புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்னும் குறையாத பிரசவ கால மரணங்கள் Poll_c10இன்னும் குறையாத பிரசவ கால மரணங்கள் Poll_m10இன்னும் குறையாத பிரசவ கால மரணங்கள் Poll_c10 
62 Posts - 57%
heezulia
இன்னும் குறையாத பிரசவ கால மரணங்கள் Poll_c10இன்னும் குறையாத பிரசவ கால மரணங்கள் Poll_m10இன்னும் குறையாத பிரசவ கால மரணங்கள் Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
இன்னும் குறையாத பிரசவ கால மரணங்கள் Poll_c10இன்னும் குறையாத பிரசவ கால மரணங்கள் Poll_m10இன்னும் குறையாத பிரசவ கால மரணங்கள் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
இன்னும் குறையாத பிரசவ கால மரணங்கள் Poll_c10இன்னும் குறையாத பிரசவ கால மரணங்கள் Poll_m10இன்னும் குறையாத பிரசவ கால மரணங்கள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்னும் குறையாத பிரசவ கால மரணங்கள் Poll_c10இன்னும் குறையாத பிரசவ கால மரணங்கள் Poll_m10இன்னும் குறையாத பிரசவ கால மரணங்கள் Poll_c10 
104 Posts - 59%
heezulia
இன்னும் குறையாத பிரசவ கால மரணங்கள் Poll_c10இன்னும் குறையாத பிரசவ கால மரணங்கள் Poll_m10இன்னும் குறையாத பிரசவ கால மரணங்கள் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
இன்னும் குறையாத பிரசவ கால மரணங்கள் Poll_c10இன்னும் குறையாத பிரசவ கால மரணங்கள் Poll_m10இன்னும் குறையாத பிரசவ கால மரணங்கள் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இன்னும் குறையாத பிரசவ கால மரணங்கள் Poll_c10இன்னும் குறையாத பிரசவ கால மரணங்கள் Poll_m10இன்னும் குறையாத பிரசவ கால மரணங்கள் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னும் குறையாத பிரசவ கால மரணங்கள்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Dec 12, 2010 12:19 pm

ஒவ்வொரு ஆண்டும் 78 ஆயிரம் பெண்கள் பிரசவ காலத்திலோ அல்லது குழந்தை பிறந்த 42 நாட்களுக்குள்ளோ இறந்துபோகிறார்கள்’ என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது.
’சாம்பிள் ரெஜிஸ்ட்டிரேசன் சிஸ்டம்` எனப் படும் மத்திய அரசு நிறுவனம். இந்த தாய்மார்கள் 15 முதல் 49 வயதுக்குள்ளான வர்கள். மகப்பேறு கால மரணவிகிதம் அதிகமாவதற்கான காரணங்கள்…

பால்ய விவாகம்:

பெண்கள் வயதுக்கு வருவதற்கு முன்பே அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கும் வழக்கம் இப்போதும் இருக்கிறது. பூப்பெய்தி விட்டாலும் மகப்பேறுக்கு தகுதியான உடல்வளர்ச்சியை அவர்கள் பெறுவதற்கு முன்பும் திருமணம் செய்துவைக்கப்படுகிறது. இத்தகைய திருமணங்கள் மகப்பேறு கால மரணத்துக்கு வழிவகுத்து விடுகிறது.

ஊட்டச்சத்து இல்லாமை:

கர்ப்பிணிப் பெண்களில் பெரும்பாலோர் ஏழைகளாக இருப்பதால் அவர்களுக்கு தேவை யான ஊட்டச்சத்து கிடைக்காமல் போய்விடுகிறது. அதனால் ரத்தசோகை எனப்படும் அனீமியா நோய்க்கு ஆளாகி பிரசவ காலத்தில் உயிரிழப்புக்கு உள்ளாகிறார்கள்.

பாதுகாப்பற்ற முறையில் செய்யும் கருக்கலைப்பு:

பெண்களில் பலரிடம் கருக்கலைப்பு பற்றிய விழிப்புணர்வு இல்லை. தகுதியற்றவர்களிடம் அவர்கள் கருக்கலைப்பு செய்துகொள்வது, மரணத்தில் கொண்டு விட்டுவிடுகிறது!

மேம்படுத்தப்படாத பிரவச இடம்:

கிராமப்புற பெண்களில் பெரும்பாலோர் நவீனப்படுத்தப்பட்ட மருத்துவ மனைகளுக்கு பிரசவத்திற்குச் செல்வதில்லை. வீடுகளில் தாய்-சேய் நலம்பேணும் உபகரணங்கள் ஏதுமின்றி பாதுகாப்பற்ற முறையில் பிரசவம் செய்து மரணத்தை எதிர்கொள்கிறார்கள்.

கிராம ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்படாமை:

பெரும்பாலான கிராமப்புற மருத்துவமனைகளில் பிரசவத்திற்குப் பின்பு தாய்மார்களின் நலம்காக்கும் வசதிகள் இல்லை. அதனால் சுகப்பிரசவத்திற்கு பின்பு தாய்மார்கள் இறந்து போகும் சூழல் ஏற்படுகிறது.

மகப்பேறு கால மரணவிகித எண்ணிக்கை அசாம் மாநிலத்தில் தான் மிக அதிகம். அங்கு திஸ்பூரில் உள்ள லல்மாட்டி கிராமத்தில் வசிக்கும் பிரான்ஜிட் தேகா என்பவர் தனது 18 வயதான மனைவி கல்பனா தேகாவை முதல் பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்த போது, மனைவி வயிற்றில் முழு வளர்ச்சியுடன் இருந்த குழந்தை இறந்து பிறந்தது. இரண்டாவது பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்தபோது குழந்தையுடன் தாயும் இறந்து போனாள். “மருத்துவமனையில் என்ன தப்பு நடந்தது என்று தெரியவில்லை. எங்கள் பகுதியில் பல பெண்கள் பிரசவகாலத்தில் இறந்திருக்கிறார்கள்” – என்று அதிர்ச்சியுடன் கூறுகிறார், கல்பனாவின் கணவர்.

லான்செட் என்கிற மருத்துவப் பத்திரிகை உலக அளவில் சமீபத்தில் எடுத்துள்ள கணக்கெடுப்பின்படி 2008-ல் நிகழ்ந்துள்ள மகப்பேறுகால மரணங்களில் பாதியளவு இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, காங்கோ குடியரசு ஆகிய ஆறு நாடுகளில்தான் நிகழ்ந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறது.

ராஜஸ்தானில் மகப்பேறு கால மரணவிகித எண்ணிக்கை 388 என்று பதிவாகியுள்ளது! அங்குள்ள கிராமங்களில் பெரும்பாலான பிரசவங்கள் வீடுகளிலேயே பார்க்கப்படுகின்றன. நகரத்து பெண்கள் பிரசவத்திற்கு நவீன வசதிகள் நிறைந்த `மல்டி ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனைகளைத் தேடும்போது, கிராமத்து கர்ப்பிணிகள் எந்த வசதியுமற்ற ஆஸ்பத்திரிகளைத்தான் தேடிச் செல்கிறார்கள்.

பொருளாதார வசதிமிகுந்த மராட்டியம், குஜராத் மாநிலங்களில் மகப்பேறு கால மரணவிகித எண்ணிக்கை முறையே 130 மற்றும் 160 எனப்பதிவாகியுள்ளது. போதிய நிதிவசதி இருந்தும் அரசின் கவனக்குறைவால் கிராம மருத்துவமனைகளில் மகப்பேறு காலத்தில் தாயின் நலம்பேணும் வசதிகள் மிகக்குறைவாகவே உள்ளன! அங்குள்ள டாக்டர்களில் நூற்றிலொருவர் தான் மகப்பேறு சிகிச்சைக்கான பயிற்சி பெற்றுள்ளனர். மகப்பேறு சிகிச்சை பயிற்சிபெற்ற டாக்டர்களிலும் 2 சதவீதம் பேர் தான் சிசேரியன் ஆபரேஷன் செய்யும் பயிற்சி பெற்றுள்ளனர். இம்மாதிரியான குறைகள் நிவர்த்தி செய்யப்படாதவரை யிலும் மகப்பேறுகால மரணங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும்.

சமீபத்தில் அரசின் சுகாதாரத்துறை எடுத்துள்ள கணக்கீட்டின்படி 1 லட்சத்து ஐம்பது ஆயிரம் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ மையங்களில் டாக்டர்களே இல்லை என்கிறது. ஐ.நா.வின் யுனிசெப் நிறுவனம் சமீபத்தில் எடுத்துள்ள கணக்கீட்டின்படி 74000 சுகாதார வல்லுனர்கள் தேவை என்று கணக்கிட்டுள்ளது!

உலக சுகாதார நிறுவனம், பொதுமக்கள் சுகாதார நலனிற்காக செலவிடும் நாடுகளின் வரிசைப் பட்டியலில் இந்தியா 71-ம் இடத்திலுள்ளது என்கிறது.

கேரளாவைச் சேர்ந்த டாக்டர் பி. எக்பால். “கேரளாவில் கர்ப்பமாகும் பெண்களில் 33 சதவீதம் பேருக்கு ரத்தசோகை நோய் உள்ளது. கேரளாவில்தான் இந்தியாவிலேயே மிகஅதிகமான அளவில், 35 சதவீத கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் செய்யப்படுகிறது!” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

அமெரிக்க ஹார்வர்டு பொதுநல சுகாதார மருத்துவநல நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் 2015-ல் இந்தியாவின் மகப்பேறு கால மரணவிகிதம் 254-லிருந்து 100 ஆகக்குறைந்து விடும் என்று நம்புகிறார்கள்

விடுப்பு குழுமம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக