, டாலர் செயினை மென்றவாறு ஓடிவிடும். இந்தச் சூழ்நிலையில் நான் எப்படி கயல்விழியிடம் பேச முடியும்? கயல்விழியும், நானும்...

7.21 இந்த சிங்கம் இருக்கே, அது சும்மாவே இருக்காது. இப்பக்கூடப் பாரு, ஒரு சுண்டெலிக்கு காலை வணக்கம் சொல்லுது!

இது ராதாவிடமிருந்து. அப்பாடா, இவளுக்கு ஒரு பெண் தோழியாவது இருக்கிறாளே! ஆமாம், அது உண்மையிலேயே பெண் பெயர்தானா?

கயல்விழியும், நானும் சின்ன வயதில் பாண்டி, பம்பரம், கோலி, எறிபந்து, கபடி, கில்லி எல்லாம் விளையாடினோம். நான் பூசாரியாய், அவள் பக்தையாய்; மாணவனாய், ஆசிரியையாய்; மாணவனாய், ஆசிரியையாய்; நோயாளியாய், டாக்டராய்... கிராமத்துத் தெருக்களில் புழுதி பறக்க ஓடி மாங்காய் தின்று, கடலை தின்று, சண்டை போட்டு, பழம் போட்டு... இப்படி நண்பர்களாகத் திரிந்த நாங்கள் திடீரென்று ஒரு நாள் கேர்ள்ஸ் பாய்ஸ் பிரிவுகளில் சேர்ந்து விட்டோம்.

பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வுக்கு பத்து நாள் இருந்தபோது கயல்விழியின் வீட்டு வேலையாள் என்னை அணுகி கயல் இங்கிலீஷ் நோட்டு வாங்கிட்டு வரச் சொல்லிச்சு... என்றான். எனது கையெழுத்து அழகாக இருக்கும். நோட்டை சந்தோஷமாகக் கொடுத்தேன்.

7.24 எனக்கும் சேர்த்து லஞ்ச் கொண்டு வா-ஷிவானி

வழக்கம் போல, பரீட்சைக்கு இரண்டு நாள் முன்புதான் எனக்கு நோட்ஸின் நினைவு வந்தது. தவிப்புடன் கயிலுக்காகக் காத்திருந்தால் அவள் வரவில்லை. மதிய உணவு இடைவேளையின்போது மகளிர் குழுவை மடக்க உத்தேசித்து, பூகோள சாத்தியங்களைக் கணக்கிட்டு 9ஆ வைக் கடப்பதற்குள் பேசிவிட காளீ திடீரென்று ஒரு குரல் கேர்ள்ஸ்கிட்ட என்னடா பேச்சு...? என்றது.

நான் வெலவெலத்து நின்றேன். இனி கேர்ள்ஸ் பக்கம் உன்னைப் பார்த்தேன்...

அன்று மாலை கயல்விழியை தற்செயலாக கோயிலில் பார்த்தேன். கயல்...

என்னடா? என்றாள் மகிழ்ச்சியுடன். ஒருகணம் டாக்டர், என் குழந்தைக்குக் காய்ச்சல்.. காலத்துக்கே பேய்விட்ட மாதிரி இருந்தது. சுதாரித்து கொண்டு நான் என் நோ என்று துவங்குமுன் அவளது அண்ணிகள் என்னை முறைத்து வாடி என்று கடத்திச் சென்று விட்டார்கள். இனி, அவளது வீட்டிற்குப் போக வேண்டியதுதான்...

7.26 ஃபிளவருக்கும், ஃபிகருக்கும் என்ன வித்தியாசம்? ஃப்ளவர் வாடி விடும். ஃபிகர் நம்மை வாட விடும்... ஹா...ஹா...

அடுத்த முறை ஆகாஷ் வீட்டிற்கு வரும்போது இதற்கு விளக்கம் கேட்டால், தத்துவங்களின் வீர்யம் குறைய வாய்ப்பிருக்கிறது.

சைக்கிளை வெளியே நிறுத்தி, தயங்கி கயலின் வீட்டினுள் நுழைந்தேன். கயல் நாய் ஒன்று அந்நியனின் வருகையை உரத்துச் சொல்லியதும், அவளது அண்ணன் எட்டிப் பார்த்து என்ன வேணும், யாருப்பா நீ? என்றான்.
நான் கயலோட ஃப்ரெண்ட்.

ஃப்ரெண்டா என்றான் அதிர்ச்சியுடன். மேலும் ஒருவன் வெளிப்பட்டு நேத்து கயல்ட்ட கோயில்ல பேசினது நீதானடா..? என்றான். பம்பரமும், பாண்டியும் விளையாடும்போது இல்லாத அண்ணன்கள் திடீரென்று எப்படி வந்தார்கள்..?

பொம்பளப்புள்ளக்கிட்ட என்னடா பேச்சு என்றான் குரங்கிலிருந்து இன்னும் முழுமையாகப் பிரியாதவன். இதற்குள் இலை, தழைகளை அயர்ன் பண்ணி உடுத்தியிருந்த மூத்தவன் என் கன்னத்தில் அறைந்து இனி அவகிட்ட பேசறதைப் பார்த்தேன் என்றான். யார் மகன்டா நீ?

கண்ணீருடன் சொன்னேன். அவரு மகனா? ம் அவருக்கு இப்படி ஒரு புள்ள. அவர் பேரைக் கெடுத்துராக... அவர் முகத்துக்காகத்தான் பார்க்கறேன்... ஓடிப்போயிரு...

அப்படி என்ன குற்றம் செய்துவிட்டேன் எனப் பரிதவித்தபோது, கயல் வெளிப்பட்டு, அண்ணா, அவன் நோட்டு எங்கிட்ட இருக்கு. அதுக்காகத்தான் வந்திருப்பான். நான் மறந்தே போய்ட்டேன். என்று அவமானத்தால் கூசி நின்ற எனக்கு கிருஷ்ணனாய் மாறி பார்வையாலும், வார்த்தைகளாலும் ஆடைகள் தர முயன்றாள்.

7.32 ஹேப்பி பிரதோஷம் டே! ம், ஒரு மேசேஜ் அனுப்ப எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு! - பிரபு.

கயல்விழி பத்துக்கு மேல் படிக்கவில்லை. அவளைக் கடைசியாகப் பார்த்தது பத்து, பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு.

பீரோவைத் திறந்து கயல்விழியுடனான ஸ்கூல் ஃபோட்டோ ஆல்பத்தை இன்றாவது புரட்ட வேண்டும். அதில் அவள் முதல் வரிசையில் ஐந்தாவது இடத்தில் நிற்கிறாள். ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை, சமீபகாலமாக பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்; அந்தச் செயலைத் தள்ளிப் போடுகிறேன். சோம்பல் காரணமில்லை.

கையிலிருந்து செல் கனத்தது. அர்ச்சனாவின் நண்பர்களை என்னால் சுமக்க முடியவில்லை. ஒர வேளை, தோழியின் நட்பு என்னிடமிருந்து பிடுங்கப்பட்டதால்தான் அர்ச்சனாவின் நண்பர்களை வெறுக்கிறேனோ..? எனக்கு மறுக்கப்பட்ட சந்தோஷத்தை அடுத்தவர் அனுபவிப்பதைப் பார்த்து பொறாமைப்படுகிறேனோ..? இந்தக் கேள்விக்களுக்குப் பதில் சொல்வதைவிட, ஒரு தகப்பனுக்குரிய கவலையோடு என் தாவணிப் பெண்ணைப் பாதுகாக்க முயல்கிறேன் என்ற பதிலுக்குள் நான் ஒளிந்து கொள்ள விரும்பினேன்.

7.34 சர்தார்: எனக்கு இடுப்பு பிடிச்சிருக்கு!

லேடி டாக்டர்: ஓகே. மாத்திரை தரேன்...

சர்தார்: இல்ல டாக்டர். எனக்கு உங்க இடுப்பு பிடிச்சிருக்குன்னு சொன்னேன்!

கா. வணக்கம். ஆகாஷ்

இதற்கும் காலை வணக்கத்திற்கும் சம்பந்தம்? இந்தப் பையன்கள் எந்த நொடியிலும் வரம்பு மீறலாம் என்பது போல்தான் நடந்து கொள்கிறார்கள்.

7.35 இன்றைய சிந்தனை: இரண்டாவது வாய்ப்பிற்காகக் காத்திருக்க வேண்டாம். ஏனென்றால், அது முதல் வாய்ப்பைவிட, கடினமானதாகக் கூட இருக்கலாம்... காலை வணக்கம்.

அப்துல்கலாம் சந்தோஷிடம் எப்போது, இதைச் சொன்னார்?

அர்ச்சனா வருவதை உணர்ந்து போனை பழைய இடத்திலேயே வைத்தேன். எரிச்சலுடன் உன் ஃப்ரெண்ட்ஸ்க்கு எஸ்.எம்.எஸ். அனுப்பறதைத் தவிர, வேற வேலையே கிடையாதா? அதுவும், காலங்காத்தால.. என்றேன்.

....

தத்துவம் சொல்லி உன்னை எழுப்பறதும், தூங்க வைக்கறதும்... எங்க காலத்துல...

உங்க காலத்துல இதெல்லாம் இல்ல. இருந்திருந்தா யூஸ் பண்ணியிருப்பீங்க... அப்பா, நீங்க கவலையே பட வேண்டாம். ஏன்னா, எங்க எல்லை எங்களுக்குத் தெரியும்ப்பா... என்றாள் அர்ச்சனா.

இந்தக் காலத்தினர் எதையுமே சீக்கிரம் கற்றுக் கொண்டு விடுகின்றனர். எதிர்த்துப் பேச, கோபப்பட, சமாளிக்க.. எல்லாவற்றையுமே!

7.38 பீப்... பீப்.. போச்சுடா, இன்னொரு தகவல்... கடுப்படைந்தேன். என் முக மாறுதலைப் பார்த்த அர்ச்சனா, நானே படிக்கிறேன் என்றாள் படித்தாள்.

கடவுள் எவ்வளவு நல்லவர்! நண்பர்களுக்கு அவர் விலைப்பட்டியலைத் தொங்கவிட்டிருந்தால், உன்னைப் போன்ற நல்ல நண்பனை என்னால் விலை கொடுத்து வாங்கவே முடியாதே...!

பற்றிக்கொண்டு வந்தது. இவனுகளும், இவனுக மெசேஜ்களும்.. வாங்கிட்டுப்போய் என்ன செய்யறதாம்...? என்றேன்.

அனீஸ் ஃபாத்திமா ஆன்ட்டியத்தான் கேக்கணும்! ஆமாம்ப்பா... இந்த மெசேஜ் வந்தது உங்க ஃபோனுக்கு! என்றாள் அர்ச்சனா புன்னகையுடன்.

புரிந்துவிட்டது. நான் இன்றும் என் பழைய ஆல்பத்தைப் புரட்டப் போவதில்லை...!

ஷங்கர் பாபு



சிறுகதை - மெசேஜ் ரிசீவ்டு... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Dec 11, 2011 2:11 pm

இந்த மாதிரி சிறு சிறு கதையெல்லாம் படிக்க எங்க சார் நேரம் இருக்கு.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக