புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களின் திகைக்க வைக்கும் தாம்பத்ய ஆர்வம் Poll_c10பெண்களின் திகைக்க வைக்கும் தாம்பத்ய ஆர்வம் Poll_m10பெண்களின் திகைக்க வைக்கும் தாம்பத்ய ஆர்வம் Poll_c10 
62 Posts - 57%
heezulia
பெண்களின் திகைக்க வைக்கும் தாம்பத்ய ஆர்வம் Poll_c10பெண்களின் திகைக்க வைக்கும் தாம்பத்ய ஆர்வம் Poll_m10பெண்களின் திகைக்க வைக்கும் தாம்பத்ய ஆர்வம் Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
பெண்களின் திகைக்க வைக்கும் தாம்பத்ய ஆர்வம் Poll_c10பெண்களின் திகைக்க வைக்கும் தாம்பத்ய ஆர்வம் Poll_m10பெண்களின் திகைக்க வைக்கும் தாம்பத்ய ஆர்வம் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
பெண்களின் திகைக்க வைக்கும் தாம்பத்ய ஆர்வம் Poll_c10பெண்களின் திகைக்க வைக்கும் தாம்பத்ய ஆர்வம் Poll_m10பெண்களின் திகைக்க வைக்கும் தாம்பத்ய ஆர்வம் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களின் திகைக்க வைக்கும் தாம்பத்ய ஆர்வம் Poll_c10பெண்களின் திகைக்க வைக்கும் தாம்பத்ய ஆர்வம் Poll_m10பெண்களின் திகைக்க வைக்கும் தாம்பத்ய ஆர்வம் Poll_c10 
104 Posts - 59%
heezulia
பெண்களின் திகைக்க வைக்கும் தாம்பத்ய ஆர்வம் Poll_c10பெண்களின் திகைக்க வைக்கும் தாம்பத்ய ஆர்வம் Poll_m10பெண்களின் திகைக்க வைக்கும் தாம்பத்ய ஆர்வம் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
பெண்களின் திகைக்க வைக்கும் தாம்பத்ய ஆர்வம் Poll_c10பெண்களின் திகைக்க வைக்கும் தாம்பத்ய ஆர்வம் Poll_m10பெண்களின் திகைக்க வைக்கும் தாம்பத்ய ஆர்வம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பெண்களின் திகைக்க வைக்கும் தாம்பத்ய ஆர்வம் Poll_c10பெண்களின் திகைக்க வைக்கும் தாம்பத்ய ஆர்வம் Poll_m10பெண்களின் திகைக்க வைக்கும் தாம்பத்ய ஆர்வம் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் திகைக்க வைக்கும் தாம்பத்ய ஆர்வம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 15, 2011 7:07 pm

`இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி' என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் `இந்தியாவில் திருமணமான பெண்களின் செக்ஸ் ஆர்வம்- அதில் அவர்களது விருப்பங்கள்- வெறுப்புகள்- செக்சில் அவர்களது எதிர்பார்ப்புகள்' போன்றவைகளைப் பற்றி புதிய சர்வே ஒன்றினை எடுத்துள்ளனர். அந்த சர்வேயை அடிப்படையாக வைத்து பெண்களின் தாம்பத்ய ஆர்வத்தில் கடந்த பத்தாண்டுகளில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று ஆய்வு செய்கிறார்கள்.

சமீபத்தில் இந்த அமைப்பினர் மேற்கொண்ட சர்வே, திருமணமான பெண்களின் தாம்பத்யத்தில் ஏற்பட்டிருக்கும் நவீன கால மாற்றங்களை ருசிகரமாக வெளிப்படுத்து கிறது. அதில் சில சிந்திக்கவைக்கும் விதத்தில் உள்ளது. "இந்த மாதிரியான கருத்துக் கணிப்புகளை பொதுமக்கள் படிக்கும்போது பெண்களின் மாறிவரும் மன நிலையையும், மாறிவரும் கால சூழலையும் புரிந்துகொண்டு அதற்கு தக்கபடி தங்கள் மணவாழ்க்கையை அமைத்துக் கொள் வார்கள்'' என்கிறார், இந்த அமைப்பின் தலைவர் பாலியல் நிபுணர் டாக்டர் டி.காமராஜ். அவர் வெளியிட்டிருக்கும் `தாம்பத்ய கருத்துக் கணிப்பின்' முக்கிய விவரங்கள் இங்கே தரப்படுகின்றன.

`கணவருக்கு தாம்பத்ய சுகத்தை கொடுப்பது மனைவியின் கடமைகளில் மிக முக்கியமானது' என்ற கருத்து தமிழக பெண்களிடம் இப்போதும் வேரூன்றி இருக்கிறது. கணவருக்கும்- மனைவிக்கும் வேறுவிதமான பொழுதுபோக்கு வாய்ப்புகள் மிக குறைவாக இருப்பதால், தமிழ்நாட்டு தம்பதிகள் 30-35 வயதுவாக்கில் வாரத்தில் மூன்று முறை தாம்பத்ய உறவு கொள்கிறார்கள் என்கிறது சர்வே. டெல்லி, மும்பை போன்ற நகரத்தில் உள்ள அதே பருவ தம்பதிகள் இதர வெளி பொழுதுபோக்குகளிலும் ஆர்வம் காட்டுவதால் அவர்கள் தாம்பத்ய தொடர்புக்கு இரண்டாம் இடம்தான் கொடுக்கிறார்கள்.

68 சதவீத தமிழ்நாட்டுப் பெண்கள் மாதத்தில் ஐந்து நாட்கள் முதல் 12 நாட்கள் வரை உறவு வைத்துக்கொள்வதாக சொல்கிறார்கள். மாதத்தில் 20 முதல் 25 நாட்கள் தொடர்பு கொள்வதாக 7 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் மாதத்திற்கு 2 நாள் என்ற கணக்கை பின்பற்றுகிறார்கள். மும்பை, டெல்லியில் 72 சதவீதம் பெண்கள் மாதத்தில் 5 முதல் 8 நாட்கள் என்று கூறியிருக்கிறார்கள். மீதமுள்ள 28 சதவீதத்தில் பெரும் பகுதியினர் மாதத்தில் ஒரு தடவை என்று பதிவு செய்திருக்கிறார்கள்.

`தாம்பத்ய தொடர்பில்' உள்ள நிறை குறைகளை கணவரிடம் விவாதிக்கும் விஷயத்தில் தமிழக பெண்கள் இப்போதும் வட இந்திய நகர பெண்களை விட பின் தங்கியிருக்கிறார்கள். `அதுபற்றி பேச மாட்டோம். பேசுவது கணவருக்கு பிடிக்காது' என்று 42 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள். குறிப்பால் உணர்த்துவதாக 29 சதவீத பெண்களும், `தயக்கமின்றி பேசுவோம்' என்று 14 சதவீத பெண்களும் கூறியிருக்கிறார்கள். 15 சதவீத பெண்கள் `அவரால் அவ்வளவுதான் முடியும். அதற்குமேல் பேச என்ன இருக்கிறது' என்று பட்டவர்த்தனமாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மும்பை, டெல்லி பெண்களில் 81 சதவீதம்பேர் `தாம்பத்யம் நடந்து முடிந்த பின்பு அதன் நிறைகுறைகள் பற்றி கணவரிடம் மனம்விட்டுப் பேசுவதாக' கூறியிருக்கிறார்கள்.

உறவுக்கு முந்தைய `முன்விளையாட்டுகள்' விஷயத்தில் சென்னை பெண்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகக்கூறி, செக்ஸாலஜிஸ்ட்டுகளை திகைக்க வைத்திருக்கிறார்கள். 92 சதவீதம் பேர் அதை விரும்புவதாகவும், அதில் 64 சதவீதம் பேர் தங்கள் ஆசை நிறைவேறுவதாகவும் கூறியிருக்கிறார்கள். டெல்லி பெண்கள் இதில் இரண்டாம் இடத்தையும், மும்பை பெண்கள் மூன்றாம் இடத்தையும் பிடிக்கிறார்கள்.

ஆசையை வெளிப்படுத்தி, தாம்பத்யத்திற்கு கணவரை அழைப்பதில் இன்னும் பெண்கள் பழைய நிலையிலே இருப்பதாக சர்வே குறிப்பிடுகிறது. 81 சதவீத பெண்கள் கணவரின் விருப்பமே அதில் தொடக்கமாக இருக்கிறது என்கிறார்கள். 7 சதவீத பெண்கள், `அவருக்கு அலுவலகத்தில் வேலை முடியும் முன்பே, போன் செய்து - சீக்கிரம் வந்துவிடுங்கள் உங்களுக்காக காத்திருக்கிறேன்-' என்று குறிப்பால் உணர்த்துவதாக சொல்கிறார்கள். `மாதவிலக்கு முடிந்த அடுத்த சில நாட்களில் இயல்பாகவே ஆசை அதிகரிக்கும். அப்போது நடை, உடை, பேச்சு மூலம் எளிதாக கணவரை ஈர்த்து தயாராக்கிவிடுவோம்' என்றும் குறிப்பிட்ட சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள்.

பின்விளைவற்ற கருத்தடை சாதனமாக பெண்கள் அதிகம் விரும்புவது எது என்ற கேள்விக்கு, மும்பை, டெல்லி பெண்கள், `கணவரை ஆணுறை பயன்படுத்தக்கூறுவோம்' என்கிறார்கள். தென்னிந்திய பெண்கள் தாங்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி கணவரை சுதந்திரமாக விட்டுவிடுவோம்' என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் கடந்த காலங்களில் அதிக கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்திய பெண்களில் 58 சதவீதம் பேர் வரை, `அதிக அளவில் கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். அதனால் அதை முடிந்த அளவு குறைக்கிறோம்' என்கிறார்கள். முதல் குழந்தை பெற்ற பெண்களில் 39 சதவீதம் பேர் பாதுகாப்பான கருத்தடை முறையாக `காப்பர்- டி' பொருத்துவதை குறிப்பிட்டிருக்கிறார்கள்.

திருமணமாகி ஐந்தாண்டுகள் கடந்த பெண்களிடம், `நீங்கள் உறவில் எந்த அளவிற்கு திருப்தி அடைகிறீர்கள்?' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 31 சதவீத பெண்கள் மட்டுமே திருப்தி அடைவதாகக் கூறியிருக்கிறார்கள். 44 சதவீத பெண்கள் திருப்திபட்டுக் கொள்வதாகவும், 12 சதவீதம் பேர் திருப்தியில்லை என்றும் கூறியிருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் கருத்து கூற மறுத்திருக்கிறார்கள்.

இந்த ஆய்வில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயத்தை செக்ஸாலஜிஸ்ட்டு சுட்டிக்காட்டுகிறார். "தற்போதைய இயந்திரமய வாழ்க்கையால் பெண்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவது குறைந்து வருகிறது. குழந்தைகள் பற்றியோ, பண நெருக்கடி பற்றியோ, வேலைபார்க்கும் இடங்களில் உள்ள சிக்கல் பற்றியோ, கணவரால் ஏற்படும் பொதுவான குறைபாடுகள் பற்றிய சிந்தனையிலோ பெண்கள் சிக்கிக்கொள்வதால் அவர்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவதில்லை. அதனால் தம்பதிகள் இருவருக்குமே அதில் திருப்தி ஏற்படாமல் போய்விடுகிறது. திருப்தியின்மையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். திருப்தியடையாத பெண்கள் கணவரிடம் எரிச்சல்படுகிறார்கள். அது கோபமாகவும், சில நேரங்களில் பகையாகவும் மாறுகிறது...''- என்கிறார்.

சரி.. பெண்கள் கணவரோடு உறவில் இருக்கும்போதும் எதைப் பற்றி நினைப்பார்கள்?

- `நாளை என்ன சமையல் செய்வது?' என்று பெரும்பாலான பெண்கள் அந்த நேரத்திலும் யோசனையில் ஆழ்கிறார்கள்.

- `இந்த நேரம் பார்த்து குழந்தை விழித்துவிட்டால் என்ன செய்வது?' என்ற கவலையும் தங்களை வாட்டும் என்று சொல்கிறார்கள்.

- `இவர் எப்போது முடிப்பார்.. நாம் தூங்கி, காலையில் எழுந்து அத்தனை வேலையையும் பார்க்க வேண்டுமே..!' என்று உறவு நேரத்தில் பெண்கள் கவலைப்படுவதும் உண்டு என்கிறது இந்த ஆய்வு.

கணவரோடு செக்ஸ் வைத்துக்கொள்வது, அவரோடு தூர இடங்களுக்கு சுற்றுலா செல்வது, நடனம் மற்றும் நல்ல உணவு உண்பது ஆகிய மூன்றில் எதற்கு நீங்கள் முன்னுரிமை கொடுப்பீர்கள்? என்ற கேள்விக்கு கிடைத்திருக்கும் பதில் சுவாரஸ்யமானது.

51 சதவீத பெண்கள் `கணவரோடு சற்று தூரமான பகுதிக்கு இன்பச் சுற்றுலா செல்வதைத்தான் விரும்புவோம்' என்று கூறியிருக்கிறார்கள். 38 சதவீத பெண்கள் `கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு கணவரோடு ஜோடியாக நடனம் ஆட வேண்டும். பின்பு நன்றாக சாப்பிட வேண்டும். அதுவே எங்களுக்கு பிடித்தமானவை' என்று கூறியிருக்கிறார்கள். மீதமுள்ளவர்களே `அவரோடு தனிமையில் உட்கார்ந்து சிரித்து மகிழ்ந்து பேசிவிட்டு, உறவினைத் தொடர்வோம்' என்கிறார்கள்.

தாம்பத்ய உறவு திருப்தியாக நடந்துமுடிந்த பின்பு அதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன? -என்ற கேள்விக்கு .....

- `எங்களுக்கு இடையே அதுவரை இருந்த மனக் கசப்புகள் எல்லாம் அடியோடு நீங்கி, புதிதாய் இணைந்த ஜோடிபோல் குதூகலமாய் வாழ்க் கையை நகர்த்தி, அடுத்த முறை இணைவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்' என்று 37 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள்.

- அவ்வப்போது ஏற்படும் உடல்வலியும், தலைவலியும் அதன் பின்பு சில நாட்கள் காணாமல் போனது என்று 21 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள்.

- உடல் முழுவதும் நெகிழ்ச்சியாகி, வழக்கத்தைவிட அதிக சுறுசுறுப்பாக இருக்கிறேன். என்னுடைய அன்றாட வேலைகளை வேகமாக பார்க்கிறேன் என்று 19 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள்.

- பல நாட்களாக சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டேன். திருப்தியான உறவு கொண்ட பின்பு சில நாட்களாக நன்றாகத் தூங்குகிறேன் என்று 14 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

- மனதுக்குள் விவரிக்க முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. எனக்காக அவரும், அவருக்காக நானும் வாழ்கிறோம் என்ற திருப்தியையும், நம்பிக்கையையும் திருப்தியான தாம்பத்ய உறவு ஏற்படுத்தியிருக்கிறது என்று 9 சதவீதம் பேரும் தெரிவித்திருக்கிறார்கள்.



பெண்களின் திகைக்க வைக்கும் தாம்பத்ய ஆர்வம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக