புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்பகப் புற்றுநோய் பற்றிய முழுத்தகவல்  Poll_c10மார்பகப் புற்றுநோய் பற்றிய முழுத்தகவல்  Poll_m10மார்பகப் புற்றுநோய் பற்றிய முழுத்தகவல்  Poll_c10 
20 Posts - 65%
heezulia
மார்பகப் புற்றுநோய் பற்றிய முழுத்தகவல்  Poll_c10மார்பகப் புற்றுநோய் பற்றிய முழுத்தகவல்  Poll_m10மார்பகப் புற்றுநோய் பற்றிய முழுத்தகவல்  Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்பகப் புற்றுநோய் பற்றிய முழுத்தகவல்  Poll_c10மார்பகப் புற்றுநோய் பற்றிய முழுத்தகவல்  Poll_m10மார்பகப் புற்றுநோய் பற்றிய முழுத்தகவல்  Poll_c10 
62 Posts - 63%
heezulia
மார்பகப் புற்றுநோய் பற்றிய முழுத்தகவல்  Poll_c10மார்பகப் புற்றுநோய் பற்றிய முழுத்தகவல்  Poll_m10மார்பகப் புற்றுநோய் பற்றிய முழுத்தகவல்  Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
மார்பகப் புற்றுநோய் பற்றிய முழுத்தகவல்  Poll_c10மார்பகப் புற்றுநோய் பற்றிய முழுத்தகவல்  Poll_m10மார்பகப் புற்றுநோய் பற்றிய முழுத்தகவல்  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மார்பகப் புற்றுநோய் பற்றிய முழுத்தகவல்  Poll_c10மார்பகப் புற்றுநோய் பற்றிய முழுத்தகவல்  Poll_m10மார்பகப் புற்றுநோய் பற்றிய முழுத்தகவல்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்பகப் புற்றுநோய் பற்றிய முழுத்தகவல்


   
   

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Sep 13, 2010 1:20 pm

மார்பகப் புற்றுநோய் (Breast cancer)

அறிமுகம் (Introduction)





மார்பகங்கள் (Breast)



மார்பகங்கள் நெஞ்சுடன் இணைக்கப்பட்ட அங்கங்களாகும்.இது தாய்ப்பாலினை சுரக்கின்ற சுரப்பிகளையும் அத்துடன் இணைந்த கொழுப்பு,நார் இழையங்களாலும் உருவாக்கப்பட்ட ஓர் அங்கமாகும்.குழந்தை பிறந்ததன் பின்னர் உடலில் ஏற்படும் ஓமோன் மாற்றங்களினால் சுரப்பிகள் தாய்ப்பாலினைச்சுரக்கிறது.இவை கடத்தப்படும் கழுய்களினூடாக மார்பகத்தின் முலையை அடைகிறது.குழந்தையானது முலையை உறிஞ்சுவதனால் மார்பகக்கடத்தும் குழாய்களினூடாக தாய்ப்பாலானது மார்பக முலைகளை அடைந்து குழந்தையின் வாயை வந்தடைகிறது.

வயது மாற்றம்,பருவமாற்றம் கர்ப்பநிலை என்பவற்றை பொறுத்து மார்பகங்களின் அளவு வடிவம் என்பன மாற்றமடையும்.எனினும் தனியொருவருடைய மார்பகங்களை பற்றியும் அவரவர் தெரிந்து வைத்திருத்தல் அவசியமானது.ஏனெனில் அசாதாரணமாக அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் நோய்களின் அறிகுறிகளாக இருக்கலாம்.எனவே இது பற்றி வைத்தியர்களின் ஆலோசனைகளை பெறுதல் அவசியமானது.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Sep 13, 2010 1:20 pm

மார்பகப்புற்று நோய்கள்

உடல் கலங்கள் கட்டுப்பாடில்லாமல் பெருகுவதனாலேயே கட்டிகள் உருவாகின்றன.இக்கட்டிகள் புற்று நோய்கட்டிகள், சாதாரண கட்டிகள் என இருவகைப்படும்.கட்டியானது உடலின் மற்றய பகுதிகளுக்கு பரவும் தன்மையை கொண்டிருப்பின் அவை புற்றுநோய்கட்டிகள் என அழைக்கப்படும்.இவ்வாறான புற்றுநோய்க்கட்டிகள் மார்பகத்தின் இழையங்களிலிருந்து உருவாகின்ற பொழுது அவை மார்பகப்புற்றுநோய் என அழைக்கப்படும்.

பெண்களைப்போன்யே ஆண்களின் மார்பகங்களிலும் புற்றுநோய் உருவாகலாம்.ஆண்களின் மார்பகப்புற்றுநோயானது தீவிர்தன்மை கூடியதாக காணப்படும்.

உலகளாவிய ரீதியில் முதலாவது போதுவான புற்றுநோய் மார்பக புற்றுநோயாகும்.இவை பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களிலேயே ஏற்படுகிறது.

பெரும்பாலான மார்பக புற்றுநோய்கள் மார்பகச் சுரப்பியிலிருந்து அல்லது தாய்ப்பாலை கடத்தும் குழாய்களிலேயே ஏற்படுகிறது

மபார்பகபுற்றுநோயானது நெஞ்சு சுவரிலுள்ள தசை,தோல்,விலா என்பு என்பவற்றனூடு பரவலாம்.அத்துடன் குருதி முலமாக என்புகள்,நுரையீரல் மற்றய மார்பகம் என்பவற்றிற்கும் நிணநீர் மூலமாக அக்குள் கழுத்துப்பகுதியிலுள்ள நிணநீர் முடிச்சுக்களிற்கு (Lymphnodes) பரவலடையலாம்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Sep 13, 2010 1:21 pm

மார்பகப்புற்று நோய் (Brest cancer)

நோய்க்காரணிகள். (Risk factors)



1.பால்.

பெண்களிற்கே மார்பகப்புற்றுநோய் போதுவாக ஏற்படுகின்றது. எனினும் அரிதாக ஆண்களுக்கும் ஏற்படலாம்.

2. வயது

பெரும்பாலான மார்பகப்புற்றுநோய்கள் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே ஏற்படுகின்றது. வயது அதிகரித்துச் செலல்ுகின்ற பொழுது புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகரித்துச் செல்கிறது.

3. இனம் :

வெள்ளை இன மக்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

4. சந்ததியில் வெறு யாருக்காவது மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் , அதிலும் விசேடமாக 50 வயதிற்கு முன்னதாக ஏற்பட்டிருந்தால் அச்சந்ததியைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் மார்பகப் புறறுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரிக்கின்றன. எனினும் கட்டாயமாகச் சந்ததியைச் சேர்ந்தவர்களுக்கு புற்றுநோய் ஏற்படவேண்டிய அவசியமில்லை.

5. உங்களுக்கு இதற்கு முதல் மார்பகப்புற்று நோய் ஏற்பட்டிருந்தால் மீண்டும் அதே மார்புப்பகுதியிலோ அல்லது மற்றய மார்பகத்திலோ புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியமுள்ளது.

6. பின்வரும் காரணங்களால் உங்களுடைய மார்பக இழையங்கள் மாதாந்த ஓமோன் மாற்றத்திற்கு உள்ளாவதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றது. இதனால் மார்பகப் புற்றுநொய் ஏற்படலாம்.

* குறைந்த வயதில் பூப்டைதல்.(12 வயதிலும் குறைவாக)

* குடிய வயதில் மாதவிடாய் நிற்றல்(55 வயதிற்கு அதிகமாக)

* பிள்ளைகள் இல்லாதிருத்தல்.

*. முதலாவது பிள்ளை கிடைக்கும் போது தாயின் வயது அதிகமாக இருத்தல்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Sep 13, 2010 1:21 pm

எனவே தாய்ப்பால் ஊட்டுதல் , அதிகளவு குழந்தைகள் இருத்தல் , போன்றவற்றினால் மார்பகப் புற்றுநோய் உண்டாவது குறைவடைகின்றது.

7 கருத்தடை மாத்திரை (Ocp—combined oral contraceptive pill) HRT (Hormore replacement therapy) என்பவற்றை நீண்டகாலத்திற்கு பாவனை செய்தல்.

8. அதிகளவில் புகைப்பிடித்தல்., கூடியளவு மதுபானம் அருந்துதல்.உடல்பருமன் அதிகமாக இருத்தல். ,மார்பகங்கள் அடர்த்தியானவையாக அதாவது சுரப்பு இழையங்கள் அதிகமாகவும் கொழுப்பு இழையங்கள் குறைவாகவும் இருத்தல்.

9. BRCA BRCA2 உனப்படுகின்ற இரண்டுவகையான பரம்பரைப் பதார்தத்ங்களில் (Genea) மாற்றங்கள் (Mutations) ஏற்படுவதால் மார்பகப்புற்றுநோய் ஏற்படலாம்.
மேற்கூறிய காரணங்களால் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகரிக்கின்றது. எனினும் பெரும்பாலான மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் மேற்கூறப்பட்ட காரணிகள் போதுவாகக் காணப்படுவதில்லை.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Sep 13, 2010 1:21 pm

மார்பகப்புற்றுநோய் (Breast cancer)

நோய் அறிகுறிகள். (Clinical features)




மார்பகப் புற்றுநோய் காரணமாக கீழ்வரும் நோய் அறிகுறிகள் ஏற்படலாம். எனினும் நோயின் ஆரம்பகட்டத்தில் எந்த விதமான நோய்அறிகுறிகளும் இருப்பதில்லை. எனவே குறித்த காலத்திற்கொருமுறை வைத்தியரை நாடி அவரதி ஆலோசனைகளை பெறுவதன் முலம் புற்றுநோய் வருவதனைத் தடுத்துக் கொள்ளலாம். கீழே குறிப்பிட்ட நோய்க்குணாதிசயங்கள் வாதாரணமான புற்றுநோயல்லாத மார்பக நோய்களாலும் ஏற்படலாம். எனவே கீழ்வரும் நோயறிகுறிகள் காணப்பட்டால் வைத்தியரின் உதவியைப் பெற்று நோயைநிர்ணயம் செய்வதே சிறந்தமுறையாகும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 13, 2010 1:22 pm

நன்றி அன்பு மலர்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Sep 13, 2010 1:22 pm

நோய் அறிகுறிகள். :



1. மார்பகக் கட்டிகள்.

இதுவே போதுவான நோயறிகுறியாகும். பெரும்பாலான புற்றுநோய்க்கட்டிகள் நோவினை உருவாக்குவதில்லை. எனினும் பெரும்பாலான மார்பகக்கட்டிகள் சாதாரணகட்டிகளே தொவது புற்றுநோயினை உருவாக்குவதில்லை. அவை திரவம் நிரம்பிய கட்டியாகவே (breast cyst) Fibro adenoma , பாற்கட்டி (Galacocele), சீழ்கட்டி (Breast abcess) போன்ற சாதாரண கட்டிகளாக இருக்கலாம். எனவே வைத்தியரின் உதவியையும் ஆலோசனையையும் பெற்றுக் கொள்ளளுதலே சிறந்தது.

2. புற்றுநோயானது மார்பகத்தின் முலையினுள் அல்லது தோலினுள் பரவுவதனால் அவற்றில் மாற்றங்கள் ஏற்படுகின்றது. முலைக்காம்புகள் மார்புப் பகுதியினுள் செல்லுதல் (Inverted nipple) தோலில் பள்ளங்கள் அல்லது நெளிவு சுளிவுகள் ஏற்படலாம்.

3. சில வேளைகளில் மார்பு முலையினூடாக இரத்தம் அல்லது சீழ்போன்ற பதார்த்தங்கள் வெளியேறலாம்.

4. மார்புப் புற்றுநோயானது நிணநீர் முடிச்சுக்குப் பரவுவதனால் அவை வீக்கமடைகின்றது இதனால் அக்குள் பகுதியில் அல்லது கழுத்துப் பகுதியில் நிணநீர் முடிச்சுக்களில் வீக்கம் ஏற்படலாம்.

5. மார்பகத்தினுடைய பருமன் அல்லது வடிவம் என்பன மாற்றத்திற்குள்ளாகலாம்.

6. புற்றுநோயானது என்பு , நுரையிரல் ,என்பவற்றிற்குப் பரவுவதனால் அவற்றின் காரணமாகவும்நோய் அறிகுறிகள் ஏற்படலாம். உதாரணமாக என்பு நோவு ஏற்படலாம்.

7. சிலருடைய மார்பகத்தின் தோலானதுதோடம்பழத்தின் தோலினைப் போன்று தோற்றமளிக்கலாம்.



நோய்பற்றிய விபரங்களைக் கேட்டறிந்த பின்னர் மருத்துவர் உங்களது மார்பகங்களை சோதனை செய்து பார்ப்பார் .இதன் மூலம் மார்பகக் கட்டிகள் பற்றிய பல விபரங்கள் கண்டறியப்படும் அவை சாதாரணமானவையா அல்லது புற்ுநோய்குரியதா போன்ற தகவல்களும் சேகரிக்கப்படும் மேலும் உடலின் மற்றய பகுதிகளுக்கு தெ பரவியுள்ளதா? என்பதும் தெரிந்து கொள்ளப்படும் இதன்பின்னர் பல மேலதிக பரிசோதனைகள் செய்யப்படுவதன் மூலம் நோய் உறுதிசெய்யப்படும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Sep 13, 2010 1:23 pm

மார்பகப்புற்றுநோய் (Breast cancer)

பரிசோதனைகள். ( Investrgations)


நோய்பற்றிய விபரங்களைக் கேட்டறிந்தபின்னர் வைத்தியரால் மார்பகங்கள் பரிசோதிக்கப்படும் இதன் பின் அவர் கீழ்வரும் சில பரிசோதனைகள் செய்வதன் மூலம் நோயினை நிர்ணயம் செய்து கொள்வார்.

பரிசோதனைகள் :


1. அல்ரா சவுண்ட் ஸ்கான் பரிசோதனை (Ultra sound scan of breast )

இது 35 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மிகவும் உகந்த பரிசோதனையாகும்.ஏனெனில் அவர்களின் மார்பகங்கள் அடர்த்தி கூடியதாகக் காணபப்டுவதால் mammography செய்வதில் கடினத்தன்மை காணப்படும்.

ஸ்கான் செய்யப்படுவதன் மூலமாக கட்டியின் சிபரங்கள் பல பெறப்படும்.கட்டி நீர்நிரம்பிய கட்டியா அல்லது திண்மக்கட்டியா போன்ற வுபரங்கள் கட்டியின் பரிமாணங்களும் பெறப்படும்.

2. மமோகிரபி (Mammography)

இது ஒரு விசேட வகையான X—கதிர் பரிசோதனையாகும்.தென் முலம் கட்டியினதும் , முழுமார்பகத்தினதும் அசாதரணதன்மைகள் கண்டுபிடிக்கப்படும்.

3. பயோப்சி (biopsy)

மார்பகக் கட்டியின் ஒரு பகுதியை எடுத்து அதிலே காணப்படுகின்ற கலங்களின் தன்மையை நுணுக்குக் காட்டியின் கீழ் பரிசோதிப்பதன் முலம் , கட்டியானது புற்றுநோய்கக்ான தன்மையைக் கொண்டுள்ளதாஅல்லது சாதாரண கட்டியா என்பது தீர்மானிக்கப்படும்


மார்பகத்தில் செய்யப்டும் பயோப்சி பரிசோதனை பலவகைப்படும்.

* Fine needle aspiration (FNA ) இதன் போது மெல்லிய ஊசியானது கட்டியினுள் செலுத்தப்பட்டு அதன்கலங்கள் பெறப்படும்.

* Tru cut biopsy இதன் போது சிறிய பெரிய ஊசியானது மார்பகக் கட்டியினுள் செலுத்தப்பட்டு அக்கட்டியின் ஒரு சிறிய பகுதி பெறப்பட்டு நுணுக்குக் காட்டியின் கீழ் அவதானிக்கப்படும்.

· இதைவிட சிறிய சத்திரசிகிச்சை முலமும் கட்டியின் சிறியதுண்டு /முழுமையான கட்டி பெறப்பட்டு பரிசோதிக்கப்படலாம். இவை முறையே Incisional biopsy / Excisional biopsy என அழைக்கப்படும்.


4. மார்பகப்புற்றுநோயினை உறுதி செய்தபின்னர் , அது எவ்வளவு தூரத்திற்கு பரவியுள்ளது என்பதைப் பார்த்தல் சத்திர சிகிச்சை செய்வதற்கு அத்தியவசியமானதாகும். இது Staging’ என அழைக்கப்படும். இதற்காகா கீழ்வரும் பரிசோதனைகள் செய்யப்படும்.

* மார்புப் பகுதியின் X- கதிர் படம் (X—ray –chest) நுரையீரலுக்கு புற்று நோய் பரவியுள்ளதா என்பதை அவதானிக்க வயிற்றின்

* Utrasound scan இதன் மூலம் ஈரலிற்கு புற்றுநோய் பரவியுள்ளதா என்பதை அவதானிக்கலாம்.

· Bone scan என்புகளை பரிசோதனைக்கு உட்படுத்துவதன் மூலம் அவற்றினுள் புற்றுநோய்க்கலங்கள் பரவியுள்ள தன்மை அவதானிக்கப்படும்.


5. கட்டியின் ஈஸ்ரோஜன் (Oestrogn) புரஜெஸ்ரரோன் (Progesteone) வாங்கிகளின் (Receptors) . தன்மைகளை பரிசோதித்தல்.,சிகிச்சை வழங்குவதற்கு உதவியாக இருக்கும்.







சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Sep 13, 2010 1:24 pm

மார்பகப்புற்றுநோய் (Breast cancer)

சிகிச்சை முறை (Treatment)



கீழ்வரும் பல வகையான சிகிச்சை முறைகளுள்ளன

· சத்திரசிகிச்சை(Surgery)

· கதிரியியக்க சிகிச்சை (Radiotherapy)

· இரசாயன மருந்து சிகிச்சை(Chemotherapy)

· ஓமோன் சிகிச்சை(Hormone treatment)


போதுவாக இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சிகிச்சைகள் பயன்படுத்தப்படும்.

· புற்றுநொயின் நிலை (Staging) அதாவது கட்டியின் பருமன்,உடலின் மற்றய பகுதிகளுக்கு எவ்வாறு பரவியுள்ளது போன்ற தகவல்கள்

· நோயாளியின் வயது,உடல்நிலை

· நோயாளியின் விருப்பத்ததன்மை

· வைத்தியசாலையில் காணப்படும் சிகிச்சை வசதிகள்

· கட்டியானது ஓமோன் சிகிச்சைக்கு கீழ்ப்படியும் தன்மை,ஏனெனில் சில கட்டிகள் ஓமோன் சிகிச்சைக்கு கீழ்ப்படிபவையாகவும் வேறு சில கீழ்ப்படியாத தன்மையை கொண்டவையாகவும் காணப்படும்.

சிகிச்சையினை பெறுவதற்கு முன்னதாக ஒவ்வொரு சிகிச்சையினதும் நன்மை தீமை பற்றி உங்கள் வைத்தியரிடம் கேட்டறிந்து கொள்வது அவசியமாகும்.ஏனெனில் மேற்கூறப்பட்ட சிகிச்சை முறைகள் ஒவ்வொன்றும் பல பக்க விளைவுகளை கொண்டவை.எனவே அவை பற்றி முன்னதாகவே அறிந்திருத்தல் அவசியமாகும்.

வழங்கப்படும் சிகிச்சை முறையானது பின்வரும் ஏதாவது ஒரு நோக்கத்தினை கொண்டிருக்கும்

1. நோயினை குணமாக்கும் நோக்கம் கொண்ட சிகிச்சை முறை (Curative treatment)
மார்பக புற்றுநோயானது அதன் ஆரம்ப நிலைகளில் கண்டறியப்படுமாயின் நோயினை குணமாக்கும் நோக்கம் கொண்ட சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும்

2. நோய்குணங்குறிகளை குறைக்கும் சிகிச்சை முறை (Palliative treatment)

நோயாளியின் மார்பகப்புற்றுநோயானது மிகவும் பிந்திய நிலைகளில் (Advanced stage) காணப்படுகின்ற போது Curative treatment செய்யப்பட முடியாது.எனவே நோயாளியின் வலி போன்றவற்றை குறைப்பதற்காகவும் பு்றுநோயின் தீவிரத்தன்மையை குறைப்பதற்காகவும் பல்வேறுபட்ட சிகிச்சைமுறைகள் காணப்படும்.இதற்குள் சத்திரசிகிச்சை.கதிரியியக்க சிகிச்சை,

இரசாயன மருந்து சிகிச்சை ,ஓமோன் சிகிச்சை என்பன அடங்கும்

கதிரியக்க சிகிச்சையின் போது X கதிர்கள் புற்றுநோய்க்கட்டியின் மீது செலுத்தப்பட்டு புற்றுநோய்க்கலங்கள் அழிக்கப்படுகிறது. இச்சிகிச்சை இலங்கையில் மகரகம வைத்தியசாலையில் வழங்கப்படுகிறது.


இரசாயன மருந்து சிகிச்சையின் போது பல்வறு விதமான ருந்துப்பொருட்கள் வாயின் மூலமாகவோ,நாளங்கள் மலமாகவோ செலுத்தப்பட்டு புற்றுநோக்கலங்கள் இறக்கச்செய்யப்படும்.
ஆரோக்கிய தகவல் தளம்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Sep 13, 2010 1:28 pm

தகவலுக்கு நன்றி அண்ணா...





கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக