Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துணிந்து நில்... எதிலும் வெல்! இன்று விவேகானந்தர் பிறந்தநாள்
+5
மோகன்
பிளேடு பக்கிரி
பூஜிதா
V.Annasamy
krishnaamma
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
விவேகானந்தர் 150வது பிறந்த நாள்
200 குட்டி விவேகானந்தர் உருவாக்க திட்டம்
சேலம்: சேலம் உள்பட நான்கு மாவட்டத்தில் விவேகானந்தர் 150வது பிறந்த நாளை நான்கு ஆண்டு கொண்டாடப்படும் வகையில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் 200 குட்டி விவேகானந்தர்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரம செயலாளர் சுவாமி யதாத்மானந்தா கூறியதாவது:- சுவாமி விவேகானந்தர் 150வது பிறந்த நாள் விழா வரும் 2013 ஜனவரி 12ம் தேதி வருகிறது. இந்த விழாவை, வரும் 2011 ஜனவரி 1ம் தேதி முதல் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சேலம் மிஷன் ஆசிரமம் சார்பில் சேலம் மாவட்டம் மல்லூர் அருகே, எருமைநாயக்கன்பாளையத்தில் 1ம் தேதி மாலை 4 மணிக்கு விழா நடக்கிறது. முரளிதர், சுபாஷ், சேகர், ராஜா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மேத்தா விழாவை துவக்கி வைக்கிறார்.
விழாவில், 12 வயதுக்கு உட்பட்டு, பொருளாதாரத்தில் நலிவடைந்த 100 குழந்தைகளை நான்கு ஆண்டுக்கு தத்தெடுத்து, அவர்களது வளர்ச்சி, முன்னேற்றத்தில் தனி கவனம் செலுத்துதல், நோய் வராமல் தடுக்க ஊட்டச்சத்து அளித்தல், நல்ல ஆரோக்கியம்- ஆற்றலுடன் குட்டி விவேகானந்தராக உருவாக்கப்படும். அதற்காக, தனி ஆசிரியர்களை நியமித்து, தினசரி மாலையில் 3 மணி நேர பயிற்சி வகுப்பில் தியானம், இந்திய பண்பாடு, விவேகானந்தரின் சிந்தனைகள், ஆன்மிக நெறிகள், மகான்களின் போதனைகள் உள்ளிட்டவை போதிக்கப்படுகிறது.
அதற்காக, 25 லட்சம் ரூபாய் செலவிடப்பட உள்ளது. அதேபோல, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் கோட்டூர் கிராமத்தில் ஜனவரி 2ம் தேதி மாலை 4 மணிக்கு விழா நடக்கிறது. நாட்றம்பள்ளி ராமகிருஷ்ணா மடத்தலைவர் தியாகராஜானந்தர் தலைமை வகிக்கிறார். தர்மபுரி டான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைவர் ராஜேந்திரன் விழாவை துவக்கி வைக்கிறார். விழாவில் 100 குழந்தைகள் தத்தெடுத்து நான்கு ஆண்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக, 25 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது.
மேலும், சேலம் மாவட்டத்தில் மேச்சேரி, தாரமங்கலம், இடைப்பாடி ஆகிய பகுதிகளில் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிக்கப்படும். அதற்கான. உபகரணமும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி 2 மாதம் வீதம் நான்கு ஆண்டுக்கு பயிற்சி அளிக்கப்படும். அது தவிர, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆளுமை பயிற்சி அளிக்கப்படுகிறது. 2013 ஜனவரி 12ம் தேதி விவேகானந்தர் பிறந்த கோல்கத்தா வீட்டில் பெரிய அளவில் விழா நடக்கிறது. நிறைவு விழா சுவாமி விவேகானந்தர் மறைந்த இடமான பேலூர் மடத்தில் 2014 ஜனவரி 12ம் தேதி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் செயலாளர் ஆத்மகனானந்தஜி மகராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.
சேலம்: சேலம் உள்பட நான்கு மாவட்டத்தில் விவேகானந்தர் 150வது பிறந்த நாளை நான்கு ஆண்டு கொண்டாடப்படும் வகையில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் 200 குட்டி விவேகானந்தர்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரம செயலாளர் சுவாமி யதாத்மானந்தா கூறியதாவது:- சுவாமி விவேகானந்தர் 150வது பிறந்த நாள் விழா வரும் 2013 ஜனவரி 12ம் தேதி வருகிறது. இந்த விழாவை, வரும் 2011 ஜனவரி 1ம் தேதி முதல் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சேலம் மிஷன் ஆசிரமம் சார்பில் சேலம் மாவட்டம் மல்லூர் அருகே, எருமைநாயக்கன்பாளையத்தில் 1ம் தேதி மாலை 4 மணிக்கு விழா நடக்கிறது. முரளிதர், சுபாஷ், சேகர், ராஜா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மேத்தா விழாவை துவக்கி வைக்கிறார்.
விழாவில், 12 வயதுக்கு உட்பட்டு, பொருளாதாரத்தில் நலிவடைந்த 100 குழந்தைகளை நான்கு ஆண்டுக்கு தத்தெடுத்து, அவர்களது வளர்ச்சி, முன்னேற்றத்தில் தனி கவனம் செலுத்துதல், நோய் வராமல் தடுக்க ஊட்டச்சத்து அளித்தல், நல்ல ஆரோக்கியம்- ஆற்றலுடன் குட்டி விவேகானந்தராக உருவாக்கப்படும். அதற்காக, தனி ஆசிரியர்களை நியமித்து, தினசரி மாலையில் 3 மணி நேர பயிற்சி வகுப்பில் தியானம், இந்திய பண்பாடு, விவேகானந்தரின் சிந்தனைகள், ஆன்மிக நெறிகள், மகான்களின் போதனைகள் உள்ளிட்டவை போதிக்கப்படுகிறது.
அதற்காக, 25 லட்சம் ரூபாய் செலவிடப்பட உள்ளது. அதேபோல, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் கோட்டூர் கிராமத்தில் ஜனவரி 2ம் தேதி மாலை 4 மணிக்கு விழா நடக்கிறது. நாட்றம்பள்ளி ராமகிருஷ்ணா மடத்தலைவர் தியாகராஜானந்தர் தலைமை வகிக்கிறார். தர்மபுரி டான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைவர் ராஜேந்திரன் விழாவை துவக்கி வைக்கிறார். விழாவில் 100 குழந்தைகள் தத்தெடுத்து நான்கு ஆண்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக, 25 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது.
மேலும், சேலம் மாவட்டத்தில் மேச்சேரி, தாரமங்கலம், இடைப்பாடி ஆகிய பகுதிகளில் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிக்கப்படும். அதற்கான. உபகரணமும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி 2 மாதம் வீதம் நான்கு ஆண்டுக்கு பயிற்சி அளிக்கப்படும். அது தவிர, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆளுமை பயிற்சி அளிக்கப்படுகிறது. 2013 ஜனவரி 12ம் தேதி விவேகானந்தர் பிறந்த கோல்கத்தா வீட்டில் பெரிய அளவில் விழா நடக்கிறது. நிறைவு விழா சுவாமி விவேகானந்தர் மறைந்த இடமான பேலூர் மடத்தில் 2014 ஜனவரி 12ம் தேதி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் செயலாளர் ஆத்மகனானந்தஜி மகராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.
Last edited by krishnaamma on Wed Jan 12, 2011 1:09 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: துணிந்து நில்... எதிலும் வெல்! இன்று விவேகானந்தர் பிறந்தநாள்
நல்ல தகவலுக்கு நன்றிகள்
Last edited by V.Annasamy on Wed Jan 12, 2011 1:11 pm; edited 1 time in total
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: துணிந்து நில்... எதிலும் வெல்! இன்று விவேகானந்தர் பிறந்தநாள்
விவேகானந்தருக்கு கென் இனிய பிறந்தநாள் வணக்கங்கள்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
துணிந்து நில்... எதிலும் வெல்! இன்று விவேகானந்தர் பிறந்தநாள்
""என் சிங்கக்குட்டிகளே! இந்த வாழ்வு வரும் போகும். செல்வமும் புகழும் போகமும் சில நாட்களுக்கே. நீங்கள் பெரும்பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில்நம்பிக்கைக் கொள்ளுங்கள். என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். கவலைப்படாதீர்கள். குட்டிநாய்களின் குரைப்புக்கும், வானத்தில் முழங்கும் இடியோசை கேட்டும் நடுங்காதீர்கள். நிமிர்ந்து நின்று வேலை செய்யுங்கள். இந்த தேசத்தில் பிறந்த புழு கூட உண்மைக்காகவே உயிர்விட வேண்டும்,'' என்று முழக்கமிட்டவர் வீரத்துறவி விவேகானந்தர்.
கோல்கட்டாவில், விஸ்வநாத தத்தர்- புவனேஸ்வரி அம்மையாரின் தவப்புதல்வராக, 1863, ஜனவரி 12ல் அவதரித்தார். நரேந்திரன் என பெயர் இட்டனர். வடமொழி, ஆங்கில நூல்கள் பலவற்றைக் கற்று ஆன்மிக ஞானம் அடைந்தார். ராமகிருஷ்ண பரமஹம்சர் அவரைத் தனது சீடராக ஏற்றுக்கொண்டார். துறவியான பிறகு அவருக்கு வந்த பெயர் விவேகானந்தர். விவேகம் இருந்தால் தான் ஆனந்தம் பிறக்கும் என்பதைத் தன் பெயர் மூலம் இந்த உலகுக்கு சுட்டிக்காட்டினார்.இமயம் முதல் குமரி வரை பயணம் செய்து, ராமகிருஷ்ணரின் உபதேசங்களைப் போதித்தார். இந்து மதத்தின் பெருமையை உலக அரங்கில் நிலைநாட்ட, சிகாகோவில் நடந்த சர்வமத மகாசபை மாநாட்டில் பங்கேற்று, அரியதொரு சொற்பொழிவை நிகழ்த்தினார். மற்றவர்களெல்லாம் அங்குவந்திருந்தவர்களை "லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்' என அழைத்து பேச்சை ஆரம்பிக்க, விவேகானந்தர் தனக்கே உரிய தனித்துவத்துடன் "டியர் பிரதர்ஸ் அன்ட் சிஸ்டர்ஸ்' என ஆரம்பித்து, உலக மக்கள் யாவரும் இந்தியர்களின் சகோதர சகோதரிகள் என்ற கருத்தை ஆணித்தரமாகச் சொன்னார். அந்த ஒரு வார்த்தைக்கே அரங்கம் அதிர்ந்தது.
""கோழைகளுடனோ அல்லது அர்த்தமற்ற அரசியலுடனோ எனக்கு எந்த விதத்தொடர்பும் இல்லை. கடவுளும் உண்மையும் தான் இந்த உலகிலுள்ள ஒரே அரசியல். அது தான் எனக்கு மிகவும் பிடிக்கும். மற்றவை எல்லாம் வெறும் குப்பை,'' என்று முழங்கினார்.ஒருநாள், அவர் தற்செயலாகக் கைகட்டி கம்பீரமாக கூட்ட அரங்கின் முன் நின்றதை ஒரு போட்டோகிராபர் படமெடுத்தார். அதை சிகாகோவிலுள்ள "கோஸ்லித்தோ கிராபிக் கம்பெனி' போஸ்டராக அச்சடித்து நகர் முழுக்க தொங்க விட்டது. அந்தப் படம் தான் இன்றுவரை விவேகானந்தரின் கம்பீர தோற்றத்தை நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.
விவேகானந்தர் எல்லா உயிர்களையும் தமதாகவே கருதினார். அதற்கு காரணம் அவர் குருவிடம் கற்ற பாடம் தான். குரு ராமகிருஷ்ணர், தொண்டை புற்றுநோயால் சாப்பிட முடியாமல் சிரமப்பட்டார்.""நீங்கள் தான் காளி பக்தர் ஆயிற்றே! அவளிடம் நேரில் பேசுவீர்களே! போய் அவளிடம் குணமாக்க கேளுங்கள்,'' என்றார் விவேகானந்தர்.""கேவலம், இந்த உடலைக் குணமாக்குவதற்காக அவளிடம் நான் கையேந்தமாட்டேன்,' ' என உறுதியாகச் சொல்லிவிட்டார் குருநாதர். விவேகானந்தர் வற்புறுத்தவே, வேறு வழியின்றி காளியை வழிபட்டு வந்தார்.""அம்பாள் என்ன சொன்னாள், குணமாக்கி விடுவாளா?'' என்று விவேகானந்தர் ஆவலுடன் கேட்கவே,""இல்லை! நீ சாப்பிடாவிட்டால், உனக்காக பல வாய்கள் சாப்பிடுகிறதே! அந்த திருப்தி போதாதா!'' என அவள் திருப்பிக்கேட்டாள். நான் வந்துவிட்டேன்,'' என்றார். மற்றவர்கள் சாப்பிட்டால் தான் சாப்பிட்டது போல என்று நினைத்த குருவின் சமரசப் பார்வை, விவேகானந்தரையும் ஒட்டிக்கொண்டது. ஜெய்ப்பூர் மன்னர் அரண்மனைக்கு வந்தார் விவேகானந்தர். அங்கே இசைநிகழ்ச்சி நடந்தது. துறவி என்பதால் அதைக்காண செல்லாமல், தன் அறையில் இருந்தார். அப்போது, ஒரு பெண் பாடிய பாடல் அவருக்கு கேட்டது.
அதில் சோகம் இழையோடியது. அதைக் கேட்டு மனம் இளகிய அவர் இசைநிகழ்ச்சி நடந்த இடத்துக்குச் சென்றார்.""இவள் நடனப்பெண். இழிந்த தொழில் செய்பவள். மற்றவர்கள் பார்வையில் இவள் இழிந்தவளாக இருக்கலாம். ஆனால், இவளது பாடல் எனக்கு புதிய பாடத்தைத் தந்தது. தன் வாழ்க்கை சிரமத்தை அவள் பாடலாகப் பாடினாள். அதைக் கேட்டு உள்ளம் உருகினேன்,'' என்றார். அவளை அம்பாளாக பார்த்தார். அவரது உருக்கமான பேச்சைக்கேட்ட அவள், அவரது வருகை தன்னை ஆசிர்வதித்ததாகச் சொன்னாள். இழிந்த தொழில் செய்தவர் களையும் தெய்வமாகப் பார்த்தவர் விவேகானந்தர். அலைகள் சீறும் கன்னியாகுமரி கடலில், அவர் நீச்சலடித்துச் சென்று நடுப்பாறையில் அமர்ந்து தியானம் செய்த வீர வரலாறை உலகம் மறக்காது. அந்த வீரத்துறவியின் இரக்கம் நம்மை ஆட்கொள்ளட்டும். அவரது வீரம் பொதிந்த வார்த்தைகள் நமக்கு துணிவைத்தரட்டும். அந்தத் துணிவு வெற்றிக் கனியை பறித்துத் தரும்.
இன்று தேசிய இளைஞர் தினம்:
இன்றைய இளைஞர்கள் கையில் தான் நாட்டின் எதிர்காலமே உள்ளது. இளைஞர்களின் முன்னேற்றத்தை பொறுத்து தான் நாட்டின் முன்னேற்றமும் அமைகிறது. இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவரும், ஆன்மிகவாதியுமான சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜன. 12, இந்தியாவில் ஆண்டுதோறும் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளில் கட்டுரை, கவிதை, யோகா, சொற்பொழிவு, கருத்தரங்கு, விளையாட்டுப் போட்டி, பேச்சுப்போட்டி, ஊர்வலம் ஆகியவை நடைபெறுகின்றன.
இந்தியாவின் கலாச்சாரம், பண்பாட்டை உலகுக்கு எடுத்துக்காட்டியவர் விவேகானந்தர். "நூறு இளைஞர்களை தாருங்கள், இந்த நாட்டையே மாற்றிக்காட்டுகிறேன் ' என்று அவர் கூறினார். இது இளைஞர்கள் மேல் அவர் வைத்த நம்பிக்கையை காட்டுகிறது. இளைஞர்கள் முன்மாதிரியாக ஒருவரைப் பின்பற்றும்போது முழுவதும் அவர்களாகவே மாறிவிடாமல், அவர்களிடமுள்ள நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் என்று விவேகானந்தர் வலியுறுத்துகிறார்.
இளைஞர்களின் பொறுப்பு :
நாட்டில் 2001ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கின் படி 13 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 42 கோடி பேருக்கு மேல் உள்ளது. இளைஞர்கள் டாக்டர், இன்ஜினியர், ஆசிரியர் போல அரசியலிலும் தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும். எனவே நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு இளைஞரிடமும் உள்ளது. இளைஞர்களின் சக்தியை முழுமையாக நல்வழியில் பயன்படுத்தினால் இந்தியாவின் வல்லரசு கனவு எளிதில் நிறைவேறலாம். இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்புக்கு அரசு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
நன்றி- தினமலர்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: துணிந்து நில்... எதிலும் வெல்! இன்று விவேகானந்தர் பிறந்தநாள்
என்றும் நாம் மனதில் அவர் சிந்தனைகள் irukkatum.
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Re: துணிந்து நில்... எதிலும் வெல்! இன்று விவேகானந்தர் பிறந்தநாள்
இந்தியா இருக்கும் வரை விவேகானந்தர் புகழும் இருக்கும்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நீ சாதிக்கப் பிறந்தவன்! துணிந்து நில்!!! ஜூலை 4 விவேகானந்தர் நினைவு நாள்
» சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் இன்று
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரையின் அனைத்து நண்பர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» இன்று, சிங்காரவேலரின் 154-வது பிறந்தநாள்!
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரை மன்ற ஆலோசகர் கிட்சா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
» சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் இன்று
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரையின் அனைத்து நண்பர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» இன்று, சிங்காரவேலரின் 154-வது பிறந்தநாள்!
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரை மன்ற ஆலோசகர் கிட்சா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|