புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காக்கும் இமை நானுனக்கு Poll_c10காக்கும் இமை நானுனக்கு Poll_m10காக்கும் இமை நானுனக்கு Poll_c10 
80 Posts - 47%
ayyasamy ram
காக்கும் இமை நானுனக்கு Poll_c10காக்கும் இமை நானுனக்கு Poll_m10காக்கும் இமை நானுனக்கு Poll_c10 
75 Posts - 44%
mohamed nizamudeen
காக்கும் இமை நானுனக்கு Poll_c10காக்கும் இமை நானுனக்கு Poll_m10காக்கும் இமை நானுனக்கு Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
காக்கும் இமை நானுனக்கு Poll_c10காக்கும் இமை நானுனக்கு Poll_m10காக்கும் இமை நானுனக்கு Poll_c10 
4 Posts - 2%
rajuselvam
காக்கும் இமை நானுனக்கு Poll_c10காக்கும் இமை நானுனக்கு Poll_m10காக்கும் இமை நானுனக்கு Poll_c10 
1 Post - 1%
சிவா
காக்கும் இமை நானுனக்கு Poll_c10காக்கும் இமை நானுனக்கு Poll_m10காக்கும் இமை நானுனக்கு Poll_c10 
1 Post - 1%
Kavithas
காக்கும் இமை நானுனக்கு Poll_c10காக்கும் இமை நானுனக்கு Poll_m10காக்கும் இமை நானுனக்கு Poll_c10 
1 Post - 1%
bala_t
காக்கும் இமை நானுனக்கு Poll_c10காக்கும் இமை நானுனக்கு Poll_m10காக்கும் இமை நானுனக்கு Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
காக்கும் இமை நானுனக்கு Poll_c10காக்கும் இமை நானுனக்கு Poll_m10காக்கும் இமை நானுனக்கு Poll_c10 
1 Post - 1%
prajai
காக்கும் இமை நானுனக்கு Poll_c10காக்கும் இமை நானுனக்கு Poll_m10காக்கும் இமை நானுனக்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காக்கும் இமை நானுனக்கு Poll_c10காக்கும் இமை நானுனக்கு Poll_m10காக்கும் இமை நானுனக்கு Poll_c10 
306 Posts - 42%
heezulia
காக்கும் இமை நானுனக்கு Poll_c10காக்கும் இமை நானுனக்கு Poll_m10காக்கும் இமை நானுனக்கு Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
காக்கும் இமை நானுனக்கு Poll_c10காக்கும் இமை நானுனக்கு Poll_m10காக்கும் இமை நானுனக்கு Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
காக்கும் இமை நானுனக்கு Poll_c10காக்கும் இமை நானுனக்கு Poll_m10காக்கும் இமை நானுனக்கு Poll_c10 
27 Posts - 4%
sugumaran
காக்கும் இமை நானுனக்கு Poll_c10காக்கும் இமை நானுனக்கு Poll_m10காக்கும் இமை நானுனக்கு Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
காக்கும் இமை நானுனக்கு Poll_c10காக்கும் இமை நானுனக்கு Poll_m10காக்கும் இமை நானுனக்கு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காக்கும் இமை நானுனக்கு Poll_c10காக்கும் இமை நானுனக்கு Poll_m10காக்கும் இமை நானுனக்கு Poll_c10 
6 Posts - 1%
prajai
காக்கும் இமை நானுனக்கு Poll_c10காக்கும் இமை நானுனக்கு Poll_m10காக்கும் இமை நானுனக்கு Poll_c10 
5 Posts - 1%
Kavithas
காக்கும் இமை நானுனக்கு Poll_c10காக்கும் இமை நானுனக்கு Poll_m10காக்கும் இமை நானுனக்கு Poll_c10 
4 Posts - 1%
manikavi
காக்கும் இமை நானுனக்கு Poll_c10காக்கும் இமை நானுனக்கு Poll_m10காக்கும் இமை நானுனக்கு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காக்கும் இமை நானுனக்கு


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 2:33 pm

காக்கும் இமை நானுனக்கு Kakum

எப்போதும் போலவே அந்தப் பெரிய கடைக்குள் நுழையும் போது, நளினியின் மனதில் ஒரு பெருமிதம் எட்டிப் பார்த்தது.

'உன்னதம்.'

இந்தப் பெரிய பல்பொருள் அங்காடியில் அவள் வேலை செய்கிறாள்.

அகன்ற சலவைக் கல் படிக்கட்டுகளுடன் கம்பீரமாய் மூன்று மாடிக் கட்டடம். எத்தனை கோடி பெறுமோ?

படியேறும் போதே, ஓர் அரண்மனைக்குள் அடியெடுத்து வைக்கும் பிரமிப்பு.

எண்ணம் தொடரும் போதே, அவளது மனதுக்குள் நெருஞ்சியாய் உறுத்தலும் தொடங்கி விட்டது.

தோற்றத்தில் மட்டும் அந்தக் கட்டடம் அரண்மனையாக இருக்கவில்லை! உள்ளே விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களும் அரண்மனைவாசிகளுக்கு ஏற்றவை தான். ஏன்? அவர்கள் மட்டும் தான் வாங்கக் கூடியவையும் கூட.

தரத்தால் மட்டும் அல்ல. விலையும் அப்படித்தான்.

துணிகளா? மீட்டர் எண்ணூறு ஆயிரம் எல்லாம் சர்வ சாதாரணம். ஐந்நூறுக்குக் குறைவாக ஒன்றுமே கிடையாது.

அதே போல, மரச் சாமான்கள் பகுதி ஒன்று உண்டு. சோஃபா செட் ஒரு லட்சம் என்பார்கள். என்ன? அங்கங்கே தந்தம் இழைத்திருக்கும்! நல்ல வைரம் பாய்ந்த தேக்காக இருக்கும்.

அசல் நவரத்தினங்கள் பதித்த நகைகள். வைரமிழைத்த கைக்கடிகாரங்கள். அவற்றிலும், செய்கூலியே ஆளைச் சாப்பிட்டுவிடும். கூலி எவ்வளவு, சேதாரம் எவ்வளவு என்று கணக்குப் பார்க்கிறவர்களால், இங்கே வாங்க முடியாது.

அதனாலேயே, சாதாரண மக்கள் இந்தக் கடையின் பக்கம் வருவதில்லை. அப்படியே வந்தாலும், இந்தப் பணக்காரச் சீமான்கள் வாங்கும் பொருட்கள் எல்லாம் எப்படி இருக்கும் என்று பார்த்துப் போவதற்காகத்தான். அதுவும் அபூர்வமாகத்தான். ஏனெனில், வாங்க இயலாத பொருட்களைப் பார்த்து, ஏக்கப் பெருமூச்சு விட எத்தனை பேருக்குப் பிடிக்கும்?

யாரும் அறியாமல் தட்டிக் கொண்டு போய்விடும் திட்டத்துடன் வருவோரும் உண்டு. ஆனால் அங்கங்கே சாதாரண உடையில் காவலுக்கு ஆட்கள் இருந்ததால், அது பலித்தது இல்லை. அன்றுவரை!

அந்தக் காலத்தில், பெரிய பெரிய பிரபுக்கள், வெள்ளைக்காரத் துரைகள், ராஜ குடும்பத்தினர், ஜமீந்தாரர்கள் போன்றோருக்கு ஏற்ற பொருட்களை, ஒரே இடத்தில் வாங்குவதற்கு வசதி செய்யும் பொருட்டுச் சில மாதங்களுக்கு முன் வரை இதை நடத்திய பெரியம்மாவுடைய மாமனார், இந்த அங்காடியைத் தொடங்கியதாகச் சொல்லுவார்கள்.

இந்தத் தரம் குறையாமல் காப்பதுதான் முக்கியக் கொள்கையாக இருந்தது.

எனவே, அங்கொருவர், இங்கொருவர் தவிர, இந்தக் கடையில் வாடிக்கையாளர் அலைமோதி, நளினி பார்த்ததே கிடையாது.

குறைந்த பட்சமாக, அவள் இங்கே வேலைக்குச் சேர்ந்த இந்த மூன்று மாத காலமாக. அதைப் பற்றி, அங்கே யாரும் கவலைப்படுவதும் கிடையாது.

தளத்துக்கு ஒருவராக, மூன்று தளங்களுக்கும், மூன்று வயதான நிர்வாகிகள். ரொம்ப காலமாக இங்கேயே பணி புரிகிறார்களாம்.

விற்பனை, இருப்புக் கணக்கு எடுப்பதும், புதிய பொருட்களுக்கு ஆர்டர் கொடுப்பதும் அவர்களது பொறுப்பு.

அவர்களிடம் நளினி மோதிப் பார்த்திருக்கிறாள். அதை விடக் கற்பாறையில் மோதினால், ஏதோ பாறை கொஞ்சம் அசையக் கூடும் என்று புரிந்தும் இருக்கிறாள்.

புருவங்களைத் தூக்கி வைத்துக் கொண்டு, மூக்கு நுனியில் நிற்கும் கண்ணாடி வழியே, ஒரு தூசியைப் போலப் பார்த்து, "இந்தக் கடையின் பாரம்பரியம் பற்றிச் சின்னப் பெண் உனக்கு என்ன தெரியும்? எழுபது ஆண்டுகளாக, எனக்குத் தெரியவே நாற்பத்தைந்து வருஷங்களாக மதிப்பும் மரியாதையுமாக நடத்தப்படுகிற கடை! பெரிய பெரிய கோடீஸ்வரர்கள் காரில் வந்து இறங்கி, மறு விலை கேளாமல் வாங்கிப் போகிற இடம்! இதில் போய், உன் ஐந்து ரூபாய், பத்து ரூபாய்ப் பொருட்களைக் கொட்டிக் கேவலப்படுத்துவதா? பெரியம்மா மட்டும் இருந்து, அவர்கள் காதில் உன் பேச்சும் விழுந்திருக்கட்டும், உன்னை அப்போதே கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியிருப்பார்கள். முதலில், வேலை பார்க்கக் கூட, நீ இங்கே உள்ளே நுழைந்திருக்க முடியுமா? இப்போதுதான் என்ன? உன்னை நாங்களே வெளியேற்றி விடுவோம்! என்னவோ புதுசாய் வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்கள் என்று விட்டு வைத்திருக்கிறோம்," என்று மிரட்டுவார் ஒருவர்.

"உன் வேலை என்ன? அங்கங்கே, தளத்துக்குத் தளம் பொருட்களைக் கவர்ச்சிகரமாகக் கண்ணுக்கு அழகாக அடுக்கி வைப்பதுதானே? அத்தோடு நிறுத்திக் கொள். அதற்கு மேல், அதிகப் பிரசங்கித்தனம் செய்யாமல், வாயை மூடிக் கொண்டிரு. மீறினால், வேலைக்கே வேட்டு வைத்து விடுவோம்," என்பார் அடுத்தவர்.

"பெரியம்மா பார்த்து வைத்த ஆட்கள் நாங்கள். எங்களுக்கு வேலை தெரியாது என்று, நீ வந்து சொல்கிறாயா? வயதுக்கு மரியாதை கொடுக்கக் கூடத் தெரியவில்லையே!" என்று ஆளாளுக்கு அவளை மிரட்டினார்களே தவிர, வளாகத்தில் உள்ள கடைப் பொருட்களின் விற்பனைப் பெருக்கத்துக்காக, உருப்படியாக எதையும் செய்யக் காணோம்.

இந்த அழகில், மதிய உணவுக்காக மூடுவது வேறு. பன்னிரண்டு மணிக்கு எடுத்து வைக்கத் தொடங்கினால், மீண்டும் கடை திறக்க நாலு மணி ஆகும்.

வாடிக்கையாளர்கள் வீட்டில் சாப்பிட்டுத் தூங்கி எழுந்து, கடை கண்ணிக்குக் கிளம்பி வர, அவ்வளவு நேரமேனும் ஆகாதா என்று கேள்வி வேறு.

தூக்கம் தேவைப்படுவது, கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு அல்ல, வளாகத்தின் முதிய நிர்வாகிகளுக்குத் தான் என்பது, நளினியின் அபிப்பிராயம்.

ஆனால், யாரிடம் முறையிடுவது?

அவளுக்கும் அலுத்து விட்டது.

எப்படியோ போகிறார்கள்.

இந்த வளாகத்துடைய உரிமையாளர்கள், பல தலைமுறைகளாகப் பெரிய பணக்காரர்கள். எங்கெங்கோ பங்களாக்கள், சொத்துக்கள், பெரிய வருமானங்கள் உண்டு என்று கேள்வி.

இந்தக் கடையிலிருந்து வந்து, நிறைய வேண்டியதில்லை. சும்மா ஒரு கௌரவத்துக்காக நடத்துகிறார்கள் என்றும்.

அப்புறமென்ன?

விற்பனைப் பகுதிப் பொறுப்பாளரிடமிருந்து, கணக்குச் சொல்லி எடுத்த பொருட்களுக்குக் கையெழுத்திட்டு விட்டுப் பொருட்களோடு வந்து, அவற்றை இயன்றவரை கவர்ச்சிகரமாகக் கண்ணாடித் தட்டுகளில் அடுக்கத் தொடங்கிய போது, வளாகத்துடைய காவல் பொறுப்பாளரான பூவலிங்கம் வந்தார்.

"என்னம்மா, நீ அடுக்கிறதைப் பார்த்து, கண்ணாடி அலமாரியோடு தந்துவிடுங்கள் என்று கேட்டு விடுவார்கள் போல இருக்கிறதே!" என்று கிண்டலடித்துவிட்டு, "ஜாக்கிரதை அம்மா! எந்தப் பொருளும் தவறிவிடாமல் பார்த்துக் கொள்," என்று எச்சரித்து விட்டுப் போனார்.

ஆமாம் என்று அவளுக்கும் அலுப்பாகத்தான் இருந்தது.

ஏதோ செய்வன திருந்தச் செய்வது என்ற பழக்கத்தில் செய்து கொண்டிருந்தாளே தவிர, நளினிக்கு, அவளது வேலையில் ஈடுபாடு கொஞ்சம் குறைந்து தான் போயிற்று எனலாம்!

கொஞ்சமென்ன? ரொம்பவே.


எவ்வளவு காலம்தான் இருப்பதையே மாற்றி அமைத்துக் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பது?

விற்க விற்க, விதம் விதமாகப் பொருட்களைப் புதிது புதிதாக அன்றைய நாகரீகத்துக்கு ஏற்ப வாங்கி வாங்கி வைத்தால், அவளும் புதிது புதிதாகக் கண்ணைக் கவரும்படி விதம் விதமாக அடுக்க முடியும்!

அதுவும், இன்றைய நாகரீகத்துக்கு ஏற்ப என்றால், எண்ணில் அடங்காத வகைகள் எத்தனையோ கிடைக்கும். அவைகளை வாங்கிக் கொடுத்தால்...

ஆனால், அதெங்கே இங்கே நடக்கும்? அப்புறம், மழை கொட்டோ கொட்டென்று கொட்டி, ஊரெல்லாம் வெள்ளத்தில் முழுகிப் போய்விடாதா?

எண்ணத்திற்கு ஏற்ப, சிறு ஏளனத்துடன் தோளைக் குலுக்கியவாறு திரும்பியபோது தான், நளினி முதலில் அவனைப் பார்த்தது!

நல்ல உயரம்! உயரத்துக்குச் சற்றே மெலிவுதான் என்றாலும், உடல் கட்டில், நடையில் உறுதி தெரிந்தது.

அவள் அடிக்கடி ஆசையாக ஏறி இறங்கும், அழகிய அரண்மனைப் படிக்கட்டுகளின் வழியே வராமல், லிஃப்டின் கதவைத் திறந்து வெளியே வந்து கொண்டிருந்தான்.

அவன் மட்டுமல்ல, அவனோடு இன்னும் சிலரும்... மொத்தம் மூன்று பேர்.

அவனுக்கு முன்னும் பின்னுமாக வந்த மற்ற இரண்டு பேரும், பந்தாவாகப் பாக்கெட்டுக்குள் ஒரு கையை விட்டபடி, இங்கும் அங்குமாகத் திருதிருவென்று விழித்துப் பார்த்தவிதம் அவளுக்குச் சிரிப்பூட்டியது.

பின்னே கடைக்கு வந்தால், என்னென்ன சாமான் இருக்கிறது என்று பாராமல், இங்கே யாரேனும் திருடன் இருக்கிறானா என்று கண்களை உருட்டி உருட்டித் தேடுவது போலப் பார்த்தால்...?

இவர்கள் தேடுவது, திருடனையா... அல்லது காவலாளியையா?

ஒருவேளை, இவர்களே திருடர்களாக இருந்தால்... இருந்தாலும், அப்படி ஒன்றும் பயப்படத் தேவையில்லை! இந்தக் கடை வளாகத்தின் பாதுகாப்பு ஏற்பாடு வலுவானது. பில் போட்டுப் பணம் தராத எதையும் எளிதில் வெளியே கொண்டு போய்விட முடியாது. அத்தோடு, அந்தத் தளத்தின் விற்பனை ஆட்களோடு, இவர்களோடு வந்த அந்த மனிதனும் இருக்கிறான்!

நேர் நடையுடன் வந்த அவன் உதவ மாட்டானா, என்ன? பார்த்துக் கொள்ளலாம்.

தன்னையறியாமல் ஓரப் பார்வை அந்தப் புதியவனிடம் ஓடவும், கட்டுப்படுத்திக் கொண்டு திரும்ப முயன்றவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

ஏனெனில், அவன் தனது பழைய கைக்கடிகாரத்தைக் கழற்றி வைத்துவிட்டு, அங்கிருந்த விலை உயர்ந்த ஒன்றை எடுத்துத் தன் கையில் கட்டிக் கொண்டிருந்தான்.

அதன் முள், எண்கள் எல்லாம் வைரங்கள்! விலை லட்சத்துக்கும் மேல்! அதைப் பார்த்ததும், தன் பழைய ஓட்டைக் கடிகாரம் பிடிக்காமல் போய் விட்டது போல!

ஆனால் அதற்காகத் திருடலாமா?

அதுவும் திருடர்களைப் பிடிக்க யார் உதவுவான் என்று நினைத்திருந்தாளோ, அவனே அல்லவா, அங்கே திருடிக் கொண்டிருந்தான். என்ன அநியாயம்!

இருந்திருந்து, அவனைப் போய் நல்லவன் என்று நினைத்தாளே.

நல்லவன் போல வேஷமிடும் அயோக்கியன்.

இவனது முகத்திரையைக் கிழித்து, இவனது உண்மைத் தோற்றத்தை ஊர் உலகத்துக்கு அம்பலப்படுத்த வேண்டும்.

அவன் கைக்கடிகாரம் திருடியதை அறியாதவள் போன்று, அவனை நெருங்கினாள் நளினி.

ஆனால், அந்த நெடியவனை அவள் நெருங்கு முன், மற்ற திருதிரு முழிக்காரர்களில் ஒருவன், குறுக்கே வந்து, அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டுச் சற்றே விலகி நின்றான்.

ஏன் குறுக்கே வந்தான்? ஏன் விலகிப் போனான்?

எப்படியோ போகட்டும். இவனைப் பார்த்துத் திருடனை விட்டுவிடக் கூடாது என்று எண்ணி, அவனை நெருங்கி, "இங்கிருப்பதை விட விலை உயர்ந்த வைரங்கள் அந்த அறையுள் இருக்கின்றன. பார்க்கிறீர்களா, சார்?" என்று கேட்டாள்.

"பரவாயில்லை. இந்த வளாகத்தில், விற்பனையில் அக்கறை உள்ளவள் நீ ஒருத்தியேனும் இருக்கிறாயே," என்றவன், அவளைப் பாராமல் எங்கோ நோக்க, அந்தத் 'திருதிருமுழி'களில் ஒருவன் வேகமாக அந்த அறையினுள் சென்றுவிட்டுத் திரும்பி வந்தான்.

இன்னொருவன் நெடியவனை ஒட்டிக் கொண்டே நின்றான்.

இவர்கள் மூவருமே கூட்டுக் கள்ளர்களாக இருக்கக் கூடுமோ என்று எண்ணிவிட்டு, இராது என்ற முடிவுக்கு வந்தாள் நளினி. ஏனெனில், மற்றவர்கள் யாரும் பொருட்களின் பக்கம் பார்க்கக் கூட இல்லையே.

அப்படியே கூட்டாக இருந்தால் சேர்ந்து மாட்டட்டும் என்று எண்ணியவளாய், "வாருங்கள் சார்!" என்று அழைத்துச் சென்றாள்.

உள்ளே சென்றதும், அவளையே நோக்கி, "என்னவோ விலை உயர்ந்த வைரங்கள் இங்கே இருப்பதாகச் சொன்னாயே. பார்த்தால், வெறும் பீரோக்கள் மட்டும் தானே இருப்பதாக அல்லவா காண்கிறது?" என்று கேட்டான் அவன்.

"இருக்கின்றன சார். ரொம்பவும் விலை உயர்ந்தனவா? பீரோவில் நன்றாகப் பூட்டி வைத்திருக்கிறார்கள். நான் போய்ச் சாவியை வாங்கி வந்து திறந்து காட்டுகிறேன் சார்!" என்று வேகமாக அறையிலிருந்து வெளியே வந்தவள், அதைவிட அதி விரைவாக அறைக்கதவை இழுத்துப் பூட்டினாள்.

மின்னலெனப் பாய்ந்து கீழிறங்கிச் சென்றவள், கீழ்த்தளத்தில் மூன்று தளத்து நிர்வாகிகளும் சேர்ந்து அமர்ந்து, நிறுவன விஷயமாகக் கலந்துரையாடும் - அவளது அபிப்பிராயப்படி, மூவருமாக வெற்று அரட்டையடிக்கும் - தனி அறைக்குள் வேகமாகச் சென்றாள்.

"அனுமதி கேட்காமல், நீ எப்படி..." என்று அதட்டலாகத் தொடங்கிய ஒருவரின் பேச்சை அலட்சியம் செய்து, "நம் கடை வளாகத்துள் ஒரு திருடன் புகுந்து விட்டான் சார். அவனைக் கூட்டாளிகளோடு, நம் ரிக்கார்டு அறைக்குள் பூட்டி வைத்துவிட்டு வந்தேன். வந்து, அவர்களைப் பிடித்துப் போலீஸில் ஒப்படையுங்கள்!" என்று மூச்சு விடாமல் கூறி முடித்து விட்டு, அதன் பின்னரே மூச்சு வாங்கினாள் நளினி.

பெரியவர்கள் மூவருமே திகைத்துத் திணறிப் போயினர்.

அவர்கள் அறிந்தவரையும், திருடர்கள் என்றால், பில் போட்டுப் பணம் கொடுக்காமல், ஒன்றிரண்டு பொருட்களைக் கொண்டு செல்ல முயல்வார்கள். உள் வாயிலைத் தாண்டும் போதே 'பீப்' சத்தம் வந்துவிடும். 'செக்யூரிட்டி' ஆட்கள் உடனே திருடனைப் பிடித்து விடுவார்கள். மரியாதையாகப் பணத்தைக் கேட்பார்கள். பணம் இல்லையென்றால், பொருளைப் பிடுங்கிக் கொண்டு, நாலு தர்ம அடி போட்டு விரட்டி விடுவார்கள்.

இப்போது, இவள் ஒருத்தியாக ஒன்றுக்கு மேற்பட்ட திருடர்களைப் பூட்டி வைத்தாளாமே! நம்புகிறாற் போலவா இருக்கிறது?

மூளை உள்ள எவனாவது அந்த அறைக்குள் வைர நகைகள் இருப்பதாக நம்பி உள்ளே செல்லுவானா?

அங்கே ஒன்றும் இல்லாததும் நல்லதுதான்.

ஆனால், எப்படிப்பட்ட முக்கியமான ரிக்கார்டுகள் அங்கே பத்திரமாய் வைக்கப்பட்டு இருக்கின்றன. சொத்துக் கணக்கு, சொத்துரிமைக் கணக்கு, இத்தனை ஆண்டு வரவு செலவுக் கணக்கு... அங்கே போய்த் திருட்டுப் பயல்களை விடுவதா?

ஆனால், இவள் சொன்னதை நம்பி, மூன்று தடிமாடுகள் வெறும் இரும்புப் பீரோக்கள் இருக்கும் அறைக்குள் போய் மாட்டிக் கொள்வார்களா?

கேழ்வரகில் நெய் வருகிறது என்று ஒரு புளுகிணி சொன்னால், அதை நம்புவதற்குக் கேட்கிற அவர்கள் என்ன, புத்தியில்லாதவர்களா?

அதுவும் பெரியம்மாவால் நியமிக்கப்பட்ட அவர்கள்!

மூவருமாகச் சேர்ந்து வெறும் கதை என்று முடிக்கையில், அந்தப் பக்கமாக வந்த நிறுவனப் பாதுகாப்பு அதிகாரியை, நளினி ஆத்திரத்தோடு கூப்பிட்டாள்.

"பூவலிங்கம் சார், நம் கடையில் வைர வாட்ச் திருடிய ஒருவனையும் அவனுடைய கூட்டாளிகளையும், மேல் தளத்து ரிக்கார்டு அறையில் பூட்டி வைத்திருக்கிறேன். கூடச் சில ஆட்களை அழைத்துப் போய், அவனைப் பிடித்துப் போலீஸில் ஒப்படைக்கிறீர்களா? அங்கே முக்கியமான பத்திரங்கள் இருக்கிறதாம்! அவை, அடுத்தவர் கண்ணில் பட்டாலும் ஆபத்து, என்று இந்தப் பெரியவர்கள் சொல்லுகிறார்கள். அதனால், சீக்கிரமாக ஏதாவது செய்யுங்கள்" என்று பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில் கேட்டுக் கொண்டாள்.

"வை...ர வாட்ச்! ஐயோ ஒன்றரை லட்சம் விலையாயிற்றே. அப்படியானால், நீ நிஜமாகத்தான் சொல்லுகிறாயா? கடவுளே, அந்தச் சின்னப் பயலுக்குத் தெரிந்தால், நம்மைத் தொலைத்துக் கட்டி விடுவானே. சீக்கிரம் ஓடுங்கள், பூவு. நம் ஆட்களையே நாலைந்து பேரைக் கூட்டிக் கொண்டு, ஓடிப் போய், அவனைப் பிடியுங்கள். கைக்கடிகாரத்தைப் பிடுங்கிக் கொண்டு, அப்புறமாகப் போலீசில் ஒப்படைக்கலாம். ஜன்னல் கின்னலைத் திறந்து, கடிகாரத்தை வெளியே வீசி விட்டால், நமக்கு நட்டத்துக்கு நட்டம். அத்தோடு, அவனது திருட்டுக்கு ஆதாரமும் இராது. அப்புறம் அவன் நம் மேலேயே கேஸ் போட்டு விடுவான்."

மூவருமாக ஆளுக்கொன்றாகச் சொன்னதின் சாராம்சத்தைக் காதில் வாங்கிக் கொண்டு, பூவலிங்கம் தன் ஆட்களைத் திரட்டிக் கொண்டு, மேல் தளத்துக்கு விரைந்தார்.

அதற்குள் நிர்வாகிகள் மூவரும் லிஃப்ட் வழியே, அங்கே வந்து சேர்ந்து, முடிந்தவரை தூரமாய் ஒதுங்கி நின்றனர். கூட வந்த நால்வரையும், நாலு இடங்களில் நிற்கச் செய்துவிட்டு, பூவலிங்கம் கதவைத் தட்டி, "பாருங்கப்பா, கதவைத் திறந்தால், நாலைந்து இடங்களில் துப்பாக்கியோடு நிற்கிறார்கள். அதனால் மரியாதையாகக் கைகளைத் தூக்கிக் கொண்டு வெளியே வாருங்கள். அசட்டுத்தனம் எதுவும் செய்தால், உங்கள் உயிருக்குத் தான் ஆபத்து" என்று உரத்த குரலில் கூறிவிட்டு, மெல்லக் கதவைத் திறந்துவிட்டு ஒதுங்கி நின்றார்.

வாட்ச் திருடனுடைய கூட்டாளி, தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்து, உள்ளே ஏதோ சொல்ல, பூவலிங்கத்தின் எச்சரிக்கையைச் சற்றும் மதியாமல், வெகு அலட்சியமாக வெளியே வந்தான், அந்தத் திருடன்.

"என்ன பூவலிங்கம், என்னைச் சுட்டு விடுவீர்களா?" என்று கேட்ட அவனது ஏளனப் பார்வை, நளினியின் மீது ஒரு கணம் படிந்து மீண்டது.

சூழ இருந்தோரின் முகத்தில் இருந்த இறுக்கமும் பயமும் மறைந்து, ஒருவிதமான அசட்டுத் தனத்தோடு கூடிய பதற்றம் பரவியது.

மூன்று நிர்வாகிகளும், கூழைக் கும்பிடு போட்டபடி, "சா...ர் நீங்களா? உரிமைக்கார உங்களைப் போய், இந்த முட்டாள் பெண்..." என்று வழிந்தவாறு, அந்த நெடியவனிடம் ஓடினார்கள்.

திருடன் என்று தான் அறைக்குள் அடைத்து வைத்திருந்தது யார் என்று புரிபட, நளினியின் கால்களின் கீழிருந்த பூமி நழுவியது.



காக்கும் இமை நானுனக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 2:35 pm

"ஹிஹி! பாருங்கள் சார், முதலாளியான உங்களைப் போய்த் திருடன் என்று எண்ணி விட்டாள், இந்த முட்டாள் பெண். உங்களை என்னமாய் அவமானப்படுத்தி விட்டாள்! இவளை வேலையில் அமர்த்தியதே தப்பு."

"ஆமாம் சார். எப்போதும் ஒரே அதிகப் பிரசங்கித்தனம். இதைப் பண்ணு... அதைச் செய் என்று. நம் பாரம்பரியமே புரியாத படு முட்டாள்!" என்றவர் ஞானப்பிரகாசம், அடுத்த நிர்வாகி.

"முதலில், இவளை வெளியே துரத்த வேண்டும்" என்று முடித்தார் மூன்றாமவர்.

அதுதான் நடக்கப் போகிறது என்று எண்ணினாள் நளினி.

நியாயப்படி பார்த்தால், முதலாளி யார் என்று அறிந்திராதது மட்டும் தான் அவளது குற்றம். ஆனால், எவ்வளவு கெட்டிக்காரத்தனமாக, இரண்டு கூட்டாளிகளோடு இருந்த அவனைத் தன்னந்தனியாளாக, எப்படிப் பிடித்தாள்.

அதைப் பற்றி, எண்ணிப் பார்க்கக் கூட, யாருக்கும் மனமே இல்லையே.

ஆனால், இதைப் பற்றி வருத்தப்படுவதை விட, இனி என்ன என்று யோசிப்பது நல்லது.

அவள் யோசனையைத் தொடங்கு முன், 'சின்னப் பயல்' என்று, அந்தப் பழம் பெருச்சாளிகளால் அடிக்கடி குறிப்பிடப்படும் அந்த வளாகத்துடைய புதிய உரிமைக்காரன் செயல்படத் தொடங்கினான்.

பெயர் கூடப் பெத்த பெயர்தான். புவனேந்திரன்.

"கீழே தானே ஆலோசனை அறை? அங்கே போகலாம்" என்று எல்லோரையும் அங்கே அழைத்துச் சென்றான்.

அறையை அடைந்ததும், "அந்தப் பெண்ணை வெளியே இருக்கச் சொல்லுங்கள்," என்று நளினியை மட்டும் நிறுத்தி விட்டு, நிர்வாகிகள், பாதுகாப்பு அதிகாரி, அவனோடு வந்தவர்கள் என்று மற்ற அனைவரையும் கூட்டிக் கொண்டு உள்ளே போய்விட்டான்.

பூட்டிய அறைக்கு வெளியே, சற்று தொலைவில் ஒதுக்கமாக அமர்ந்திருந்த நளினிக்கு, நேரம் ஆக ஆக, வேலையில் நீடிப்பது பற்றிக் கொஞ்ச நஞ்சம் இருந்த நம்பிக்கையும், காற்றில் இட்ட கற்பூரமாய்க் கரைந்து மறைந்து போனது.

முதலாளியின் மனநிலையைப் பிரதிபலிப்பவர்கள் பணியாளர்கள். அதிலும், கடைநிலை வேலையாட்களிடம் அது நன்றாகவே தெரியும்.

அதிகப்படி இருக்கைகள், தண்ணீர் போன்றவற்றுடன் ஆலோசனை அறைக்குள் சென்று வந்தவர்கள், அவளது பக்கமாகத் திரும்பியே பாராமல் சென்ற விதம், 'உன்னத'த்தோடு அவளுக்கு உள்ள உறவு முடியப் போவதைத் தெளிவாகவே தெரிவித்தது.

அவர்கள் மட்டுமின்றி, மற்றவர்களும், அவளது முகத்தைப் பாராமலே, அவள் இருந்த இடத்தைக் கடந்து செல்லவும், நளினிக்குத் தன் தலைவிதி நிச்சயமாயிற்று.

சும்மாவே, மூன்று தளத்து நிர்வாகிகளுக்கும் அவளைப் பிடிக்காது!

புது முதலாளியின் ஒரு கருத்துக்காக வேலைக்கு அமர்த்தப் பட்டவள் என்பதற்காகவே, அவளை வெளியேற்றாமல் பொறுத்திருந்தார்கள்.

இப்போது வாய்ப்புக் கிடைத்திருக்கும் போது விடுவார்களா?

இன்னும் என்னென்ன கோள் சொல்லி, அவளை விரட்டப் போகிறார்களோ?

அவர்களது கோள் மூட்டலுக்குப் பதில் சொல்ல ஒரு வாய்ப்புக் கூடத் தராமல், அவளை வெளியே நிறுத்தி விட்டுப் போய்விட்டானே புதிய முதலாளி!

இதிலிருந்தே அவனது நியாய புத்தியின் தரம் தெரியவில்லையா?

நிச்சயமாக வேலை போகப் போகிறது.

இதை, இவன் கூப்பிட்டுச் சொல்லும் வரை, காத்திருப்பானேன்?

பேசாமல், எழுந்து வீட்டுக்குப் போய்விட்டால், மறுநாள் வந்து சம்பளத்தைக் கணக்குத் தீர்த்து வாங்கிக் கொண்டால் போகிறது.

இங்கே உட்கார்ந்து, போவோர் வருவோரின் ஒதுக்கத்தைக் கவனித்து உடல் குன்றித்தான் ஆக வேண்டும் என்று அவளுக்கு என்ன தலையெழுத்து?

ஆனால்... ஒருவேளை...

உள்ளூரத் தோன்றிய சிறு தயக்கத்தை ஒதுக்கிவிட்டு, அவள் மெல்ல எழுந்த போது, ஆலோசனை அறைக் கதவு மெதுவாகத் திறந்தது.

அவளுக்கு அழைப்போ?

யோசனையோடு பார்த்தால், கட்டடத்தின் பாதுகாவல் பொறுப்பின் பெரிய அதிகாரியான பூவலிங்கம், சோர்ந்த நடையுடன் வெளியே வந்தார்.

தனக்குப் பின்னே கதவை மெதுவாகச் சாத்திவிட்டு, நளினியை நோக்கி மெதுவாக வந்தவர், அவளை அணுகியதும், நின்று, "என்னம்மா, இப்படி என்னை மாட்டி வைத்து விட்டாயே! என்னை வேலையில் இருந்து தூக்கி விட்டார்கள்! இனி நான் என்ன செய்வேன்?" என்றார் வருத்தத்துடன்.

திகைப்புற்று, "உ...உங்களையா? நான் எப்படி உங்களை மாட்டி... இல்லையே, சார். நான் உங்களைப் பற்றி, யாரிடமும் எதுவும் சொன்னதே இல்லையே," என்றாள் நளினி.

"வாயால் சொன்னால்தானா? முதலாளி கைக்கடிகாரத்தை எடுத்ததை, நான் கவனித்திருக்க வேண்டுமாம்! அவரவர் வேலையை, அவரவர் ஒழுங்காய்ச் செய்ய வேண்டும். நீ செய்யவில்லை, வெளியே போ என்று ஒரேயடியாய் முடித்து விட்டார். இனி நான் என்ன பண்ணுவேன்? போன வருஷம் மகன் திருமணத்துக்கு வாங்கின கடனை மொத்தமாகப் பிடித்து விட்டால், மிச்சம் என்று கைக்கு ஒன்றுமே வராது. மகனுக்குக் கல்லூரிக்குப் பணம் கட்ட வேண்டும். அதற்காக, ஐம்பதாயிரம் அதிகப்படி கடன் கேட்டிருந்தேன். தருவதாகக் கூடச் சொல்லியிருந்தார்கள். ஆனால் இனி எப்படித் தருவார்கள்? என் மகனின் எதிர்காலம் என்ன ஆகும்? அதோ கதிதான். இனி என் குடும்பமே அவ்வளவு தான்!" என்று புலம்பியவாறே வெளியேறினார் அவர்.

ஒரு விரலால் கண்ணீரைச் சுண்டிவிட்டாரோ என்ற சந்தேகத்தில், நளினி துடித்துப் போனாள்.

அவளுக்கு உன்னதத்தின் புதிய முதலாளி மீது கோபம் கொதித்தெழுந்தது.

அவளாவது வேலையில் சேர்ந்து மூன்றே மாதங்கள் தான் ஆகிறது. போகிறது எனலாம்.

ஆனால் பூவலிங்கம் கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளாகப் பணிபுரிகிறவர் ஆயிற்றே. ஒரு தரம் மன்னிப்புக் கொடுக்கக் கூடாதா? ஒரு எச்சரிக்கை?

ஒன்றுமே இல்லாமல் விரட்டுவதா?

இதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும் என்று அவள் அமர்கையில், கதவு மீண்டும் திறந்து, நிர்வாகிகள் மூவரும் வெளியே வந்தனர்.

அவர்களது முகத்தில் இருந்த வெறுப்பும், சினமும் அவள் எதிர்பார்த்ததே! ஏளனம் தெறித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லைதான்.

பார்வையால் கூடத் தீண்டத் தகாதவள் போல, அவளிடமிருந்து அவசரமாக விழிகளைத் திருப்பிக் கொண்டு, மூவருமே வேகமாகச் செல்வதை வெறித்தபடி உட்கார்ந்திருந்தார்.



காக்கும் இமை நானுனக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 2:37 pm

இரவில் சரியாகத் தூங்காததால், மறுநாள் காலையில் வேலைக்குச் சென்ற நளினியின் கண்களில் சோர்வு தெரிந்தது.

மனதில் உற்சாகம் இருந்திருந்தால், அதை மறைக்க முடிந்திருக்கும்! ஆனால், அதை மறைக்க முயற்சி எடுக்கக் கூட, அவளுக்குத் தோன்றவில்லை.

முகம் முழுக்க உற்சாகத்தைப் பூசிக் கொண்டு நின்றாலும் தான் என்ன? 'உன்னத'த்தில் எல்லோருக்குமே, அவளது வேலை விவரம் தெரியும். எனவே அவள் சிரித்தாலும், அது வேஷம் என்று எல்லோருக்கும் தெரியும் தானே? அப்புறம் எதற்கு வீண் முயற்சி?

வீட்டில் தாய், தந்தை இருவருமே, இதில் வருத்தமாகக் காட்டிக் கொள்ளவில்லை.

ஒரு வேளை, அவளே வருத்தப்பட்டுக் கொண்டு இருப்பதால், அதை அதிகப்படுத்த வேண்டாம் என்று எண்ணினார்களோ, என்னவோ.

"கௌரவமான இடம். வேறே மாதிரித் தொல்லை இராது என்று நினைத்தேன். ஆனால் இதே போல இன்னும் எத்தனையோ இடங்கள் இருக்கும் தானே? சும்மா வேலை போனதை நினைத்து வருத்தப்படாதே, செல்லம்!" என்றாள் தாயார்.

"அங்கே எல்லாம் வயதானவர்கள் கூட்டம். கலந்து பேசிச் சிரிக்கக் கூட முடியாது. இனியாவது, உன் வயதுப் பிள்ளைகள் இருக்கும் இடமாகப் பார்த்து வேலையில் சேர். நானும், என் நண்பர்களிடம் சொல்லி வைக்கிறேன்," என்றார் தந்தை.

முதலாளி இளைஞன் தான் என்று சொல்லலாமா என்று யோசித்துவிட்டுச் சும்மா இருந்தாள் நளினி.

ஏனோ, அவனைப் பற்றிய விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள அவளுக்குப் பிடிக்கவில்லை.

அவளை வேலையை விட்டு நீக்கியவனைப் பற்றி, அவளுக்கு என்ன பேச்சு?

வேலைக்குப் போய், ரிஜிஸ்டரில் கையெழுத்துப் போட்டு விட்டுப் பார்த்தால், அங்கே பூவலிங்கம் வந்து காத்திருந்தார்.

"கணக்குத் தீர்த்துப் பணத்தை வாங்கிக் கொண்டு போக வந்தேன்," என்றார் அவர் வருத்தத்துடன். "கணக்கு எல்லாம் போட்டாயிற்று. ஆனால், நீயும் வந்து அவரோடு பேசிய பிறகு பணத்தைக் கொடுக்கலாம் என்று முதலாளி சொல்லியிருக்கிறாராம்."

அவள் வந்து என்ன ஆகப் போகிறது. பேசியும் தான் என்ன? ஏற்கெனவே சொல்லாததாகப் புதிதாகச் சொல்லவும் தான் என்ன இருக்கிறது?

ஆனால், ஏதேனும் இருக்கக் கூடும் என்று பூவலிங்கத்துக்கு ஒரு நப்பாசை இருந்தது.

"என்ன நடந்தது என்று, உன்னிடம் தெளிவாகக் கேட்டறிய எண்ணுகிறாரோ என்னவோ? நீ கவனித்தாயா நளினிம்மா, கொஞ்சம் முன்னதாகத்தான், நான் மேல் தளத்திலிருந்து இறங்கிப் போனேன். முதல் தளத்துப் படியிறங்கும் போது, கீழே முதலாளி 'லிஃப்டில்' ஏறுவதைப் பார்த்தேன். கூடவே, அவருடைய பாதுகாவலர்களும் இருந்தார்கள். அதனால் தான், யாரையாவது அனுப்பத் தேவை இல்லை என்று இருந்து விட்டேன்."

"அதை அவரிடம் சொல்லவில்லையா?"

"சொன்னேம்மா. ஆனால், முதலாளி அதை ஒத்துக் கொள்வதாக இல்லை. அவருடைய பாதுகாவலர்கள், அவரது காவலுக்காக மட்டும்தானாம். இங்குள்ள காவல் என் பொறுப்புதானாம்! அதற்காகத்தானே சம்பளம் வாங்கினாய் என்று கேட்கிறார்! இருபத்திரண்டு ஆண்டுகள் ஒரு பிழை இல்லாத பணி," என்று பெருமூச்சு விட்டார் பூவலிங்கம்.

"அதைத்தான் நானும் சொன்னேன்..." எனும்போதே, அவளுக்கு ஒரு குழப்பம். "அவருடைய பாதுகாவலர்கள் என்றீர்களே சார், உண்மையிலேயே அவர்கள் பழைய காலத்து ராஜாக்களுக்குப் போல இவருக்கு வெறும் பாதுகாவலர்கள் மட்டும் தானா? ஆனால் எதற்காக?" என்று வியப்புடன் கேட்டாள்.

"என்னவோ, பாதுகாப்பு விஷயத்தில், சின்னவர் கொஞ்சம் அதிகக் கவனம்தான். இங்குள்ள வீட்டை ஒரு கோட்டை போல ஆக்கிய பிறகுதான், வந்ததேயாம்..."

"பாட்டி வீடு. முன்னே பின்னே வந்ததே கிடையாது போலப் பேசுகிறீர்களே," என்றாள் அவள், நம்பாத குரலில்.

குரலைத் தணித்து, "பழைய கதை ஏதும் உனக்குத் தெரியாது என்று தோன்றுகிறது. பிடிவாதமாகச் சாதாரணக் குடும்பத்துப் பெண்ணை மணந்ததால், பெரியம்மா, தன் மகனை வீட்டை விட்டே விரட்டி விட்டார்கள். அப்புறமும் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. இருபது இருபத்தைந்து ஆண்டுகள் பேச்சு வார்த்தையே கிடையாதாம். ஏதோ விபத்தில், கணவன் மனைவி இரண்டு பேரும் இறந்து விட்டதாகக் கேள்விப்பட்டுப் போய்ப் பேரனைத் தன்னோடு வந்துவிடும்படி பெரியம்மா கூப்பிட்டிருக்கிறார்கள். அப்பனுக்குச் சரியான ரோஷக்காரப் பிள்ளை, இவர். முடியாது என்று மறுத்துவிட்டாராம்! அப்போது இவருக்கு இருபதே வயதாம். அப்புறமும் ஐந்தாறு வருஷம் இப்படியே போயிருக்கிறது. ஆறு மாதம் முன்பு, பெரியம்மாவுக்கு ரொம்ப முடியாமல் போன போது, பேரனை வரவழைத்து, எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டுக் கண்ணை மூடியிருக்கிறார்கள்."

"வரவழைத்து என்றால்? புவனேந்திரன் சார் எங்கே இருந்தாராம்?" என்று கதையில் ஈடுபட்டு நளினி வினவினாள்.

"கோவையில். அங்கேயும் அவருக்குச் சொத்து பத்து நிறைய இருக்கிறதாம். துணி மில் இரண்டு. திருப்பூரில் பனியன் தொழிற்சாலை. துணி மில்லுக்கு, மிஷின் தயாரிக்கிற தொழிற்சாலை. நிறைய சம்பாதனையாம். அதனால், இதைப் பார்த்துத்தான் ஆக வேண்டும் என்று இல்லை. முதல் தடவையாக மூன்று மாதம் முன்பு வந்தார். இரண்டாம் முறை வருமுன், என் கழுத்துக்குக் கத்தி. பேரனும் பிடிவாதக்காரர்! அவரிடம், எனக்காகக் கொஞ்சம் பதமாய்ப் பார்த்துத்தான் நீ பேச வேண்டும். என் வேலை மட்டும் எனக்குக் கிடைத்துவிட்டால், என் காலம் முழுவதும் உனக்கு நன்றியோடு இருப்பேன்," என்றார் அந்தக் குடும்பஸ்தர்.

நளினிக்கு வேதனையாக இருந்தது.

அவளைக் காட்டிலும், இரு மடங்கு அதிக வயதானவர். அவளிடம் போய் இப்படிக் கெஞ்சுகிறாரே. குடும்பத்தைச் சுமப்பது என்றால் இதுதானா?

இதில் என்ன கஷ்டம் என்றால், அவரது வேலை அந்தரத்தில் ஊசலாடுவது, அவளது முட்டாள்தனத்தினால்!

கிட்டத்தட்ட நூல் அறுந்துவிட்ட நிலை.

அவளால் போன வேலை! திரும்பவும் அவருக்கு வேலை கிடைக்க இயன்ற வரையில் முயற்சி செய்ய வேண்டும்.

நிச்சயமாக முயற்சி செய்ய வேண்டும். ஆனால், முந்தைய நாள் வேண்டிக் கொண்டதற்கு மேலாகப் புவனேந்திரனிடம் என்ன சொல்லி வலியுறுத்த முடியும்?

நளினி யோசித்துக் கொண்டிருக்கும் போதே, புவனேந்திரனிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்து விட்டது.

"முதலாளி அதற்குள் வந்தாயிற்றா?" என்று ஆச்சரியத்துடன் வினவினாள் அவள்.

"ஏழு மணிக்கே வந்து, கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறாரே! இப்போது நீ வந்தாயிற்றா என்று பார்த்து வரச் சொல்லி அனுப்பினார்!" என்றார் சற்று முதியவரான கணக்கர்.

சிறு கவலையுடன் பூவலிங்கத்தை ஒரு தரம் பார்த்து விட்டு, நளினி எழுந்து நடந்தாள்.

கூடவே நடந்தபடி, "அவரிடம் போய், 'முதலாளி' என்று விடாதே, அம்மா! சின்னவருக்கு அது பிடித்தமாக இல்லை. பழங்காலப் பழக்கமாக இருக்கிறதாம். மரியாதையைக் காட்ட ஒரு சார் போட்டால் போதாதா என்கிறார்," என்றார் கணக்கர்.

அறையின் உள்ளே சென்றதும், பழைய கால மகாராஜா தர்பார் மாதிரி, முதலில் புவனேந்திரனுடைய பாதுகாவலர்களின் தரிசனம் கிடைத்தது.

இவர்கள் முன்னிலையில் பூவலிங்கம் சாருக்காக மன்றாட வேண்டுமா?

அவள் எரிச்சலை மறைத்துக் கொண்டு பேச முயற்சிக்கும் போதே, "உட்கார்" என்றான் புவனேந்திரன்.

அவளைச் சற்றுக் கூர்ந்து நோக்கிவிட்டு, "செக்யூரிட்டி பூவலிங்கம் மீண்டும் வேலை பெறுவது, உனக்கு எந்த அளவுக்கு முக்கியம்?" என்று கேட்டான்.



காக்கும் இமை நானுனக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 2:37 pm

முகம் மலர, "ரொம்பவே முக்கியம் தான் சார். என்னுடைய முட்டாள்தனத்தினால் போன வேலை மீண்டும் கிடைத்து விட்டால், எனக்கு நிம்மதியாக இருக்கும். அத்தோடு, அவரும் உங்களைப் பார்த்துவிட்டுத்தான் கிழே இறங்கிப் போயிருக்கிறார். இரண்டு பாதுகாவலர்களோடு முதலாளி போகும்போது, பாதுகாப்பு பக்காவாகத்தானே இருக்கும் என்று நினைத்தாராம். அவர் மேல் தப்பே இல்லை சார்," என்றாள் அவள் அவசரமாக.

"நான் அதைப் பற்றிக் கேட்கவில்லை. அவரது வேலைக்காக நீ என்ன செய்யக் கூடும் என்று கேட்டேன்."

அவன் நிதானமாகப் பேசிய விதம் மனதில் பட, "என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?" என்று கவனத்துடன் கேட்டாள் அவள்.

"அடுத்த வாரம், சிம்லாவில் ஒரு மீட்டிங் இருக்கிறது. தனியே போனால், வேலை முடிந்ததும் போர் அடிக்கும். நீயும் என்னோடு வருகிறாயா? பூவலிங்கத்தை வேலையில் சேரச் சொல்லி விட்டே போகலாம்."

சில கணங்கள் நளினிக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.

எவ்வளவு சாதாரணமாகக் கேட்கிறான்.

அதிலும் அவனிடம் சம்பளம் வாங்கும் இரண்டு பேரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு. இவர்கள் அவனைப் பற்றியே கேவலமாக நினைக்கக் கூடுமே என்று கூடத் தோன்றாதா?

இப்போது, அவர்களை அனுப்பிவிட்டுப் பேசலாம் என்று அவள் சொன்னால் அது கூடத் தப்பாகத் தோன்றும்.

அவனைப் போலவே, அவர்கள் இருவரும் அருகே இல்லாதது போலப் பாவிக்க முயன்றபடி, "ஏன் சார்?" எறு கேட்டாள் அவள்.

"ஏன் என்றால்?"

"என்னை எதற்காகக் கூப்பிடுகிறீர்கள் என்று கேட்டேன்," என்றாள் அவள்.

"உன் வயதுக்கு, இந்தக் கேள்வி ஒத்துக் கொள்ள முடியாதது, அல்லது, முட்டாள்தனம்."

"நான் ஒன்றும் பொருள் புரியாமல் கேட்கவில்லை சார். பணம், பதவி, செல்வாக்கு என்று எதையாவது கையில் வைத்துக் கொண்டு, ஆண்கள் இந்த மாதிரி அத்து மீற முயற்சிப்பது, இந்தக் காலத்தில் ரொம்பவே பழக்கமாகிக் கொண்டு வருகிறது என்று எனக்குத் தெரியும். நான் கேட்பது அதுவல்ல. உங்கள் பணத்துக்கு, எத்தனையோ பெண்கள், விருப்பமாகவே வரக் கூடுமே. என்னை எதற்காகக் கேட்கிறீர்கள், என்று கேட்டேன்," என்று பொறுமை காட்டி விளக்கம் கொடுத்தாள் அவள்.

ஒரு சின்ன முறுவல் தோன்றி மறைய, "உனக்குப் பேசத் தெரிகிறது. அதனால், போரடிக்காது," என்பது அவனது விளக்கமாக இருந்தது.

பேசத் தெரிகிறதா? நன்றாகக் கேட்டுக் கொள் என்று உள்ளூரக் கறுவியவாறு, "ஒரு காலத்தில் மற்ற நாட்டு மக்கள், நம் நாட்டு உப்புக்காகத் தங்கமும், வைரமுமாகக் கொண்டு வந்து கொட்டினார்களாம்! பாரம்பரியமாகக் கடை நடத்தும் நீங்கள், அந்தப் பழங்கதையை நினைத்து, வெறும் உப்புக் கல்லுக்காக, வைரக்கல்லின் விலையைக் கேட்கலாம். ஆனால், நான் சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த பெண், சார்! உப்பே இல்லாமல் சமைத்தாலும் சமைப்பேனே தவிர, வைரக்கல்லின் விலையைக் கொடுத்து உப்பு வாங்க நான் தயாரில்லை. ரொம்பவும் தயவு பண்ணி, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்," என்றாள் நளினி, போலிப் பணிவுடன்.

பதிலுக்குக் கண்டபடி கத்தப் போகிறான் என்று அவள் எதிர்பார்த்தபோது, அவள் சற்றும் எதிர்பாராத விதமாக, வெளேரென்று வரிசைப் பல் தெரியப் புவனேந்திரன் வாய் விட்டு நகைத்தான்.

ஒரு கணம் பிரமித்த நளினி, உடனேயே சுதாரித்தாள்.

இந்த மனிதன் சரியானவன் அல்ல! நல்லவனாக இருந்திருந்தால், இந்த மாதிரிக் கேட்டிருக்க மாட்டான்! இவனது சிரிப்பு எவ்வளவுதான் நன்றாக இருந்தாலும், ரசிப்பது சரியல்ல.

"விஷயம் அவ்வளவுதான் என்றால், நான் போகிறேன், சார்."

"ஆமாமாம்! இன்று, நீ வேலையைத் தொடங்கவே இல்லை, அல்லவா? இப்போதே, அரை மணி நேரம் விரயம். போய் வேலையைப் பார்," என்றான் புவனேந்திரன் - ஒன்றுமே நடவாதது போன்று, சர்வ சாதாரணமாக.

அப்படியானால், புவனேந்திரன் உண்மையாகக் கேட்கவில்லையா? அவளைப் பற்றி அறிவதற்காக இருக்குமோ?

உண்மையோ, பொய்யோ, சம்பந்தம் இல்லாத இரண்டு பேரை வைத்துக் கொண்டு, இந்த மாதிரி விஷயத்தைப் பேசுவது... ஊகூம், ஒன்றும் சரியே இல்லை.

யோசித்தவாறே நடந்தவளுக்கு, அறையை விட்டு வெளியே வந்ததும், கால்கள் தயங்கின.

அங்கே அலுவல் அறையில், பாவம்! பூவலிங்கம் காத்திருப்பாரே.

அதற்காகப் புவனேந்திரன் கேட்டது போல நடப்பது முடியாத காரியம். ஆனால், அவளுடைய தந்தை போன்ற வயதுடைய ஒருவரின் முகத்தில் நிராசை பரவுவதைக் காண, அவளுக்கு வேதனையாக இருந்தது.

அவரது தலை விதியை வேறு யாராவது அவரிடம் சொல்லட்டும்.

கீழே அலுவல் அறைக்குப் போகாமலே, 'லிஃப்ட்' வழியாக மூன்றாம் தளத்தை அடைந்து, அங்கே தன் வேலையை நளினி தொடங்கினாள்.

ஆனால், சற்று நேரத்தில், "நளினியிடம் ஒரு வார்த்தை பேச வேண்டும்," என்று பூவலிங்கத்தின் குரல் கேட்கவும், அவளுக்குக் கலக்கம் உண்டாயிற்று.

இதிலிருந்து தப்ப வழியே இல்லையா என்று எண்ணும் போதே, காவல் அதிகாரியின் குரல், கொஞ்சம் கணீர் என்று இருப்பதுபோல ஒரு சந்தேகம் தோன்றியது.

சமாளித்துக் கொண்டு விட்டாரா?

"அவளால் உனக்கு வந்த துன்பம் போதாதா? போ, போ. உன்னிஷ்டம்," என்று தளத்து நிர்வாகியின் எரிச்சலுற்ற குரலைத் தொடர்ந்து, பூவலிங்கத்தின் காலடி ஓசை அவளை நெருங்கியது.

சங்கடத்துடன் அவள் திரும்பிய போது, மலர்ந்த முகத்துடன், "ரொம்ப நன்றி, நளினிம்மா!" என்றார் அவர் மகிழ்ச்சியோடு.

அவள் புரியாமல் நோக்குகையில், "எனக்காக முதலாளியிடம் ரொம்பவும் வாதாடி, மீண்டும் வேலையை வாங்கித் தந்திருக்கிறாய். இப்போதே வேலையைத் தொடர்ந்து பார்க்கும்படி, சார் சொல்லிவிட்டார். அதுதான் நன்றி சொல்லிவிட்டுப் போக வந்தேன்," என்றார் அவர்.

"நான் பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை, சார்."

"முதலாளி மீண்டும் வேலைக்குச் சேர்க்கும் அளவுக்குச் சொல்லியிருக்கிறாய். அதுவே எவ்வளவு பெரிய காரியம்! என் குடும்ப முழுதுக்குமே நிம்மதியைத் தந்திருக்கிறாய். நன்றிம்மா. இனி நான் வேலையைப் பார்க்கிறேன்," என்று சென்றார் அவர்.

நளினிக்கு ஒரே ஆச்சரியமாகிப் போயிற்று.

முடியாது, முடியாது என்று அவ்வளவு சொல்லிவிட்டு, அதற்கு மேலாக என்னென்னமோ அசிங்கமாகப் பேசி, அவளுக்கு வெறுப்பேற்றிவிட்டு, பூவலிங்கம் சாருக்கு வேலையை மறுபடியும் கொடுத்திருக்கிறானே!

இவன் என்ன மாதிரி மனிதன்?

கிளம்பி வீட்டுக்குச் செல்லுகிற நேரம், 'உன்னத'த்தின் அகன்ற படிகளில், அவள் புவனேந்திரனைச் சந்திக்க நேரவும் அவனிடமே, "அழுக்கும் மண்ணும் கலந்த உப்பு என்று தெரிந்தும், வாங்குகிறீர்களே!" என்று அதிசயம் காட்டிக் கேட்டாள்.

குத்தல் புரிந்தும் ஆத்திரப்படாமல், "அது முன்பு," என்றான் அவன். "எப்பேர்ப்பட்ட தண்டனை கிடைக்கும் என்று தெரிந்துவிட்டதால், பூவலிங்கத்துக்கு இனித் தவறு நடக்கவிடும் துணிவிராது. எனவே, அவர் மிகச் சிறந்த காவலராகக் கூட ஆகிவிடக் கூடும். ம்ம்ம்... அதாவது உன் மொழியில் சொல்லப் போனால், அழுக்கு, மண் அனைத்தும் நீக்கிய சுத்தமான, பரிசுத்தமான உப்பு," என்று முறுவலித்தான் புவனேந்திரன்.

அவன் சொன்ன தினுசில், கூடச் சேர்ந்து சிரித்த போதும், உள் மனம் அதில் ஒன்றாமல், உள்ளூர ஓர் ஏமாற்றம் பரவுவதை நளினியால் உணர முடிந்தது.

ஏன்?



காக்கும் இமை நானுனக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 2:38 pm

புவனேந்திரன் பேச்சில் காரண காரியம் சரியான விகிதத்தில் இருந்தது.

எனவே, அது பற்றிப் பாராட்டத்தான் வேண்டும்.

அத்தோடு, பூவலிங்கத்தின் துன்பம் தீர்ந்தது என்று, அது வேறு ஒரு பெரிய நன்மை விளைந்திருப்பது, இன்னமும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.

ஆனால், ஏதோ எதிர்பார்த்தது நடவாத ஏமாற்றம், அவளுள் ஏன் வந்தது?

ஒரு வேளை, அவள் சொன்னதற்காகவென்று புவனேந்திரன் பூவலிங்கத்துக்கு வேலை கொடுக்கவில்லை என்பதாலா?

என்ன பைத்தியக்காரத்தனம்!

இவ்வளவு பெரிய நிறுவனத்தின் தலைவன், வெறும் மூன்று மாதங்களுக்கு முன்பாக, அங்கே வேலைக்குச் சேர்ந்த ஒரு பெண்ணின் பேச்சுக்காக மட்டுமாய்ச் செயல்படுவான் என்று அவள் எதிர்பார்த்தால், அது முட்டாள்தனம் அல்லவா?

இந்த மாதிரி அசட்டுத் தனங்களுக்கு இனி இடம் கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்த பிறகே, அன்று அவளால் உறங்க முடிந்தது.

ஆனால் மறுநாளே, தன்னுடைய இன்னோர் அசட்டுத் தனம் நினைவு வர, அலுவலுக்குச் சற்று முன்னதாகவே கிளம்பிச் சென்றாள்.

அவள் எதிர்பார்த்தது போலவே, புவனேந்திரனும் முன்னதாகவே வந்து கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அனுமதி கேட்டுக் கொண்டு உள்ளே சென்றவள், அவனிடம் தன் வேலையைப் பற்றிக் கேட்டாள்.

பூவலிங்கத்துக்கு வக்காலத்து வாங்கிப் பேசிய வேகத்தில் விட்ட வேலை. இப்போது, அவருக்கே வேலை மீண்டும் கிடைத்து விட்ட போது, அவளை எப்படி வெளியேற்றுவான்?

அவனும் அதையேதான் சொன்னான்.

"பூவலிங்கத்தின் வேலைக்காகப் பேசிய வேகத்தில்தானே, உன் வேலையையே விட்டாய். அவருக்கே வேலை கிடைத்து விட்ட பிறகு, உன் வேலை எப்படிப் போகும்? இடையில் நடந்ததை - எல்லாவற்றையுமே ரப்பரால் அழித்த மாதிரி - அடியோடு மறந்து விடு," என்றான் அவன்.

அவனது 'எல்லாவற்றையுமே' ஒன்றை உணர்த்த, "அவருக்கு வேலையைக் கொடுப்பதாக முடிவு பண்ணி விட்டு, என்...என்னிடம் ஏன் அப்படிக் கேட்டீர்கள்?" என்று உள்ளூர எரிச்சலுடன் வினவினாள் அவள்.

"உன்னைப் பற்றி மதிப்பிட முயன்றேன் என்று வைத்துக் கொள்ளேன்," என்று சிறு இறுக்கத்துடன் கூறி முறுவலித்தவன், அடுத்து, "ஆனால், இனியேனும் எதற்கும் அவசரப்பட்டுப் பேசாமல், இந்த இடத்துடைய அடுத்த உரிமையாளரிடம் நல்ல பெயர் வாங்கு," என்று ஆலோசனை என்ற பெயரில், அவளை அதிர வைத்தான்.

நிஜமாகவே நளினிக்குப் பேரதிர்ச்சிதான்.

தூக்கிவாரிப் போட, திகைப்புடன் அவனை நோக்கி, "எ...எ... என்ன சொன்னீர்கள், சார்? அடு...த்த உரிமையாளரா? ஏன்? நீங்கள்தானே உரிமைக்காரர்...? வேறு யார்?" என்று உளறிக் குழறி வினவினாள்.

"இப்போதைக்கு என்னுடையதுதான். ஆனால், நான் இதை விற்று விடும்போது?"

"விற்பதா? ஏன்? இப்போதுதானே உங்கள் கைக்கு வந்தது? அதற்குள் எதற்காக விற்பது?" என்று வியப்பும் கோபமுமாக மீண்டும் வினவினாள் அவள்.

அவனிடம் பணிபுரிகிறவள் என்கையில், இந்தக் கேள்வி அதிகப்பிரசங்கித்தனம்தான். ரொம்பவே. ஆனாலும், அவளால் கேளாதிருக்க முடியவில்லை.

லேசாகப் புருவங்களை உயர்த்திய போதும், நல்ல வேளையாக, அவனும் அவளைத் தவறாக எடுத்துக் கொள்ளாமல் பதில் சொன்னான்.

"நான் தொழில் நடத்துகிறவன், நளினி. லாப நஷ்டக் கணக்குப் பாராமல் எந்தத் தொழிலிலும் வெற்றி பெற முடியாது. 'உன்னத'த்தில் முடங்கிக் கிடக்கும் பணத்துக்கு லாபம் போதாது. கிட்டத்தட்ட லாபமே இல்லை என்றே சொல்லலாம்."


இவனுடைய பாட்டியம்மாவைப் போல, இவன் கௌரவத்துக்கு இந்த வளாகத்தை நடத்தவில்லை. சரிதான். ஆனால் விட்டுவிட எண்ணுவதன் காரணமும் சரியில்லையே. லாபம் ஏன் இல்லை என்று யோசிப்பதை விட்டு...

எரிச்சலோடு, "லாபம் எப்படியிருக்கும்?" என்று வெடித்தாள் நளினி. "லாபம் வருவதற்குக் கடையில் விற்பனையும் நடக்க வேண்டுமல்லவா? இந்த மாதிரி மகாராஜாக்களுக்கு மட்டும் கடை நடத்தினால், அதுவும் மகாராஜாக்களே இல்லாத இந்தக் காலத்தில் நடத்தினால், விற்பனை எங்கே நடக்கும்? லாபம் தான் எப்படி வரும்?" என்றாள்.

நிச்சயமாக அதிகப்படியான பேச்சுதான். ஆனால், அவன் எப்படி இதை விட்டுப் போகலாம் என்ற ஆத்திரத்தை அவளால் அடக்க முடியவில்லை. அதுவும், சீர் செய்யக்கூடிய ஒன்றைச் செய்து பாராமலே வெளியேறுவதா?

கண்ணில் சிரிப்புடன், "தலையில் கிரீடம் தரித்தால்தான் மகாராஜாவா? ரிலையன்ஸ், விப்ரோ, டாடா உரிமையாளர்களை எல்லாம் என்ன பெயர் சொல்லிக் கூப்பிடுவாயாம்?" என்று கேட்டான் அவன்.

"மன்னர்களுக்கு நிகரான பணக்காரர்கள்தான். ஆனால் அவர்கள் எத்தனை பேர்? விரல்விட்டு எண்ணுகிற அளவு தானே! அப்படியிருக்கும் ஒரு சிலருக்காக மட்டும்தான் கடை நடத்த வேண்டுமா?"

"பின்னே? நடைபாதையில் குவித்துப் போட்டு விற்பார்களே, அதுபோலச் செய்ய வேண்டும் என்கிறாயா?"

"இது அல்லது, அதுதானா? இரண்டுக்கும் நடுவே, மத்திய தரம் என்று ஒன்றும் கிடையாதா? அத்தோடு, இப்போதெல்லாம் நீங்கள் சொல்லுகிற ராஜாக்கள் குடும்பத்தாரே, எப்போதுமே, தகதகவென்று அணிந்து கொண்டிருப்பதில்லை, தெரியுமா? என்னோடு படித்தவள் ஒருத்தி, அவளது பிறந்த நாளைக்கு அவளைச் சுற்றுகிற பன்னிரண்டு பேருக்கு இரண்டாயிரம் ரூபாய் பெறுமானமுள்ள கைக்கடிகாரம் வாங்கிக் கொடுத்தாள். அவள் அடிக்கடி அணிகிற உடை என்ன தெரியுமா? ஜீன்ஸ் பேன்ட்டும், டாப்ஸும்தான். விலை உயர்ந்ததும் இருக்கும். ஆனால், நீங்கள் இளக்காரமாகச் சொன்னீர்களே, அது போல நடைபாதைக் கடைகளில் அவள் பீராய்வதையும் நான் பார்த்திருக்கிறேன்! அவளுக்குப் பொருந்துவதாக இருக்க வேண்டும் என்பதுதான் அவளுக்கு முக்கியம். அப்படித்தான் இப்போது எல்லோருமே பார்ப்பது."

"அப்படிப் பார்த்து வாங்க, இங்கே எதுவும் இல்லை என்கிறாயா?"



காக்கும் இமை நானுனக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 2:38 pm

"பார்ப்பதற்கு இருந்து என்ன செய்வது? வாங்கக் கூடிய விலையில் இருக்க வேண்டுமே! இங்கே ஜவுளிப் பிரிவில், நான் வந்த நாளிலிருந்து ஒரு செட் துப்பட்டா துணிகளை நான் பார்த்து வருகிறேன். அவற்றில், ஒரு பீஸ் கூட விற்றிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். ஆனால், விலை என்ன தெரியுமா? மீட்டர் ஆயிரத்து இருநூறு ரூபாய். இரண்டரை மீட்டர் என்றால், ஒரு துப்பட்டாவுக்கே, மூவாயிரம் ரூபாய் ஆகிவிடும். துப்பட்டாவுக்கே அவ்வளவு என்றால் அதற்குப் பொருத்தமான ஒரு சுரிதார் செட்டுக்கு, ஆரேழு ஆயிரங்களாவது ஆகும். இதே துப்பட்டாத் துணியை என்னிடம் கொடுத்தால் அந்த இரண்டரை மீட்டரில், லைனிங் கொடுத்து, அருமையான ஒரு சல்வாரையே தைத்துவிடுவேன். எந்தக் கோடீஸ்வரர் வீட்டுத் திருமணத்திற்கும் அணிந்து செல்லக் கூடிய மாதிரியாய்ப் பிரமாதமாக இருக்கும். அதுபோல சல்வார் செட்டே கிடைக்கிறது. அப்படியிருக்க, ஒரு துப்பட்டாவுக்கு இந்த விலை கொடுத்து யார் வாங்குவார்கள்?" என்று, இந்த மூன்று மாத காலமாக அவள் எண்ணியதையெல்லாம், வேகமாகப் புவனேந்திரனிடம் கொட்டி முடித்தாள் நளினி.

அவன் குறுக்கிட, அவள் இடமே கொடுக்கவில்லை!

அவன் குறுக்கிட விரும்பியதாகவும் தெரியவில்லை.

புவனேந்திரன் யோசிப்பது போலத் தோன்றவும், தன் கருத்துக்களை மேலும் வலியுறுத்த விரும்பி, "பெரிய பெரிய பணக்காரர்கள் கூட, இப்போதெல்லாம் வீட்டில், உடல் சுகத்தைப் பார்த்துப் பருத்தி நூல் துணிகளைத்தான் அணிகிறார்கள் சார். எப்போதும் பட்டுத்தான் என்று பந்தாக் காட்டுகிற காலம், எப்போதோ முடிந்து விட்டது. என்ன, இவர்கள் ஒரு நாலு தரம் கட்டி விட்டுத் தூர வீசுவார்கள். மற்றவர்கள், கூடப் பத்துத் தடவை உடுத்துப் பழசான பிறகு, பாத்திரக்காரனுக்குப் போடுவார்கள். அவ்வளவுதான் சார், வித்தியாசம்," என்று மேலும் அடுக்கினாள்.

லேசாக முறுவலித்து, "நீ வேலை செய்ய வேண்டியது, விற்பனைப் பிரிவில் என்று தோன்றுகிறது. வாங்கப் பிடிக்கிறதோ, இல்லையோ, சுற்றி வளைத்துப் பேசி, நிச்சயமாகத் தலையில் கட்டி விடுவாய்," என்றான் அவன்.


"நான் சும்மா சொல்லவில்லை சார். ஒரு தரம் என்னோடு வந்து பாருங்கள், உங்களுக்கே புரியும்," என்றாள் அவள்.

அவன் பேசாதிருக்கவும், "அவசரப்பட்டு 'உன்னத'த்தை விற்று விட மாட்டீர்களே, சார்?" என்று கவலையுடன் கேட்டாள் நளினி.

அவன் பேசாதிருக்கவும் கலங்கி, "சார், இது உங்கள் தாத்தாவுடைய தந்தை தொடங்கியதாமே! அவருக்குப் பிறகு, உங்கள் தாத்தா பாட்டி தொடர்ந்து நடத்தியது. எழுபது ஆண்டுகளுக்கும் அதிகமாக, வெகு கம்பீரமாக நடந்து வருவது. விரைவில் வைர விழாவைக் கொண்டாடலாம். இப்படி ஒரு நிறுவனம், தொடர்ந்து நாலாவது தலைமுறையாக உங்களிடம் இருப்பது எவ்வளவு பெருமைக்குரிய விஷயம். அதைப் போய் விற்பதா?" அவனது மனதைத் தொட முயன்றாள் நளினி.

"இப்போதுதான், பாட்டி நடத்திய விதத்தைத் தொடர்வது சரியில்லை என்று வாதாடினாய். உடனேயே, பாரம்பரியத்தை விடலாமா என்று கேட்கிறாயே?"

ஒரு கணம் திகைத்துவிட்டு, "பாருங்கள் சார், உங்கள் கொள்ளுத் தாத்தாவின் உடை போலவா, நீங்கள் அணிகிறீர்கள்? அவருடைய பேரனான நீங்கள் காலத்துக்கு ஏற்றவாறு மாறவில்லையா? அதைப் போலக் கடையில் உள்ள பொருட்களை, இன்றைய நாகரீகத்துக்கு ஏற்றபடி, மாற்றலாமே என்றேன். நீங்களானால், வழிவழியாய் வந்த குடும்பச் சொத்தையே விற்கப் போகிறேன் என்கிறீர்களே, சார்," என்றாள் அவள்.

"வழிவழியாய் வந்த குடும்பச் சொத்தா? அப்படி என் கைக்கு வந்த இந்தக் குடும்பத்துச் சொத்தை நான் விரும்புவேன் என்று உனக்கு என்னம்மா, நிச்சயம்?"

புவனேந்திரனின் குரலில் லேசாக வெளிப்பட்ட கைப்பு, பூவலிங்கத்தின் பேச்சை நினைவுறுத்த, நளினிக்குச் சுரீலென்றது.

வழி வழியாக என்றால், அவனுடைய தந்தைக்கு இந்த 'உன்னதம்' கிடைக்கவில்லையே!

அவனுடைய பெற்றோரை ஒதுக்கிய பாட்டி வேறு வாரிசு இல்லாததால் மட்டுமே, அவனிடம் கொடுத்த சொத்தின் மீது, அவனுக்கு எப்படி ஈடுபாடு வரும்?

அந்த வெறுப்பும் சேர்ந்ததால் தான், இலகுவாக விற்றுவிட முடிவு செய்தானோ?

அப்படியானால், விற்றுவிட்டுப் போயே விடுவானா?

அவசரமாக யோசித்து, "ஆனாலும், ஒரு தொழிலை மிகவும் வெற்றிகரமாக நடத்த வாய்ப்பு இருக்கும் போது, அதை முயன்று பாராமலே விட்டு விடுவீர்களா? பெரிதாகத் தொழில் நடத்துகிறவன் என்று சொல்லிக் கொண்டீர்களே. ஒரு தடவை, ஒரே ஒரு தடவை என்னோடு வந்து பாருங்கள், சார். நான் சொல்லுகிற மாதிரித் துணிகளில் விற்கிற இடங்களில் கூட்டம் எப்படி அலை மோதுகிறது என்று நீங்கள் நேரில் பாருங்கள், அப்போதுதான், நான் சொல்வது உங்களுக்குப் புரியும்," என்றாள் அவள் - குரலில் சிறு மன்றாடலுடன்.

"ம்ம்ம்..." என்று புவனேந்திரன் யோசிக்கும் போதே, "கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்குப் போக வேண்டாம் சார்," என்றான் அவனுடைய காவலர்களுள் ஒருவன்.

"ஆமாம் சார். அவர்கள் சொல்கிற மாதிரி, கூட்டம் அலை மோதுகிற இடங்களில், கண்டபடி மேலே வந்து விழுவார்கள், சார். அவர்களை யார் என்ன என்று கண்டு ஒதுங்கவோ, விலக்கவோ முடியாது," என்றான் மற்றவன்.

தன் காதுகளையே நம்ப முடியாத அளவுக்கு, நளினிகு ஆச்சரியமாகிப் போயிற்று.

உத்தமப் பெண்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் கூட, கூட்ட நெரிசல்களில் மேலே இடிப்பவர்களைச் சிறு எரிச்சலோடு அலட்சியப்படுத்துகிற காலம் இது! ஆண் பிள்ளையான இவன் மீது அடுத்தவர்கள் பட்டு விடுவார்களே என்று, அங்கே போகாதே, இங்கே செல்லாதே என்று ஆலோசனை கூறப்படுகிறதே!

அதுவும் அவனிடம் பணிபுரிகிறவர்களே ஆலோசனை கூறுகிறார்கள்.

புவனேந்திரனும், அதை ஏற்று, அது பற்றிச் சிந்திப்பதாகவும் தோன்றவே, அவளுக்கு இன்னமும் ஆச்சரியமாகிப் போயிற்று!

இந்தப் பாதுகாவலர்கள், இந்த ஆலோசனை, சிந்தனை ஏன்?

ஆனால், அதைப் பற்றி விசாரிப்பதை விட முக்கியமாக விஷயம் வேறு இருக்கிறது. நூலையும், துணியையும் மொத்த உற்பத்தி செய்கிறவனுக்குப் பொருட்களின் சில்லறை விற்பனை பற்றிக் கற்றுக் கொடுத்தாக வேண்டியிருக்கிறது.

எனவே அவனுக்குச் சரியாக, "சரி சார். கூட்ட நேரத்தில் போக வேண்டாம். காலை பத்து மணிக்குப் போனால், எந்தக் கடையிலும் கூட்டமே இராது. நாளை காலை வாருங்கள், போய்ப் பார்க்கலாம்," என்று அழைத்தாள்.

"மறதி, மறதி. நாளை ஞாயிற்றுக்கிழமைம்மா. கடைகள் மூடியிருக்குமே."

"ஒன்றும் மறக்கவில்லை. உங்கள் 'உன்னதம்' மட்டும் தான், பழைய காலத்து வழக்கப்படி, ஞாயிற்றுக்கிழமை மூடியிருப்பது. இப்போதெல்லாம், பெரும்பாலும் ஆண் பெண் இருவருமே வேலை செய்து சம்பாதிப்பதால், 'சண்டே ஷாப்பிங்' என்று, ஞாயிறன்றுதான் கடைகளில் அதிக விற்பனை. ஆனால், வாரம் முழுவதும் வேலை செய்த இறுக்கம் தளரக் காலையில் சற்று ஓய்வாக வீட்டில் இருந்துவிட்டுத் தாமதமாகக் கிளம்புவார்கள். அதனால் தான், காலையில் கூட்டமிராது."

சற்று வியப்புடன் அவளைப் பார்த்தான் அவன். "நிறையத் தெரிந்து வைத்திருக்கிறாயே," என்றான் பாராட்டுதலாக. "அங்கே எல்லாம் உற்பத்தித் துறையில் இருப்பதால், இது போன்ற விவரங்கள் புதிதாக இருக்கிறது!"

வாயால் ஒன்றும் சொல்லாவிட்டாலும், அவனது உடை, பெல்ட் போன்றவற்றை, ஒரு தரம் பாராதிருக்க நளினியால் முடியவில்லை.

அதைக் கவனித்து, "உடை, என் வீட்டுக்கு வந்து, அளவெடுத்துத் தைத்து வருவது. அவர்களே பொருத்தமாக மற்றவற்றையும் கொண்டு வந்து விடுவார்கள். கொஞ்சம் அதிகச் செலவாகும். ஆனால், இவற்றுக்காக நான் வெளியே அலைந்து திரிய நேராது," என்று அவனது வழக்கமான சிறு முறுவலுடன் கூறினான் அவன்.

வெளியே அலைந்து திரிய நேராதிருப்பதற்காக, அதிகம் செலவு செய்கிறானா? நாலு பொருட்களைப் பார்த்து, நமக்கு வேண்டியதைத் தேர்ந்தெடுப்பதே ஒரு சுகம் என்று இவனுக்குத் தெரியாதா? நேரம் இல்லையா? பிடிக்கவில்லையா? அல்லது...

மீண்டும் நளினிக்கு ஏதோ உறுத்தியது. என்னவென்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத ஏதோ ஒன்று.

பலமுறை யோசித்தும், அது என்னவென்று, நளினிக்கு ஒன்றும் புரியவில்லை.

ஆனால், மறுநாள் குறிப்பிட்ட இடத்தில், புவனேந்திரன் அவளுக்காகக் காத்து நிற்பதைப் பார்த்தபோதோ, உறுத்தல் பற்றிய நினைவே மறந்து போயிற்று.



காக்கும் இமை நானுனக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 2:39 pm

கிட்டத்தட்ட புவனேந்திரனின் 'உன்னத'த்தின் அளவிலேயே அமைந்திருந்த, சில பெருங்கடைகளை அவனுக்குக் காட்டிவிட்டு, ஒன்றின் உள்ளே நளினி அவனை அழைத்துச் சென்றாள்.

வாங்குவோரின் பணப்பைக்குத் தக்கபடி, என்னென்ன மாதிரித் துணி வகைகள் இருக்கின்றன என்று எடுத்துக் காட்டினாள். தைக்காத துணிகள், தைத்துத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் ஆடைகள்... எல்லா வகையிலும், விலை குறைந்தது, கூடியது எல்லாமே இருப்பதையும், சின்னச் சின்ன அலங்கார வேலைகளுக்கு ஏற்றபடி விலை கூடுவதையும் எடுத்துக் காட்டி விளக்கினாள்.

சலிக்காமல் காட்டிய விற்பனைப் பெண்ணுக்காகத் தனக்கு ஒரு சல்வார் செட்டையும் வாங்கிக் கொண்டாள்.

ஆனால், பில் போடப் போனபோது, புவனேந்திரன் பணம் கொடுக்கவும், அதைத் தடுக்க முயன்றாள்.

ஆனால், "இது உன் ஞாயிறு ஓய்வைத் தியாகம் செய்து 'உன்னத'த்துக்காகப் புரிந்திருக்கும் அதிகப்படிப் பணி. அதனால், இந்தச் செலவு கணக்கு 'நிறுவனத்'தைத்தான் சார வேண்டும்," என்று முடித்துவிட்டான் அவன்.

ஆடைகளுக்கேற்ற விதமாய், விலை குறைந்த 'காஸ்ட்யூம்' நகைகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த போது, "கூட்டம் அதிகமாகிறது, பாஸ்," என்று பாதுகாவலர்களில் ஒருவன் வந்தான்.

உடனேயே, "கிளம்புவோம்," என்று புவனேந்திரன் சொன்னது, நளினிக்கு ஏமாற்றமாகத்தான் இருந்தது.

ஆனால், காரை நிறுத்திவிட்டு வந்த இடத்தைப் பார்த்ததும், "பார்த்தீர்களா, சார்? இந்தக் கார் நிறுத்துமிடம் நிரம்பிப் போயிற்று. உங்களது போல, டயோட்டா, பென்ஸ், ஸ்கோடா போன்ற வண்டிகள் கூட எத்தனை நிற்கின்றன, பாருங்கள். நிறுத்த இடம் இல்லாமல், இடம் தேடிச் சுற்றுகிறவை எத்தனை! இந்த மாதிரிக் கார்களில் வருகிற... உங்கள் பாஷையில், தலையில் மகுடம் வைக்காத மகாராஜாக்கள்! அவர்களும் கூடத் தங்களுக்குத் தேவைப்பட்டவைகளை வாங்க, இங்கே தானே குழுமுகிறார்கள்," என்று தன் கூற்றுக்கு, அவள் மேலும் ஆதாரம் காட்டவும், புவனேந்திரன் வாய்விட்டுச் சிரித்தான்.

"உன் கருத்தை மற்றவர்கள் மீது எப்படித் திணிக்கிறாய் என்பது, மற்றெல்லாவற்றையும் விட, மிக நன்றாகத் தெரிகிறது. பா...வம், அப்புறமாய் மாட்டிக் கொள்ளப் போகிற அந்த அப்பாவி!" என்று மீண்டும் நகைத்தான் அவன்.

எதற்காக, இதில் இவ்வளவு தீவிரமாக இருக்கிறோம் என்று, அவளுக்கே புரியவில்லைதான். அவனது தொழில். அவன் நடத்துகிறான். அல்லது, மூடுகிறான். இதில், அவளுக்கென்ன வந்தது?

என்னதான் வந்ததோ? ஆனால், புவனேந்திரன் இந்த 'உன்னத'த்தை வெற்றிகரமாக நடத்தியே ஆக வேண்டும் என்ற வேகத்தை அவளால் விட முடியவில்லை என்பது நிச்சயம்.

அவனது கேலிப் பேச்சில் முகம் சிவந்த போதும், சமாளித்துக் கொண்டு, "அப்படியானால், நான் சொன்னதை ஒத்துக் கொள்கிறீர்கள் என்று அர்த்தமா, சார்?" என்று விடாமல் கேட்டாள் அவள்.

முறுவலோடு, காரில் ஏறிக் கொள்ளுமாறு சைகை செய்தான் அவன். "உன்னைக் கொண்டு விட்டுவிட்டுப் போகிறேன்."

"இல்லை சார். எனக்கு இங்கே கொஞ்சம் வேலை இருக்கிறது."

"வேலை? என்ன வேலை?" என்று கேட்டவன், "சொல்லக் கூடாதது என்றால், வேண்டாம்," என்று சேர்த்துச் சொன்னான்.

அவள், தன் பெரிய கைப்பையைத் திறந்து, உள்ளிருந்தவற்றை எடுத்துக் காட்டினாள்.

அலங்கார வேலைகள் செய்திருந்த பல துண்டுத் துணிகள். "சில கடைகளில் ஆர்டர் எடுத்துச் செய்து கொடுக்கிறேன், சார். 'உன்னத'த்திலும் இதைக் காட்ட வந்த போதுதான், 'விண்டோ டிஸ்ப்ளே' செய்கிறாயா என்று, இப்போதைய பணியைத் தந்தார்கள்," என்று, விவரமும் தெரிவித்தாள்.

"ஓ! அதனால் தான், குந்தன், சிக்கான் என்று அப்படி அடுக்க முடிந்ததா? குட்," என்றான் பாராட்டுதலாக. "போய், உன் வேலையைப் பார். நான் கிளம்புகிறேன்."

"ஆனால்... சார்... இன்னமும், நீங்கள் ஒரு முடிவும் சொல்லவில்லையே?"

"நிஜமாகவே, அந்த அப்பாவி ரொம்பவே பாவம்தான்!" என்று மீண்டும் முறுவலித்தான் அவன். உடனேயே "யோசிக்கிறேன், நளினி. நீ சொன்னது, என்னைக் கூட்டி வந்து இங்கே கடைகளில் காட்டியது அனைத்தையும் யோசித்துப் பார்க்கிறேன். இப்போதைக்கு என் பதில் இதுதான். ஓகே! பிறகு சந்திப்போம்," என்று விட்டுக் கிளம்பினான் புவனேந்திரன்.

ஆனால், அந்தப் 'பிறகு சந்திப்போ'மின் பொருள், மறுநாள் அலுவல் அறையில் சந்திப்பது அல்ல, அவன் ஊரை விட்டுச் சென்று, திரும்பி வந்த பின் சந்திப்பது என்று வேலைக்குச் சென்றதும் அறிய வந்தபோது, அவளுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது.

ஊருக்குப் போவதாகத் தன்னிடம் அவன் ஒரு வார்த்தை சொல்லவில்லையே என்று வருத்தமாகவும் இருந்தது.

ஆனால், அவளது ஏமாற்றம், வருத்தம் பற்றி யாரிடம் சொல்வது?

மறைக்க வேண்டும் என்று தோன்றவில்லை. ஆனாலும், சகஜமாகப் பேசிப் பழகும் பெற்றோரிடம் கூட, இதைப் பற்றிச் சொல்ல, நளினிக்குப் பிடிக்கவில்லை.

நிலைமை புரியாமல், அவளைத் தேற்றுவதாக எண்ணி, யாரேனும் ஏதேனும் சொன்னால் எரிச்சல் வரும்.

ஆனால், இரண்டு நாட்கள் கவனித்து விட்டு, "என்னடா செல்லம்?" என்று விவரம் கேட்ட தாயிடம், உண்மையைச் சொல்லாதிருக்கவும் அவளால் முடியவில்லை.

"அருமையான இடம், அம்மா! வீணாக விட்டு விடுவார்களோ என்று கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது," என்றாள் மகள்.

"அப்படி விட்டு விடுவார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. நளினிம்மா! தொழில் நடத்துகிறவன் என்று தன்னைத் தானே சொல்லியிருக்கிறார், என்கிறாய். வளாகத்தில் முடங்கிக் கிடக்கும் பணத்துக்கு லாபம் வேண்டும் என்பதுதானே, அவரது விருப்பமும். யோசி. ஞாயிறன்று கடை காட்டக் கூட்டிப் போனாய் என்று ஆயிரம் ரூபாய் சல்வார்க்குப் பணம் கொடுத்தாரே, தொடர்ந்து நடத்துகிற எண்ணம் இல்லாவிட்டால், அந்தப் பணம் அவருக்கு விரயம் தானே! அப்படி வீணாக்குவாரா? நீதானே பிடிவாதமாய் வரச் சொன்னாய், உன் பாடு என்று சும்மா இருந்திருக்க மாட்டாரா? அவரது இருப்பிடம் கோவை என்று தானே சொன்னாய்? அங்கே அவருக்கு வேலை இருந்திருக்கலாம், போயிருப்பார். எனக்கென்னவோ, நீ சொன்ன வழியில் ஒரு பிரமாதமான திட்டத்தோடு மிஸ்டர் புவனேந்திரன் திரும்பி வருவார் என்று தான் தோன்றுகிறது!" என்று சகுந்தலா நிச்சயமாகக் கூறவும், நளினிக்கும் போன உற்சாகம் திரும்பியது.

அவளுடைய அன்னை சொன்னது சரிதானே!

'உன்னத'த்தைத் தொடர்ந்து நடத்தும் எண்ணம் இல்லாவிட்டால், அந்த ஆயிரம் ரூபாய் அவனுக்கு வீண் தானே? விட்டுப் போகிறவன், அது வேறு செலவு ஏன் செய்ய வேண்டும்? தொடர்ந்து நடத்துவதானால், இது ஒரு நல்ல முதலீடு! இவ்வளவு நியாயமாக நடந்தானே என்று, அவளும் விசுவாசமாக இருப்பாள்.

"நீங்கள் சொன்னது கரெக்ட், அம்மா," என்றாள் அவள், குதூகலம் பெருக.

நளினியின் எதிர்பார்ப்பு நனவாக, விரைவிலேயே, புவனேந்திரன் திரும்பி வந்து விட்டான், ஒரே வாரத்தில்!

வந்து, தன் உடனடி வேலைகளை முடித்ததும், நளினியைக் கூப்பிட்டுப் பேசினான்.

"நீ சொன்னதை யோசித்துப் பார்த்தேன், நளினி. அதன்படி, நம் வளாகத்தின் விற்பனைப் பொருட்களை மாற்றிவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்," என்றான் அவன்.

முகம் மலர, "அப்படியானால், தொடர்ந்து நடத்தப் போகிறீர்கள்!" என்று மகிழ்ச்சியோடு கூறினாள் அவள்.

"வேறு வழி? இதை நடத்தாமல் விட்டு விட்டால், என் காதைப் பிடித்து முறுக்கி விரட்ட நீ கோவைக்கே வந்து விட மாட்டாயா? அந்தப் பயம்தான்."

முதலாளியின் காதைப் பிடித்து முறுக்குவதா?

"சா...ர்...!" என்றாள் அவள் திகைப்புடன்.



காக்கும் இமை நானுனக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 2:39 pm

அவன் நகைத்துவிட்டு, "அந்த அளவுக்குப் போக மாட்டாய்தான். ஆனால், நீ என்னிடம் வலியுறுத்தவில்லை என்று சொல்ல முடியாதுதானே?" என்று இலகுக் குரலில் கூறியவன் தொடர்ந்து, "நீ வாதாடியதில் ஒன்று சரிதான், நளினி. தொழிலில் வெற்றி பெற ஒரு வாய்ப்பு இருக்கும் போது, அதை முயன்று பார்க்காமல் விடுவது, தப்புதான். அத்தோடு, என் இயல்புக்கு, அது பொருத்தம் இல்லாதது கூட! அது எப்படியோ நேர்ந்தது. போகட்டும். இப்போது..." என்றவாறு அவள் முகத்தைப் பார்த்தவனின் பேச்சு ஒரு கணம் நின்றது.

"ஏன் அப்படி நேர்ந்தது என்று தெரியும் போலத் தோன்றுகிறது!" என்றான் ஒரு மாதிரிக் கண்டனக் குரலில்.

புவனேந்திரனின் எரிச்சலையும் நளினியால் புரிந்து கொள்ள முடிந்தது. யாருக்குத்தான் அவர்களது வாழ்க்கை பொது விஷயமாக அலசப்படுவது பிடிக்கும்?

"'உன்னதம்' வம்பு மடம் அல்ல, சார். ஆனால், ரகசியம் என்றும் எதுவும் இராது. அதிலும், முதலாளியின் விஷயத்தில் எல்லோருக்கும் ஆர்வம் இருப்பது இயல்புதானே!" என்றாள் அவள், சமாதானமாக.

"ஆனால், என்னைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும், பேசுவதற்கு?" என்றான் அவன் கடுமையான குரலில்!

ஆனால், உடனேயே முகம் மாறி, "சரி சரி, போகட்டும். உன்னை வரச் சொன்ன காரணத்தைப் பார்ப்போம்," என்றவன், மேஜை மீது இருந்த சில ஃபைல்களைக் காட்டிப் "பிரித்துப் பார்! அங்கே கோவையில் உள்ளவை, அகில இந்திய அளவில் உள்ளவை என்று சில நிறுவனங்களில் இருந்து, அவரவர்களின் மாதிரிகளை வரவழைத்தேன். துணிகள், ரெடிமேடுகள் எல்லாமே! முதலில் ஜவுளியில் தொடங்குவோம். பிறகு, எல்லாவற்றிலும் கொண்டு வருவோம். இவற்றுள், நம் வளாகத்துக்கு ஏற்றவை எதெது என்று தேர்ந்தெடுத்துக் கொடு. உடனேயே ஆர்டர் கொடுத்து விடலாம்," என்று அவளை அவசரப்படுத்தினான்.

உற்சாகத்துடன் ஃபைல்களின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவளின் கை நின்றுவிட, "நா...னா?" என்று தயக்கத்துடன் கேட்டாள் நளினி.

"நீயேதான்! குறைந்த பட்சமாகத் துணி விஷயம் நீதான் தெரிவு செய்ய வேண்டும். உனக்கு அதில் விஷய ஞானம் இருக்கிறது. கூடவே, ஆர்வமும் இருக்கிறது!" என்றான், புவனேந்திரன்.

அவளால் முடியும் தான். கூடவே ஆசையும் இருந்தது. ஆனால்...

சற்று யோசித்துவிட்டு, "அது முடியாதே சார்," என்றாள் நளினி.

"ஏன்? ஏன் முடியாது?"

"கடைக்குப் பொருள் வாங்குவது என் வேலை அல்ல, சார்!"

"உன்.. ஓ, அதிகப்படி வேலை என்று பார்க்கிறாயா? அதற்குத் தனியாக..."

"ஐயோ, அப்படியில்லை சார்," என்று அவன் பேச்சில் குறுக்கிட்டுச் சொன்னாள் அவள். தொடர்ந்து, "இங்கே கிட்டத்தட்ட கடைசியாக வேலைக்குச் சேர்ந்தவள் நான். பொருட்களைத் தேர்வு செய்து வாங்குவதை நிர்வாகிகளும், தலைமை விற்பனைப் பொறுப்பாளர்களும் செய்து வருகிறார்கள். இதில் என் தலையீட்டை அவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்!" என்று விளக்கினாள்.

"சொல்வது நான். செய்வது நீ. இதில் என்னிடம் ஊதியம் வாங்கிக் கொண்டு பணிபுரியும் அவர்கள் என்ன ஒத்துக் கொள்வதும் ஒத்துக் கொள்ளாததும்?" என்றான் அவன் சற்று அழுத்தமான குரலில்.

"அது சரி, சார். நீங்கள் முதலாளியாய்ச் சொல்லிவிட்டுக் கிளம்பி விடுவீர்கள். அப்புறம், நாள் பூராவும் இங்கே அவர்களோடு கூட இருந்து பணிபுரியப் போவது நான் அல்லவா? சும்மாவே, இது விஷயமாக என் மீது ஏற்கனவே கோபம் இருக்கிறது. இதைச் செய்தேன் என்றால், அப்புறம் பெரும் பிரச்சனையாகி விடும். வேண்டாம் சார்," என்றாள் அவள் கவலையுடன்.


"அப்படியே பார்த்தாலும், இந்த அறையில் வைத்து நீ தேர்ந்தெடுப்பது யாருக்குத் தெரியப் போகிறது?"

"இரண்டும் இரண்டும் நாலு சார். இங்கே நான் வந்து போனதும், நீங்கள் ஆர்டர் கொடுத்தால், தெரியாதா? இப்போதுதானே சார், பேசினோம். உங்கள் கதையை நீங்களோ, உங்கள் பாட்டியோ சொல்லியா எல்லோருக்கும் தெரிந்தது?"

"என் கதை. என்னைப் பற்றி யாருக்கு என்ன தெரியும்? என் கதை என்று எல்லோரும் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்?" என்று கசந்த குரலில், ஒரு கரகரப்புடன் கேட்டான் புவனேந்திரன்.

"நடந்ததைத்தான்! உங்கள் அம்மாவை மணந்ததற்காக, உங்கள் அப்பாவும் சேர்ந்து வீட்டை விட்டுப் போனது. உங்கள் பெற்றோர் இருவரும் விபத்தில்... விபத்தில் மறைந்தது. உங்கள் பாட்டி அழைத்த போது, நீங்கள் வர மறுத்தது. கடைசியாக மரணப் படுக்கையில், உங்களிடம் சொத்துக்களை ஒப்படைத்துவிட்டுப் பாட்டி போனது. இப்படி எல்லாமே, எல்லோருக்குமே தெரியும் சார்!"

"ஓ..." என்று சற்று நேரம் பேசாதிருந்தான் அவன்.

பிரச்சனையின் தீவிரத்தில், அவன் தன்னை மறந்து விட்டானோ என்று கூட நளினிக்குத் தோன்றியது. "சார்..." என்று மெல்ல அழைத்து, "உங்கள் விருப்பத்தைச் சொன்னால், வழக்கமாகச் செய்கிறவர்களே, உங்கள் சொல்படியே தேர்ந்தெடுக்கக் கூடும், சார்," என்றாள் அவள் மெதுவாக.

மேஜையிலிருந்து பார்வையை உயர்த்தி அவளைப் பார்த்தான் புவனேந்திரன்.

தலையை உலுக்கிக் கொண்டு, "இல்லை, அது சரிவராது. சொல்படி என்பது வேறு. விருப்பம் போல என்பது வேறு. அத்தோடு, நீ குறிப்பிட்டவர்கள் எல்லோருமே, குறைந்த பட்சமாக ஒரு தலைமுறை மூத்தவர்கள். இரண்டு தலைமுறை மூத்த பாட்டிக்கு ஏற்ப, ஒரு குறிப்பிட்ட கருத்தில், ஆண்டுக் கணக்கில் ஊறிப் போனவர்கள். அதைத் தாண்டி வந்து, அவர்கள் நம் வழியில் யோசிப்பது கடினம். மேலும் இந்த விஷயத்தில், எனக்கு உன் மீதுதான் நம்பிக்கை. இந்த அலுவலகம் இல்லை என்றால், வேறு எங்கேயேனும்... என் இடத்துக்கு உன்னை அழைத்துப் போவதும் பயன் இராது. அங்கே உள்ள பணியாட்களுக்கு, இங்கே தொடர்பு இருக்கிறது. காபி ஷாப் மாதிரி இடங்களில் உட்கார்ந்து, அரை மணி நேரத்தில் முடிக்கிற வேலையும், இது அல்ல. என்ன செய்வது என்று உனக்கு ஏதாவது தோன்றுகிறதா?" என்று கேட்டான் அவன்.

இந்தத் திட்டத்தை ஏற்றால், பல லட்சங்கள் முதலீடு போட வேண்டிய புவனேந்திரனுக்குத் தன் மீது இவ்வளவு நம்பிக்கை இருப்பது, நளினிக்குப் பெருமையாக இருந்தது. அத்தோடு, இங்கே வேலை செய்யத் தொடங்கியதில் இருந்து, அவள் வெகுவாக முயன்று, பயனில்லை என்று ஆற்றாமையோடு விட்ட ஒன்று நடக்கப் போகிறது என்கிற மகிழ்ச்சியும் நிறையவே இருந்தது.

இவ்வளவுக்கு வந்து, உப்புப் பெறாத சின்னக் காரணங்களால் கெட்டு விடக் கூடாதே.

எனவே அவசரமாக யோசித்து, "சார், உங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்றால், நீங்கள் எங்கள் வீட்டுக்கு வர முடியுமா? ரொம்பவும் முன்னாலேயே கட்டப்பட்ட ஃப்ளாட் என்பதால், வீட்டுக்கு முன்புறம் வராந்த விசாலமாக இருக்கும். அங்கேயே, பிரம்பு சோஃபா செட்டெல்லாம் போட்டிருப்போம். அங்கே, உட்கார்ந்து வேலை செய்யலாம். நானே, அங்கே அமர்ந்துதான், என் துணி வேலைகளைச் செய்வது. எங்கள் வீடு, கடைசி ஃப்ளாட் என்பதால், வேறு யாரும் போய் வந்து இடையூறாகவும் இருக்காது. என் அம்மா, அப்பா, தங்கைதான். தங்கை பிளஸ் டூ. அவள் பாடத்திலேயே மூழ்கிக் கிடப்பாள். அம்மா உதவியாகவே இருப்பார்கள்," என்று வேகமாகச் சொன்னாள் அவள்.

"அதாவது, வீட்டுக்கு வெளியிலேயே நிறுத்துகிறாய்," என்று சிரித்த போதும், "இது நல்ல யோசனையாகத் தெரிகிறது. எதற்கும் உன் தந்தை வீட்டில் இருக்கும் நேரம் சொல்லு. நான் வந்து, அவரிடம் நேரில் அனுமதி கேட்டு, அதன் பிறகு வேலையைத் தொடங்குவோம்," என்றான் புவனேந்திரன்.

அவ்வளவு பெரிய மனிதன், முதலாளி என்ற பந்தா காட்டாமல் பெற்றவரின் உரிமையை மதிக்கிறான் என்பதே, சுதர்சனத்துக்கு அவனிடம் ஓர் ஈடுபாட்டை ஏற்படுத்த, அவரும் சம்மதித்தார்.

இப்படித்தான் புவனேந்திரன் நளினியின் வீட்டுக்கு வந்தது.

அவன் வருமுன், அவனுடைய பாதுகாவலர்கள் வந்து, வீட்டைச் சுற்றிப் பார்த்தது, நளினி எதிர்பார்த்ததுதான் என்றாலும், அது பற்றித் தாயிடம் விளக்கம் சொல்லுகையில், அவளுக்குக் கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது.

ஆனால், அவன் இனிமையாகப் பேசித் தந்தையிடம் அனுமதி பெற்ற விதமும், தொடர்ந்து அவனோடு சேர்ந்து செய்த வேலையும், இடையிடையே கலகலப்பாக நடந்த பேச்சும் அவள் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கவே, இந்த எரிச்சல் மறந்து போயிற்று.

புவனேந்திரன் வாரா வாரம் சென்னைக்கு வர, வேலையும் வெகு முனைப்பாக நடக்க, நளினியும் அவனது வரவை மிகவும் ஆவலோடும் ஆனந்தத்தோடும் எதிர்பார்க்கலானாள்.

மூன்று வாரங்கள் இப்படிக் கழிய, நாலாவது வாரம், புவனேந்திரன் சென்னைக்கு வந்தபோது, மாலையில் அவனது வரவுக்காக அவள் வீட்டில் காத்திருக்கையில், வாயிலில் வந்து நின்ற சிறு காரிலிருந்து புதியவன் ஒருவன் இறங்கி வந்து, அவளிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தான்.

கடிதம் கொண்டு வரும் கோகுல், துணிகள் விஷயத்தில் வல்லுனன் என்றும், கடைக்கு வேண்டியவற்றைத் தேர்ந்தெடுப்பதில், தனக்கு அளித்த ஒத்துழைப்பை, நளினி கோகுலுக்கும் அளிப்பாள் என்று நம்புவதாகவும், அதில் புவனேந்திரன் எழுதியிருந்தான்.

புவனேந்திரன் தன் முகத்தில் ஓங்கி அறைந்தாற் போல உணர்ந்தாள் நளினி.



காக்கும் இமை நானுனக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 2:40 pm

ஏதோ ஒரு வகையில், புவனேந்திரன் தன்னை அவமதித்து விலக்கி விட்டாற்போல உணர்ந்து, நளினி தவிக்கக் காரணம் இருந்தது.

அவன் வந்த அந்த மூன்று வாரங்களில், முதல் வாரம் மட்டும்தான், அவன் வார நாட்களில் மட்டுமாக வந்தது. மற்ற இரு முறையும், வியாழன் அல்லது வெள்ளியன்று வந்து, ஞாயிறு முடியச் சென்னையிலேயே இருந்துவிட்டுப் போனான்.

வார நாட்களில், மதிய உணவு இடைவேளைகளில், வேலை செய்தனர். ஆனால், ஞாயிற்றுக் கிழமைகளில் காலை தொடங்கி, மாலை வரை வேலை நடந்தது.

சின்ன வயதாகத் தோன்றுகிறானே, மெய்யாகவே, வேலை தான் இவனது நோக்கமா என்று சற்றுக் கவலைப்பட்ட சகுந்தலா கூட, வேலை நடந்த வேகத்தைப் பார்த்து அதிசயித்துப் போனாள்.

இடையிடையே, காபி, குளிர் பானம் ஏதாவது கொணர்ந்து வைப்பாள். முறுக்கு, தட்டை என்று ஒரு சிற்றுண்டி அடுத்து வந்தது.

வெறும் நன்றி கூறி உண்டுவிட்டுப் போகாமல், புவனேந்திரன் சகுந்தலாவிடமும் அபிப்பிராயம் கேட்பான்.

கூடவே ஒரு பாராட்டும் இருக்கும்.

"'உப்பிட்டவரை உள்ளளவும் நினை!' என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இந்த மாதிரி ஒரு சிறு உப்புக்கல் கூட அதிகமோ, குறைவோ இல்லாமல், இப்படி ருசியாகச் செய்து தந்தால், இந்த உயிர் இன்னொரு பிறவி எடுக்கும் போது கூட, இந்தச் சுவையை மறக்காது, ஆன்ட்டி!" என்று அவன் கூறுகையில், சகுந்தலாவுக்கு உச்சி குளிர்ந்து போகும்.

"இப்போதெல்லாம் உப்புத் தூள் தான். உப்புக் கல்லே கிடையாது," என்று மடக்கிய போதும், அந்த 'உப்புக் கல்' என்ற வார்த்தையில் நளினியின் மனம் இதமாகக் குறுகுறுக்கும்.

உப்புக்கல் என்ற வார்த்தையை வேண்டும் என்றுதான், புவனன் சொன்னானா? சொல்லும்போது, லேசாக அவளைப் பார்த்தானா?

ஞாயிற்றுக் கிழமைகளில், சேர்ந்து சாப்பிட அழைத்த போது, மறுக்காமல் அவர்களோடு அமர்ந்து ரசித்து உண்டான். அடுத்த வேளைக்கு பீட்சா, சான்ட்விச் என்று எல்லோருக்குமாக வரவழைத்தான்.

"ஐயோ, நான் பிளஸ் டூ படிக்கிறேனாக்கும்! எனக்கெல்லாம் யாரிடமும் பேச நேரமே கிடையாது!" என்று புருவத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அலையும் மஞ்சரியைக் கூட, உட்கார்ந்து இரண்டு வார்த்தை பேச வைத்தான்.

மொத்தத்தில் முதுகை ஒடிக்கிற அளவுக்கு வேலையும் நடந்தது. கூடவே தன் வீட்டாரோடு அவன் இணைந்து பழகிய விதத்தில், நளினிக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

கடைசித் தடவை புவனேந்திரன் வந்த போது அந்த மகிழ்ச்சியை அவள் முகத்தில் அதிகமாகக் காட்டி விட்டாளோ?

காட்டி விட்டாளோ என்ன? காட்டத்தான் செய்தாள். ஒருவரின் வரவு சந்தோஷமாக இருக்கும் போது, அதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன?

அதிலும், அந்த நபர் அவள் வீட்டு விருந்தாளியாக வரும்போது?

அவள் சிரித்துக் கொண்டே, "லட்சம் நல்வரவு!" என்ற போது, புவனேந்திரன் பதிலுக்குச் சிரித்தபடிதான் உள்ளே வந்ததாக, அவள் அப்போது நினைத்தாள்.

ஆனால், சற்றுத் திகைத்து நின்று விட்டு, அதன் பின்னர் சமாளித்துச் சிரித்தானோ என்று இப்போது யோசித்துப் பார்க்கையில் அவளுக்குத் தோன்றியது.

ஏன்? ஒருவர் நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்பதில் கூடத் திகைப்பதற்கு என்ன இருக்கிறது? அவள் ஒன்றும் அவனுடைய விரோதி இல்லையே.

மனம் எரிமலையின் மடியாய்க் குழம்பிக் குமுறிய போதும், பெற்ற தாயிடம் கூட, அவளால் அதைக் காட்டிக் கொள்ள முடியவில்லை.

"புவனேந்திரன் சாருக்கு வேறு நிறைய வேலை இருக்கிறதாம்மா! அதனால், இந்த வேலையை இவரிடம் ஒப்படைத்து இருக்கிறாராம்," என்று அறிமுகம் வேறு செய்து வைக்க வேண்டியிருந்தது.

அவளை விட ஓரிரு ஆண்டுகளே மூத்தவனான கோகுல், உடைத் தயாரிப்புக் கலையில் பெரும் பட்டங்கள் வாங்கியிருந்தான். புவனேந்திரன் எழுதியிருந்த மாதிரி, வல்லுனனாகவும் இருந்தான்.

அத்தோடு, முன்னேறும் ஆர்வமும் இருந்ததால், அவனோடு வேலை செய்வது, நளினிக்குமே, அறிவுப் பூர்வமாக ஆக்கம் அளிப்பதாகத்தான் இருந்தது. சொல்லப் போனால், எந்தெந்தத் துணி வகைகளை எந்தெந்த மாதிரித் தைத்து அணிந்தால், தோற்றம் சிறப்பாக இருக்கும் என்பதெல்லாம், புவனேந்திரனை விடவும், கோகுல் அதிகமாகவே தெரிந்து வைத்திருந்தான்!

அவளை விடவுமே!

கோகுலோடு வேலை செய்யத் தொடங்கிச் சிறிது நேரத்திலேயே நளினி இதைப் புரிந்து கொண்டாள். எனவே, மெய்யாகவே, செய்யும் பணி சிறப்பாக இருக்க வேண்டும் எனும் ஒரே காரணத்துக்காகவே, புவனேந்திரன் இந்தக் கோகுலை அனுப்பியிருக்கிறான் என்று, நளினி தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள்.

ஆனால், இது பற்றி 'உன்னதம்' வளாகத்தில், புவனேந்திரன் தன்னை அழைத்துச் சொல்லுவான் என்று எதிர்பார்த்து மாலையில் வேலைக்குச் சென்றவள், ரொம்பவே ஏமாந்து போனாள்.

அவனாக அவளை அழையாதது மட்டுமின்றி, அவளாக முயன்ற போதும், புவனேந்திரனை அவளால் சந்திக்க முடியவில்லை.

மறுநாளும், அதற்கு மறுநாளும் என்று அந்த முறை அவன் அங்கிருந்த அத்தனை நாட்களும் இதுவே தொடரவும், புவனேந்திரன் தன்னை வேண்டும் என்றே ஒதுக்குகிறான் என்று அவளுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து போயிற்று.

ஏன் ஏன் என்று பல்லாயிரம் முறை யோசித்து மனதை புண்ணாக்கிக் கொண்டாளே தவிர, அந்த ஒதுக்கத்தின் காரணத்தை அவளால் ஊகிக்கவே முடியவில்லை.

போகிறான் என்று அலட்சியப்படுத்தவும் முடியாமல் மிகவும் வேதனையாக இருந்தது.

அவ்வளவு தூரம் சகஜமாக, குடும்பத்துடனேயே சேர்ந்து அமர்ந்து உண்டு, பேசிச் சிரித்துப் பழகிவிட்டு, இப்போது பெரிய முதலாளியாக, ஒரு கடைநிலைப் பணியாளைப் போலப் புவனேந்திரன் தன்னை நடத்துவதை அவளால் தாங்க முடியவில்லை.

ஆனால், அவளது வீட்டுக்குப் புவனேந்திரன் வந்து, 'ஆன்ட்டி, அங்கிள்!' என்று அவளுடைய பெற்றோருடன் ஓர் உறவினனைப் போலப் பழகியது எல்லாம், அவனது வேலை நன்கு நடக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவா?

அவனது இடத்துக்குத் தகுதியுள்ள இன்னோர் ஆள் கிடைத்ததும், அப்படியே ஒதுங்கிக் கொண்டு விடுவானா?

எப்படி முடியும்?

அவனும் சந்தோஷமாகத்தானே பேசிச் சிரித்தான்?

அந்த சந்தோஷத்துக்காக, அவளைப் போல, அவனது மனமும் ஏங்காதா?

ஆனால், அவனுக்கெல்லாம் மனம் ஒன்று இருந்தால் தானே, ஏங்குவதற்கு?

முதலாளி அல்லவா? கொஞ்சம் சிரித்துப் பேசுவதாகக் காட்டிக் கொண்டாலே, முழு மூச்சுடன் வேலை செய்வாள் என்று கணக்கிட்டிருக்கிறான்.

அவன் எதிர்பார்த்தது போலவே, இரவு தூக்கத்தில் கூட, வண்ணங்கள், வடிவமைப்புகள், துணி வகைகளைப் பற்றியே யோசித்து யோசித்து வடிவமைத்தது அவளது முட்டாள்தனமே தவிர, அதில் அவனைக் குற்றம் சொல்ல என்ன இருக்கிறது?

இந்தக் குமுறலின் ஊடே, நளினிக்குக் கோபமும் வந்தது.



காக்கும் இமை நானுனக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 2:41 pm

அவளது வீடு என்ன, 'உன்னத'த்தின் கிளையா? அல்லது, புவனேந்திரன் அதற்குத் தனியாக வாடகை கொடுக்கிறானா? என்ன உரிமையில், அவளது வீட்டில் இந்த வேலையைச் செய்வது?

வேறு இடம் சரியாக இல்லையே என்று, ஏதோ, அவளாகத்தான் ஓர் இளக்கத்தில் இந்த ஐடியா சொன்னாள். ஆனால், அதுதான் சாக்கு என்று, அதையே நிரந்தரமாக்கி விடுவதா?

அடுத்த முறை அவன் வரும்போது, இந்த விஷயம் பற்றிப் புவனேந்திரனிடம் காரசாரமாக இல்லாவிட்டாலும், கறாராகப் பேசிவிட வேண்டும் என்று நளினி முடிவெடுத்த போது, ஒரு நாள் காலையில், நளினி வேலைக்குக் கிளம்பு முன்பாக கூரியரில் அவளுக்கு ஒரு கடிதமும், அவளுடைய தந்தைக்கு ஒரு பெரிய பார்சலும் வந்தன.

இரண்டையுமே அனுப்பியது புவனேந்திரன் தான்.

பெரிய பார்சலை அவசரமாகப் பிரித்துப் பார்த்த சகுந்தலாவும், சுதர்சனமும் வியந்து நின்றனர்.

சென்னை 'பூம்புகா'ரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கைவினைப் பொருட்களில், ஒரு பெரிய சூரியச் சக்கரத்தைப் பார்த்து ஆசைப்பட்டு விலையைக் கேட்டுவிட்டு, மிரண்டு போய் ஓடியே வந்து விட்டதாக, ஒரு தரம் நகைச்சுவை ததும்ப, அவர்கள் இருவரும் புவனேந்திரனிடம் விவரித்திருந்தனர்.

அதே சூரியச் சக்கரம் தான் பார்சலுக்குள் இருந்தது. கூடவே ஒரு சிறு கடிதமும்.

'உன்னத'த்தின் சரித்திரத்தில் ஒரு முக்கிய மாறுதலைச் செய்யப் பல்வேறு உதவிகளை அன்போடு செய்ததற்காகத் தனது நன்றியை இந்தச் சிறு அடையாளத்தின் மூலமாகத் தெரிவித்துக் கொள்வதாகப் புவனேந்திரன் கடிதத்தில் எழுதியிருந்தான்.

அவர்கள் செய்த உதவிக்கு, நேரில் வந்து நன்றி தெரிவிப்பதுதான் முறையாகும். ஆனால், கடை வளாகத்தில் சில மாற்றங்கள் செய்வதால், வேலை மிகுதி. அதனால் நேரில் வர முடியவில்லை என்று, ஒரு காரணத்தையும், அந்தப் பெரிய தலைமுறை ஏற்கும் விதமாக அவன் பதவிசாகவே எழுதியிருந்தான்.

சகுந்தலாவுக்கு மனம் உருகிப் போயிற்று.

"அருமையான மனிதர். இப்படி ஒரு பாஸ் கிடைத்தது, உன் அதிருஷ்டம்," என்றார் தந்தையும்.

"உனக்கு என்ன எழுதியிருக்கிறார்? இதே போலவா?" என்று இருவரும் கேட்க, நளினி தனக்கு வந்த கடிதத்தை நீட்டினாள்.

அவளுக்கும் கடிதத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது. சில விவரங்களும்.

மாற்றம் குறித்து 'உன்னத'த்துடைய நிர்வாகிகளுக்கு அறிவித்து விட்டதாலும், அலுவலகத்திலேயே இந்தத் தேர்ந்தெடுக்கும் வேலைகளைச் செய்யத் தனியிடம் ஒன்று ஒதுக்கியிருப்பதாலும், கோகுலும், நளினியும் அங்கேயே சேர்ந்தமர்ந்து, இதே பணியை வெளிப்படையாகச் செய்யலாம் என்று தகவல் இருந்தது.

இந்த வேலை மாற்றம், நளினிக்கு ஒரு பதவி உயர்வாகக் கொடுக்கப்பட்டிருந்தது.

கூடவே, அதுவரையிலும் அவள் செய்த அதிகப்படி வேலைக்காக, ஒரு கணிசமான தொகைக்கான ஒரு காசோலையும்.

பதவி உயர்வு, பரிசு என்று பெற்றவர்கள் மகிழ்ச்சியில் பூரிக்க, எதையும் ஒத்துக் கொள்ளப் பிடிக்காமல், அதே சமயம் எதையும் வெளியே காட்டிக் கொள்ளவும் முடியாமல், நளினி உள்ளூரக் குமுறினாள்.

காட்டிக் கொள்வது இருக்கட்டும், அவளுக்கே, தான் என்ன விரும்புகிறோம் என்று தெளிவாகப் புரியாத நிலை.

பணம் கொடுத்து, ஒரு வல்லுனனின் உழைப்பை வாங்கக் கூடிய நிலையில் உள்ளவன், அவனது மற்ற வேலைகளுக்கு இடையில், இதையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டே இருப்பான் என்று எதிர்பார்க்க முடியாதுதான்.

ஆனால், புவனேந்திரன் இப்படித் திடுமென வெட்டிக் கொண்டது, அவளுக்குப் பிடிக்கவில்லை.

அத்தோடு, அவள் செய்த உதவிக்கு அவன் விலை போட்டுப் பணம் அனுப்பியது, என்னவோ, அவளை அவமானப்படுத்தி விட்டது போல, அவளுக்கு ஆத்திர மூட்டியது.

அவள் என்ன, பணத்துக்காகவா இந்த அதிகப்படி வேலையைச் செய்தாள்?

எண்ணப் போக்கில் தொடர்ந்து, 'பின்னே எதற்காகச் செய்தாள்' என்ற கேள்வி தோன்றவும், அவளுக்கே ஒன்றும் புரியாது போயிற்று.

அவனிடம் ஊதியம் வாங்கிக் கொண்டு பணிபுரிகிறவள், அவள் செய்த அதிகப்படி வேலை, பணம், பதவி உயர்வு, இதற்காகவெல்லாம் இல்லை என்றால் வேறு எதற்கு?

என்ன யோசித்தும் அவளுக்குப் புரியவில்லை.

இந்தக் குழப்ப நிலையிலேயே, மேலும் இரு மாதங்கள் கடந்து போயின.

இந்த அறுபது நாட்களுமே, புவனேந்திரனை அவள் பார்க்கவே இல்லை.

வளாகத்துக்கு அவன் நேரில் வந்ததாகவும் தெரியவில்லை.

ஆனால், அவன் நேரில் வராவிட்டாலும், 'உன்னத'த்தில் பல மாற்றங்கள் நிகழலாயின.

ஜவுளிப் பகுதியைப் போலவே, வளாகத்தின் எல்லாத் துறைகளிலுமே, இந்த மாற்றம் அமலாக்கம் செய்யப்பட்டது.

மதியம் கடையை மூடுவது நிறுத்தப்பட்டது.

இந்த மாற்றங்களைத் தாங்கிய விளம்பரங்கள், பெரிய பத்திரிகைகளில் வெளியாயின.

இந்த மாற்றங்கள் பிடிக்காதவர்களும், அதுபற்றி, உரக்கப் பேசப் பயப்பட்டார்கள். சின்னப் பயல் என்று எண்ணப்பட்டவன், எங்கேயோ இருந்து கொண்டு, இங்கே இப்படி ஆட்டி வைக்கிறானே, இவனது காதுகள் எங்கெங்கே இருக்கின்றனவோ என்று அஞ்சினார்கள்.

அதற்கேற்ப, புதிதாகப் பலர் வேலைக்குச் சேர்க்கப்பட்டார்கள்.

அவர்கள் அனைவருமே, புவனேந்திரனால், நேரடியாக வேலையில் அமர்த்தப்பட்டார்கள். கோகுலைப் போல!

பூவலிங்கத்தின் தலைமையில் மேலும் பலர் சேர்க்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்ததால், அது மிகவும் அவசியமாகவும் ஆயிற்று.

ஒரு காலத்தில் நளினி விரும்பிய விதமாகத்தான், வளாகக் கடைகள் 'ஜே ஜே' என்று நடந்தன. ஆனால், அதைப் பார்த்து மகிழ முடியாமல், அவளது மனதுதான் ஏனோ வெறுமையாக இருந்தது.

நாளுக்கு நாள் அந்த வெறுமை கூடிற்றே தவிர, ஒரு சிறிதும் குறைவதாக இல்லை.

எரிச்சலுற்றவளாய், அன்று இரண்டு மணி நேரம் விடுப்பு எடுத்துக் கொண்டு, நளினி 'உன்னத'த்தை விட்டுச் சீக்கிரமே கிளம்பி விட்டாள்.

ஆனால், வீட்டை நெருங்குகையில் அதுவும் பிடிக்கவில்லை.

ஏன் சீக்கிரம் வந்தாய்? உடம்புக்கு என்ன? குளிரா? காய்ச்சலா? என்ன என்று அன்னை ஆயிரம் கேள்விகளால், அவளைத் திணறடித்து விடுவாள்.

வீடு போகிற வழியில், சற்று நேரம் கடைகளில் சுற்றி விட்டு, மெல்ல வீட்டுக்கு நடந்து சென்றாள்.

வீடு இருக்கும் தெருவுக்குள் புகும்போது, அவளது வீட்டுப் பகுதியில் இருந்து, ஒரு பெரிய நீளக் கார், தெருவின் மறுமுனையில் வளைந்து திரும்பியது.

இது புவனேந்திரனின் கார் போலத் தெரிகிறதே, வீட்டுக்கு வந்திருப்பானோ? அவன் வருகிற நேரம் அவள் வீட்டில் இல்லாமல் போய் விட்டாளே!

பரபரப்போடு, ஓட்டமும் நடையுமாக, அவள் வீட்டுக்கு விரைந்தாள். அங்கே அவளுக்கு மேலாகப் படபடப்புடன், அவளுடைய தாயார் இருந்தாள்.

தந்தையும் கூட!

மகளைப் பார்த்ததும், சற்றே அதிர்ந்தாற் போல, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.



காக்கும் இமை நானுனக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக