புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெமினி! Poll_c10ஜெமினி! Poll_m10ஜெமினி! Poll_c10 
21 Posts - 66%
heezulia
ஜெமினி! Poll_c10ஜெமினி! Poll_m10ஜெமினி! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெமினி! Poll_c10ஜெமினி! Poll_m10ஜெமினி! Poll_c10 
63 Posts - 64%
heezulia
ஜெமினி! Poll_c10ஜெமினி! Poll_m10ஜெமினி! Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
ஜெமினி! Poll_c10ஜெமினி! Poll_m10ஜெமினி! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஜெமினி! Poll_c10ஜெமினி! Poll_m10ஜெமினி! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெமினி!


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 24, 2009 11:31 pm

ஜெமினி! Vmalarnews_84954470397

அந்தக் காலத்தில் நாடகத் துறையிலிருந்து தான், நடிகர்கள், நடிகைகள் பெரும்பாலும் திரை உலகிற்கு அறிமுகமான வரலாறு உண்டு. பெரிய ஹீரோக்களாக இருந்தவர்கள், இளமையில் வறுமையின் காரணமாக, படிப்பை தொடர முடியாமல், நாடக கம்பெனியில் சேர்ந்து, ஜீவனாம்சம் செய்தனர். ஆனால், ஜெமினி கணேசன் மாறுபட்டவர். இளம் வயதிலேயே தந்தையை இழந்த ஜெமினி, டாக்டராக வேண்டும் என்று ஆசைப்பட்டார்; அது, நிறைவேற வில்லை. பட்டதாரியான இவர், கல்லூரியில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர்ந்தார்.



சிறிது காலத்தில் அதை விட்டு, சென்னை ஜெமினி ஸ்டுடியோவில் நிர்வாகப் பொறுப்பு பணியை ஏற்றுக் கொண்டார். தன் 20வது வயதில் பாப்ஜியை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு, நடிக்க ஆசைப்பட்டு, ஜெமினியிலிருந்து விலகி, நாராயணன் கம்பெனியில் மாதச் சம்பளம் அடிப்படையில், படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.




முதல் படம், தாய் உள்ளம்; வில்லன் வேடம் கிடைத்தது. அடுத்து, "மூன்று பிள்ளைகள்' என்ற படம். தொடர்ந்து பல படங்களில் கதாநாயகன் வேடத்தில் நடித்தார்.




அந்த நேரத்தில் புஷ்பவல்லி என்ற நடிகையை காதல் திருமணம் செய்து கொண்டார். இரண்டு பெண் குழந்தைகள்; அதில் ஒருவர் தான் பிற்காலத்தில் இந்தி நடிகையான ரேகா. நான்கு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து பிரிந்தனர்.




அடுத்து, "மனம் போல மாங்கல்யம்' படத்தில், ஜெமினியோடு ஜோடி சேர்ந்து நடித்த சாவித்திரி, நிஜ வாழ்க்கையிலும் ஜோடி ஆனார். தொடர்ந்து இவர்கள் நடித்த மாயாபஜார், கற்புக்கரசி, பெண்ணின் பெருமை, யார் பையன் ஆகிய அனைத்துப் படங் களும் வெற்றிப் படங்களாக அமைந்தன. ஜெமினி - சாவித்திரிக்கு இரண்டு குழந்தைகள். விஜய சாமூண்டிஸ்வரி என்ற பெண், சதீஷ் என்ற பையன்.




"பாசமலர்' படப்பிடிப்பிற்கு கொடைக்கானல் போன போது, ஒரு அழகான பங்களா விற்பனைக்கு வருவதை அறிந்து, அதை வாங்க விரும்பினார். அதற்கு ஏகப்பட்ட போட்டி இருந்தது. "ரெட்லிஞ்ச்' என்ற அந்த பங்களாவின் அழகை வர்ணித்து, அதன் உரிமையாளரான வெள்ளைக்கார முதலாளிக்கு தன் கைப்பட ஒரு கடிதம் அனுப்பினார்.




"இவ்வளவு அழகான பங்களாவை விற்க உங்களுக்கு எப்படி மனம் வந்தது? உங்கள் இடத்தில் நான் இருந்தால், இதை யாருக்கும் கொடுக்க மாட்டேன்...' என்று எழுதியிருந்தார். இவரது ரசனையைப் பார்த்து, பங்களா உரிமையாளர், இவரிடமே கொடுத்து விட்டார்; விலை ஒரு லட்சம் தான். இது 1955ல் நடந்தது; இன்று அது பல கோடிகள் பெறும்.




ஏராளமான மரங்கள், செடிகள் கொண்ட அதை பராமரித்து, ஆண்டுதோறும் தோட்டக்கலைக் கான முதல் பரிசை, பலதடவை வாங்கி உள்ளார் ஜெமினி. தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் இடம் வாங்கி பங் களா கட்டினார். இப்படி, தான் சம்பாதித்ததை, "ரியல் எஸ்டேட்'டில் முதலீடு செய்தார்.




டாக்டர் படிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக, தன் மகள்கள் ரேவதி, கமலா, ஜெயலட்சுமி (ஜிஜி) ஆகிய மூவரையும் டாக்டர்களாக உருவாக்கினார். டாக்டர் கமலா, அகில இந்திய அள வில் புகழ்பெற்று விளங்குகிறார்.




ஜெமினி வெளிநாட்டில் இருக் கும் போது, அவரிடம் சொல்லாமல், தன் மகள் விஜய சாமுண்டீஸ்வரிக்கு திருமணம் செய்து வைத்தார் சாவித்திரி. தன் மகள் திருமணத்திற்கு வாழ்த்து கூட சொல்ல முடியவில்லையே என மனம் வருந்தினார் ஜெமினி.




சாவித்திரி மறைவுக்குப் பின், இவர்களது மகன் சதீஷ், தான் காதலித்த பெண்ணை, தன் வீட்டிலேயே மணமாலை எடுத்துக் கொடுத்து திருமணம் செய்து வைத்தார் ஜெமினி.




நகைச்சுவையோடு பேசுவதில் வல்லவர் ஜெமினி கணேசன். ஒரு தடவை மத ஒற்றுமைக்காக நடைபெற்ற கூட்டத்தில் சுவாரசியமாக உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, பார்வையாளர்களில் ஒருவர் திடீரென எழுந்து, அவரை கிண்டல் செய்வதாக நினைத்து, "சினிமாவை விட்டு நீங்க எப்போ சாமியார் ஆனீங்க?' என்று கேட்க, இவரும் சிரித்துக் கொண்டே, "எனக்கு பல மாமியார்கள் இருக்கும் போது, நான் எப்படி சாமியார் ஆக முடியும்?' என்று கூறியவுடன், அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது.




பட வாய்ப்புகள் இன்றி, நடிப் பது குறைந்து விட்டால், அந்த நடி கரை சுற்றி இருப்பவர்களும், மக்களும் மறந்து விடுவது இயல்பு. ஆனால், இவரது மூத்த ரசிகர்கள் (பேரன், பேத்தி கண்டவர்கள்) ஜெமினியின் கடைசி காலம் வரையிலும், ஒவ்வொரு பிறந்தநாள் நவ., 17 அன்றும், நுங்கம்பாக்கம் இல்லத்தில் கூடி, ஜெமினியை கேக் வெட்டச் சொல்லி கொண்டாட தவறியதில்லை.




மார்ச் 22, 2005, அதிகாலை 3 மணிக்கு போன் வந்தது... சென்னை யிலிருந்து, ஜெமினியின் தீவிர ரசிகரான சியாம் சுந்தர் என்பவர் பேசினார். "ஜெமினி அண்ணன் காலமாகி விட்டார்...' என்ற அந்த சோக செய்தி கேட்ட சில நிமிடங்களுக்கு, ஜெமினியுடன் 35 வருடங்களாக பழகிய அந்த நாட்கள், "பிளாஷ்பேக்' போட்டோக்களாக மனதில் பளிச்சிட்டன.




மதுரையிலுள்ள என் வீட்டிற்கு, எந்த ஒரு பந்தாவுமில்லாமல், அடிக்கடி வருவதும், கொடைக் கானல் செல்வதற்காக நான் ரெடியாகும் வரை காத்திருந்து அழைத்துச் சென்றதும், அவரின் பெருந்தன்மைக்கு உதாரணம்.




ஜெமினியின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும், சில தினங்கள் கழித்து சென்னையில் நடைபெற்ற, "கண்ணீர் அஞ்சலி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அதில் பேசிய இயக்குனர் பாலச்சந்தர், நாகேஷ், மனோரமா உட்பட அனைவரும், ஜெமினியின் களங்க மில்லா உள்ளத்தை பாராட்டினர்.




"தன் வாழ்நாளில் ஒரு மனிதன் இந்த உலகில் அனுபவிக்க வேண்டிய அத்தனை சுகங்களையும் அனுபவித்தவர். எப்படி வாழ வேண்டும்; எப்படி வாழக் கூடாது என்ற இரண்டையும் அவரது வாழ்க்கைப் பாடத்திலிருந்து அறியலாம்...' என்று அவர்கள் குறிப்பிட்டு பேசியது, இந்த நினைவு தினத்தில் மனதில் ஒலிக்கிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக