புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனவெறி பிடித்தோரே இதைப் படியுங்கள் முதலில் Poll_c10இனவெறி பிடித்தோரே இதைப் படியுங்கள் முதலில் Poll_m10இனவெறி பிடித்தோரே இதைப் படியுங்கள் முதலில் Poll_c10 
83 Posts - 56%
heezulia
இனவெறி பிடித்தோரே இதைப் படியுங்கள் முதலில் Poll_c10இனவெறி பிடித்தோரே இதைப் படியுங்கள் முதலில் Poll_m10இனவெறி பிடித்தோரே இதைப் படியுங்கள் முதலில் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
இனவெறி பிடித்தோரே இதைப் படியுங்கள் முதலில் Poll_c10இனவெறி பிடித்தோரே இதைப் படியுங்கள் முதலில் Poll_m10இனவெறி பிடித்தோரே இதைப் படியுங்கள் முதலில் Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
இனவெறி பிடித்தோரே இதைப் படியுங்கள் முதலில் Poll_c10இனவெறி பிடித்தோரே இதைப் படியுங்கள் முதலில் Poll_m10இனவெறி பிடித்தோரே இதைப் படியுங்கள் முதலில் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
இனவெறி பிடித்தோரே இதைப் படியுங்கள் முதலில் Poll_c10இனவெறி பிடித்தோரே இதைப் படியுங்கள் முதலில் Poll_m10இனவெறி பிடித்தோரே இதைப் படியுங்கள் முதலில் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இனவெறி பிடித்தோரே இதைப் படியுங்கள் முதலில் Poll_c10இனவெறி பிடித்தோரே இதைப் படியுங்கள் முதலில் Poll_m10இனவெறி பிடித்தோரே இதைப் படியுங்கள் முதலில் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இனவெறி பிடித்தோரே இதைப் படியுங்கள் முதலில் Poll_c10இனவெறி பிடித்தோரே இதைப் படியுங்கள் முதலில் Poll_m10இனவெறி பிடித்தோரே இதைப் படியுங்கள் முதலில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனவெறி பிடித்தோரே இதைப் படியுங்கள் முதலில் Poll_c10இனவெறி பிடித்தோரே இதைப் படியுங்கள் முதலில் Poll_m10இனவெறி பிடித்தோரே இதைப் படியுங்கள் முதலில் Poll_c10 
22 Posts - 92%
T.N.Balasubramanian
இனவெறி பிடித்தோரே இதைப் படியுங்கள் முதலில் Poll_c10இனவெறி பிடித்தோரே இதைப் படியுங்கள் முதலில் Poll_m10இனவெறி பிடித்தோரே இதைப் படியுங்கள் முதலில் Poll_c10 
2 Posts - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனவெறி பிடித்தோரே இதைப் படியுங்கள் முதலில்


   
   
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sat Jun 18, 2011 9:48 am

இனவெறி பிடித்தோரே இதைப் படியுங்கள் முதலில் Stop_racism___unite_together_by_1___rob___1
இனவெறி என்ற வார்த்தையைக் கேட்டவுடன் உங்களுக்கு முதலில் தோன்றுவது எது ?

எதோ ஒரு நாட்டில் எதோ ஒரு இனம் மற்ற இனத்தை அழித்ததையோ, அல்லது நமது நாட்டில் நமது இனம் மற்ற இனத்தால் அடக்கப்பட்டத்தையோ / அழிக்கப்பட்டதையோ தான் நியாபகத்துக்குக் கொண்டு வருவோம் அல்லவா ?
சரி !!! இதைப் படிக்கும் நீங்கள் இனவெறிப் பிடித்தவரா ? எனக் கேட்டால். பெரும்பாலும் இல்லை என்றே சொல்லிவிடுவோம். சரி தானே !!!

ஆனால் இல்லை என சொன்ன அனைவரும் பொய் சொல்லி உள்ளார்கள் என நான் சொல்லுகின்றேன். என்னப்பா எடுத்தவுடனேயேப் போட்டுத் தாக்கிறீங்க ..
நான் இனவெறிப்பிடித்தவனே இல்லை .. ஒரு நாளும் அப்படி நான் நடந்துக் கொண்டதே இல்லை என சொன்னாலும், நீங்கள் பொய் சொல்வதாகவே நான் கூறுவேன்.

நீங்கள் இனவெறிப் பிடித்தவராக இருக்க ? ஏனைய இனத்தின் மீது தாக்குதல் நடத்தியோ, அடித்தோ, திட்டியோ, தீண்டாமை செய்தோ இருக்க வேண்டியதில்லை.

இதனைப் படிக்கும் எத்தனைப் பேருக்கு தமதுக் குடும்பம், மொழி, மதம், சாதி, இனம், நிறம், கௌரவம்,அந்தஸ்து சார்ந்தப் பற்று இருக்கின்றது. உண்மையை உங்கள் உள்ளத்துக்கே சொல்லிக் கொள்ளலாம். இதில் ஒன்றோ அல்லது பல பற்றுக்களோ நிச்சயம் உங்களிடம் இருக்கும். இவற்றில் ஒருப் பற்று உங்களிடம் இருந்தாலும் நீங்கள் ஒரு இனவெறிப் பிடித்தவர் தான்.
ஆம் ! பக்கா ரேஸிஸ்ட் ( RACIST ) நீங்கள்.

எப்போதாவது விலங்குகளிடையே இனவெறி இருப்பதைப் பார்த்துள்ளீர்களா ? விலங்குகளிடையேயும் ரேசிசம் இருக்கின்றன தான். ஒரு வெள்ளை அல்பினோக் காகங்களை பிற காகங்கள் கொத்தி விரட்டியடித்ததை நான் பார்த்துள்ளேன்.

ஆனால் விலங்குகளின் இனவெறி என்பது மனிதனின் இனவெறியைக் காட்டிலும் குறைவானதே. காகங்கள் ஒரு போதும் தமக்குள் மதம், மொழி, சாதி வைத்துக் கொள்வதில்லை. இதே போலத் தான் ஏனைய விலகுங்களும்.
ஆனால் உடல்ரீதியாக தம்மைப் போல இல்லாத தமது இனத்தைக் கண்டு அஞ்சும் என்பது உண்மை. ஆனால் மனிதன் மட்டும் தான் ஒரே இனத்துக்குள்ளேயே இனவெறியாட்டம் போடும் ஒரு விலங்கினம் ஆகும்.

நாம் ஒவ்வொருவரும் இனவெறியினை வெவ்வேறு சதவீதங்களில் தாங்கியே வருகின்றோம். இனவெறியின் பிறப்பே மனித மனதில் இருக்கும் பேரச்சத்தின் விளைவே ஆகும்.

இனவெறி என்பது எப்படி தொடங்குகின்றது?
ஒவ்வொரு மனிதனையும் அவனது குணத்தினால் எடைப் போடாமல் அவனது
பாரம்பரியத்தினால் எடைப் போடும் மனோபாவத்தினால் எழுவதே ஆகும். மனிதன்
என்பவன் தாம் சந்திக்கும் ஒவ்வொரு சக மனிதனையும் எடைப் போடுவான்.
இது தான் மனித குணம். ஒரு மனிதரைப் பார்க்கும் போது முதலில் நாம் கவனிப்பது அவனது நிறம் - அது வெள்ளையா, கருப்பா, சிகப்பா, மஞ்சளா, மாநிறமா எனத்தான்.அடுத்தது அவனது இனச்சாயலைக் கவனிப்போம் வெள்ளையரா, கருப்பரா, சீனரா,தெற்காசியரா, அரபியரா என. அதற்க்கடுத்தது அவனது மொழி, மதம் என போகும். இன்றுப் பல பேரும் ஒரு மனிதனை சந்திக்கும் போது மத அடையாளங்களைத் தான் கண்கள் தேடி அலையும்.
அவன் நம்மவனா ? நம்மவனா ? எனத் தேடும். ஒரே நாடு,மொழி, மதம் ஆனாலும் கூட எந்த ஊரு என ஆரம்பிக்கும். எதாவது ஒரு ஊரைச்சொன்னால் அந்த ஊரினை வைத்து சாதியம் தேடுவோம் அல்லவா ? கோயம்புத்தூர்,திருநெல்வேலி, மதுரை, திருச்சி, காயல்பட்டினம், நாகர் கோயில், பாலக்காடு என சாதியங்களை அறியவே பல நேரங்களில் ஊர்களை துலாவிக் கேட்போம்.

இப்படி மனிதன் சக மனிதனை எடைப்போட்டு மனக்கணக்கு செய்வதே இனவெறியின் பிறப்பிடமாகும். அவன் எந்தப்பிரிவைச் சேர்ந்தவன் என்றதும் அவன் நம்மை விட தாழ்ந்தவனா ? உயர்ந்தவனா என்ற எண்ணம் தொற்ற ஆரம்பிக்கும். அது அவனது பொருளியில் சூழ்நிலை வரைச் சென்று விடும் என்பதே உண்மை. என்னிடம் பேசும் பல வடஇந்தியர்கள், இலங்கையர்கள்
ஆரம்பத்தில் பேசும் போது கொண்டு வரும் புன்னகையை நான் ஒரு மதராஸி எனத்
தெரிந்ததும் குறைத்துவிடுவார்கள். இந்தியன் என சொன்னது இலங்கையர் பலர்
புன்னகையை ஆஃப் செய்துவிடுவார்கள். இது தான் மனிதனை எடைப் போடும்
இனவெறியின் ஆரம்பம் ஆகும்.

இனவெறி என்பது மனிதன் எப்படிக் கணக்குப் போடுகின்றான்?
இனத்தின் ஊடாக, இனத்தின் தற்பெருமையின் ஊடாக,இனத்தினைச் சேர்ந்தவனின் பாரம்பரியம், பரம்பரை ஊடாக கணக்குப் போடுகின்றான்.
ஒரு பிராமணன் இன்னொரு பிராமணனிடம் பழகும் பழக்கம் ஏனையோரிடம் எளிதாக வந்துவிடாது. அதே போல ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமோடு பழக்கம் ஏனையோரிடம் எளிதாக வந்துவிடாது. ஒரு இந்திப் பேசுபவன் மற்றொரு இந்திப் பேசுபவனோடு இருக்கும் பழக்கம் ஏனையோரிடம் வந்துவிடாது. மனிதன் மற்றொரு மனிதனை எடைப் போட்டே பழகுகின்றான் இது தான் உண்மையே !! இது தான் இனவெறியின் வாழ்விடமே.

ஒரு குரங்கு மற்றொரு குரங்கிடம் எடைப் போட்டு விளையாடுவதில்லை. ஒரு நாய் மற்றொரு நாயிடம் எடைப் போட்டு பழகுவதில்லை. ஒரு பன்றி மற்றொரு பன்றியிடம் தராதரம் பார்த்துப் புழங்குவதில்லை. அது விகாரமாக, அச்சுறுத்தலாக இருந்தால் மட்டுமே பயத்தில் கடிக்கும், உதைக்கும் - ஐந்தறிவு பிராணிகள் அவ்வளவே செய்ய இயலும். மனிதன் அவ்வாறு ஐந்தறிவுப் பிராணி இல்லையே. இருப்பினும் மனிதன் விலங்குகளை விடக் கேவலமாக அல்லவா செயல்படுகின்றான்.

மனிதர்கள் ஏனைய மனிதன் மீது வைக்கும் மதிப்புகளை அவனது பரம்பரை ஊடாக, அடையாளத்தின் ஊடாக அல்லவா வைக்கின்றான். இது குகையில் வாழ்ந்த மனிதனின் சிந்தனை வடிவம் தான். அது இன்று வரைத் தொட்டுத் தொடருகின்றது எனலாம். மனிதனின் இனவெறி சிந்தனை அவனது பிரித்துப் பார்க்கும் அறிவினாலும், தெரிவுகளாலும் வருவதே. ஒரே உறவுகளுக்குள்ளும் சில குடும்பங்கள் தாம் கௌரவமான குடும்பம் எனப் பறைசாற்றிக் கொள்வதும், சக உறவினர்களை பொருளியில் தரம் பார்த்து இழிவுப்படுத்துவதும் அல்லது தமது குடும்ப அசிங்கங்களை மறைக்க ஏனைய குடும்பங்களை இழிவாக சித்தரிப்பதும் இனவெறியே ஆகும்.

அதே போல குடும்ப பெருமைகளைப் பேசுவதும் - எங்க தாத்த ஜமீந்தார், வெள்ளைகாரன் வீட்டில் பெரிய அதிகாரி, ஊர் நாட்டாண்மை எனத் தொடங்கி எங்க பரம்பரை ஒரு அரசப் பரம்பரை எனப் போவது வரையும் இப்படியான ஒரு சிந்தனை வடிவமே. தமது என்பதில் பெருமிதம் கொள்வதும்,தமது அல்லாதோர் மீது பெருமிதத்தைக் காட்டி இழிவுப் படுத்துவதுமே இனவெறியின் ஆரம்பப் புள்ளிகள். எத்தனை பெற்றோர் இப்படி பேசி இருப்பார்கள்,எத்தனைத் தடவை நாமே இப்படிப் பேசி இருப்போம் - இது எங்கிருந்து வந்தது பரம்பரை பரம்பரையாக விதைக்கப்பட்ட இனவெறி என்னும் மன ஆயுதம். உண்மையில் இப்படியானப் பேச்சுக்கள் பாதிப் பொய்யானவை, எனது தாத்தா பெரிய வேட்டைகாரர் என பீலா விடுவர் ஆனால் அவர் குருவியைக் கூட சுட்டு இருக்க மாட்டார் என்பதுவே உண்மை. அப்படியே அவர் பெரிய வேட்டைக் காரராக இருந்தாலுமே, அவர் தான் வேட்டைக்காரரே ஒழிய அவருக்கு பிறந்தது எல்லாம் தற்பெருமையடித்துக்
கொள்வது நியாயமா ?
இனவெறி பிடித்தோரே இதைப் படியுங்கள் முதலில் Racism-against-islam

பிராமணர்களில் பல மேதாவிகள் வந்தமையால் அந்த இனமே உயர்வானது என்றுக் கருதுவோரையும் நான் பார்த்ததுண்டு. அப்படி எனில் அனைவரும் அல்லவா மேதாவிகளாக இருந்திருக்க வேண்டும். அதனால் கலப்பு மணம் புரிந்தால் மேதாவித் தனம் போய்விடுமாம்.இப்படி பேசுவோரும் உள்ளனர். பிராமணர் மட்டுமல்ல எந்தவொரு இனத்திலும் மேதாவிகள் அதிகம் உருவாகுகின்றார்கள் எனில் அது அவர்களுக்கு அதிக வாய்ப்புக் கிட்டியுள்ளதே ஒழிய, வாய்ப்புக் கிட்டாதவன் முட்டாள் இல்லை.
அதே போல் ஒரு மேதாவியோ, சில மேதாவிகளோ உருவாகிவிட்டால் அந்த இனமே மேதாவி இனம் எனப் பெருமையடித்துக் கொள்வது இனவெறியே ஆகும்.

கனடாவில் தமிழர்கள்,இந்தியர்களால் வைக்கப்படும் இனவெறிக் குற்றச்சாட்டு கருப்பினத்தவர்கள் முரடர்கள், வெள்ளை இனத்தவர் ஒழுக்கம் கெட்டவர்கள், சீனர்கள் அறிவற்றவர்கள் என்பது தான்.
ஆனால் உண்மையில்கருப்பினத்தவர்களில் பலரும் மென்மையானவர்கள், வெள்ளை இனத்தவர் பலரும் குடும்பம் பிள்ளைகள் மீது அன்பாக உள்ளனர்.
நான் பார்த்தவரை தமிழர்களும், இந்தியர்களுமே தொடை தெரியும் பெண்ணை ஆவ் ! எனப் பார்ப்பார்கள் ? மனைவியரை வெளியில் அழைத்துவருவது
குறைவு, பிள்ளைகளிடம் அன்பாக வெளியிடங்களில் பேசவே மாட்டார்கள்.
தமிழர்களின் பதின்மவயதுக் குழந்தைகள் கட்டற்று ஊர் சுற்றுகின்றன, அதனால்
அனைவரும் அப்படித் தான் என முடிவெடுக்க முடியுமா ?. சீனர்களில் பலரும்
கல்வித் துறையில் முன்னேறி வருகின்றனர். ஆனால் இப்படியான இனவெறிக்
கருத்தியல் தானாகவே சமூகங்களில் உருவாகிவிடுகின்றன. ஓரிருவரை வைத்துக்
கொண்டு ஒட்டு மொத்த இனத்தையே கருத்திடுவது.

இதே போல நம் நாட்டில் இந்துக்களிடம் இருக்கும் சாதியங்கள், மற்றும் சமூக சிக்கல்களை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த இந்துக்களுமே தீண்டாமை செய்வது போலவும், சாதிவெறியர்களாகவும் சிலர் விமர்சித்து வருவதும் இனவெறித்தனமே ஆகும். ஆம் இந்தியர்களிடம் மதங்கள் கடந்து சாதியங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றினை நீக்க முயல வேண்டுமே ஒழிய !!! இனவெறியூட்டி அல்ல !!

சொல்லப் போனால் ஒவ்வொரு சமுதாயத்திலும் பலர் வாழ்க்கையில் முன்னேறுவதும் இல்லை, சாதிப்பதும் இல்லை, மொக்கைகளாக வலம் வருவார்கள். ஆனால் அவர்கள் தம்மை தாமே உயர்த்திக் கொள்ள முடியாது அல்லவா ? அதனால் தாம் சார்ந்த இனம், மொழி, மதம் என்பதை உயர்த்த முனைவார்கள். அதில் இருப்பதால் தாமும் உயர்வானவர் எனக் காட்டிக்
கொள்வார்கள். தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில் இருக்கும் தெலுங்கு பேசும்
சாதிகளிடமும் இப்படியான பழக்கங்கள் இருக்கின்றன. ஏன் அவர்கள் மட்டுமல்ல
அனைத்து ஆதிக்கச் சாதிகளிலும் இவை உண்டு.
ஏன் இஸ்லாமிய மத அடிப்படைவாதங்களின் பேச்சுக்கள் எப்படி உள்ளன ? இஸ்லாமே உயர்வானது என்றும்,அரேபிய கலாச்சாரமே உன்னதமானது எனவும், குரானே அனைத்து அறிவுப் பொக்கிஷம் என்பார்கள். கடைசியில் நான் அதனைப் பின்பற்றுகின்றேன் எனச் சொல்லிவிட்டால் என்ன அர்த்தம் ஒருவன் தனது நிலையை தானே உயர்த்திக் கொள்ள கொக்கரிக்கின்றார்கள் என்பது தானே. இதே நிலை கிறித்தவர்களிலும்,பிராமணர்களிடம், இலங்கை வேளாளர்களிடமும் இருப்பதை நான் பார்த்து உள்ளேன்.

அண்மையக் காலமாக தமிழ் வீரம் பேசுவோரிடமும் பார்த்துள்ளேன். தமிழர்கள் உலகையே ஆண்டார்கள் என்றும்,வீரம் சொறிந்தவர்கள் எனவும் கூறி வருகின்றார்கள். இதே நிலை இஸ்லாமியர்களிடமும் உண்டு, இஸ்லாமே இந்தியாவை ஆண்டது - இந்தியாவின் பொற்காலம் எனக் கூறுவோரும் உண்டு. அதே போல ஆர்.எஸ்.எஸ் வாலாக்களின் இந்தியக் கலாச்சார மேன்மைக் குறித்த தற்பெருமை. உண்மையில் அவை எல்லாம் கொஞ்சம் காலம் உச்சத்தில் இருந்தவையே ! ஆனால் அவற்றையே பேசிப் பேசி வருவது இனவெறித்தனம். தமிழ் பழைமையான மொழி ! அதனால் அது உயர்வானது ! அம்மொழி பேசும் குடும்பத்தில் பிறந்தேன் ! அதனால் நானும் உயர்வானவன் என்பது இனவெறி.
அப்படியானால் தமிழ் மொழிப் பேசாதக் குடும்பத்தில் பிறந்தவன் என்ன தாழ்வானவனா ?

அதே போல ஒருக் குறிப்பிட்டக் காலக்கட்டதில் ஆதிக்கம் செலுத்தியதால் அவர்களின் வம்சாவளி எல்லாம் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்கள் உயர்வானவர்கள் என்றில்லை. தமிழகத்தை வன்னியர்கள் ஆதிக்கம் செலுத்திய காலமுண்டு, அதனால் அவர்கள் உயர்வடைந்தார்கள். ஆனால் ஆதிக்கம் இழந்த பின்னரும் தாமே உயர்வு என வாதிடுவது முட்டாள் தனம். பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்தினர், அதனால் உயர்வடைந்தார்கள் பின்னர் ஆதிக்கம் இழக்கத் தொடக்கியதும் தாமே உயர்வு என எண்ணுவது. ஆங்கிலேயேர், முகாலயர், பிரஞ்சினர், ஆரியர் ஆதிக்க செலுத்தினர்.
அதனால் உயர்வு நிலையில் இருந்தார்கள், அதனால் இன்று வரை அவர்கள் செய்வது எல்லாம் உயர்வானது என்பதும் இனவெறித்தனமே. இவை எல்லாம் யதார்த்ததில் மாய மனதில் நீக்கமற நிறைந்துள்ளது.

நாசி ஜெர்மனியில் ஒவ்வொருவரும் படிவங்களை நிரப்பும் போது தமது பரம்பரை எதுவென எழுதச் சொல்லுவார்களாம்.அப்போது ஆரியன் என எழுதும் போது அவர்களின் இனத்தினைக் கண்டுக் கொள்வார்கள். அதே போல சோவியத் ரசியாவில் படிவங்களில் சொத்துக்கள் இருக்கின்றதா ? இருந்ததா என எழுதச் சொல்வார்களாம் .. அதன் மூலம் அனைவரும் உழைக்கும் வர்க்கம் என்பதை அறிய முடியும் என்பதால். இரண்டுமே பக்கா இனவெறித் தனமே ஆகும். இன்றளவும் சென்னையின் பல பள்ளிகளில் பிரி.கே.ஜி. சேர்க்கைக்கு பெற்றோருக்கு நுழைவுத் தேர்வு வைப்பார்கள். இதுவும் இனவெறியே. ஏனெனில் படித்தவர்கள் பலரும் ஆதிக்கச் சாதியில் இருந்தும், பணம் படைத்தவர்களாகவும் இருப்பார்கள் என்பதை அறியவே.
ஏழையின் பிள்ளை, பாமரனின் பிள்ளை பள்ளியில் சேரக் கூடாது என்பதற்காகவே இவை நடத்தப்படுகின்றன என்பதை நாம் அறிவோமா ?


இன்றைய மேலை நாடுகளில் எப்படி இனவெறி வெற்றிக் கொள்ளப்பட்டன. சில ஆண்டுகளுக்கு முன் அடிமைகளாகவும், எஜமானியராகவும் இருந்த கருப்பின - வெள்ளையினத்தவர் வேகமாக கலப்புற்று வருகின்றனர். இங்கு அனைத்து பள்ளிகளிலும் சாதியோ, இனமோ கேட்கப்படுவதில்லை அனைவருக்கும் சமமான கல்விக் கொடுக்கப்படுகின்றது. ஒவ்வொரு மனிதனும் தனது நிறத்தால்,மொழியால், இனத்தால், பரம்பரையால் கணிக்கப்பட்டு வாய்ப்பளிக்கப்படுவதில்லை. அனைவரும் தனிமனித ஆற்றலின் மூலமாகவே பரிசோதிக்கப்பட்டு வாய்ப்பளிக்கப்படுகின்றான். விமான சிப்பந்தி பணிப்பெண்கள் நிறத்தால் கருப்பானவளுக்கு வாய்ப்பில்லை என்றோ, வெள்ளையாக இருந்தால் வாய்ப்போ எனக் கூறுவதில்லை. பிரி.கே.ஜி சேர்க்கைக்கு பெற்றோர் நுழைவுத் தேர்வு எழுதுவதில்லை. ரிசவேசனில் வேலைக் கொடுக்கப்படுவதில்லை.
அனைவருக்கும் சமமான கல்வி, வாய்ப்பு எனும் போது ரிசவேசன்கள் தேவையில்லாமல் போய்விடும். சாதியங்களும், பிரிவினைகளும், வறுமையும் இல்லாமல் போனதால் மதவாதிகளுக்கு வேலை இல்லாமல் போனது. புலம்பெயர்ந்து வருவோர் தான் பிள்ளைகள் மீது மதங்களைத்
திணித்துவருகின்றார்கள். இங்கேயே பிறந்த பலரையும் கூட கோயில்களிலும், சர்சுகளிலும், மசூதிகளிலும் மதம் என்றப் போர்வையால் சாதியவெறி, இனவெறி, மதவெறி ஊட்டி வருகின்றார்கள் நம்மவர்கள். இதுதான் இனவெறி.

திராவிட இயக்கங்களின் பிராமணருக்கு எதிரான இனவெறி, சிங்களவர் தமிழருக்கு எதிராகவும், தமிழர் சிங்களவருக்கு எதிரான இனவெறி, வடநாட்டவர் தென்னாட்டவருக்கு எதிரான இனவெறி,இந்துக்கள் முஸ்லிம்களுக்கு, முஸ்லிம்கள் இந்துக்களுக்கு எதிரான இனவெறி. அனைத்தும் இனவெறித் தனமே !!!

ஒவ்வொரு வீடுகளிலும் மறைமுகமாக குழந்தைகளிடம் இனவெறி ஊட்டி வருகின்றோம். அவனோட சேராதே ! தராதரம் பார்த்துப் பழகு ! அவங்க அப்படித்தான் என பலவார்த்தைகள் மூலம் இனவெறியூட்டல் நடந்து வருகின்றன. ஒன்று வக்கில்லாத தம் இன, மத, மொழிப் பெருமை பேசியும், மற்றொன்று ஏனைய இனத்தவரைப் பொதுப்படுத்தல் மூலமாக இழிவாக சித்தரித்தும் இனவெறியூட்டல் நடந்தே வருகின்றன. இப்படியான வெறியூட்டலை எவர் செய்தாலும் தயங்காது எதிர்க் குரல் கொடுங்கள் ..
அது உங்கள் பெற்றோராக, ஆசிரியராக, மதகுருவாக, சக தோழனாக எவரானும் உடனடியாக அவர்களின் தவறைச் சுட்டிக் காட்டுங்கள்.
சுட்டிக் காட்ட வயது ஒருப் பொருட்டே இல்லை என்பதையும் மறவாதீர்.


நன்றி:கொடுக்கி.நெட்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக