புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Poll_c10ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Poll_m10ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Poll_c10 
69 Posts - 58%
heezulia
ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Poll_c10ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Poll_m10ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Poll_c10 
41 Posts - 34%
mohamed nizamudeen
ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Poll_c10ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Poll_m10ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Poll_c10ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Poll_m10ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Poll_c10ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Poll_m10ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Poll_c10 
111 Posts - 59%
heezulia
ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Poll_c10ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Poll_m10ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Poll_c10 
62 Posts - 33%
mohamed nizamudeen
ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Poll_c10ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Poll_m10ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Poll_c10ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Poll_m10ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Thu May 19, 2011 11:11 am



Viruvirupu, Wednesday 18 May 2011, 15:12 GMT


புதுடில்லி, இந்தியா: “வெண்ணை திரண்டுவரும்போது தாழி உடைந்தது” என்று இந்தியாவில்தான் சொல்லுவார்கள். இப்போது தாழியை உடைத்திருக்கிறது இந்திய அரசு!

“இந்தியாவினால் தேடப்படும் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் பாதுகாப்பாக இருக்கிறார்கள்” என்று இந்தியா நீண்டகாலமாகவே கூறிவருகிறது (அது உண்மைதான்). ஆனால், இந்தியாவின் இந்த நேரடிக் குற்றச்சாட்டுக்கு வேறெந்த நாடும் ‘ஆமாம்’ போட்டதில்லை.

காரணம், குற்றச்சாட்டு நேரடியாக மற்றொரு நாட்டின்மீது இருப்பதால், அதை ஒப்புக் கொள்வது நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் சிக்கல்களை ஏற்படுத்தும். ராஜதந்திர உறவுகள் அறுந்தும் போகலாம்.

இப்படி நீண்ட காலமாக இந்தக் குற்றச்சாட்டில் ‘தனித் தவில்’ அடித்துக்கொண்டிருந்த இந்தியாவுக்கு, சமீபத்தில் வெள்ளிதிசை அடித்தது. குட்டி நாடுகள்கூட ஒப்புக்கொள்ள முன்வந்திராத இந்தியாவின் குற்றச்சாட்டை, உலக வல்லரசான அமெரிக்கா, தானாகவே முன்வந்து ஒப்புக்கொண்டது!

அமெரிக்கா ஒப்புக்கொண்டதன் காரணம், இந்தியா மீதான அக்கறை அல்ல. அவர்களுக்கும் பாகிஸ்தானிய உளவுத்துறைக்கும் சமீபத்தில் ஏற்பட்ட உரசல் காரணமாகத்தான் ஒப்புக்கொண்டது.

பின்லேடனை பாகிஸ்தானுக்குள் வைத்துக் கொன்றபோது, பாகிஸ்தானிய உளவுத்துறையை சி.ஐ.ஏ. இருளில் வைத்திருந்ததுதான் உரசலுக்குக் காரணம்.

அதையடுத்து, “இந்தியாவில் வெடிகுண்டுத் தாக்குதலைத் திட்டமிட்ட ஆட்கள் பாகிஸ்தானுக்குள் பத்திரமாக வசிப்பது எங்களுக்குத் தெரியும். அவர்களுக்கு பாகிஸ்தானின் உளவுத்துறை சகல வசதிகளையும் செய்து கொடுத்திருப்பதும் எங்களுக்குத் தெரியும்” என்று ‘பாகிஸ்தானிய ரகசியத்தை’ போட்டுடைத்தது அமெரிக்கா.

அமெரிக்காவின் நோக்கம், பாகிஸ்தானிய உளவுத்துறையை சங்கடத்தில் மாட்டிவிடுவது மாத்திரமே!

ஆனால் அமெரிக்காவின் இந்த அதிரடி, இந்தியாவுக்கு அருமையான பாதை ஒன்றைத் திறந்துவிட்டது. தங்களது பழைய குற்றச்சாட்டை, அமெரிக்காவின் கூற்றை வைத்தே நிரூபித்துவிடக்கூடிய அருமையான பாதை!

இந்தப் பாதையைச் சரியாகப் பின்பற்றினால், தனது பக்கத்து வீட்டு எதிரியை, ராஜதந்திர ரீதியில் சுலபமாக மடக்கி விடலாம் என்பது இந்தியாவுக்குத் தெரியும். உடனே அதற்கான வேலைகளில் சுறுசுறுப்பாக இயங்கியது.

தம்மால் தேடப்படும் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருப்பது பற்றித் தம்மிடமுள்ள தகவல்களில், வெளியிடக்கூடியவற்றை இப்போது வெளிநாடுகளுக்குக் காட்டத் தொடங்கியிருக்கிறது. இவை வெறும் குற்றச்சாட்டுகள் மாத்திரமல்ல… எம்மிடம் ஆதாரங்களும் இருக்கின்றன என்று காட்டும் முயற்சி அது.

உண்மையில் இந்தியாவின் இந்த முயற்சி, பின்லேடன் கொல்லப்படுவதற்கு முன்பிருந்தே நடைபெற்று வருகின்றது.

ஏற்கனவே இந்த விஷயத்தில் இந்திய உட்துறை சுறுசுறுப்புடன் இயங்கி, தீவிரவாதிகள் பற்றிய விபரங்களைத் தொகுத்திருந்தது.தொகுக்கப்பட்ட விபரங்களை வைத்து, தம்மால் தேடப்படும் தீவிரவாதிகளின் பெயர்களடங்கிய ஒரு பட்டியலையும் தயாரித்திருந்தது.

ஆனால், அந்தப் பட்டியலை வைத்துக்கொண்டு, பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச அளவில் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. காரணம் இந்தியாவின் குற்றச்சாட்டை வேறெந்த நாடும் ஒப்புக் கொண்டிருக்கவில்லை.

இப்போது திடீரென லாட்டரி அடித்தாற்போல அமெரிக்கா ஒப்புக் கொண்டவுடன், இந்தப் பட்டியலுக்கு கியாதி ஏற்பட்டது. பட்டியல் இந்திய வெளிவிவகார அமைச்சிடம் கொடுக்கப்பட்டது.

இந்திய வெளிவிவகார அமைச்சு, உட்துறையால் வழங்கப்பட்ட பட்டியலை வைத்து வெளிநாட்டு அரசுகளிடையே பாகிஸ்தானுக்கு எதிரான ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியது.

“இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருப்பதாக அமெரிக்காவே சொல்லிவிட்டது. இதோ பட்டிலைப் பாருங்கள். இந்த ஆதாரங்களைப் பாருங்கள்” என்று தமது கையிலிருந்த பட்டியலுடன் வெளிநாடுகளை அணுகியது வெளிவிவகார அமைச்சு. இந்த அணுகுமுறைக்கு குறுகிய காலத்தில் நல்ல பலனும் கிடைக்கத் தொடங்கியிருந்தது.

சுருக்கமாகச் சொன்னால், தாழியில் வெண்ணை அட்டகாசமாகத் திரளத் தொடங்கியது.

இந்த இடத்தில்தான் வருகிறது ஆன்டி கிளைமாக்ஸ்!

இந்திய உட்துறை தயாரித்திருந்த பட்டியல் இருக்கிறதல்லவா? அதில் 50 நபர்களின் பெயர்கள் உள்ளன. உட்துறை அமைச்சின் குறிப்பின்படி இந்த 50 பேரும் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகள். இவர்கள் அனைவரும் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இவர்கள் அனைவருக்கும் பாகிஸ்தான் தஞ்சம் கொடுத்திருக்கிறது.

50 பேரடங்கிய பட்டியலில், 41-வது பெயராக வஸூல் கான் என்ற பெயர் உள்ளது.

இந்தியாவின் துரதிஷ்டம், இந்தப் பட்டியல் பகிரங்கப்படுத்தப்பட்டது. பட்டியலைப் பார்த்துத் திகைத்துப் போனார் ஒருவர். அவர்வேறு யாருமல்ல, சாட்சாத் வஸூல் கான்தான்!

திகைப்புக்குக் காரணம் என்ன?

பாகிஸ்தானிய உளவுத்துறையின் அரவணைப்பில், கராச்சியில் வசிப்பதாக இந்திய உட்துறை அமைச்சு குறிப்பிடும் இந்த வஸூல் கான் வசிப்பது, இந்தியாவுக்குள்தான்!

அதுவும் தலைமறைவு வாழ்க்கையல்ல! இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில், தாணே என்ற இடத்தில் தொழில் செய்து வாழ்ந்து வருகிறார்.

தீவிரவாதி என்ற சந்தேகத்தில் இவர் ஒருமுறை கைது செய்யப்பட்டது உண்மை. கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்ட இவர், இரு மாதங்கள் மட்டுமே சிறையில் இருந்த நிலையில், கடந்த ஜூலையில் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பின் தாணேயில் தானும் தன் பாடுமாக வாழ்ந்து வருகிறார்.

இந்த விஷயத்தை ஊடகங்கள் பெரிதுபடுத்தவே, பாரதீய ஜனதா உட்பட எதிர்க்கட்சிகள் பல கெட்டியாகப் பிடித்துக் கொண்டன. சங்கடத்தில் மாட்டிக்கொண்டது இந்திய உட்துறை அமைச்சு.

மறுக்கவோ, மழுப்பவோ முடியாத அளவில் விஷயம் பகிரங்கமாகிவிட்டது.

இப்போது இந்திய உட்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இது தமது அமைச்சின் தவறுதான் என்பதைப் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதையடுத்து, பாகிஸ்தானிடம் தஞ்சமடைந்திருப்பதாகக் கூறப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து வஸூல் கான் இன்று நீக்கப்பட்டார்.

உட்துறை அமைச்சின் பிரச்சினை அத்துடன் முடிந்துவிட்டது. ஆனால், சுறுசுறுப்பாகச் செயற்பட்டு, வெளிநாட்டு அரசுகளிடம் இதே பட்டியலைக் கொடுத்து கான்வஸ் செய்துகொண்டிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சுக்குத்தான், இப்போது தாழி உடைந்து விட்டது.

தாம் ஏற்கனவே பட்டியலைக் கொடுத்துவிட்ட அரசுகளிடம் மீண்டும் போய் நிற்கிறது வெளிவிவகார அமைச்சு. “ஐயா… நாங்கள் கொடுத்த பட்டியலில் உள்ள 41வது பெயரை அடித்து விடுங்கள். பிளீஸ்”

இந்தியாவுக்கு, பாகிஸ்தான் மீதான தனது குற்றச்சாட்டுக்கு, அமெரிக்காவின் புண்ணியத்தில் ஒரு பாதை திறந்தது. ஆனால், இந்தச் சம்பவத்தின் பின், இந்திய அரசு காட்டும் ஆதாரங்களில் எந்தளவு நம்பகத்தன்மை இருக்கிறதோ என்று வெளிநாடுகள் சந்தேகம் கொள்ளப் போகின்றன!

பேசாமல் வஸூல் கானை பாக் பண்ணி, பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்கலாமே!
நன்றி விறுவிறுப்பு.com

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu May 19, 2011 11:28 am

காங்கிரஸ் கட்சியின் நிர்வாக சீர்கேடு இதில் இருந்து தெளிவாக புரிகிறது
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 19, 2011 11:50 am

இவனுங்க எதைதான் ஒழுங்கா செய்து இருக்கானுங்க.இவனுங்க வேலைய ஒழுங்கா இவனுங்க செய்து இருந்தா நம்ம நாடு இந்நேரம் ஒரு நல்ல நிலைக்கு வந்து இருக்கும்



ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Uஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Dஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Aஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Yஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Aஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Sஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Uஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Dஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  Hஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 19, 2011 12:56 pm

அட ராமா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆச்சரியம்! இந்திய அரசின் ‘பயங்கரவாதி’ இந்தியாவில்தான் வசிக்கிறார்!!  47
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 19, 2011 1:03 pm

வெண்ணைகள் எல்லாம் அரசான்டால் இப்படித்தான் தாழி உடைந்துபோகும் புன்னகை

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu May 19, 2011 3:49 pm

இந்த அரசின் போக்கு எவ்வாறு உள்ளது என்று பாருங்கள்.

காங்கிரஸ் - சோனியாவின் தலைமையில் இந்தியாவின் வளங்களை கொள்ளை அடிபதோடு மட்டுமில்லாமல், இந்தியாவின் பெயரை முழுமையை நாசம் செய்கிறது.

பொதுஜனம் நாம் என்ன செய்ய முடியும் என்று!!!

தமிழ்நாட்டில் நாம் தி.மு.க விற்கு விடை குடூத்ததூ போல் காங்கிரஸ் விரைவில் வெளியேற்ற படவேண்டும்.

ஆனால் எப்படி நடக்கும் தி.மு.க குள்ள நரி கூட்டம் இருக்கும் வரை!!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக