புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Poll_c10குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Poll_m10குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Poll_c10 
21 Posts - 66%
heezulia
குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Poll_c10குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Poll_m10குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Poll_c10குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Poll_m10குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Poll_c10 
63 Posts - 64%
heezulia
குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Poll_c10குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Poll_m10குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Poll_c10குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Poll_m10குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Poll_c10குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Poll_m10குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 30, 2011 9:16 pm

குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Bd69c110

அகத்திய முனிவரின் கமண்டலத்திலிருந்து பிரவாகமாக பெருக்கெடுத்து வரும் காவிரி அன்னையின் மடியில், திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது இத்திருத்தலம்.

குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருப்பதி ஏழுமலையானிடம் நீங்கள் வேண்டிக்கொண்டது நிறைவேறி விட்டது. ஆனால் அந்த வேண்டுதலை நிறைவேற்ற உடனே திருப்பதி செல்ல முடியாத சூழ்நிலை. ஐயோ, தெய்வகுற்றம் ஆகிவிடுமே என்று கவலைப்படாதீர்கள்.

வேண்டியதை வேண்டியவாறு கொடுக்கும் வள்ளல் வேங்கடாஜலபதிக்கு செலுத்த வேண்டிய நேர்த்திக் கடனை செலுத்த உங்களுக்கு அருகாமையிலேயே ஒரு புண்ணியஸ் தலம் உள்ளது. என்ன, ஆச்சிரியமாக இருக்கிறதா. நம் குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில்தான் அது.

ஸ்ரீதால்பிய முனிவரின் அன்பைப் பெற்ற, அருந்தவ குணம் கொண்ட சீடர் குணசீல மகரிஷி, ஒரு சமயம் ஏழுமலைக்கு சென்ற குணசீலர் வேண்டியவருக்கு வேண்டு வதை அருளும் வேங்கட முடையான் ஸ்ரீவெங்கடாஜலபதியை தரிசனம் செய்தார். வெங்கடாஜலபதியின் அருளில் மூழ்கிப்போன குணசீல மகரிஷி, அவரை விட்டு அகல முடியாது.

பிரிந்து வாழ முடியாது என்று எண்ணினார். தன் உள்ளக்கிடக்கையை எம்பெருமானிடம் கோரிக்கையாக கொட்டித்தீர்த்தார். தன் ஆசிரமத்துக்கு எழுந்தருளி, என்றென்றும் தனக்கும், மக்களுக்கும் அருள்பாலிக்க வேண்டும் என்று வரம் வேண்டினார்.

பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் பரமாத்மா, தாம் திருவேங்கடமலையில் அர்ச்சாவதாரமாக இருந்து குபேரனிடம்தான் வாங்கிய திருமண கடனை அடைத்துக் கொண்டிருப்பதாகவும், கடன் தீரும் வரை தாம் அங்கிருந்து வர முடியாது என்றும் கூறினார்.

மேலும் குணசீலர் காவிரிக்கரையில் ஆசிரமம் அமைத்து தவம் புரிய வேண்டும் என்றும், வைகுண்டத்திலிருந்து ஸ்ரீவாசுதேவன்-ஸ்ரீலட்சுமியுடன் பிரசன்ன வெங்கடேசனாக தாம் அங்கு எழுந்தருளுவதாகவும் திருவாய் மலர்ந்தருளினார். அதன்படி குணசீல மகரிஷியும் காவிரி வடகரையில் ஆசிரமம் நிறுவி பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் எழுந்தருள கடும் தவம் புரிந்தார்.

அவரின் தவத்தை மெச்சி வெங்கடாஜலபதி பெருமாளும் கிருதயுகம், புரட்டாசி மாதம், சனிக்கிழமை, சிரவண நட்சத்திரம் கூடிய சுபதினத்தில், தனுர் லக்னத்தில், சந்திரனுடன் குரு சேர்ந்திருக்கும் வேளையில் எம்பெருமான் திவ்ய மங்கள சொரூபராக பிரசன்னம் ஆகி குடி கொண்டார்.

இவ்வாறு எழுந்தருளிய பிரசன்ன வெங்கடாஜலபதியை குணசீல மகரிஷி 3 யுகங்கள் தன் ஆசிரமத்தில் பூஜை புனஸ்காரங்களுடன், எவ்வித குறைபாடும் இன்றி வழிபட்டு வந்தார். இந்நிலையில் குணசீல மகரிஷி குரு ஸ்ரீதல்பிய முனிவர் பத்ரிகாசிரமம் சென்று தவம் புரிய விரும்பினார்.

தன் ஆத்மார்த்த சீடர் குணசீலரும் தன்னுடன் இருக்க வேண்டும் என்ற விருப்பம். இதை தம் தவ வலிமையால் உணர்ந்த குணசீலருக்கு பெரும் குழப்பம். தவமிருந்து, கிடைத்தற்கரிய செல்வமாய் பெற்ற பிரசன்ன வெங்கடா ஜலபதியை விட்டுப் பிரிவதா? தன்னை இவ்வளவு தூரம் உயர்த்திய குருநாதன் தல்பிய முனிவரை விட்டுப் பிரிவதா என்று தெரியவில்லை.

விடை காணமுடியாமல் தவித்த குணசீலர், தனக்கு நல்லதொரு முடிவு தருமாறு எம்பெருமான் பிரசன்ன வெங்கடேசனையே வேண்டினார். பெருமாளும் குணசீலரே, பத்ரிகாசிரமத்திலும் யாமே குடிகொண்டுள்ளோம். குருபக்தி குறைய வேண்டாம். தல்பியருடன் சென்று உம் சேவை தொடரட்டும் என்று அருள்பாலித்தார்.

எம்பெருமானின் உத்தரவை சிரமேற்கொண்டு நிறைவேற்றப் புறப்படும் முன் குண சீலர் இறைவனிடம் ஒரு வாரம் வேண்டினார். `வேண்டிய வருக்கு வேண்டியதை அருளும் வெங்கடேசா! தங்கள் கட்டளைப்படியே தல்பிய முனிவருடன் பத்ரிகாசிரமம் சென்று குருசேவையை தொடருகிறேன்.

இந்த புண்ணியஸ்தலம் இனி என் பெயரால் விளங்க வேண்டும். தங்களை நாடிவந்து வேண்டுவோரின் முன் `வினைப்பயன்கள் அனைத்தும் நீங்க வேண்டும். தீராத நோய்கள் எல்லாம் தீர வேண்டும். குறிப்பாக சித்தப்பிரமை உடையவர்கள் இங்கு வந்தால் தெளிவு பெற்றுச் செல்ல வேண்டும்.

கேட்டது கிடைக்க வேண்டும். நினைத்தது நடக்க வேண்டும். தென்திருப்பதி என்று மக்கள் போற்றி, பிரார்த்தனை தலமாக விளங்க வேண்டும் என்று கேட்டார். தனக்காக வேண்டாமல், தரணியில் உள்ள மக்களுக்காக வேண்டிய குணசீலரின் எண்ணத்தை எம்பெருமான் பாராட்டினார்.

`நீர் வேண்டிய படியே நடக்கும். யாம் சங்கு-சக்கரம் தரித்து, செங்கோலுடன் இங்கு காட்சி தருவோம். சகல நோய்களும் தீரும்' என்று அருள்பாலிக்க, குணசீல மகரிஷி பத்ரிகாசிரமம் புறப்பட்டு சென்றார். குணசீலர் போகும்முன்பு எம்பெருமானுக்கு சேவை செய்ய தன்சீடர்களில் ஒருவரை நியமித்து சென்றார்.

ஆற்றில் வெள்ள அடிக்கடி வந்ததால் பயந்துபோன சீடர் வெங்கடேசப்பெருமாளை தனியே விட்டு, விட்டு ஓடி விட்டார். எம்பெருமானோ தன்னைச் சுற்றி ஒரு புற்றை உண்டாக்கி அதனுள் குடி கொண்டார். வனம் நிறைந்த இந்த குணசீலம் அருகில்தான் மன்னர் ஞானவர்மாவின் கோசாலை இருந்தது.

கோசாலையில் இருந்து குணசீலம் வனத்தில் மேய்ந்து விட்டு சென்ற மாடுகளிடம் யாதவர் கள் பால் கறந்து புற்று அருகே சற்று இளைப்பாறி விட்டு அரண்மனைக்கு அனுப்புவது வழக்கம். ஒரு சமயம் அந்த மாடுகளிடம் இருந்து கறந்து குடங்களில் ஊற்றப்பட்டிருந்த பால் புற்று அருகே யாதவர்கள் ஓய் வெடுத்தபோது மாயமாய் மறைந்தது.

திடீரென்று மன்னரிடம் பயந்தபடி இதை சொன்னார்கள். நம்ப மறுத்த அரசர் வந்து நேரில் பார்த்த போதும் இதேபோல் பால் மாயமாய் மறைந்தது. அரசரும் திகைத்தார். அப்போது அந்த வழி வந்த ஒரு அந்தணர், அருள் வந்து வைகுண்டவாசனை நாம் பிரசன்ன வெங்கடேசனாக இங்கு சுயம்பு வடிவில் எழுந் தருளியுள்ளோம்.

புற்றை பால் ஊற்றி அபிஷேகம் செய்தால் உண்மை புரியும்' என்று பிரசன்னம் சொன்னார். அதன்படி மன்னர் உத்தர விட, புற்றின் மீது குடம் குட மாக பால் அபிஷேகம் செய்ய புற்று கரைந்து, சங்கு சக்கர தாரியாய், ஆனந்த சொரூப னாய் காட்சியளித்தார்.

அன்று இரவில் அவரது கனவில் பிரச்சன்ன மான வெங்கடேசன் தான் இருந்த இடத்தில் ஒரு ஆலயம் நிர்மாணிக்கும்படி கட்டளையிட, அதை தனக்கு கிடைத்த பாக்கியமாய் எண்ணி மன்னரும் ஆலயம் கட்டினார். இந்த ஆலயம்தான் இன்றைக்கு தென்திருப்பதிஎன்னும் சிறப்புடன் திவ்ய தேசமாக புண்ணியஸ்தலமாக விளங்கி வருகிறது.

திருப்பதிக்கு வேண்டுதல் செய்து கொண்டவர்கள் தங்கள் காணிக்கைகள் இங்கு செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளலாம். இங்கு பிரார்த்தனை செய்தவர்கள் வேறுபெருமாள் கோவில்களில் வேண்டுதலை நிறைவேற்ற முடியாது. அப்படி காணிக்கை செலுத்தினாலும், இங்கு எழுந்தருளியிருக்கும் பிரசன்ன வெங்கடேசபெருமாள் தனக்கு வர வேண்டிய காணிக்கையை வசூலித்து வருவார் என்று கதைகள் கூறுகின்றன.

`சித்த பிரமை உடையவர்களும், பில்லி-சூனியம் போன்ற தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபட்டால் குணமாகும். புத்திரபாக்கியமில்லாதவர்கள் இங்கு வந்து நியமத்துடன் விரதமிருந்து கஞ்சி வடிக்காத அன்னத்தை ஒரு வேளை மட்டும் உண்டுவர நல்ல பிள்ளைப்பேறு கிடைக்கும்.

வரனுக்கு நல்ல கன்னிகையும், கன்னிப் பெண்களுக்கு நல்ல வரனும் அமையும். ஊமைகள் பேசுவார்கள், கண் தெரியாதவர்கள் பார்வை பெறுவார் கள், தீராத வியாதிகள் தீரும்' என்று ஞானவர்ம மன்னருக்கு எம்பெருமான் காட்சியளித்த போது திருவாய் மலர்ந்தது போல் இன்றும் அருள் பாலித்து வருகிறார்.

போக்குவரத்து வசதி:

சென்னையில் இருந்து பஸ் மூலம் திருச்சி சென்று பின் அங்கிருந்து சேலம் நெடுஞ்சாலையில் உள்ள இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும். எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சி சென்று பின் அங்கிருந்து அரசு பேருந்து மூலம் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும். இத்திருத்தலம்திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது இத்திருத்தலம்



குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 30, 2011 9:29 pm

அருமையான கோயில் இது.திருச்சி போரவங்க ஒரு தடவை இந்த கோயிலுக்கும் போய்ட்டு வாங்க



குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Uகுணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Dகுணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Aகுணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Yகுணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Aகுணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Sகுணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Uகுணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Dகுணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Hகுணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jan 30, 2011 10:49 pm

கண்டிப்பா போகணும்......
அடுத்த லீவுக்கு போகும்போது அருமையான கோவிலுக்கு போக விளக்கங்களுடன் படமும் பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் சிவா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 30, 2011 11:16 pm

[quote="மஞ்சுபாஷிணி"]கண்டிப்பா போகணும்......குஓட்டே

நாமதானே போறோம் மஞ்சு???
நல்ல பதிவுக்கு நன்றி சிவா.



குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Aகுணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Aகுணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Tகுணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Hகுணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Iகுணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Rகுணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Aகுணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 31, 2011 8:07 am

எங்களுடைய குலதெய்வம், வெங்கடாசலபதி, திருப்பதி. அங்கு செல்ல முடியவில்லை என்றால், இங்கு வந்து நேர்த்திக் கடன் செலுத்தலாம். அவருடைய ,மூத்த சகோதரர் மூலவர் ஸ்ரினிவாசர் . தம்பிக்கு வேண்டிக்கொண்டு அண்ணனுக்கு செய்யலாம். ஆனால் அண்ணனுக்கு வேண்டிக் கொண்டால் இங்கு தான் வந்து நேர்த்திக் கடன் செலுத்தவேண்டும்.
குணசீலதிர்க்கு எதிர் கரையில் உள்ள ஜீயபுரம் ரயிலடி - திருச்செந்துரை என்ற காவிரி கரையில் உள்ள மிக அழகான கிராமம் எங்கள் கிராமம். ( எனது பெயரில் உள்ள T இந்த கிராமத்தைக் குறிக்கும்.) எங்கள் மூதாதையர் கட்டிய சத்திரம் இங்கு உண்டு. நாங்கள் அடிக்கடி செல்லும் கோயில். பெருமாள் கையில் சாத்திய சந்தன அபய ஹஸ்தம் இன்றும் எங்கள் வீட்டு பூஜயில் வைத்து வழிபடும் ஒரு புனித பொருள்.

நல்லதோர் பதிவு தந்து பகிர்ந்த சிவாவிற்கு நன்றி. குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் 678642

ரமணீயன்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jan 31, 2011 11:27 am

நன்றி தல குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் 678642




குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Power-Star-Srinivasan
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 31, 2011 2:32 pm

அவசியம் சென்றுவரவேண்டிய புனிதத் தலம்..

தீர்த்தத்தை கையில் தரமாட்டார்கள்.. முகத்தில் தெளிப்பார்கள்..

ஆற்றுக்கு அக்கரையில் முக்கொம்பு சுற்றுலாத்தலம், அருகில் துணைவியாரோடு அருள்பாலிக்கும் நவக்கிரகங்கள், என ஒரு முழுநாள் பேக்கேஜுக்கு தேவையான இடங்கள் உண்டு..




குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் 0018-2குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் 0001-3குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் 0010-3குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 31, 2011 2:35 pm

மஞ்சுபாஷிணி wrote:கண்டிப்பா போகணும்......
அடுத்த லீவுக்கு போகும்போது அருமையான கோவிலுக்கு போக விளக்கங்களுடன் படமும் பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் சிவா...

திருச்சிக்கார அக்கா..!

கேள்வியேபடாத இடம் போல சொல்லியிருக்கீங்க.. “அவசியம்” போயிட்டு வாங்கக்கா..!

குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் 168113 குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் 168113 குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் 168113 குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் 168113



குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் 0018-2குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் 0001-3குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் 0010-3குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் 0001-3
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Mon Jan 31, 2011 2:35 pm

நான் 4 தடவை சென்று இருக்கிறேன் சாலையின் ஒருபுறம்
கொல்லிட ஆற்றின் கரை மறுபுறம் கோவில்
இயற்கை இயற்கை அழகோடு வீற்றிருக்கிறார் பிரசன்ன வெங்கடாஜலபதி
பதிவிற்கு நன்றி சிவா



குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Mகுணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Oகுணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Hகுணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் Aகுணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் N
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக