புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருந்திய மந்திரவாதி! Poll_c10திருந்திய மந்திரவாதி! Poll_m10திருந்திய மந்திரவாதி! Poll_c10 
69 Posts - 58%
heezulia
திருந்திய மந்திரவாதி! Poll_c10திருந்திய மந்திரவாதி! Poll_m10திருந்திய மந்திரவாதி! Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
திருந்திய மந்திரவாதி! Poll_c10திருந்திய மந்திரவாதி! Poll_m10திருந்திய மந்திரவாதி! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
திருந்திய மந்திரவாதி! Poll_c10திருந்திய மந்திரவாதி! Poll_m10திருந்திய மந்திரவாதி! Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருந்திய மந்திரவாதி! Poll_c10திருந்திய மந்திரவாதி! Poll_m10திருந்திய மந்திரவாதி! Poll_c10 
111 Posts - 60%
heezulia
திருந்திய மந்திரவாதி! Poll_c10திருந்திய மந்திரவாதி! Poll_m10திருந்திய மந்திரவாதி! Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
திருந்திய மந்திரவாதி! Poll_c10திருந்திய மந்திரவாதி! Poll_m10திருந்திய மந்திரவாதி! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
திருந்திய மந்திரவாதி! Poll_c10திருந்திய மந்திரவாதி! Poll_m10திருந்திய மந்திரவாதி! Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருந்திய மந்திரவாதி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 2:56 am

மலையடிவாரத்தை ஒட்டிய புல்வெளியில் ஏராளமான ஆடுகள் புற்களை மேய்ந்து வந்தன. அந்த ஆடுகளை எல்லாம் சிறுவன் சுந்தர் பார்த்து வந்தான். ஆடுகளை மேயவிட்டுவிட்டு களைப்பினால் அந்தப் புல்வெளியில் படுத்தபடி கண்மூடினான். சிறிது நேரத்தில் கண்களை மூடியபடி நன்றாகத் தூங்கிவிட்டான். அவன் கண்விழித்துப்பார்த்தபோது, நேரமும் இருட்டிவிட்டது. புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளையும் காணவில்லை.

வெறுமனே வீடு திரும்பிய சுந்தரைப் பார்த்ததும் முதலாளி ஆத்திரமடைந்தார். ""நீ எதற்காக இரவு நேரத்தில் வீடு திரும்புகிறாய்? எங்கே ஆடுகள்?''

""முதலாளி! நான் ஆடுகளை புல்வெளியில் மேயவிட்டபடி கவனமுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு அதிகமாக களைப்பு ஏற்படவே அதன் காரணமாக புல்வெளியில் படுத்தபடி நன்றாகத் தூங்கிவிட்டான். நான் கண்விழித்துப் பார்த்தபோது நேரம் இருட்டியிருந்தது. ஆடுகளையும் காணவில்லை!'' என்று கவலையுடன் கூறினான்.

""நீ தொலைத்த ஆடுகளை எல்லாம் தேடிக் கண்டுபிடித்து அழைத்துக் கொண்டு வா! அப்போதுதான் நான் உன்னை வீட்டில் ஏற்றுவேன். இல்லையென்றால் உன்னை நான் வீட்டில் ஏற்றமாட்டேன்!'' என்று பிடிவாதமாக கூறிவிட்டார் முதலாளி.

அன்று பவுர்ணமியானதால் இரவு நிலவொளி நன்றாக இருந்தது. அந்த நிலவொளியில் பயத்தை மறந்து எப்படியாவது தொலைந்த ஆடுகளை கண்டுபிடித்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு மலையடிவாரத்தில் தேடி அலைந்தான்.

அவன் கண்களுக்கு எட்டியத்தூரம் வரையிலும் ஆடுகள் எதுவுமே தென்படவில்லை. அதனால், மிகவும் கவலையடைந்தவனாய் இனிமேல் ஆடுகளை நாம் எங்கே சென்று தேடுவது என்று யோசனை செய்தான். அப்போது பூந்தோட்டத்தில் இருந்த ஒரு கிளி பேசியது.

""சிறுவனே! உன்னைப் பார்க்கையில் மிகவும் சோகத்துடன் இருக்கிறாய் போன்றுத் தெரிகிறது. உன்னுடைய சோகம் என்னவென்று நான் அறிந்து கொள்ளலாமா?'' என்று கேட்டது கிளி.

""ஆந்தையே! நான் இந்த மலையடிவாரத்தில் என்னுடைய ஆடுகளை எல்லாம் தொலைத்துவிட்டேன். அந்த ஆடுகள் எங்கே சென்றுள்ளன என்று எனக்குத் தெரியவில்லை. ஆடுகளை யாராவது பிடித்துச் சென்றார்களா என்றும் புரியவில்லை. அதனால்தான் நான் மிகவும் கவலையுடன் இருக்கிறேன்!'' என்றான் கண்ணன்.

""சிறுவனே! இந்த புல்வெளியில் இருந்து வலதுபக்கமாக சிறிது தூரம் நடந்து சென்றால் பெரிய மலை ஒன்று தென்படும். அந்த மலையின் உச்சியில் பெரிய குகை ஒன்று இருக்கிறது. அந்த குகையில் மந்திரவாதி ஒருவன் வசித்து வருகிறான். அவன் இன்று பவுர்ணமியானதால் இந்நேரத்தில் பூஜை செய்து ஆடுகளை எல்லாம் பலி கொடுக்க தயாராகிக் கொண்டிருப்பான்.

""அவன் ஆடுகளையெல்லாம் பலியிடும் முன்னர் மலை உச்சிக்குச் செல். அந்த மந்திரவாதியிடம் சாமர்த்தியமாக பேசி அவன் மனதை மாற்றி உன் ஆடுகளை காப்பாற்றிக் கொள்!'' என்றது கிளி. கிளிக்கு நன்றி கூறிவிட்டு மந்திரவாதியின் குகையை அடைந்தான் சுந்தர்.

மந்திரவாதி தன்னுடைய தியானத்தை முடித்துவிட்டு எழுந்தான். தன் கையில் பலி கத்தியை எடுத்துக் கொண்டு ஆடுகளை வெட்டுவதற்கு தயாரானான்.

""ஐயா மந்திரவாதியே! என்னுடைய ஆடுகளை எல்லாம் விட்டுவிடும். அதற்குப் பதிலாக என்னை பலியிட்டுக் கொள்ளும்!'' என்று அவர் காலில் விழுந்தான் சுந்தர்.

மந்திரவாதியோ அதைக் கண்டு நெஞ்சம் உருகினான். தன் கையில் இருந்த பலி கத்தியை கீழேப்போட்டான். பின்னர் அவன் சுந்தரைத் தாங்கிப் பிடித்தான்.

""சிறுவனே! இப்போது உன்னைப் பார்க்கிற வேளையில் எனக்கு வியப்பாக இருக்கிறது. இந்த ஆடுகளுக்காக உன் உயிரையே விடத் துணிந்துவிட்டாயே! இதுவரையிலும் நான் யாருக்காகவும் இரக்கப்பட்டதில்லை. இப்போது முதன்முறையாக உனக்காக இரக்கப்படுகிறேன்!'' என்றான் மந்திரவாதி.

""மந்திரவாதியே! நீர் எதற்காக இந்த ஆடுகளை எல்லாம் பலி கொடுக்கப் போகிறீர் என்பதை நான் தெரிந்துக் கொள்ளலாமா?'' என்று கேட்டான் சுந்தர்.

""சிறுவனே! நான் துஷ்ட தேவதைகளை என் வசம் இழுக்கப் போகிறேன். அதன் மூலமாக இந்த உலகத்தில் நானே சக்திமிக்கவன் என்றும், என்னை வெல்ல யாருமே கிடையாது என்பதையும் நிரூபிக்கப் போகிறேன்!'' என்றான் மந்திரவாதி.

""மந்திரவாதியே! நீர் எதற்காக துஷ்ட தேவதைகளை இழுக்க வேண்டும். நல்ல தேவதைகளை உமது வசத்தில் இருக்கச் செய்ய தியானம் செய்யலாமே! உமக்கு கிடைக்கிற நல்ல சக்திகளைக் கொண்டு நாட்டு மக்கள் எல்லாருக்கும் நன்மை செய்யலாமே! நீர் நன்மை செய்தால் உனக்கு புண்ணியம் கிடைக்கும்!'' என்று கூறினான் கண்ணன்.

அதனைக் கேட்ட மந்திரவாதியோ சிறிதுநேரம் யோசனையில் ஆழ்ந்தான்.

""ஐயா மந்திரவாதியே! இந்த ஆடுகள் மட்டுமில்லாது பூமியில் உள்ள பிற உயிரினங்கள் அனைத்துமே மனிதர்களான நம்மை நம்பித்தான் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றன. இயற்கை கொடுத்த உணவான தாவரங்களை சாப்பிட்டபடி நமக்கு எந்தவிதமான தொல்லைகளும் கொடுக்காமல் வாழ்ந்து வருகின்றன. ஆனால், நாம்தான் அவைகளுக்குத் தொல்லைகள் கொடுத்து அவைகளைக் கொன்று பாவங்கள் செய்து வருகிறோம்.

""நம்மை நம்பி இருக்கிற உயிரினங்களை கொல்வது நம்பிக்கைத் துரோகமான செயல்தானே. நீங்கள் உயிரினங்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதோடு மட்டுமில்லாமல் நாட்டில் தண்ணீர் பஞ்சத்தையும் போக்க வேண்டும். மக்களை அச்சுறுத்தி வருகிற கொடிய நோய்களை எல்லாம் உடனே மறைந்து போகும்படியாகச் செய்ய வேண்டும். உங்களின் மந்திர சக்தியினால் நல்லது செய்ய முயலுங்கள்!'' என்றான் சுந்தர்.

சுந்தரின் அறிவுரைகளைக் கேட்டதும் மந்திரவாதி தன்னுடைய தவறினை உணர்ந்தார். "ஒரு சிறுவன் நம்மிடம் இந்த அளவுக்கு அறிவுரைகளை கூறிகின்றானே. நம்மையும் திருந்தச் செய்துவிட்டானே. இனிமேல் நம்முடைய மந்திர சக்திகளை எல்லாம் எக்காலத்திலும் தீய வழிகளில் பயன்படுத்தக்கூடாது. நல்ல வழிகளில் மந்திரசக்தியினைப் பயன்படுத்த வேண்டும்!' என்று மனதுள் முடிவெடுத்துக் கொண்டான்.

""சிறுவனே! உன்னுடைய அறிவுரைகளை நான் ஏற்றுக் கொள்கிறேன். இனிமேல் நான் என்னுடைய மந்திரசக்திகளை எல்லாம் நல்ல வழிக்கே பயன்படுத்திக் கொள்வேன் என்று உறுதியளிக்கிறேன்!'' என்றான் மந்திரவாதி. பின்னர் அவன் ஆடுகளை எல்லாம் சுந்தரிடம் ஒப்படைத்தான்.

மந்திரவாதி திருந்தியதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தான் சுந்தர். அதோடு மட்டுமல்லாமல் அவருக்கு மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக் கொண்டான். பின்னர் தனது ஆடுகளை எல்லாம் கூட்டிக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினான். அந்த நேரத்தில் பொழுது புலர்ந்துவிட்டது. சுந்தர் ஆடுகளோடு வருவதைக் கண்டதும் முதலாளி மகிழ்ச்சியடைந்தார்.

""சுந்தர்! நான் உன்னிடம் கோபமாக நடந்ததிற்கு என்னை மன்னித்துவிடு. நீ இல்லாமல் ஒருநாள் கூட என்னால் இருக்க முடியவில்லை. இனி நீ என் வளர்ப்பு மகன்; வேலைக்காரன் இல்லை. இரவு முழுவதும் உன்னை காணாமல் உங்கம்மா அழுதுகிட்டு இருக்கா. வா போகலாம்!'' என்றார். மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான் சுந்தர்.

சிறுவர் மலர்



திருந்திய மந்திரவாதி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Jun 20, 2011 9:49 am

நன்றி



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக