புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Today at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழுத்துக்கு கத்தி: கடன் வாங்குவோர் உஷார்... Poll_c10கழுத்துக்கு கத்தி: கடன் வாங்குவோர் உஷார்... Poll_m10கழுத்துக்கு கத்தி: கடன் வாங்குவோர் உஷார்... Poll_c10 
32 Posts - 51%
heezulia
கழுத்துக்கு கத்தி: கடன் வாங்குவோர் உஷார்... Poll_c10கழுத்துக்கு கத்தி: கடன் வாங்குவோர் உஷார்... Poll_m10கழுத்துக்கு கத்தி: கடன் வாங்குவோர் உஷார்... Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
கழுத்துக்கு கத்தி: கடன் வாங்குவோர் உஷார்... Poll_c10கழுத்துக்கு கத்தி: கடன் வாங்குவோர் உஷார்... Poll_m10கழுத்துக்கு கத்தி: கடன் வாங்குவோர் உஷார்... Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழுத்துக்கு கத்தி: கடன் வாங்குவோர் உஷார்... Poll_c10கழுத்துக்கு கத்தி: கடன் வாங்குவோர் உஷார்... Poll_m10கழுத்துக்கு கத்தி: கடன் வாங்குவோர் உஷார்... Poll_c10 
74 Posts - 57%
heezulia
கழுத்துக்கு கத்தி: கடன் வாங்குவோர் உஷார்... Poll_c10கழுத்துக்கு கத்தி: கடன் வாங்குவோர் உஷார்... Poll_m10கழுத்துக்கு கத்தி: கடன் வாங்குவோர் உஷார்... Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
கழுத்துக்கு கத்தி: கடன் வாங்குவோர் உஷார்... Poll_c10கழுத்துக்கு கத்தி: கடன் வாங்குவோர் உஷார்... Poll_m10கழுத்துக்கு கத்தி: கடன் வாங்குவோர் உஷார்... Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
கழுத்துக்கு கத்தி: கடன் வாங்குவோர் உஷார்... Poll_c10கழுத்துக்கு கத்தி: கடன் வாங்குவோர் உஷார்... Poll_m10கழுத்துக்கு கத்தி: கடன் வாங்குவோர் உஷார்... Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழுத்துக்கு கத்தி: கடன் வாங்குவோர் உஷார்...


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 05, 2011 12:47 pm

"நாள் வட்டி, வார வட்டி, மாத வட்டி, மீட்டர் வட்டி, கந்து வட்டி என,
கோவையில் பார்த்தீனிய செடிகளைப் போன்று செழித்து வளர்ந்து கொண்டிருக்கிறது
வட்டித்தொழில். இவ்வகை பைனான்சியர்களால் நேரிடப்போகும் ஆபத்து குறித்த
விழிப்புணர்வு அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட வேண்டும்; இல்லாவிடில்,
கழுத்துக்கு கத்தி வந்துவிடும்' என, எச்சரித்துள்ளது போலீஸ்.
மேற்கண்ட வட்டித் தொழில் செய்யும் பைனான்சியர்களில் பெரும்பாலானோர்
சேலம், நாமக்கல், தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
கோவை லாட்ஜ்களில் அறை எடுத்து தங்கி லட்சம் முதல் கோடி ரூபாய் வரை முதலீடு
செய்து வட்டித்தொழிலில் ஈடுபட்டிருக்கும் இவர்களுக்கு, கூலிப்படை தொடர்பும்
உண்டு. கடன் வாங்கிய நபர்கள் திருப்பிச் செலுத்த தவறினால் வீட்டுக்குச்
சென்று மிரட்டி வாகனம், பொருட்களை அபகரித்துச் சென்றுவிடுகின்றனர்
கூலிப்படையினர். பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளிப்பதில்லை.
காரணம், பைனான்சியர்கள் கடன் வழங்கும்போது வாங்கி வைத்துள்ள வெற்று
காசோலைகள். கடனாளி போலீசில் புகார் அளித்தால், வெற்றுக் காசோலைகளில் பல
மடங்கு தொகையை நிரப்பி வங்கியில் செலுத்தி விடுகின்றனர். "கணக்கில்
பணமில்லை' என வங்கியில் இருந்து எழுத்து மூலமான பதில் வந்ததும் செக்மோசடி
வழக்கில் கடனாளியை சிக்க வைக்க கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அலைக்கழித்து
விடுவர். இதனால், பைனான்சியர்களுடன் மோத யாரும் முயற்சிப்பதில்லை. இதையே
தங்களது பலமாக கொண்டு பைனான்சியர்கள் கொள்ளை வட்டி வசூலிக்கின்றனர்.
நாள் வட்டி: இந்த முறையிலான வட்டி சிறு வியாபாரிகள் மத்தியில்
பிரபலம். காலையில் பைனான்சியரிடம் 1,000 ரூபாய் கடன் கோரும் வியாபாரிக்கு
900 மட்டும் வழங்கப்படும் (ஆயிரம் ரூபாய்க்கு ஒரு நாள் வட்டி ரூ.100. இந்த
தொகையை முன் கூட்டியே பைனான்சியர் பிடித்தம் செய்து கொண்டு கடன் தருவார்).
கடன் பெற்ற நபர் காய்கறி, பழங்களை மார்க்கெட்டில் மொத்த விலைக்கு வாங்கி
தள்ளுவண்டியில் மாலை வரை வியாபாரம் செய்வதன் மூலம் முதலீட்டுடன் சேர்த்து
1,500 ரூபாய் வரை ஈட்டுவார். அதில் 1,000 ரூபாயை பைனான்சியருக்கான கடன்
தொகையாக அடைத்துவிட்டு 500 ரூபாயை லாபமாக கருதுவார். இவ்வகை வட்டித்தொழில்
பெரும்பாலும் கடை வீதி, காய்கறி, பழ மார்க்கெட் பகுதிகளில் அதிகம்
நடக்கிறது.
வார வட்டி: கோவை நகர் மற்றும் கிராம பகுதிகளில் "மைக்ரோ
பைனான்ஸ்' என்ற பெயரில் வார வட்டிக்கு கடன் வழங்கும் பைனான்ஸ் ஏஜன்ட்கள்
அதிகரித்துள்ளனர். இவர்கள் கைவினைஞர்கள், மகளிர் குழுவினர், டெய்லர்கள்,
பெட்டிக் கடைக் காரர், துணி வியாபாரம் செய்வோர் என சிறிய அளவிலான தொழில்
செய்வோருக்கு இரண்டாயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை கடன் தருகின்றனர்.
கடன் தொகையில் 15 சதவீதத்தை முன் கூட்டியே பிடித்தம் செய்து கொள்ளும்
ஏஜன்ட்கள், மீத தொகையை மட்டுமே வழங்குவர். கடன் பெற்றவர், 10 வாரங்களில்
நிலுவையின்றி வாரம் ஒரு முறை தொகையை செலுத்திவிட வேண்டும். இவ்வாறு கடன்
வழங்கும் ஏஜன்ட்கள், தொடர்ச்சியாக பல ஆண்டுகள் தங்களுடன் தொடர்பு
வைத்திருக்கும் நபர்களுக்கு மிகவும் அதிகப்படியான கடன் தொகையை வழங்கி
விடுகின்றனர். முன்னர் வாங்கிய கடனை அடைக்கும் முன்பே, மீண்டும் கடன்
கொடுத்து அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கிவிடுகின்றனர். கடன் தொகையை
திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படும் போது, தற்கொலைகளும்
நிகழ்ந்துவிடுகின்றன.
மாத வட்டி: இவ்வகை கடன், வர்த்தகர் மற்றும் தொழில் அதிபர்களுக்கு
நாமக்கல், திருச்செங்கோடு, தேனி, கம்பம் பகுதி பைனான்சியர்களால்
வழங்கப்படுகிறது. கடன் கோரும் நபரின் வீடு, நிலம், தொழில் நிறுவனம்
தொடர்பான சொத்துப் பத்திரங்களை பிணை ஆவணமாக பெறும் பைனான்சியர்கள்
கோடிக்கணக்கில் கடன் வழங்குகின்றனர். ஒப்பந்த ஆவணத்தில் கூறியபடி மாதம்
தவறாமல் வட்டி செலுத்துவதுடன், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மொத்த கடன்
தொகையையும் அடைத்துவிட வேண்டும். தவறும் பட்சத்தில் சொத்துக்களை இழக்க
வேண்டிவரும்.
மீட்டர் வட்டி: நடுத்தர பொருளாதார வசதி கொண்ட ஒர்க்ஷாப்
உரிமையாளர்கள், வியாபாரிகள், சிறிய அளவில் ஓட்டல், பேக்கரி நடத்துவோரில்
பலரும் மீட்டர் வட்டிக்காரர்களிடம் சிக்கியுள்ளனர். லட்சம் ரூபாய் கடன்
கோரும் நபருக்கு 85,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படும் (ஆனால், லட்சம் ரூபாய்
கடன் பெற்றதாக கணக்கு). கடன் பெற்றவர் வாரம் 10 ஆயிரம் ரூபாய் வீதம் 10
வாரம் செலுத்த வேண்டும். தவறினால், வட்டிக்கு வட்டி போட்டு
வசூலிக்கின்றனர். மாதக்கணக்கில் தவணையை திரும்பச் செலுத்தாவிடில் வாங்கிய
கடன்தொகை பல மடங்கு பெருகி விடும். இதேபோன்று, கந்து வட்டி பைனான்ஸ்
முறையும் கோவையில் தலை விரித்தாடுகிறது. வித விதமான வட்டி வசூலிக்கும்
பைனான்சியர்களில் பெரும்பாலானோர் நிறுவன பதிவு சட்டத்தின் கீழ், தங்களது
தொழிலை பதிவு செய்யாதவர்கள். இதனால், வட்டிக்கு பணம் பெற்று
பாதிக்கப்பட்டோரும், பைனான்ஸ் கும்பலிடம் பிணையாக வைத்த சொத்துக்களை
இழந்தோரும் போலீசில் புகார் அளித்தாலும், சட்ட ரீதியான நிவாரணம்
கிடைப்பதில்லை. இதுவே, வட்டித்தொழில் செய்வோருக்கு பெரும் பலமாகிவிட்டது.
இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவை நகரில்
கடந்த 2010, ஜனவரி முதல் டிசம்பர் வரை மொத்தம் 2,283 புகார் மனுக்கள்
போலீஸ் கமிஷனரிடம் நேரடியாக அளிக்கப்பட்டன. அதில், 584 மனுக்கள் மோசடி
மற்றும் பைனான்ஸ் பிரச்னைகள் தொடர்பானவை. கந்துவட்டியால் பாதிக்கப்பட்டதாக
17 பேர் புகார் அளித்திருந்தனர். அனைத்து மனுக்கள் மீதும் சட்ட ரீதியான
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவையில் கல்வி, தொழில், வர்த்தக
வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் வெளிமாவட்டம், வெளிமாநிலங்களைச்
சேர்ந்தவர்கள் அதிகளவில் வந்து பிழைப்பு நடத்துகின்றனர். இவர்களில்
பெரும்பாலானோர், தொழில் முதலீட்டுக்காக பைனான்சியர்களின் உதவியை
நாடுகின்றனர். அவசரச் சூழ்நிலையில் கடன் பெறுவோர் ஒவ்வொருவரும் எப்படியும்
திரும்பச் செலுத்திவிடலாம் என்றே நம்பிக்கை கொள்கின்றனர். தொழில் நசிவு
ஏற்படும் போது கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் ஊரை விட்டே
ஓடிவிடுகின்றனர் அல்லது வாழ்க்கை வெறுத்து தற்கொலை செய்து கொள்ள
துணிகின்றனர். கோவையில் ஆண்டுதோறும் நடக்கும் தற்கொலை சம்பவங்களில் 10
சதவீதம் பணப்பிரச்னைகளால் நிகழ்கின்றன. தகுதிக்கு மீறி அதிக வட்டிக்கு கடன்
பெறுவது ஆபத்தானது என்ற விழிப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே தப்பிக்க
முடியும்.
கோவை நகரில் இதற்குமுன் குறிப்பிட்ட லாட்ஜ்களில் வெளியூர் பைனான்ஸ்
கும்பல் முகாமிட்டு, அதிக வட்டிக்கு கடன் கொடுத்து வந்தது. இதை பயன்படுத்தி
மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்களும், தொழிலதிபர்களுக்கு கடன் தருவதாக கூறி
பணம் பறித்து வந்தனர். தொடர்ச்சியாக லாட்ஜ்களை சோதனையிட்டதன் விளைவாக
தற்போது வட்டித் தொழில் செய்யும் வெளிமாவட்டத்தினர் தலைமறைவாகிவிட்டனர்.
தொழிலதிபர்கள், வியாபாரிகள் தொழில் அபிவிருத்திக்காக தேசிய மயமாக்கப்பட்ட
வங்கிகளிலோ அல்லது ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிதி
நிறுவனங்களிலோ கடன் பெறலாம். மற்றபடி, பதிவு செய்யப்படாத பைனான்ஸ்
கும்பலிடம் கடன் பெற்றால் கழுத்துக்கு கத்தி வந்துவிடும் என்பது மட்டும்
உறுதி. இவ்வாறு, போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 05, 2011 12:51 pm

ரொம்ப அதிர்ச்சியாக இருக்கு இந்த செய்தி சோகம் எப்படி எல்லாம் சம்பாதிக்கிறங்க பா ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu May 05, 2011 4:24 pm

நல்ல தொழில் தானே நானும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக