புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_c10பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_m10பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_c10பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_m10பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_c10பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_m10பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_c10 
3 Posts - 5%
prajai
பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_c10பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_m10பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_c10 
2 Posts - 4%
Baarushree
பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_c10பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_m10பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_c10பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_m10பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_c10 
2 Posts - 4%
viyasan
பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_c10பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_m10பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_c10 
1 Post - 2%
Rutu
பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_c10பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_m10பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_c10 
1 Post - 2%
சிவா
பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_c10பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_m10பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_c10பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_m10பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_c10பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_m10பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_c10பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_m10பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_c10 
2 Posts - 13%
Rutu
பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_c10பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_m10பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Sep 12, 2011 1:26 pm

சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்த ‘லேவி’ என்னும் பெயருடைய வரி தண்டுபவர் ஒருவர் தன் இல்லத்தில் இயேசுவுக்கு ஒரு பெரிய விருந்தளித்தார். வரி தண்டுபவர்களும் மற்றவர்களும் பெருந்திரளாய் அவர்களோடு பந்தியில் அமர்ந்திருந்தார்கள். பரிசேயர்களும் அவர்களைச் சேர்ந்த மறைநூல் அறிஞர்களும் இதுகண்டு முகம் சுளித்து, இயேசுவிடம், ‘‘வரி தண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்?’’ என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, ‘‘நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம்மாற அழைக்க வந்தேன்’’ என்றார். பின்பு அவர்கள் இயேசுவை நோக்கி, ‘‘யோவானுடைய சீடர்கள் அடிக்கடி நோன்பிருந்து மன்றாடி வருகிறார்கள். பரிசேயர்களின் சீடரும் அவ்வாறு செய்கின்றனர். உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே’’ என்றார்கள்.
இயேசு அவர்களை நோக்கி, ‘‘மணமகன் மண விருந்தினர்களோடு இருக்கும் வரை அவர்களை நோன்பு இருக்கச் செய்யலாமா? ஆனால் மணமகன் அவர்களை விட்டுப்பிரிய வேண்டிய காலம் வரும், அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்’’ என்றார் & (லூக்கா 5; 27&35).
யோவானின் சீடர்களும் பரிசேயர்களும் நோன்பிருக்கக் காரணம், அவர்கள் மெசியாவை எதிர்பார்த்துக் காத்திருந்ததினால்தான். மெசியாவே சீடர்களுடன் இருந்தபோது அவர்கள் நோன்பிருக்கத் தேவையிருக்கவில்லை. பரிசேயர்கள் இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொள்ளாததினால் அவரது போதனைகள், தாங்கள் பாரம்பரியமாகக் கற்பித்து, கடைப்பிடித்து வந்த போதனைகளுக்கு எதிரானதாக நினைத்து இயேசுவை எதிர்த்தனர்.
காலங்கள் மாறி வருவதால் இயேசுவின் இரண்டாம் வருகையை உத்தேசித்து நம் வாழ்வின் நியாயத் தீர்ப்பை உணர்ந்து நாமும் நோன்பிருக்கத் தேவையாயிருக்கிறது.

ஆகவே, காலங்கள் மாற மாற நம் தேவைகளும் மாறிக்கொண்டே வருவதைப்போல மக்களும் ஆண்டவரைப் பற்றிய அறிவை வளர்த்துக்கொண்டே
வருகிறார்கள்.பழைய ஏற்பாட்டுக் காலத்தைப் பிடித்துக் கொண்டிருக்காமல், இன்றைய காலகட்டத்தில் தூய ஆவியானவர் எப்படி செயல்படுகிறாரோ அதன்படியே செயல்படுவோம். பழைய நியம முறைகள் நீங்கி, நம் கண்களால் காண முடியாத கடவுளை விசுவாசத்தினால் கண்டுணர்ந்து, நம் உள்ளமும் மனமும் தூய்மையாக வழிபடுவோம். பிரிவினை பேதத்தை மறந்து ஒன்றுபட்டு செயல்படுவோம். எல்லைகளை விரிப்பவன் மனிதன், சுருக்குபவன் சுயநலவாதி.நாம் நோன்பிருப்பதோ, நோன்பில்லாமல் இருப்பதோ பெரிதல்ல. நம் உள்ளத்தில் எவ்வளவு பரிசுத்தமாய் இருக்கிறோம் என்பதையே இயேசு கிறிஸ்து பார்க்கிறார். இதை நாம் உணர்ந்து கொள்கிறோமா? கடவுளை நாம் எவ்விதம் வழிபட்டு வருகிறோம்? கடவுளை நாம் எங்கெல்லாம் தேடுகிறோம்? எங்கு எதில் அதிகமாகக் கடவுளின் செயல்பாட்டை உணர்ந்திருக்கிறோம்?நாம் கடவுளை நம்மில் தேடுவோம். அவர் நம்மோடும் நம் சமுதாயத்திலும் நம் செயல்பாட்டிலும் இருக்கின்றார். இதை நாம் ஒவ்வொரு முறையும் உணரும்போதும் நம் வாழ்க்கை புதுமையாக அமையும்.

விளக்கில் எண்ணெய் நிறைந்திருந்தது. திரியும் எண்ணெய்க்கு மேலாக நீண்டு கொண்டிருந்தது. ஆதலால் படபடவென்று பற்றி எரிந்தது விளக்கு. இருளை அகற்றிய விளக்கொளியால் பலர் பயன் பெற்றனர். கதிரவனைப் போல் பேரொளி கொடுப்பதாய் எண்ணி செருக்குற்றது விளக்கு. திடீரென்று காற்று பலமாக வீசியது. அணைந்தது விளக்கு; சூழ்ந்தது இருள். உடனே மனிதன் கையில் தீப்பெட்டியுடன் விளக்கருகே வந்து நின்று, ‘‘விளக்கே, இனிமேல் வீண் பெருமை கொள்ளாதே, அமைதியுடன் ஒளியைக் கொடுப்பதில் கவனம் செலுத்து. விண்மீன், வண்ண நிலவு, கதிரவன் முதலியவற்றோடு ஒப்பிட்டுச் செருக்குடன் எரியாதே,’’ என்று சொல்லி மறுபடியும் விளக்கேற்றி வைத்தான்.

ஒருவரிடம் செல்வம் வந்து சேர்ந்துவிட்டால் தான் தான் மேலானவர் என நினைத்துக் கொள்வார். தற்புகழ்ச்சி என்னும் புகழ்க்கொடியைப் பறக்கவிடுவார். நாள்தோறும் பலர் தேடி வந்து அவருக்குப் புகழ் மாலை சூட்டிச் செல்வர். தன்னைச் சுற்றி கும்மியடிக்கும்
கூட்டத்தை வைத்துக்கொள்வார். தலைகால் தெரியாமல் ஆட்டம் போடுவார். தன்னைவிடப் பெரியவர் எவரும் இல்லை எனச் செருக்குற்றுத் திரிவார். திடீரென்று செல்வம் அழியும். இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் தள்ளப்பட்டதும் புகழ் விளக்கு அணையும். அப்போது கூடிவந்த கூட்டமும் ஓடிவிடும்.
‘‘ஒவ்வொருவரும் கேட்பதில் வேகமும் பேசுவதிலும் சினங்கொள்வதிலும் தாமதமும் காட்ட வேண்டும். ஏனெனில், மனிதரின் சினம், கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள் நிறைவேறத் தடையாயிருக்கிறது. எனவே எல்லா வகையான அழுக்கையும் நம்மிடம் மிகுந்துள்ள தீமையையும் அகற்றி, நம் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக் கொள்வோம். அதுவே நம்மை மீட்க வல்லது. இறை வார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து நம்மை ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருப்போம். ஏனென்றால் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடவாதோர், கண்ணாடியிலே தம் முகத்தைப் பார்த்துவிட்டுச்சென்று உடனே தாம் எவ்வாறு இருந்தோம் என்பதை மறந்துவிடும் ஒரு மனிதருக்கு ஒப்பாவார். ஆனால் நிறைவான விடுதலையளிக்கக் கூடிய சட்டத்தைக் கூர்ந்து கவனித்து அதைத் தொடர்ந்து கற்போர், தாம் கேட்பதை மறந்து விடுவதில்லை. அவர்கள் அதற்கேற்ற செயல்களைச் செய்வார்கள், தம் செயல்களால் பேறு பெற்றவர்கள் ஆவார்கள்.

‘‘தாம் சமயப் பற்றுடையோர் என எண்ணிக் கொண்டிருப்போர் தம் நாவை அடக்காமலிருப்பாரென்றால் தம்மையே ஏமாற்றிக்கொள்வர். இத்தகையோருடைய சமயப் பற்று பயனற்றது. தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமய வாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும் உலகத்தால் கறைபடாதபடி தம்மைக்காத்துக் கொள்வதும் ஆகும்’’ & (யாக்கோபு
2: 19&27).நன்மைகளைக் கூட்டிக்கொள்வோம். தீமைகளைக் கழித்துக் கொள்வோம். அன்பைப் பெருக்கிக்கொள்வோம். வாழ்க்கையைப் பல்வேறு கூறுகளாக வகுத்துக்கொண்டு வாழ்வோம்.
& மணவைப்பிரியன்
ஜெயதாஸ் பெர்னாண்டோ




தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு 154550 பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு 154550 பரிசுத்த நிலையே உண்மையான நோன்பு 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக