புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கையில் தமிழர் பகுதியில் மீன் பிடிக்க சீனர்களுக்கு அனுமதி Poll_c10இலங்கையில் தமிழர் பகுதியில் மீன் பிடிக்க சீனர்களுக்கு அனுமதி Poll_m10இலங்கையில் தமிழர் பகுதியில் மீன் பிடிக்க சீனர்களுக்கு அனுமதி Poll_c10 
20 Posts - 65%
heezulia
இலங்கையில் தமிழர் பகுதியில் மீன் பிடிக்க சீனர்களுக்கு அனுமதி Poll_c10இலங்கையில் தமிழர் பகுதியில் மீன் பிடிக்க சீனர்களுக்கு அனுமதி Poll_m10இலங்கையில் தமிழர் பகுதியில் மீன் பிடிக்க சீனர்களுக்கு அனுமதி Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கையில் தமிழர் பகுதியில் மீன் பிடிக்க சீனர்களுக்கு அனுமதி Poll_c10இலங்கையில் தமிழர் பகுதியில் மீன் பிடிக்க சீனர்களுக்கு அனுமதி Poll_m10இலங்கையில் தமிழர் பகுதியில் மீன் பிடிக்க சீனர்களுக்கு அனுமதி Poll_c10 
62 Posts - 63%
heezulia
இலங்கையில் தமிழர் பகுதியில் மீன் பிடிக்க சீனர்களுக்கு அனுமதி Poll_c10இலங்கையில் தமிழர் பகுதியில் மீன் பிடிக்க சீனர்களுக்கு அனுமதி Poll_m10இலங்கையில் தமிழர் பகுதியில் மீன் பிடிக்க சீனர்களுக்கு அனுமதி Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
இலங்கையில் தமிழர் பகுதியில் மீன் பிடிக்க சீனர்களுக்கு அனுமதி Poll_c10இலங்கையில் தமிழர் பகுதியில் மீன் பிடிக்க சீனர்களுக்கு அனுமதி Poll_m10இலங்கையில் தமிழர் பகுதியில் மீன் பிடிக்க சீனர்களுக்கு அனுமதி Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
இலங்கையில் தமிழர் பகுதியில் மீன் பிடிக்க சீனர்களுக்கு அனுமதி Poll_c10இலங்கையில் தமிழர் பகுதியில் மீன் பிடிக்க சீனர்களுக்கு அனுமதி Poll_m10இலங்கையில் தமிழர் பகுதியில் மீன் பிடிக்க சீனர்களுக்கு அனுமதி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையில் தமிழர் பகுதியில் மீன் பிடிக்க சீனர்களுக்கு அனுமதி


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 11, 2010 12:37 pm

இலங்கையில் தமிழர் பகுதியான நந்திக்கடல் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை சீனர்களுக்கு வழங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.

முல்லைத்தீவில் உள்ள நந்திக்கடல் பகுதியில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பிறகு அப்பகுதி இலங்கையின் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அங்கிருந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டனர். அதன்பிறகு படிப்படியாக தமிழர்கள் அவரவர் வசிப்பிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தமிழர்கள் வாழ்வாதாரத்துக்கான நந்திக்கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்கு சீனர்களுக்கு இலங்கை அரசு அனுமதி அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

இதற்கு தமிழர் தேசிய கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோஹராதலிங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை அவர் பேசியுள்ளார். ஆனால் இலங்கை அரசு இதற்கு பதில் ஏதும் தெரிவிக்காமல் மெüனம் காத்துவருகிறது.

முல்லைத்தீவு கடல் பகுதியில் மீண்டும் மீன் பிடிக்கலாம் என்று இலங்கை அரசு அறிவித்ததைத் தொடர்ந்து தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீன்பிடித் தொழிலில் இறங்க அவர்கள் தயாராவதற்குள் இலங்கை அரசின் நடவடிக்கை அவர்களுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது.

நந்திக்கடல் பகுதியில் 60.45 சதுர கி.மீ. சுற்றளவில் பல்வேறு வகையான இறால்கள் அதிக அளவில் உள்ளன. மருத்துவ குணம் வாய்ந்த விலை மதிப்புமிக்க மீன்களும் அப்பகுதியில் உள்ளன. இவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக அளவில் வருவாய் ஈட்டமுடியும் என்ற நோக்கில் அரசு இத்தகைய நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இந்நிலையில் நந்திக் கடல் பகுதியில் இறால் பண்ணைகளை அமைப்பதற்கு சீனர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் டாக்டர் ரஜிதா சேனரத்னே தெரிவித்துள்ளதாக பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. அவரைத் தொடர்புகொண்டபோது இதை உறுதி செய்ய மறுத்துவிட்டார். இலங்கை கடல் பகுதியில் மீன் வளம் சிறப்பாக உள்ளதால் வணிக ரீதியாக அதை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இலங்கை அரசின் இத்தகைய நடவடிக்கையால் அப்பகுதியில் வசிக்கும் தமிழ் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் உள்ளூர் மக்கள் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் தமிழர்களின் பாரம்பரிய தொழில் முடக்கப்படுவதுடன் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது என்று வினோ நோஹரதலிங்கம் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் உள்ள மக்களுக்கு கடலில் சென்று மீன்பிடிப்பதைத் தவிர மாற்றுத் தொழில்கள் தெரியாது. அப்படி அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட தொலைவு வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதில் போதிய மீன்கள் கிடைப்பதில்லை.

ஏற்கெனவே இப்பகுதியில் சிங்கள மீனவர்கள் மீன் பிடித்துவரும் நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களும் கால் பதிப்பதால் தாங்கள் முற்றிலும் நிராயுதபாணிகளாக்கப்படுவோம் என்று தமிழர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.



தமிழக மீனவர்களுக்கு ஆபத்து?



இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்பட்டு வரும் நிலையில், சீனர்களுக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ள நடவடிக்கை மேலும் சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. இதனால் தமிழக மீனவர்களுக்கு மட்டுமின்றி இந்திய அரசுக்கும் புதிய தலைவலி உருவாகியுள்ளது.

இலங்கையில் சீனர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக தமிழர்கள் பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் உரிமை சீனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பூர்வீககுடி தமிழ் மக்களின் வேலைவாய்ப்புகள் மறைமுகமாக பறிக்கப்பட்டன. இந்நிலையில் கடல் தொழிலிலும் தமிழர் பகுதிகளில் சீனர்கள் காலூன்றுவதற்கு இலங்கை அரசு உரிமை அளித்துள்ளது. இது இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமின்றி தமிழக மீனவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்திய கடல் பகுதியில் சீனர்கள் அத்துமீறி மீன்பிடிக்கும் பட்சத்தில் தமிழக மீனவர்களுக்கு மட்டுமின்றி இந்திய அரசுக்கும் சங்கடமான சூழ்நிலை உருவாகும். இந்த விஷயத்தில் இந்திய அரசு போதிய அக்கறை காட்டாமல் இருந்து வருவது கவலையளிக்கிறது என தமிழக மீனவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 11, 2010 12:57 pm

ரபீக் wrote: இலங்கையில் தமிழர் பகுதியான நந்திக்கடல் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை சீனர்களுக்கு வழங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கு தமிழர் தேசிய கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோஹராதலிங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அடேங்கப்பா!!! கடும் எதிர்ப்பு தெரிவித்தாராமா .... இலங்கையில் தமிழர் பகுதியில் மீன் பிடிக்க சீனர்களுக்கு அனுமதி 677196 இலங்கையில் தமிழர் பகுதியில் மீன் பிடிக்க சீனர்களுக்கு அனுமதி 677196

அப்புறம் கண்டனம் , வலியிருத்துதல் , வற்புறுத்துதல் , லெட்டர் போடுறது இதெல்லாம் இருக்கு உங்களுக்கு தெரியாதா நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களே.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக