புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அற்புத ஆபரணங்கள்  Poll_c10அற்புத ஆபரணங்கள்  Poll_m10அற்புத ஆபரணங்கள்  Poll_c10 
64 Posts - 58%
heezulia
அற்புத ஆபரணங்கள்  Poll_c10அற்புத ஆபரணங்கள்  Poll_m10அற்புத ஆபரணங்கள்  Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
அற்புத ஆபரணங்கள்  Poll_c10அற்புத ஆபரணங்கள்  Poll_m10அற்புத ஆபரணங்கள்  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அற்புத ஆபரணங்கள்  Poll_c10அற்புத ஆபரணங்கள்  Poll_m10அற்புத ஆபரணங்கள்  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அற்புத ஆபரணங்கள்  Poll_c10அற்புத ஆபரணங்கள்  Poll_m10அற்புத ஆபரணங்கள்  Poll_c10 
106 Posts - 60%
heezulia
அற்புத ஆபரணங்கள்  Poll_c10அற்புத ஆபரணங்கள்  Poll_m10அற்புத ஆபரணங்கள்  Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
அற்புத ஆபரணங்கள்  Poll_c10அற்புத ஆபரணங்கள்  Poll_m10அற்புத ஆபரணங்கள்  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
அற்புத ஆபரணங்கள்  Poll_c10அற்புத ஆபரணங்கள்  Poll_m10அற்புத ஆபரணங்கள்  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அற்புத ஆபரணங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 14, 2010 2:05 pm

தமிழக வரலாற்றில் ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முந்திய கால கட்டத்தை எட்டிப்பார்க்க நினைப்பவர்களுக்கு ஆவணமாக கிடைப்பது கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் தான்.

அவற்றின் மூலம் கிடைக்கும் தகவல்கள், அந்த காலங்களில் ஆண்ட மன்னர்கள் யார்? அவர்கள் போரில் சாதித்த சாதனைகள் என்ன? என்பன போன்ற செய்திகளே இருக்கும்.

ஆனால் தஞ்சைப் பெரிய கோவில் கல்வெட்டுக்கள், மேற்கண்ட தகவலுடன், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எந்த அளவு நாகரிகத்திலும், ஆட்சி நிர்வாகத்திலும் மற்றும் அனைத்து துறைகளிலும் தலை சிறந்து விளங்கினார்கள் என்பதை உலகுக்கு பெருமையுடன் எடுத்துக்காட்டும் காலக் கண்ணாடியாக திகழ்கின்றன.

மன்னர் ராஜராஜன் காலத்தில், மக்கள் எந்த வகையான ஆடை, ஆபரணங்களை அணிந்து இருந்தார்கள், எவ்வளவு செல்வச்செழிப்போடு வாழ்ந்தார்கள் என் பதையும் தஞ்சைப்பெரிய கோவில் கல்வெட்டுக்கள், விலாவாரியாக சொல்கின்றன.

அப்போது பெரும் அளவு புழக்கத்தில் இருந்தது பண்ட மாற்று முறைதான். இதற்கு அடிப்படையாக இருந்தது நெல்.

``தஞ்சை சோறுடைத்து'' என்பதற்கு ஏற்ப, சோழர்களின் தலைநகரமான தஞ்சை, அப்போதே நெல் விளைச்சலில் உயர்ந்தோங்கி இருந்தது.

கோவில் பணியாளர்கள் உள்பட எல்லோருக்கும் ஊதியமாக நெல் கொடுக்கப்பட்டது. அதைக்கொண்டு அவர்கள் மற்ற பொருட்களை வாங்கிக்கொண்டார்கள். மன்னரின் முத்திரை பெற்ற நாணயங்களும் வழக்கத்தில் இருந்தன.

செப்புக்காசுகளோடு தங்க நாணயங்களும் அதிக அளவில் பயன்பாட்டில் இருந்து இருக்க வேண்டும். கடல் கடந்து நடைபெற்ற வாணிபத்துக்கு தங்க நாணயங்களே ஈடு கொடுக்கப்பட்டன என்பது பல வெளிநாடுகளில் நடைபெற்ற தொல்பொருள் ஆய்வுகளின் போது கிடைத்த சோழர்கால தங்க நாணயங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

மன்னர் ராஜராஜன் ஆட்சியின்போது பெரும் தொகையிலான வரி, வணிகர்களிடம் இருந்து தங்கமாக பெறப்பட்டது. அவை, `பண்டாரம்' எனப்படும் பொக்கிஷ சாலையில் பாதுகாக்கப்பட்டது.

மன்னர், எதிரி நாடுகளின் மீது போர் தொடுத்து வெற்றிவாகை சூடி வரும்போது, அந்த நாட்டில் உள்ள கஜானாவை காலி செய்து, அத்தனை செல்வங்களையும் அள்ளி வருவது வழக்கம். அந்த செல்வத்தின் ஒரு பகுதி, படைவீரர்களுக்கு பரிசாக வழங்கப்படும். மற்ற பொன்னும், மணியும், வைரங்களும், முத்துக்களும், தங்க நாணயங்களும், அப்படியே மன்னரின் கருவூலத்தில் அடைக்கலமாகி விடும். இதுபோன்று கிடைக்கும் செல்வம், மக்களின் நல்வாழ்வு திட்டங்களுக்கு பயன்பட்டதுடன், அறப்பணிக்கும் கணிசமான அளவில் அர்ப்பணிக்கப்பட்டது.

மன்னர் ராஜராஜன், போர்க்களத்தின் மூலம் தனக்கு கிடைத்த செல்வம் பற்றியும் அந்த தங்கத்தை உருக்கி அதன் மூலம் செய்த நகை மற்றும் பாத்திரங்கள் ஆகிய அனைத்தையும் தஞ்சைப்பெரிய கோவிலுக்கு வழங்கிய விவரத்தையும், மிகத்தெளிவாக, கல்வெட்டில் பதியவைத்தார்.

இதன் மூலமாகத்தான், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் எந்த வகையான ஆபரணங் கள்- அணிகலன்கள், மற்றும் பண்டபாத்திரங்கள் பயன் படுத்தப்பட்டு வந்தன என்பது நமக்கு உறுதியான சான்றாகக் கிடைத்து இருக்கின்றது.

அந்த காலத்தில் தங்கம், குன்றிமணி, மஞ்சாடி, கழஞ்சு என்ற நிறுத்தல் முறையில் கணக்கிடப் பட்டது.

இதற்காக `ஆடவல்லான்' என்ற எடைக்கல் பயன்படுத்தப்பட்டது.

இரண்டு குன்றிமணி என்பது ஒரு மஞ்சாடி. 10 மஞ்சாடி கொண்டது ஒரு கழஞ்சு ஆகும். கழஞ்சு என்பது தற்போதைய எடையில் 5.4 கிராம் ஆக கணக்கிடப்பட்டது.

தங்க நகைகளின் தரத்திற்கு இப்போது 24 காரட், 22 காரட் என்று குறிப்பிடுகிறோம் அல்லவா? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுத்தமான பத்தரை மாற்று தங்கம் `தண்டவாணி' என்று குறிப்பிடப்பட்டது. தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுக்களில் தங்க நகை பற்றி குறிப்பிடும் போது ஒவ்வொரு நகையும் தண்டவாணிக்கு கால் மாற்று குறைவு அல்லது ஒரு மாற்று குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது.

மன்னர் ராஜராஜன், தஞ்சைப்பெரிய கோவிலுக்கு தானமாக வழங்கிய நகைகளை மிக துல்லியமாக நிறை பார்த்து அவற்றின் எடை என்ன? அவை என்ன வகையிலான நகைகள்? அவற்றில் கோர்க்கப்பட்ட முத்து எந்த வகையை சேர்ந்தது என்ற எல்லா விவரங்களையும், கல்வெட்டாக எழுத உத்தரவிட்டார்.

இந்த கல்வெட்டு விவரங்கள் தம்பட்டம் அடித்துக்கொள்வதற்கானவை அல்ல.

தன்னைப்போல மற்றவர்களும் வழங்கும் தானங்கள், எந்தவித சந்தேகத்துக்கும் இடம் இல்லாமல் கணக்கு விவரம் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்கு வழிகாட்டியாகத்தான் இந்த முறையை மன்னர் ராஜராஜன் கையாண்டார்.

தங்க நகைகளை நிறுத்து அட்டவணையிடும் போது, அந்த நகையில் உள்ள அரக்கு, செப்பாணி (செம்பு ஆணி), சரடு (கயிறு), சட்டம், பிஞ்சு நீங்கலாக எவ்வளவு தங்கம் உள்ளது என்று குறித்து இருக்கிறார்கள். அந்த நகையில் முத்து போன்ற நவமணிகள் பதித்து இருந்தால், அவற்றின் எடை என்ன? அவற்றின் தன்மை என்ன? அந்த நகையின் மதிப்பு எத்தனை காசு? என்ற எல்லா விவரங்களும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டன.

வைரம், நீலம், புஷ்பராகம், கோமேதகம், பவளம், பச்சை அல்லது மரகதம், வைடூர்யம், மாணிக்கம் உள்பட 11 வகையான ரத்தினங்கள் புழக்கத்தில் இருந்தன என்பதையும் கல்வெட்டு தெரிவிக்கிறது.

ரத்தினங்களை குறிப்பிடும்போது, அந்த ரத்தினங்களில் குறை இருந்தால், அவையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. `பொறிவு', `முறிவு', `காகபிந்து', `ரத்தபிந்து' என்ற விதங்களில் அவை குறைவுபட்டன என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முத்துவட்டம், அனுவட்டம் (வட்டவடிவிலானவை) ஒப்பு முத்து (ஒப்பனை, அதாவது பாலீஷ் செய்யப்பட்ட முத்து), குறுமுத்து (சிறிய முத்து) நிம்பொளம், பயிட்டம், அம்பு முதுங்கறடு, இரட்டை சப்பத்தி, குளிர்ந்த நீர், சிவந்த நீர் உள்பட 23 வகையான முத்துக்கள் பற்றிய குறிப்புகளை கல்வெட்டில் காணமுடிகிறது.

50-க்கும் மேற்பட்ட தங்க ஆபரணங்கள் புழக்கத்தில் இருந்தன என்ற தகவல்கள் வியக்க வைக்கின்றன. இவற்றில் ஒன்று சோணகச்சிடுக்கு என்று அழைக்கப்பட்டது. `சோணகன்' என்பது கிரேக்கர்களையும், அரேபியர்களையும் குறிப்பது ஆகும். எனவே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யவனர்களும், அரேபியர்களும் சோழ நாட்டுக்கு வந்து வாணிபத்தில் ஈடுபட்டது இதன் மூலம் தெளிவாகிறது.

மன்னர் ராஜராஜன், தஞ்சைப்பெரிய கோவிலுக்கு 100 கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகளையும், வைரம், வைடூர்யம், கோமேதகம், முத்து ஆகிய நவரத்தினங்கள் கோர்க்கப்பட்ட ஆபரணங்களையும், தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட பூஜை பாத்திரங்களையும் வழங்கினார்.

காளம், தளிகை, மண்டை, குடம், கலசப்பானை, முத்து வட்டிகை, கை வட்டிகை, வட்டில், மடல், பிங்களம், படிக்கம், சட்டுவம், நெய் மூட்டை, கலசம், எறிமடல், குறுமடல், தட்டம், இலைத்தட்டு உள்பட 158 வகை வெள்ளிப் பாத்திரங்களை கோவிலுக்கு தானமாக கொடுத்தார்.

கோவில் விழாக்களில் இசைக்கப்படும் வாத்தியமான எக்காளங்கள், மற்றும் திருப்பள்ளித்தொங்கல், தவளச்சத்திரம், திருக்கொற்றக்குடை, ஈச்சோபிகை, வெண் சாமரக்கை, காளாஞ்சி, முதலியவைகளையும், ஸ்ரீமுடி, வீரப்பட்டம், திருஉத்தரபந்தனம், திருவடிக்காறை, திருப்பட்டிகை, சப்தசரி, பஞ்சசரி, திருக்குதம்பை, தோடு, ராஜாவர்த்தம், திரள்மணிவடம், தாலிமணி, ஸ்ரீசந்தம் ஆகிய தங்க நகைகளையும், வடுகவாளி, ஏகாவலி, முத்தின் சூடகம், திருக்கால்வடம் ஆகிய முத்து நகைகளையும், கண்டநாண், புல்லிகைகண்டநாண், பாசமாலை, மாணிக்கத்தின்தாலி,ஸ்ரீவாகுவலையம், பதக்கம், ரத்ன வளையல், ரத்ன கடகம், ரத்ன மோதிரம், நவரத்ன மோதிரம், பிருஷ்ட கண்டிகை ஆகிய ரத்தின ஆபரணங்களையும், தங்கத்தாலும், வெள்ளியாலும் செய்யப்பட்ட ஒட்டுவட்டில், கலசம், குடம், தட்டம், குறுமடல், கிடாரம் ஆகிய பாத்திரங்களையும் மன்னர் ராஜராஜன் வழங்கியதாக கல்வெட்டு பட்டியலிடுகிறது. விலை உயர்ந்த நகை முதல், மிகச்சிறிய கரண்டி உள்பட எல்லா பொருட்களும் கல்வெட்டில் காணப்படுகின்றன.

இதுதவிர, தஞ்சைப்பெரிய கோவில் கட்டிமுடிக்கப்பட்டதும் அதன் மேல் வைப்பதற்காக தங்கமுலாம் பூசப்பட்ட மிகப்பெரிய கலசத்தையும், கோவில் விமானம் முழுவதும் தங்கத் தகடு பதிக்கத் தேவையான தங்கத்தையும், இன்னும் ஏராளமானவற்றையும் ராஜராஜன் வாரிவழங்கிய தகவலையும் கல்வெட்டு தாங்கி நிற்கிறது.

மன்னரைப்போலவே, மற்றவர்களும் கோவிலுக்கு வழங்கிய நன்கொடைகள் ஏராளம். இதன்மூலம், அந்த காலத்திய விதம் விதமான ஆபரணங்கள் மற்றும் அணிகலன்கள் பற்றிய அரிய தகவலை நாம் அறிய முடிகிறது.


- அமுதன்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Nov 14, 2010 2:09 pm

தகவலுக்கு நன்றி ,,,,,,,,,,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக