புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா Poll_c10தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா Poll_m10தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா Poll_c10 
11 Posts - 50%
heezulia
தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா Poll_c10தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா Poll_m10தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா Poll_c10தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா Poll_m10தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா Poll_c10 
53 Posts - 60%
heezulia
தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா Poll_c10தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா Poll_m10தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா Poll_c10தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா Poll_m10தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா Poll_c10தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா Poll_m10தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா


   
   
3tamil78
3tamil78
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 03/11/2010

Post3tamil78 Fri Nov 19, 2010 7:39 pm

தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் - இப்படிக்கு பழ. கருப்பையா

கணினிப் பயன்பாட்டில் தமிழ் மொழியின் எழுத்துக்களை ஒரே மாதிரியாகப் பயன்படுத்த "TAMIL ALL CHARACTER ENCODING 16" மென்பொருளில் ஜ, ஷ, க்ஷ, ஸ, ஹ என்னும் (வடமொழி) கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவதை முதலில் கவனிக்காமல் இருந்துவிட்டு, அப்புறம் ஏன் இப்போது பின்வாங்குகிறார் முதல்வர்

கருணாநிதி" என்று கேட்கிறது ஒரு குரல்!

ஆகா...! முதல்வர் காலம் க்டந்தாவது தமிழ் குறித்து நல்லறிவு பெற்று, எதிர்க்கவேண்டிய வடமொழி எழுத்துகளை எதிர்திருக்கிறாரே என்று களிப்பேருவகை அடைந்தோம்!

கருணாநிதி மத்திய அரசுக்கு எழுதிய மடல் ஏகெனவே தமிழ் ஒருங்குறியில் உள்ள, ஜ, ஷ,
க்ஷ, ஸ, ஹ என்னும் ஐந்து எழுத்துகள் குறித்தவை அல்லவாம். இவைபோல் இன்னும் 26 கிரந்த எழுத்துக்களைத் தமிழ் ஒருங்குறியில் சேர்க்கவேண்டும் என்கிறார்களாம் டெல்லியில். அது குறித்துத்தான் கருணாநிதி, அதுவும் "யோசித்து முடிவெடுக்கலாம்" என்று தயவாகத்தான் எழுதி இருக்கிறாராம்!.

ஜ, ஷ போன்ற ஏந்து கிரந்த எழுத்துகள் ஏற்கெனவே இருந்து வருபவை என்பதால்,
கருணாநிதியும் அவர் வைத்திருக்கிற தாள வாத்தியத் தமிழறிஞர்களும் அதை எதிர்க்காமல்
மறந்திருப்பார்கள் போல.

2500 ஆண்டுகளுக்கு முன்னர் வடமொழி எதிர்ப்பு இயக்கத்துக்குத் தலைமை ஏற்றவன் தொல்காப்பியன்!

இந்த எழுத்துகள் எந்தக் காலத்திலும் தமிழால் ஏற்கப்படவில்லை. பல்லுக்குள் மாட்டிக்கொண்டுவிட்ட தேவையற்ற சக்கைகளை நாக்குத் துழாவி வெளியே தள்ளிவிடுவது போல, தமிழ் இந்த வட மொழி வல்லோசைகளைக் காலங்காலமாக வெளியே தள்ளிக்கொண்டுதான் இருக்கிறது! ஆனால், வடமொழி வழக்கிழந்து 2000 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அதனுடைய ஆக்கிரமிப்பு முயற்சி மட்டும் ஓயவில்லை!

ஜ, ஷ, க்ஷ், ஸ, ஹ போன்ற ஓசைகள் அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு வருபவை!
அப்படி அடிவயிற்றில் இருந்து மூச்சைப் பிடித்துக்கொண்டு பேசுவதற்குத் தமிழன் உடன்படவில்லை.

மூச்சை இழுப்பதும் விடுவதும் எப்படி எந்த முயற்சியுமின்றி இயல்பாக நடக்கிறதோ, அப்படியே பேசுவதற்கும் எந்தப் பாடும் கூடாது என்று கருதியே மொழியை வடிவமைத்தான் தமிழன்!

ஜ, க்ஷ என்பன போன்ற எழுத்துகளின் மீது நமக்கு உள்ள பகைக்குக் காரணமே, அந்த ஓசைகளோடு நம்முடைய மொழிக்கு உள்ள பொருந்தாமைதான். அந்த ஓசை தமிழின் அடிப்படைக்கு மாறானது என்னும்போது, அந்த எழுத்துகள் த்மிழுக்கு எதற்கு?
ஒருவேளை தவிர்க்க இயலாமல் வட சொற்கள் தமிழுக்குள் நுழையும் நிலை ஏற்பட்டால், செருப்பைக் வெளியே விட்டுவிட்டு வருவதுபோல, வடமொழி தனக்குரிய ஓசையை களைந்துவிட்டுத் தமிழோசையை ஏற்றுக்கொண்டுதான் தமிழுக்குள் நுழையவேண்டும் என்று கட்டளை விதித்தான் தொல்காப்பியன்! "வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ" என்பது அவனுடைய கட்டளை நூற்பா!

கம்பன் கையைக் கட்டிக்கொண்டு தொல்காப்பியனுக்கு கட்டுப்பட்டானே! விபீஷணனை வீடணன் என்றும் லக்ஷ்மணனை இலக்குவன் என்றும் மாற்றிவிட்டானே!

என்னுடைய தாயார் "ஜனங்கள்" என்று சொல்ல மாட்டார்கள்..."சனங்கள்" என்றுதான் சொல்லுவார்கள்.

பஸ் ஸ்டாண்டு என்று சொல்ல வராது; "காரடி" என்பார்கள்.

ஒரு நாள் தாயாரிடம் கேட்டேன்: "ஏன் ஆத்தா! காரடியை எப்படி கண்டுபிடித்தாய்?"

தேர் நிற்கிற இடம் தேரடி என்றால், கார் நிற்கிற இடம் காரடிதானே? என்றார். அவர் 78 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். ஒரு நாள் ஒரு பொழுதுகூட ஜ, க்ஷ, ஷ-வை எல்லாம் அவர்களின் நாக்கு உச்சரித்தது இல்லை. எல்லாத் தாய்மார்களும் இப்படித்தான்!

அப்படியானால், யாரின் தேவையை நிறைவு செய்ய இந்த ஐந்து கிரந்த எழுத்துகளையும்

எதிர்க்காமல் முதல்வர் கருணாநிதி விட்டுவிட்டார்? "அவை பழகிவிட்டன; முன்பே உள்ளன" என்கிறார்.

தஞ்சை தமிழ்ப்பல்கலை கழகத் துணை வேந்தர் இராசேந்திரன்! யாருக்கு பழகிவிட்டது?

தொல்காப்பியனுக்கா? வீதியிலே கீரை விற்றுக்கொண்டு போகிறாளே முனியம்மா... அவளுக்கா?

தொல்காப்பியப் பூங்கா என்னும் நூலைக் கருணாநிதிதானே எழுதினார்? தமிழுக்கு அவன் போட்ட சட்டங்கள் கருணாநிதிக்குப் பிடிபடாதவையா?

ஜ, க்ஷ போன்ற ஐந்து கிரந்த எழுத்துகளையே வெளியே தள்ளு என்றால், மேற்கொண்டு 26 கிரந்த எழுத்துகளைச் சேர்க்க வேண்டும் என்கிறதே ஒரு கூட்டம்! இது எவ்வளவு பெரிய சதி?!

தமிழுக்கே உரித்தான எ, ஒ, ழ, ற, ன ஆகிய எழுத்துக்கள் வேறு எந்த மொழிக்கும் இல்லாத
காரணத்தால், இந்த எழுத்துகளை மட்டும் கிரந்தத்தில் அப்படியே சேர்த்துக்கொண்டு, மீதி
தமிழை ஒழித்துவிடலாம் என்று கருதுகிறார்கள்!

தமிழ் உட்பட இந்திய மொழிகள் அனைத்தையும், தேவநாகரி எழுத்தில் எழுதினால் என்ன என்று கேட்டவர்களை எதிர்கொள்ள என்று அண்ணா இருந்தார்!

அந்த முயற்சி தோற்றுவிட்டது. இன்று தெய்வத் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்தையும் கிரந்த எழுத்துக்களில் எழுத, அடுத்த சதி தொடங்கிவிட்டது!

சமக்கிருதம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய செம்மொழிகள் அனைத்தும் செத்துவிட்டன...தமிழ்
மட்டும் வாழ்வதா என்று பொறாமைக்காரர்கள் நினைக்கிறார்கள்!

ஐந்து கிரந்த எழுத்துகளான ஜ, க்ஷ உள்ளிட்டவற்றை முதலில் ஒழிக்கவேண்டும். அடிப்படையைத் தகர்த்துவிட்டால், அதற்கு மேல் முயற்சி எடுக்க மாட்டார்கள் அல்லவா!
தொடக்கப் பள்ளி தொடங்கி ஒருங்குறி மென்பொருள் வரை அனைத்திலும் தொல்காப்பியம் சுட்டாத எழுத்துகளைச் சுட்டுவிட வேண்டும்.

அதிகாரம் என்பது எதற்கு? குடும்பத்துக்கு வேண்டியதைச் சேர்த்து, பல தலைமுறைக்குப்
பாதுகாப்பு உண்டாக்க மட்டும்தானா?

நன்றி: சூனியர் விகடன்
=====

முத்தமிழ்வேந்தன்
சென்னை

thirujothi
thirujothi
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 22/07/2010

Postthirujothi Fri Nov 19, 2010 9:57 pm

ஜூனியர் விகடனை சூனியர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது சூனியர் என்றால் என்ன?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக