புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
ஜாஹீதாபானு | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதிராவுக்கு மீண்டும் ஒரு உதவி வேண்டும்.....
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Aathira wrote:என் அன்பான உறவுகளே உலகில் என்னென்ன அதிசயங்கள் இருக்கின்றனவோ ( ஏழு அதிசயம் இல்ல. அவை போல) அருள் கூர்ந்து அவற்றைக் கொஞ்சம் எனக்கு சொல்லுங்களேன். நன்றி.
அன்புடன்
ஆதிரா
உங்கள் கவிதையே அதிசயம்!
Aathira wrote:என் அன்பான உறவுகளே உலகில் என்னென்ன அதிசயங்கள் இருக்கின்றனவோ ( ஏழு அதிசயம் இல்ல. அவை போல) அருள் கூர்ந்து அவற்றைக் கொஞ்சம் எனக்கு சொல்லுங்களேன். நன்றி.
அன்புடன்
ஆதிரா
வாழ்வை ரசிப்பவனுக்கு ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு விஷயமும் அதிசயங்கள் தோழி
Aathira wrote:என் அன்பான உறவுகளே உலகில் என்னென்ன அதிசயங்கள் இருக்கின்றனவோ ( ஏழு அதிசயம் இல்ல. அவை போல) அருள் கூர்ந்து அவற்றைக் கொஞ்சம் எனக்கு சொல்லுங்களேன். நன்றி.
அன்புடன்
ஆதிரா
தவறான வலைதளத்திற்கு வந்துள்ளீர்கள் தயவு செய்து தாங்கள் வந்துள்ள வலைத்தளத்தை சரிபார்க்கவும்.
கூகிளில் உங்கள் அனைத்து தேடலுக்கும் விடை கிடைக்கும்,காணாமல் போன என் இரண்டு காதலிகளையே அங்கு தான் தேடி கண்டுபிடித்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். சோ ப்ளீஸ் யு கேன் சர்ச் இன் கூகிள்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
உலக அதிசயம் : மச்சு பிச்சு
பெரு நாட்டில் இயற்கையின் தாராள அழகின் நடுவே அமைந்திருக்கும் இந்த மச்சு பிச்சு தற்போதைய உலக அதிசயங்களில் ஒன்று எனும் பெருமையைப் பெற்றுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 7875 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த நகர் இன்கா நாகரீக மக்களின் கட்டிடக்கலைக்குச் சான்றாகவும், அவர்களுடைய ரசனையின் உச்சத்திற்கு எடுத்துக் காட்டாகவும் விளங்குகிறது.
உருபாமா பள்ளத்தாக்கின் அருகே அடர் காட்டில், அருவிகளின் ஆரவாரத்தில் கற்பனை செய்ய முடியாத அழகின் உச்சத்தில் இந்த நகர் அமைந்துள்ளது. கஸ்கோ நகரிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது.
பளபளப்பாக்கப்பட்ட உலர் கற்களைக் கொண்டு மச்சு பிச்சு. இத்தனை ஆண்டு கால இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி இது இன்னும் கம்பீரமாய் இருப்பதே கற்கால மனிதர்களின் ஆற்றலுக்கு ஓர் எடுத்துக்காடு.
இத்தனை ஆயிரக்கணக்கான கற்களை எப்படி இந்த உச்சிக்கு கொண்டு வந்தார்கள் என்பது வியப்பின் எல்லைகளுக்கு நம்மை கொண்டு செல்கிறது.
இங்கே இண்டிகுவாட்டானா எனும் ஒரு கல் இருந்தது. இதில் நிறைய ஆவிகள் இருந்ததாகவும், இதில் நெற்றியை வைத்துத் தேய்த்தால் ஆவி உலகத்துடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் கதைகள் உலவின. கடந்த 2000 ஆண்டு இதன் மீது ஒரு படப்பிடிப்புக் குழுவினரின் கிரேன் விழுந்ததால் உடைந்து நாசமானது.
இந்த நகர் இன்கா மன்னனின் கோட்டையாக இருந்திருக்கலாம் எனவும், சுமார் ஆயிரம் பேர் இந்த அரண்மனை நகரில் வாழ்ந்திருக்கலாம் எனவும் கருதுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இந்த நகரின் வரலாற்றுக் கதை சிலிர்ப்பும், வியப்பும், அதிர்ச்சியும், சோகமும் கலந்து கானகத்தைப் போலவே அடர்த்தியாய் கிடக்கிறது.
பெரு நாட்டின் மீது ஸ்பானிஷ் படைகள் தாக்குதல் நடத்தியதால் தப்பி ஓடிய பெரு நாட்டு இன்கா மக்கள் கஸ்கா நகரை விட்டு
அடர் காடுகள், பள்ளத்தாக்குகளில் தஞ்சம் புகுந்தனர். கஸ்கா ஸ்பானியர்களின் ஆக்கிரமிப்புக்குள் போனது.
காட்டுக்குள் தங்கிய இன்கா மக்களை ஸ்பானிஷ் படை நெருங்க முடியாமல் விலகி விட்டது. ஆனால் கானகத்தில் நுழைந்த இன்கா மக்கள் தங்களுக்கென ஒரு பெரிய நகரை காட்டுக்குள்ளேயே நிர்மாணித்தனர். வில்கபாம்பா என அவர்கள் அந்த நகருக்குப் பெயரிட்டனர்.
நகரை நிர்மாணித்த இன்கா மக்கள் தங்களுடைய நிம்மதியான வாழ்க்கையைக் கெடுத்த ஸ்பானியர்களுக்கு சண்டை, போர் என குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தனர். தன்னுடைய நாட்டை மீட்க நினைத்த இன்கா மக்களின் தாகமே அது.
ஸ்பானியர்கள் திரும்பித் தாக்கிக் கொண்டே இருந்தார்கள். சுமார் முப்பத்து ஆறு ஆண்டுகள் இந்த சண்டை விட்டு விட்டு நடந்தது. ஸ்பானியர்கள் கடைசியில் 1572ல் மாபெரும் கொடூரத் தாக்குதலை நிகழ்த்தினார்கள்.
இன்கா மக்களை வயது, பாலியல் வேறுபாடு ஏதுமின்றி கொன்று குவிக்க ஆரம்பித்தார்கள். போராளிகள் மட்டுமன்றி கண்ணில் பட்ட அனைவருமே படுகொலை செய்யப்பட்டனர்.
ஸ்பானிய படைகள் கடைசியில் வில்காபாமாவையும் தாக்கியது. இன்கா மக்களின் கடைசி மன்னன் துப்பாக் அமாரு சிறை பிடிக்கப்பட்டான்.
மன்னனைச் சிறைப்பிடித்த ஸ்பானியர்கள் அவரை கஸ்கோ நகருக்குக் கொண்டு பிளாசா டி ஆர்மாஸ் என்னுமிடத்தில் வந்து படுகொலை செய்தனர்.
இன்கா மக்களின் வியர்வையில் உருவான வில்காபாம்பா நகர் பாழடைந்து கானகத்தின் மௌனத்துக்குள் தன்னைக் கரைத்துக் கொண்டு அமைதியாய் இருந்தது, ஓர் இனம் அழிந்த வரலாற்றின் கருப்புக் கண்ணீர் துளியாய்.
ஹிராம் பிங்காம் எனும் யேல் பல்கலைக்கழக தத்துவ ஆசிரியருக்கு ஆர்வம் வாய்க்காமல் போயிருந்தால் இந்த மச்சு பிச்சு எப்போது உலகிற்கு அறிமுகமாயிருக்கும் என்று சொல்ல முடியாது.
இன்கா மக்களின் கதைகளிலும், அவர்களுடைய கலாச்சார வாழ்க்கை முறையிலும் ஆர்வம் கொண்ட ஹிராம் பிங்காம் 1911ம் ஆண்டு தன்னுடன் சிலரையும் அழைத்துக் கொண்டு கஸ்கோ வை விட்டு காட்டுக்குள் பயணமானார் தொலைந்து போன நகரைக் கண்டுபிடிக்க.
இவர்கள் பயணம் துவங்கிய சில நாட்களிலேயே இன்கா மக்களின் நகர் இடிபாடுகள் ஒன்றைக் கண்டனர் அதற்கு பட்டாலக்டா என்று பெயரிட்டனர்.
தொடர்ந்து ஒருவாரம் நடந்த அவர்கள் மண்டோர்பம்பா எனுமிடத்தில் தங்கினர். அங்கே சிலர் வாழ்ந்து கொண்டிருந்தனர் ! அங்கிருந்து தங்கள் பயணத்தைக் குறித்து பேசிக்கொண்டிருந்தவர்கள் எதேச்சையாக அங்கிருந்த ஒரு நபரிடம் உரையாடினார்கள் அவர் பெயர் மெல்கோர் அர்டீகா.
அவர் சாதாரணமாய் சொன்ன ஒரு செய்தியைக் கேட்டு விருட்டென எழுந்தார் பிங்காம். இங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வில்கோனாட்டா அருவிக்கு மறுபக்கம் மலையின் மேல் சில கல் வீடுகள் உள்ளன என்பதே அந்த செய்தி.
ஹிராம் பிங்காம் அந்த மனிதரையும் அழைத்துக் கொண்டு அந்த இடத்துக்குச் செல்ல விரும்பினார். ஆனால் அப்போது மழைக்காலமாக இருந்ததால் கூட வந்தவர்களில் ஒருவரைத் தவிர எவரும் அத்தகைய உயிரைப் பணயம் வைக்கும் பயணத்துக்கு விரும்பவில்லை.
பிங்காம் துணிந்தார். தனியே அந்த நபரையும் அழைத்துக் கொண்டு பயணமானார். அவர்கள் குறிப்பிட்ட இடத்தை மிகுந்த சிரமத்துக்கிடையே அடைந்தனர்.
மேலே சென்று பார்த்த பிங்காம் வியப்பின் உச்சிக்குச் சென்றார். இது தான், இது தான் நான் தேடிய இடம் என குதித்தார். அங்கே அற்புதமாய் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு நகரே இருந்தது. இதுவே இன்றைய மச்சு பிச்சு ! “இன்கா மக்களின் தொலைந்த நகரம்” என அதை அவர் அழைத்தார்.
காலம் அந்த நகரின் மீது முளைப்பித்திருந்த மரங்களுக்கு வயதாகியிருந்தது. மரங்களும், பாசிகளும் இடிபாடுகளுக்குமிடையே சத்தமில்லாமல் கிடந்தது அந்த சரித்திரம்.
இன்னோர் வியப்பு அங்கும் ஒரு சில மனிதர்கள் உலகை விட்டு தனியே ஒளிந்து வாழ்ந்து கொண்டிருந்தது !
பிங்காம் தனது யேல் பல்கலைக்கழகத்தை உதவிக்காக அணுகினார். பல்கலைக்கழகம் தேசிய சுற்றுச் சூழல் அமைப்புடன் கைகோத்து பிங்காமுக்கு உதவியது.
அடுத்த ஆண்டே பிங்காம் தேவையான உதவிகளுடன் இந்த இடத்திற்கு மீண்டும் வந்து அந்த நகரை அதன் தன்மை கெடாமல் சுத்தம் செய்யத் துவங்கினார். அந்த இடத்தைச் சுத்தம் செய்ய அவருடைய குழுவினருக்கு மூன்று ஆண்டு காலம் ஆனது !
அங்கிருந்து 173 எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் 150 பேர் பெண்கள்!. பெண்களை சூரியக்கடவுளுக்கு இவர்கள் பலியிட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. சுமார் ஆயிரம் பேர் தங்கியிருக்கக் கூடிய இடத்திலிருந்து வெறும் 173 எலும்புக்கூடுகள் மட்டுமே கிடைத்திருப்பது மேலும் பல கற்பனைகளுக்கு வழி வகுக்கிறது.
மற்றவர்கள் இந்த கோட்டை பணியாளர்களாக இருக்கலாம், அவர்கள் பள்ளத்தாக்குகளில் எறியப்பட்டிருக்கலாம், அல்லது வேறு எங்கேனும் புதைக்கப்பட்டிருக்கலாம், அல்லது வெளியேறியிருக்கலாம் என்பது அவற்றில் ஒன்று.
இந்த கால கட்டத்தில் ஆராய்ச்சிக்கென பல பொருட்களை பிங்காம் அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றார்.
அங்கிருந்து தங்கம் வெள்ளி எதுவும் கிடைக்கவில்லை எனவும், வெண்கலம், மரம் மற்றும் வேறு சில உலோகங்களாலான 521 பொருட்களை தான் கண்டெடுத்ததாக பிங்காம் தெரிவிக்கிறார்.
பிங்காம் மறுத்தாலும், இந்த இடத்திலிருந்து ஏராளம் பொன் வெள்ளி போன்றவை கிடைத்திருக்க வேண்டும் என்றே பலர் கருதுகின்றனர்.
யாரும் அணுகாத, ஒரு பெரும் சாம்ராஜ்யம் நடந்திருக்கக் கூடிய வாய்ப்புடைய இந்த இடத்தில் மிக விலையுயர்ந்த பொருட்கள் ஏராளம் கிடைத்திருக்கக் கூடும் எனவும் அவை பிங்காம் மூலம் பெரு நாட்டை விட்டு வெளியேறியிருக்க வேண்டும் என்பதே பலரின் நம்பிக்கை.
தற்போது யேல் பல்கலைக்கழக கண்காட்சியகத்தில் இருக்கின்ற மச்சு பிச்சுவின் மிச்சங்களையும், கலைப் பொருட்களையும் திரும்பவும் மச்சு பிச்சுவுக்கே கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அது இருக்கட்டும். நாம் வரலாற்றுக்கு வருவோம்.
மச்சு பிச்சு தான் வில்காபாம்பா என்று நினைத்து தான் அனைத்தையும் செய்து கொண்டிருந்தார் பிங்காம். ஆனால் உண்மையில் அது வில்காபாம்பா இல்லை! வில்காபாம்பா 1964ம் ஆண்டு ஜீன் சாவோய் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
அதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த இடத்தை பிங்காம் 1909ம் ஆண்டே கண்டார். ஆனால் இது ஏதோ முக்கியமற்ற ஒரு இடம் என நினைத்து அசட்டையாய் விட்டு விட்டார் !
1913ம் ஆண்டு மச்சு பிச்சுவுக்கு
ஒரு இரயில் பாதை அமைக்கும் பணி ஆரம்பமானது. அது படிப்படியாக நடந்து 35 ஆண்டுகளுக்குப் பின் மச்சு பிச்சுவைச் சென்றடைந்தது.
1981ம் ஆண்டு மச்சு பிச்சு இருக்கும் இடத்தையும் சேர்த்து சுமார் 325 சதுர கிலோமீட்டர்களை பெரு அரசு வரலாற்று இடமாக அறிவித்தது. யுனஸ்கோவின் அங்கீகாரம் இரண்டு ஆண்டுகளில் கிடைத்தது.
வில்காபாம்பாவைத் தேடிப்போன பிங்காம் மச்சு பிச்சுவைக் கண்டுபிடித்தார். மச்சு பிச்சு என்ன ? அது ஏன் கட்டப்பட்டது ? போன்ற விவரங்கள் ஏதும் இல்லாமல் ஓர் மர்மத்தின் குழந்தையாய் கிடக்கிறது நகர்.
1450 களில் இந்த மச்சு பிச்சு கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு நூறு ஆண்டுகள் கூட நிறைவேறும் முன்பாகவே இந்த இடத்தை காலி செய்துவிட்டு வெளியேறிவிட்டனர் இன்கா மக்கள்.
ஸ்பானியர்களின் படையெடுப்புக்கு முன்பே இந்த மச்சு பிச்சுவை விட்டு அவர்கள் வெளியேறியிருக்க வேண்டும். வறட்சியோ, நோயோ, அமானுஷ்ய பயமோ ஏதோ ஓர் பாதிப்பு இந்த நகரைக் காலி செய்ய மக்களை நிர்ப்பந்திருக்க வேண்டும் என்று கருதுகின்றனர் ஆய்வாளர்கள்.
சில ஆய்வாளர்கள் ஒருவேளை மன்னன் மரணமடைந்ததால் அடுத்த மன்னன் அந்த இடத்தை விரும்பாமல் இடம்பெயர்ந்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.
எத்தனையோ ஆண்டுகால கடின உழைப்பினால் கட்டப்பட்ட நகர் சில பத்து ஆண்டுகளிலேயே காலி செய்யப்படவேண்டுமெனில் ஏதோ ஓர் மிக மிக வலுவான காரணம் இருந்தே ஆக வேண்டும் என்பதில் ஐயமில்லை.
இங்கிருந்து சுற்றும் பார்க்கும் போது இயற்கையே ஓர் அசையும் சொர்க்கமாக விழிகளுக்குள் நாட்டியாலயமே நடத்துகிறது. புதிய உலக அதிசயங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள மச்சு பிச்சு உண்மையிலேயே உறையும் உண்மைகளும், நிறையும் எழிலுமாக அதிசய மனநிலைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது
http://xavi.wordpress.com/2008/03/24/machu_picchu/
பெரு நாட்டில் இயற்கையின் தாராள அழகின் நடுவே அமைந்திருக்கும் இந்த மச்சு பிச்சு தற்போதைய உலக அதிசயங்களில் ஒன்று எனும் பெருமையைப் பெற்றுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 7875 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த நகர் இன்கா நாகரீக மக்களின் கட்டிடக்கலைக்குச் சான்றாகவும், அவர்களுடைய ரசனையின் உச்சத்திற்கு எடுத்துக் காட்டாகவும் விளங்குகிறது.
உருபாமா பள்ளத்தாக்கின் அருகே அடர் காட்டில், அருவிகளின் ஆரவாரத்தில் கற்பனை செய்ய முடியாத அழகின் உச்சத்தில் இந்த நகர் அமைந்துள்ளது. கஸ்கோ நகரிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது.
பளபளப்பாக்கப்பட்ட உலர் கற்களைக் கொண்டு மச்சு பிச்சு. இத்தனை ஆண்டு கால இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி இது இன்னும் கம்பீரமாய் இருப்பதே கற்கால மனிதர்களின் ஆற்றலுக்கு ஓர் எடுத்துக்காடு.
இத்தனை ஆயிரக்கணக்கான கற்களை எப்படி இந்த உச்சிக்கு கொண்டு வந்தார்கள் என்பது வியப்பின் எல்லைகளுக்கு நம்மை கொண்டு செல்கிறது.
இங்கே இண்டிகுவாட்டானா எனும் ஒரு கல் இருந்தது. இதில் நிறைய ஆவிகள் இருந்ததாகவும், இதில் நெற்றியை வைத்துத் தேய்த்தால் ஆவி உலகத்துடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் கதைகள் உலவின. கடந்த 2000 ஆண்டு இதன் மீது ஒரு படப்பிடிப்புக் குழுவினரின் கிரேன் விழுந்ததால் உடைந்து நாசமானது.
இந்த நகர் இன்கா மன்னனின் கோட்டையாக இருந்திருக்கலாம் எனவும், சுமார் ஆயிரம் பேர் இந்த அரண்மனை நகரில் வாழ்ந்திருக்கலாம் எனவும் கருதுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இந்த நகரின் வரலாற்றுக் கதை சிலிர்ப்பும், வியப்பும், அதிர்ச்சியும், சோகமும் கலந்து கானகத்தைப் போலவே அடர்த்தியாய் கிடக்கிறது.
பெரு நாட்டின் மீது ஸ்பானிஷ் படைகள் தாக்குதல் நடத்தியதால் தப்பி ஓடிய பெரு நாட்டு இன்கா மக்கள் கஸ்கா நகரை விட்டு
அடர் காடுகள், பள்ளத்தாக்குகளில் தஞ்சம் புகுந்தனர். கஸ்கா ஸ்பானியர்களின் ஆக்கிரமிப்புக்குள் போனது.
காட்டுக்குள் தங்கிய இன்கா மக்களை ஸ்பானிஷ் படை நெருங்க முடியாமல் விலகி விட்டது. ஆனால் கானகத்தில் நுழைந்த இன்கா மக்கள் தங்களுக்கென ஒரு பெரிய நகரை காட்டுக்குள்ளேயே நிர்மாணித்தனர். வில்கபாம்பா என அவர்கள் அந்த நகருக்குப் பெயரிட்டனர்.
நகரை நிர்மாணித்த இன்கா மக்கள் தங்களுடைய நிம்மதியான வாழ்க்கையைக் கெடுத்த ஸ்பானியர்களுக்கு சண்டை, போர் என குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தனர். தன்னுடைய நாட்டை மீட்க நினைத்த இன்கா மக்களின் தாகமே அது.
ஸ்பானியர்கள் திரும்பித் தாக்கிக் கொண்டே இருந்தார்கள். சுமார் முப்பத்து ஆறு ஆண்டுகள் இந்த சண்டை விட்டு விட்டு நடந்தது. ஸ்பானியர்கள் கடைசியில் 1572ல் மாபெரும் கொடூரத் தாக்குதலை நிகழ்த்தினார்கள்.
இன்கா மக்களை வயது, பாலியல் வேறுபாடு ஏதுமின்றி கொன்று குவிக்க ஆரம்பித்தார்கள். போராளிகள் மட்டுமன்றி கண்ணில் பட்ட அனைவருமே படுகொலை செய்யப்பட்டனர்.
ஸ்பானிய படைகள் கடைசியில் வில்காபாமாவையும் தாக்கியது. இன்கா மக்களின் கடைசி மன்னன் துப்பாக் அமாரு சிறை பிடிக்கப்பட்டான்.
மன்னனைச் சிறைப்பிடித்த ஸ்பானியர்கள் அவரை கஸ்கோ நகருக்குக் கொண்டு பிளாசா டி ஆர்மாஸ் என்னுமிடத்தில் வந்து படுகொலை செய்தனர்.
இன்கா மக்களின் வியர்வையில் உருவான வில்காபாம்பா நகர் பாழடைந்து கானகத்தின் மௌனத்துக்குள் தன்னைக் கரைத்துக் கொண்டு அமைதியாய் இருந்தது, ஓர் இனம் அழிந்த வரலாற்றின் கருப்புக் கண்ணீர் துளியாய்.
ஹிராம் பிங்காம் எனும் யேல் பல்கலைக்கழக தத்துவ ஆசிரியருக்கு ஆர்வம் வாய்க்காமல் போயிருந்தால் இந்த மச்சு பிச்சு எப்போது உலகிற்கு அறிமுகமாயிருக்கும் என்று சொல்ல முடியாது.
இன்கா மக்களின் கதைகளிலும், அவர்களுடைய கலாச்சார வாழ்க்கை முறையிலும் ஆர்வம் கொண்ட ஹிராம் பிங்காம் 1911ம் ஆண்டு தன்னுடன் சிலரையும் அழைத்துக் கொண்டு கஸ்கோ வை விட்டு காட்டுக்குள் பயணமானார் தொலைந்து போன நகரைக் கண்டுபிடிக்க.
இவர்கள் பயணம் துவங்கிய சில நாட்களிலேயே இன்கா மக்களின் நகர் இடிபாடுகள் ஒன்றைக் கண்டனர் அதற்கு பட்டாலக்டா என்று பெயரிட்டனர்.
தொடர்ந்து ஒருவாரம் நடந்த அவர்கள் மண்டோர்பம்பா எனுமிடத்தில் தங்கினர். அங்கே சிலர் வாழ்ந்து கொண்டிருந்தனர் ! அங்கிருந்து தங்கள் பயணத்தைக் குறித்து பேசிக்கொண்டிருந்தவர்கள் எதேச்சையாக அங்கிருந்த ஒரு நபரிடம் உரையாடினார்கள் அவர் பெயர் மெல்கோர் அர்டீகா.
அவர் சாதாரணமாய் சொன்ன ஒரு செய்தியைக் கேட்டு விருட்டென எழுந்தார் பிங்காம். இங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வில்கோனாட்டா அருவிக்கு மறுபக்கம் மலையின் மேல் சில கல் வீடுகள் உள்ளன என்பதே அந்த செய்தி.
ஹிராம் பிங்காம் அந்த மனிதரையும் அழைத்துக் கொண்டு அந்த இடத்துக்குச் செல்ல விரும்பினார். ஆனால் அப்போது மழைக்காலமாக இருந்ததால் கூட வந்தவர்களில் ஒருவரைத் தவிர எவரும் அத்தகைய உயிரைப் பணயம் வைக்கும் பயணத்துக்கு விரும்பவில்லை.
பிங்காம் துணிந்தார். தனியே அந்த நபரையும் அழைத்துக் கொண்டு பயணமானார். அவர்கள் குறிப்பிட்ட இடத்தை மிகுந்த சிரமத்துக்கிடையே அடைந்தனர்.
மேலே சென்று பார்த்த பிங்காம் வியப்பின் உச்சிக்குச் சென்றார். இது தான், இது தான் நான் தேடிய இடம் என குதித்தார். அங்கே அற்புதமாய் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு நகரே இருந்தது. இதுவே இன்றைய மச்சு பிச்சு ! “இன்கா மக்களின் தொலைந்த நகரம்” என அதை அவர் அழைத்தார்.
காலம் அந்த நகரின் மீது முளைப்பித்திருந்த மரங்களுக்கு வயதாகியிருந்தது. மரங்களும், பாசிகளும் இடிபாடுகளுக்குமிடையே சத்தமில்லாமல் கிடந்தது அந்த சரித்திரம்.
இன்னோர் வியப்பு அங்கும் ஒரு சில மனிதர்கள் உலகை விட்டு தனியே ஒளிந்து வாழ்ந்து கொண்டிருந்தது !
பிங்காம் தனது யேல் பல்கலைக்கழகத்தை உதவிக்காக அணுகினார். பல்கலைக்கழகம் தேசிய சுற்றுச் சூழல் அமைப்புடன் கைகோத்து பிங்காமுக்கு உதவியது.
அடுத்த ஆண்டே பிங்காம் தேவையான உதவிகளுடன் இந்த இடத்திற்கு மீண்டும் வந்து அந்த நகரை அதன் தன்மை கெடாமல் சுத்தம் செய்யத் துவங்கினார். அந்த இடத்தைச் சுத்தம் செய்ய அவருடைய குழுவினருக்கு மூன்று ஆண்டு காலம் ஆனது !
அங்கிருந்து 173 எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் 150 பேர் பெண்கள்!. பெண்களை சூரியக்கடவுளுக்கு இவர்கள் பலியிட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. சுமார் ஆயிரம் பேர் தங்கியிருக்கக் கூடிய இடத்திலிருந்து வெறும் 173 எலும்புக்கூடுகள் மட்டுமே கிடைத்திருப்பது மேலும் பல கற்பனைகளுக்கு வழி வகுக்கிறது.
மற்றவர்கள் இந்த கோட்டை பணியாளர்களாக இருக்கலாம், அவர்கள் பள்ளத்தாக்குகளில் எறியப்பட்டிருக்கலாம், அல்லது வேறு எங்கேனும் புதைக்கப்பட்டிருக்கலாம், அல்லது வெளியேறியிருக்கலாம் என்பது அவற்றில் ஒன்று.
இந்த கால கட்டத்தில் ஆராய்ச்சிக்கென பல பொருட்களை பிங்காம் அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றார்.
அங்கிருந்து தங்கம் வெள்ளி எதுவும் கிடைக்கவில்லை எனவும், வெண்கலம், மரம் மற்றும் வேறு சில உலோகங்களாலான 521 பொருட்களை தான் கண்டெடுத்ததாக பிங்காம் தெரிவிக்கிறார்.
பிங்காம் மறுத்தாலும், இந்த இடத்திலிருந்து ஏராளம் பொன் வெள்ளி போன்றவை கிடைத்திருக்க வேண்டும் என்றே பலர் கருதுகின்றனர்.
யாரும் அணுகாத, ஒரு பெரும் சாம்ராஜ்யம் நடந்திருக்கக் கூடிய வாய்ப்புடைய இந்த இடத்தில் மிக விலையுயர்ந்த பொருட்கள் ஏராளம் கிடைத்திருக்கக் கூடும் எனவும் அவை பிங்காம் மூலம் பெரு நாட்டை விட்டு வெளியேறியிருக்க வேண்டும் என்பதே பலரின் நம்பிக்கை.
தற்போது யேல் பல்கலைக்கழக கண்காட்சியகத்தில் இருக்கின்ற மச்சு பிச்சுவின் மிச்சங்களையும், கலைப் பொருட்களையும் திரும்பவும் மச்சு பிச்சுவுக்கே கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அது இருக்கட்டும். நாம் வரலாற்றுக்கு வருவோம்.
மச்சு பிச்சு தான் வில்காபாம்பா என்று நினைத்து தான் அனைத்தையும் செய்து கொண்டிருந்தார் பிங்காம். ஆனால் உண்மையில் அது வில்காபாம்பா இல்லை! வில்காபாம்பா 1964ம் ஆண்டு ஜீன் சாவோய் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
அதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த இடத்தை பிங்காம் 1909ம் ஆண்டே கண்டார். ஆனால் இது ஏதோ முக்கியமற்ற ஒரு இடம் என நினைத்து அசட்டையாய் விட்டு விட்டார் !
1913ம் ஆண்டு மச்சு பிச்சுவுக்கு
ஒரு இரயில் பாதை அமைக்கும் பணி ஆரம்பமானது. அது படிப்படியாக நடந்து 35 ஆண்டுகளுக்குப் பின் மச்சு பிச்சுவைச் சென்றடைந்தது.
1981ம் ஆண்டு மச்சு பிச்சு இருக்கும் இடத்தையும் சேர்த்து சுமார் 325 சதுர கிலோமீட்டர்களை பெரு அரசு வரலாற்று இடமாக அறிவித்தது. யுனஸ்கோவின் அங்கீகாரம் இரண்டு ஆண்டுகளில் கிடைத்தது.
வில்காபாம்பாவைத் தேடிப்போன பிங்காம் மச்சு பிச்சுவைக் கண்டுபிடித்தார். மச்சு பிச்சு என்ன ? அது ஏன் கட்டப்பட்டது ? போன்ற விவரங்கள் ஏதும் இல்லாமல் ஓர் மர்மத்தின் குழந்தையாய் கிடக்கிறது நகர்.
1450 களில் இந்த மச்சு பிச்சு கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு நூறு ஆண்டுகள் கூட நிறைவேறும் முன்பாகவே இந்த இடத்தை காலி செய்துவிட்டு வெளியேறிவிட்டனர் இன்கா மக்கள்.
ஸ்பானியர்களின் படையெடுப்புக்கு முன்பே இந்த மச்சு பிச்சுவை விட்டு அவர்கள் வெளியேறியிருக்க வேண்டும். வறட்சியோ, நோயோ, அமானுஷ்ய பயமோ ஏதோ ஓர் பாதிப்பு இந்த நகரைக் காலி செய்ய மக்களை நிர்ப்பந்திருக்க வேண்டும் என்று கருதுகின்றனர் ஆய்வாளர்கள்.
சில ஆய்வாளர்கள் ஒருவேளை மன்னன் மரணமடைந்ததால் அடுத்த மன்னன் அந்த இடத்தை விரும்பாமல் இடம்பெயர்ந்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.
எத்தனையோ ஆண்டுகால கடின உழைப்பினால் கட்டப்பட்ட நகர் சில பத்து ஆண்டுகளிலேயே காலி செய்யப்படவேண்டுமெனில் ஏதோ ஓர் மிக மிக வலுவான காரணம் இருந்தே ஆக வேண்டும் என்பதில் ஐயமில்லை.
இங்கிருந்து சுற்றும் பார்க்கும் போது இயற்கையே ஓர் அசையும் சொர்க்கமாக விழிகளுக்குள் நாட்டியாலயமே நடத்துகிறது. புதிய உலக அதிசயங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள மச்சு பிச்சு உண்மையிலேயே உறையும் உண்மைகளும், நிறையும் எழிலுமாக அதிசய மனநிலைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது
http://xavi.wordpress.com/2008/03/24/machu_picchu/
தவறான வலைதளத்திற்கு வந்துள்ளீர்கள் தயவு செய்து தாங்கள் வந்துள்ள வலைத்தளத்தை சரிபார்க்கவும்.
கூகிளில் உங்கள் அனைத்து தேடலுக்கும் விடை கிடைக்கும்,காணாமல் போன என் இரண்டு காதலிகளையே அங்கு தான் தேடி கண்டுபிடித்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். சோ ப்ளீஸ் யு கேன் சர்ச் இன் கூகிள்[/quote]..
எப்படி சர்ச் பண்ணீங்கன்னு சொன்ன உதவிய இருக்கும்
கூகிளில் உங்கள் அனைத்து தேடலுக்கும் விடை கிடைக்கும்,காணாமல் போன என் இரண்டு காதலிகளையே அங்கு தான் தேடி கண்டுபிடித்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். சோ ப்ளீஸ் யு கேன் சர்ச் இன் கூகிள்[/quote]..
எப்படி சர்ச் பண்ணீங்கன்னு சொன்ன உதவிய இருக்கும்
..maniajith007 wrote:தவறான வலைதளத்திற்கு வந்துள்ளீர்கள் தயவு செய்து தாங்கள் வந்துள்ள வலைத்தளத்தை சரிபார்க்கவும்.
கூகிளில் உங்கள் அனைத்து தேடலுக்கும் விடை கிடைக்கும்,காணாமல் போன என் இரண்டு காதலிகளையே அங்கு தான் தேடி கண்டுபிடித்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். சோ ப்ளீஸ் யு கேன் சர்ச் இன் கூகிள்
எப்படி சர்ச் பண்ணீங்கன்னு சொன்ன உதவிய இருக்கும்[/quote]
பர்சனலா சொல்றேன்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
கம்போடியாவின் கண்டம் ஒரு இந்துக் கோயில்
"அங்கர் வட்" - கம்போடியாவிற்குச் சிறப்புச் சேர்க்கும் ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த இந்துக் கோவில். உலக அதிசயங்களில் ஒன்றான இந்தப் புராதன சின்னத்தைப் பார்ப்பவர்களுக்கு மறைந்து போன கம்போடிய பொற்காலம் நினைவிற்கு வரும். அன்றைய கிமேர் பேரரசான கம்போடியாவில் இந்துநாகரிகம் பரவியிருந்தபோது இந்த மாபெரும் கோவில் கட்டப்பட்டது. (சிலர் நினைப்பது போல, கம்போடியா இராஜராஜ சோழனின் சாம்ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. தென்னிந்திய வணிகர்களால் பரப்பப்பட்ட இந்து மதத்தை தழுவிக்கொண்ட உள்ளூர் அரச வம்சத்தின் சுதந்திரத் தேசமாக இருந்தது.)
இப்போது அந்தக் கோவிலுக்கு என்ன வந்தது ?
ஒரு முறை, அயல்நாடான தாய்லாந்தின் பிரபல நடிகை சுவன்னா, அங்கர் வட் கோவில் தாய்லாந்திற்குச் சொந்தமாக்கப்படவேண்டும் என்று கூறியதாக வந்த செய்தி கலவரத்தைத் தூண்டிவிட்டது. சீற்றமுற்ற கம்போடியர்கள் வீதிகளில் தாய்லாந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். தாய்லாந்துத் தூதுவராலயம் முற்றுகையிடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டது. தாய்லாந்துக்காரருக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் அடித்து நொருக்கப்பட்டன அல்லது தீயிடப்பட்டன.
கலவரம் தாய்லாந்திற்கும் கம்போடியாவிற்குமிடையேயான ராஜதந்திர உறவில் விரிசலை ஏற்படுத்தி விட்டது. இரு நாடுகளுக்குமிடையிலான எல்லை மூடப்பட்டது. விமானப்போக்குவரத்துகள் ரத்துச்செய்யப்பட்டன. தாய்லாந்துப் பிரஜைகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். சம்பவத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நடிகை மன்னிப்புக் கோரினார். தான் அப்படி ஒருபோதும் சொல்லவில்லை என வாதிட்டார். கம்போடிய ஜனாதிபதி ஹன் சென் நடந்த கலவரத்திற்காக மன்னிப்புக் கோரினார். கலவரத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டுவிட்டதாகவும், சேதங்களுக்கு நட்டஈடு வழங்கப்படுமெனவும் அறிவித்தார். இவ்விரு நாடுகளிலும் உள்ள தேசியவாதிகள்தான் பிரச்சனைக்குக் காரணம் என யாரும் சுலபமாகச் சொல்லிவிடலாம். இதைவிட நீறு பூத்த நெருப்பாகவிருக்கும் பிற பிரச்சனைகள் என்ன?
இந்த இரு அயலவர்களும் கடந்த காலத்தில் அடிக்கடி எல்லைபற்றி தர்க்கித்தமை முன்பே தெரிந்த விடயம்தான். 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கம்போடியாவை ஆண்ட பிரஞ்சுக் காலனிய அரசு, தாய்லாந்துடன் எல்லைகளை வகுத்து ஒப்பந்தம் போட்டது. இதன்படி சிலவிடயங்கள் பரிமாறப்பட்டன. இரண்டாம் உலகப்போரின்போது பிரஞ்சுக்காரரை விரட்டிவிட்டு கம்போடியாவை ஆக்கிரமித்த யப்பானியருடன் தாய்லாந்து இன்னொரு ஒப்பந்தம் போட்டது. இதன்படி, மேலும் சில கம்போடியப் பிரதேசங்கள் தாய்லாந்து வசமாகின. இதற்கு மாறாக ஜப்பானியர்கள் தாய்லாந்தூடாக, (பிரிட்டிஷ்) இந்தியாமீது படையெடுக்க அனுமதிக்கப்பட்டது. போர்முடிந்து யப்பானியர்கள் பின்வாங்கி ஓடிப்போக, திரும்பிவந்த பிரஞ்சுக்காரர்கள் இரண்டாவது ஒப்பந்தத்தை ரத்துச் செய்துவிட்டு முன்னிருந்த எல்லைகளைக் கொண்டுவந்தனர். வியட்னாம் போரின்பின் பிரஞ்சுக்காரர்கள் வெளியேறவே ஆட்சிக்கு வந்த உள்ளூர் கம்போடியர்கள் தாய்லாந்துடன் எல்லை குறித்துப் பிரச்சனைப்பட்டனர். இது எல்லையில் இராணுவ மோதலில் போய்முடிந்தது. பிரச்சனை சர்வதேச நீதிமன்றம் வரை சென்றது. வழக்கில் கம்போடியாவிற்குச் சாதகமான தீர்ப்புக் கிடைத்தது. அப்போது எல்லைக்குச் சமீபமாகவிருந்த கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த அங்கர் வட் கோயில் பிரதேசம் பற்றிப் பேசப்படவில்லை. அன்றைய தீர்வுகளால் திருப்தியடையாத தாய்லாந்துக் காரர்கள் இப்போது கோயிலை வைத்து எல்லைப்பிரச்சனையை மீண்டும் தொடக்க நினைத்திருக்கலாம். பெரும்பான்மையான தாய்லாந்துக்காரரும், கம்போடியர்களும் பொளத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பனிப்போர்க்காலத்தில் தாய்லாந்து சர்வதேச முக்கியத்துவம் பெற்றது. வியட்னாமிலும் கம்போடியாவிலும் சண்டையிட்ட அமெரிக்கத் துருப்புகள் தாய்லாந்தைத் தளமாகப் பயன்படுத்திக் கொண்டனர். "ஆசியாவில் சோவியத் விஸ்தரிப்பை"த் தடுக்கும் புனிதக் கடமையில் கூட்டுச்சேர்வதாக தாய்லாந்து அறிவித்தது. கம்யூனிச கிமேர் றூஷ் இயக்கம் கம்போடியாவின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பின்பு எதிர்க்கட்சிகளுக்கும், அகதிகளுக்கும் தாய்லாந்தில் அடைக்கலம் அளிக்கப்பட்டது. நீண்டகால உள்நாட்டப்போர் முடிவுற்றபின்பு வந்த ஜனநாயகக் கம்போடியாவில், மேற்குலகின் நம்பிக்கைக்குரிய ஆளாக தாய்லாந்து அரசியல் மத்தியஸ்தம் வகித்தது. தொன்னூறுகளில் ஏற்பட்ட இந்த மாற்றங்களின் பின்புதான் தற்போது எழுந்துள்ள பிரச்சனைகள் உருவாகத் தொடங்கின. கம்யூனிஸ்டுகளல்லாத கம்போடியக் கட்சிகள்கூட தாய்லாந்தின் அரசியல் மத்தியஸ்தத்தை அவநம்பிக்கையுடன் நோக்கின. அதற்குக் காரணம், போரால் அழிவுற்ற தமது நாட்டை மீளக்கட்டியமைக்க தாய்லாந்து போதியளவு உதவிகளைச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு. சமாதானம் வந்தவுடனேயே ஓடிவந்து முதலீடு செய்த தாய்லாந்து வர்த்தக நிறுவனங்கள் காடுகளை அழிக்கின்றன. மீள்முதலீடு செய்வது கிடையாது என குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதிருப்தியற்ற கம்போடிய அரசாங்கம் மலேசியா, சிங்கப்பூருடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை செய்ய நினைத்ததை தாய்லாந்து விரும்பவில்லை.
கம்போடியாவில் தாய்லாந்தின் பொருளாதார மேலாண்மை சாதாரண வர்த்தக முதலீடுகளுடன் நின்றுவிடவில்லை. கலாச்சார ஆதிக்கம் குறிப்பாக இளஞ்சமுதாயத்தை குறிவைக்கின்றது. தாய்லாந்துத் திரைப்படங்கள், பாடல்கள் என்பன இளைஞர்கள் மத்தியில் பிரபலம் பெற்றுள்ளன. சாதாரண இளைஞர்கள் தாய்லாந்து நடிக-நடிகையரைப் பார்த்து பாவனை செய்யுமளவிற்கு, அவர்களின் உருவப்படங்களை ( தற்போது சர்ச்சயைக் கிளறியிருக்கும் சுவன்னா உட்பட) தமது படுக்கையறையில் மாட்டி அழகுபார்க்குமளவிற்கு சினிமா மோகம் இளைஞர்களை ஆக்கிரமித்துள்ளது. (அங்கேயுள்ள நிலையை நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில் கலாச்சார ஆதிக்கம் செலுத்தும் இந்தியச் சினிமாவோடு ஒப்பிடலாம்). அண்மையில் நடந்த தாய்லாந்து எதிர்ப்புக் கலவரத்திற்குப் பின்னர் தாம் ஒரு காலத்தில் ஆராதித்த மனங்கவர்ந்த நடிகை சுவன்ணாவின் படங்களை இளைஞர்கள் கிழித்தெறியத் தொடங்கியுள்ளனர். தாய்லாந்துத் திரைப்படங்கள் அளித்த மதிமயக்கத்தில் கிடந்த மக்களுக்கு, அவற்றை உற்பத்தி செய்து அனுப்பும் நாட்டின் பொருளாதார மேலாண்மை தெரிந்திருக்கவில்லை. தற்போது திடீரென விழித்துக்கொண்டவர்களாய் தாய்லாந்தின் பொருளாதாரப் புறக்கணிப்புகள் பற்றி பேசத்தொடங்கியுள்ளனர்.
கம்போடியாவில் பெரும்பான்மையான ஹொட்டேல்கள், உணவு விடுதிகள் ஆகியன தாய்லாந்துக்காரருக்குச் சொந்தமானவை. தொலைத்தொடர்புத் துறையையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. அந்தப்பிராந்தியத்தில் அபிவிருத்தியடைந்த அல்லது பெரும் முதலாளிகளைக் கொண்ட தாய்லாந்து தன்னைச் சற்றியிருக்கும் பின்தங்கிய வறிய நாடுகளான லாவோஸ், கம்போடியாவில் திறந்த சந்தைப் பொருளாதாரத்தைப் பயன்படுத்தி முதலிட்டு வந்தது. அந்நாடுகளில் முதலிட்ட தாய்லாந்து வர்த்தகர்கள் பலனடைந்த அளவிற்கு உள்ளூர் மக்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தமுடியவில்லை. "உள்ளூர் மக்களின் நலன்களைப்பற்றி எந்தச் சிந்தனையுமில்லாமல், நாம் பெருமளவில் முதலிட்டு இலாபமீட்டி வந்தோம். எம்மை பொருளாதாரக் காலனியவாதிகள் என்று குற்றஞ்சாட்டுமளவிற்கு வெற்றிகரமாகவும் அதேநேரம் தீவிரமாகவும் எமது நடவடிக்கைகள் அமைந்திருந்தன. மக்களின் அதிருப்தியை அந்நாட்டு அரசியல் வாதிகள் தேசிய உணர்வைத்தூண்டப் பயன்படுத்துகின்றனர். அதனைக் கண்டிக்கும் நாம் , எமது நாட்டின் பொருளாதாரப் பின்னடைவுகளுக்காக மேலைநாடுகளுக்கெதிரான தேசியவாதம் வளர்ப்பது முரண்நகையாகவுள்ளது." என ஆசிரியர் தலையங்கம் தீட்டியது திடீரென விழித்துக்கொண்ட தாய்லாந்தின் பிரபல "பாங்கொக் போஸ்ட்" பத்திரிகை.
கம்போடிய அரசாங்கம் தனக்கும் கலவரத்திற்கும் சம்பந்தமில்லையென்று சொல்லிக்கொண்டாலும், ஆளும் கட்சிகள் தாய்லாந்து எதிர்ப்புணர்வால் ஆதாயம் அடைகின்றன. தாய்லாந்தை எதிரியாகக் காட்டும் கம்போடியத் தேசியவாதம் வளர்த்துவிடப்பட்டிருக்கலாம். தாய்லாந்தினுள்ளும் சில புத்திஜீவிகள் தமது அரசின் தன்னலம் கருதும் மேலாண்மைப் போக்கை விமர்சிக்கின்றனர். பாங்கொக் போஸ்டும் இத்தகைய சுடலை ஞானத்தைத்தான் வெளிப்படுத்தியிருந்தது. அயல் நாடுகளுடன் நட்பும், வெறுப்புமான உறவு தொடர்ந்த பதட்டநிலைக்கே வழிவகுக்கும். முதலீடுகளால் எமக்கு வரும் ஆதாயத்தை மட்டும் பார்க்காமல் நாம் கம்போடிய மக்களுக்கு என்ன திருப்பிச் செய்துள்ளோம் என்றும் நினைத்துப் பார்த்திருக்கவேண்டும் என்று இப்போது சொல்கிறார்கள்.
இப்போது அந்தக் கோவிலுக்கு என்ன வந்தது ?
ஒரு முறை, அயல்நாடான தாய்லாந்தின் பிரபல நடிகை சுவன்னா, அங்கர் வட் கோவில் தாய்லாந்திற்குச் சொந்தமாக்கப்படவேண்டும் என்று கூறியதாக வந்த செய்தி கலவரத்தைத் தூண்டிவிட்டது. சீற்றமுற்ற கம்போடியர்கள் வீதிகளில் தாய்லாந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். தாய்லாந்துத் தூதுவராலயம் முற்றுகையிடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டது. தாய்லாந்துக்காரருக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் அடித்து நொருக்கப்பட்டன அல்லது தீயிடப்பட்டன.
கலவரம் தாய்லாந்திற்கும் கம்போடியாவிற்குமிடையேயான ராஜதந்திர உறவில் விரிசலை ஏற்படுத்தி விட்டது. இரு நாடுகளுக்குமிடையிலான எல்லை மூடப்பட்டது. விமானப்போக்குவரத்துகள் ரத்துச்செய்யப்பட்டன. தாய்லாந்துப் பிரஜைகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். சம்பவத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நடிகை மன்னிப்புக் கோரினார். தான் அப்படி ஒருபோதும் சொல்லவில்லை என வாதிட்டார். கம்போடிய ஜனாதிபதி ஹன் சென் நடந்த கலவரத்திற்காக மன்னிப்புக் கோரினார். கலவரத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டுவிட்டதாகவும், சேதங்களுக்கு நட்டஈடு வழங்கப்படுமெனவும் அறிவித்தார். இவ்விரு நாடுகளிலும் உள்ள தேசியவாதிகள்தான் பிரச்சனைக்குக் காரணம் என யாரும் சுலபமாகச் சொல்லிவிடலாம். இதைவிட நீறு பூத்த நெருப்பாகவிருக்கும் பிற பிரச்சனைகள் என்ன?
இந்த இரு அயலவர்களும் கடந்த காலத்தில் அடிக்கடி எல்லைபற்றி தர்க்கித்தமை முன்பே தெரிந்த விடயம்தான். 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கம்போடியாவை ஆண்ட பிரஞ்சுக் காலனிய அரசு, தாய்லாந்துடன் எல்லைகளை வகுத்து ஒப்பந்தம் போட்டது. இதன்படி சிலவிடயங்கள் பரிமாறப்பட்டன. இரண்டாம் உலகப்போரின்போது பிரஞ்சுக்காரரை விரட்டிவிட்டு கம்போடியாவை ஆக்கிரமித்த யப்பானியருடன் தாய்லாந்து இன்னொரு ஒப்பந்தம் போட்டது. இதன்படி, மேலும் சில கம்போடியப் பிரதேசங்கள் தாய்லாந்து வசமாகின. இதற்கு மாறாக ஜப்பானியர்கள் தாய்லாந்தூடாக, (பிரிட்டிஷ்) இந்தியாமீது படையெடுக்க அனுமதிக்கப்பட்டது. போர்முடிந்து யப்பானியர்கள் பின்வாங்கி ஓடிப்போக, திரும்பிவந்த பிரஞ்சுக்காரர்கள் இரண்டாவது ஒப்பந்தத்தை ரத்துச் செய்துவிட்டு முன்னிருந்த எல்லைகளைக் கொண்டுவந்தனர். வியட்னாம் போரின்பின் பிரஞ்சுக்காரர்கள் வெளியேறவே ஆட்சிக்கு வந்த உள்ளூர் கம்போடியர்கள் தாய்லாந்துடன் எல்லை குறித்துப் பிரச்சனைப்பட்டனர். இது எல்லையில் இராணுவ மோதலில் போய்முடிந்தது. பிரச்சனை சர்வதேச நீதிமன்றம் வரை சென்றது. வழக்கில் கம்போடியாவிற்குச் சாதகமான தீர்ப்புக் கிடைத்தது. அப்போது எல்லைக்குச் சமீபமாகவிருந்த கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த அங்கர் வட் கோயில் பிரதேசம் பற்றிப் பேசப்படவில்லை. அன்றைய தீர்வுகளால் திருப்தியடையாத தாய்லாந்துக் காரர்கள் இப்போது கோயிலை வைத்து எல்லைப்பிரச்சனையை மீண்டும் தொடக்க நினைத்திருக்கலாம். பெரும்பான்மையான தாய்லாந்துக்காரரும், கம்போடியர்களும் பொளத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பனிப்போர்க்காலத்தில் தாய்லாந்து சர்வதேச முக்கியத்துவம் பெற்றது. வியட்னாமிலும் கம்போடியாவிலும் சண்டையிட்ட அமெரிக்கத் துருப்புகள் தாய்லாந்தைத் தளமாகப் பயன்படுத்திக் கொண்டனர். "ஆசியாவில் சோவியத் விஸ்தரிப்பை"த் தடுக்கும் புனிதக் கடமையில் கூட்டுச்சேர்வதாக தாய்லாந்து அறிவித்தது. கம்யூனிச கிமேர் றூஷ் இயக்கம் கம்போடியாவின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பின்பு எதிர்க்கட்சிகளுக்கும், அகதிகளுக்கும் தாய்லாந்தில் அடைக்கலம் அளிக்கப்பட்டது. நீண்டகால உள்நாட்டப்போர் முடிவுற்றபின்பு வந்த ஜனநாயகக் கம்போடியாவில், மேற்குலகின் நம்பிக்கைக்குரிய ஆளாக தாய்லாந்து அரசியல் மத்தியஸ்தம் வகித்தது. தொன்னூறுகளில் ஏற்பட்ட இந்த மாற்றங்களின் பின்புதான் தற்போது எழுந்துள்ள பிரச்சனைகள் உருவாகத் தொடங்கின. கம்யூனிஸ்டுகளல்லாத கம்போடியக் கட்சிகள்கூட தாய்லாந்தின் அரசியல் மத்தியஸ்தத்தை அவநம்பிக்கையுடன் நோக்கின. அதற்குக் காரணம், போரால் அழிவுற்ற தமது நாட்டை மீளக்கட்டியமைக்க தாய்லாந்து போதியளவு உதவிகளைச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு. சமாதானம் வந்தவுடனேயே ஓடிவந்து முதலீடு செய்த தாய்லாந்து வர்த்தக நிறுவனங்கள் காடுகளை அழிக்கின்றன. மீள்முதலீடு செய்வது கிடையாது என குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதிருப்தியற்ற கம்போடிய அரசாங்கம் மலேசியா, சிங்கப்பூருடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை செய்ய நினைத்ததை தாய்லாந்து விரும்பவில்லை.
கம்போடியாவில் தாய்லாந்தின் பொருளாதார மேலாண்மை சாதாரண வர்த்தக முதலீடுகளுடன் நின்றுவிடவில்லை. கலாச்சார ஆதிக்கம் குறிப்பாக இளஞ்சமுதாயத்தை குறிவைக்கின்றது. தாய்லாந்துத் திரைப்படங்கள், பாடல்கள் என்பன இளைஞர்கள் மத்தியில் பிரபலம் பெற்றுள்ளன. சாதாரண இளைஞர்கள் தாய்லாந்து நடிக-நடிகையரைப் பார்த்து பாவனை செய்யுமளவிற்கு, அவர்களின் உருவப்படங்களை ( தற்போது சர்ச்சயைக் கிளறியிருக்கும் சுவன்னா உட்பட) தமது படுக்கையறையில் மாட்டி அழகுபார்க்குமளவிற்கு சினிமா மோகம் இளைஞர்களை ஆக்கிரமித்துள்ளது. (அங்கேயுள்ள நிலையை நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில் கலாச்சார ஆதிக்கம் செலுத்தும் இந்தியச் சினிமாவோடு ஒப்பிடலாம்). அண்மையில் நடந்த தாய்லாந்து எதிர்ப்புக் கலவரத்திற்குப் பின்னர் தாம் ஒரு காலத்தில் ஆராதித்த மனங்கவர்ந்த நடிகை சுவன்ணாவின் படங்களை இளைஞர்கள் கிழித்தெறியத் தொடங்கியுள்ளனர். தாய்லாந்துத் திரைப்படங்கள் அளித்த மதிமயக்கத்தில் கிடந்த மக்களுக்கு, அவற்றை உற்பத்தி செய்து அனுப்பும் நாட்டின் பொருளாதார மேலாண்மை தெரிந்திருக்கவில்லை. தற்போது திடீரென விழித்துக்கொண்டவர்களாய் தாய்லாந்தின் பொருளாதாரப் புறக்கணிப்புகள் பற்றி பேசத்தொடங்கியுள்ளனர்.
கம்போடியாவில் பெரும்பான்மையான ஹொட்டேல்கள், உணவு விடுதிகள் ஆகியன தாய்லாந்துக்காரருக்குச் சொந்தமானவை. தொலைத்தொடர்புத் துறையையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. அந்தப்பிராந்தியத்தில் அபிவிருத்தியடைந்த அல்லது பெரும் முதலாளிகளைக் கொண்ட தாய்லாந்து தன்னைச் சற்றியிருக்கும் பின்தங்கிய வறிய நாடுகளான லாவோஸ், கம்போடியாவில் திறந்த சந்தைப் பொருளாதாரத்தைப் பயன்படுத்தி முதலிட்டு வந்தது. அந்நாடுகளில் முதலிட்ட தாய்லாந்து வர்த்தகர்கள் பலனடைந்த அளவிற்கு உள்ளூர் மக்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தமுடியவில்லை. "உள்ளூர் மக்களின் நலன்களைப்பற்றி எந்தச் சிந்தனையுமில்லாமல், நாம் பெருமளவில் முதலிட்டு இலாபமீட்டி வந்தோம். எம்மை பொருளாதாரக் காலனியவாதிகள் என்று குற்றஞ்சாட்டுமளவிற்கு வெற்றிகரமாகவும் அதேநேரம் தீவிரமாகவும் எமது நடவடிக்கைகள் அமைந்திருந்தன. மக்களின் அதிருப்தியை அந்நாட்டு அரசியல் வாதிகள் தேசிய உணர்வைத்தூண்டப் பயன்படுத்துகின்றனர். அதனைக் கண்டிக்கும் நாம் , எமது நாட்டின் பொருளாதாரப் பின்னடைவுகளுக்காக மேலைநாடுகளுக்கெதிரான தேசியவாதம் வளர்ப்பது முரண்நகையாகவுள்ளது." என ஆசிரியர் தலையங்கம் தீட்டியது திடீரென விழித்துக்கொண்ட தாய்லாந்தின் பிரபல "பாங்கொக் போஸ்ட்" பத்திரிகை.
கம்போடிய அரசாங்கம் தனக்கும் கலவரத்திற்கும் சம்பந்தமில்லையென்று சொல்லிக்கொண்டாலும், ஆளும் கட்சிகள் தாய்லாந்து எதிர்ப்புணர்வால் ஆதாயம் அடைகின்றன. தாய்லாந்தை எதிரியாகக் காட்டும் கம்போடியத் தேசியவாதம் வளர்த்துவிடப்பட்டிருக்கலாம். தாய்லாந்தினுள்ளும் சில புத்திஜீவிகள் தமது அரசின் தன்னலம் கருதும் மேலாண்மைப் போக்கை விமர்சிக்கின்றனர். பாங்கொக் போஸ்டும் இத்தகைய சுடலை ஞானத்தைத்தான் வெளிப்படுத்தியிருந்தது. அயல் நாடுகளுடன் நட்பும், வெறுப்புமான உறவு தொடர்ந்த பதட்டநிலைக்கே வழிவகுக்கும். முதலீடுகளால் எமக்கு வரும் ஆதாயத்தை மட்டும் பார்க்காமல் நாம் கம்போடிய மக்களுக்கு என்ன திருப்பிச் செய்துள்ளோம் என்றும் நினைத்துப் பார்த்திருக்கவேண்டும் என்று இப்போது சொல்கிறார்கள்.
சரவணன் wrote:Aathira wrote:என் அன்பான உறவுகளே உலகில் என்னென்ன அதிசயங்கள் இருக்கின்றனவோ ( ஏழு அதிசயம் இல்ல. அவை போல) அருள் கூர்ந்து அவற்றைக் கொஞ்சம் எனக்கு சொல்லுங்களேன். நன்றி.
அன்புடன்
ஆதிரா
தவறான வலைதளத்திற்கு வந்துள்ளீர்கள் தயவு செய்து தாங்கள் வந்துள்ள வலைத்தளத்தை சரிபார்க்கவும்.
கூகிளில் உங்கள் அனைத்து தேடலுக்கும் விடை கிடைக்கும்,காணாமல் போன என் இரண்டு காதலிகளையே அங்கு தான் தேடி கண்டுபிடித்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். சோ ப்ளீஸ் யு கேன் சர்ச் இன் கூகிள்
உன் அழும்புக்கு அள்வே இல்லையா சரவணா.... ஆனாலும் மிக மிக ரசிக்கிறேன் தம்பி...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன் wrote:..maniajith007 wrote:தவறான வலைதளத்திற்கு வந்துள்ளீர்கள் தயவு செய்து தாங்கள் வந்துள்ள வலைத்தளத்தை சரிபார்க்கவும்.
கூகிளில் உங்கள் அனைத்து தேடலுக்கும் விடை கிடைக்கும்,காணாமல் போன என் இரண்டு காதலிகளையே அங்கு தான் தேடி கண்டுபிடித்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். சோ ப்ளீஸ் யு கேன் சர்ச் இன் கூகிள்
எப்படி சர்ச் பண்ணீங்கன்னு சொன்ன உதவிய இருக்கும்
பர்சனலா சொல்றேன் [/quote]
மறக்க கூடாது
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5
|
|